உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதி திரட்ட டான்ஸ் ஆடும் ஐஸ்வர்யா ராய்

மும்பை: உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் நடனமாட இருக்கிறார்.

உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர், நடிகைகள் நடனமாட இருக்கின்றனர். குழந்தை பெற்ற பிறகு நடிப்பு, டான்ஸ் ஆகியவற்றில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து 7 மணிநேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடுகிறார்.

உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதி திரட்ட டான்ஸ் ஆடும் ஐஸ்வர்யா ராய்

நல்ல காரணத்திற்காக நடக்கும் இந்த நிகழ்ச்சி வரும் 15ம் தேதி நடக்கிறது. டிவி சேனல் ஒன்று நடத்தும் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பணம் உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும்.

நல்ல காரியத்திற்காகத் தானே நடனமாடக் கேட்கிறார்கள், ஆடு என்று அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாவிடம் தெரிவித்தாராம்.

 

நாளை வெளியாகுமா தலைவா... தீராத குழப்பத்தில் தியேட்டர்கள்!

தலைவா ரிலீஸ் எப்போ... தீராத குழப்பத்தில் தியேட்டர்களும் ரசிகர்களும்!  

சென்னை: தலைவா படம் தமிழகத்தில் நாளை திட்டமிட்டபடி வெளியாகாத சூழல். ஆனால் எப்படியாவது விடிவதற்குள் பிரச்சினை தீர்ந்துவிடாதா என்ற யோசனை மற்றும் ுழப்பத்தில் உள்ளன பல திரையரங்குகளும் ரசிகர்களும்.

முன்னணி திரையரங்குகளான சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ் போன்றவை Coming Soon என்ற பகுதியில் வைக்கப்பட்டிருந்த தலைவா பட ஸ்லைடுகளையும் அகற்றிவிட்டன.

தலைவா படம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை மற்றும் உலகம் முழுவதிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படும் என்று சந்திர பிரகாஷ் ஜெயின் கூறினார்.

புதன்கிழமை காலை தியேட்டர்களில் முன்பதிவு துவங்க இருந்த நிலையில்தான் திடீரென்று தலைவா படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் மாணவர் புரட்சிப்படை என்ற பெயரில் தியேட்டர்களுக்கு வந்த மர்ம கடிதத்தில் தலைவா படத்தை திரையிட்டால் உங்கள் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தத. போன் மூலமும் மிரட்டல்கள் வந்தன.

இதையடுத்து டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டது. இப்பிரச்சினை குறித்து விவாதிக்க தியேட்டர் அதிபர்கள் சங்கம் கூட்டம் நேற்று மாலை பிலிம்சேம்பரில் நடந்தது. சங்க தரைவர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார். இதில் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.

நள்ளிரவு வரை கூட்டம் காரசாராக நடந்தது. தலைவா படத்துக்கு மற தணிக்கைக் குழு யு சான்றிதழ் அளித்துள்ளது. வரி விலக்கு குழுவினருக்கு படத்தை திரையிட்டு காட்டி வரி விலக்கு பெற்று தர வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டது. அதன்படி இன்று போர்பிரேம்ஸ் திரையரங்கில் அரசு அதிகாரிகளும் வரிவிலக்கு பரிந்துரைக் குழுவினரும் படம் பார்த்தனர்.

வரி விலக்குச் சான்றிதழ் நகல் அளிக்கப்பட்டால் மட்டுமே படத்தைத் திரையிட முடியும் என தியேட்டர் உரிமையாளர்கள் உறுதியாக உள்ளனர். இன்று இரவுக்குள் எப்படியும் வரி விலக்கு சான்றிதழ் கிடைத்துவிடும் என தயாரிப்பாளர் தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விஜய்யையும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரையும் சந்திக்க மறுத்து முதல்வர் திருப்பியனுப்பிய செய்தி திரையரங்க உரிமையாளர்களை எந்த முடிவுக்கும் வரவிடாமல் செய்துவிட்டது.

இந்தப் படத்தின் பிரச்சினைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உணர்த்தவே முதல்வர் ஜெயலலிதா அவர்களைச் சந்திக்க மறுத்துள்ளார். மற்றபடி நாளை படம் வெளியாவது உறுதி என தலைவா குழுவினர் தரப்பில் கூறி வந்தனர்.

