பெங்களூரில் பாலியல் சிறுபான்மையினர் (திருநங்கை, கே, லெஸ்பியன்) திரைப்பட விழா!

பெங்களூர்: பாலியல் சிறுபான்மையினராகக் கருதப்படும் திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்களான கே, லெஸ்பியன் போன்றவர்களுக்கான படங்கள் திரையிடப்படும் திரைப்பட விழா வரும் மார்ச் மாதம் நடக்கிறது.

இந்த மாதிரியான திரைப்பட விழாக்கள் கடந்த 2003-ம் ஆண்டிலிருந்தே பெங்களூரில் நடக்கிறது.

இந்த பாலியல் சிறுபான்மை திரைப்பட விழாவைப் பொறுத்தவரை இது 6-வது ஆண்டாகும்.

இந்த விழாவில் திருநங்கைகளின் சமூக படைப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் படங்கள் திரையிடப்படும்.

இதுகுறித்து ஸ்வாபாவா அறக்கட்டளை, குட் அஸ் யூ வாக் (கே), பைரேட் டைக்ஸ் அமைப்புகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

பெங்களூரு வசந்த் நகரில் உள்ள அலையான்ஸ் பிராங்கைஸ் வளாகத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 2-ஆம் தேதி வரை 6-ஆவது பாலியல் சிறுபான்மையினருக்கான திரைப்பட விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் திருநங்கைகள் உள்ளிட்ட பாலியல் சிறுபான்மையினர் பங்கேற்று தங்களது சமூக படைப்புத் திறனை காட்சியிடுகின்றனர். இந்தத் திரைப்பட விழாவில் 25 நாடுகளைச் சேர்ந்த 130 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன," என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் பாலியல் சிறுபான்மையினர் (திருநங்கை, கே, லெஸ்பியன்) திரைப்பட விழா!

ஓரினச் சேர்க்கை, திருநங்கைகள் பற்றி சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட பல படங்கள் இங்கே திரையிடப்படுகின்றன.

ஓரினச் சேர்க்கை என்பது சட்டப்படி கிரிமினல் குற்றம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்காகவே இப்படி ஒரு திரைப்பட விழா நடப்பது குறிப்பிடத்தக்கது.

 

வல்லினம் - விமர்சனம்

Rating:
3.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: நகுல், மிருதுளா, சித்து, அம்ஜத், அதுல் குல்கர்னி, ஜெயப்ரகாஷ்

ஒளிப்பதிவு: கே எம் பாஸ்கரன்

இசை: எஸ் எஸ் தமன்

தயாரிப்பு: ஆஸ்கர் பிலிம்ஸ்

எழுத்து - இயக்கம்: அறிவழகன்

ஈரம் என்ற கச்சிதமான த்ரில்லர் படம் தந்த அறிவழகனின் இரண்டாவது படம் வல்லினம். முன்பு பேய்.. அமானுஷ்யம் என்று போனவர், இப்போது புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ள விளையாட்டுகளில் ஒன்றான கூடைப்பந்தாட்டப் பின்னணியில் ஒரு கதை சொல்லியிருக்கிறார்.

இந்த மாதிரி படங்களுக்கு பொதுவான ஒரு கட்டமைப்பு உண்டு. புறக்கணிக்கப்பட்ட விளையாட்டு.. அதை விளையாட ஆர்வத்துடன் களமிறங்கும் மாணவர்கள்.. மனம் வெதும்பி நிற்கும் ஒரு கோச்... அந்த விளையாட்டை ஒழிக்க நினைக்கும் மற்ற விளையாட்டு வீரர்கள் அல்லது வில்லன்கள்...க்ளைமாக்ஸில் கடைசி கட்டத்தில் வெற்றி..!

வல்லினம் - விமர்சனம்

சக் தே, சென்னை 28, வெண்ணிலா கபடிக் குழு என இதற்கு முன் வந்த கதைகள் எல்லாம் இந்த கட்டமைப்புக்குட்பட்டவைகளே. அப்படி ஒரு கதையைத்தான் வல்லினமாகச் சொல்லியிருக்கிறார் அறிவழகன்.

