சிம்பு ரசிகர்கள் கைது!

Tags: nbsp


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிம்பு ரசிகர்கள் கைது!

5/6/2011 4:58:09 PM

பிஜேபி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய சிம்பு ரசிகர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். சிம்பு நடித்த  'வானம்' என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதில், இந்துக்களை புண்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாகக் கூறி கடந்த 2 நாட்களாக தாம்பரம் பகுதி பிஜேபியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். படத்தின் கட் அவுட்டிற்கு மர்ம ஆசாமிகள் சிலர் செருப்பு மாலை போட்டதாக தெரிகிறது. இதனால், சிம்பு ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். தென்சென்னை மாவட்ட சிம்பு ரசிகர் மன்ற தலைவர் செந்தில் தலைமையில் தி.நகரில் உள்ள மாநில பிஜேபி தலைமை அலுவலகம் முன்பு இன்று காலை சிம்பு ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து, சிம்பு ரசிகர்கள் 15 பேரை கைது செய்தனர்.

 

ஐஸ்வர்யாவுக்கு சிசேரியன் நடக்கவில்லை... சுகப்பிரசவம்தான் - அமிதாப்


ஐஸ்வர்யாராய்க்கு ஆபரேஷன் நடக்கவில்லை சுகப்பிரசவம்தான் நடந்தது என்று அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.

உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யாராய்க்கு கடந்த புதன்கிழமை மும்பை ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. ஆபரேஷன் வேண்டாம் என மறுத்து சுகப்பிரசவமாக குழந்தையை பெற்றுக்கொண்டார். அவரது இந்த நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர்.

இரண்டு நாட்களில் ஐஸ்வர்யாராயும் குழந்தையும் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர்.

இதுகுறித்து அமிதாப் தனது ப்ளாகில், "சிசேரியன் நடந்ததாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது தவறானது. ஐஸ்வர்யா ராய்க்கு ஆபரேஷன் நடைபெறவில்லை. வலி நிவாரணி மருந்து ஊசி எதுவும் இல்லாமல் மருத்துவ உபகரணங்கள் உதவி இல்லாமலும் சுகப் பிரசவத்தில்தான் குழந்தை பிறந்தது.

ஐஸ்வர்யா ராய் விருப்பப்படியே பிரசவம் நடந்தது. அவரது இந்த மன உறுதியை பிரசவம் பார்த்த மருத்துவர்களே பாராட்டியுள்ளனர்," என்று எழுதியுள்ளார்.

மேலும் குழந்தையுடன் அதிக நேரம் இருக்க தான் ஆசைப்பட்டாலும், அவள் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறாள் என்றும் தாத்தா அமிதாப் குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் வீடு திரும்பியதும் குழந்தைக்கு பிரமாண்ட முறையில் பெயர் சூட்டு விழா நடக்கிறது.

இதற்கிடையே, குழந்தையைப் பார்க்க அமர்சிங் போன்ற அமிதாப்பின் குடும்ப நண்பர்கள், திரையுலகப் பிரமுகர்கள் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
 

கிசு கிசு - அடம் பிடிக்கும் நடிகை கவலையில் இயக்குனர்

Tags: nbsp

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
அடம் பிடிக்கும் நடிகை கவலையில் இயக்குனர்

5/6/2011 3:33:09 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

காதல் நடிகை தினமும் ஜிம்மே கதின்னு கிடக்கிறாராம்... கிடக்கிறாராம்... நெருங்கியவங்க பலமுறை அட்வைஸ் பண்ணியும் டயட்டை கடைப்பிடிக்காதவர், இப்போ டயட்டிலும் இருக்கிறாராம்... இருக்கிறாராம்... திரும்ப பழைய காதல் நாயகியா மாறிக் காட்டுறேன்னு சபதம் போட்டிருக்காராம்... போட்டிருக்காராம்...

பிய நடிகைக்கு சைடு ஹீரோயின் வாய்ப்புகள் நிறைய வருதாம்... வருதாம்... எதையும் ஏத்துக்க நடிகை மறுக்கிறாராம். பெரிய கம்பெனி, பிரபல ஹீரோன்னாத்தான் சைடு ரோல் பண்ணுவேன்னு நடிகை அடம் பிடிக்கிறாராம்... பிடிக்கிறாராம்...

