இயக்குநர் ஹரியின் சகோதரர் வி.ஏ.ஜி கார் வண்ணராஜா மரணம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான டைரக்டர் ஹரியின் சகோதரர் வி.ஏ.ஜி கார் வண்ணராஜா இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 43.

வி.ஏ.ஜி கார் வண்ண ராஜா ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டிருந்தார்.

இயக்குநர் ஹரியின் சகோதரர் வி.ஏ.ஜி கார் வண்ணராஜா மரணம்

சிறிது காலம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று உடல்நிலை மோசமடையவே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் பலனின்று இன்று அதிகாலை மருத்துவமனையில் காலமானார்.

மரணமடைந்த வி.ஏ.ஜி கார் வண்ணராஜாவுக்கு, ஹெண்ணிலா கார்வண்ணராஜா என்ற மனைவியும் 10 வயது மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

கார் வண்ணராஜாவின் உடல் நாளை காலை 10 மணிக்கு போரூர் மின்சார மையானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

 

சினிமாலதான் நான் ஹோம்லி.. நிஜத்தில நான் வேற மாதிரி- லட்சுமி மேனன்

தென்னிந்திய சினிமாவின் அதிகம் விரும்பப்படும் நாயகியாக மாறிவிட்ட லட்சுமி மேனன், அவசரப்பட்டு படங்களை ஒப்புக் கொள்வதில்லை. தன் படிப்புக்கான நேரம் போக, மீதியிருக்கும் நேரத்தில்தான் படம் நடிக்கிறார்.

அதுமட்டுமல்ல, சினிமாவில் வருவது போன்ற அடக்க ஒடுக்கமான குடும்பப்பாங்கான பெண் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம் என்றும் அடிக்கடி சொல்லிக் கொள்கிறார்.

சினிமாலதான் நான் ஹோம்லி.. நிஜத்தில நான் வேற மாதிரி- லட்சுமி மேனன்

இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், " சினிமாவுல வர்ற மாதிரி ஹோம்லியான பொண்ணு இல்ல நான். நிஜத்துல என் கேரக்டரே வேற.

படத்துல வர்ற ஒரு கேரக்டர் ரோலை பார்த்துட்டு, இதுதான் அவங்க ஒரிஜினல் ரோல்னு தயவு செய்து முடிவு செய்யாதீங்க. நான் படத்துல வர்ற கேரக்டர் மாதிரி கிடையாது. டோட்டலா வேற மாதிரி. நிழலும், நிஜமும் ஒண்ணு கிடையாதுங்க.. அதே மாதிரி படத்தின் வேடத்துக்கு ஏத்த மாதிரி நடிக்க எனக்கு தயக்கமில்லை. பாவாடை தாவணிதான் என் பர்மன்ட் உடைன்னும் நினைச்சிக்காதீங்க,'' என்று கூறியுள்ளார்.

ஹலோ டைரக்டர்ஸ்.. காதுல விழுந்ததா!

 

கவுதமி மகளும் கதாநாயகியாகிறார்?

நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமியும் சினிமா கதாநாயகியாகிறார். அவரை ஹீரோயினாக்க சில இயக்குநர்கள் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய தமிழ் சினிமாவில், சினிமா, அரசியல் பின்னணி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் என்றாகிவிட்டது.

இன்றைக்கு முன்னணியில் உள்ள நடிகர்களில் அஜீத், விஜய் சேதுபதி போல சினிமா பின்னணி இல்லாதவர்கள் மிகக் குறைவு. நடிகைகளிலும் பல வாரிசுகள் வந்துவிட்டார்கள். இயக்குநர்களிலும் வாரிசுகளே அதிகம்.

கவுதமி மகளும் கதாநாயகியாகிறார்?

கமலின் மகள்கள் ஸ்ருதி ஹாஸன், அக்ஷரா ஹாஸன் இருவருமே நடிகைகளாகிவிட்டனர்.

முன்னாள் கதாநாயகி ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி இருவரும் கதாநாயகிகளாகியுள்ளனர்.