திருச்சி கல்லூரியில் படிக்கும் நகுல் ஒரு நல்ல கூடைப்பந்தாட்ட வீரர். ஆனால் ஒரு மேட்சின்போது எதிர்பாராதவிதமாக சக ஆட்டக்காரனான தன் நெருங்கிய நண்பனை இழக்கிறார். அன்றிலிருந்து கூடைப்பந்தாட்டம் விளையாடுவதையே கைவிடும் நகுல், சென்னையில் வேறு கல்லூரியில் சேர்கிறார். அங்கு கிரிக்கெட்டுக்குதான் முதலிடம். வேறு விளையாட்டை கண்டுகொள்ளவே மறுக்கிறார்கள்.

வல்லினம் - விமர்சனம்

ஒருநாள் கிரிக்கெட் விளையாடும் அணிக்கும் கூடைப்பந்தாட்ட அணிக்கும் முட்டிக் கொள்கிறது. கூடைப்பந்தாட்ட அணியிலிருக்கும் தன் நண்பனை கிரிக்கெட் அணி கேப்டன் தாக்கிவிட, சூழ்நிலை காரணமாக மீண்டும் கூடைப்பந்தை கையிலெடுக்கிறார் நகுல். கிரிக்கெட்டுக்குத் தரப்பட்ட முக்கியத்துவத்தைத் தாண்டி கூடைப்பந்தாட்டத்தில் தன் அணியை எப்படி ஜெயிக்கிறார் என்பது மீதிக் கதை.

இடையில் மிருதுளாவுடன் காதல், அந்தக் காதலுக்கு எதிர்ப்பு என்று வழக்கமான ஒரு எபிசோடும் உண்டு.

வல்லினம் - விமர்சனம்

காட்சிகளைப் பார்த்துப் பார்த்து கச்சிதமாக எடுப்பதில் காட்டிய அக்கறையை, விறுவிறுப்பான நகர்வில், வித்தியாசமான திரைக்கதையில் காட்டத் தவறியதுதான் இந்தப் படத்தின் மைனஸ். கூடைப் பந்தை நகுல் கையில் எடுக்கும்போதே க்ளைமாக்ஸ் இதுதான் என்பது தெரிந்துவிடுவதால், அடுத்து என்ன என்ற கேள்வியே எங்கும் எழவில்லை.

அதுவும் கூடப்பந்தாட்டப் போட்டியை எதிர்த்து அந்த வம்சியும் அவர் தொழிலதிபர் தந்தையும் அமைச்சரும் போடும் திட்டங்கள் ஜூஜுபி!

வல்லினம் - விமர்சனம்

ஒரு சாதாரண மாணவன்தான் கதையின் ஹீரோ. அவனை இயல்பாகவே காட்டியிருந்தால் படத்தில் இன்னும் சுவாரஸ்யம் இருந்திருக்கும். மாறாக படம் ஆரம்பித்த முக்கால் மணி நேரத்தில் அவரை சூப்பர் ஹீரோவாக இயக்குநர் காட்ட முயல்.. திரைக்கதையில் மசாலா ஓவர்டோசாகிவிடுகிறது.

ஆனால் ஒரு பொழுதுபோக்குப் படம் என்ற வகையில் ரொம்பவே டீசன்டான படம் வல்லினம். அதற்காக ஒரு முறை இந்தப் படத்தைப் பார்ப்பதில் தப்பில்லை.

வல்லினம் - விமர்சனம்

நகுலுக்கு இது இன்னொரு மறுபிரவேச வாய்ப்பு. நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கூடைப்பந்தாட்டக் காட்சிகளில், அசல் ஆட்டக்காரனாகவே மாறியிருக்கிறார்.

நாயகியாக மிருதுளா. பணக்காரக் களையும் குழந்தைத் தனமுமான முகம். நடிக்க பெரிய வாய்ப்பில்லை. ஒரு பாடல் காட்சியில் முடிந்தவரை அவரை எக்ஸ்போஸ் பண்ணப் பார்த்திருக்கிறது பாஸ்கரனின் கேமிரா!