பார்ட் 2 படத்துல பறந்து பறந்து ஃபைட் பண்ற ரிஸ்க்கான ஆக்ஷன் காட்சிகளை டைரக்டரு வச்சிருந்தாராம்... வச்சிருந்தாராம்... டூப் இல¢லாம நடிக்கிற மாதிரியான காட்சியாம். ஆனா, தல நடிகரு அதுக்கு நோ சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்... இதனால டைரக்டரு கன்னத்துல கை வச்சி உட்கார்ந்திருக்காராம்... உட்கார்ந்திருக்காராம்...
 




 

ரசிகர்களை ஏமாற்றிய எங்கேயும் காதல்!!

Jayam Ravi and Hansika
ரஜினியின் எந்திரனுக்குப் பின் சன் பிக்ஸர்ஸ் வெளியிட்ட இரு படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளன.

ஒரு தொலைக்காட்சி நிறுவனமாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ள சன் குழுமம், திரைப்படத் தயாரிப்பைப் பொறுத்தவரை தரமான படங்களைத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அல்லது தயாரித்த படங்களில் நல்ல வெற்றிப் படங்கள் என்றால் அவை இரண்டுதான். ஒன்று ரஜினியின் எந்திரன், இரண்டாவது கேவி ஆனந்தின் அயன்.

மற்றவை வெறும் விளம்பரங்களில் மட்டுமே வெற்றியாக சித்தரிக்கப்பட்டன என்பது விமர்சகர்களின் கருத்து.

இந்த நிலையில் எந்திரன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு, மாப்பிள்ளை மற்றும் எங்கேயும் காதல் என இரு படங்களை அடுத்தடுத்து வெளியிட்டது சன்.

இரண்டு படங்களுமே மோசமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளன. பாக்ஸ் ஆபீஸிலும் தோல்வியைத் தழுவியுள்ளன. இன்று வெளியான எங்கேயும் காதல் இரண்டாவது ஷோவிலேயே படுத்துவிட, 'உலகெங்கும் அரங்கு நிறைந்த காட்சிகள்' என விளம்பரப்படுத்தி வருகிறது சன் பிக்ஸர்ஸ்.
 

கெட்டப் மாறும் ஷம்மு

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கெட்டப் மாறும் ஷம்மு

5/6/2011 2:57:15 PM

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையாக உருவாகிறது ‘பாலை’. ‘கற்றது தமிழ்’ ராமின் உதவியாளர் செந்தமிழன் இயக்குகிறார். ஹீரோவாக புதுமுகம் சுனில் நடிக்கிறார். முற்றிலும் புதிய கலைஞர்கள் பணியாற்றும் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ஷம்மு. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை என்பதால் அதற்கேற்ப ஷம்முவின் கெட்டப், பாடி லாங்வேஜ் வித்தியாசமாக இருக்கும் என்கிறது பட வட்டாரம். பெரும்பாலான காட்சிகளுக்காக காடுகளில் இதன் ஷூட்டிங் நடக்கிறது. தஞ்சை அருகே உள்ள பகுதிகளிலும் சத்தியமங்கலம், கொடைக்கானல், மைசூர் காட்டுப் பகுதிகளில் ஷூட்டிங் நடத்த உள்ளனர். “காஞ்சிவரம் படத்தில் எனது நடிப்பு பேசப்பட்டது. ‘மயிலு’ ரிலீசானால் மீண்டும் எனது திறமை வெளிப்படும் என காத்திருந்தேன். அப்படம் தள்ளிப்போயுள்ளது. இப்போது ‘பாலை’ படத்தில் சவாலான வேடம் கிடைத்திருக்கிறது. இதில் எனது நடிப்பாற்றல் ரசிகர்களுக்கு தெரிய வரும்” என்றார் ஷம்மு.

 

பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் மனிஷா

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் மனிஷா

5/6/2011 2:52:51 PM

நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் ‘மாப்பிள்ளை’ படத்தில் நடித்தார் மனிஷா கொய்ராலா. இப்போது மீண்டும் இந்தி படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. நடிகை தீப்தி நாவல் இயக்கும் ‘தோ பைசே கி தூஹ்ப் சாரனா கி பாரீஷ்’ படத்தில் மனிஷா கொய்ராலா நடிக்கிறார். கதைப்படி அவருக்கு பாலியல் தொழிலாளி வேடம். இது பற்றி மனிஷா கூறும்போது, “இதற்கு முன் இது போன்ற வேடத்தில் நடித்ததில்லை. வாழ்க்கையில் போராட்டத்தை மட்டுமே பார்க்கும் ஒரு பெண்ணின் கதை. பட இயக்குனரான தீப்தியும் சிறந்த நடிகை. நான் அறிமுகமான ‘சவுதாகர்’ இந்தி படத்தில் எனக்கு மாமியாராக அவர் நடித்திருந்தார். இப்படத்துக்காக அவர் என்னை தேர்வு செய்தது சந்தோஷமாக உள்ளது. தீப்தியின் இயக்கத்தில் நடிப்பது எனக்கு சுலபமான விஷயமாக இருக்கும்” என்றார்.