இந்த வரிசையில் கவுதமி மகள் சுப்புலட்சுமியும் கதாநாயகியாக நடிக்கப் போகிறாராம். சுப்புலட்சுமிக்கு இப்போது 16 வயது ஆகிறது.

சினிமாவுக்கு தேவையான அளவுக்கு நடனம் கற்றுள்ளாராம். சுப்புலட்சுமியை தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் சிலர் முயன்று வருகின்றனர்.

சீக்கிரமே அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். வெல்கம்!

 

விஜய்யை ஹீரோவா வச்சி யாருமே படம் எடுக்க மாட்டேன்னுட்டாங்க!- எஸ்ஏசி

விஜய்யை ஹீரோவாக்க நான் முயன்ற நேரத்தில் அவரை வைத்து படமெடுக்க யாருமே தயாராக இல்லை. அதனால்தான் அவருக்காக சொந்தமாக படம் தயாரித்து இயக்கினேன், என்றார் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன்.

எஸ் ஏ சந்திரசேகரன் நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் டூரிங் டாக்கீஸ். இந்தப் படத்தின் ட்ரலைர் வெளியீட்டு விழாவில் எஸ் ஏ சந்திரசேகரன் பேசுகையில், "நான் சினிமாவில் சான்ஸ் கேட்டு அலைந்த நாட்களில் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கியிருக்கிறேன். எழு நாட்கள் வெறும் தண்ணீரைக் குடித்து பசியைப் போக்கிக் கொண்டேன்.

விஜய்யை ஹீரோவா வச்சி யாருமே படம் எடுக்க மாட்டேன்னுட்டாங்க!- எஸ்ஏசி

பின்னர் இயக்குநராகி நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்த பிறகு, ஒரு கட்டத்தில் இனி இயக்க வேண்டாம்.. தயாரிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம் என நினைத்தேன். அப்போதுதான் என் மகன் விஜய் நாயகனாக ஆசைப்பட்டார்.

அவரை வைத்து இயக்குமாறு அன்றைக்கு முன்னணியில் இருந்த பல இயக்குநர்களையும் கேட்டுக் கொண்டேன். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றுகூடச் சொன்னேன். ஆனால் ஒருவரும் அவரை வைத்து படமெடுக்க தயாராக இல்லை.

எனவேதான் நானே அவரை வைத்து படம் தயாரித்து இயக்கினேன். இன்றைக்கு விஜய் பெரிய ஹீரோவாகிட்டார். நல்ல மருமகள், பேரக் குழந்தைகள், போதுமான வசதி, பணம் எல்லாமே இருக்கு. இனி நான் படம் இயக்கப் போவதில்லை. மாறாக, தயாரிப்பை மட்டும் தொடர்வேன். என் பேனர்ல புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பு தருவேன்," என்றார்.

 

என்னை அறிந்தால்... யுஏவாகவே இருந்தாலும் 5-ம் தேதி ரிலீஸில் மாற்றமில்லை!- தயாரிப்பாளர்

என்னை அறிந்தால்... யுஏவாகவே இருந்தாலும் 5-ம் தேதி ரிலீஸில் மாற்றமில்லை!- தயாரிப்பாளர்

இதனால் படம் குறித்த தேதியில் வருமா என கேள்வி எழுந்தது மீடியாவில்.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம், "படத்தை பிப்ரவரி 5-ம் தேதி வெளியிடுவதில் என்று மாற்று யோசனையும் இல்லை. யு சான்று பெற முயன்று வருகிறோம். அது கிடைக்காதபட்சத்தில் யுஏ சான்றுடனே கூட வெளியிடத் தயாராக உள்ளோம்," என்றார்.


 

இசைக் குடும்பத்தில் இன்னுமொரு திருமணம்!

இளையராஜாவின் அண்ணன் ஆர்டி பாஸ்கர் மகள் வாசுகிக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.

