கணவருடன் மட்டுமே செக்ஸாம்: சொல்கிறார் சன்னி லியோன்


Sex Only With Hubby Sunny Leone   
மும்பை: நீங்க நம்பினால் நம்புங்க, இல்லாட்டி போங்க சன்னி லியோன் கணவருடன் மட்டுமே உடலுறவு வைத்துக் கொள்வாராம். இதை அவரே தெரிவித்துள்ளார்.

கனடாவில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர் சன்னி லியோன். அவரது இயற் பெயர் கரண்ஜித் கௌர் வோரா. நடித்ததோடு மட்டுமல்லாமல் ஆபாச படங்களை தயாரித்தும் வந்தார். ஆபாச படத்தில் நடிக்க இளவர் ஹாரி்ககு ரூ.55 கோடி தர முன்வந்த விவிட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தார். இந்நிலையில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் இந்தியாவில் பிரபலமான அவர் ஜிஸ்ம் 2 இந்தி படத்தில் நடித்த கதை உங்களுக்கே தெரியும்.

இந்நிலையில் அவர் பத்திரிக்கை ஒன்றுக்கு அளி்தத பேட்டியில் கூறியிருப்பதாவது,

பிக் பாஸ் ஷோ மூலம் எனது வாழ்க்கையே மாறிவிட்டது. அந்த ஷோவில் கலந்து கொள்வது என்பது தான் இதுவரை நான் எடுத்த முடிவுகளிலேயே சிறந்தது. நான் பாலிவுட் படத்தில் நடிப்பேன் என்று நினைத்ததே இல்லை. நான் எனது கணவர் டேனியல் வெப்பருடன் மட்டுமே உறவு வைத்துக் கொள்வேன். மற்ற யாருடனும் உறவு வைத்துக் கொள்வதில்லை. அது எல்லாம் படத்திற்காக ஷூட் செய்வது. அதனால் அது வித்தியாசமாகத் தெரியாது என்றார்.
 

உலகுக்கோர் 'நற்செய்தி'... சினிமாவில் நடிக்கிறார் பூனம் பாண்டே!

Hollywood Cinematographer Capture Poonam Pande
மும்பை: அப்பாடா... பூனம் பாண்டே பட்ட கஷ்டத்துக்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறந்து விட்டது... எஸ்... அவர் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறார். வழக்கம் போல கவர்ச்சியில் வெளுத்துக் கட்டப் போகிறார். அவரது கவர்ச்சியை 'தரோ'வாக படம் பிடிக்க ஹாலிவுட்டிலிருந்து ஒரு கேமராமேனை புக் செய்துள்ளனராம்.

குமார் மங்கத் இயக்கும் இப்படத்தில் பூனம் பாண்டேவின் மொத்த அழகையும் நிரப்பத் திட்டமிட்டுள்ளனராம். இதனால்தான் உள்ளூர் 'ஆட்டக்காரர்கள்' சரிவர மாட்டார்கள் என்பதால் ஹாலிவுட்டிலிருந்து 'வெளியூர் ஆட்டக்காரரான' கேமராமேன் ஜேம்ஸ் பவுல்ட்ஸை கூட்டி வருகின்றனராம்.

படம் முழுக்க இதுவரை பார்த்திராத பூனம் பாண்டேவைப் பார்க்கலாமாம். அப்படி ஒரு அழகு படத்தில் மிளிருமாம். ஈகிள் ஹோம் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

பவுல்ட்ஸ் ஹாலிவுட்டில் 30க்கும் மேற்பட்ட படங்களில் கேமராமேனாக இருந்திருக்கிறாராம். டார்க் ஹன்டர்ஸ், டூப்ளிசிட்டி, அப்சலூட் பவர் உள்ளிட்ட சில படங்களின் டைட்டில் காட்சிகளை படம் பிடித்திருக்கிறாராம்.

தற்போது இப்படம் தொடர்பான படப்பிடிப்புக்கு முந்தைய ஒர்க்ஷாப் நடந்து வருகிறதாம். அதில் பூனம் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறாராம். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். விறுவிறுப்பாக படத்தை எடுத்த முடிக்கத் திட்டமிட்டுள்ளனராம்.

டிவிட்டரில் ஏற்கனவே பிரளயத்தைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் பூனம். இந்த நிலையில் பெரிய திரையில் தனது பிரமாண்டக் கவர்ச்சியை கொட்டிக் கவிழ்க்கப் போகிறார்...

நாயகி பூனமே நீங்க நல்லவரா, கெட்டவரா....?!
 

ரசிகர்களை ராத்திரியில் வியர்க்க வைத்த கிம் கர்தஷியான்!

29 Kim To Bed
கிம் கர்தஷியானுக்கு இருந்தாலும் இத்தனை குரூர மனப்பான்மை இருக்கக் கூடாதுங்க. ராத்திரி தூங்கப் போகும்போது தனது ட்விட்டர் பக்கத்தில் படு ஹாட்டான படத்தைப் போட்டு விட்டு குட்நைட் சொல்லி விட்டுப் போய் விட்டார். அவர் பாட்டுக்குப் போய் விட்டார், ஆனால் ரசிகர்கள்தான் தூக்கத்தைத் தொலைத்து ஏங்கித் தொலைக்க வேண்டியதாகி விட்டது.