ஆனால் வியாழன் இரவு வரை படம் வருமா வராதா என விஜய், தயாரிப்பாளர், எஸ்ஏசி தரப்பிலிருந்து எந்த தகவலும் கிடைக்கப் பெறாததால், நாளை தலைவா ஷோ இருக்கமா என்ற குழப்பத்தில் ரசிகர்களும், எப்போது ரிலீஸ் என்ற குழப்பத்தில் தியேட்டர்களும் உள்ளன.

 

நாளைய, வருங்கால, எதிர்கால.... மூச்!- விஜய் ரசிகர் மன்றம் ரசிகர்களுக்கு அறிவுரை

சென்னை: தலைவா படம் வெளியாகும் போது ரசிகர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும், எந்த மாதிரி வாசகங்களைத் தவிர்க்க வேண்டும், எந்தெந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அகில இந்திய இளையதளபதி விஜய் தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் விஜய்யை நாளைய, வருங்கால, எதிர்கால... போன்ற அரசியலைக் குறிப்பிடும் வார்த்தைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாளைய, வருங்கால, எதிர்கால.... மூச்!- விஜய் ரசிகர் மன்றம் ரசிகர்களுக்கு அறிவுரை

அப்படியே குறிப்பிட்டு பேனர்களை வைத்திருந்தால் அதை அகற்றும் உரிமை உங்களுக்கு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சட்டமன்றம், பாராளுமன்றம், அரசியல் தலைவர்களின் படங்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளனர். என்னென்ன வார்த்தைகளைப் பயன்படுத்தி விஜய்யைப் புகழ்ந்து போஸ்டர், பேனர் அடிக்க வேண்டும் என்ற இன்ஸ்ட்ரக்ஷனும் அதில் இடம்பெற்றுள்ளது.

விஜய் ரசிகர் நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம் இது!

நாளைய, வருங்கால, எதிர்கால.... மூச்!- விஜய் ரசிகர் மன்றம் ரசிகர்களுக்கு அறிவுரை
 

கனடாவில் இன்று தலைவா..

டொரன்டோ: விஜய் நடித்த தலைவா படம் கனடாவில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகிறது. துபாய் உள்ளிட்ட நாடுகளில் இன்னும் சில மணி நேரங்களில் படம் வெளியாகவிருக்கிறது.

விஜய் நடித்துள்ள புதிய படம் தலைவா ரம்ஜான் ஸ்பெஷலாக நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர மாநிலங்களில் படம் வெளியாவது குறித்து இன்னும் உறுதியான அறிவிப்பு வரவில்லை.

ஆனால் வெளிநாடுகளுக்கு நேற்றே தலைவா படத்தின் ஹார்ட் டிஸ்க்குகள் அனுப்பப்பட்டுவிட்டன. இன்று இந்தப் படத்தின் முதல் காட்சி கனடாவில் திரையிடப்படுகிறது.

கனடாவில் இன்று தலைவா..

பகல் 2.30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.

துபாய் உள்ளிட்ட நாடுகளில் இன்னும் சில மணி நேரங்களில் படம் திரையிடப்படுகிறது.

தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் படம் நாளை வெளியாவது குறித்து இன்று மாலைக்குள் உறுதிப்படுத்தப்படும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

‘ஜாக்பாட்’காக பரத்க்கு ஹிந்தி டியூஷன் எடுத்த தனுஷ்

‘ஜாக்பாட்’காக பரத்க்கு ஹிந்தி டியூஷன் எடுத்த தனுஷ்

மும்பை: பரத் தற்போது ஷிந்தி படமான ஜாக்பாட்டில் நடித்து வருகிறார். அவருடன் படத்தில் நஸ்ருதீன் ஷா, சச்சின் ஜோஷி மற்றும் சன்னி லியோன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்கள் நால்வரைப் பற்றி மட்டுமே, சுற்றி வரும் கதையோட்டமாம். ஒருவரை ஒருவர் எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொள்கின்றனர் என்பது படத்தின் கதைக் கருவாம்.