தமிழ் சினிமாவில் இன்று முக்கியமான காஸ்ட்யூம் டிசைனராகத் திகழ்கிறார் வாசுகி பாஸ்கர்.

பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படத்தில் காஸ்ட்யூம் டிசைனிங்கை ஆரம்பித்தவர், தொடர்ந்து சென்னை 28, கோவா, ஆரண்யகாண்டம், அவன் இவன், மங்காத்தா எனப் பல வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளார்.

இசைக் குடும்பத்தில் இன்னுமொரு திருமணம்!

பல முன்னணி நட்சத்திரங்களின் பர்சனல் காஸ்ட்யூம் டிசைனரும் இவர்தான்.

இந்நிலையில் வாசுகி பாஸ்கருக்கு விரைவிலேயே திருமணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்திருக்கிறார்களாம். இதற்காக ஏற்கெனவே மாப்பிள்ளை தேடும் படலத்தை ஆரம்பித்துவிட்டார்களாம். பார்த்தி பாஸ்கர், கார்த்திக்ராஜா, யுவன்சங்கர் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி என நான்கு அண்ணன்களும் பொருத்தமான பையனைத் தேடி வருகிறார்களாம்.

அடுத்த வாரமே வாசுகியின் திருமணம் குறித்து அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

 

கலைப்புலி தாணு தலைமையில் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் நேற்று மாலை பதவி ஏற்றனர்.

கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட முடியாமல் முடங்கியிருந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தேர்தல் நடைபெற்றது.

கலைப்புலி தாணு தலைமையில் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர்!

இதில் அதிக வாக்குகள் பெற்று தலைவராக தேர்வானார் கலைப்புலி எஸ் தாணு. துணைத் தலைவர்களாக எஸ் கதிரேசனும், பி எல் தேனப்பனும் தேர்வு செய்யப்பட்டனர்.

டிஜி தியாகராஜன் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.

டி சிவா மற்றும் ராதாகிருஷ்ணன் இருவரும் பொதுச் செயலாளர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

21 செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை ராதா பார்க் இன் ஹோட்டலில் நடந்தது.

நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்கள் அனைவரும் திரண்டு வந்து புதிய நிர்வாகிகளை வாழ்த்தினர். முன்னாள் தலைவர் கேஆர் நேரில் வந்து புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

பாலாவின் சண்டி வீரனை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!

இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரித்த "சண்டி வீரன்" படத்தின் வெளியீட்டு உரிமையை வெற்றிகரமாக கைபற்றிய ஸ்ரீ கீரீன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம்

பாலா இயக்கத்தில் பரதேசி, மற்றும் மிஷ்கின் இயக்கிய பிசாசு போன்ற படங்களைத் தயாரித்தது பி ஸ்டுடியோஸ். பாலாவின் சொந்தப் பட நிறுவனம் இது.

பாலாவின் சண்டி வீரனை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!

தற்போது சற்குணம் இயக்கத்தில், அதர்வா மற்றும் ஆனந்தி நடிக்கும் சண்டி வீரன் என்னும் படத்தைத் தயாரித்துள்ளது.

சண்டி வீரன் படத்தை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் வெளியிடும் உரிமையை எம்எஸ் சரவணனின் ஸ்ரீ கீரீன் புரொடக்ஷன்ஸ் பெற்றுள்ளது.

ஸ்ரீ கீரீன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் சலீம், வேலையில்லா பட்டதாரி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற வெற்றிப் படங்களை இதற்கு முன் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சலிம் திரைப்படத்தையும், சிட்டி ஏரியாவில் வேலையில்லா பட்டதாரி மற்றும் கயல் படத்தையும், செங்கல்பட்டு ஏரியாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், பிட்சா 2, வெள்ளைக்கார துரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இப்போது சண்டி வீரனை தமிழகம், கேரளா, கர்நாடகாவில் வெளியிடவிருக்கின்றனர். நய்யாண்டி படத்துக்குப் பிறகு சற்குணம் இயக்கும் படம் இது.