தென்னிந்திய நடிகைகளை குடிகாரர்கள் என்பதா? - சனாகானுக்கு த்ரிஷா கண்டனம்

Trisha Condemns Sana Khan    | சனாகான்  

பாலிவுட் நடிகைகளை விட தென்னிந்திய நடிகைகள் அதிகம் குடிப்பதாகக் கூறிய நடிகை சனாகானுக்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். தன் கண்டனத்தை உதவியாளர் மூலம் நடிகர் சங்கத்திலும் பதிவு செய்துள்ளாராம்.

சிம்பு ஜோடியாக 'சிலம்பாட்டம்' படத்தில் அறிமுகமான சனாகான், சில படங்களுக்குப் பின் மலையாளத்துக்குப் போய், à®'ரு படத்தில் சில்க் வேடத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சென்னை வந்த சனாகான் தென்னிந்திய நடிகைகள் மது அருந்துவதாக பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.

சில நடிகைகள் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு தள்ளாடிக்கொண்டு போவதை நான் பார்த்து இருக்கிறேன். சிகரெட் கூட பிடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை மறைக்கிறார்கள்.

நான் குடிப்பதில்லை. வருடத்தில் முப்பது நாட்கள் விரதம் இருக்கிறேன். தினமும் தொழுகை நடத்துகிறேன். சிகரெட் பிடிப்பது போன்ற பழக்கங்கள் எனக்கு கிடையாது என்று கூறியிருந்தார்.

இதற்கு தென்னிந்திய நடிகைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செல்போனில் தொடர்பு கொண்டு தமிழ் நடிகைகள் பலர் கடுமையாக எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவதூறாக பேட்டி அளித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர். சிலர் எஸ்.எம்.எஸ். அனுப்பியும் கண்டித்துள்ளனர்.

பிரபல நடிகை த்ரிஷாவும் சனாகானை கண்டித்துள்ளார். அவர் மேல் நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி தனது உதவியாளர் மூலம் நடிகர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார் என்று தெரிகிறது.

 

டாம் குரூஸ் இளமை ரகசியம்.. நைட்டிங்கேல் பறவையின் எச்சம்!

Tom Cruise Uses Ice Suit Muscles   

குளுகுளு என்று ஐஸ் க்யூப் நிறைந்த கோட்சூட் அணிந்தால் எப்படி இருக்கும்? நினைக்கும் போதே ஜில்லென்ற à®'ரு உணர்வும் புத்துணர்ச்சியும் ஏற்படுகிறதல்லவா? அதுபோன்ற உடையைத்தான் அணிகிறாராம் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ்.

‘மிஷன் இம்பாஸிபில் - கோஸ்ட் ப்ரொடோகால்' திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் சண்டைக் காட்சிகளில் நடித்தும் அசராமல் புத்துணர்ச்சியோடு இருப்பார் டாம். 49 வயதான டாம் குரூஸ் இன்றைக்கும் அழகோடும் இளமையோடும் இருப்பதற்கான காரணம் குறித்து ஊடகங்களில் பல்வேறு கிசுகிசுக்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

புதிய திரைப்படமான Rock of Ages ல் டாம் குரூஸ் கூடுதல் கவர்ச்சியோடும் அழகோடும் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த புதிய திரைப்படத்தில் நடிப்பதற்காக ஜப்பானிய பாரம்பரிய ஸ்டைலில் நைட்டிங்கேல் பறவையின் எச்சம், நெல் உமி, தண்ணீர் கலந்த கலவையை கொண்டு பேஸ் மாஸ்க் போட்டு தனது முகத்தை அழகு படுத்தியிருக்கிறாராம். டாம்.

அதைத் தவிர எப்பொழுதும் தான் புத்துணர்ச்சியோ திகழ ஐஸ்கியூப் நிரம்பிய ஆடையை அணிந்திருப்பாராம். இதனால் தசைகளில் குளிர்ச்சியான ஐஸ் தீண்டுவதால் களைப்பு தெரியாமல் எப்பொழுதும் புத்துணர்ச்சியோடு இருக்க முடிகிறது என்கின்றனர் அவரின் ஆடை வடிவமைப்பாளர்கள்.