ஹிந்தியில் பரத்துக்கு இது முதல்படம். 555ல் பரத்தின் டெடெகேஷனைப் பார்த்து வலிய வந்து அமைந்த் அதிர்ஷ்டம் தான் இந்த ஜாக்பாட். சமீபத்தில் தனுஷின் முதல் ஹிந்தி படமான ராஞ்ச்னா வெற்றியையும், வசூலையும் வாரிக் குவித்துக் கொண்டிருக்கையில், அடுத்த தமிழ் ஹீரோ பரத்தின் எண்ட்ரி.

ஹிந்தியில் தான் கற்ற அனுபவத்தை எல்லாம், பரத்திரம் பகிர்ந்து கொண்டாராம் தனுஷ். ஹிந்தி பேசுவது பற்றி சில டிப்ஸ்களையும் வழங்கியுள்ளாராம். அத்தோடு, எந்த ஒரு காட்சியிலும் நடிப்பதற்கு முன்னர், வசனங்களைத் தெளிவாக படித்து விடும்படி அறிவுரை கூறினார் தனுஷ் எனத் தெரிவித்துள்ளார் பரத்.


 

கே.பி.சி.யில் வக்கீல்களை அசிங்கப்படுத்துறாங்க யுவர் ஆனர்: அமிதாப் பச்சனுக்கு நோட்டீஸ்

கே.பி.சி.யில் வக்கீல்களை அசிங்கப்படுத்துறாங்க யுவர் ஆனர்: அமிதாப் பச்சனுக்கு நோட்டீஸ்

அகமதாபாத்: கௌன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் வழக்கறிஞர்களை அவமதித்தாக தொடரப்பட்ட வழக்கில் அகமதாபாத் நீதிமன்றம் அமிதாப் பச்சனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கௌன் பனேகா க்ரோர்பதி அதாவது கோடீஸ்வரன் நிகழ்ச்சியின் 7வது சீசனை நடத்தி வருகின்றார். டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் விளம்பரத்தில் வழக்கறிஞர்களையும், அவர்களின் தொழிலையும் இழிவுபடுத்தியுள்ளனர் என்று கூறி வழக்கறிஞர் தாவிந்தர் சிங் ராக்கட் என்பவர் அகமதாபாத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் எஸ்.வி. பாரேக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் நிகழ்ச்சியை நடத்தும் அமித்பா பச்சன், தயாரிப்பாளர் சித்தார்த் பாசு மற்றும் 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

அமிதாப் நிகழ்ச்சியின் விளம்பரத்தில் வரும் ஒரு காட்சியில் வழக்கறிஞர் ஒருவர் இதை நான் எதிர்க்கிறேன் என்று கத்திக் கொண்டு மேஜையில் தட்டுகிறார், அதற்கு மற்றொரு வழக்கறிஞர் அவரிடம் முதலில் நீதிமன்ற நடவடிக்கைகள் துவங்கட்டும் என்கிறார் என்று ராக்கட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

தலைவா படத்தை தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் பார்க்கிறார்கள்!

தலைவா படத்தை தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் பார்க்கிறார்கள்!  

சென்னை: தமிழக அரசு சார்பில் இன்று தலைவா படத்தை அதிகாரிகள் பார்க்கிறார்கள். சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்குரிய காட்சிகள் இருந்தால் நீக்கும் வகையில் இந்த சிறப்புக் காட்சி அவர்களுக்கு காட்டப்படுகிறது.

விஜய் நடித்துள்ள தலைவா திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தை வெளியிடும் தியேட்டர்களுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்ததாலும், பாதுகாப்பு தரமுடியாது என போலீசார் சொன்னதாலும் இந்தப் படத்தைத் திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். நேற்று முதல் முன்பதிவும் நிறுத்தப்பட்டுவிட்டது.

இதனால் படம் வெளியாவது குறித்து குழப்பமான சூழல் நிலவியது.

இந்நிலையில் படத்தை தமிழக அரசின் உள்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்குத் திரையிட்டுக் காட்ட தயாரிப்பாளர் முன்வந்தார். இன்று பிற்பகல் நுங்கம்பாக்கத்தில் உள்ள போர்பிரேம்ஸ் திரையரங்கில் இந்தக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வரிவிலக்குப் பரிந்துரைப்புக் குழுவில் உள்ள இயக்குர் ஆர்வி உதயகுமார், பாடகி எல் ஆர் ஈஸ்வரி ஆகியோரும் அதிகாரிகளுடன் படம் பார்க்க வந்தனர். உளவுத் துறையைச் சேர்ந்த சிலரும் அரங்குக்கு வந்திருந்தனர்.

