மீண்டும் பாலாவுடன் பணியாற்ற ஆசை! - விக்ரம்


சேது, பிதா மகன் என இரு படங்கள்... தமிழ் சினிமாவை வேறு தளத்துக்கு உயர்த்திய படங்கள். அதன் பிறகு பாலாவும் விக்ரமும் பேசிக் கொண்டாலும், சேர்ந்து பணியாற்றவில்லை.

இப்போது, மீண்டும் பாலாவுடன் இணைந்தால் நன்றாக இருக்கும் என பீல் பண்ணுவதாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.

இப்போது விக்ரம் கைவசம் இரு படங்கள் உள்ளன. அதில் ஒன்று தமிழ்.. தாண்டவம். மற்றொன்று இந்தி... டேவிட். இரண்டாவது படத்தில் அவருடன் ஜீவாவும் நடிக்கிறார்.

இந்தப் படங்களை முடித்துவிட்டு பாலாவிடம் போகும் வாய்ப்புள்ளதாக விக்ரம் கூறினார்.

இடையில் அவரும் ஷங்கரும் இணைவதாகக் கூறப்பட்டது. இதை ஷங்கர் மறுக்கவில்லை. ஆனால் விக்ரம் மறுத்துவிட்டார். எனவே தனது இரு படங்கள் முடிந்ததும் மீண்டும் பாலாவுடன் விக்ரம் கைகோர்க்கக் கூடும் என்று தெரிறது.

இதற்கிடையே தாண்டவம் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ள சீயான் விக்ரம் அங்கு தனது பிறந்த நாளை நேற்று படக்குழுவுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடியுள்ளார்.
 

ஜெ ஆதரவு யாருக்கு... எஸ்ஏசிக்கா? ராவுத்தருக்கா?


Ibrahim ravuthar and SA Chandrasekaran
குழம்பம், மோதல், பரபரப்பின் உச்சத்திலிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

பெப்சி Vs தயாரிப்பாளர்கள் என்று ஆரம்பித்த பிரச்சினை, இப்போது தயாரிப்பாளர்கள் Vs தயாரிப்பாளர்கள் என்று முட்டிக் கொண்டு நிற்கிறது. ஒருவேளை பெப்சியுடன் பேசுவைத் தவிர்க்க பேசி வைத்துக் கொண்டு மோதுகிறார்களோ என கமெண்ட் அடிக்கும் அளவுக்கு அரசியல் வாடை!

சினிமா தொழிலாளர் சம்பள விவகாரம் குறித்து பேசுவதில் பெப்சிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்பட்ட மோதல், புதிய தொழிலாளர் அமைப்பு ஒன்றை உருவாக்கும் அளவுக்குப் போனது. இதில் பெப்சியின் பக்கம் நின்ற அமீரைத்தான் முதலில் குறி வைத்தது தயாரிப்பாளர் சங்கம். அமீரும் பெப்சியும் அம்மாவிடம் முழுமையாக சரணடைந்து, நடந்த அனைத்தையும் கூறி காப்பாற்றுமாறு உருக, இந்தப் பிரச்சினையை கையாள தொழிலாளர் நலத்துறை மற்றும் அதன் அமைச்சருக்கு உத்தரவிட்டுவிட்டார்.

தொழிலாளர்களுக்கு விரோதமான தீர்வை ஆதரிக்க முடியாது என்று ஆரம்பத்திலேயே தமிழக அரசு உறுதியாக இருந்ததால், பெப்சியுடன் பேச தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. தமிழக அரசையும் பகைத்துக் கொள்ள முடியவில்லை.

அதுவரை, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரனுக்கு இருந்த இமேஜ், அதிமுக அபிமானி, முதல்வருக்கு வேண்டப்பட்டவர் என்பது.

