டக்ளஸ் தேவானந்தா ஆதரவாளர் விழா.. சிறப்பு விருந்தினர் த்ரிஷா!

டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் நடிகை த்ரிஷா பங்கேற்றதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

நடிகை த்ரிஷா இப்போது கனடா சென்றுள்ளார். அங்கு தமிழர் அமைப்பு ஒன்று நடத்தும் விழாவில் பங்கேற்கிறார்.

டக்ளஸ் தேவானந்தா ஆதரவாளர் விழா.. சிறப்பு விருந்தினர் த்ரிஷா!  

ஆனால் இவர்கள் ராஜபக்சேவுக்கு சாதகமாக செயல்படும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் என்பதை பிற தமிழ் அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஈழத்தில் இறுதிப் போருக்குப் பின் வெளிநாடுகளில் ஈழத் தமிழர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது. அவர்களின் போராட்டங்கள் காரணமாக இலங்கை அரசு பல்வேறு சர்வதேச அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது.

இந்தப் போராட்டங்களை பலவீனப்படுத்த, தமிழரின் பலவீனமான சினிமாத் துறையில் பெரும் பணத்தை பாய்ச்சுகின்றனர்.

பல்வேறு மறைமுக வழிகளில் ராஜபக்சே குடும்பத்தினர் தங்கள் பணத்தை தமிழ் திரைத்துறையில் முதலீடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் இந்த சூழ்ச்சிகள் புரியாமல் தமிழ் திரைத்துறையினர் அவர்கள் வலையில் விழுந்துவிடுகின்றனர்.

இப்போது த்ரிஷாவும் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் போலிருக்கிறது. காரணம் முன்பு சிங்கள அரசு கூப்பிட்டும் இலங்கை போக மறுத்தவர்தான் த்ரிஷா என்பது நினைவிருக்கலாம்.

 

லிப் டூ லிப் காட்சியில் நடித்து உதடுகளை ரத்தக்காடாக்கிய இளம் நடிகை

நியூயார்க்: முத்த காட்சியில் நடிக்க பல டேக்குகள் வாங்கிய நடித்து முடிப்பதற்குள் ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சனின் உதட்டில் ரத்தம் வரத் துவங்கிவிட்டது.

ஹாரி பாட்டர் சீரிஸ் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன். அவர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் நோவா. அதில் எமமா டக்ளஸ் பூத்தின் மனைவியாக நடித்திருந்தார்.

லிப் டூ லிப் காட்சியில் நடித்து உதடுகளை ரத்தக்காடாக்கிய இளம் நடிகை

ஒரு காட்சியில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டு பின்னர் உணர்ச்சியுடன் லிப் டூ லிப் முத்தம் கொடுக்க வேண்டும். அந்த காட்சியை படமாக்க பல டேக்குகள் வாங்கியுள்ளனர்.

அப்படி டேக்குகள் வாங்கி காட்சியை நடித்து முடிப்பதற்குள் எம்மாவின் உதட்டில் ரத்தமே வந்துவிட்டது. மேலும் அவர்கள் மோதிக் கொண்டதில் ட்களஸின் மூக்கில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து எம்மா கூறுகையில்.

முதல் 4, 5 டேக்குகளின்போது நாங்கள் நன்றாக இருந்தோம். ஆனால் அதன் பிறகு தான் மோசமாகிவிட்டது. எனது உதட்டில் இருந்து ரத்தம் வரத் துவங்கியது. டக்ளஸின் மூக்கில் மோதிவிட்டேன். நாங்கள் இருவரும் டயர்ட் ஆகிவிட்டோம் என்றார்.

 

'அரசியல்லயும் காமெடிதான் பண்ணேன்.. இப்பவும் அதைத்தானே பண்ணிக்கிட்டிருக்காங்க!'

சென்னை: அரசியலிலும் நான் காமெடிதான் செய்தேன். இப்பவும் அதைத்தான் பலரும் அங்கே செய்து கொண்டிருக்கிறார்கள், என்றார் நடிகர் வடிவேலு.

இரண்டரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் வெளியாகும் படம் தெனாலிராமன். இதில் அவர் கதாநாயகனாக, இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

'அரசியல்லயும் காமெடிதான் பண்ணேன்.. இப்பவும் அதைத்தானே பண்ணிக்கிட்டிருக்காங்க!'