 

ரஜினியின் வாழ்க்கை சினிமாவாகிறது!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினியின் வாழ்க்கை சினிமாவாகிறது!

5/6/2011 12:07:08 PM

இந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமைக்குரிய ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது, தமிழில் அல்ல இந்தியில்! இந்தியாவில் நடிகர் ஒருவரின் முழு வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்படுவது இதுவே முதல்முறை. ரஜினியின் அனுமதியுடன் ரஜினி வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் அதுல் அக்னிஹோத்ரி. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர். இந்தப் படத்தில் நடிப்பவர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையாம். ரஜினியின் முக அமைப்யையொத்த சில புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளார்களாம். ரஜினியின் உடல்மொழி, மேனரிஸங்கள் யாருக்கு சரியாக வருகிறதோ அவரை ரஜினியாக நடிக்க வைக்கப் போகிறார்களாம். படத்துக்கு ரஜினியின் முன்னுரையைப் பெறவும் திட்டமுள்ளதாம். இந்தியாவில் இதுவரை எந்த சினிமா கலைஞரின் வாழ்க்கை வரலாறும் முழுமையாகப் படமாக்கப்பட்டதில்லை.




 

மைனாவால் எனக்கு பெருமை : தம்பி ராமையா!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மைனாவால் எனக்கு பெருமை : தம்பி ராமையா!

5/6/2011 12:04:58 PM

மைனாவில் நடித்த பிறகு படத்தின் ஹீரோவுக்கு இணையாக பேசப்பட்டார் தம்பி ராமையா. படத்தைப் பார்த்த ரஜினியே, தம்பி ராமையாவை பெரிதும் பாராட்டியிருந்தார். சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் என்னை பற்றி பேச வைத்தது 'மைனா' படம்தான் என நகைசுவை நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா கூறினார். நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த படத்திற்கு பின் அதிகளவு ரசிகர்கள் என்னை தொலைபேசி மூலமும், நேரடியாகவும் வாழ்த்து தெரிவிக்கின்றர் ரசிகர்கள். இப்போது கழுகு, கள்ள சிரிப்பழகா, வாகை சூடவா, வேங்கை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன்".




 

நான் இயற்கையின் இளவரசி : அனன்யா

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நான் இயற்கையின் இளவரசி : அனன்யா

5/6/2011 11:54:39 AM

இயற்கை தவழ்ந்து கொஞ்சி விளையாடும் கேரளாவில் பிறந்த ஒவ்வொருவரது ஞாபகங்களும் அந்த இயற்கையை போன்றே பசுமையாக இருக்கும் என்பார்கள். எனது நினைவுகளை மீட்டும்போது அது உண்மைதான் என்று தெரிகிறது. கொச்சியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரும்பாவூர்தான் நான் பிறந்த ஊர். மலைகளின் நடுவில் இருக்கும் அழகான கிராமம். அப்பா பத்திர எழுத்தர், அம்மா ஸ்டாம் விற்பனையாளர். இருவருமே ஒரே துறையில் இருப்பதால் ஊரே அவர்களை அறியும், அவர்கள் பிள்ளை அனன்யா என்பதால் என்னையும் அறியும்.

எம்.ஐ.டி பப்ளிக் ஸ்கூலில் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை படித்தேன். சின்ன வயதிலேயே ஆங்கிலம் பிடிக்கும் என்பதால் ஆங்கில டீச்சர் சாரதாவையும் பிடிக்கும். வளர்ந்ததும் அவரைப் போலவே இங்கிலீஷ் பேச வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறேன். 5ம் வகுப்பு படிக்கும்போது எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஆலமரக் காட்டுக்கு அழைத்துப் போனார்கள். ஆலமரங்கள் நிறைந்த பகுதி அது. கைதட்டி ஆலமரத்தில் உள்ள பறவைகளை விரட்டி அவைகள் பறப்பதை ரசிக்க வேண்டும். விழுதுகளில் ஊஞ்சலாட வேண்டும். இதுதான் டூரின் கான்செப்ட். ஆனால், பறவைகளை விரட்ட மனமில்லாமல் விழுதுகளில் மட்டும் விளையாடியதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. சிறுவயதிலேயே நான் தெளிவாக இருந்திருக்கிறேன்!

