சல்மான்கானுக்கு 8 மணி நேரத்தில் 8 கோடி

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
சல்மான் கான் ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்காக 8 மணி நேரத்துக்கு 8 கோடி தர ஒரு விளம்பர நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. அந்த நிறுவனம், முதலில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், அவர் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவருவதால், அந்த வாய்ப்பை சல்மான் கான் தட்டிச் சென்றார். சல்மானின் புகழை உண ர்ந்த அந்த நிறுவனம், அவர் கேட்ட தொகையை தர ஒப்புக் கொண்டது.



 

ஐஸ்வர்ய ராய் குழந்தைக்கு பெயர் ரெடி

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
உலக அழகி ஆன பிறகுதான் ஐஸ்வர்யாராய் கோடிகளில் சம்பாதிக்க ஆரம்பித்தார். அவரது குழந்தையோ பிறந்தவுடனே கோடிகளை சம்பாதிக்க தயாராக உள்ளது. ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பதுபோன்ற மார்பிங் படம் இன்டர்நெட்டில் உலா வந்தது. அது வெட்டி ஒட்டப்பட்ட படம் என்று தெரிவித்தார் அமிதாப்பச்சன். இதனையடுத்து, ஐஸ்வர்ய ராய் குழந்தைக்கு பெயர் முடிவாகிவிட்டதாம். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் தாத்தா அமிதாப்பச்சன் வீடு திரும்பியதும் இதற்கான விழா நடக்க உள்ளது.


 

அசின்-தீபிகா மீது இயக்குனர் தாக்கு

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
ஷாருக்கான் படத்தில் நடிக்கவிருப்பதாக வதந்தி பரப்புவதாக அசின், தீபிகா, கரீனா மீது இயக்குனர் தாக்கி உள்ளார். பாலிவுட் இயக்குனர்களில் கோபப்பட்டு பேசாத இயக்குனர் என்று பெயர் வாங்கியவர் இயக்குனர் ரோஹித் ஷெட்டி. இப்போது அவர் 3 முன்னணி நடிகைகளை கடுங்கோபத்துடன் தாக்கி பேசியது பலருக்கு ஆச்சர்யத்தை அளித்திருக்கிறது. அடுத்து ஷாருக்கான் நடிக்கும் 'சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிப்பதுபோல் கரீனாகபூர், அசின், தீபிகா படுகோன் ஆகிய 3 நடிகைகள் பில்டப் செய்து வருகின்றனர். இது மும்பை பத்திரிகைகளில் பரபரப்பான செய்தியாக வெளியாகிறது. இதைபார்த்து கோபம் அடைந்த ரோஹித் கூறியதாவது:

அடிக்கடி எனது பேட்டிகளில் கரீனா எனக்கு பிடித்தமான நடிகை என்று கூறி இருக்கிறேன். அவரை புதிய படத்தில் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும் இதுவரை அவரை நான் அணுகி அதுபற்றி பேசவில்லை. அதற்குள் இப்படத்தில் நடிக்கிறேன் என்றும், நடிக்கவில்லை என்றும் அவர் அவ்வப்போது கருத்து தெரிவிக்கிறார். 5 மாதத்துக்கு முன்பு அவரை சந்தித்தேன். சமீபத்தில் எங்கும் சந்திக்கவில்லை. ஏப்ரல் மாதம்தான் ஹீரோயினை முடிவு செய்வேன். அதேபோல் அசினிடம் இதுபற்றி கேட்கப்படுகிறது.

அவரும் அவ்வப்போது ஒரு கருத்து தெரிவிக்கிறார். தற்போது 'போல் பச்சான்' பட ஷூட்டிங்கில இருக்கிறேன். இது முடிந்தபிறகுதான் அடுத்த பட வேலை தொடங்குவேன். யாரோ ஒருவர் போன் செய்து தீபிகாதான் சென்னை எக்ஸ்பிரஸில் நடிக்கிறாரேமே என்கிறார். இதுபோன்ற சர்க்கஸ் வித்தைகளை நிறுத்திக்கொள்ளுங்கள். அழகான, திறமையான பிரபல நடிகை ஒருவரைத்தான் இப்படத்துக்கு தேர்வு செயதேன். ஆனால் இதுவரை அவர் எந்த நடிகை என்பதை முடிவு செய்யவில்லை. இவ்வாறு ரோஹித் கூறினார்.



 

நான் ரொம்ப பிஸி : அஞ்சலி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தற்போது இருக்கும் தமிழ் கதாநாயகிகளில், கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர். ஒவ்வொரு படத்திலும், தன்னுடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தும் அஞ்சலிக்கு இந்த வருடம் தொடக்கமே சிறப்பாக அமைந்துள்ளது. தற்போது அஞ்சலி சீயான் விக்ரமுக்கு ஜோடியாக கரிகாலன் படத்திலும், சுந்தர் சி.படம் இயக்கும் படத்திலும், மற்றும் முருதாஸ் தயாரிக்க படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தான் நடித்து வரும் படங்களுக்கு சரியாக கால்ஷிட் கொடுத்து அனைத்து இயக்குனர்களின் பாராட்டுகளை வாங்கியுள்ளாராம் அஞ்சலி. இந்த படங்கள் முடியும் வரை, யார் கதை சொல்ல வந்தாலும் பிஸி என சொல்லிவிடுகிறாராம் அஞ்சலி.


