மனைவி பரிசளித்த நாய்க்குட்டிக்காக சைவமான ராம் சரண்

மனைவி பரிசளித்த நாய்க்குட்டிக்காக  சைவமான ராம் சரண்

ஹைதராபாத்: சமீபத்தில் ராம்சரண் தேஜாவின் பிறந்தநாளுக்காக, அவரது மனைவி உபாசனா ஒரு அழகிய நாய்க்குட்டியைப் பரிசளித்தார்.

அந்நாய்க்குட்டிக்கு பிராட் எனப் பெயரிட்ட ராம்சரண் அதனி மிகவும் பரிவுடம் கவனித்து வந்தார். ஆனால், சமீபத்தில் ஒரு காலில் அடிபட்டது பிராட்டுக்கு.

உடனடியாக தேவையான சிகிச்சையைப் பெற்ற போதிலும், இன்னும் முழுமையாக குணமாகவில்லையாம் பிராட். இதற்காக தன்னௌடைய அசைவ உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டு விரதம் இருக்கிறாராம் ராம் சரண்.

மேலும், இது குறித்து ராம் சரண் கூறியிருப்பதாவது,

மனைவியின் காதல் பரிசு...

மார்ச் 27 அன்று என் பிறந்த நாள் பரிசாக உபாசனா ஒரு அழகிய நாய்க்குட்டியைப் பரிசளித்தார். அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என உபாசனா கேட்டபோது என் வாயில் டக்கென்று வந்தப் பெயர் பிராட்.

பிராட் ஸ்பெஷல் தான்...

காரணம், எனது முந்தைய செல்ல நாயின் பெயர் பிராட். துவரை எங்கள் குடும்பத்தில் எவ்வளவோ நாய்கள் வளர்த்த போதும், பிராட் சம்திங் ஸ்பெஷல் தான்.

நீங்காத நினைவுகள்...

எதிர்பாராத விதமாக ஒருநாள் வாக்கிங் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பிராட் பலியாகிவிட்டது. ஆனாலும் அதன் நினைவுகள் இன்னும் என் மனதில் அப்படியே உள்ளது.

ஸ்பெஷல் கவனிப்பு...

அதன் நினைவாகத் தான் இந்தப் புதிய நாய்க்குட்டிக்கும் பிராட் எனப் பெயரிட்டுள்ளேன். இந்தப் பிராட்டை மிகவும் கண்ணும், கருத்துமாக கவனித்து வருகிறோம்

சைவமாகிட்டேன்...

ஆன போதும், கீழே விழுந்ததில் காலில் பிளேட் வைக்க வேண்டிய நிலைக்கு பிராட் தள்ளப்பட்டு விட்டான். அவன் பூரண குணமடைய வேண்டும் என்பதற்காக அசைவம் உண்ணுமெனது பழக்கத்தை விட்டு விட்டேன்

எதையும் செய்யத் தயார்...

பிராட்டுக்காக எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஏனெனில் பிராட் எனக்கு அவ்வளவு முக்கியம்' எனத் தெரிவித்துள்ளார் ராம்சரண்

 

வில்லனாகிறார் விஜய் சேதுபதி!

வில்லனாகிறார் விஜய் சேதுபதி!

ஏதோ ஒரு காலத்தில் சுமாரான சில படங்களில் ஹீரோவாக நடித்த பெருமையிலிருந்தே இன்னமும் வெளியில் வரமுடியாமல் இருக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில், அடுத்தடுத்து நான்கு வெற்றிப் படங்களில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி வில்லனாகிறார்.

படத்தின் பெயர் ஜிகிர்தண்டா. பீட்சா படத்தை உருவாக்கிய கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் இது.

இந்தப் படத்தில் சித்தார்த் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனனும் நடிக்கின்றனர். பைவ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

‘பீட்சா' படத்தில் நாயகனாக நடித்த விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் கொடுத்திருந்தாலும், இமேஜ் முக்கியமல்ல, கேரக்டர்தான் முக்கியம் என்பதை உணர்த்த இந்த வில்லன் அவதாரம் எடுத்துள்ளாராம் விஜய் சேதுபதி.

 

உன் சமையல் அறையில்... பிரகாஷ் ராஜுக்கு ஜோடி சினேகா?

உன் சமையல் அறையில்... பிரகாஷ் ராஜுக்கு ஜோடி சினேகா?

