அன்னக்கொடி- விமர்சனம்

Rating:
2.0/5

-எஸ் ஷங்கர்

நடிப்பு: லட்சுமணன், மனோஜ், கார்த்திகா
இசை: ஜிவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : சாலை சகாதேவன்
தயாரிப்பு: மனோஜ் கிரியேஷன்ஸ்
இயக்கம்: பாரதிராஜா

தமிழ் சினிமாவைப் புரட்டிப் போட்ட படைப்பாளி, ஸ்டுடியோக்களுக்குள் இருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்றவர், மண்ணின் கலைகளை - உணர்வுகளை செல்லுலாய்டில் செதுக்கியவர்... என எத்தனையோ பெருமைகளுக்குச் சொந்தக்காரரான பாரதிராஜா 5 ஆண்டுகள் கழித்து உருவாக்கியிருக்கும் படம் என்ற முத்திரையோடு வந்திருக்கிறது அன்னக்கொடி.

ஆனால்... இத்தனைப் பெருமைக்குரியவர் தந்திருக்கும் படம்... பார்க்கும்படி இருக்கிறதா...? பார்க்கலாம் வாங்க!

அன்னக்கொடி- விமர்சனம்

சாராயம் காய்ச்சி விற்பவளின் மகள் அன்னக்கொடிக்கும் (கார்த்திகா) செருப்புத் தைக்கும் தொழிலாளி மகன் கொடிவீரனுக்கும் (லட்சுமணன்)... ஆடு மேய்க்கப் போன இடத்தில் காதல் பூக்கிறது.

ஆனால் வட்டிக்குப் பணம் கொடுத்து ஊரையே வளைத்து வைத்திருக்கிற சடையனின் (மனோஜ்) காமப் பார்வைக்குள் சிக்குகிறாள் அன்னக்கொடி. அந்த நேரத்தில் அன்னக்கொடியை பெண்கேட்டு அப்பனோடு வருகிறான் கொடிவீரன்.

தாழ்ந்த சாதிக்காரன் எப்படி பெண் கேட்கலாம் என அவர்களை அடித்து உதைத்து சாணியைக் கரைத்து ஊற்றி அசிங்கப்படுத்தி அனுப்புகிறாள் அன்னக்கொடியின் தாய். விஷயமறிந்த சடையன் தன் அடிமையான போலீசுக்கு சொல்லி கொடிவீரனை சிறையில் தள்ளுகிறான்.

ஒரு நாள் அன்னக்கொடியின் தாய் செத்துப் போக, அவள் வாங்கிய கடனுக்கு ஈடாக அன்னக்கொடியை தன் வசமாக்கிக் கொள்கிறான் சடையன்.

சடையனுக்கு மனைவியாக அன்னக்கொடி வாழ்ந்தாளா? கொடிவீரன் காதல் என்ன ஆனது? என்பதையெல்லாம் ரத்தக்களறியாக சொல்லி முடிக்கிறார் க்ளைமாக்ஸில்.

பாரதிராஜாவின் கிராமத்துக் கதைகள் பெரும்பாலும் சோடைபோகாதவை. விலக்காக முதல் சொதப்பல் ஈரநிலம்... அந்தப் பட்டியலில் இப்போது அன்னக்கொடி!

அன்னக்கொடி- விமர்சனம்

ஆரம்பத்திலிருந்தே ஏதோ ஒரு குறையோடே காட்சிகள் நகர்கின்றன. பாரதிராஜாவின் படங்களுக்கே உரிய உணர்வுப்பூர்வமான காட்சிகளோ, அழகியலோ, வசனங்களோ, நுட்பமான நளினங்களோ இந்தப் படத்தில் ஒரு காட்சியில்கூட இல்லை.

ஒரு சாம்பிள்... நாடோடித் தென்றலில் சோத்துக்கு தொட்டுக் கொள்ள ரஞ்சிதாவின் கைவிரல்களை பயன்படுத்தியபோது நம்மால் ரசிக்க முடிந்தது. ஆனால், இந்தப் படத்தில் கார்த்திகாவின் அல்லது லட்சுமணனின் நகங்களைக் கடித்து அதை கஞ்சிக்கு தொட்டுக் கொள்வதாகக் காட்டியிருப்பது குமட்டலைத்தான் தருகிறது!