 

விஜய்யின் துப்பாக்கி படத் தலைப்புக்கு நீதிமன்றம் தடை!

Chennai Court Bans Thuppakki Title   

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் தலைப்பை பயன்படுத்த கோர்ட் தடை விதித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளார் ரவிதேவன். இவரது தயாரிப்பில் லோகியாஸ் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு ‘கள்ளத்துப்பாக்கி' என்ற படத்தலைப்பு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பு வைக்கப்பட்டது.

துப்பாக்கி படத்தின் டைட்டில் டிசைனும் கள்ளத்துப்பாக்கி படத்தின் டைட்டில் பாணியில் இருந்தது.

இதையடுத்து கள்ளத்துப்பாக்கி குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக இருப்பதால், தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்துக்குப் போனார்கள் கள்ளத்துப்பாக்கி குழுவினர்.

கள்ளத்துப்பாக்கி குழுவினரின் மனுவை விசாரித்த நீதிபதி, விஜய் நடித்து வரும் படத்திற்கு துப்பாக்கி என்று டைட்டில் வைக்கக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்!

 

39 வயதில் பிளேபாய்க்கு நிர்வாண போஸ் கொடுத்த அமெரிக்க நடிகை!

Jenny Mccarthy Poses Playboy At Age 39

அமெரிக்க நடிகை, மாடல் அழகியான ஜென்னி ஆன் மெக்கார்த்தி, தனது 39வது வயதில் பிளேபாய் பத்திரிகைக்கு நிர்வாண போஸ் கொடுத்து அசரடித்துள்ளார். ஜூலை-ஆகஸ்ட் மாத இதழின் அட்டைப் படத்தில் அவரது கவர்ச்சி போஸ் இடம் பெறுகிறது. இந்த இதழ் ஜூன் 29ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

பிளேபாய் முன்பு நி்ர்வாணமாக நிற்பது ஜென்னிக்கு புதிதல்ல. ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நிர்வாண போஸ் கொடுத்தவர்தான்.

இதுகுறித்து மெக்கார்த்தி கூறுகையில், இதை பெருமையாக நினைக்கிறேன். எனது படம் அழகாக வந்திருக்கிறது. கிளாசிக்காக இருக்கிறது. மிகவும் கம்பீரமாக தெரிகிறேன் என்றார் சிரித்தபடி.

1993ம் ஆண்டு பிளேபாய் பத்திரிக்கைக்கு முதல் முறையாக ஜென்னி நிர்வாண போஸ் கொடுத்தபோது அவருக்கு 20 ஆயிரம் டாலர் ஊதியமாக கொடுத்தனர். ஆனால் இந்த முறை பெரிய தொகையைக் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

40 வயசுக்கு முன்பு எனது நிர்வாணத்தை அழகாக வெளிப்படுத்த கிடைத்த இந்த வாய்ப்பு சந்தோஷம் தருவதாக கூறும் ஜென்னி, 20 வயதுப் பெண்களை விட 40 வயதுப் பெண்கள்தான் உண்மையிலேயே கவர்ச்சி மிக்கவர்கள், அழகானவர்கள் என்றும் கூறுகிறார். கூடவே, வயதாக ஆக எனக்கு இளமையும் கூடுகிறு என்றும் தனது அழகு குறித்து பெருமைப்படுகிறார்.

 

வில்லி கேரக்டர்தான் ரொம்ப பிடிச்சிருக்கு..புவனேஸ்வரி

I Like Negative Roles Bhavaneswar

சின்னத்திரை, சீரியல், சினிமா, அரசியல் என ஒரு ரவுண்ட் சென்று விட்டு நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சின்னத்திரையில் வாழ்வே மாயம் சீரியலில் களம் இறங்கியுள்ளார் நடிகை புவனேஸ்வரி. சவுபர்ணிகாவில் தொடங்கி வாழ்வே மாயம் வரை அவரின் பயணம் குறித்து அவரிடமே கேட்போம்.

