நட்புப் படத்தின் தயாரிப்பாளரை சுற்றலில் விட்ட தளபதி நடிகர்

சென்னை: தளபதியான அந்த நடிகர் சில வருடங்களுக்கு முன்பு அடுத்தடுத்து தோல்விப் படங்களை கொடுத்து மார்க்கெட் இறங்கிப் போயிருந்தபோது,சக நடிகர்களுடன் இணைந்து நட்பான படத்தில் நடித்திருந்தார்.

ஹிந்தியில் வெளியான ஒரிஜினல் படம் தமிழ் சினிமாவின் பிரமாண்டமான இயக்குனரால் ரீமேக் செய்யப்பட்டு இருந்தது, படம் ஓரளவு நன்றாக ஓடி நடிகரின் சரிந்த மார்க்கெட்டை சற்று நிமிர்த்திக் கொடுத்தது.

ஆனால் எல்லோருக்கும் நட்பான அந்தப் படம் தயாரிப்பாளர் தரப்பில் லாபத்தைக் கொடுப்பதற்கு பதிலாக நஷ்டத்தை அளித்து விட்டதாம். இதனைக் கேட்ட நடிகர் அடுத்து உங்கள் பேனரில் ஒரு படம் நடிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தாராம்.

இதனை நம்பிய தயாரிப்புத் தரப்பு சமீபத்தில் நடிகரை சந்திக்க நடிகரோ நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன் இப்போது எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டாராம்.

அடுத்தவங்க படத்துக்கெல்லாம் நல்லது செய்றாரு சொந்தப் படத்துக்கு வந்த பிரச்சினையை தீர்த்து வைக்க மாட்டேன் என்கிறாரே, என்று சகட்டுமேனிக்கு தயாரிப்பாளர் தற்போது புலம்பி வருகிறாராம்.

 

விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்களால் ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு

ஈரோடு: ஈரோட்டில் தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதால் புதுபடத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

புதிய தமிழ்ப்படத்தின் படப்பிடிப்பு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள மேவானி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அருகில் இருந்த காட்டுப்பகுதியில் இருந்து திடீர் என வந்த தேனீக்கள் படக்குழுவினரை விரட்டி விரட்டி கொட்டியது.

Crew of Film Unit Injured in Bee Attack in Tamil Nadu, Shooting Cancelled

சிலர் அந்த இடத்தை விட்டு ஓடினர். மேலும் சிலர் தேனீக்களிடம் இருந்து தப்பிக்க அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தனர். தேனீக்களிடம் கடி வாங்கிய நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினரில் சிலர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

மற்றவர்களுக்கு கிராம மக்களே முதலுதவி அளித்தனர். இந்த சம்பவத்தால் நேற்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு படப்பிடிப்பை ரத்து செய்துள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தேனீக்கள் தொல்லையால் படப்பிடிப்பு ரத்தானது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

 

அருண்பாண்டியன் சார் பொத்தாம் பொதுவாக யாரையும் சொல்லாதீங்க- ட்விட்டரில் விஷால் பதிலடி

சென்னை: தமிழ் சினிமா மிகுந்த நெருக்கடி நிலையில் உள்ளது. எடுத்த படத்தை வெளியிட முடியாத நிலை. இதனால்தான் ஒரு தயாரிப்பாளர் சிலை கடத்தல் வரை போயிருக்கிறார்.

என்று சினிமாவின் மோசமான நிலையை 2 தினங்களுக்கு முன்பு தான் சொந்தமாக தயாரிக்கும் சவாலே சமாளி, படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் எடுத்துரைத்தார் நடிகரும் எம்எல்ஏ வுமான அருண்பாண்டியன்.

மேலும் அவர் பேசுகையில் ஒரு படம் தயாரிக்கும் போது படத்தின் பெரும்பகுதி பணம் நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோருக்குத்தான் போகிறது. ஆனால் படம் ரிலீஸ் செய்யும் போது அந்த தயாரிப்பாளருக்கு யாரும் உதவி செய்வதில்லை.

Please Don't Generalize Arun Pandian Sir - Vishal Says in Twitter

படத்தின் சேட்டிலைட் உரிமைகள் கூட விற்பதில்லை,அனைத்தும் தயாரிப்பாளர் தலையில்தான் முடிகிறது. இதனால் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் தனது படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சிலை கடத்தல் வரை சென்றுள்ளார்" என்று கூறியிருந்தார்.