அதேபோல ஏற்கெனவே பாரதிராஜாவின் படங்களில் பார்த்த நிறைய காட்சிகளை இந்தப் படத்தில் மீண்டும் பார்க்க முடிகிறது. அன்னக்கொடியின் தாய் இறந்துபோனது தெரிந்ததும், காதலியைப் பார்க்க வேகமாக வருகிறான் கொடிவீரன்... அப்போது கல்யாணமாகி புருஷனுடன் மாட்டு வண்டியில் போய்க்கொண்டிருப்பாள் அன்னக்கொடி. இதை வேதம் புதிதிலேயே கொஞ்சம் வேறு மாதிரி காட்டியிருப்பார்.

அன்னக்கொடி- விமர்சனம்

ஒரு நா ஒரு பொழுது, சிறுக்கி மவ, அல்லைல குத்து... இதுபோன்ற ஒரு டஜன் வார்த்தைகள் திரும்பத் திரும்ப படம் முழுக்க வந்து பெரிய அலுப்பைத் தருகின்றன. வசனங்களில் ஆபாசம், அருவருப்புக்கும் பஞ்சமில்லை.

சடையனுக்கு தந்தையாக வரும் (இயக்குனர்) மனோஜ்குமார் தன் மருமகளையே மடக்கப் பார்க்கும் காட்சிகளும் வசனங்களும் இது பாரதிராஜாவின் படமா.. மாமனாரின் இன்பவெறி மாதிரி கில்மா படமா என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.

ஊரில் உள்ள பெரும்பாலான பெண்கள் சேலை ரவிக்கை என டீஸன்டாக நடமாட, இளம் பெண்களான கார்த்திகாவும், 'லோக்கல் வெடக்கோழி' மீனாளும் மட்டும் ரவிக்கையில்லாமல் அலைவது ஏன் என்பது பாரதிராஜாவுக்கே வெளிச்சம். ஒரு காட்சியில் காட்சியில் கிட்டத்தட்ட முக்காலுக்கும் கொஞ்சம் அதிகமான நிர்வாணத்தோடு கார்த்திகாவை ஓடவைத்திருக்கிறார் பாரதிராஜா. அவ்வளவு ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு தேவைப்பட்டிருக்கிறது!

மகனுக்கு நல்ல வாய்ப்பை உண்டாக்கித் தர ஒரு தந்தை விரும்புவது நியாயம்தான். ஆனால் அதற்காக இப்படியா... மனோஜ் இல்லாத காட்சியென்று எதையும் எடுக்கவே அவர் விரும்பவில்லை போலிருக்கிறது. எல்லா காட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் மனோஜ். இதில் அவருக்கு பஞ்ச் டயலாக்... பஞ்சர் பாட்டு என்று படுத்தி எடுக்கிறார். க்ளைமாக்ஸில் அவர் சாகும் விதமிருக்கே... பாரதிராஜா சார்... அந்தக் காட்சியைப் பார்த்து குதிரை மேலிருந்த அய்யனாரே குபுக்கென்று சிரித்திருப்பார்!

கதைப்படி மனோஜ், 'அந்த விஷயத்துக்கு' லாயக்கில்லாதவர். அப்புறம் அவரைக் காமுகனாகக் காட்டுவது, அயிட்டம் மீனாள் வீட்டுக்கு ரேட் பேசிவிட்டுப் போவது, அடுத்தவன் பெண்டாட்டியை தூக்கி வருவது, இன்னொருவனைக் காதலிக்கிறாள் எனத் தெரிந்தும் அன்னக் கொடியை அபகரிப்பது.... இதற்கெல்லாம் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா... இந்தக் கதைக்கு மனோஜின் கையாலாகாத்தன கேரக்டர், அதற்கான ப்ளாஷ்பேக், அவர் செய்யும் ஆறேழு கொலைகள் எந்த வகையிலாவது உதவியிருக்கின்றனவா... என்ன டைரக்டரே?

