'மெட்ராஸ் கபே ரிலீசாகும் அரங்குகளுக்கு பாதுகாப்பு வேண்டும்!' -தயாரிப்பாளர்

சென்னை: மெட்ராஸ் கபே படம் ரிலீசாகும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என அப்படத்தின் தயாரிப்பாளர் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போரை மையமாக வைத்து நடிகர் ஜான் ஆபிரகாம் "மெட்ராஸ் கபே' என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தை ஷீகித் சர்கார் என்பவர் இயக்கியுள்ளார்.

'மெட்ராஸ் கபே ரிலீசாகும் அரங்குகளுக்கு பாதுகாப்பு வேண்டும்!' -தயாரிப்பாளர்

இந்த திரைப்படம் இம் மாதம் 23-ஆம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 70 திரையரங்குகளில் திரையிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஈழ விடுதலைப் போரை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் இயக்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளை கேவலமாகச் சித்தரித்துள்ளதால் இந்த திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் அறிவித்துள்ளன.

'மெட்ராஸ் கபே ரிலீசாகும் அரங்குகளுக்கு பாதுகாப்பு வேண்டும்!' -தயாரிப்பாளர்

இதனால் அந்தப் படத்தை வெளியிட இப்போது திரையரங்குகள் தயங்குகின்றன. பிரச்சினையைத் தவிர்க்க சில திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வேண்டாம் என கூறிவிட்டன.

இதனால் அந்தப் படத்தை வெளியிடும் நிறுவனத்தின் நிர்வாகி விஜய ஆறுமுகம், சென்னை கமிஷனர் ஜார்ஜை திங்கள்கிழமை சந்தித்து, சென்னையில் "மெட்ராஸ் கபே' திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனு கொடுத்தார்.

 

மீண்டும் நாயகனின் ஜோடியாகும் சர்ச்சை நடிகை?

சென்னை: விஸ்வரூபம் எடுத்த நடிகரின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சின் நடிகையை கேட்டுள்ளார்களாம்.

விஸ்வரூபம் எடுத்த நாயகன் 10 அவதாரம் எடுத்த படத்தில் சின் நடிகை ஜோடியாக நடித்தார். அதன் பிறகு சின் இந்தி படங்களில் நடிக்கவே முன்னுரிமை கொடுத்து மும்பையில் செட்டிலாகாவிட்டார்.

இந்நிலையில் விஸ்வரூப நடிகர் லிங்கமான இயக்குனரின் தயாரிப்பில் நடிக்கும் படத்திற்கு கன் நாயகியிடம் கேட்டுள்ளனர். அவரோ கால்ஷீட் பிரச்சனையாக உள்ளது என்று மறுத்துவிட்டாராம்.

இதையடுத்து சின் நடிகையை மீண்டும் விஸ்வரூப நாயகனுக்கு ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். நாயகன் பத்து அவதாரம் எடுத்த படத்தில் சின் நடிகையைப் பார்த்த ரசிகர்கள் என்னடா ஹீரோயின், சே, வேறு யாரையாவது போட்டிருக்கலாம் என்று அலுத்துக் கொண்டது தயாரிப்பு வட்டத்துக்கு தெரியாது போன்று.

 

மெட்ராஸ் கஃபேவை மலேசியாவில் திரையிடக் கூடாது: தமிழர்கள் போராட்டம்

கோலாலம்பூர்: மலேசிய அரசு சாரா தமிழ் இயக்கங்களின் முடிவின்படி "மெட்ராஸ் கஃபே" படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதம் நேற்று மலேசிய உள்துறை அமைச்சகம், மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியம் ஆகியவற்றுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் தொலைநகலிலும் அக்கடிதம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மலேசியா தமிழர்களின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது,

மெட்ராஸ் கஃபே படத்தை அமைதிப் பூங்காவாக இருக்கும் மலேசியாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது. ராஜபக்சே உதவியுடன் வெளிவரும் இப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், உடமைகளையும் உரிமைகளையும் இழந்து வாழும் ஈழத் தமிழர்களை களங்கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. ஆகவே இப்படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோருகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் கஃபேவை மலேசியாவில் திரையிடக் கூடாது: தமிழர்கள் போராட்டம்