ஆனால் இவர் சங்கத் தலைவரானதிலிருந்து ஜெயலலிதாவைப் பார்க்க ஒருமுறை கூட அனுமதி கிடைக்கவில்லை. அட, ரூ 25 லட்சத்தை தானே புயல் நிவாரண நிதிக்குக் கொடுக்க நேரம் கேட்டு தவம் கிடந்து பார்த்தார்கள். ஜெயலலிதா கண்டு கொள்ளவே இல்லை. பெப்சி பிரச்சினை குறித்து பேச ஜெயலலிதாவிடம் அப்பாயின்ட்மெண்ட் கேட்டனர் தயாரிப்பாளர்கள். ம்ஹூம்... அந்த நேரத்தில் ரஜினி, கமல், சூர்யா குடும்பம் என்று வரவழைத்துப் பார்த்துப் பேசினார்.

இதையெல்லாம் கவனித்து வந்த எதிர்த் தரப்புக்கு, எஸ் ஏ சந்திரசேகரன், அம்மா ஆட்சிக்கு வேண்டப்பட்டவர் அல்ல என்பது புரிந்துவிட்டது.

அப்போதுதான் அதிமுகவில் சேர்ந்தார் விஜயகாந்தின் முன்னாள் நண்பர் இப்ராகிம் ராவுத்தர். நேரடி கட்சிக்காரர் என்பதால் ராவுத்தருக்குதான் இப்போது முதல்வரின் ஆதரவு என்பதால், பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ராவுத்தர் அணிக்குப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

ராவுத்தர் அணி சட்டவிரோதம் என்று எஸ்ஏ சந்திரசேகரன் கூறினாலும், அவர் பின்னால் எவ்வளவு தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முதல்வர் மனநிலை புரிந்து நடந்து கொண்டால்தான் சினிமா தொழில் சிக்கலின்றிப் போகும் என்பதால், மற்ற தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்களாம்.

இப்போது எஸ்ஏ சந்திரசேகரன் பொதுக்குழு கூட்டுவதாக அறிவித்துள்ள நிலையில், எத்தனை தயாரிப்பாளர்கள் வருவார்கள், போலீஸ் பாதுகாப்பு கிடைக்குமா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
 

செக்ஸி இமேஜ் வேணாம்... நல்ல கிராமத்து ரோல் இருந்தா கொடுங்க! - ஸ்ரேயா


Shriya
செக்ஸி, கவர்ச்சி ஸ்ரேயா என்ற வார்த்தைகளைக் கேட்டு புளித்துவிட்டது. யாராவது நல்ல கிராமத்து வேடமா கொடுங்க, நடிச்சு அசத்தறேன், என்கிறார் நடிகை ஸ்ரேயா.

எனக்கு 20 உனக்கு 18, மழை படங்களின் தோல்வியால் தெலுங்குக்கே போன த்ரிஷாவுக்கு, தமிழில் பெரிய அந்தஸ்தைக் கொடுத்த படம் ரஜினியின் சிவாஜி - தி பாஸ்..

பாலிவுட்டிலும் அவர் பிரபலமானார் அந்தப் படத்துக்குப் பிறகு.

பல படங்களில் அதிகபட்ச கவர்ச்சி காட்டவும் அவர் தயங்கவில்லை. இன்று அவர் கைவசம் படங்கள் இல்லை.

ஆனால் எந்த வேடத்துக்கும் தயார், வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்க ஆரம்பித்துள்ளார்.

அவர் கூறுகையில், "செக்ஸி, கவர்ச்சி ஸ்ரேயா என்றுதான் என்னை குறிப்பிடுகிறார்கள். இதுவரா நான் செய்து வந்த வேடங்கள் அப்படி. ஆனால் இனி ஆக்ஷன், த்ரில்லர், விஞ்ஞானக் கதைகளில் நடிக்க ஆசை.

குறிப்பாக நல்ல கிராமத்து வேடம் செய்ய ஆசை. அஜீத், சூர்யா மாதிரி நான் இதுவரை ஜோடி சேராதவர்களுடன் நடிக்க ஆசை.

இப்போதைக்கு இரு படங்கள் உள்ளன. ஒன்று தெலுங்குப் படம். இன்னொன்று தீபா மேத்தாவின் ஆங்கிலப் படம்," என்றார்.
 