சால்ட் அண்ட் பெப்பர் மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரகாஷ் ராஜ் ஜோடியாக நடிக்கிறார் சினேகா.

2011-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ரொமான்டிக் காமெடி மலையாளப் படம் 'சால்ட் அண்ட் பெப்பர் (Salt N Pepper).

இரண்டு தலைமுறைகளுக்கு இடையே ஏற்படும் காதல் எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் சொல்லி இருந்தார்கள். இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஒரே நேரத்தில் 3 மொழிகளிலும் இந்தப் படத்தை ரீமேக் செய்யப் போகிறார் பிரகாஷ்ராஜ்.

தமிழில் 'உன் சமையல் அறையில்' என்றும், தெலுங்கில் 'உலவச்சாறு பிரியாணி' என்றும் பெயர் சூட்டி உள்ளனர். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சினேகா ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் ஹீரோ யார் என்பதை இதுவரை சொல்லாமல் வைத்திருந்தார் படத்தை இயக்கும் பிரகாஷ்ராஜ். இப்போது அவரே ஹீரோவாகவும் நடிக்க முடிவு செய்துள்ளாராம். தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்றிலுமே பிரபல முகம் என்பது ஒரு காரணம். இன்னொன்று, பெரிய நடிகர்கள் யாரும் கிடைக்காதது!

 

சத்ய சாய்பாபா வேடத்தில் மலையாள நடிகர் திலீப் - சம்பளம் ரூ 7 கோடி!

சத்ய சாய்பாபா வேடத்தில் மலையாள நடிகர் திலீப் - சம்பளம் ரூ 7 கோடி!

ஹைதராபாத்: புட்டபர்த்தி சத்ய சாய்பாபா வேடத்தில் நடிக்க மலையாள நடிகர் திலீப்பை தேர்வு செய்துள்ளார் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.

புட்டபர்த்தி சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு ‘சாய்பாபா' என்ற பெயரிலேயே தெலுங்கில் திரைப்படமாகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் முறையில் உருவாகும் இப்படத்தில் சாய்பாபா வேடத்தில் நடிக்க ஏராளமான தென்னிந்திய நடிகர்களை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் பரிசீலித்த இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா, கடைசியில் பிரபல மலையாள நடிகர் திலீப்பை தேர்வு செய்துள்ளார். அவருக்கு பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளது. அவரது சம்பளம் ரூ 7 கோடி என தெரிய வந்துள்ளது. மம்முட்டி, மோகன்லால் கூட இவ்வளவு சம்பளம் பெற்றதில்லை.

தெலுங்கு தவிர மற்ற மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடும் திட்டமுள்ளதாம். இந்த படத்தில் கோடி ராமகிருஷ்ணாவுடன் திரையுலகின் பல ஜாம்பவான்கள் பணியாற்ற இருக்கிறார்கள். இசைக்கு இசைஞானி இளையராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

சாய் பாபாவின் 20 வயது முதல் அவர் சமாதி அடையும் வரையிலான நிகழ்வுகளை சித்தரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு புட்டபர்த்தி மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நடக்கவிருக்கிறது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

 

சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் தகராறாமே?

சினிமாவில் இருந்தாலும் ஜென்டில்மேன் என்று பெயரெடுத்தவர் அந்த தந்தை நடிகர். அவர்களின் புதல்வர்கள் சிங்கமாகவும், சிறுத்தையாகவும் நடித்து அவரது பெருமையை காப்பாற்றி வருகின்றனர்.

இருவருமே இரட்டை குழல் துப்பாக்கியாக சினிமாத்துறையில் வலம் வருகின்றனர். இதுவரைக்கும் எந்த தகராறும் வந்ததில்லை. இப்போது யார் கண் பட்டதோ சிங்கமும், சிறுத்தையும் முட்டிக்கொண்டு நிற்கின்றனராம்.

கோடம்பாக்கம் பக்கம் விசாரித்த போது நம் காதில் விழுந்தது இதுதான்.

பச்சை சினிமா நிறுவனம் நடத்தி வரும் சிங்கம், சிறுத்தையின் உறவுக்காரர், சிங்கத்திற்கு வரும் வாய்ப்பை எல்லாம் சிறுத்தையின் பக்கம் திருப்பிவிடுகிறாராம். தவிர சிறுத்தை நடிக்கும் படங்களை மட்டுமே தயாரிக்கிறார் பச்சை சினிமா நிறுவனர். மற்றவர்கள் தயாரிக்கும் படங்களை வெளியிடுகிறார்.