31 வயதானாலும் பக்கா இளமையுடன் கிக்காக திரிந்து கொண்டிருக்கிறார் கிம். அவரது ஏடாகூட செயல்களால் ரசிகர்களுக்கு ஏக சந்தோஷம்தான். இந்தநிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு விறுவிறுப்பான படத்தைப் போட்டுள்ளார் கிம்.

அன்டர்வெர் மற்றும் பிராவுடன் படு கிறக்கமாக தோன்றுகிறார் இந்தப் படத்தில் கிம். அவரது மார்பகம் கிட்டத்தட்ட முழுசாக தெரிகிறது. மேலும், அவரது கழுத்திலிருந்து மார்பு வரை அழகாக தொங்கிக் கொண்டிருக்கிறது 15.0 மில்லியன் டாலர் மதிப்பிலான அழகான நெக்லஸ்.

இந்தப் படத்தைப் போட்டு விட்டு நைட்டி நைட் என்றும் ஒரு கமெண்ட்டைப் போட்டு விட்டு ஓடியுள்ளார் கிம்.

அதேபோல பர் கோட் அணிந்து இன்னொரு படத்தையும் போட்டு வைத்துள்ளார் கிம். ஆனா அதை யாரும் ரசித்துப் பார்த்ததாக தெரியவில்லை...
 

துபாய் போகும் வழியில் எப் 1 வீரருடன் லண்டனில் 'ஹால்ட்' அடித்த ஹாலிவுட் நடிகை!


Nicole S 24 Hour Pit Stop With Lewis
லாஸ் ஏஞ்சலெஸ்: துபாயில் நடந்த படப்பிடிப்புக்காக லாஸ் ஏஞ்சலெஸிலிருந்து கிளம்பிய ஹாலிவுட் நடிகை நிக்கோல் ஷெர்சிங்கர், வழியில் லண்டனில் தரையிறங்கி தனது காதலரும், எப் 1 கார்ப் பந்தய வீரருமான லூயிஸ் ஹாமில்டனுடன் இரவைக் கழித்துள்ளார். அதன் பின்னர் காலையில் மறுபடியும் துபாய்க்குக் கிளம்பிச் சென்றுள்ளார்.

34 வயதாகும் நிக்கோல், துபாயில் தொடங்கவிருந்த டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள லாஸ் ஏஞ்செலஸிலிருந்து சனிக்கிழமை இரவு கிளம்பினார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை லண்டன் வந்து சேர்ந்த அவர் அங்கு இறங்கி லூயிஸ் ஹாமில்டனை சந்திக்க ஓடினார். இருவரும் இரவை ஒன்றாக களித்தனர். பின்னர் காலையில் குளித்து முடித்து, ஹாமில்டனுடன் சாப்பிட்டு விட்டு துபாய்க்குப் புறப்பட்டுப் போயுள்ளார். திங்கள்கிழமை துபாய் போய்ச் சேர்ந்து விட்டார் - அதாவது திட்டமிட்டபடி சரியாக போய் விட்டார்.

துபாய் போன பின்னரும் ஹாமில்டனை மறக்க முடியாமல் அவருக்குப் போன் செய்து ஒரு மணி நேரம் பேசித் தீர்த்தாராம்.

கடந்த மாதம்தான் ஹாமில்டன் குறித்து சன் பத்திரிக்கையில் ஒரு பலான் செய்தி போட்டிருந்தனர். அதாவது பத்து பெண்களுடன் ஒரே அறையில் கொட்டமடித்தார் ஹாமில்டன் என்பதுதான் அந்தச் செய்தி. இதனால் அப்செட் ஆகியிருந்தார் நிக்கோல். ஆனால் தற்போது இருவரும் மீண்டும் வழக்கம் போல நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளனராம்.
 

அக்டோபரில் சயீப் - கரீனா திருமணம் உறுதி! - ஷர்மிளா தகவல்

Saif Kareena Will Marry October

மும்பை: வரும் அக்டோபர் மாதம் சயீப் அலிகான் - கரீனா கபூர் திருமணம் கண்டிப்பாக நடக்கும் என சயீப்பின் தாயார் ஷர்மிளா தாகூர் தெரிவித்தார்.

கரீனா கபூரும், சயீப் அலிகானும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் அக்டோபர் 16-ந்தேதி திருமணம் நடக்கலாம் என தகவல் பரவியது. ஆனால் சயீப் அலிகான் இதனை மறுத்தார். தேதி இன்னும் முடிவாகவில்லை என்றார்.

தற்போது சயீப் அலிகானின் தாயாரும், முன்னாள் நடிகையுமான ஷர்மிளா தாகூர் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

அக்டோபர் மாதம் கரீனா கபூர் - சயீப்அலிகான் திருமணம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். ஆனால் தேதியை உறுதியாகக் கூறவில்லை. இதுபற்றிய தகவலை சயீப்பே அறிவிப்பார் என்றார் ஷர்மிளா.