மனைவி பெயரில் அறக்கட்டளை

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
தனது மனைவி ஜீவா பெயரில் அறக்கட்டளை தொடங்கி இருக்கிறார் இளையராஜா. இதன் மூலம் ஏழை பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவி செய்ய நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அவரது மகள் பவதாரிணி செய்து வருகிறார்.


 

இயக்குனரை 1 வருடம் காக்க வைத்த பிரகாஷ்ராஜ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கால்ஷீட் வேண்டுமென்றால் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்று இயக்குனரிடம் நிபந்தனை போட்டார் பிரகாஷ்ராஜ். பிரியமுடன் இரணியன் ஜித்தன் படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா இயக்கும் படம் 'துள்ளி விளையாடு. இது பற்றி அவர் கூறியதாவது: முக்கோண காதல் கதை நிறைய வந்திருக்கிறது. முக்கோண துரத்தல் கதையாக இந்த ஸ்கிரிப்ட் உருவாகி உள்ளது. எந்த தகுதியுமே இல்லாத 3 பேர் தகுதியை மீறி உயர்ந்த இடத்துக்கு செல்கின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளே கதை. தகுதி மீறிய அந்தஸ்து பெற்றவர்களாக யுவராஜ் சூரி சென்ராயன்  நடிக்கின்றனர். காமெடி வில்லனாக பிரகாஷ்ராஜ் அரசியல்வாதியாக ஜெயப்பிரகாஷ் நடிக்கின்றனர்.

ஹீரோயின் தீப்தி. எங்கேயும் எப்போதும் படத்தில் 3வது ஹீரோயினாக நடித்தவர் இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதன் ஷூட்டிங் ஜெய்சல்மரில் நடந்தது. பாலைவனப்பகுதியில் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டது. இதன் ஸ்கிரிப்ட் ரெடியாகி ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. மற்ற நட்சத்திரங்கள் ஒப்பந்தம் ஆன நிலையில் பிரகாஷ்ராஜ் நடித்தால்தான் குறிப்பிட்ட காமெடி வில்லன் வேடம் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தோம். அவரிடம் கால்ஷீட் கேட்டபோது ஒருவருடம் பிஸியாக இருப்பதாக கூறினார். அவர் கால்ஷீட் பெறுவதற்காகவே ஒரு வருடம் காத்திருந்து ஷூட்டிங்கை தொடங்கினோம். இன்றைக்கு படம் முடிவடைந்திருக்கிறது. இவ்வாறு வின்சென்ட் செல்வா கூறினார்.


 

விஜய் படத்தில் "சமந்தா" நோ சான்ஸ் : கவுதம் மேனன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஜய் படத்தில் நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்பு தருவதாக கூறி இருந்த கவுதம் மேனன் ஷூட்டிங் தொடங்கும் நேரத்தில் அவரை படத்திலிருந்து ஒதுக்கியுள்ளார். கவுதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிறு வேடத்தில் நடித்தார் சமந்தா. அதே நேரம் இதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவர்தான்  ஹீரோயின். இதையடுத்து நடுநிசி நாய்கள் படத்திலும் அவருக்கு சிறு வேடம் தந்தார். இப்போது கவுதம் 3 மொழிகளில் நீதானே என் பொன் வசந்தம்  படத்தை இயக்குகிறார். 3 மொழிகளிலும் சமந்தாதான் ஹீரோயின். இதனால் கவுதமின் பேவரைட் ஹீரோயினாக சமந்தா மாறினார்.

இருவருக்கும் இடையிலான நட்பு தொடர்பாக கோடம்பாக்கத்தில் கிசு கிசுவும் கிளம்பியது. இதற்கிடையே இளம் ஹீரோக்களுடன் மட்டும் நடிக்க தனக்கு வாய்ப்பு தருவதால் கவுதமிடம் சமந்தா கோபித்துக் கொண்டதாக தகவல் பரவியது. இதையடுத்து விஜய்யை வைத்து கவுதம் இயக்கும் யோவான் அத்தியாயம் ஒன்று படத்தில் சமந்தா நடிப்பார் என படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் யோவான் பட ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது. ஆனால் படத்தில் சமந்தா இல்லை என பட யூனிட் உறுதி செய்துள்ளது. தனது படங்களில் ஒரே நடிகையை தொடர்வதை தவிர்க்கவே யோவானில் சமந்தாவை கவுதம் ஒப்பந்தம் செய்யவில்லை என கூறப்படுகிறது.


