எல்லாம் என் கெரகம்... நடிகையாகிட்டேன்! - புலம்பும் டாப்ஸி

கரகாட்டக்காரன் கோவை சரளா ரேஞ்சுக்குப் புலம்ப ஆரம்பித்துவிட்டார் நடிகை டாப்ஸி.

தமிழில் ஆடுகளம் மூலம் அறிமுகமான நடிகை டாப்ஸி, தொடர்ந்து சில படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்தது ஆரம்பம். ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

எல்லாம் என் கெரகம்... நடிகையாகிட்டேன்! - புலம்பும் டாப்ஸி

தற்போது லாரன்சுடன் முனி 3-ல் நடிக்கிறார்.

பெரிய ரேஞ்சுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட டாப்சிக்கு இப்போது போதிய படங்கள் இல்லை. வரும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இல்லை.

எனவே வெறுத்துப் போய், ஏன்டா இந்த சினிமாவுக்கு வந்தோம் என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

அவர் கூறுகையில், "திறமையும் அழகும் இருந்தும்கூட எனக்கு போதிய படங்கள் இல்லாதது வேதனையாக உள்ளது.

படித்துவிட்டு ஏதேனும் வியாபாரத்தில் இறங்கி தொழிலதிபராகியிருக்கலாம். என் தலையெழுத்து சினிமா நடிகையாகி வாய்ப்புக்கு காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.

சினிமாவைத் தேர்வு செய்தது தவறுதான்... இதற்காக மிகவும் வருந்துகிறேன்," என்றார்.

 

அனேகன் 'வெற்றி'யைக் கொண்டாடிய தனுஷ், சிம்பு, கேவி ஆனந்த்

நேற்றுதான் தனுஷ் நடித்த அனேகன் படம் வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் படம் தாறுமாறான வெற்றி என்று அறிவித்துள்ள தனுஷ், அதற்காக தனது நெருங்கிய நண்பர்களை அழைத்து நேற்று இரவே வெற்றி விருந்து அளித்துவிட்டார்.

கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் 700 க்கும் அதிகமான அரங்குகளில் நேற்று வெளியானது.

படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வர ஆரம்பித்த நிலையில், இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியைக் கொண்டாட நேற்று இரவு வெற்றி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் தனுஷ். இதில் சிம்பு, இயக்குநர் கேவி ஆனந்த் மற்றும் தனுஷின் நண்பர்கள் பங்கேற்று கொண்டாடினர்.

 

ஏஆர் ரஹ்மான் குடும்பத்திலிருந்து இ ஆர் அசார் காஷிஃப்!

ஏ ஆர் ரஹ்மான் குடும்பத்திலிருந்து மேலும் ஒருவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

அவர் பெயர் இஆர் அசார் காஷிஃப்.

ரஹ்மானின் தங்கை மகனான இவர் ‘கண்ணாலே' என்ற மியுசிக் வீடியோ மூலம் இசையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறார்.

ஏஆர் ரஹ்மான் குடும்பத்திலிருந்து இ ஆர் அசார் காஷிஃப்!

இளமை பொங்கும் இந்த காதல் பாடலை காஷிஃப் இசையமைக்க பிரபல பாடகர் ஜாவேத் அலி மற்றும் பாடகர் ஸ்ரீநிவாஸின் மகள் சரண்யா ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் குடும்பத்திலிருந்து இ ஆர் அசார் காஷிஃப்!

இந்த மியுசிக் வீடியோவை அஷ்வின் இயக்கியுள்ளார். விஜய் கார்த்தி கண்ணன் ஒளிப்பதிவில், ஸ்ரீதரன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

சென்னை டிரேட் சென்டரில் நடைபெறவுள்ள ‘ பிக் தமிழ் மெலோடி அவார்ட்ஸ்' விருது வழங்கும் விழாவில் இந்த மியுசிக் வீடியோவை வெளியிடவுள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் குடும்பத்திலிருந்து இ ஆர் அசார் காஷிஃப்!

"சிறு வயது முதலே இசை மீது பெரும்பற்று இருந்தது. ரஹ்மான் அங்கிள் ஸ்டுடியோவிற்கு சென்று அவர் வேலை செய்வதை உன்னிப்பாய் கவனிப்பதுண்டு. இந்த மியுசிக் வீடியோ எனது நெடுநாள் கனவு. ரஹ்மான் மாமா மற்றும் எனது சகோதரன் ஜிவி பிரகாஷ் இருவரும் என்னை வாழ்த்தினர். உங்கள் அனைவருக்கும் எனது முதல் பாடல் பிடிக்கும் என்று நம்புகிறேன்" என்கிறார் அசார் காஷிஃப்.