இந்தத் திருமணம் டெல்லி அல்லது மும்பையில்தான் நடக்கும் என்றும், தங்களின் சொந்த ஊர் படோடியில் நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

சயீப் அலிகான் பட்டோடி சமஸ்தானத்தின் நவாபாக உள்ளார். பல ஆயிரம் கோடி சொத்துகளுக்கு அதிபதி. வக்பு வாரிய சொத்துக்களுக்கும் காப்பாளர் அவரே.

 

ஆயுர்வேத சாலை மசாஜ்... 'சௌந்தர்யா' படம் சொல்லும் மெஸேஜ்!

Soundarya Comes With Message   

ஆயிர்வேத சாலையில் மசாஜ் பார்லரில் வேலை பார்க்கும் பெண் ஒருவரைப் பற்றி ஒரு இளைஞன் சொல்லும் பொய் அவளை எப்படி சிதைத்துவிடுகிறது என்பதைச் சொல்கிறதாம் சௌந்தர்யா திரைப்படம்.

ஏ.பி‌.சி‌. ட்‌ரீ‌ம்‌ஸ்‌ எண்‌டர்‌டெ‌ய்‌னர்‌ஸ்‌ தயா‌ரி‌க்‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ கதை‌ எழுதி‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌து‌ உள்‌ளா‌ர்‌ சந்‌தி‌ரமோ‌ஹன்‌.

பு‌துமுகங்‌கள்‌ கோ‌வி‌ந்‌த்‌, கி‌ல்‌லர்‌ கா‌சி‌ம்‌, ரி‌த்‌தூ‌ஸன்‌, சா‌ரதி‌, சந்‌தோ‌ஷ்‌, வி‌னி‌த்‌ வி‌னு, சஞ்‌சுகொ‌ட்‌டே‌ரி‌ என்‌று பலர்‌ நடி‌க்‌க, இவர்‌களுடன்‌ மா‌றுபட்‌ட வே‌டத்‌தி‌ல்‌ எப்‌எம்‌எஸ்‌ நடரா‌ஜன்‌ நடி‌த்‌துள்‌ளா‌ர்‌.

ஆயு‌ர்‌வே‌த வை‌த்‌தி‌யசா‌லை‌யி‌ல்‌ மஜா‌ஜ்‌ வே‌லை‌ செ‌ய்‌யு‌ம்‌ அழகி‌ய இளம்‌ பெ‌ண்‌ செ‌ளந்‌தர்‌யா‌. அவள்‌ அழகி‌ல்‌ மயங்‌கும்‌ வி‌மல்‌, அவள்‌ தன்‌னி‌டம்‌ அப்‌படி‌ பழகுவா‌ள்‌ இப்‌படி‌ நடந்‌து கொ‌ண்‌டா‌ள்‌ என்‌று இல்‌லா‌த பொ‌ல்‌லா‌த செ‌ய்‌தி‌களை‌ நண்‌பர்‌களுடன்‌ பகி‌ர்‌ந்‌து கொ‌ள்‌ள, அந்‌த பொ‌ய்‌ செ‌ய்‌தி‌யை‌ நம்‌பு‌ம்‌ நா‌ன்‌கு இளை‌ஞர்‌கள்‌, செ‌ளந்‌தர்‌யா‌வி‌டம்‌ செ‌ன்‌று தங்‌களது ஆசை‌க்‌கும்‌ இணங்குமா‌று வலி‌யு‌றுத்துகி‌ன்‌றனர்‌. அதற்‌கு அவள்‌ சம்‌மதி‌க்‌ மறுக்‌கி‌றா‌ள்‌.

இதனா‌ல்‌ ஆத்‌தி‌ரம்‌ அடை‌யு‌ம்‌ அந்‌த நா‌ல்‌வரும்‌ அவளை‌ பா‌லி‌யல்‌ பலா‌த்‌கா‌ரம்‌ செ‌ய்‌கி‌ன்‌றனர்‌. அந்‌த வன்‌முறை‌ தா‌ங்‌காது செ‌ளந்‌தர்‌யா உயி‌ரை‌ இழக்‌கி‌றா‌ள்‌. பி‌றகு அவள்‌ ஆவி‌யா‌க வந்‌து அவர்‌களை‌ எப்‌படி‌ பழி ‌வா‌ங்‌குகி‌றா‌ள்‌ என்‌பதை‌ பு‌தி‌ய களத்‌தி‌ல்‌, பு‌தி‌ய கோ‌ணத்‌தி‌ல்‌, பு‌தி‌ய ஸ்‌டை‌லி‌ல்‌ படமா‌க்‌கி‌ உள்‌ளே‌ன்‌ என்‌கி‌றா‌ர்‌,‌ இயக்‌குநர்‌ சந்‌தி‌மோ‌ஹன்‌.