படம் முடிந்த பிறகு இந்தக் குழு பரிந்துரைக்கும் காட்சிகள், வசனங்களை நீக்க தயாரிப்பாளர் முன்வந்துள்ளார். அரசின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கவும் தயாராக இருப்பதால், படத்துக்கான முட்டுக்கட்டை விலகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

ஷாரூக் வீட்டுல குடியிருக்க ஆசையா... அப்ப, ரூ 3லட்சம் கொடுங்க

மும்பை: ஷாரூக் தான் முதன் முதலில் குடியிருந்த வீட்டை வாடகைக்கு விட தீர்மானித்துள்ளாராம். வாடகை வெறும் ரூ3லட்சம் தானாம்.

ஆரம்பகாலத்த்ல் 3 படுக்கை அறைகள் கொண்ட வீட்டில் வசித்து வந்தார் ஷாரூக். இது மும்பை கார்டர் சாலையில் அமைந்துள்ளது.

ஷாரூக் தான் நடித்துப் பெற்ற சம்பாத்தியத்தில் வாங்கிய முதல் சொத்து இந்த வீடு தானாம். அதனால் அதனை விற்க மனதில்லாமல் மாத வாடகைக்கு விட தீர்மானித்துள்ளார் அவர். மாத வாடகையாக ரூ3 லட்சம் நிர்ணயித்துள்ளாராம். அட்வான்ஸ் ரூ 15 லட்சம்.

ஷாரூக் வீட்டுல குடியிருக்க ஆசையா... அப்ப, ரூ 3லட்சம் கொடுங்க

கடலைப்பார்த்த வண்ணம் ஸ்ரீ அம்ரித் அபார்ட்மெண்டில் ஏழாவது மாடியில் உள்ளது இந்த வீடு. ரூ3 லட்சத்திற்கு இதை விட பெரிய வீடே வாடகைக்கு கிடைக்கும் என்ற போதும், இது ஷாரூக் வீடு என்பது தான் ஸ்பெஷல் என்கிறார்கள் மும்பை வீட்டுத் தரகர்கள்.

மேலும் இந்த் வீட்டில் இருந்து தான் ஷாரூக் மிக உயர்ந்த அந்தஸ்திற்குப் போனாராம். அதனால் இது மிகவும் அதிர்ஷடமான வீடு என்றும் சொல்கிறார்கள் இவர்கள்.

 

கொஞ்சம் ஓவரா கேட்டுட்டேனோ: புலம்பித் தள்ளும் இளம் ஹீரோ

சென்னை: இளம் ஹீரோ ஒருவர் தன்னை தேடி வந்த வாய்ப்பை ஓவராக சம்பளம் கேட்டு நழுவவிட்டதை நினைத்து புலம்புகிறாராம்.

சின்னத் திரையில் இருந்து வந்து தற்போது பெரியதிரையில் கொடிகட்டிப் பறக்கும் ஹீரோ தனது சம்பளத்தை கோடிகளில் கேட்கிறாராம். அவருக்கு ரசிகர் கூட்டம் உள்ளது என்று நினைக்கும் சில தயாரிப்பு நிறுவனங்கள் அவரை மீண்டும் மீண்டும் ஒப்பந்தம் செய்கின்றன.

இந்நிலையில் சிவப்பு ஜெயின்ட் மூவீஸ் அதிபர் அந்த நடிகரை தனது தயாரிப்பில் நடிக்க வைக்க அவருடன் பேசி அட்வான்ஸையும் கொடுத்துவிட்டாராம். ஆனால் அந்த நடிகர் அட்வான்ஸை வாங்கிய பிறகு யோசித்துப் பார்த்துவிட்டு சம்பளம் பத்தாது. மேலும் சில கோடிகளை அனுப்புங்கள் என்று கூலாக கூறினாராம்.

இதை கேட்ட ஜெயின்ட் அதிபர் கடுப்பாகி அப்படி ஒன்றும் கோடிகளை கொட்டிக் கொடுத்து இவரை வைத்து படமே தயாரிக்க வேண்டாம் என்று அந்த முயற்சியை நிறுத்தி வைத்துள்ளாராம்.