 

கவர்ச்சி உடையில் ராதிகா ஆப்தே - ரசிகர்கள் கலாட்டாவால் ஷூட்டிங் பாதிப்பு!


Radhika apte
நடிகைகள் முழுசாக போர்த்திக் கொண்டு வந்தாலே, ரசிகர்கள் உற்சாகம் தாங்காது. இதில் குட்டைப் பாவாடையும் தம்மாத்துண்டு மேலாடையும் அணிந்து வந்தால், அவர்களை அடக்க முடியுமா...

முடியாமல்தான் போனது, வெற்றிச் செல்வன் ஷூட்டிங்கில்.

அஜ்மல், ராதிகா ஆப்தே ஜோடியாக நடிக்கும் படம் 'வெற்றிச் செல்வன்'. இதன் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. பஹல்காம் பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது ஏராளமான ரசிகர்கள் படப்பிடிப்பை காண திரண்டார்கள். அப்போது ராதிகா ஆப்தே குட்டை பாவாடையும் சின்ன மேலாடையும் அணிந்து கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தாராம்.

அவரை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமடைந்து, ஆரவாரம் செய்தனர். செல்போனிலும் கேமராவிலும் அவரது கவர்ச்சியை சிறைப்பிடிக்க ஆரம்பித்தனர்.

இதனால் படப்பிடிப்பு பாதித்தது. படம் எடுக்க வேண்டாம் என்று ரசிகர்களை தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த கூட்டத்தினர், படப்பிடிப்பு குழுவினரை அடிக்கப் பாய்ந்தனர். மிரட்டவும் செய்தார்கள். மொழிபுரியாத இடத்தில் வசமாக மாட்டிக் கொண்டேமே என கலவரமாகிவிட்டனர்.

அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க ராதிகா ஆப்தேவை பாதுகாப்பாக அழைத்து கேரவேனில் ஏற்றினர். படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். வேறு இடத்தில் படப்பிடிப்பு மீண்டும் அமைதியாக நடந்தது.

இதுகுறித்து அஜ்மல் கூறும்போது, ''படப்பிடிப்பை காண வந்த கூட்டத்தில் சிலர் அநாகரீகமாக நடந்து கொண்டது உண்மைதான். நட்பாக பழகியவர்களும் அந்த கூட்டத்தில் இருந்தனர்,'' என்றார்.

வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாமல் ரசிகர்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் போலிருக்கிறது!
 

சினிமா இயக்குநர்கள் சங்கத்துக்கு புதிய இணையதளம்- வெப் டிவி!


New website launched for directors
சென்னை: தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான இணையதளம் புதுப்பொலிவுடன் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. மேலும் வெப் டி.வி. ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிமுக நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர்கள் சங்கச் செயலாளர் அமீர், பொருளாளர் எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "இயக்குநர் சங்கத்துக்கு என ஏற்கெனவே இணையதளம் இருந்தபோதும் அது முறையாக செயல்படவில்லை.

அதனால் நவீன தொழில்நுட்பத்துடன் ஏராளமான தகவல்களை உள்ளடக்கி புதிய வடிவில் இணையதளத்தைத் தொடங்கியுள்ளோம். www.tantis.in என்ற இந்த இணையதளமும் திரைப்படத்துறை குறித்த செய்திகள் அடங்கிய 24 மணி நேர வெப் டி.வி.யும் வரும் ஏப்ரல் 20-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.

இந்த இணையதளத்தில் திரைப்பட இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் ஆகியோருக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் இருக்கும். இயக்குநர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைவரைப் பற்றிய முழுத் தகவல்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.