மே‌லும்‌ அவர் கூறுகை‌யி‌ல்‌, "இந்‌தப்‌ படத்‌துல ஒரு மெ‌சே‌ஜ் இருக்‌கு. சீ‌ரி‌யஸா‌ இருந்‌தா‌லும்‌ அதை‌ உணர்‌ற மா‌திரி‌ நகை‌ச்‌சுவை‌யோ‌டு சொ‌ல்‌லி‌ருக்‌கே‌ன்‌.ரெ‌ண்‌டரை‌ மணி‌ நே‌ரம்‌ போ‌வதே‌ தெ‌ரி‌யா‌மல்‌ கலகலப்‌பா‌க படம்‌ இருக்‌‌கும்‌..." என்‌றா‌ர்‌

தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ குருவண்‌ண பஷீ‌ர்‌ கூறுகை‌யி‌ல்‌, "யா‌ர்‌ தப்‌பு‌ செ‌ய்‌தா‌லும்‌, அவர்‌களுக்‌கு இந்‌த பூ‌மி‌யி‌லே‌யே‌ தண்‌டனை‌ கி‌டை‌ச்‌சி‌டும்‌ என்‌பதுதா‌ன்‌ இந்‌தப்‌ படத்‌தோ‌ட கருத்‌து. தீ‌ஙகு செ‌ய்‌யமா‌ல்‌ இருக்‌கவு‌ம்‌, தெ‌ரி‌ந்‌தோ‌, தெ‌ரி‌யா‌மலோ‌ செ‌ய்‌த தவற்‌றை‌ நி‌னை‌த்‌து சி‌லர்‌ தி‌ருத்‌தி‌க்‌க ஒரு வா‌ய்‌ப்‌பா‌கவு‌ம்‌ ஒரு உணர்‌வை‌ ஏற்‌படுத்‌தும்‌ படமா‌க இந்‌தப்‌ படம் இருக்‌கும்‌‌. செ‌ய்‌த தவறை‌ நி‌னை‌த்‌து ஒரு ஆள்‌ வருத்‌தப்‌பட்‌டா‌ல்‌ கூட எங்‌களுக்‌கு பெ‌ரி‌ய தி‌ருப்‌தி‌தா‌ன்‌..." என்‌றா‌ர்‌.

இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு அஜ்‌மல்‌ அஜீ‌ஸ்‌ என்‌பவர்‌ இசை‌யமை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. பா‌டல்‌களை‌ கவி‌குமரன்‌ எழுதி‌ உள்‌ளா‌ர்‌.

சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் இந்தப் படத்தின் இசை நேற்று வெளியிடப்பட்டது.

 

நீர்க்குமிழியும் ரீமேக் ஆகிறது - நாகேஷ் வேடத்தில் விவேக்!

Selva Remake Neerkumizhi With Vivek

பாலச்சந்தரின் க்ளாஸிக் படமான நீர்க்குமிழியும் ரீமேக் அலைக்குத் தப்பவில்லை. அந்தப் படத்தை பாலச்சந்தரின் சிஷ்யரான பழைய பட ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் செல்வா இயக்கப் போகிறார்.

நாகேஷ் வேடத்தில் விவேக் நடிக்கிறார்.

1965-ல் வெளிவந்து ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கிய படம் நீர்க்குமிழி. நடிப்பில் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியிருப்பார் நாகேஷ். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஆடியடங்கும வாழ்க்கையடா.. இன்றும் ரசிகர்களின் நெஞ்சில் ரீங்காரமிடுகிறது.

நாகேஷ் வேடத்தில் விவேக் நடிக்க, இதே பெயரில் அந்தப் படத்தை இயக்குகிறார் செல்வா. இவர் ஏற்கனவே பாலச்சந்தர் இயக்கி, ஜெமினி கணேசன் நடித்து வெளிவந்த ‘நான் அவனில்லை‘ படத்தை ரீமேக் செய்தவர்.

நீர்க்குமிழி ரீமேக் செல்வா கூறுகையில், "ரீமேக் என்பது தப்பான காரியமல்ல. நல்ல விஷயம். பழைய க்ளாஸிக் படங்களை உயிர்ப்புடன் வைக்க உதவும். அந்த வகையில்தான் நீர்க்குமிழி ரீமேக் இருக்கும். இந்தப் படத்தின் உரிமையைப் பெற்ற பிறகு முறையான அறிவிப்பு வரும். விவேக்தான் ஹீரோவாக நடிக்கிறார்,' என்றார்.

 

கற்பழித்த பெண்ணையே 4வது மனைவியாக்க முயல்கிறார்: நடிகரின் 3வது மனைவி புகார்

Actor Selvaraja Molested Girl Complaints Third Wife

சென்னை: கற்பழித்த பெண்ணையே நான்காவது மனைவியாக்க முயற்சிக்கிறார் என்று நடிகர் செல்வராஜாவின் 3வது மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் செல்வராஜா(55). அவர் என் உள்ளம் உன்னை தேடுதே என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்தார். அவரது மனைவி அன்னை ரீட்டா (24).

