நடிகைகள் நட்பாக இருக்க மாட்டார்களா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகைகள் நட்பாக பழக மாட்டார்களா என்பதற்கு அசின் பதிலளித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது: சினிமாவில் நடிகைகள் நட்புடன் இருக்கமாட்டார்கள் என்று சிலர் கூறுவதுண்டு. அது வெறும் கட்டுக்கதைதான். நடிகைகளுக்குள் நட்புடன் இருக்கிறோம். ஷூட்டிங்கில்  இருக்கும்போது சக தோழிகள் நிறைய விஷயங்களை மனம் விட்டு பகிர்ந்து கொள்வோம். நிறைய நடிகைகள் எனக்கு நண்பர்களாக இருக்கின்றனர். அவர்களில் சில பெயர்களை மட்டும் சொன்னால் சரியாக இருக்காது. நடிகைகள் மட்டுமல்ல நடிகர்களுடன் நான் நட்பாகவே பழகுவேன். அவர்கள் எல்லோருமே என் மனதில் நல்ல இடம் பிடித்தவர்கள். அவர்களுடன் இன்றும் நான் தொடர்பில் இருக்கிறேன்.

'தமிழில் நடிக்க மாட்டீர்களா?' என்கிறார்கள். சமீபத்தில் விஜய்யுடன் 'காவலன்' படத்தில் நடித்தேன். விரைவில் நல்ல கதை அம்சமுள்ள படத்தில் நடிப்பேன். 'காவலன்' படத்தில் நடிப்பது எனக்கும், விஜய்க்கும் சவாலாகவே இருந்தது. சவாலான வேடங்கள் வரும்போது நிச்சயம் தவறவிட மாட்டேன். 'கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடிக்கிறீர்களா?' என்கிறார்கள். இப்படத்திற்காக என்னை அணுகினார்களா என்பதற்கு ஆம், இல்லை என்று எந்த பதிலும் இப்போதைக்கு நான் சொல்ல முடியாது. ஒரு நடிகையாக ரஜினியுடன் நடிக்க எப்போதும் ஆசையாகவே இருக்கிறேன். திரையுலகில் அவர் மிகச் சிறந்த மனிதர். அவருடன் விரைவில் ஜோடியாக நடிப்பேன் என்று நம்புகிறேன். இவ்வாறு அசின் கூறினார்.

 

சி.பி.ஐ அதிகாரியாக விஜயலட்சுமி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அமுதன் இயக்கும் 'ரெண்டாவது பட'த்தில் விஜயலட்சுமி சி.பி.ஐ அதிகாரியாக நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இரண்டு சவாலான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஒன்று 'வன யுத்தம்'. சந்தனக்கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கேரக்டர். அடுத்து 'ரெண்டாவது படம்'. இதில் சி.பி.ஐ அதிகாரி. இதற்காக நிறைய ஹோம் ஒர்க் செய்கிறேன். என் தோழியின் அம்மா சி.பி.ஐ.யில் பணியாற்றுகிறார். அவரை சந்தித்து சில விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொண்டேன். இளம் அதிகாரி என்பதால் மாடர்ன் உடைகள் அணிந்து நடிக்கிறேன். இரண்டு படங்களும் நேரெதிர் கதைகளைக் கொண்டது.

 

மெரினாவில் விக்ரம், சினேகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'பசங்க' புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம், 'மெரினா'. பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சிவ கார்த்திகேயன், ஓவியா, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். கிரிஷ்.ஜி இசை அமைத்துள்ளார். நா.முத்துக்குமார், யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா, மெரினா கடற்கரையில் இன்று நடக்கிறது. இதுபற்றி பாண்டிராஜிடம் கேட்டபோது கூறியதாவது: மெரினா கடற்கரையில், குழந்தைகளின் உலகம், காதலர்களின் உலகம், வயதானவர்களின் உலகம், இவற்றை யதார்த்தமாக, காமெடியாக, உணர்வுப்பூர்வமாகப் பேசும் படம் இது. படத்துக்கான புரமோஷன் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளோம். காலையிலிருந்து இரவு வரை சென்னை எப்படியிருக்கும் என்று சொல்லும் பாடலை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். 'வணக்கம், வாழவைக்கும் சென்னை' என்று தொடங்கும் இந்தப் பாடலில் விக்ரம், பிரகாஷ் ராஜ், இயக்குனர்கள் அமீர், சசிகுமார், சினேகா, விமல் ஆகியோர் நடித்துள்ளனர். இது வித்தியாசமாக இருக்கும். இன்று பாடல் வெளியீடு இருக்கிறது. மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவிட்டு மெரினா பகுதியில் வாழும் சிறுவர்களை கொண்டு பாடல் வெளியிடப்படுகிறது. படம் முடிந்துவிட்டது. பிப்ரவரி மாதம் படம் வெளியாகும். இவ்வாறு பாண்டிராஜ் கூறினார்.

 

லிப் டு லிப் காட்சியில் காஜல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் லிப் டு லிப் காட்சியில் நடித்துள்ளார் காஜல் அகர்வால். 'நான் மகான் அல்ல', 'மாவீரன்' போன்ற படங்களில் நடித்திருப்பவர் காஜல்  அகர்வால். தற்போது 'மாற்றான்' படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மகேஷ்பாபுவுடன் 'பிஸ்னஸ்மேன்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் மகேஷ்பாபு, காஜல் 'லிப் டு லிப்' முத்தமிடும் காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. இதில் நடிக்க மறுத்துவந்தார் மகேஷ்பாபு. கதைக்கு முக்கிய தேவை என்பதால் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் புரி ஜெகநாத் கூறி வந்தார்.
இதுபற்றி மகேஷ் பாபு தனது  மனைவி நம்ரதாவிடம் ஆலோசித்தார். முத்தக்காட்சியில் நடிக்க அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து சமீபத்தில் இக்காட்சியில் மகேஷ்பாபு நடித்தார். இதுபற்றி இயக்குனர் புரி ஜெகநாத் கூறும்போது,''இப்படத்தில் மகேஷ்பாபு, காஜல் அகர்வால் லிப் டு லிப்  காட்சி இருக்கிறது. படம் ரிலீஸானதும் அது காட்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். மேலும் இப்படத்தை சமீபத்தில் மகேஷ்பாபு மனைவி நம்ரதாவுக்கு திரையிட்டு காட்டினேன். அவர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக நன்கு ரசித்துப்பார்த்தார்'' என்றார்.