கமகம படத்திற்கு முதலில் தேடியது சிங்கத்தைதான். ஆனால் சிக்கியதோ சிறுத்தை. அதேபோல பியூட்டி ராஜா படமும் இப்படித்தான் சிறுத்தை வசம் கைமாறியதாம். இப்போது சிங்கத்தை இயக்கியவரும் சிறுத்தையை இயக்க இருக்கிறார்.

இதனால் மனைவியிடம் புலம்பிய சிங்கம் தனியாக களமிறங்க முடிவெடுத்து தனியாக படத்தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கிவிட்டாராம். அதோடு சிங்கத்திற்கு கொடுத்த பப்ளிசிட்டி நகரத்தையே கலக்கியது. இதனால் சிறுத்தையும் தன்னுடைய கமகம படத்திற்கு இதேபோல பப்ளிசிட்டி பண்ணவேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம்

பங்காளிச் சண்டை பாசத்தை கலைத்துவிடுமே என்று கவலைப்படுகிறாராம் தந்தை நடிகர்.

 

படம் பார்ப்பதை இனிய அனுபவமாக்கும் புத்தம் புதிய போர்பிரேம்ஸ்!

கோலிவுட்டின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்வது போர்பிரேம்ஸ் (4 frames).

வெளிப்பார்வைக்கு இது ஒரு பிரிவியூ தியேட்டர் மட்டும்தான். ஆனால் ஒரு படத்தின் போஸ்ட் புரொடக்ஷனுக்குத் தேவையான முக்கிய தொழில்நுட்பங்களை வழங்கும் ஒன் ஸ்டாப் ஷாப் இந்த போர்பிரேம்ஸ்.

கலைஞர், ரஜினி என விவிஐபிக்கள் விருப்பத்துடன் படம் பார்க்க வரும் தியேட்டர் இது.

படம் பார்ப்பதை இனிய அனுபவமாக்கும் புத்தம் புதிய போர்பிரேம்ஸ்!

கடந்த சில வாரங்களாக இந்தத் திரையரங்கில் எந்தப் படமும் போடாமல் இருந்தார்கள். திடீரென ஒரு நாள் தனுஷ் நடித்த அம்பிகாபதி படத்தைப் பார்க்க போர்பிரேம்ஸுக்கு அழைத்திருந்தார்கள். அப்புறம்தான் தெரிந்தது, இந்தத் தியேட்டர் புதுப்பிப்பதற்காக லீவு விட்டிருந்த விஷயம்.

சும்மா சொல்லக் கூடாது... சுமாரான அந்தப் படத்தைக் கூட சுகமாக பார்க்க வைத்துவிட்டார் கல்யாணம். அருமையான இருக்கைகள், இதமான குளிர், ரம்யமான சூழல், துல்லியமான ஒலி என போர்பிரேம்ஸில் படம் பார்ப்பதே ஒரு நல்ல அனுபவம் எனும் அளவுக்கு மாற்றியிருக்கிறார்கள்.

அந்த கட்டிடத்தில் உள்ள இரண்டு தியேட்டர்களையும் புதுப்பிக்க மூன்று வார காலம் ஆனதாம். வெளிநாட்டிலிருந்து இருக்கைகளைத் தருவித்திருக்கிறார்கள். அதேபோல, நெருக்கியடித்துக் கொண்டு இல்லாமல், தாராளமாக இருக்கும்படி இருக்கைகளை அமைத்துள்ளனர்.

இத்தனைக்கும் முக்கிய காரணம் அதன் நிர்வாகி கல்யாணம். கேட்டால், "நம்ம கைல என்னங்க இருக்கு... சார் (உரிமையாளர் இயக்குநர் பிரியதர்ஷன்) இப்படியெல்லாம் செய்யணும்னு ஆசைப்பட்டார். அதைச் செய்யறதுக்குதானே நாம இருக்கோம்," என்றார் தனது வெண்கலக் குரலில்!

 

படம் பார்ப்பதை இனிய அனுபவமாக்கும் புத்தம் புதிய போர்பிரேம்ஸ்!