சவுபர்ணிகா சீரியல் தொடங்கி வாழ்வே மாயம் வரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்து விட்டேன். பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்திருக்கிறேன். என் வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை சந்தித்து இப்போது மீண்டும் சீரியல் பயணத்தை தொடங்கியிருக்கிறேன்.

சினிமாவை விட சீரியலுக்குத்தான் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பேன். எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரக்கூடிய கதாபாத்திரங்கள் அங்குதான் அமைகின்றன. வில்லி காதாபாத்திரம் தானாக அமைகிறது. இருந்தாலும் அது எனக்கு பிடித்திருக்கிறது.

என்னுடைய கண்கள்தான் எனக்கு ப்ளஸ் பாய்ண்ட். அதேபோல் ஐஸ்வர்யா ராயின் கண்களையும், அவரின் அழகையும் பார்த்து நான் பொறாமை பட்டிருக்கிறேன்.

பொதுவாகவே எனக்கு முன்கோபம் அதிகம் வரும். அப்பொழுது எனக்கே என்மீது பயம் ஏற்படும். அந்த கோபம்தான் என் வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களை ஏற்படுத்திவிட்டது. அதை மறக்க நினைக்கிறேன்.

எனக்கு அரசியல் வாழ்க்கை தானாக அமைந்து விட்டது. நடிகையானதை நினைத்து ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. ஆனால் திருமணமாகி செட்டில் ஆகி இருக்கலாமோ என்று எப்போதவாது நினைத்துக்கொள்வேன் என்று கூறிவிட்டு சிரித்தார் சின்னத்திரை வில்லி புவனேஸ்வரி.

 

தினம் 5 மணி நேரம் உடற்பயிற்சி- அடுத்த ரிஸ்க்குக்கு ஆயத்தமாகும் அஜீத்!

Ajith Spends 5 Hours Gym   

தனது அடுத்த படத்தில் மிக ஸ்லிம்மாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக தினமும் மணி நேரம் கடும் உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார் நடிகர் அஜீத்.

விஷ்ணுவர்த்தன் இயக்க நயன்தாராம ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் இந்தியில் வெளியான ரேஸ் படத்தின் ரீமேக் என்கிறார்கள்.

படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு கடந்த 18-ந்தேதி பெங்களூரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆர்யாவும் நடிக்கிறார். நாயகிகளாக நயன்தாரா, டாப்ஸி நடிக்கின்றனர்.

இந்த படத்தில் அஜீத்தை மங்காத்தாபோல் இல்லாமல் மிகவும் இளமையாக காட்டப் போகிறாராம் விஷ்ணுவர்த்தன். இதற்காக தலைமுடி காஸ்ட்யூம் என எல்லாவற்றையும் மாற்றுகிறார்கள்.

அத்துடன் உடல் எடையை குறைக்கும்படியும் கேட்டுக் கொண்டாராம். இதனை ஏற்று அஜீத் கடந்த 7 நாட்களாக ஜிம்முக்கு செல்கிறார். தினமும் 5 மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து விஷ்ணுவர்த்தன் கூறும்போது, தீவிர உடற்பயிற்சி செய்கிறார் அஜீத். அவரது உருவம் இப்போது நம்ப முடியாத அளவுக்கு மாறியிருக்கிறது,” என்றார்.

 

பப்ளிக்கில் தம்... ஜூலை 26-ல் கோர்ட்டில் ஆஜராக ரன்பீருக்கு உத்தரவு!

Ranbir Kapoor Skips Court Hearing   

பொது இடத்தில் சிகரெட் பிடித்த குற்றத்துக்காக நடிகர் ரன்பீர் கபூரை வரும் ஜூலை 26-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உதய்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதய்பூரில் நடந்த ஏ ஜவானி ஹை திவானி என்ற படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டபோது, பொது இடத்தில் ரன்பீர் கபூர் புகைப் பிடித்த காட்சியை சிலர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுவிட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர் மீது குற்றப்பிரிவு 156 (3)ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று அவர் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதைத் தொடர்ந்து வரும் ஜூலை 26-ம் தேதி கட்டாயம் ரன்பீர் நேரில் ஆஜராக வேண்டும் என உதய்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரன்பீர் கபூர்6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ 200 அபராதம் செலுத்த வேண்டி வரும்.