நடிகர்களின் பங்களிப்பு என்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. லட்சுமணன் கொஞ்சம் முயன்றால் ஒரு நல்ல நடிகராக வர வாய்ப்பிருக்கிறது. முதல் படம் என்றாலும், முக பாவங்களைத் தெளிவாகக் காட்ட வருகிறது அவருக்கு. கார்த்திகாவை ஆடு மேய்க்கும் பெண்ணாக ஒப்புக் கொள்ள கஷ்டமாக இருக்கிறது. அவரது தோற்றம் அப்படி. குறிப்பாக அந்த புருவம்.. ரொம்ப ஓவர்!

அன்னக்கொடி- விமர்சனம்

மனோஜ்குமார், மீனாள், ரமா பிரபா, கொடிவீரன் தந்தையாக வருபவர், அந்த போலீஸ்காரர்... கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

சாதி... இதை வைத்து அன்றைய நாட்களில் கிராமங்களில் நடந்த கொடுமைகள், அதை எதிர்த்து போரிட்டு இழப்புகள் தாங்கி வாழ்க்கையில் இணைந்த ஒரு காதல் ஜோடி... பாரதிராஜா எடுக்க நினைத்த கதை இதுதான். இதை அவர் எந்த சமரசமும் இல்லாமல் தன் பாணியில் எடுத்திருந்தால், இன்னொரு அழகிய படைப்பாக வந்திருக்கும். சாதீயம் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில், அது சமூகத்துக்கான ஒரு மருந்தாகக் கூட இருந்திருக்கும்.

ஆனால் நல்ல காட்சிகள், நல்ல வசனங்கள், நல்ல பாடல், நல்ல இசை என்று எதையுமே குறிப்பிட முடியாத பரிதாபத்துக்குரிய படமாக அன்னக் கொடி வந்திருக்கிறது.

பாரதிராஜா என்ற தனிமனிதனின் கருத்துகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பாரதிராஜா என்ற கலைஞனின் படைப்புகளை ரசித்தவன் என்ற முறையில், அவரது இந்த வீழ்ச்சியை பரிதாபமாகவே பார்க்க முடிகிறது. இன்னொரு சரியான கூட்டணியோடு, ரசனையில் கொஞ்சம் மேம்பட்டு நிற்கும் உங்கள் ரசிகர்களை எதிர்கொள்ளுங்கள் இயக்குநரே..!

 

முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு

முதல்முறையாக கன்னடத்தில் பேசி நடித்த விவேக்குக்கு பெரும் வரவேற்பு

பெங்களூரு: நடிகர் விவேக் முதல் முறையாக கன்னடத்தில் பேசி நடித்துள்ள சந்திரா திரைப்படம் கர்நாடகா முழுவதும் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரேயா நாயகியாகவும் பிரேம் குமார் நாயகனாகவும் நடித்துள்ள படம் சந்திரா. தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாரான இந்தப் படம், இப்போது கன்னடத்தில் மட்டும் வெளியாகிவிட்டது. ரூபா அய்யர் இயக்கியுள்ள இந்தப் படம் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.

மன்னர் குலத்தில் பிறந்த சந்திராவான ஸ்ரேயாவுக்கும், அந்த குடும்பத்துக்கு நெருக்கமான நண்பரின் மகன் சந்திரசேகரன் என்கிற சந்திராவுக்கும் இடையில் காதல் பூக்கிறது. ஆனால் மன்னர் குடும்பம் தங்களுக்கு சமமான அந்தஸ்தில் உள்ள பையனுக்கு சந்திராவை மணம் முடிக்க முடிவு செய்கிறது. சந்திரா - சந்திரசேகரன் காதல் நிறைவேறியதா என்பதுதான் இந்தப் படத்தின் சில வரிக் கதை.

படத்தில் சந்திராவாக வரும் ஸ்ரேயாதான் ஹைலைட். படம் முழுக்க அவரது கவர்ச்சியை செலுலாய்டில் விருந்தாகப் படைத்திருக்கிறது காமிரா. இதுவரை இல்லாத அளவுக்கு வஞ்சனையின்றி கவர்ச்சியை வாரி இறைத்திருக்கிறார் இந்தப் படத்தில் ஸ்ரேயா.