வடிவேலுக்கு ஜோடியாக மீனாட்சி தீக்ஷித் நடிக்கிறார். இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, வரும் ஏப்ரல் 18-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் வடிவேல் தனக்கே உரிய கலகலப்போடு பேசினாலும், இந்த இடைவெளியில் தமிழ் சினிமாக்காரர்கள் அவருக்கு எதிராக செய்த பல வேலைகளை அம்பலப்படுத்தினார்.

வடிவேலு பேச்சு:

தேவையா.. தேவையாடா உனக்குன்னுதானே பாக்குறீங்க... இது நானா எடுத்த முடிவு கிடையாது. காலத்தின் கட்டாயம். ஆனா ஒண்ணு.. இந்த இரண்டு இரண்டறை வருசம் நல்ல ஓய்வு கிடைச்சுச்சி. எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. எந்த வருத்தமும் இல்லை.

ஒவ்வொரு வீட்டுலயும் ரேஷன் கார்டுலதான் என் பேர் இல்லன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். உங்க வீட்டுல நானும் ஒருத்தங்கறத, இந்த இரண்டு வருஷ கேப்புல உணர்ந்தேன்.

அப்போ எனக்கு நிறைய படங்களும் வந்துச்சி. ஆனா நான்தான் இனி வந்தா ஒரு கிங் மாதிரி வரணும்னு ஆசைப்பட்டு மறுத்திட்டேன். அப்படி வந்ததுதான் தெனாலிராமன்.

இங்க பலபேரு என்னை வச்சி படம் பண்ணவே பயந்தாங்க. அந்த நேரத்துல மலையாளம், தெலுங்கிலெல்லாம் நிறைய பட வாய்ப்புகள் வந்துச்சு. அதிலெல்லாம் நான் நடிச்சிருந்தா வடிவேல் ஊரை காலி செஞ்சிட்டு ஓடிப்போயிட்டான்னு பேசியிருப்பாய்ங்க... அதனால்தான் அந்த படங்களை ஒப்புக்கொள்ளவில்லை.

யுவராஜ் இந்த கதையை என்கிட்ட சொன்னதும் அதைத் தயாரிக்க நான் தயார்னு முன்வந்தார் கல்பாத்தி அகோரம் சார். இந்த சினிமாவுல நான் முதலாளின்னு கூப்பிடற ஒரே ஒருவர் கல்பாத்தி அகோரம்தான். அவராதான் என்னைக் கூப்பிட்டு படத்தை தயாரிக்கிறதா சொன்னார். இந்த மேடையில அதை சொல்லியாகணும். அகோரம் சார், அண்ணண் தம்பி மூணு பேரையும் நான் கடவுளாத்தான் பார்க்கிறேன். அவங்கள கையெடுத்து கும்புடறேன். இந்த படத்துல சும்மாவே நடிக்கிறேன், பணமே வேணாம்னு சொல்ற அளவுக்கு போயிட்டேன். ரொம்ப அற்புதமான படத்துல ஒரு கேப் விட்டு நடிச்சது சந்தோஷமா இருக்கு.

ரொம்பப் பேர் அகோரம் சார்கிட்ட போய், வடிவேலுவை வச்சி படம் பண்ணாதீங்க.. அவ்ளோதான்னு அவர் வீட்டு முன்னால போய் அழுது புரண்டாய்ங்க... மெசேஜெல்லாம் அனுப்பிட்டாங்க.

'ஏ போய்யா... அதெல்லாம் நான் பாத்துக்கறேன். அப்படி என்னய்யா தப்பு பண்ணார் அவர்? போனாரு வந்தாரு... அவ்ளோதானே.. யாரும் செய்யாததையா அவர் பண்ணிட்டார்?' என்று கேட்டு திருப்பி அனுப்பிச்சாரு. அசரல.

இங்க பண்ண காமெடியத்தான் நான் அங்கயும் பண்ணேன். இப்பவும் பலர் அதைத்தான் அங்க (அரசியல்) செஞ்சிக்கிட்டிருக்காங்க...," என்றவர், தனக்கு ஜோடியாக நடிக்க வந்தவர்களை சிலர் மிரட்டி விரட்டியது பற்றி சொன்னது தனி ஸ்டோரி!