அடடா பெரிய நிறுவனத்தின் படம் போச்சே, ஒரு வேளை கொஞ்சம் ஓவரா கேட்டுவிட்டேனோ என்று புலம்புகிறாராம் அந்த ஹீரோ.

 

தலைவா படத்தில் துளி கூட அரசியல் இல்லை! - விஜய்

சென்னை: நான் நடித்துள்ள தலைவா படம் அரசியல் படமே அல்ல, என்று நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தலைவா படம் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளது. படம் வருமா வராதா என்ற சூழலில் ஒரு தன்னிலை விளக்கமாக விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தலைவா படத்தில் துளி கூட அரசியல் இல்லை! - விஜய்  

"தலைவா' படம் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்க கூடிய ஜனரஞ்சகமான படம். இந்த படத்தில் ‘காதல்' ஆக்ஷன், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல.

யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகள் பரப்பி வருகிறார்கள். யாரும் இதை நம்ப வேண்டாம். துளி கூட அரசியல் இல்லாத ஒரு சமூக படம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று விஜய் கூறியுள்ளார்.

இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் தலைவா அரசியல் படம் அல்ல என்று அறிவித்துள்ளனர்.

 

‘தலைவா’ படத்துக்கு தடை கேட்டு மேலும் ஒரு வழக்கு - தயாரிப்பாளர், இயக்குனருக்கு நோட்டீஸ்

சென்னை: ‘தலைவா' படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி, தயாரிப்பாளர், இயக்குனருக்கு சென்னை பெரு நகர உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்டம், சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் சென்னை பெரு நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

மும்பை தாராவியில் வசிக்கும் தமிழர்களின் மத்தியில் பிரபலமானவர் எஸ்.எஸ்.கே. என்று அழைக்கப்படும் எஸ்.எஸ்.கந்தசாமி சேட். அவர் சீதபற்பநல்லூர் கிராமத்தில் இருந்து சுதந்திரத்துக்கு முன்பதாகவே சிறு வயதில் தாராவிக்கு சென்றுவிட்டார்.

‘தலைவா’ படத்துக்கு தடை கேட்டு மேலும் ஒரு வழக்கு - தயாரிப்பாளர், இயக்குனருக்கு நோட்டீஸ்  

அங்கு அவர் தோல் பதனிடும் தொழிலை செய்து வந்தார். அதோடு அங்கிருந்த ஏழை- எளிய தமிழர்களுக்கு சமுதாய மற்றும் மத ரீதியான சேவைகளை செய்து வந்தார்.

எனவே தென் இந்திய ஆதிதிராவிட மாகஜன் சங் என்ற அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகளில் தலைமைப் பதவிகளை வகித்து வந்தார்.

எஸ்.எஸ்.கே.க்கு எஸ்.கே.ராமசாமி, எஸ்.கே.பன்னீர்செல்வம், எஸ்.கே.அழகர்சாமி ஆகிய 3 மகன்களும், மல்லிகா என்ற ஒரு மகளும் உண்டு. அவர்களில் பன்னீர்செல்வம் தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டார். அழகர்சாமி மர்மமான முறையில் இறந்தார்.

எஸ்.கே.ராமசாமி பல்வேறு சமுதாய சேவைகளைச் செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அங்குள்ள மக்களுக்காக கோவில்களை கட்டியுள்ளார். ஏழை மக்களுக்காக பள்ளிக்கூடம் கட்டியுள்ளார். மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார்.

தாராவியில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல, சொந்த ஊரான சீதபற்பநல்லூர் மக்களுக்கும் பல்வேறு நன்மைகளை எஸ்.கே.ராமசாமி செய்துள்ளார். 15.2.87 அன்று அவர் மரணமடைந்தார். அவர் செய்த சமுதாயத் தொண்டுகளுக்காக அவரை தாராவித் தலைவன் என்று மக்கள் அழைத்தனர்.

எஸ்.கே.ராமசாமியின் மகன்தான் நான். இந்த நிலையில் பத்திரிகை செய்தியை படித்தபோது, எனது தாத்தா மற்றும் தந்தையின் வாழ்க்கை வரலாறைத்தான் ‘தலைவா' என்ற படத்தில் கதையாக வைத்திருப்பதாக தெரிய வந்தது. அதில், எனது தாத்தாவின் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜும், எனது தந்தையின் கதாபாத்திரத்தில் நடிகர் விஜயும் நடித்துள்ளனர்.