தமிழ் சினிமாவில் பரபரப்பையும் சலசலப்பையும் ஒருசேர ஏற்படுத்திய இந்தப் பேச்சுக்கு தற்போது நடிகர் விஷால் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் "தயாரிப்பாளர்களுக்கு யாரும் உதவுவது இல்லை என்று பொதுவாக சொல்லாதீர்கள் அருண்பாண்டியன் சார், சில நடிகர்கள் (என்னையும் சேர்த்து) படம் வெளியாகும் சமயத்தில் தயாரிப்பாளர்களுக்கு உதவிகள் செய்து செய்கிறோம்.

நீங்கள் கூறியது நல்ல கருத்துதான் ஆனால் யார் அப்படி செய்கிறார்களோ அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டே சொல்லுங்கள் என்று அருண்பாண்டியனுக்கு எதிராக தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார் நடிகர் விஷால்.

விஷாலின் இந்தக் கருத்தை நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்து விஷாலிற்கு ஆதரவளித்திருக்கிறார்.குஷ்பூவும் ஒரு தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அநியாயம் எங்கே நடந்தாலும் புரட்சித்தளபதி பொங்கிடுறாரு.....

 

கம்பத்தில் உலகத் திரைப்பட விழா.. நாளை தொடங்குகிறது!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நகரில் உலகத் திரைப்பட விழா நாளை தொடங்குகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சிறிய நகரமான கம்பம் மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளிலிருந்து எத்தனையோ இளைஞர்கள் திரைத் துறையில் கால் பதித்துள்ளனர்.

இந்த கம்பம் நகரில் முதல் முறையாக உலகத் திரைப்பட விழாவை நடத்துகிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிழல் திரைப்பட சங்கம்.

International film festival in Cumbam

நாளை வெள்ளிக்கிழமை தொடங்கி, 3 நாள்கள் நடக்கும் இந்த விழாவுக்கான "டீஸர்' சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த உலகத் திரைப்பட விழா கம்பம் அமராவதி திரையரங்கில், வெள்ளிக்கிழமை (ஆக. 28) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில், இந்தியா, சீனா, போலந்து, ரஷியா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 16 மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

 

உதயநிதிக்கு கிடைக்காத சந்தானம் கால்ஷீட்... 'உள்ளே வந்தார்' விவேக்!

ஹீரோயின் இல்லாமல் கூட நடிப்பேன்.. ஆனால் சந்தானம் இல்லாமல் ஷூட்டிங்குக்கே வர முடியாது என்கிற அளவுக்கு, தன் படங்களில் சந்தானம் இருந்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் உதயநிதி.

ஆனால் சினிமா கூட்டணிகள் எந்தக் காலத்திலும் நிலையாக இருந்ததே இல்லை. மாறிக் கொண்டே இருக்கும்.

Why Santhanam says no to Udhayanidhi?

அந்த நிலை உதயநிதி - சந்தானம் கூட்டணிக்கும் வந்துவிட்டது. ஆனால் இது நட்பு முறிவால் வந்த மாற்றமில்லை. சந்தானம் ஏக பிஸியாக இருப்பதால் வந்த மாற்றம்.

இனிமே இப்படித்தான் படத்துக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் வசூலைப் பார்த்து, சந்தானத்தை 3 புதிய படங்களில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்தப் படங்களில் சந்தானம் படுபிஸியாகிவிட்டார்.

Why Santhanam says no to Udhayanidhi?

இதனால் நெருங்கிய நண்பனான உதயநிதியின் புதிய படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை. எனவே விவேக்கை ஒப்பந்தம் செய்துள்ளனர். உதயநிதியுடன் விவேக் இணைவது இதுவே முதல் முறை.

Why Santhanam says no to Udhayanidhi?

நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார். ஓகே ஓகே வெற்றிக்குப் பிறகு இருவரும் இணையும் படம் இது. இன்று முதல் இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து பொள்ளாச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் படபிடிப்பு நடைபெறவுள்ளது.

 

யாரை கேட்டு பட ரிலீஸை தள்ளிப் போட்டிங்க: இயக்குனருக்கு டோஸ் விட்ட 'லீடர்'

சென்னை: விலங்கின் பெயர் கொண்ட படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதை அடுத்து லீடர் நடிகர் இயக்குனரை திட்டியதாகக் கூறப்படுகிறது.

லீடர் நடிகர் விலங்கின் பெயர் கொண்ட இரண்டு எழுத்து படத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினர். தலைவா, படத்தை பார்க்க ஆவலுடன் உள்ளோம் என்று தெரிவித்தனர்.