 

சகாப்தம் படத்தில் மகனுடன் களமிறங்கும் விஜயகாந்த்!

மகன் சண்முகப் பாண்டியன் நாயகனாக அறிமுகமாகும் சகாப்தம் படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார் விஜயகாந்த்.

விஜயகாந்தின் இளையமகன் சண்முகப் பாண்டியன் முதன் முதலாக சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். படத்தின் பெயர் சகாப்தம்.

சகாப்தம் படத்தில் மகனுடன் களமிறங்கும் விஜயகாந்த்!

இந்தப் படத்தில் நீங்களும் நடிப்பீர்களா என படத் தொடக்க விழாவில் விஜயகாந்திடம் கேட்கப்பட்டது. அதுபற்றி தான் முடிவு செய்யவில்லை என்று பதிலளித்தார் விஜயகாந்த்.

பின்னர் இந்தப் படத்துக்காக மனைவியுடன் சிங்கப்பூர் சென்று லொகேஷனும் பார்த்தார். இப்போது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

விஜயகாந்த் கடைசியாக நடித்த படம் விருதகிரி. படத்தின் இயக்குநரும் அவர்தான். அதன் பிறகு பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கேட்டும்கூட விஜயகாந்த் நடிக்க சம்மதிக்கவில்லை. அரசியலில் மிகத் தீவிரமாக இருந்தார்.

தேர்தல் முடிந்த பிறகு தனது பகுதிகளை படமாக்கிக் கொள்ளலாம் என இயக்குநர் சந்தோஷிடம் கூறியுள்ளாராம் விஜயகாந்த்.

இந்தப் படம் காதல் - ஆக்ஷன் படம் என்று சொல்லப்பட்டாலும், விஜயகாந்த் வரும் காட்சிகளில் அரசியலும் இருக்கும் என்கிறார்கள்.

 

கிருஷ்ணதேவராயர் இல்லாத தெனாலிராமன்!

வடிவேலு நாயகனாக நடித்துள்ள தெனாலிராமன் படத்தில் மன்னர் கிருஷ்ணதேவராயரைக் கிண்டலடிப்பதாக சிலர் சர்ச்சை கிளப்பி வருகின்றனர்.

ஆனால், யாருக்கும் தெரியாத புதிய தகவல், அந்தப் படத்தில் கிருஷ்ணதேவராயர் என்ற ஒரு பாத்திரமே கிடையாது என்பதுதான். அட அவ்வளவு ஏன், படத்தில் எங்குமே அந்தப் பெயரைக் கூட யாரும் உச்சரிக்கவில்லையாம்.

கிருஷ்ணதேவராயர் இல்லாத தெனாலிராமன்!   

மன்னராக வரும் வடிவேலுக்குப் பெயர் மாமன்னன்.. அவ்வளவுதான். அதே போல, மன்னனின் அமைச்சரவையில், தெனாலிராமனைத் தவிர, மீதியுள்ள எட்டு அமைச்சர்களுக்கும் பெயர் கிடையாதாம். வெறும் அமைச்சர் என்றே படம் முழுக்க அழைக்கப்படுகிறார்களாம்.

கிருஷ்ணதேவராயர் பற்றி சர்ச்சை கிளம்பியபோது, இயக்குநர் யுவராஜ் தைரியமாக, படத்தை எதிர்ப்பாளர்களுக்கு போட்டுக் காட்டுகிறேன் என பதிலளித்தது இந்த காரணங்களால்தானாம்.

தெனாலிராமன் என்றாலே கிருஷ்ணதேவராயர் என்ற பெயரும் உடன் வரும். ஆனால் முதல் முறையாக, யாரோ ஒரு மன்னன்... அவன் அமைச்சரவையில் தெனாலிராமன் என வரலாற்றையும் கற்பனையையும் மிக்ஸ் பண்ணி அடித்திருக்கிறாராம் இயக்குநர் யுவராஜ்.

கற்பனையோ.. சரித்திரமோ... சுவாரஸ்யமாக இருந்தால் சரிதானே!