மேலும் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு ஒரு படத்தை எப்படி அனுப்புவது, ஓர் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையேயான ஒப்பந்தம் அமைக்கப்பட வேண்டிய விதம், உறுப்பினர்களுக்கு உள்ள அடிப்படை உரிமை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், உதவித் தொகை, இயக்குநர் சங்க செயல்பாடுகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.

24 மணி நேர வெப் டி.வி.யில் டிரெய்லர்கள் இலவசமாகவும், தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதத்தில் விளம்பரங்கள் மிகக் குறைந்த கட்டணத்திலும் ஒளிபரப்பப்படும் என்றனர்.

ட்ரைலராக வழக்கு எண் 18/9 வரும் 20ம் தேதி ஒளிபரப்பாகும்," என்றனர்.

இந்த இணையதளத்தை இயக்குநர்கள் அமீர், ஜனநாதன், எஸ் எஸ் ஸ்டேன்லி, தம்பி துரை, பாலசேகரன், ஜெகன்னாத், வித்யாசாகர், கமலக் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் தொடங்கிவைத்தார். மூத்த சினிமா பத்திரிகையாளரும் நடிகருமான யோகி தேவராஜ் உடனிருந்தார்.
 

100 சவரன் நகை, வீட்டை எழுதிக் கேட்டு துன்புறுத்தல் - நடிகை தூக்கில் தொங்கியதன் பின்னணி


சென்னை: சின்ன நடிகையோ பெரிய நடிகையோ... கம்ப்யூட்டர் பிஸினஸ் அல்லது சாப்ட்வேர் எஞ்ஜினீயர் என்றால் உடனே கழுத்தை நீட்டிவிடுகிறார்கள்.

நேற்று தூக்கில் தொங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் டிவி நடிகை உமா மகேஸ்வரியும்கூட இப்படி கம்ப்யூட்டர் கணவனை கட்டிக் கொண்டுதான் கஷ்டப்பட்டுள்ளார்.

உமா மகேஸ்வரிக்கும் அவரது கணவர் அருணுக்கும் திருமணம் நடந்து ஒரு வருடம் 3 மாதம் ஆகிறது. இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

உமா மகேஷ்வரியின் தாயார் கலாவதி வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசிக்கிறார். உமா மகேஷ்வரி தாயார் வீட்டில்தான் குழந்தை பெற்றுக்கொண்டார். கணவர் வீட்டுக்கு வரவில்லை.

உடம்பு சரியாகும்வரை அம்மா வீட்டில் இருக்கிறேன் என்று கூறிய உமா மகேஷ்வரியை வரவழைக்க, விபத்து என்று பொய் கூறி எஸ்எம்எஸ் அனுப்பியதால், பதறி துடித்தபடி அருணைப் பார்க்க வந்தார் உமா.

ஏன் இப்படி? பொய்யான தகவலை அனுப்பினீர்கள் என்று உமா மகேஷ்வரி, தனது கணவரிடம் கோபமாக கேட்டார். உன்னை இங்கு வரவழைக்கவே, இவ்வாறு தகவல் அனுப்பினேன் என்று அருண் சாதாரணமாக தெரிவித்தார்.

ஆனால் உமாவால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சத்தம் போட்டார். பிரசவம் முடிந்து உடல்நிலை தேறாமலிருந்த உமா மகேஷ்வரியை அடித்து, உதைத்து துன்புறுத்தியிருக்கிறார் அருண். அதனால்தான் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார் உமா.

வரதட்சனைக் கொடுமை

இப்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கிடையில் உமா மகேஷ்வரியின் தாயார் கலாவதி போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், "எனது மகள் தனியார் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி பரிசு பெற்று இருக்கிறார்.

டி.வி. தொடர்களில் நடித்துள்ளார். இன்டர்நெட் மூலம் வரன்பார்த்து பேசி, எனது மகளுக்கு, அருணை திருமணம் செய்துவைத்தோம். திருமணத்தின்போது 40 சவரன் நகைகள் வரதட்சணையாக கொடுத்தோம்.