இந்நிலையில் ரீட்டா வடபழனி காவல் நிலையத்தி்ல் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், செல்வராஜா ஏற்கனவே தனக்கு 2 முறை திருமணமானதை மறைத்து என்னை மணந்தார். என்னை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து வந்தார். இந்நிலையில் 4வதாக ஒரு பெண்ணை மணக்கவிருக்கிறார். அவரிடம் எந்த பெண்ணும் சிக்கிவிடாமல் காப்பாற்றுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகார் குறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் ரீட்டாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

நான் எனது கணவர் செல்வராஜாவுக்கு உறவுப்பெண். எனது 16வது வயதில் நான் எனது கணவரிடம் அவரது கிளினிக்கில் வேலைக்கு சேர்ந்தேன். அவர் என்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டார். ஆனால் என்னை கைவிடாமல் வீட்டிலேயே தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார். அவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் இருக்கும் விவரம் அப்போது எனக்கு தெரியாது. பின்னர் அதுபற்றி தெரிந்தாலும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் காலப்போக்கில் அவர் எனது நடத்தையில் சந்தேகப்பட்டார். வெளியில் சென்றுவிட்டு வந்தவுடன், என்னை அடித்து உதைத்து துன்புறுத்துவார். நான் வெளியில் சென்றிருந்தபோது, யாருடன் படுத்தாய் என்று கேவலமாக பேசுவார். வீட்டில் பொருத்தி இருந்த ரகசிய கேமராவை பார்ப்பார். அவரது அடி-உதை சித்ரவதையை தாங்க முடியாமல் நான் தவித்தபடி இருந்தேன்.

இந்நிலையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணையும் கெடுத்து பாழாக்கிவிட்டார். அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் எனது கணவரை கைது கூட செய்தனர். இப்போது அதே மஞ்சுவை 4வது திருமணம் செய்ய எனது கணவர் முயற்சிக்கிறார். அதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் எனது கணவரிடம் இருந்து, என்னை விடுவிக்க வேண்டும். அவர் வழியில் அவர் போகட்டும், என்வழியில் அவர் குறுக்கே வராமல் எனக்கு உரிய பாதுகாப்பு உத்தரவாதம் பெற்றுத்தர வேண்டும் என்று அவர் அதில் தெரிவி்ததுள்ளார்.

நேற்று செல்வராஜாவையும், ரீட்டாவையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களை ஒன்றாக உட்கார வைத்து போலீசார் கவுன்சிலிங் கொடுத்தனர். ஆனால் ரீட்டா தனது கணவருடன் செல்ல மறுத்துவிட்டார். மேலும் செல்வராஜாவும் ரீட்டாவை விட்டுப் பிரிய சம்மதித்ததுடன் அவரது வாழ்க்கையில் இனி தலையிட மாட்டேன் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் பிரிந்து சென்றனர்.

முன்னதாக 4வது திருமணம் குறித்து செல்வராஜாவிடம் கேட்டதற்கு, தான் யாரையும் திருமணம் செய்ய முயற்சிக்கவில்லை என்றார்.

 

காமெடியாகத்தானே பேசினேன், மன்னிச்சிருங்க... பார்த்திபன்

Parthiban Apologies His Speech On Lord Shiva

சென்னை: நான் தில்லுமுல்லு படத் தொடக்க விழாவில் பேசியது பார்வையாளர்களை மகிழ்விக்கும் நோக்கத்தில்தான். நகைச்சுவையாகத்தான் பேசினேன். அது யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகர்-இயக்குநர் பார்த்திபன் கூறியுள்ளார்.

தில்லுமுல்லு பட நாயகி இஷா தல்வார் மட்டும் கிடைத்தால் சிவனே பார்வதியை தள்ளி வைத்து விட்டு டூயட் பாட வருவார் என்று பேசியிருந்தார் பார்த்திபன். இந்தப் பேச்சுக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. போராட்டத்தையும் அறிவித்திருந்தது.

இதையடுத்து மன்னிப்பு கேட்டு அறிக்கை விட்டுள்ளார் பார்த்திபன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில தினங்களுக்கு முன், தில்லுமுல்லு பட தொடக்க விழாவில் நான் பேசிய நகைச்சுவையான பேச்சு வெளியாகியிருந்தது.

அந்த பேச்சு பிரச்சினைக்குரியதாக ஆக்கப்பட்டு, முற்றுகை போராட்டம் என்று பூதாகரமாகி விட்டது. நான் திரைப்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சம்பந்தப்பட்டவர்களை வாழ்த்தவும், பார்வையாளர்களை மகிழ்விக்கவும் மட்டுமே. அதற்கு ஓட்டை காலணாவைக் கூட சன்மானமாக பெறுவதில்லை.

யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு துளியும் இல்லை. அதை பயன்படுத்தி யாரை திட்டும் திட்டமிடுதலும் இல்லை.