கோலிவுட்டின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்வது போர்பிரேம்ஸ் (4 frames).

வெளிப்பார்வைக்கு இது ஒரு பிரிவியூ தியேட்டர் மட்டும்தான். ஆனால் ஒரு படத்தின் போஸ்ட் புரொடக்ஷனுக்குத் தேவையான முக்கிய தொழில்நுட்பங்களை வழங்கும் ஒன் ஸ்டாப் ஷாப் இந்த போர்பிரேம்ஸ்.

கலைஞர், ரஜினி என விவிஐபிக்கள் விருப்பத்துடன் படம் பார்க்க வரும் தியேட்டர் இது.

படம் பார்ப்பதை இனிய அனுபவமாக்கும் புத்தம் புதிய போர்பிரேம்ஸ்!

கடந்த சில வாரங்களாக இந்தத் திரையரங்கில் எந்தப் படமும் போடாமல் இருந்தார்கள். திடீரென ஒரு நாள் தனுஷ் நடித்த அம்பிகாபதி படத்தைப் பார்க்க போர்பிரேம்ஸுக்கு அழைத்திருந்தார்கள். அப்புறம்தான் தெரிந்தது, இந்தத் தியேட்டர் புதுப்பிப்பதற்காக லீவு விட்டிருந்த விஷயம்.

சும்மா சொல்லக் கூடாது... சுமாரான அந்தப் படத்தைக் கூட சுகமாக பார்க்க வைத்துவிட்டார் கல்யாணம். அருமையான இருக்கைகள், இதமான குளிர், ரம்யமான சூழல், துல்லியமான ஒலி என போர்பிரேம்ஸில் படம் பார்ப்பதே ஒரு நல்ல அனுபவம் எனும் அளவுக்கு மாற்றியிருக்கிறார்கள்.

அந்த கட்டிடத்தில் உள்ள இரண்டு தியேட்டர்களையும் புதுப்பிக்க மூன்று வார காலம் ஆனதாம். வெளிநாட்டிலிருந்து இருக்கைகளைத் தருவித்திருக்கிறார்கள். அதேபோல, நெருக்கியடித்துக் கொண்டு இல்லாமல், தாராளமாக இருக்கும்படி இருக்கைகளை அமைத்துள்ளனர்.

இத்தனைக்கும் முக்கிய காரணம் அதன் நிர்வாகி கல்யாணம். கேட்டால், "நம்ம கைல என்னங்க இருக்கு... சார் (உரிமையாளர் இயக்குநர் பிரியதர்ஷன்) இப்படியெல்லாம் செய்யணும்னு ஆசைப்பட்டார். அதைச் செய்யறதுக்குதானே நாம இருக்கோம்," என்றார் தனது வெண்கலக் குரலில்!

 

ஷாரூக் மாதிரி இல்லீங்க, அவரு பையன் ஆர்யன்...

மும்பை: பொதுவாக யாராக இருந்தாலும் தோளோடு தோள் சேர்த்து நட்பாக அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தும் சினேகக் குணம் கொண்டவர் ஷாரூக் கான். அதிலும் பத்திரிக்கையாளர்களைக் கண்டால் அதிக உரிமை எடுத்து பேடும் வழக்கம் உடையவர்.

ஆனால், அவரது 16 வயது மகன் ஆர்யன் அப்படியில்லை. பப்ளிசிட்டி பிடிக்காமல் ஒதுங்கி வாழவே ஆசைப் படுகிறாராம்.

ஷாரூக் மாதிரி இல்லீங்க, அவரு பையன் ஆர்யன்...

சமீபத்தில் எதேச்சையாக ஆர்யனை மும்பை ஏர்போர்ட்டில் பார்த்து விட்டனராம் பத்திரிக்கையாளர்கள். உடனடியாக ஆர்யனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் படமெடுத்துத் தள்ள ஆரம்பித்து விட்டார்களாம்.

தன்னால் முடிந்த மட்டும், தன்னை போட்டோ எடுத்து விட முடியாத படி முகத்தை மூடிய படி ஓடி ஒளிந்துள்ளார் ஆர்யன். இதைப் பார்த்த பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு விஷயம் மட்டும் நன்றாக புரிந்ததாம். அதாவது, ஆர்யன் தன் தந்தை ஷாரூக் போல் மீடியா பிரியர் இல்லை என்பது தான் அது.