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கவர்மெண்ட் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் படித்தேன். அந்த நேரத்தில் அறிவியலின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் டாக்டராக வேண்டும் என்று விரும்பினேன். அதனாலேயே சயின்ஸ் டீச்சர் இந்திராவை பிடித்திருந்தது. 'நீ டாக்டராகி இதே ஊர்ல எல்லாருக்கும் வைத்தியம் செய்றதை என் கண்ணால பார்க்கணும்' என்று அடிக்கடி சொல்வார். பாவம், அவரது ஆசை பொய்த்துவிட்டது. திரையில் மட்டுமே என்னைக் கண்டு களிக்கிறார். அவருக்காகவாவது ஒரு படத்தில் டாக்டராக நடிக்க வேண்டும்.

ஒருமுறை யானைகளை வளர்க்கும் குவாட நாட்டுக்கு டூர் சென்றோம். டாப்சிலிப்ஸ் மாதிரி காட்டு யானைகளை பராமரிக்கும் அந்த இடத்தைப் பார்த்ததும் யானைகள் மீது பெரிய மரியாதை வந்தது. யானைகளை வளர்க்கவும் ஆசைப்பட்டேன். அதன் பிறகு ஹையர் செகண்டரி ஸ்கூலில் சேர்ந்து பிளஸ் 2 முடித்தேன். விளையாட்டு பக்கம் கவனம் திரும்பியதும் அப்போதுதான். யாரும் விளையாடத் தயங்கும் ஒரு விளையாட்டை தேர்ந்தெடுக்க முடிவு செய்து, வில்வித்தையை கையில் எடுத்தேன். அதில் தீவிர பயிற்சி பெற்று இரண்டு முறை ஸ்டேட் சாம்பியனானேன். ஒரு முறை தேசிய அளவிலான போட்டியில் கலந்து
கொண்டேன்.

ஆலப்புழையில் உள்ள ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்தபோதுதான் நசீமா நசீர் அறிமுகமானாள். அதுவரை சொல்லிக் கொள்ளும்படி தோழிகள் இல்லாமல் இருந்த எனக்கு அவள் உயிர்த் தோழியானாள். ஆனால், சினிமா போல் எங்கள் நட்பு மோதலில்தான் ஆரம்பமானது. அவள் உள்ளூரை சேர்ந்தவள் என்பதால் 'பெரிய தாதா' மாதிரி நடந்து கொண்டாள். ஹீரோ மாதிரி அவளை எதிர்த்து நின்றேன். இந்த மோதலே எங்களுக்குள் நட்பாகி இன்று வரையும் தொடர்கிறது.

விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு செல்வேன். அவர்களுக்கு நான்தான் மகாராணி. செல்லம் அதிகம். அப்பாவும் அம்மாவும் வேலைக்கு செல்பவர்களாக இருந்ததால் கண்டிப்புடன் வளர்த்தார்கள். எனவே அவர்களுக்குத் தெரியாமல் நானும் தம்பியும் அடிக்கடி சண்டை போடுவோம். ஆனால், எப்படியோ எங்கள்  சண்டையை மோப்பம் பிடித்து விடுவார்கள். பிறகென்ன… இருவருக்கும் அடி விழும். சொன்னால் நம்பமாட்டீர்கள். கல்லூரி செல்லும்வரை பெற்றோரிடம் அடி வாங்கியிருக்கிறேன்!

எனக்கும் தண்ணீருக்கும் அப்படி ஒரு ஏழாம் பொருத்தம். தண்ணீரைக் கண்டாலே பயந்து நடுங்குவேன். வீட்டுக்கருகில் ஓடும் ஆற்றுக்கு அப்பா அழைத்துச் செல்வார். ஆனால், அவர் தோள்களில் அமர்ந்துதான் குளிப்பேன். மற்றபடி நானாக ஆற்றங்கரையில் கூட தனியாக கால் வைத்ததில்லை. இதனாலேயே இன்றுவரை நீச்சல் கற்றுக் கொள்ளவில்லை. தங்கத் தமிழ்நாட்டுக்கு நல்ல நடிகையை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நல்ல டீச்சர், நல்ல டாக்டர், நல்ல விளையாட்டு வீராங்கனை… ஆகிய மூன்றையும் கேரளா இழந்துவிட்டது! ஆனால், பெரும்பாவூருக்கு எப்போது நான் சென்றாலும் இந்த மூவரும் எங்கிருந்தோ ஓடிவந்து என்னுள் ஐக்கியமாகிவிடுவார்கள்.