படத்தில் இன்னொரு முக்கிய விஷயம், நம்ம ஊர் சின்னக் கலைவாணர் விவேக்கின் காமெடிதான். பொதுவாக தமிழ் காமெடியன்கள் வேறு மொழிக்குப் போனால் டப்பிங் குரல்தான் பயன்படுத்துவார்கள். இதனால் அவர்களின் ஒரிஜினல் குரல் கேட்டுப் பழகியவர்களால் அந்தப் படங்களை ரசிக்க முடியாமல் போய்விடும். காரணம் காமெடியன்களின் அடையாளங்களுள் முக்கியமானது அவர்களின் குரல்.

இதை நன்கு உணர்ந்தவர் விவேக். அதன் விளைவு, கன்னடமாக இருந்தால் என்ன... நானே கற்றுக் கொண்டு பேசிவிடுகிறேன் என்று உறுதியாக இருந்தாராம். கன்னடத்தை அந்த லோக்கல் ப்ளேவரோடு அசத்தலாகப் பேசியிருக்கிறார் விவேக் என படம் பார்த்த கன்னட ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தில் அவரோடு காமெடி செய்த சாது மஹராஜ் சொதப்பினாலும், விவேக் அதையும் சமாளித்து நடித்திருக்கிறார் என்று விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

பரவாயில்லையே... விவேக்குக்கு இன்னொரு கேட்டும் ஓபனாயிடுச்சு!

 

எனக்கு சிக்ஸ் பேக் ஆண்கள் வேணவே வேணாம்! - கங்கனா

எனக்கு சிக்ஸ் பேக் ஆண்கள் வேணவே வேணாம்! - கங்கனா

சென்னை: சிக்ஸ் பேக், ஜிம் பாடி ஆண்களை எனக்குப் பிடிக்காது. இந்த மாதிரி ஆண்களை திருமணம் செய்ய மாட்டேன், என்று கூறியுள்ளார் பிரபல நடிகை கங்கனா ரனவத்.

தமிழில் தாம்தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரனவத். இந்தியில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இப்போது திருமணம், குடும்பம் என செட்டிலாகும் மூடுக்கு வந்துவிட்டார்.

தனக்கு எப்படிப்பட்ட ஆண் துணை வேண்டும் என்பது குறித்து அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை ஆண்கள் பலசாலிகளாக இருப்பதை விட, அன்பானவர்களாக இருப்பதையே விரும்புகிறேன். சிக்ஸ்பேக், ஜிம் பாடி ஆண்கள் எனக்கு வேண்டவே வேண்டாம்.

வாழ்க்கையில் காதலை விட முக்கியமான விஷயங்கள் ஏராளம் உள்ளன. எனவே இப்போது காதல் பற்றி பேச எனக்கு நேரம் கிடையாது. அதுபற்றி எதுவும் தெரியாது.

சினிமாவில் கதாநாயகிகளை ஆபாசமாக பொம்மை போல காட்டுகிறார்கள். இது சரியானதல்ல.

நான் ஆபாசமாக நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. ஆபாச முத்திரை விழுவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப் பிடித்து நடிக்கிறேன். ஹ்ரித்திக் ரோஷனுடன் கிரிஷ் 3 படத்தில் இப்போது நடித்து வருகிறேன்," என்றார்.

 

கூடுதல் பணம் கேட்டு தகராறு- சுஜிபாலா மீது புகார்

கூடுதல் பணம் கேட்டு தகராறு- சுஜிபாலா மீது புகார்

உண்மை என்ற படத்தின் படப்பிடிப்புக்கு வர கூடுதல் பணம் கேட்டு தகராறு செய்வதாக அப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளனர்.

மதர் கிரீன்லேண்ட் மூவிமேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ரவிக்குமார் தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படம் உண்மை. இந்த படத்தில் சுஜிபாலா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த ரவிக்குமார்தான் சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடைசி நேரத்தில் திருமணத்தை ரத்து செய்தது நினைவிருக்கலாம்.

திருமணம் நின்று போன பிறகும், அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் சுஜிபாலா. ஆனால் சண்டிகரில் நடக்கவிருந்த ஷூட்டிங்கில் சுஜிபாலா கலந்து கொள்ள மறுத்துவிட்டாராம்.