எனது தாத்தா மற்றும் தந்தை அணியும் வெள்ளை உடைபோல, தலைவா படத்தில் இவர்களும் உடை அணிந்து நடித்துள்ளனர். ஆனால் தந்தை சத்யராஜை கொலை செய்தவர்களை மகன் விஜய் தேடி கண்டுபிடித்து கொலை செய்வதுபோல் தலைவா கதை அமைக்கப்பட்டுள்ளது. எனது தந்தை அப்படியெல்லாம் யாரையும் கொலை செய்யவில்லை.

எனது தாத்தாவும், தந்தையும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதுபோலவும், தாதா போலவும் ‘தலைவா' படத்தில் காட்டப்படுகிறது. இந்த படம் 9-ந் தேதி வெளியிடப்படுவதாகத் தெரிகிறது. ‘தலைவா' படம் வெளியே வந்தால் எனது குடும்பத்தினர் மீதான மரியாதை போய்விடும். எங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

எனவே இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், வெளியீட்டாளர் மதன், இயக்குனர் ஏ.எல்.விஜய் ஆகியோருக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நோட்டீஸ்

இந்த மனுவை சென்னை இரண்டாவது உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜே.மாவியா தீபிகா சுந்தரவதனம் ஆகியோர் விசாரித்தனர். இந்த மனுவுக்கு தயாரிப்பாளர், இயக்குனர், வெளியீட்டாளர் 14-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

ஜெயப்பிரகாஷுடன் ஒன்றாக வாழ்கிறேனா..? - நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: நடிகர் ஜெயப்பிரகாஷுடன் ஒன்றாக வாழ்வதாக கிளம்பியுள்ள செய்திகளை மறுத்துள்ளதோடு, இப்படி செய்தி பரப்பியவர்களுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

பொற்காலம் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும் இப்போது முன்னணி குணச்சித்திர நடிகருமான ஜெயப்பிரகாஷும், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

ஜெயப்பிரகாஷுடன் ஒன்றாக வாழ்கிறேனா..? - நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்திலும் ஜெயப்பிரகாஷ் நடித்தார். சென்னையில் ஒருநாள் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர்.

இருவரும் நடுத்தர வயதுக்காரர்கள். இருவருக்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டு, இப்போது ஒன்றாக வசிப்பதாக திடீரென செய்தி கிளம்பியது. ட்விட்டரிலும் இதுகுறித்து சிலர் எழுதியிருந்தனர்.

ஜெயப்பிரகாஷுடன் ஒன்றாக வாழ்கிறேனா..? - நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்

இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்துள்ள விளக்கத்தில், "ஜெயப் பிரகாசும் நானும் இணைந்து வாழ்வதாக அவதூறு பரப்பியுள்ளனர். இது எனக்கு மனவேதனை அளிக்கிறது. இந்த வயதில் எனக்கெதற்கு காதல்? எனக்கு கணவர் இருக்கிறார். காதல் வந்தால் அவர்மேல்தான் வரும். இந்த அவதூறை பரப்பியவர் யார் என்பது தெரியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தலைவா படத்தில் துளி கூட அரசியல் இல்லை! - விஜய்

சென்னை: நான் நடித்துள்ள தலைவா படம் அரசியல் படமே அல்ல, என்று நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தலைவா படம் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளது. படம் வருமா வராதா என்ற சூழலில் ஒரு தன்னிலை விளக்கமாக விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தலைவா படத்தில் துளி கூட அரசியல் இல்லை! - விஜய்  

"தலைவா' படம் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்க கூடிய ஜனரஞ்சகமான படம். இந்த படத்தில் ‘காதல்' ஆக்ஷன், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல.

யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகள் பரப்பி வருகிறார்கள். யாரும் இதை நம்ப வேண்டாம். துளி கூட அரசியல் இல்லாத ஒரு சமூக படம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று விஜய் கூறியுள்ளார்.

இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் தலைவா அரசியல் படம் அல்ல என்று அறிவித்துள்ளனர்.