பந்தா இல்லாதவர் நடிகர் சிவா: துபாய் தமிழர்கள் பாராட்டு

துபாய்: துபாயில் வேலை செய்யும் தமிழக தொழிலாளர்களை நடிகர் மிர்ச்சி சிவா வெகுவாக கவர்ந்துள்ளார்.

சைமா விருது விழாவில் கலந்து கொள்ள துபாய் வந்த நடிகர் மிர்ச்சி சிவா அங்குள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். டாக்சியில் ஊரை சுற்றிப் பார்த்த சிவா துபாயில் பணியாற்றும் தமிழக தொழிலாளர்களை சந்தித்து அவர்களோடு பேசியதோடு தானே முன்வந்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Actor Shiva impresses tamils in Dubai

இது குறித்து துபாயில் பணியாற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த பசீர், சுந்தர், ரஹ்மான் உள்ளிட்டவர்கள் கூறுகையில்,

நடிகர் மிர்ச்சி சிவாவை துபாயில் நேரில் சந்தித்தோம். அப்போது எங்களை அழைத்து பேசி வாழ்வியல் சுழல் குறித்து கேட்டறிந்தார். அவரே புகைப்படமும் எடுக்க அனுமதித்தார். வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வெளிநாட்டுக்கு வந்த அவர் சொந்த நாட்டை விட்டு பிழைப்புக்காக தொலைதூரம் வந்துள்ள எங்களை போன்ற தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் நலன் குறித்து அக்கறை செலுத்தும் நடிகரை கண்டது மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

நடிகர் என்ற பந்தா இல்லாமல் இது போன்று பலரையும் சந்தித்து உள்ளார் என அறிந்தேன் என்றனர்.

 

வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா... வெள்ளாவி நாயகியை வெளுத்து வாங்கிய டைரக்டர்!

சென்னை: வெள்ளாவி புகழ் நடிகை தற்போது அண்ணனின் இயக்கத்தில் வம்பு நடிகர் நடித்து வரும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் அம்மணிக்கு உளவு பார்க்கும் வித்தியாசமான கேரக்டராம். இது தொடர்பாக சமீபத்தில் வாய் தவறி பெருமையாக உளறி விட்டார் நடிகை.

Director scolds white actress

ஏற்கனவே படம் உளவு தொடர்பான கதை என்பது லீக் ஆகி விட்டதால் கடும் டென்சனில் இருக்கிறார் டைரக்டர் அண்ணன். இதில், நாயகி தனது கதாபாத்திரம் குறித்த சீக்ரெட்டை உடைத்ததால், அவரது கோபம் மேலும் அதிகரித்து விட்டதாம்.

வெள்ளாவி நடிகையை அழைத்து வெளு வெளு என வெளுத்து வாங்கி விட்டாராம் இயக்குநர்.

படத்தின் டைட்டிலைச் சொன்னாலே இது என்னோடது என கிளம்ப ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. படத்தின் தலைப்பை மட்டும் வைத்துக் கொண்டே இது என்னோட கதை என வழக்குத் தொடுக்க பலர் தயாராக உள்ளனர்.

இந்நிலையில், இப்படி தேவையில்லாமல் பேசி தனது படத்தை பிரச்சினையில் சிக்க வைத்து விடுவாரோ நடிகை என்ற பயமாம் இயக்குநருக்கு.

 

செல்ஃபி எடுத்தா எல்லாம் சரியாகிவிடுமா?: மோடியின், "மகளுடன் செல்ஃபி"யை விமர்சித்த நடிகை

மும்பை: இந்தி நடிகை ரிச்சா சத்தா பிரதமர் நரேந்திர மோடியின் மகளுடன் செல்ஃபி குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

நாட்டில் பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க நினைத்த பிரதமர் நரேந்திர மோடி பெற்றோர்களை தங்களின் மகள்களுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுமாறு கூறினார். இதையடுத்து பலரும் மகள்களுடன் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Richa Chadda criticizes Modi's selfie with daughter

இந்நிலையில் இது குறித்து இந்தி நடிகை ரிச்சா சத்தா கூறுகையில்,

வரதட்சணை, பாலியல் கொடுமை, ஈவ் டீஸிங் உள்ளிட்ட பிரச்சனைகள் செல்ஃபி எடுப்பதால் தீர்ந்துவிடாது. பெண்களின் சுதந்திரம் முதலில் பூமியில் பிறப்பது ஆகும். அதன் பிறகு அவர்கள் படித்து, தங்களுக்கு பிடித்த வேலைக்கு சென்று, பிடித்தவரை திருமணம் செய்ய வேண்டும்.

தற்போதுள்ள சூழலில் இது எல்லாம் நடப்பதே பெரிய முன்னேற்றமாக உள்ளது என்றார்.

முன்னதாக மகளுடன் செல்ஃபி குறித்து நடிகை ஸ்ருதி சேத் விமர்சனம் செய்து மோடி ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் திட்டு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.