ஆனால் மேலும் 100 சவரன் நகைகளும், எனது பெயரில் உள்ள வீட்டையும் எழுதிக்கேட்டு எனது மகளை அருண் அடித்து, துன்புறுத்தி வந்தார். இந்த நிலையில் எனது மகள் பிரசவத்துக்காக எனது வீட்டுக்கு வந்துவிட்டாள்.

அவளை உடனடியாக தனது வீட்டுக்கு வரவேண்டும் என்று அருண் வற்புறுத்தி வந்தார். குழந்தை பிறந்து 5 மாதம் ஆனதும் வருகிறேன் என்று எனது மகள் சொல்லிவிட்டாள். இதற்கிடையில் விபத்தில் சிக்கிவிட்டதாக பொய்யான தகவலை சொல்லி எனது மகளை அவரது வீட்டுக்கு அருண் வரவழைத்தார். அவளை அடித்து கொடுமை படுத்தினார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

கம்பி எண்ணும் அருண்

இந்த புகார் மனு அடிப்படையில் வரதட்சணை கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அருணை போலீசார் நேற்று கைது செய்தனர்.
 

ரஜினியை ஏன் இதில் தொடர்புபடுத்துகிறீர்கள்... எதையும் நானே பேஸ் பண்ணுவேன்! - தனுஷ்


3 பட வெளியீடு மற்றும் வர்த்தகத்தில் ரஜினிக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத நிலையில், அவர் பெயரை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிடுவது எந்த வகையிலும் நியாயமற்றது, ஏற்க முடியாதது, என்றார் நடிகர் தனுஷ்.

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், தனுஷ் - ஐஸ்வர்யா நடித்த 3 படத்தை தெலுங்கில் வெளியிட்டதால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு, அதன் வெளியீட்டாளர் நட்டி குமாருக்கு ரஜினி நஷ்ட ஈடு தருவார் என செய்தி வெளியானது.

இதற்கு உடனடியாக தன் கைப்பட எழுதிய அறிக்கையில் மறுப்பு தெரிவித்திருந்தார் ரஜினி.

இந்த நிலையில், படத்தின் ஹீரோ தனுஷும் தன் பங்குக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ரஜினி மகளை திருமணம் செய்துவிட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக, இட்டுக்கட்டி வரும் செய்திகளை எப்படிப் பொறுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. 3 படத்தால் யாருக்கும் நஷ்டமில்லை. அப்படி நஷ்டமென்று யாரும் சொல்லிவில்லை. அப்படியே நஷ்டம் வந்தாலும் அதை ஈடு செய்யும் வலிமையை கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார். என் குடும்ப பிரச்சினையை நானே பார்த்துக் கொள்வேன். ரஜினியை இந்தப் படத்தோடு ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும்," என்றார்.

இப்போது 3 படத்தை இந்தியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார் தனுஷ். ஆனால் படத்தின் இரண்டாம் பாதியை, கமல் சொன்ன அட்வைஸ்படி ஷார்ப்பாக எடிட் பண்ணி வெளியிடுகிறாராம்.

இதுகுறித்துக் கூறுகையில், "கமல் சொன்ன சில யோசனைகளின்படி இரண்டாம் பாதியை எடிட் செய்து வருகிறேன். இந்தியில் நிச்சயம் நான் நினைத்தபடி இந்தப் படம் போகும்," என்றார்.
 

சிம்பு படம் ட்ராப்?- மீண்டும் தனுஷிடம் போன வெற்றிமாறன்!


Simbu and Dhanush
பொல்லாதவன், ஆடுகளம் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் சேர்ந்து பணியாற்றிய தனுஷ் - வெற்றி மாறன் மீண்டும் கூட்டணி அமைக்கிறார்கள்.

ஆடுகளம் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன், சிம்புவை வைத்து வட சென்னை என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார்.

ஆனால் அந்தப் படம் ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள். படத்தின் ஹீரோக்களில் ஒருவரான ராணா, சிம்புவுடன் நடிக்க மறுத்து விலகிவிட்டார். இருந்தாலும் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்று கூறிவந்தனர்.