இது தொடர்பாக இயக்குனர் சங்கத்திலும் இயக்குநர் பி.ரவிக்குமார் புகார் செய்துள்ளார். இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் சுஜிபாலாவிடம் பேசுவதாக கூறியுள்ளார்.

ரவிக்குமார் கொடுத்துள்ள புகாரில், "சண்டிகரில் ‘உண்மை' படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து விமான டிக்கெட் எடுக்க சுஜிபாலாவுக்கு போன் செய்தேன். அவரது அம்மா போனை எடுத்து சூட்டிங் வர முடியாது என்று கூறி விட்டார். சுஜிபாலாவிடம் பேச வேண்டும் என்று கூறினால் போனை கொடுக்க மறுக்கிறார்.

படத்துக்கு பேசிய மொத்த சம்பளமும் கொடுத்து விட்டேன். ஆனால் மேலும் ரூ.2 லட்சம் கொடுத்தால்தான் ஷுட்டிங் அனுப்ப முடியும் என்று கூறுகிறார்கள். என்னை டைரக்டர் என்றும் பார்க்காமல் சுஜிபாலாவின் தாயார் மிகவும் கீழ்தரமாக பேசுகிறார். சண்டிகாரில் படப்பிடிப்புக்காக ரூ.25 லட்சம் செலவில் அரங்கம் அமைத்துள்ளோம்.

தற்போது மழை சீசன் என்பதால் அந்த செட் வீணாகி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளேன்," என்றார்.

 

அமீர் படப்பிடிப்பில் கல்வீச்சு, தகராறு- போலீசில் புகார்!

அமீர் நடிக்கும் படப்பிடிப்பில் கல்வீச்சு மற்றும் தகராறு நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

யோகி படத்திற்கு பிறகு அமீர் மீண்டும் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் பேரன்புமிக்க பெரியோர்களே. சந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு அந்த மர்ம நபர்கள் படப்பிடிப்பு சாதனங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அமீர் படப்பிடிப்பில் கல்வீச்சு, தகராறு- போலீசில் புகார்!

இயக்குனர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பாரதிராஜாவின் அபிமானிகள் சிலர்தான் இந்த கல்வீச்சுக்கு காரணமாக இருக்கும் என நினைத்து அமீர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் சம்பவத்தை கேள்விப்பட்ட பாரதிராஜா உடனே அதை மறுத்துள்ளார்.

எனவே அமீர் மாவட்ட காவல் அதிகாரியைச் சந்தித்து புகார் கொடுத்துள்ளார். இப்போது பலத்த பாதுகாப்போடு ஷூட்டிங் நடந்து வருகிறது.

 

வீட்ல ரொமான்ஸ் செய்ய வராது… தனுஷ்

வீட்ல ரொமான்ஸ் செய்ய வராது… தனுஷ்

சினிமாவில் ரொமான்ஸ் நாயகன் என்று பெயரெடுத்த தனுஷ் தனக்கு வீட்டில் ரொமான்ஸ் செய்ய வராது என்றும் என் மனைவி அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார் என்று கூறியுள்ளார்.

பாலிவுட் உலகில் ராஞ்சனா படம் மூலம் அறிமுகமாகியுள்ளார் நடிகர் தனுஷ். படம் பட்டையை கிளப்புறது. சோனம் கபூர் உடனான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது என்றும், ரொமான்ஸ் சூப்பர் என்றும் பரவலான பேச்சு உள்ளது.

ராஞ்சனா மட்டுமல்லாது, தனுஷ் மனைவி இயக்கிய 3 படத்திலும் நாயகி ஸ்ருதியுடன் அதிகம் நெருக்கம் காட்டி நடித்திருந்தார் தனுஷ். சினிமாவில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது பற்றியும், வீட்டில் சொந்த வாழ்க்கையில் நடந்து கொள்வது பற்றியும் மும்பை நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார் தனுஷ்.