கடவுள் விருப்பு-மறுப்பு என்பது அவரவர் ஏற்பு. அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. ஆனால் ஒருவரின் நம்பிக்கை, அது விருப்போ-மறுப்போ அதை புண்படுத்த எவருக்கும் அதிகாரமில்லை.

சிவனே சிவனேன்னு இருக்க முடியாது என்று நான் நகைச்சுவையாகத்தான் பேசினேன். அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பின்னர் வருத்தப்பட்டேன். அந்த பேச்சின் மூலம் யார் மனம் புண்பட்டி ருந்தாலும், அவர்களுக்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மனம்தான் கோவில். அதில் உள்ள நல்லெண்ணங்களே தெய்வம். அதன் மீது கல்லெறிவது என்னைப் பொருத்தவரை அது தெய்வ குற்றம். நான் கடவுள் நம்பிக்கை மிகுந்தவன். அந்த கடவுள் காட்சிப்படுத்த முடியாதது. எந்த கட்சிக்குள்ளும் கட்டுப்படுத்த முடியாதது.

ஆண்பால்-பெண்பால், உருவம்-அருவம் என்று எதற்குள்ளும் கட்டுப்படாத மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு அண்டம். விவரிப்பிற்கு அப்பாற்பட்ட விஸ்தீரம். அதை நான் உள்ளொளியாய் வழிபடுகிறேன்.

நாம் அனைவரும் உடனடியாக போராடி தீர்க்கப்பட வேண்டியது, (ஊழல்) வளர்ச்சி அடைந்துள்ள இந்தியாவில், வறுமையால் ஒரு சிறு வயிறும் வாடாமல் இருப்பதே. மனிதம் வளர்ப்பது தெய்வத் திருப்பணியே என்று கூறியுள்ளார் பார்த்திபன்.

 

அறுசுவையும் 5 வகை உணவும்: வணக்கம் தமிழா

Makkal Tv Vanakkam Tamizha

நாம் உண்ணும் உணவே நம் உடல்நலத்தை தீர்மானிக்கிறது. நாம் எந்த வகை உண்கிறோமோ அதற்கேற்ப பலன்கள் நமக்கு கிடைக்கிறது என்று மக்கள் தொலைக்காட்சியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தெரிவித்தார் உடல்நலப் பயிற்சியாளர் சங்கர்.

பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காலை நேரத்தில் உடற்பயிற்சி, யோகா, சமையல், உணவு என்று ஒளிபரப்புகின்றனர். ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் வித்தியாசமாக மாலை நேரத்தில் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றனர்.

இதில் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் நிகழ்ச்சிகளை தருவது சிறப்பம்சம். பெண்கள் கற்றுக்கொள்ள கைத் தொழில் தொடங்கி, பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு வீரக்கலை வரை கற்றுத்தரப்படுகிறது. சிறப்பு வாய்ந்த நிபுணர்கள் பங்கேற்று இதில் ஆலோசனைகளை தெரிவிக்கின்றனர்.

எட்டுவிதமான நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறுகின்றன. கைத் தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் பகுதியில் பெண்கள் பேன்சி நகைகள் செய்ய கற்றுத் தருகின்றனர். எண்சான் உடம்பை எழிலாக்குவோம் பகுதியில் உடற்பயிற்சி நிபுணர் சரவண் உணவுத்திட்டம் பற்றி தெரிவித்தார். தெரியும், தெரியாது நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் ரேவதி சங்கரன் மூளையின் திறமையை பற்றி எடுத்துரைத்தார்.

திருவாசகத்தேன் என்னும் இசை நிகழ்ச்சியில் செவிக்கினிய தமிழிசை பாடல்களை பாடினார்கள்.

மருந்தில்லா மருத்துவம் உடல்நல பயிற்சியாளர் சங்கர் உடல் ஆரோக்கியத்திற்கு 6 சுவை உணவு உண்ணவேண்டும் என்றும் அதற்கேற்ப 5 வகை உணவுகளையும் கூறினார். முதல்வகை உணவுகள் பழங்கள் இது உடலுக்கு நல்லது. இதில் அனைத்து வகை சத்துக்களும் உள்ளது. உயிர்ச்சத்து உள்ளதால் உடலுக்கு எல்லாவித சத்துக்களும் கிடைக்கிறது. இந்த பழங்களை உண்பதால் மனிதனின் ஆயுட்காலம் அதிகரிப்பதாகவும் தெரிவித்தார். இரண்டாம் வகை உணவு முளை கட்டிய தானியங்கள் பயிறுவகைகள். உயிர் ஊட்டப்பட்ட உணவு. பச்சை காய்கறிகள், கீரைகள் மூன்றாம் வகை உணவு. இவற்றை பச்சையாக சாப்பிட்டால் 6 சுவைகளும் அப்படியே கிடைக்கும். சமைத்த உணவுகள் நான்காம் வகை உணவு, நாம் சாப்பிடும் உணவில் 6 சுவை இருக்கவேண்டும். சமைத்த உணவில் 3 சுவைதான் இருக்கிறது. நிறைய ரசாயனம் கலந்து உண்கிறோம் எனவேதான் நோய்கள் தாக்குகின்றன. மாமிச உணவு 5 ம் வகை உணவு இவற்றை உண்பது உடல் நலத்துக்கு ஏற்றதல்ல என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து வெற்றியை நோக்கி என்ற தன்னம்பிக்கை பகுதியும், வீரக்கலை பகுதியில் மாணவர்களுக்குத் தேவையான சிலம்பாட்டம், கராத்தே நிகழ்ச்சியும் கற்றுத்தரப்பட்டது. திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 5.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை ஜாஸ்மின் தொகுத்து வழங்குகிறார்.