 

29ல் துபாயில் பாடகர் மனோவின் கோடையில் இன்னிசை மழை

Mano S Kodaiyil Innisai Mazhai Dubai On June 29

துபாய்: துபாயில் பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் இன்னிசை மழை நிகழ்ச்சி வரும் 29ம் தேதி நடைபெறுகிறது.

துபாய் முத்த‌மிழ்ச் ச‌ங்க‌ம் ம‌ற்றும் த‌மிழ்நாடு இன்ஜினிய‌ர்ஸ் வீட்டுவ‌ச‌தி ந‌ல அற‌க்க‌ட்ட‌ளை ஆகியவை இணைந்து நடத்தும் ம‌னோவின் கோடையில் இன்னிசை மழை நிகழ்ச்சி 29.06.2012 அன்று மாலை 4.00 ம‌ணி முத‌ல் இரவு 12 மணி வரை அல் கிஸ‌ஸ் துபாய் ம‌க‌ளிர் க‌ல்லூரியில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

சிற‌ப்பு விருந்தின‌ராக‌ நடிகர் நிழ‌ல்க‌ள் ர‌வி கலந்து கொள்கிறார். ரோபோ ச‌ங்க‌ர் ம‌ற்றும் அர்விந்த் ஆகியோரின் மிமிக்ரி நிக‌ழ்ச்சியும் ந‌டைபெற‌ இருக்கிற‌து. நிக‌ழ்ச்சியை விஜ‌ய் டிவி புக‌ழ் திவ்ய‌த‌ர்ஷினி தொகுத்து வ‌ழ‌ங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியின்போது துபாய் முத்த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் இணைய‌த‌ள‌ம் அறிமுக‌ நிக‌ழ்ச்சியும் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

 

வேணாம் வேணாம்... நடிகர்களுக்கு அரசியல் ஆசையை ஏற்படுத்த வேண்டாம்! - நாசர்

Don T Drag Actors Into Politics

நடிகர்களுக்கு அரசியல் ஆசையை ஏற்படுத்த வேண்டாம் என நடிகர் நாசர் கேட்டுக் கொண்டார்.

சகுனி படத்தின் வெற்றி அறிவிப்பு பிரஸ்மீட்டில் பங்கேற்ற போது, நடிகரும் இயக்குநருமான மனோபாலா, “கார்த்தி அரசியலுக்கு வரவேண்டும். சிவகுமார் ஒரு மகனை நாட்டுக்கும் இன்னொரு மகனை வீட்டுக்கும் கொடுத்திருக்கிறார் என்றார்.

கமலா தியேட்டர் உரிமையாளர் வள்ளியப்பன், சகுனி அரசியல் படம். அரசியல் மீது ஆர்வம் இருப்பதால்தான் கார்த்தி அரசியல் படத்தில் நடித்திருக்கிறார் என்றார்.

உடனே கார்த்தி குறுக்கிட்டு, ஏங்க…நல்லாத்தானே போயிட்டிருக்கு. ஏன் இப்படி? என்றார்.

அடுத்து வந்த நாசர், அனைவரது கருத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல இப்படிச் சொன்னார்:

“சில நடிகர்களுக்கு தொடர்ந்து நான்கு படங்கள் வெற்றி பெற்றால், உடனே முதலமைச்சர் கனவு வந்து விடுகிறது. கார்த்தி அப்படிப்பட்டவர் அல்ல. அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று தூபம் போடாதீர்கள்… நடிகர்களுக்கு அரசியல் வேண்டாம். அவரவர் வேலையைச் சரியாக செய்தால் போதும்,” என்று கேட்டுக்கொண்டார்.