 

புதுமுகங்கள்... அடர்ந்த காடு.. பங்களா... வேறென்ன, திகில் படம்தான்!!

முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கப்படும் ஒரு த்ரில்லர் படத்துக்கு பூவனம் என தலைப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை மதுரை மீனாட்சி என்சிஎஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. அடர்ந்த காட்டில் இருக்கும் ஒரு பங்களாவில் நடக்கும் ஒரு பெண்ணின் கொலையில் ஆரம்பிக்கிறது படம். அந்தக் கொலையின் பின்னணியை திகிலோடு விவரிக்கும் திரைக்கதையுடன் இந்தப் படத்தை உருவாக்குகிறாராம் கதை வசனம் எழுதி இயக்கும் பிவி முருகன். பாடல்களையும் இவரே எழுதுகிறார்.

புதுமுகங்கள்... அடர்ந்த காடு.. பங்களா... வேறென்ன, திகில் படம்தான்!!

வாலாந்தூர் விவசாயி மகன் என் சுப்பையா தயாரிப்பாளராக கோடம்பாக்கத்துக்கு அறிமுகமாகிறார் இந்தப் படம் மூலம். அத்துடன் இவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சங்கர் கதாநாயகனாகவும், அமிர்தா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நடேஷ், கணேஷ், அகஸ்டின், பெனிக்ஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

புதுமுகங்கள்... அடர்ந்த காடு.. பங்களா... வேறென்ன, திகில் படம்தான்!!

படத்தை மூணாறு, கொழுக்கு மலை போன்ற இடங்களில் படமாக்கி வருகின்றனர்.

 

உ படத்துக்கு யு சான்று கொடுத்து பாராட்டிய சென்சார் அதிகாரிகள்!

அறிமுக இயக்குனர் ஆஷிக் தயாரித்து இயக்கியுள்ள உ படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று இந்தப் படத்தை தணிக்கை அதிகாரிகளுக்குப் போட்டுக் காட்டினர்.

படத்தைப் பார்த்து விட்டு, சிறந்த நகைச்சுவையுடன் எடுக்கப்பட்டுள்ள நல்ல பொழுதுபோக்குப் படமாக உ இருக்கிறது..." என்கிற பாராட்டுதலுடன் படத்திற்கு யு சான்றிதழும் கொடுத்திருக்கின்றனர்.

படம் பார்த்து முடிந்த கையோடு இயக்குனரைத் தேடிய அதிகாரிகள் முன்பு ஆஷிக் போய் நின்றதும், இவ்வளவு சின்ன வயது இயக்குனரா? என்று ஆச்சர்யப்பட்டார்களாம்.

உ படத்துக்கு யு சான்று கொடுத்து பாராட்டிய சென்சார் அதிகாரிகள்!  

அடுத்து தயாரிப்பாளர் எங்கே என்று கேட்டிருக்கிறார்கள். அதுவும் நான்தான் என ஆஷிக் சொன்னதும் அவர்களின் ஆச்சர்யம் அதிகமானதாம்.

''சொந்தக் காசுல, நல்லபடம் எடுத்துருக்கீங்க... நல்ல பெரிய இயக்குனரா வாங்க'' என வாழ்த்தி அனுப்பியுள்ளனர் அதிகாரிகள்.

படம் திரையைத் தொடும் தேதியை விரைவில் அறிவிப்பேன் என ஆஷிக் தெரிவித்தார். இந்தப் படத்தின் ஹீரோ தம்பி ராமையா என்பது நினைவிருக்கலாம்!

 

பாண்டிராஜ் படத்தில் சிம்பு.. இசையமைக்கிறார் குறளரசன்!

பாண்டிராஜ் படத்தில் சிம்பு.. இசையமைக்கிறார் குறளரசன்!

சென்னை: பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சிம்பு நடிக்கிறார். இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அவர் தம்பி குறளரசன் அறிமுகமாகிறார்.

சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் சிம்புவே தயாரிக்கும் படம் இது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா வெற்றிக்குப் பிறகு புதிய படத்துக்கு கதையை உருவாக்கி, அதில் தனுஷை நடிக்க வைக்க முயற்சி செய்து வந்தார் பாண்டிராஜ். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் தனுஷ் நடிக்கவில்லை.