மெட்ராஸ் கஃபே படத்திற்கு எதிராக உலகத் தமிழர்களின் போராட்டம் வலுத்துள்ளது. இப்போது அப்படத்தை எதிர்த்து மலேசியா தமிழர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதே போல் இங்கிலாந்திலும் சினி வேர்ல்ட் நிறுவனத்திடம் மெட்ராஸ் கஃபே படத்தை திரையிடக் கூடாது என்ற கோரிக்கையை ஈழத் தமிழர்கள் முன்வைத்துள்ளனர். இதனால் தினமும் சினி வேர்ல்ட் நிறுவனத்திற்கு பல அழைப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. கனடா நாடு டொரண்டோவில் ஈழத் தமிழர்கள் இப்படத்தை திரையிடக் கூடாது என கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

மெட்ராஸ் கஃபே படத்தை தமிழகத்தில் திரையிடக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

100 வயது ‘அல்சமீர்’ ரசிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து வீடியோ அனுப்பிய அமிதாப்

100 வயது ‘அல்சமீர்’ ரசிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து வீடியோ அனுப்பிய அமிதாப்

மும்பை: அல்சமீர் நோயால் பாதிக்கப்பட்ட 100 வயது ரசிகை ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை வீடியோ மூலம் அனுப்பி, அவரை குஷிப்படுத்தியுள்ளார் அமிதாப்.

பாலிவுட் மெகா சூப்பர்ஸ்டாரான அமிதாப்க்கு சமீபத்தில் ஒரு கோரிக்கை விண்ணப்பம் வந்தது. அதில், பெர்ண்டைன் டி'சௌவ்சா என்ற 100 வயது பாட்டி ஒருவர் தீவிர அமிதாப் ரசிகை எனவும், அவர் தற்போது அல்சமீர் நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. மேலும், ஆகஸ்ட் 18ம் தேதி பெர்ண்டைன்னின் 100வது பிறந்தநாள், அதற்கு தாங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்வும் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

அல்சமீர் நோயால் பாதிக்கப் பட்டிருந்தாலும் பெர்ண்டைனிற்கு அமிதாப் பெயர் மட்டும் இன்னும் நினைவில் உள்ளதாம். அமிதாப் வந்து பார்ப்பார் என்ரு சொல்லிச் சொல்லி தான் அவரை சாப்பிட, உறங்க வைக்கிறார்களாம் அவரது குடும்பத்தார்.

இதனைக் கேள்விப்பட்ட அமிதாப் உடனடியாக, பெர்ண்டைன்னை வாழ்த்தி ஒரு வீடியோ மெசேஜ் அனுப்பி வாழ்த்தியுள்ளார் தனது ரசிகையை. இது குறித்து தனது பிளாக்கில் பின்வருமாறு கூறியுள்ளார் அமிதாப்....

ஆகஸ்ட் 18ம் தேதியோடு 100 வயதைத் தொடும் பெர்ண்டைன் பற்றிக் கேள்விப்பட்டேன். அல்சமீர் நோயால் பாதிக்கப் பட்டிருந்த போதும், அவர் என்னை மட்டும் நினைவில் கொண்டிருப்பது ஆச்சர்யமாகவும், அதேசமயம் மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. அவரை வாழ்த்தும் படி அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரை வாழ்த்தி வீடியோ வாழ்த்து அனுப்பியுள்ளேன். நான் வருவேன் எனக் கூறி ஏமாற்றியே அவரை சாப்பிட, தூக்க வைப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது' எனத் தெரிவித்துள்ளார்.

 

ரோட்டோர கடையில் டிபன்... ரசிகர்கள் ஆசை தீர போட்டோ - உச்சி குளிர வைத்த அஜீத்

சென்னை: நேற்று முன்தினம் பெங்களூருக்கு தனது புதிய பைக்கிலேயே பயணம் செய்த நடிகர் அஜீத், வழியில் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

பெங்களூரில் ஓய்வெடுக்க நேற்று தனது பிஎம்டபுள்யூ டுகாட்டி பைக்கில் கிளம்பிய அஜீத், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர் வழியாக பெங்களூர் போனார்.

அப்போது ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை கிராமத்தில் ரோட்டோர உணவகம் ஒன்றைப் பார்த்ததும், தனது பைக்கை நிறுத்தினார்.