 

என்னய்யா இது செக்ஸ் படத்தைவிட மோசமா இருக்கே... - சன்னி லியோன் படம் பார்த்து அதிர்ந்த சென்சார்

முன்னாள் ஆபாசப் பட நாயகியான சன்னி லியோன் நடித்துள்ள புதிய இந்திப் படக் காட்சிகள் ஆபாசத்தின் உச்சமாக இருப்பதாகவும், படத்துக்கு ஏ சான்று கூட தர முடியாது என்றும் சென்சார் குழு தெரிவித்துள்ளது.

ஜிஸ்ம் 2 படம் மூலம் இந்தியில் அறிமுகமான ஆபாசப் பட நடிகை சன்னி லியோன், இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

என்னய்யா இது செக்ஸ் படத்தைவிட மோசமா இருக்கே... - சன்னி லியோன் படம் பார்த்து அதிர்ந்த சென்சார்

சன்னி லியோன் இந்தியில் நடித்த எல்லாப் படங்களுக்குமே ஏ சான்றுதான் வழங்கப்பட்டது. தற்போது ஏக் பெஹலி லீலா என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். படம் முழுக்க அவர் பாத்திரம் வருகிறது.

என்னய்யா இது செக்ஸ் படத்தைவிட மோசமா இருக்கே... - சன்னி லியோன் படம் பார்த்து அதிர்ந்த சென்சார்

ஒரு பாடல் காட்சியை 100 லிட்டர் பாலில் சன்னி லியோன் குளிப்பது போன்று எடுத்துள்ளனர். நிஜமாக 100 லிட்டர் பால் வாங்கி அவர் மீது ஊற்றி குளிக்க வைத்துள்ளனர். இந்தக் காட்சி படு ஆபாசமாக உள்ளதாக தணிக்கை குழுவினர் கூறியுள்ளனர்.

என்னய்யா இது செக்ஸ் படத்தைவிட மோசமா இருக்கே... - சன்னி லியோன் படம் பார்த்து அதிர்ந்த சென்சார்

பொதுவாக ஆபாச காட்சிகள் உள்ள படங்களுக்கு தணிக்கை குழுவினர் ‘ஏ' சான்றிதழ் அளிப்பது வழக்கம்.

ஆனால் சன்னிலி யோன் படம் ‘ஏ' படங்களை விட மோசமாக உள்ளதாகக் கூறியுள்ளனர் குழுவினர். அந்த அளவு ஆபாசத்தின் உச்சமாக உள்ளதாம் காட்சிகள்.

என்னய்யா இது செக்ஸ் படத்தைவிட மோசமா இருக்கே... - சன்னி லியோன் படம் பார்த்து அதிர்ந்த சென்சார்

கிட்டத்தட்ட பாதிப் படத்தை வெட்டியெறிந்தால்தான் தணிக்கைச் சான்று தர முடியும் என தணிக்கைக் குழுவினர் சொல்ல, ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப் போகிறார்களாம் படத்தை.

 

காதலர் தினத்தைக் கொண்டாடுங்க... - தமன்னா

காதலர் தினத்தை கொண்டாடுவது தவறல்ல. காதலையும் காதலர் தினத்தையும் கொண்டாடுங்க, என்று கூறியுள்ளார் நடிகை தமன்னா.

இன்று காதலர் தினம் என்பதால், அதையொட்டி நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில், "காதல் என்பது சொல்லில் வர்ணிக்க முடியாத ஒரு அற்புதம். நமக்காக, நம்மை நேசிக்கிற ஒருவர் இருக்கிறார் என்று நினைக்கும் போதே பெருமிதமாக இருக்கும்.

காதலர் தினத்தைக் கொண்டாடுங்க... - தமன்னா

அழகான காதல் படங்களைப் பார்க்கிற போது நாமும் அதில் வாழ்வது போன்ற சந்தோஷம் கிடைக்கும். அதைவிட சுகமான அனுபவம் வேறில்லை.

காதல் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். நான் காதல் சம்பந்தப்பட்ட படங்களை அதிகம் பார்ப்பேன். காதல் பாடல்களைத்தான் அதிகம் கேட்பேன். காதலர் தினத்தை காதல் ஜோடிகள் கொண்டாடுகிறார்கள். அது தவறல்ல. காதலையும் காதலர் தினத்தையும் கொண்டாடுங்கள்," என்றார்.