 

விரைவில் இசை பள்ளி ஆரம்பிக்க உள்ளேன் : சோனியா அகர்வால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சோனியா அகர்வால் கூறியது: 'திருமணத்துக்கு பிறகு நடிகைகள் மவுசு குறைவது சகஜம். சிலர் மீண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள் எதிர்பாராதவை. மீண்டும் சினிமாவில் ஹீரோயின் வேடம் எதிர்பாராதது என்றாலும் எனது காத்திருப்புக்கு கிடைத்த பலன், 'வானம்' படத்தில் சிறிய வேடம். 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' படத்தில் ஹீரோயின். இதில் 4 மாறுபட்ட மேக் அப் அணிகிறேன். இதனைத் தொடர்ந்து விரைவில் இசை பள்ளி ஒன்றை ஆரம்பிக்க உள்ளேன்' என்று கூறினார்.


 

திரையுலகம் நாளை ஸ்தம்பிக்கிறது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சினிமா துறைக்கு மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை ரத்து செய்யக்கோரி இந்திய முழுவதும் நாளை சினிமா ஷூட்டிங், காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. திரையுலகிற்கு மத்திய அரசு 30 சதவீதம் சேவை வரி விதித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் நாளை சினிமா ஷூட்டிங், காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. ஸ்டுடியோ, தியேட்டர்கள் ஒரு நாள் ஸ்தம்பிக்கிறது.

இதுபற்றி இந்திய திரையுலக சம்மேளன தலைவர் வினோத் கே.லப்பா கூறும்போது, "சினிமாவுக்கு ஏற்கனவே என்டர்டெயின்மென்ட் டாக்ஸ் எனப்படும் கேளிக்கை வரி விதிக்கப்பட்டு வருகிறது. இன்னொரு வரி விதிக்கப்படுவதை ஏற்க முடியாது. எனவே சேவை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி நாளை (வியாழன்) இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்படுகிறது. ஸ்டுடியோக்களும் மூடப்படுவதுடன் அனைத்து ஷூட்டிங்கும் ரத்து செய்யப்படுகிறது. சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் ஒருநாள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது" என்றார்.

இதுகுறித்து ஆலோசனை செய்ய தமிழ் திரையுலகினர் பங்கேற்ற கூட்டம் நேற்று பிலிம்சேம்பரில் நடந்தது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பெப்சி செயலாளர் ஜி.சிவா, திரை அரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், இந்திய திரைப்பட சம்மேளன துணைத்தலைவர் எல்.சுரேஷ், இயக்குனர்கள் சங்க செயலாளர் அமீர், தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் அவர்கள் கூறும்போது, "திரையுலகம் ஏற்கனவே பல சுமைகள் காரணமாக நலிந்திருக்கிறது. சேவை வரிவிதிப்பால் மேலும் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே இந்தியா முழுவதும் நாளை நடக்கவுள்ள திரையுலக போராட்டத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த அனைத்து அமைப்புகளும் பங்கேற்கும். அதன்படி சினிமா படப்பிடிப்பு, தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும். சேவை வரியால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி சென்னை பிலிம்சேம்பரில் பொதுக்கூட்டம் நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை கூட்டம் நடக்கும்" என்றனர்.


 

இந்த கால நடிகைகளுக்கு நடனம் ஆட தெரியவில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'கமல்தான் நடனம் கற்பதில் ஆர்வம் மிகுந்தவர். இந்த கால நடிகைகளுக்கு நடனம் ஆட தெரியவில்லை' என்றார் பிரபல டான்ஸ் மாஸ்டர். 'விஸ்வரூபம்' படத்தை இயக்கி நடிக்கிறார் கமல்ஹாசன். இப்படத்துக்காக பிரபல நடன இயக்குனர் பிஜு மஹராஜ் என்பவரிடம் சமீபத்தில் கதக் நடனம் கற்றார். இதுபற்றி மஹராஜ் கூறும்போது,"விஸ்வரூபம் படத்துக்காக கமல் என்னிடம் சமீபத்தில் கதக் நடன பயிற்சி பெற்றார். நான் பார்த்தவர்களில் நடனத்தை ஆர்வமாக கற்றவர் கமல். இந்த காலத்தில் பெரும்பாலான நடிகைகளுக்கு நடனம் ஆடத் தெரியவில்லை. கையையும், காலையும் அசைக்கிறார்கள் அவ்வளவுதான். சமீபத்தில் டிவி ஒன்றில் கேத்ரினா கைப் ஆடிய நடனம் பார்த்தேன். அது நடனமாக எனக்கு தெரியவில்லை. முறையான நடனம் ஆடும் அளவுக்கு அவர் தகுதியாக இல்லை. அந்த கால நடிகைகள் வஹீதா ரெஹமான் அல்லது மீனா குமாரி போன்றவர்களுடன் ஒப்பிடும்போது இப்போதுள்ள நடிகைகள் ஒன்றுமே இல்லை. மாதுரி தீட்சித் மட்டுமே ஓரளவுக்கு ஆடும் திறமை பெற்றவர். காட்சி முடிந்தபிறகுகூட நடன அசைவு எப்படி இருந்தது என்று ஆர்வமாக கேட்பார்" என்றார்.