காதலும் நகைச்சுவையும் கொண்ட இந்தக் கதையை்க கேட்ட சிம்பு, தானே அதில் நாயகனாக நடிக்க முன்வந்தார். நாயகியாக முன்னணி நடிகை நடிக்கிறார். இதர நடிகர், நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.

இந்த படத்தில் இசையமைப்பாளராக குறளரசன் அறிமுகமாகிறார். குறளரசன் டியூன்கள் பிடித்துப் போய் இப்படத்துக்கு இசையமைக்க வைத்தாராம் பாண்டிராஜ்.

அடுத்த வாரம் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவிருக்கின்றனர்.

 

என் அழகு ஏன் குறைஞ்சிருச்சி தெரியுமா? - அனுஷ்கா விளக்கம்

என் அழகு ஏன் குறைஞ்சிருச்சி தெரியுமா? - அனுஷ்கா விளக்கம்  

தொடர்ந்து வெயிலில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்ததால் என் அழகு குறைந்துவிட்டது என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.

சிங்கம் 2 -படத்தில் அனுஷ்காவைப் பார்த்த சிலர் அவர் ஆன்ட்டி ரேஞ்சுக்கு வந்துவிட்டார் என விமர்சித்திருந்தனர். யோகா டீச்சரான அவர் முகத்தில் இத்தனை சீக்கிரம் முதிர்ச்சி எட்டிப் பார்ப்பதாகக் கமெண்ட் அடித்திருந்தனர்.

இந்த நிலையில், தன் அழகு ஏன் இப்படிக் குறைந்துவிட்டது என்று விளக்கம் கூறியிருக்கிறார் அனுஷ்கா.

தொடர்ந்து வெயிலில் நடித்ததாலும், ஓய்வில்லாமல் கால்ஷீட் கொடுத்ததாலும் என் அழகும் கவர்ச்சியும் குறைந்துவிட்டது உண்மைதான்.

சிங்கம்-2, இரண்டாம் உலகம் படங்களில் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் நடித்தேன். ஐரோப்பா, ஆப்ரிக்கா என பல வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்காக போய் வர வேண்டியிருந்தது. வெயிலில் நின்று நடித்தேன். இதனால் என் அழகை கவனிக்க முடியவில்லை. யோகா, உடற்பயிற்சிகளில் ஈடுபடவும் நேரம் அமையவில்லை.

இப்போது ருத்ரமாதேவி படத்தில் ராணி வேடத்தில் நடிக்கிறேன். இதற்காக வாள் சண்டை, குதிரையேற்றம் பயிற்சிகள் பெற வேண்டி இருந்தது. கடும் வெயிலில்தான் இந்த பயிற்சிகளை பெற்றேன். சரியான தூக்கம் இல்லை. இதெல்லாம் என் முகத்தில் சோர்வை வெளிப்படையாகக் காட்டிவிட்டன. ருத்ரமா தேவி முடிந்ததும் சில தினங்கள் ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்," என்றார்.

 

சிங்கத்துக்கு எதுக்கு ஒட்டகத்தின் உயரம்? - நடிகர் ரகுமான்

சிங்கத்துக்கு எதுக்கு ஒட்டகத்தின் உயரம்? - நடிகர் ரகுமான்

சூர்யாவின் உயரம் குறித்து எல்லோரும் பேசுகிறார்கள். சிங்கத்துக்கு எதுக்கு ஒட்டகத்தின் உயரம் என்றார் சிங்கம் 2 படத்தில் வில்லனாக நடித்த ரகுமான்.

சமீபத்தில் நடந்த இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ரகுமான் பேசுகையில், "நான் கதாநாயகனாக நடித்தவன். இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற போது முதலில் தயக்கமாக இருந்தது.

படத்தை ஒப்புக்கொண்ட பிறகும் நடிக்க வந்த பிறகும் இந்த தயக்கம் எனக்குள் இருந்தது. கதாநாயகனாக நடித்தவன் வில்லனாக நடிக்கும் போது மிகவும் சங்கடமாக இருக்கும். என் மனம் ஒப்பவே இல்லை. எனக்குள் இருந்த ஈகோ தலையெடுத்துக் கொண்டே இருந்தது. மிகவும் சிரமமாக இருந்தது. அதிலிருந்து வெளிவர மிகவும் கஷ்டப்பட்டேன். ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு நடிக்கத் தயாராகிவிட்டேன்.