Leader actor reportedly scolds his director

படம் அடுத்த மாதம் ரிலீஸாகும் கொண்டாடித் தீர்க்கலாம் என்று இருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இன்னும் முழுதாக முடியவில்லை என்று கூறி படத்தின் ரிலீஸ் தேதியை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

சொன்ன நேரத்தில் படத்தை வெளியிடாததால் லீடர் நடிகர் கோபத்தில் உள்ளாராம். வேலைகள் முடியவில்லை என்றால் எதற்காக ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு பின்னர் அதை தள்ளி வைத்தீர்கள் என்று இயக்குனரை திட்டினாராம் நடிகர்.

படம் தள்ளிப் போயுள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனரே என்ற ஆதங்கம் தான் லீடருக்கு அதிகமாக உள்ளதாம்.

 

'ப்ரூஸ் லீ' நாயகியாகிறார் நயன்தாரா?

சென்னை: பிரசாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ப்ரூஸ் லீ படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆதிக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' . இப்படம் வரும் செப்டம்பர் 17ம் தேதி ரிலீசாகிறது.

Nayanthara in G V Prakash's ‘Bruce Lee’

இந்தப் படத்தைத் தொடர்ந்து, பிரசாந்த் இயக்கத்தில் 'ப்ரூஸ் லீ', 'கெட்ட பயடா இந்த கார்த்தி' மற்றும் சாம் ஆண்டன் இயக்கவிருக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

ப்ரூஸ் லீ படத்தை இயக்கும் பிரசாந்த், இயக்குநர் பாண்டிராஜிடன் இணை இயக்குநராக பணியாற்றியவர். இப்படத்திற்கு பாண்டிராஜ் வசனம் எழுத, கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இன்னும் இப்படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

நயன்தாராவிற்கு கதை பிடித்து விட்டதாகவும், எனவே விரைவில் அவர் நாயகியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சோனமுத்தா… போச்சா?!! கலங்க வைத்த காமெடி நிகழ்ச்சி

தொலைக்காட்சிகளில் பிரம்மாண்டமாக ஒரு நிகழ்ச்சியை தொடங்குவதும் நடுவர்களுக்கு பல லட்சம் சம்பளம் கொடுத்து அழைத்து வருவதும் சாதாரண விசயமாக இருக்கிறது. நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கிய சில எபிசோடுகளிலேயே விரைவில் மூடுவிழா காண்பதும் அதைவிட சாதாரண விசயம்.

வட இந்தியாவை தலைமையாகக் கொண்ட தமிழ் சேனலில் அதிகம் சம்பளம் வாங்கும் நடுவர்களை மாற்றிவிட்டு கம்மி சம்பளத்தில் நடுவர்களை அழைத்து வர முடிவு செய்துள்ளதாம்.

நடனநிகழ்ச்சி என்றால் நடிகைகள், டான்ஸ் மாஸ்டர்கள் நடுவர்களாக வருகின்றனர். அதேபோல பாடகர்களுக்கான ரியாலிட்டி ஷோ என்றால் மார்க் போட மார்க்கெட் போன பாடகர்களோ அல்லது மார்க்கெட்டில் இருக்கும் பின்னணி பாடகர்களோ வந்து சிலபல குறைகளை சொல்லி மனதை நோகடித்து அப்புறம் போனால் போகிறதென்று மதிப்பெண்களை போடுகின்றனர்.

காமெடி நிகழ்ச்சிகளுக்கு சினிமாவில் காமெடி என்ற பெயரில் கொலை செய்த நடிகர்கள், நடிகைகளை அழைத்து வந்து மார்க் போட வைக்கின்றனர். நட்சத்திர சேனல் எப்படியோ செலவில்லாமல் அவர்களின் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்கள், காமெடியன்களை வைத்தே ஒப்பேற்றி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் காமெடியில் சொதப்புபவர்களை வெளியேற்ற இரண்டு குண்டர்களையும் அடியாட்களாக நியமித்துள்ளனர்.

ஆனால் வடஇந்தியாவை தலைமையாகக் கொண்ட தமிழ் சேனலில் தொடங்கப்பட்ட காமெடி நிகழ்ச்சி தற்போது வருத்தப்பட வைக்கிறதாம். பிரம்மாண்ட செட்... நான்கு நடுவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் என தயாரிப்பு செலவு ஏகத்திற்கும் எகிறிவிட்டதாம். என்னசெய்வது என்று கையை பிசைந்து கொண்டிருந்த சேனல் தரப்பு முதலில் செட்டை வேறு இடத்திற்கு இடம் மாற்றிவிட்டதாம்.