 

பத்திரிக்கையாளர் சந்திப்பில் உள்ளாடை தெரிய அமர்திருந்த சுஷ்மிதா சென்

Oops When Sushmita Had Wardrobe Malfunction   

முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமர்ந்திருக்கையில் அவரது உள்ளாடை தெரிந்தது.

முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா ஐ ஆம் ஷீ என்ற அமைப்பை கடந்த 2010ம் ஆண்டு துவங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு நடத்தும் அழகிப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் பிரபஞ்ச அழகி மற்றும் மிஸ் ஏசியா பசிபிக் அழகிப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அப்படி இந்த அமைப்பு அனுப்பி வைத்த ஹிமாங்கினி சிங் யாடு மிஸ் ஏசியா பசிபிக் அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.

அவரை வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்கு வந்த அமைப்பின் நிறுவனர் சுஷ்மிதா சென் உடலோடு ஒட்டிய குட்டி ஆடை அணிந்து வந்தார். அவர் நாற்காலியில் அமர்ந்தபோது ஏற்கனவே தொடை தெரிய இருந்த ஆடை, மேலும் தூக்கி உள்ளாடை தெரிந்தது. இதை கவனிக்காத அவர் ஹிமாங்கினியின் வெற்றி பற்றி பேசினார். ஆனால் அங்கிருந்த புகைப்படக்காரர்கள் அவர் உள்ளாடை தெரிய அமர்திருந்ததை போட்டோ எடுத்து தள்ளிவிட்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த சுஷ்மிதா தற்போது புதிய படங்கள் சிலவற்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தான் நடித்த படங்கள் வெளிவரும் என்றார்.

 

'சகுனி': இதெல்லாம் நடக்கிற காரியமா?

Karthi Better Luck Next Time No Lo    | சகுனி பிரஸ் மீட் படங்கள்  

ரொம்ப நாளாச்சே தியேட்டருக்கு போயி படம் பார்த்து அப்படின்னு குடும்பத்தோட டிக்கெட் புக் பண்ணி சகுனி படத்துக்கு போனோம். 75 வயதான எங்க பாட்டி முதல் 5 வயதான என் தம்பி மகள் வரை நான்கு தலைமுறையினரும் ஒன்றாக போனது இந்த படமாகத்தான் இருக்கும்.

சகுனி பேரைக் கேட்ட உடனே பாட்டிக்கு மகாபாரதம் ஞாபகத்துக்கு வந்திருக்கணும் உடனே கிளம்பிட்டாங்க. அப்புறம்தான் இது அந்த சகுனியில்லை பருத்தி வீரன் கார்த்தி நடிச்ச சகுனி அப்படின்னு தெரிஞ்சு சைலன்ட்டாகிட்டாங்க.

அதென்னமோ தெரியலை தாத்தா, பாட்டி முதல் சின்ன வாண்டூஸ் வரைக்கும் கார்த்திக்கு ரசிகர் பட்டாளம் இருக்கு போல தியேட்டர் ஹவுஸ் ஃபுல்லாக இருந்தது.

படம் ஆரம்பம் எல்லாம் அமர்க்களமாகத்தான் இருந்தது. பாட்டி வடை சுடுவதும் வடையை காக்காய்க்கு தூக்கி போடுவதும் ஹீரோ அறிமுகம் கொஞ்சம் புதுசுதான். ஆனால் கதைதான் ஜவ்வு இழுப்பு.

கதாநாயகன் அழகானவனாம் அதனால் எல்லா பொண்ணுங்களுக்கும் அவனைப் பார்த்த உடனே பிடித்து போகிறதாம்! (லேடி போலீஸ் அனுஷ்கா கூட கார்த்தியின் அழகில் மயங்கிப் போகிறாராம்) பாவம் அனுஷ்கா, ஆண்டிரியா. அதுவும் அனுஷ்கா சொல்லும் டயலாக் இருக்கே "எல்லா பொண்ணுங்களுக்கும் உங்களைப் பார்த்தா ரொம்ப பிடிக்கும்னு" வேற சொல்லிட்டு ஃபீலிங்ஸ் ஆப் இன்டியாவா ஒரு லுக் வேற விடுறாங்க என்ன கொடுமை சார் இது?.