 

ஒரு நடிகனாக வேண்டும் என்றுதான் வந்தேன்- இயக்குநர் ஷங்கர்

I M Not Achieved Anything Big Says Shankar

சென்னை: ஒரு நடிகனாக வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால் இப்போது இயக்குநராகிவிட்டேன். ஆனாலும் நான் பெரிதாக எதையும் சாதித்ததாக நினாக்கவில்லை என்றார் இயக்குநர் ஷங்கர்.

30 ஆண்டுகளுக்கு முன் தான் இயக்கி வெற்றி பெற்ற சட்டம் ஒரு இருட்டறை படத்தை, தன் உதவியாளர் சினேகா பிரிட்டோவை வைத்து மீண்டும் ரீமேக் செய்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன். இதன் தயாரிப்பு மற்றும் இயக்க மேற்பார்வையை மட்டும் அவர் கவனிக்கிறார்.

இயக்குநர் சினேகாவை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் இயக்குநர் ஷங்கர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

சினேகா பிரிட்டோவை அறிமுகம் செய்து வைத்து, ஷங்கர் பேசுகையில், "நான் பெரிதாக எதுவும் சாதித்து விட்டதாக எனக்கு தோன்றவில்லை. அப்படி நான் ஏதாவது சாதித்திருப்பதாக கருதினால், அந்த பெருமை மொத்தமும் எஸ்.ஏ.சந்திரசேகரனைத்தான் சாரும்.

அவரிடம் உதவி டைரக்டராக சேருவதற்கு முன், சில மேடை நாடகங்களில் நடித்திருந்தேன். நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டுத்தான் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் சென்றேன்.

நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், உதவி டைரக்டர் ஆகிவிட்டேன். சுறுசுறுப்பு, ஒழுக்கம், நேரம் தவறாமை, திட்டமிடல் ஆகியவற்றை அவரிடம் கற்றுக்கொண்டேன். இளம் பெண் இயக்குனர் சினேகா பிரிட்டோவும், இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என்றார்.

முன்னதாகப் பேசிய எஸ் ஏ சந்திரசேகரன், இயக்குநர் ஷங்கரின் நேரம் தவறாமை மற்றும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பண்பு பற்றி பாராட்டிப்பேசினார்.

"எந்த சூழலிலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் குணமுடையவர் ஷங்கர். இந்த நிகழ்ச்சிக்காக அவரை அழைக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். விஷயத்தை முழுவதுமாகக் கூட அவர் கேட்கவில்லை. நிச்சயம் வருகிறேன் சார் என்றார். தன் ஷூட்டிங்கைக் கூட விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சிக்காக அவர் வந்திருக்கிறார்," என்றார்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் விமலாராணி, சேவியர் பிரிட்டோ, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, நடிகர் தமன்குமார், நடிகைகள் ரீமாசென், பிந்து மாதவி, பியா, டைரக்டர் சினேகா பிரிட்டோ ஆகியோரும் பேசினார்கள்.

 

முதல்வர் கலந்து கொள்ளும் சினிமா விழா... ரஜினி - கமல் பங்கேற்கிறார்கள்!

Rajini Kamal Attend At Cm Function

சென்னை: இன்று மாலை நடக்கும் ஜெயா டிவி 14-ம் ஆண்டு விழா மற்றும் எம்எஸ் விஸ்வநாதனின் நினைத்தாலே இனிக்கும் இசை நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி இது. விழாவில் ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில் தமிழ் சினிமாவின் அடையாளங்களாகத் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயன் கமல்ஹாஸன், இசைஞானி இளையராஜா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

விழா நடக்கும் நேரு உள்விளையாட்டரங்கில் பழைய தமிழ் சினிமாவை நினைவூட்டும் வகையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

எம்எஸ் விஸ்வநாதனுடன் பணியாற்றிய கலைஞர்கள், நடிகைகள் பெரும்பாலானோர் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எம்எஸ் விஸ்வநாதன் - டி கே ராமமூர்த்தி இருவருக்கும் பொற்கிழி அளித்து கவுரவிக்கும் முதல்வர், பின்னர் விழா சிறப்புரை ஆற்றவிருக்கிறார். ஏகப்பட்ட பேரை பேச வைக்காமல், ரஜினி, கமல், இளையராஜா, எம்எஸ் விஸ்வநாதன் ஆகியோர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பேசக் கூடும் என்று தெரிகிறது. இளையராஜா வருவசாக உறுதி கூறியிருந்தாலும், நாளை மறுநாள் அவரது இசை நிகழ்ச்சி இருப்பதால், வருவாரா என்பதில் சந்தேகம் உள்ளது.