அது மட்டுமல்லாது விரைவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடுவர்களை மாற்றிவிட்டு கம்மி சம்பளத்தில் நடுவர்களை அழைத்து வர முடிவு செய்துள்ளதாம் சேனல் தரப்பு.

வருத்தப்படாம இருக்கணும்னு ஆரம்பிச்ச நிகழ்ச்சி இப்படி வருத்தப்பட வச்சிருச்சே என்று புலம்புகின்றனராம் சேனல் நிர்வாகத்தினர்.

 

பாயும்புலிக்கு தடையா?: திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் கடும் கண்டனம்!

லிங்கா நஷ்ட ஈட்டுப் பிரச்சினைக்காக வேந்தர் மூவீஸின் பாயும் புலி படத்துக்கு தடை விதிப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:

‘ராக்லைன் எண்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘லிங்கா' திரைப்படம் வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட்டதில் ஏற்பட்ட நஷ்ட ஈட்டு தொகைக்காக ‘வேந்தர் மூவிஸ்' நிறுவனத்தின் தயாரிப்பான ‘பாயும் புலி' தமிழ் திரைப்படத்தை வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட தடைவிதித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தன்னிச்சையாக அறிவித்துள்ளது.

Producers Council condemns Theaters owners Assn

இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல் ஆகும். மேலும், இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எந்தவித முன்னறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. தனிநபர் வியாபார உரிமையை முடக்கும் செயல். ‘லிங்கா'வில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ‘பாயும் புலி' திரைப்படத்துக்கு தடை விதிப்பது எந்தவிதத்திலும் தொழில் தர்மம் அல்ல.

எனவே, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உடனடியாக ‘பாயும் புலி' திரைப்படத்தின் மீதான தடையை நீக்க வேண்டும். அப்படி தடையை நீக்காதபட்சத்தில் ஜனநாயக முறைப்படி தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு இப்பிரச்சினை தொடர்பாக தெரிவித்து தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

சிவாஜி மணி மண்டபம்.. நடிகர் சங்கத்துக்கு அவமானம்! - விஷால் அணி

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனுக்கு நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் அமைக்காதது அந்த சங்கத்திற்கே அவமானம் தரக்கூடியது என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

நடிகர் சிவாஜி கணசேனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார். இதற்கு நடிகர்கள் கமல், பிரபு உள்பட பல்வேறு திரையுலகில் நன்றி தெரிவித்துள்ளனர்.

Nadigar Sangam fails to construct Sivaji Mani Mandapam - Vishal team

இந்நிலையில், இதுகுறித்து நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 2002ஆம் ஆண்ட நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்க, நடிகர் சங்கத்துக்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கிக் கொடுத்தது. ஆனால், 12 ஆண்டுகள் கடந்தும் இதுவரை மணிமண்டபம் அமைக்கப்படவில்லை.

நியாயமாக இந்த மணிமண்டபத்தை நடிகர் சங்கம்தான் அமைத்திருக்க வேண்டும். அப்படித்தான் தமிழக அரசிடம் முதலில் நடிகர் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். ஆனால் செய்யவில்லை.

இதிலிருந்தே நடிகர் சங்கத்தின் நிர்வாகம் எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டாதது நடிகர் சங்கத்துக்கு அவமானம்தான்,'' என்றார்.

 

சூரிக்கு முதல் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. டிவிட்டரில் குவியும் "வாழ்த்து பரோட்டாக்கள்"

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூரி இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இன்றைய சூழ்நிலையில் இளம் நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களில் சூரியின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது, பல்வேறு வெற்றிப் படங்களின் கூட்டணியிலும் சூரிக்கு ஒரு இடமிருக்கிறது.

Comedy Actor Soori Turns 38

எனவே காமெடி நடிகராக இருந்தாலும் சூரியின் பிறந்தநாளை சிறப்பாக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் சூரியின் ரசிகர்கள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் போன்ற படங்களில் சூரியுடன் சேர்ந்து நடித்த நடிகர் சிவகார்த்திகேயன் சூரிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டர் மூலமாக தெரிவித்திருக்கிறார்.

"எனது அண்ணன், நல்ல நண்பன் மற்றும் திறமையான நடிகர் சூரி அண்ணாவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் மட்டுமின்றி இந்த வருடமே உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்" என்று சூரியுடன் தான் முறுக்கு மீசை வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை பகிர்ந்து சூரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

தான் ஹீரோவாக நடித்த 7 படங்களில் கிட்டத்தட்ட 4 படங்களை சூரியுடன் இணைந்து நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன், இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்று போல் என்றும் வாழ்க.....