இஸ்லாத்தை பின்பற்றுகிறேன் ஆனால் மதம் மாறவில்லை: ஜெய்

சென்னை: நான் இஸ்லாத்திற்கு மாறவில்லை. ஆனால் அந்த மார்க்கத்தை பின்பற்றுகிறேன் என்று நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்தை பின்பற்றுகிறேன் ஆனால் மதம் மாறவில்லை: ஜெய்

இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாத்தை பின்பற்றுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுதுவிட்டு வந்த யுவன் ஷங்கர் ராஜாவுடன் தொப்பி அணிந்து நடிகர் ஜெய்யும் வெளியே வந்த புகைப்படங்கள் வெளியாகின.

இதை பார்த்தவர்கள் ஒரு வேளை ஜெய் மதம் மாறிவிட்டாரோ என்று நினைத்தனர். ஆனால் அவர் தான் மதம் எல்லாம் மாறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் மதம் மாறியதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை. எந்த கடவுளையும் கும்பிடாமல் இருந்த நான் தற்போது ஒரு கடவுளை வணங்குவது நல்ல விஷயம். நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதை ஏன் வித்தியாசமாக பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.

ஜெய் இஸ்லாத்தை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகை மோனிகா இஸ்லாத்திற்கு மாறி நடிப்புக்கு முழுக்கு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

“சூப்பர் ஸ்டார்”: அடித்துக் கொள்ளும் ரசிகர்களுக்காக அஜீத், விஜய் கூட்டாக பேட்டி?

“சூப்பர் ஸ்டார்”: அடித்துக் கொள்ளும் ரசிகர்களுக்காக அஜீத், விஜய் கூட்டாக பேட்டி?

சென்னை: அடுத்த சூப்பர் ஸ்டார் விவகாரம் தொடர்பாக ரசிகர்கள் சண்டை போடுவதை தடுக்க அஜீத்தும், விஜய்யும் சேர்ந்து பேட்டி அளிக்க முடிவு செய்துள்ளார்களாம்.

ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வதை விரும்பாதவர்கள் அஜீத்தும், விஜய்யும். இந்நிலையில் பிரபல வார பத்திரிக்கை ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று மெகா கருத்துக்கணிப்பை நடத்தி அதில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவித்தது.

இதையடுத்து அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டனர். இந்நிலையில் கருத்துக்கணிப்பில் உண்மையில் வெற்றி பெற்றது அஜீத் தான் என்று செய்திகள் வெளியாகின. இதை பார்த்து விஜய் ரசிகர்கள் கோபம் அடைந்து திட்டித் தீர்க்கத் துவங்கினர்.

இப்படி தங்கள் ரசிகர்கள் சண்டை போடுவதை பார்த்த அஜீத்தும், விஜய்யும் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அதாவது கூட்டாக சேர்ந்து பேட்டி அளிக்கப் போகிறார்களாம். நாங்கள் இருவரும் நண்பர்களாக இருக்கையில் எங்கள் ரசிகர்களாகிய நீங்கள் அடித்துக் கொள்ளலாமா, நீங்களும் எங்களைப் போன்று நட்பாக இருங்கள் என்று அன்பாக கேட்டுக் கொள்ளப் போகிறார்களாம்.

அவர்கள் விரைவில் இந்த பேட்டியை அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.