கோச்சாக வரும் அதுல் குல்கர்னி, கிரிக்கெட் கேப்டன் வம்சியாக வரும் சித்து, தொழிலதிபராக வரும் ஜெயப்பிரகாஷ், கல்லூரி நண்பர்களாக வரும் இளைஞர்கள் அனைவருமே கச்சிதமாக.. இயல்பாக நடித்துள்ளனர்.

வல்லினம் - விமர்சனம்

படத்தின் முக்கிய பலம் பாஸ்கரனின் ஒளிப்பதிவு. கூடைப்பந்தாட்ட காட்சிகள், அதற்கான ஸ்பான்சர்ஷிப் ஏற்பாடுகளை மிகத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

தமனின் பின்னணி இசை பரவாயில்லை. பாடல்கள் எதுவும் நினைவில் பதியவவில்லை.

முதல் வெற்றியைத் தந்த எல்லா இயக்குநர்களுக்கும் வரும் அதீத எச்சரிக்கையே கூட, அடுத்த படத்தின் திரைக்கதையில் சின்ன தளர்வை ஏற்படுத்திவிடும். அதற்கு அறிவழகனின் இந்த வல்லினம் ஒரு உதாரணம்.

ஆனால் ஒரு விளையாட்டில் வெற்றி பெற ஸ்பான்சர்கள், பணம் மட்டுமே முக்கியமல்ல, முழு மனசோடு இறங்கி போராடும் மனசுதான் முக்கியம் என்பதை அழுத்தமாக உணர்த்த இந்தப் படம் தவறவில்லை. அதற்காகவே ஒரு முறை படம் பார்த்து அறிவழகனை உற்சாகப்படுத்தலாம்!

 

டாப்சி கன்னத்தில் பொது இடத்தில் பச்சக் பச்சக் வைத்த ஹீரோ!

மும்பை: பிரபல நடிகை டாப்சிக்கு பொது இடத்தில் வைத்து கன்னத்தில் முத்தமிட்டு அதிர வைத்தார் ஒரு ஹீரோ.

சம்பவம் நடந்த இடம் மும்பை. தான் நடித்த ஒரு இந்திப் பட புரமோஷனுக்காக டாப்சி வந்திருந்தபோது இந்த கிஸ் கிஸ் சமாச்சாரம் நடந்துவிட்டது.

டாப்சி கன்னத்தில் பொது இடத்தில் பச்சக் பச்சக் வைத்த ஹீரோ!

பாலிவுட் பிரவேசம்

தமிழில் போதிய வாய்ப்புக் கிடைக்காததால் இந்திப் பிரவேசம் செய்துள்ள டாப்சி, இப்போது தனது இரண்டாவது இந்திப் படத்தில் நடித்து வருகிறார். படத்துக்குப் பெயர் ரன்னிங் ஷாதி டாட் காம். இது ஒரு ரொமான்டிக் காமெடி படம்.

விளம்பர நிகழ்ச்சி

இந்தப் படத்துக்கான புரமோஷனல் நிகழ்ச்சி மும்பையில் சமீபத்தில் நடந்தது. இதில் டாப்சியும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் அமிச் சத்தும் கலந்து கொண்டனர். படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். ரசிகர்களும் வந்திருந்தார்கள்.

டாப்சி கன்னத்தில் பச்சக் பச்சக்

அப்போது யாரும் எதிர் பார்க்காத வகையில் அமித் சத் டாப்சி இருந்த இடத்துக்கு சென்று அவர் முகத்தை தன் முகத்தோடு இணைத்து திடீரென பச்சக் பச்சக்கென முத்தமிட்டார்.

சமாளித்த டாப்சி

இதை டாப்சி எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் பெரிதாக பதட்டப்படவில்லை. ஹீரோவாச்சே.. அதனால் சமாளித்தார். ஆனால் வந்திருந்த படக்குழுவினர் பரபரப்பாகிவிட்டனர்.

இதுவும் புரமோஷன்தானோ?

கிஸ்ஸடித்த ஹீரோவா ஒரு நமுட்டுச் சிரிப்போடு படக்குழுவினருடன் பேசிக் கொண்டிருந்தார். இதுவும் முன்கூட்டியே திட்டமிட்ட விளம்பரமோ!

