பிரபுதேவா, நயன்தாராவை சமாதானம் செய்யவில்லை : குஷ்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரபுதேவா, நயன்தாராவை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடவில்லை என்றார் குஷ்பு. காதல் ஜோடிகளாக வலம் வந்த பிரபு தேவா, நயன்தாரா சமீபத்தில் பிரிந்தனர். இதையடுத்து நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். இந்நிலை யில் பிரபுதேவா, நயன்தாராவுக்கு இடையே சமரசம் ஏற்படுத்த குஷ்பு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து குஷ்பு கூறியதாவது:

பிரபுதேவா, நயன்தாரா இருவரும் எனது நல்ல நண்பர்கள். பிரபு தேவாவை அவர் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே எனக்கு தெரியும். அவர் என்னுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். பிரபுதேவா, நயன்தாராவுக்கு இடையில் நான் மீடியேட்டராக இருக¢கவில்லை. காதலர்களாக இருந்த அவர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக அறிந்தேன். அவ்வளவுதான். மற்றபடி அந்த பிரச்னை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர்களுக்குள் என்ன நடந்தாலும் அது அவர்களின் சொந்த பிரச்னை. அதில் நான் தலையிட விரும்பவில்லை. இதற்கிடையே நான் தலையிட்டு அவர்களை சமரசம் செய்து வைக்க முயல்வதாக சிலர் புரளி கிளப்புகிறார்கள். இதில் சிறிதும் உண்மையில்லை.


 

திருமண செலவுக்காக மண்டபத்தை விற்றேனா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தான் கட்டிய கல்யாண மண்டத்தை, தனது திருமண செலவுக்காக சினேகா விற்றதாக கூறப்படுகிறது. இது பற்றி அவர் பதிலளித்துள்ளார். நடிகை சினேகா, பிரசன்னா காதல் திருமணம் வரும் மே 11ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. அற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. இதற்கிடையில் திருமண செலவுக்காக பண்ருட்டியில் தான் கட்டிய கல்யாண மண்டபத்தை சினேகா விற்றுவிட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவியது. இது குறித்து சினேகா கூறியதாவது: எனக்கு சொந்தமான சொத்தை ஒரு நல்ல காரியத்துக்காக விற்றிருக்கிறேன். இதைபெரிய விஷயமாக ஏன் பேசிக் கொண்டி ருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெரும் முதலீட்டில் கட்டப்பட்ட அந்த சொத்தை வெறும் திருமண செலவுக்காக விற்றேன் என்று கூறுவது சரியல்ல. கடவுள் எனக்கு அதிகமாகவே கொடுத்திருக்கிறார். எனது முதலீடுகள் அப்படியே இருக்கிறது. திருமண செலவுக்காக மண்டபத்தை விற்றால் அது எனக்கு வருத்தத்தைதான் தந்திருக்கும்.

என் குடும்பத்தில் எனது கல்யாணம்தான் கடைசி திருமணம். எனவே இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திருமணத்தையொட்டி நடக்கவுள்ள விசேஷங்களில் கட்டுவதற்காக பலவிதமான உடைகள் வித்தியாசமான டிசைன்களில் தயாரிக்க ஆர்டர் கொடுத்திருக்கிறேன். எனது திருமண நாளுக்காக நிறைய எதிர்பார்ப்புகளுடன் ஆவலாக காத்திருக்கிறேன். இவ்வாறு சினேகா கூறினார். திருமணத்தையொட்டி புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார் சினேகா. இதற்கிடையில் குமாரவேலன் இயக்கும் ஹரிதாஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதில் மட்டும் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு சென்னையிலேயே நடக்கிறது.


 

தமிழுக்கு வரும் மலையாள ஆவி கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மலையாளத்தில் வினயன் இயக்கிய படம் யக்ஞையும் யானும். காதல் ஜோடிகளை வில்லன் கொல்ல, அந்த ஆவிகள் மோதிரம் வழியாக ஹீரோவின் உடம்புக்குள் புகுந்து தன்னை கொன்றவர்களை எப்படி பழிவாங்குகிறது என்ற கருவை மையமாக வைத்து உருவானது. இப்படம் தெலுங்கில் லங்கேஸ்வரி என்ற பெயரில் வெளியானது. தற்போது தமிழில் ஜக்கம்மா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது.

காதல் ஜோடி ஆவிகளாக கவுதம், மேக்னா ராஜ் நடித்துள்ளனர். வில்லன்களாக தேவ், திலகன், ராஜ் நடித்துள்ளனர். இது பற்றி பட வசனகர்த்தா பாலா.ஆர் கூறும்போது, மலையாளத்தில் இப்படத்திற்காக அமைக்கப்பட்ட இசை எபெக்ட் பகுதிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, புதிதாக 15 நாட்கள் சவுண்ட் மிக்ஸிங் செய்யப்பட்டுள்ளது. தமிழுக்கு சில பகுதிகள் ரீ ஷூட் செய்யப்பட்டு இணைக்கப்பட்டது. மோகினி வேடத்தில் கவர்ச்சியாக  நடித்திருக்கிறார் மேக்னா ராஜ் என்றார்.