 

என்னை அறிந்தால் திருட்டு வீடியோ.. போலீசில் புகார்.. இதானா உங்க டக்கு!

சென்னை: அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் திருட்டு வீடியோ.. போலீசில் புகார்.. இதானா உங்க டக்கு!

அங்கு மாநில திருட்டு வி.சி.டி. ஒழிப்பு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் எஸ்.தாணு, ஏ.எம்.ரதினம் ஆகியோர் கூறுகையில், "என்னை அறிந்தால் படத்தின் திருட்டு வி.சி.டி. வெளியாவதை தடுக்கும் பொருட்டு முன்கூட்டியே திருட்டு வி.சி.டி. ஒழிப்பு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் எங்களிடம் மனுவை பெற்றுக்கொண்டு, எங்கள் பிரச்சினைகளை சுமார் 1 மணி நேரம் கேட்டார்.

மக்கள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் போலீசார் திருட்டு வி.சி.டி. ஒழிப்பு பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள்.

'என்னை அறிந்தால்' படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளதை தடுக்கவும் போலீசார் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் 'என்னை அறிந்தால்' படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தியேட்டர் மூலம் திருட்டு வி.சி.டி. தயாரிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளோம். அந்த தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கவும், எங்கள் புகார் மனுவில் வற்புறுத்தி இருக்கிறோம். கேரள போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக, சூப்பிரண்டு ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அந்த தியேட்டர் உரிமையாளரிடம் உரிய நஷ்ட ஈட்டை வசூலிக்கவும் உதவி செய்ய கேட்டுள்ளோம். திருட்டு வி.சி.டி. தயாரிக்க உதவும் சினிமா தியேட்டர்கள் மீது போலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

என்னை அறிந்தால் திருட்டு டிவிடி படம் வெளியாகும் முன்பே ரிலீசாகிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தயாரிப்பாளரோ, இரண்டு வாரங்கள் கழித்துதான் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

 

‘இது நம்ம ஆளு’ குழுவின் காதலர் தின பரிசு!

சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு' படம் அதி வேகமாக தயாராகி வருகிறது.

‘இது நம்ம ஆளு’ குழுவின் காதலர் தின பரிசு!

ரசிகர்களுக்கு காதலர் தின பரிசாக படத்தின் சிறு வீடியோ (Bloopers) நேற்று மாலை 'இது நம்ம ஆளு ' படக் குழுவினர் வெளியிட்டனர் .

‘இது நம்ம ஆளு’ குழுவின் காதலர் தின பரிசு!

இதுகுறித்து இயக்குநர் பாண்டிராஜ் கூறுகையில், "படத்தின் டீசருக்கு ரசிகர்கள் கொடுத்த அதரவு எங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்தது. ‘இது நம்ம ஆளு' காதலை மையமாகக் கொண்ட படம். ஆதலால் காதலர் தின பரிசாக இந்த சிறு காணொலியை வெளியிட்டுள்ளோம்.

‘இது நம்ம ஆளு’ குழுவின் காதலர் தின பரிசு!

இந்த வீடியோவில் ஷூட்டிங் சமயத்தில் நடந்த சிறுசிறு தவறுகள் அதில் நாங்கள் மகிழ்ந்த விஷயங்கள் உள்ளடக்கியிருக்கும். அதேபோல் நம் உறவுகளின் மத்தியில் நடக்கும் சிறுசிறு தவறுகளை மறந்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடர வேண்டும்" என்றார்.

 

எனக்கென யாரும் இல்லையே... இது அனிருத்தின் காதலர் தின பரிசு!

காதலர் தினப் பரிசு என சிம்பு - நயன்தாராவின் சிறு வீடியோ நேற்று வெளியானது. அதைத் தொடர்ந்து, அனிருத் ஒரு காதலர் தின ஸ்பெஷல் வெளியிட்டுள்ளார்.

அவர் இசையில் விரைவில் வரவிருக்கும் ஆக்கோ படத்தின் ஒற்றைப் பாடலை காதலர் தின பரிசாக வெளியிட்டுள்ளார்.

எனக்கென யாரும் இல்லையே... இது அனிருத்தின் காதலர் தின பரிசு!

ரெபில் ஸ்டுடியோஸ் தீபன் பூபதி, ரத்தேஷ் வேலு தயாரிப்பில் ஷாம் இயக்கும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள, "எனக்கென யாரும் இல்லையே..." என்ற இந்த பாடலை ‘அதாரு அதாரு...' புகழ் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

மெரசலாகிட்டேன் மூலம் ஹாட் பாடகராகவும் மாறிவிட்ட அனிருத் இப்பாடலைப் பாடியுள்ளார்.