இப்போது படமே கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது. இதோ அதோ என சிம்பு இழுத்தடித்ததாலும், இன்னும் போடா போடி, வேட்டை மன்னன் ஆகிய படங்களை அவர் முடிக்க வேண்டியிருப்பதாலும் இந்தப் படம் வேண்டாம் என்ற முடிவுக்கு வெற்றிமாறன் வந்துவிட்டார். ஆனால் இதை ரொம்ப பாலீஷாக, தனுஷ் படம் முடிந்த பிறகு சிம்பு படத்தை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார். வெற்றிமாறன் ஒரு படத்தை முடிக்க கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் எடுத்துக் கொள்வார். அதற்குள் என்னென்ன மாற்றங்களோ என்கிறார்கள் யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.

இதைத் தொடர்ந்து தனது ராசியான ஹீரோ தனுஷிடமே திரும்ப வந்து, நாம சேர்ந்து படம் பண்ணலாம் என்று கூறிவிட்டார் வெற்றிமாறன்.

இந்தப் படத்தை க்ளவுட் நைன் மூவீஸ் தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
 

எங்கப்பா மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை என் படம் மீது காட்டுகிறது ஜெ அரசு! - உதயநிதி ஸ்டாலின்


Udayanidhi stalin
சென்னை: என் தந்தை மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியை எனது படங்கள் மீது காட்டுகிறது ஜெயலலிதா அரசு, என தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை:

"நான் தயாரித்து நடித்து திரைக்கு வந்துள்ள 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 7-ம் அறிவு படத்துக்கு, அந்தப் படம் திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்ட பிறகு வரிவிலக்கு அறிவித்து, அந்தப் பலன் யாருக்கும் கிடைக்காமல் செய்தனர்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைப் பொறுத்தவரை, அரசு நிர்ணயித்துள்ள அத்தனை விதிமுறைகளையும் பூர்த்தி செய்து உரிய முறையில் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளோம்.

சமீபத்தில் கேளிக்கை வரிவிலக்கு கொடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல் உள்ளது. பாரில் வைத்து திருமணம் நடப்பது போல் காட்சி வருகிறது. இதுபோன்ற திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்துவிட்டு, எந்த வித ஆபாச காட்சிகளும், கலாச்சார சீரழிவு விஷயங்களும் இல்லாத, எங்கள் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?

வன்முறை அதிகமாக உள்ள மற்றும் ஆங்கில கலப்பு அதிகமாக உள்ள படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களையும் கவர்ந்த, ஆங்கிலக் கலப்பில்லாத 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது என்ன நியாயம்?

இதனால் எனக்கு மட்டும் பாதிப்பு இல்லை. என்னை நம்பி படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

3 பட வியாபாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை - ரஜினி அறிக்கை


Statement by Rajini
சென்னை: 3 படத்தின் வர்த்தகத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்புமில்லை. இதுகுறித்து வெளியானவை பொய்ச் செய்திகள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்க, மருமகன் தனுஷ் - ஸ்ருதி நடித்த 3 படத்தின் தெலுங்கு வெளியீட்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால, அதை ஈடுகட்டுவதில் உதவ ரஜினி முன்வந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

இது முழுக்க தவறான செய்தி என ரஜினியே தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

எனது மகள் ஐஸ்வர்யா இயக்கி, தனுஷ், ஸ்ருதி நடித்து சமீபத்தில் வெளியான `3' திரைப்படத்தில் வியாபார ரீதியாக என்னை சம்பந்தப்படுத்தி ஒரு பொய்யான செய்தி வெளியாகி உள்ளது. அந்த படத்திற்கும், எனக்கும் வியாபார ரீதியாக எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆகவே திரைப்பட வினியோகஸ்தர்கள் யாரும், என்னை சம்பந்தப்படுத்தி வெளிவரும் பொய்யான செய்திகளை நம்பவேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.