இந்தப் படத்தில் நான் ஒரு கோட் போட்டுக் கொண்டு வருவேன். அது எனக்கு சரியாக அமையவில்லை. வில்லனாக வேறு நடித்து, பிடிக்காத நிறத்தில் கோட் வேறு போட வேண்டுமா? என எரிச்சலாக இருந்தது. இதையறிந்த டைரக்டர் ஹரி தூத்துக்குடியிலிருந்து வெகு தொலைவில் வேறு ஊர் சென்று புதிய கோட் வாங்கி வந்தார். அது அவருக்கு அவசியமில்லை. ஆனால் தன் படத்தில் நடிக்கும் நடிகர் மனம் கோணக் கூடாது என்று அவர் காட்டிய அக்கறை ஆச்சர்யப்பட வைத்தது.

சூர்யா அருமையான நடிகர். அவர் ஆறடி உயரமா.. ஐந்தடியா என்றெல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை. சிங்கத்துக்கு எதுக்குங்க ஒட்டகத்தின் உயரம். சிங்கம் சிங்கம்தான்," என்றார்.

 

லண்டன் ஷூட்டிங்கில் எமி ஜாக்சன் காயம்... மருத்துவமனையில் சிகிச்சை!

லண்டன் ஷூட்டிங்கில் எமி ஜாக்சன் காயம்... மருத்துவமனையில் சிகிச்சை!

பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு படப்பிடிப்பில் ரத்தக் காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்யாவுடன் மதராச பட்டணம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். அடுத்து விக்ரமுடன் ‘தாண்டவம்' படத்திலும் நடித்தார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘ஐ' படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கும் எமி, இப்போது ராம்சரண், ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடிக்கும் ‘யவடு' படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். இதன் படிப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடந்தது.

எமிஜாக்சன் காரில் பயணம் செய்வது போன்ற காட்சியொன்றை படமாக்கினர். காரை டிரைவர் வேகமாக ஓட்டினார். அப்போது அந்த கார் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இன்னொரு காருடன் பயங்கரமாக மோதியது.

இதில் காருக்குள் இருந்த எமிஜாக்சனுக்கு பலத்த அடிபட்டது. உடலில் ரத்தக்காயங்கள் ஏற்பட்டன. படப்பிடிப்பு குழுவினர் விரைந்து சென்று எமி ஜாக்சனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

 

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா-சமந்தா நடிக்கும் புதிய படம்: ஆகஸ்டில் தொடங்குகிறது!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா-சமந்தா நடிக்கும் புதிய படம்: ஆகஸ்டில் தொடங்குகிறது!

சென்னை: லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா நடிக்கும் புதிய படத்தின் பூஜை வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.

லிங்குசாமி, அவர் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது.

இந்த நிறுவனத்துக்காக ஒரு படம் நடித்துத் தர சூர்யா ஒப்புக் கொண்டிருந்தார். இந்தப் படத்துடன் கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடிக்க சம்மதித்திருந்தார்.

இரு படங்களும் ஒரே நேரத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் கவுதம் மேனன் படம் இன்னும் தொடங்காமல் உள்ளது. கதையில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால் தாமதமாவதாகக் கூறப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் லிங்குசாமி படத்தின் கதை, நடிகர்கள் தேர்வு அனைத்தும் முடிந்துவிட்டதால், அந்தப் படத்தை உடனே தொடங்க சூர்யா சம்மதித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடக்கவுள்ளது.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். லிங்குசாமி இயக்குகிறார். லிங்குசாமி - சூர்யா இணைவது இதுவே முதல் முறை.

 

மூன்று நாட்களில் ரூ 50 கோடி - இது சிங்கம் 2 வசூல் சாதனை!

சென்னை: சூர்யா நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான சிங்கம் 2 படம் மூன்று நாட்களில் ரூ 50 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில் சூர்யா - அனுஷ்கா - ஹன்சிகா - விவேக் - சந்தானம் நடித்துள்ள சிங்கம் 2 பெரும் வெற்றி பெற்றுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சமீபத்தில் பிரஸ் மீட் வைத்து அறிவித்தனர்.

மூன்று நாட்களில் ரூ 50 கோடி - இது சிங்கம் 2 வசூல் சாதனை!