 

ஃபேஸ்புக்கில் ஷாருக் கானை தோற்கடித்த சல்மான் கான்

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஃபேஸ்புக்கில் 14 மில்லியன் ஃபேன்ஸ் உள்ளனர்.

நடிகர் சல்மான் கான் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கணக்குகள் வைத்துள்ளார். இந்த இரு கணக்குகள் மூலமாகவும் அவர் தனது படம் குறித்த தகவல்கள், நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார்.

மேலும் தனது ரசிகர்களுடன் உரையாடுகிறார். இந்நிலையில் சல்மான் கானின் ஃபேஸ்புக் ஃபேன்ஸ்களின் எண்ணிக்கை 14 மில்லியனைத் தாண்டியுள்ளது. இது ஷாருக்கானுக்கு உள்ள ஃபேஸ்புக் ஃபேன்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம். அதாவது ஷாருக்கானுக்கு ஃபேஸ்புக்கில் 7 மில்லியன் ஃபேன்ஸ் தான் உள்ளனர்.

சல்மான் கானை ட்விட்டரில் 6.3 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சென்னைக்கு உடனே தேவை, சிவப்பு விளக்குப் பகுதி - ஒரு இயக்குநரின் வேண்டுகோள்

சென்னை நகரில் கண்டிப்பாக சிவப்பு விளக்குப் பகுதி அமைக்கப்பட வேண்டும் என்று ஒரு புது இயக்குநர் அடம்பிடிக்கிறார்.

அவர் பெயர் யுரேகா. இயக்கும் படம்: சிவப்பு எனக்குப் பிடிக்கும்! ஏற்கெனவே மதுரை சம்பவம் என்ற படத்தை எடுத்தவர்.

ஜே சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த சிவப்பு எனக்குப் பிடிக்கும் படம் முழுக்க முழுக்க சிவப்பு விளக்கு சமாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாம்.

சென்னைக்கு உடனே தேவை, சிவப்பு விளக்குப் பகுதி - ஒரு இயக்குநரின் வேண்டுகோள்

ஆபாச படமா?

படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படம் குறித்துப் பேசிய இயக்குநர் யுரேகா, "பாலியல் தொழிலாளி பற்றிய கதை என்றதும் ஏதோ ஆபாசப் படம் என்று எண்ண வேண்டாம். ஆனால் இது ஆபாசப் படமல்ல, அந்த மாதிரி சமாச்சாரமெல்ல்லாம் இல்லை. இந்தப் படத்துக்காக இரண்டு ஆண்டுகள் கள ஆய்வு செய்தேன். பல பாலியல் தொழிலாளிகளைச் சந்தித்தேன்.

போலீஸ் - ரவுடி தொலலை

அதில் அவர்கள் சொல்லும் முக்கியமான பிரச்சனை போலீஸ்காரர்கள் மற்றும் ரவுடிகளின் தொல்லைதான்.

ஒரு பாலியல் தொழிலாளி ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பாதித்தால் அவள் வீட்டுக்கு வெறும் 100 ரூபாயைத்தான் கொண்டு போகிறாள். மீதி பணத்தை போலீஸ் அதிகாரிகளும், ரவுடிகளும் பிடுங்கிக் கொள்கிறார்களாம்.

இனி பாலியல் போராளி

இதையெல்லாம் தவிர்க்க, பேசாமல் சென்னையில் சிவப்பு விளக்குப் பகுதி ஒன்றை ஆரம்பித்துவிடலாம். சென்னையில் பல குற்றங்களைக் குறைக்க இது உதவும். இந்தப்படம் வந்தபிறகு பாலியல் தொழிலாளி என்கிற பெயர் பாலியல் போராளி என்று மாறும்," என்றார் உணர்ச்சி வசப்பட்டு.

ஈசிஆர்ல வச்சிடுங்க

சென்னையில் இந்த மாதிரி பகுதிக்கு ஏற்ற இடம் எது என்று கேட்டால், சற்றும் யோசிக்காமல் 'கிழக்கு கடற்கரை சாலை', என்கிறார் யுரேகா!!