அரசியல் படமா இருந்தாலும் படத்துல ஓரே ஒரு ஆறுதல் ஓவரா வெட்டுக்குத்து ரத்தம் இல்லை. அனுஷ்கா, ஆண்ட்ரியா, கிரன், பிரணீதா, ரோஜான்னு நடிச்சிருந்தும் யாரும் அதீத கவர்ச்சியாக உடை அணியவில்லை. ஒரே ஒருசீன் மட்டும் அதுவும் ஹீரோவின் கனவில் பிரணிதா லாங் சாட்டில் கொஞ்சமே கொஞ்சம் கவர்ச்சி உடை அணிந்து நடனமாடுகிறார். ஆனால் ஒரே குடி மயம்தான் குடிப்பதற்கு காரணத்தைக்கூறி அதற்கு விளக்கமும் தருகிறார்கள். அதனால்தான் படத்திற்கு 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

இடைவேளையின் போது இனி "சகுனி ஆட்டம் ஆரம்பம்" என்று கார்டு போடுகிறார்கள். ஆனால் அப்படி ஒன்றும் விறுவிறுப்பு இல்லையே. இயக்குநருக்கு முதல்படம் என்பதால் விட்டு விடலாம் என்றாலும் முடியாது. ஏனென்றால் ஷங்கர் தன்னுடைய முதல் படத்தில்தான் தான் யார் என்பதை நிரூபித்தார்.

கந்து வட்டி ரமணி ஆச்சி கவுன்சிலர் ஆவது ஓ.கே ஆனால் அவரையே மேயர் ஆக்குவதுதான் கொஞ்சம் நெருடல். இப்போதான் மேயரையும் மக்கள் ஓட்டுப் போட்டுதானே தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை எப்படி மறந்தார் இயக்குநர்?.

அதெப்படி இவருடைய படத்தில் மட்டும் அடிக்கடி தேர்தல் வருகிறது? படத்தின் ஆரம்பத்தில் ஒரு சட்டமன்றத் தேர்தல் என்றால் முடியும் போதும் ஒரு சட்டமன்ற தேர்தல் வருகிறது எப்படி? அப்படி பார்த்தால் கார்த்தி காரைக்குடியில் இருந்து வந்ததாக கூறிய ஃப்ளாஸ்பேக்கிற்கும் இந்த தேர்தலுக்கும் திரைக்கதையில் எங்கேயோ இடிக்கிறதே?.

எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் இருந்தாலும் சாதாரண கஞ்சா கேஸ் கைதியுடனா சிறையில் இருப்பார்?. அவர் எதற்காக உள்ளே போனார்? எப்படி வெளியே வந்தார் என்பதைப் பற்றி எல்லாம் கதையில் இல்லை. இப்படி சின்ன சின்ன சொதப்பல்கள் சகுனியில் இருக்கத்தான் செய்கிறது.

இதுபோன்ற நெருடல்களை எல்லாம் திரைக்கதையின் மூலம், பாடல்களின் மூலம் விறுவிறுப்பு கூட்டியிருக்கிலாம் ஆனால் இயக்குநர் அதை செய்யத் தவறிவிட்டார் என்பதுதான் ரசிகர்களின் கருத்து.

படம் முடிந்து வரும்போது என் முன்னால் உட்கார்ந்திருந்தவர்கள் காதை தடவிப் பார்த்துக் கொண்டார்கள். என்ன சார் என்ன ஆச்சு? என்ற கேட்டதற்கு எல்லோரும் காதில் பூ வைப்பார்கள். இவர்கள் முழம் பூவையே சுற்றிவிட்டர்கள் என்று கூறியபடி சென்றனர்.

எது எப்படியோ சென்டிமென்டலாக ஹீரோக்கள் திருமணம் முடிந்த உடன் நடிக்கும் முதல் படம் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும் என்பது கார்த்தி விஷயத்திலும் உண்மைதான் போலிருக்கிறது...