இந்த நிலையில் படத்தின் வசூல் குறித்த விவரங்களை தயாரிப்பாளர் தனது பிஆர்ஓ மூலம் அறிவித்துள்ளார்.

இதுவரை சூர்யா நடித்த எந்தப் படத்துக்கும் கிடைக்காத பெரிய வசூலை சிங்கம் 2 அள்ளியுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் ரூ 50 கோடியை வசூலித்துள்ளது.

இந்த மூன்று நாட்களிலும் 100 சதவீத பார்வையாளர்கள் வந்ததாகவும், திங்கள், செவ்வாய் ஆகிய வார நாட்களிலும் 80 முதல் 90 சதவீத பார்வையாளர்கள் வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்காக முதலீடு தொகையை ஐந்தாவது நாளிலேயே எடுத்துவிட்டதாக படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான அருள்பதி தெரிவித்துள்ளார்.

 

வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைக்கு அப்ராம் என பெயர் சூட்டிய ஷாரூக்!

வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைக்கு அப்ராம் என பெயர் சூட்டிய ஷாரூக்!

மும்பை: வாடகைத்தாய் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு அப்ராம் எனப் பெயர் சூட்டினார் நடிகர் ஷாரூக்கான்.

பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானுக்கு திருமணமாகி கவுரி என்ற மனைவியும், சுகானா என்ற மகளும், ஆர்யான் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கான்- கவுரி தம்பதி இன்னொரு குழந்தை வேண்டும் என விரும்பினர்.

ஆனால் கவுரி கர்ப்பமாகி குழந்தை பெறுவதை விரும்பவில்லை. வாடகை தாய் மூலம் கணவருக்கு குழந்தை பெற்றுக்கொடுக்க முடிவு செய்தார். ஆகவே, லண்டனில் வசிக்கும் கவுரியின் நெருங்கிய உறவுக்காரப் பெண்ணை மும்பை வரவழைத்து அங்குள்ள மருத்துவமனையில் செயற்கை முறையில் கருத்தரிக்க வைத்தனர்.

வாடகைத் தாய் மூலம் ஷாரூக் குழந்தை பெறும் விவரம் சமீபத்தில்தான் வெளியில் வந்தது.

குறிப்பிட்ட காலத்துக்கு 2 மாதத்துக்கு முன்பே வாடகைத் தாய்க்கு குழந்தை பிறந்தது. குறைப் பிரசவம் என்பதால் மும்பை மருத்துவமனையில் வைத்து இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். குழந்தை தேறியதும் குழந்தையை ஷாருக்கான் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டார். வாடகைத் தாய் லண்டன் திரும்பிவிட்டார்.

இந்த நிலையில் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு மும்பை மாநகராட்சியில் ஷாருக்கான் விண் ணப்பித்து இருந்தார். மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்து ஆவணங்களை சரி பார்த்தனர். ஷாருக்கான் வீட்டுக்கு நேரில் சென்று குழந்தையை பார்த்த பின்னர் பிறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகள் மூலம்தான் ஷாருக்கானுக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்த தகவல் வெளியே அதிகாரப்பூர்வமாக தெரிய வந்தது.

ஆனால் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வந்த ஷாரூக், நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் ,"எனக்கு புதிதாக பிறந்த குழந்தை பற்றி பல்வேறு விதமான பேச்சுகள் உலா வருகின்றன. பல மாதங்கள் குறை பிரசவத்தில் இருந்த குழந்தை கடைசியாக என் வீட்டுக்கு வந்து விட்டான். நான், என் மனைவி கவுரி மற்றும் குடும்பத்தினர் அந்த குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த விஷயத்தில் நீண்ட நாட்கள் மவுனம் காக்க விரும்பவில்லை.

குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது ஆணா? பெண்ணா? என்று சோதனை செய்து பார்க்கவில்லை. குழந்தை பிறந்த பின்புதான் அது ஆண் குழந்தை என்று தெரிந்து கொண்டேன். வீட்டுக்கு வந்த பின்பு ‘அப்ராம்' என்று பெயர் சூட்டி அன்புடன் வளர்த்து வருகிறோம். என் குழந்தையை சிறப்பாக கவனித்துக் கொண்ட டாக்டர்கள், நர்சுகள் அனைவருக்கும் நன்றி. இது என் குடும்ப விவகாரம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளுங்கள்,''என்று குறிப்பிட்டுள்ளார்.