 

பல நடிகைகளும் மறுத்த பாலியல் தொழிலாளி வேடத்தில் சான்ட்ரா!

பல நடிகைகளும் நடிக்க மறுத்த பாலியல் தொழிலாளி வேடத்தை தைரியமாக ஏற்று நடித்துள்ளார் டிவி நடிகை சான்ட்ரா எமி.

மனைவி உள்பட பல சன் டிவி சீரியல்களில் நடித்திருப்பவர் பிரஜின். இவர் மனைவிதான் சான்ட்ரா. இவரும் பல சீரியல்களில் நடித்துள்ளார். சுற்றுலா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

சிவப்பு எனக்குப் பிடிக்கும் என்ற படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க பல நடிகைகளையும் கேட்டுப் பார்த்துள்ளார் இயக்குநர் யுரேகா.

பல நடிகைகளும் மறுத்த பாலியல் தொழிலாளி வேடத்தில் சான்ட்ரா!

ஆனால் பாத்திரத்தின் தன்மையைக் கேட்டபிறகு யாரும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. இந்த வேடத்தில் நடித்தால் நிச்சயம் தன்னைப் பற்றி அதேபோன்ற இமேஜ்தான் இருக்கும் எனும் அளவுக்கு அந்த கேரக்டர் இருந்ததாம்.

பல நடிகைகளும் மறுத்த பாலியல் தொழிலாளி வேடத்தில் சான்ட்ரா!

ஆனால் சான்ட்ரா அதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையாம். அந்த பாத்திரத்தில் நடிப்பதில் உறுதியாக இருந்தாராம். பல காட்சிகளில் துணிச்சலாக நடித்துள்ளாராம்.

ஒரு நடிகை என்ற சாயலே இல்லாத மாதிரி நடித்து அசத்தியுள்ளாராம் சான்ட்ரா.

 

ஐம்பது நாட்களைத் தொட்ட ஜில்லா, வீரம்... ஆனா...!

சென்னை: விஜய் நடித்த ஜில்லா மற்றும் வீரம் படங்கள் 50 நாட்களைத் தொட்டுவிட்டதாக விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தியேட்டர்கள் ஒன்றில்கூட இந்த இரண்டு படங்களுமே ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐம்பது நாட்களைத் தொட்ட ஜில்லா, வீரம்... ஆனா...!

விஜய் நடிக்க, ஆர் நேசன் இயக்கத்தில் ஆர் பி சவுத்ரி தயாரித்த ஜில்லா படம், கடந்த பொங்கலுக்கு வெளியானது.

அஜீத் நடிக்க, சிவா இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த வீரம் படமும் பொங்கலன்று வெளியானது.

ஆரம்பத்தில் இந்த இரு படங்களுக்குமே வசூல் குவிந்ததாக தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து தகவல் கிடைத்தன.

ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு, இந்த இரு படங்களிலிருந்துமே 'பைசா தேறவில்லை' என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரே அறிவிக்கும் அளவுக்குப் போய்விட்டது நிலைமை.

இந்த நிலையில் இரு படங்களும் 50 நாட்களைக் கடந்து ஓடுவதாக இன்றைய நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

சரி, விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அரங்குகள் எதிலாவது இந்தப் படங்கள் ஓடுகின்றனவா என்று விசாரித்தால்... அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம்.. இவர்கள் விளம்பரங்களில் போட்டுள்ள சத்யம், எஸ்கேப், அபிராமி, சங்கம், தேவி, மாயாஜால், ஐநாக்ஸ், பிவிஆர் என எந்த அரங்கிலுமே ஒரு காட்சி கூட இந்த இரு படங்களும் ஓடவில்லை!!

 

கபில் சிபல் எழுதி ரஹ்மான் இசையமைத்த ரானாக் ஆல்பம் - சல்மான்கான் வெளியிட்டார்!

மும்பை: ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில், மத்திய அமைச்சர் கபில் சிபல் எழுதிய பாடல்கள் இடம்பெற்ற ரானாக் என்ற புதிய இசை ஆல்பத்தை நடிகர் சல்மான்கான் மும்பையில் வெளியிட்டார்.