"காதலுக்காக காத்திருப்பவர்கள், காதல் இல்லாதவர்கள், காதலில் கசந்து போனவர்கள் என அனைவருக்கும் இப்பாடலை டெடிகேட் செய்கிறோம். அனைவரும் முணுமுணுக்கும் ஒரு பாட்டாய் இது இருக்கும்..," என்கிறார் பாடலை எழுதிய விக்னேஷ் சிவன்.

 

சிஷ்யருக்கு உதவும் குரு மிஷ்கின்- 'கள்ளப்படம்'

முன்னணி இயக்குனர்கள் தங்களது உதவி இயக்குனர்களின் படங்களை தயாரித்து உதவி புரியும் வழக்கம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறது.

இயக்குனர் ஷங்கர் தனது சிஷ்யர் காரத்திக் ஜி க்ரிஷ் இயக்கிய கப்பல் படத்தை வெளியிட்டார். படத்தின் வெற்றிக்கு அது பக்க பலமாய் அமைந்தது.

சிஷ்யருக்கு  உதவும் குரு மிஷ்கின்- 'கள்ளப்படம்'

இயக்குநர் ஷங்கரை தொடர்ந்து பிசாசு படத்தின் வெற்றி தந்த தெம்பில் இருக்கும் இயக்குநர் மிஷ்கின் தனது நெடு நாள் சிஷ்யர் வடிவேல் இயக்கும் ‘கள்ளப்படம்' என்ற படத்தை 'லோன் வுல்ப் புரொடக்ஷன்ஸ்' சார்பில் வெளியிடுகிறார்.

சிஷ்யருக்கு  உதவும் குரு மிஷ்கின்- 'கள்ளப்படம்'

நல்ல தரமான படைப்புகளுக்கு துணை நிற்க ஆயத்தமாகி வரும் 'லோன் வுல்ப் புரொடக்ஷன்ஸின் முதல் வெளியீடாக வருகிறது ‘கள்ளப்படம்' .

சிஷ்யருக்கு  உதவும் குரு மிஷ்கின்- 'கள்ளப்படம்'

"நான் இந்தப் படத்தை பார்த்தேன். என்னைப் பொறுத்த வரையில் இப்படம் தமிழ் சினிமாவின் தரமான படங்களின் பட்டியலில் இடம்பெறும். வடிவேல் எனது சிஷ்யன் என்று கூறி பெருமிதம் கொள்ளும் அதேவேளையில், இப்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். லக்ஷ்மி ப்ரியா, இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளர் காஜின், வடிவேல் ஆகியோரது இந்த கூட்டணி நம்பிக்கையின் அச்சாணியாய் விளங்குகிறது. சினிமாவை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படம் ஒரு விருந்தாய் அமையும்," என்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

 

உத்தம வில்லன், கொம்பன், நண்பேன்டா... ஒரு பெரும் மோதல் காத்திருக்கிறது!

கோடை விடுமுறையின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கப் போகிறது தமிழ் சினிமாவில்.

ஏப்ரல் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான 3-ம் தேதி புனித வெள்ளி என்பதால், அதற்கு ஒரு நாள் முன்பாக ஏப்ரல் 2-ம் தேதி புதிய படங்களை வெளியிடுகின்றனர்.

உத்தம வில்லன், கொம்பன், நண்பேன்டா...  ஒரு பெரும் மோதல் காத்திருக்கிறது!

அன்றைக்கு மூன்று முக்கியமான படங்கள் வெளியாகவிருக்கின்றன.

கமல் ஹாஸன் நடித்த உத்தம வில்லன், உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேன்டா மற்றும் கார்த்தியின் கொம்பன் ஆகிய படங்கள் அன்று வெளியாகவிருக்கின்றன.

உத்தம வில்லனை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துவிட்டது.

நண்பேன்டா படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் வெளியிடுகிறது. அந்த நிறுவனமும் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது.

கொம்பன் படத்தை குட்டிப்புலி முத்தையா இயக்கியுள்ளார். படத்தின் இசை வரும் மார்ச் 5-ம் தேதி வெளியாகிறது. படத்தை ஏப்ரல் 2-ம் தேதி வெளியிடப் போவதாக ஸ்டுடியோ கிரீன் அறிவித்துள்ளது.