ஜெயலலிதா முதல்வரான பிறகு ரஜினி, கமல் அவரது நிகழ்ச்சியில் பங்கேற்பதும் இதுவே முதல்முறை. அதற்கு முன்பு திரையுலகம் 2005-ல் நடத்திய விழாவில் ரஜினி, கமல் பங்கேற்று வாழ்த்தியது நினைவிருக்கலாம்.

முதல்வர் பங்கேற்கும் விழா என்பதால் கெடுபிடிகள் ஏக பலமாக உள்ளன. 5 மணி விழாவுக்கு 4 மணிக்கெல்லாம் இருக்கையில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்!

 

24 மணி நேர 'கேப்டன் நியூஸ்' சானல் - விஜயகாந்த் தொடங்கிவைத்தார்

Vijayakanth Launches 24 Hour Captain News Channel

சென்னை: கேப்டன் மீடியா குழுமத்தின் 24 மணிநேர செய்திச்சேனலான கேப்டன் நியூஸ் சானலை, தேமுதிக தலைவரும், கேப்டன் மீடியா குழும தலைவருமான விஜகாந்த் குத்துவிளக்கேற்றி அதன் தொழில் நுட்பப் பணிகளை தொடங்கி வைத்தார்.

கேப்டன் மீடியா குழுமத்தில் இருந்து ‘உள்ளது உள்ளபடி உடனுக்குடன்' என்ற முழக்கத்துடன் களம் இறங்கியுள்ளது 24 மணி நேர செய்திச் சேனல். கடந்த சில மாதங்களாக கேப்டன் நியூஸ் சேனல் சோதனை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இன்று அதிகாரப்பூர்வமாக முழுநேர ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.

இந்த சேனலுக்கான லோகோவை கேப்டன் மீடியா அலுவலகத்தில் காலை 9.35 மணியளவில் விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். குழுமத்தின் மற்றொரு தலைவரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா குத்துவிளக்கேற்றினார்.

உலகம் முழுவது‌ம் உள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, உள்ளது‌ உள்ளபடி உடனு‌க்குடன் என்ற லட்சியத்தோடு அனைத்து‌ செய்திகளையும் தாங்கி கேப்டன் நியூஸ் தொலைக்காட்சி இன்று‌ முதல் தனது‌ சேவையை தொடங்கியுள்ளது.

இதில் செய்திகளுடன் முக்கிய பிரச்சனைகளுக்கு நேர்முகத்து‌டன் நல்ல விளக்கம் கொடுக்கவும், அனைத்து ‌ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர்களின் கலந்து‌ரையாடல் நிகழ்ச்சியும் மற்று‌ம் பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகளும் ஒளிபரப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் நியூஸ் சேனலின் செய்திகளை பிளாக்பெர்ரி, இணையதளத்திலும், டிவிட்டரில் பேஸ்புக்கில் காணலாம் என்று கேப்டன் மீடியா குழுமத்தினர் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே சன் நியூஸ் தொடங்கி சத்யம் வரை 24 மணி நேர செய்தி சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தற்போது இவற்றுடன் கேப்டன் நியூஸ் சேனலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் நியூஸ் சானலின் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் முகவரிகள்...

http://captainnews.net/
http://www.facebook.com/Captainnewstv
https://twitter.com/captainnewstv

 

டைம்ல பெர்ஃபெக்டா இருப்பேன் – நீலிமா ராணி

Always Perfect Neelima Rani

நீலிமா ராணிக்கு சூட்டிங்கிற்கு லேட்டா போனால் பிடிக்காதாம். சிறுவயதில் இருந்தே இதை கடைபிடித்து வருகிறார். 5 மணிக்கு அலராம் வைத்தால் நான்கு மணிக்கே அலார்ட்டாக எழுந்து உட்கார்ந்து வீட்டு வேலை பார்க்க ஆரம்பித்து விடுவாராம்.சமையல் விஷயத்துலயும் நேரத்தை கரெக்டாக மெயின்டெய்ன் செய்வாராம்.

சூட்டிங் லேட் ஆகக் கூடாது என்பதற்காக காரில் போகும் போதே மேக்கப் போட்டுக் கொள்வேன் என்று கூறும் நீலிமா, சில நேரங்களில் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று அமர்ந்திருப்பாராம். ஏனெனில் தன்னால் சூட்டிங் லேட் என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த முன்னேற்பாடு. ஆனால் அங்கே அப்பொழுதுதான் டெக்னீசியன்கள் வந்து வேலையை தொடங்கியிருப்பார்கள் என்கிறார். இதுவரை யாருக்காகவும் தன்னுடைய இந்த பாலிசியை நீலிமா மாற்றிக்கொண்டது இல்லையாம்.

அதனால்தான் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்களில் தொடர்ந்து நடிக்க முடிகிறதா நீலிமா?