கபில் சிபல் எழுதி ரஹ்மான் இசையமைத்த ரானாக் ஆல்பம் - சல்மான்கான் வெளியிட்டார்!

கபில் சிபலின் கவிதைகளுக்கும் ரஹ்மானின் இசைக்குமான ஒரு இனிய உரையாடலாக அமைந்த இந்த ஆல்பத்தில், ரஹ்மானின் குரல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அவர்தான் இந்த ஆல்பத்தின் பாடல்களை ஒரு கதையாக ஆல்பம் முழுக்கச் சொல்லியிருக்கிறார்.

இந்த ஆல்பத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை பாரத் ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கரும், ஸ்ரேயா கோஷலும், ஜோனிதா காந்தியும் பாடியுள்ளனர். ஏ ஆர் ரஹ்மானும் பாடியுள்ளார்.

கபில் சிபல் எழுதி ரஹ்மான் இசையமைத்த ரானாக் ஆல்பம் - சல்மான்கான் வெளியிட்டார்!

இந்த ஆல்பத்தை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக நடந்தது. ஆல்பத்தை வெளியிடும் சோனி நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அமைச்சர் கபில் சிபல், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க, நடிகர் சல்மான் கான் ஆல்பத்தை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ஏஆர் ரஹ்மான், "எனது கற்பனைக்கும் இசைக்கும் ஏற்றமாதிரி ஒரு ஆல்பம் ரானாக். இது போன்ற ஒரு வாய்ப்புக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன். அமைச்சர் கபில் சிபலின் இந்த பாடல் வரிகளைக் கேட்டதும், அதற்கேற்ற இசை எனக்குள் உருவாக ஆரம்பித்துவிட்டது," என்றார்.

அமைச்சர் கபில் சிபல் பேசுகையில், "ரஹ்மான் என்றாலே உணர்ச்சி, இயல்பான அழகு, இறையுணர்வுதான் மனதில் தோன்றும். இசையோடு கலந்தவர் அவர். தான் செய்யும் அனைத்தும் கச்சிதமாக இருக்க வேண்டும் என எண்ணுபவர். அவரது மேதைமை என் வரிகளுக்கு உயிர் தந்துள்ளது," என்றார்.

வந்தே மாதரம் இசை ஆல்பம் தொடங்கி, தங்கள் நிறுவனத்துடனான ரஹ்மானின் தொடர்பை நினைவுபடுத்திப் பேசினார் சோனி இசை நிறுவனத்தின் ஸ்ரீதர் சுப்ரமணியம்.

 

இந்த காதல் முறிவுக்கு காரணம் நயனம்-விரல் நடிகரின் டீலா?

சென்னை: புஸு புஸு நடிகையும், விரல் வித்தை நடிகரும் பிரிந்து செல்ல ஒரு வேளை அந்த டீல் தான் காரணமாக இருக்குமோ என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.

விரல் வித்தை நடிகர் என்றைக்கு தனது முன்னாள் காதலியான நயன நடிகையுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க துவங்கினாரோ அன்றைக்கே அவருக்கும், புஸு புஸு நடிகைக்கும் இடையேயான காதலில் விரிசல் ஏற்பட்டது.

ஆனால் அவர் யாருடன் நடித்தாலும் அது தொழில் அதை எல்லாம் தான் பெரிதுபடுத்த மாட்டேன் என்று புஸு புஸு நடிகை தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனக்கும், புஸு புஸு நடிகைக்கும் இடையே காதலும் இல்லை ஒன்றும் இல்லை தான் சிங்கிள் தான் என்று நடிகர் அறிவித்தார்.

முன்னதாக அவருடன் நடிக்க நயனம் போட்ட கன்டிஷனே தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தானாம். அதற்கு நடிகரும் சம்மதம் தெரிவித்திருந்தாராம். இந்நிலையில் புஸு புஸு நடிகையுடனான காதல் முறிவுக்கு ஒரு வேளை நயனம் மற்றும் நடிகருக்கு இடையேயான திருணம டீல் தான் காரணமோ என்று பலர் கிசுகிசுக்கின்றனர்.