இரண்டெழுத்தில் இவர் மூச்சிருக்கும்.. வாலி மறைந்து 1 வருடம் ஓடி விட்டதே!

சென்னை: வாலிபக் கவி வாலி... மறைந்து ஒரு வருடமாகி விட்டது. இதையொட்டி இன்று சென்னையில் ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாகாவரம் படைத்த அழகான காதல் பாடல்கள் பலவற்றைக் கொடுத்தவர் வாலி. எம்.ஜி.ஆர். முதல் சிம்பு, தனுஷ் வரைக்கும் இவர் பாடல் எழுதாத நடிகர்களே கிடையாது.

 இரண்டெழுத்தில் இவர் மூச்சிருக்கும்.. வாலி மறைந்து 1 வருடம் ஓடி விட்டதே!

யார் யாருக்கு என்ன மாதிரியான பாடல்கள் வேண்டுமோ, பொருந்துமோ, அதை அப்படி அப்படியேக் கொடுத்து அசத்தியவர் வாலி.

ஐந்து தமிழக அரசின் விருதுகளைப் பெற்றவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். பல்வேறு சாதனைகளைப் படைத்தவர். 15,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் புனைந்தவர், பல அருமையான நூல்களை எழுதியவர்.

எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய பாடல்கள் பல இன்றளவும் அவர் பெயரைச் சொல்லியபடி காற்றில் உலவிக் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி மரணமடைந்தார் வாலி.

வாலியின் முதலாமாண்டு நினைவையொட்டி தமிழ் சிமிழ் சார்பில் இன்று ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், நா. முத்துக்குமார், பா.விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

 

விஜய் இல்லாமல் சென்னையில் நடக்கும் 'கத்தி' படப்பிடிப்பு

சென்னை: கத்தி படத்தின் படப்பிடிப்பு விஜய் இல்லாமல் நடந்து வருகிறது.

விஜய் கதிர், ஜீவா என்ற இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் கத்தி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

விஜய் இல்லாமல் சென்னையில் நடக்கும் 'கத்தி' படப்பிடிப்பு

விஜய் இல்லாமல் பிற நட்சத்திரங்கள் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. விஜய் நடிக்கும் காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டி இருக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க 10 முதல் 15 நாட்கள் வேண்டுமாம்.

படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார். இது தான் அவர் நடிக்கும் முதல் தமிழ் படம் ஆகும்.

கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பேரன் பெயர் கொண்ட படத்தை தனது பிறந்தநாளில் ரிலீஸ் செய்ய ஸ்டைல் நடிகர் முடிவு

சென்னை: தனது பிறந்தநாளில் பேரன் பெயர் கொண்ட படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று இருக்கிறாராம் ஸ்டைல் நடிகர்.

ஸ்டைல் நடிகர் இரட்டை வேடங்களில் நடித்து வரும் படத்திற்கு அவரது பேரன் பெயர் தான் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு மைசூரில் துவங்கி ஆந்திராவில் நடந்து வருகிறது.

படக்குழு சென்னை திரும்பிய பிறகு இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்து பார்த்த பிறேக அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு செல்ல முடிவு செய்துள்ளாராம் ஸ்டைல் நடிகர். மேலும் படத்தை தனது பிறந்தநாள் அன்று தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துள்ளாராம் நடிகர்.

இதற்கிடையே படப்பிடிப்பில் நடிகர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்திகள் எல்லாம் பொய் என்று இயக்குனர் தெரிவித்தார்.

இந்த படத்தில் ஸ்டைல் நடிகருக்கு உயர்ந்த நடிகை மற்றும் நடிகரின் குருநாதரின் மகள் ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தரமணியில் படப்பிடிப்பு அரங்குகள்: ஃபெஃப்சி!, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முதல்வருக்கு நன்றி

சென்னை: சென்னை தரமணியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் 15 கோடி ரூபாய் செலவில் புதிதாக இரண்டு ஏசி படப்பிடிப்பு அரங்கம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சில தினங்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு ஃபெஃப்சியின் தலைவர் அமீர் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ஃபெஃப்சியின் தலைவர் அமீர், விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

தரமணியில் படப்பிடிப்பு அரங்குகள்: ஃபெஃப்சி!, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முதல்வருக்கு நன்றி

‘‘மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வணக்கம்! எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றினை பரிசீலனை செய்து 14.7.2014 அன்று சட்ட சபையில் எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட கல்லூரி மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு குளிரூட்டப்பட்ட படப்பிடிப்பு அரங்கங்களை திறப்பதாக அறிவிப்பு செய்துள்ளீர்கள். இதற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பாக உங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்'' என அதில் கூறியுள்ளனர்.

கேயார் பாராட்டு

இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் ‘‘ முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும் திரையுலகுக்கு வரிச்சலுகை, மானியம், திரைப்பட நகரம், திருட்டு வி.சி.டி. ஒழிப்பு என பல உதவிகளை செய்து இருக்கிறார். சில உதவிகளை கேட்டும் செய்து இருக்கிறார். சில உதவிகளை கேட்காமலும் செய்து இருக்கிறார்.

சினிமா நூற்றாண்டு விழா

அவர் மூன்றாவது முறையாக முதல்வர் ஆனபின், இந்திய திரையுலகமே வியக்கும் வகையில், சினிமா நூற்றாண்டு விழாவை தமிழ்நாட்டில் நடத்தியது வரலாற்றில் இடம்பெற வேண்டிய ஒன்றாகும்.

தேசிய விருதுக்கு சமம்

அதிலும் குறிப்பாக ஜனாதிபதியை அந்த விழாவுக்கு அழைத்து, அவர் கையினால் கலைஞர்களுக்கு விருது வழங்க செய்து, தேசிய விருது வழங்கும் விழாவுக்கு சமமாக நடத்தப்பட்டது. அதற்கு காரணமாக இருந்த முதல்வர் ஜெயலலிதாவை கலையுலகம் பாராட்டாமல் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.