 

போல்டான கேரக்டரில் நடிக்க ஆசை: 'திருமதி செல்வம்' அபிதா

I Want Act Bold Character Abitha

திருமதி செவ்வம் தொடரில் அப்பாவி அர்ச்சனாவாக வந்து பெண்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் அபிதா. இல்லத்தரசிகளின் ஒட்டுமொத்த அனுதாபத்தையும் பெற்றிருக்கும் அபிதா தன் சொந்த வாழ்க்கையில் எப்படி? அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

பொறுப்பான குடும்பத் தலைவன் செல்வத்துக்கு ரொம்ப சாஃப்ட்டான திருமதி நான். மிடில் கிளாஸ் குடும்பமா இருந்து இப்போ கோடீஸ்வர குடும்பமா மாறியிருக்கோம். இந்தத் தொடரைப் பார்த்தீங்கன்னா நிறையக் குடும்பங்களில் நடக்கிற நிஜ சம்பவம் போலவே இருக்கிறது என்று நிறையப் பேர்போன் செய்து சொல்லியிருக்கிறார்கள். இன்ப,துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. அதைத்தான் திருமதிசெல்வம் சொல்கிறது.

இந்தத் தொடரைப் பொறுத்தவரை எனக்கு எப்பவுமே சலிப்பு வந்ததில்லை. அவ்வளவு எதார்த்தமான கதை இது. நாம் நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளும், சந்தோஷத்தையும், துக்கத்தையும் கண்முன்னே கொண்டு வருவதால் ரசிகர்களின் வரவேற்பு இந்தத் தொடருக்கு அதிகம் கிடைக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன் நான் ஆக்ஸிடென்ட்ல இறந்து போயிட்டதா ஒரு வதந்தி வந்ததல்லவா? அப்போது பார்த்தீங்கன்னா நிறைய பேர் அழுதுகிட்டே எனக்கு போன் செய்து விசாரித்தார்கள். அதுபோல சென்னை கோயிலில் ஓர் அம்மா கையில் சூடம் ஏற்றி பூஜை செய்தார்களாம். அப்போது அங்கு சென்ற இன்னோர் அம்மா அதைப் பார்த்துவிட்டு என்னவென்று விசாரித்திருக்கிறார்கள் அதற்கு அந்தம்மா சொன்னார்களாம். திருமதி செல்வம் தொடரில் வரும் அர்ச்சனாவுக்கு ஆக்சிடண்ட் ஆகிவிட்டதாம். அவங்களுக்கு எதுவும் ஆகாமல் நல்ல படியா பிழைத்து வரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

நான் இங்கு சூட்டிங் வந்த பிறகு இந்த விஷயத்தை எங்களுக்குப் போன் மூலம் அம்மா தெரிவித்தார்கள். கேட்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்த ஆடியன்ஸ் எல்லாம் எப்படி என்னை அவர்கள் வீட்டு பெண்ணைப் போல பாவிக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஒவ்வொருநாளும் இதைவிட இன்னும் நல்லா செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வருகிறதே தவிர, சலிப்பு ஏற்பட்டதில்லை.

அர்ச்சனா கேரக்டரைப் போன்றுதான் நான். அதனால்தான் தொடரில் என்னால் எளிதாக நடிக்க முடிக்கிறது. அதைத் தவிர இந்தத் தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு நிறையப் பேர் போன் செய்து சொல்லியிருக்கிறார்கள். எங்க வீட்டில் நடப்பது போன்று இருக்கிறது. அல்லது அக்கம் பக்கத்து வீட்டு ஆட்களைப் பற்றி சொல்லுவது போல இருக்கிறது என கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றபடி ஸ்பாட்ல டைரக்டர் என்ன சொல்றாரோ, அதைத்தான் செய்கிறேன்.