அப்போது, வீட்டில் தன்னால் ஒரு நல்ல கணவனாக நடந்து கொள்ள முடிவதில்லை என்று கூறியிருந்தார். என்னுடைய குழந்தைகளுக்கு நான் ஒரு நல்ல அப்பாவாக நடந்து கொள்கிறேன். ஆனால் என் மனைவி ஐஸ்வர்யாதான் பாவம் எப்படியோ என்னை பொறுத்துக் கொள்கிறார் என்று கூறியுள்ளார். அவருடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. என்ன செய்வது என்னுடைய வேலை அப்படி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

சினிமாவில் ரொமான்ஸ் காட்சிகளில் நன்றாக நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் இடம் பிடித்த தனுஷ் பாவம் சொந்த வாழ்க்கையில் ரொமான்ஸ் செய்ய நேரம் இல்லாமல் தவிப்பதைத்தான் இப்படி வெளிப்படுத்தியுள்ளார்.

 

வீட்ல ரொமான்ஸ் செய்ய வராது… தனுஷ்

வீட்ல ரொமான்ஸ் செய்ய வராது… தனுஷ்

சினிமாவில் ரொமான்ஸ் நாயகன் என்று பெயரெடுத்த தனுஷ் தனக்கு வீட்டில் ரொமான்ஸ் செய்ய வராது என்றும் என் மனைவி அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார் என்று கூறியுள்ளார்.

பாலிவுட் உலகில் ராஞ்சனா படம் மூலம் அறிமுகமாகியுள்ளார் நடிகர் தனுஷ். படம் பட்டையை கிளப்புறது. சோனம் கபூர் உடனான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது என்றும், ரொமான்ஸ் சூப்பர் என்றும் பரவலான பேச்சு உள்ளது.

ராஞ்சனா மட்டுமல்லாது, தனுஷ் மனைவி இயக்கிய 3 படத்திலும் நாயகி ஸ்ருதியுடன் அதிகம் நெருக்கம் காட்டி நடித்திருந்தார் தனுஷ். சினிமாவில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது பற்றியும், வீட்டில் சொந்த வாழ்க்கையில் நடந்து கொள்வது பற்றியும் மும்பை நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார் தனுஷ்.

அப்போது, வீட்டில் தன்னால் ஒரு நல்ல கணவனாக நடந்து கொள்ள முடிவதில்லை என்று கூறியிருந்தார். என்னுடைய குழந்தைகளுக்கு நான் ஒரு நல்ல அப்பாவாக நடந்து கொள்கிறேன். ஆனால் என் மனைவி ஐஸ்வர்யாதான் பாவம் எப்படியோ என்னை பொறுத்துக் கொள்கிறார் என்று கூறியுள்ளார். அவருடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. என்ன செய்வது என்னுடைய வேலை அப்படி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

சினிமாவில் ரொமான்ஸ் காட்சிகளில் நன்றாக நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் இடம் பிடித்த தனுஷ் பாவம் சொந்த வாழ்க்கையில் ரொமான்ஸ் செய்ய நேரம் இல்லாமல் தவிப்பதைத்தான் இப்படி வெளிப்படுத்தியுள்ளார்.

 

சில்க் மாதிரி கவர்ச்சியில் கலக்கப் போகிறேன்: பிந்து மாதவி

சென்னை: நடிகை பிந்து மாதவி இனி சில்க் ஸ்மிதா போன்ற கவர்ச்சியாக நடிக்கப் போகிறாராம்.

தமிழ் சினிமாவை தனது கவர்ச்சியால் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் சில்க் ஸ்மிதா. அவர் ரஜினிகாந்த், கமல், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தார். இந்நிலையில் சில்க் ஒரு நாள் திடீர் என்று இறந்துவிட்டார். அவரது சாவு கொலையா, தற்கொலையா என்ற சந்தேகம் எழுந்தது.

சில்க் மாதிரி கவர்ச்சியில் கலக்கப் போகிறேன்: பிந்து மாதவி

றுதியில் அது தற்கொலை தான் என்று தீர்மானிக்கப்பட்டது. அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தி, தமிழ், மலையாளத்தில் படங்கள் வந்தன. அந்த படத்தில் சில்கின் சாயலில் இருக்கும் பிந்து மாதவி நடிக்க விருப்பம் தெரிவித்தபோதிலும் அவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. அதனால் அவருக்கு ஒரே வருத்தமாம்.

இந்நிலையில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களுக்கு டாட்டா காட்டிவிட்டு சில்க் ஸ்மிதாவைப் போன்று கவர்ச்சியில் கலக்கப் போகிறாராம் பிந்து.