கேரளாவில் இருந்து சூட்டிங்கிற்காக சென்னைக்கு வந்து போவது ஆரம்பத்தில்தான் சிரமம் தெரிந்தது, இப்பொழுது பழகிவிட்டது. சூட்டிங் இல்லாத நாட்களில் கேரளாவில் என் குழந்தையோடு தான்இருப்பேன். எனக்கு ஒய்வு நேரம் எல்லாம் கிடைப்பதே இல்லைங்க. வீட்டில் இருந்தால் குழந்தையோடவே நேரம் சரியாக இருக்கும். அதே போல வீட்டில் இருக்கும் பொழுது நான்தான் சமையல் வேலைகளை எல்லாம் கவனிப்பேன். நன்றாகச் சமைக்கவும் செய்வேன். மற்றபடி சூட்டிங் சென்றுவிடுவேன்.

எனக்கு மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள். மூன்று பேருமே திருமணமாகி கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள். நான் நாலாவது பெண். அம்மா என்னோட தான் இருக்கிறார்கள். என் கணவர் சுனில். என் குழந்தை பேரு அல்சா. என் கணவர் ஒரு பிஸினஸ்மேன் என்பதனால் அவரோடு இணைந்து நானும் ஏதாவது பிஸினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. மற்றபடி வருங்கால திட்டம் என்று எதுவும் கிடையாது. எனக்கு சின்ன குழந்தை இருப்பதால் சினிமாவில் கொஞ்சநாள் கழித்து நடிக்கலாம் என்று காத்திருக்கிறேன். நல்ல பேனர்ல, நல்ல கேரக்டர்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறினார் அபிதா.

அமைதியான அர்ச்சனாவிற்கு படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தது போன்ற போல்டான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையாம். அது போல நல்லா சண்டை போடுவது போல் நெகட்டீவ் கேரக்டர்களும் செய்ய வேண்டும் என்று ஆசையிருக்கிறதாம்.

அப்ப கூடிய சீக்கிரம் இன்னொரு நீலாம்பரியை பார்க்கலாம்.

 

சினிமாவிலும் ஜோடி சேர்ந்த விஷால் - வரலட்சுமி!

Varalakshmi Join With Vishal Mgr    | வரலட்சுமி  

விஷாலுக்கும் சரத் மகள் வரலட்சுமிக்கும் 'லவ்வோ லவ்' என்று ஊரெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அதில் பெட்ரோலே ஊற்றுகிறது ஒரு செய்தி.

அது, விஷால் நடிக்கும் மத கஜா ராஜா - எம்ஜிஆர் படத்தில் அவருக்கு ஜோடியாக வரலட்சுமியே நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ செய்திதான்.

இந்த செய்தியை வெளியிட்டுள்ளவர் படத்தின் இயக்குநர் சுந்தர் சி மனைவியும் தயாரிப்பாளருமான குஷ்பு!

இந்தப் படத்துக்கு ஹீரோயின் மாறுவது இது மூன்றாவது முறைய. முதலில் இந்தப் படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கார்த்திகா. ஆனால் கதையை மாற்றிவிட்டார்கள் என்று புகார் கூறிவிட்டு, படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டார்.

அடுத்து டாப்ஸி ஒப்பந்தமானார். ஏனோ விஷாலுக்கு அவருடன் நடிப்பதில் இஷ்டமே இல்லையாம்.

இந்த நிலையில்தான் தன் மனம் கவர்ந்த வரலட்சுமியையே படத்தின் ஹீரோயினாக்கிவிட்டார் விஷால் என்கிறார்கள்.

ஏகப்பட்ட திறமைகளை வைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் தனக்கு ஒரு பிரேக் கிடைக்காதா என காத்திருந்தார் வரலட்சுமி. சிம்புவின் போடா போடியில் இவர் நடிக்க ஆரம்பித்திருந்தாலும், அந்தப்படம் இப்போதைக்கு வருவதாக தெரியவில்லை.

எனவே மதகஜாராஜா - எம்ஜிஆர், வரலட்சுமிக்கு முதல் தமிழ்ப்படமாக அமையவிருக்கிறது!

நிஜ காதலுடனே சேர்ந்து நடிப்பது இன்னும் சேஃப்தானே!