ரோட்டோர கடையில் டிபன்... ரசிகர்கள் ஆசை தீர போட்டோ - உச்சி குளிர வைத்த அஜீத்

அவருடன் கார் மற்றும் பைக்கில் வந்த 8 நண்பர்கள் மற்றும் உதவியாளர்களும் அங்கேயே வாகனங்களை நிறுத்திவிட்டு, அஜீத்துடன் சாப்பிட அமர்ந்தனர்.

வந்திருப்பவர் நடிகர் அஜீத் என்பதை அவர் ஹெல்மட் கழட்டியதுமே தெரிந்து கொண்ட கடைக்காரருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லையாம்.

அஜீத்துக்கு விருப்பமானதை கேட்டு பரிமாற ஆரம்பித்தபோது, விஷயம் தெரிந்து ரசிகர்கள் குழுமிவிட்டனர்.

அவர்களை உதவியாளர்கள் விலக்க முயன்றபோது, அஜீத் தடுத்துவிட்டாராம். ரசிகர்களைத் தன்னிடம் அழைத்து அவர்களை நலம் விசாரித்த அஜீத், ரசிகர்கள் விரும்பிய அளவுக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

ரோட்டோர கடையில் டிபன்... ரசிகர்கள் ஆசை தீர போட்டோ - உச்சி குளிர வைத்த அஜீத்

ரசிகர்களையும் தன்னோடு உணவு அருந்தும்படி கூறினார். ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்கள்.

சிறிது நேரத்தில் நிருபர்கள், போட்டோ கிராபர்களும் திரண்டனர். அவர்களிடம் தான் பெங்களூருக்கு ஓய்வுக்காக ஜாலியாக பைக்கில் போவதாகவும், ஓய்வு நேரத்தில் பைக் ரேசில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வீரம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

இன்று ரிலீஸாகும் தலைவா படத்தின் டிவிடியை விற்ற மாரிமுத்து, மாரியப்பன் கைது

இன்று ரிலீஸாகும் தலைவா படத்தின் டிவிடியை விற்ற மாரிமுத்து, மாரியப்பன் கைது

தூத்துக்குடி: பெரும் பஞ்சாயத்துக்குப் பின்னர் இன்று திரைக்கு வரும் தலைவா படத்தின் டிவிடி விற்ற இருவரை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி வடபாகம காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாத படங்களின் சிடிக்களும், டிவிடிக்களும் தூத்துக்குடி பகுதியில் விற்கப்படுவதாக ரகசிய புகார்கள் வந்ததால் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு திரைக்கே வராத தலைவா மற்றும் நன்றாக ஓடி கொண்டிருக்கும் சிங்கம் 2, மரியான், ஐந்து ஐந்து ஐந்து, ஆதலால் காதல் செய்வீர், பட்டத்துயானை, சொன்னா புரியாது, உள்ளிட்ட படங்களின் டிவிடிக்களும், வீடியோ பாடல்களும், எம்பி 3 ஆடியோ டிவிடிக்களு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் 18 தலைவா பட டிவிடிக்கள் உள்பட 990 புதுப்பட மறறும் அனுமதி பெறாத டிவிடிக்கள் அடக்கம்.

இதுபோல் அங்கு குறி்ச்சிநகர் மெயின் ரோட்டில் ஒரு கடையில் சோதனையிட்டபோது 2260 புதுப்பட டிவிடிக்கள் மற்றும் அனுமதியில்லாத டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தமாக 2 கடைகளிலும் 3350 டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை விற்பனை செய்து வந்த அய்யனபன் நகரை சேர்ந்த முனியசாமி மகன் மாரிமுத்து, முத்தம்மாள காலனியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

 

எங்கே செல்லும் இந்தப் பாதை... கவலையில் டீல் பேசும் நடிகை

கர்ஜிக்கும் விலங்கு படமும், உலகப் படமும் மட்டுமே தமிழில் யோகா நடிகை கைவசம் இருந்ததாம். தெலுக்குப் படம் முடிய எப்படியும் வருடங்கள் ஓடி விடுமாம். அந்த இடைப்பட்ட காலத்திற்குள் ரசிகர்கள் தன்னை மறாந்து விடுவார்களோ என அஞ்சுகிறாராம் நடிகை.

ராணி படத்திற்காக வெயிலில் ஆடி, ஓடி நடித்ததில் முகப் பொலிவும் கெட்டு விட்டதாம். வயசான நடிகை என முத்திரை வேறு. இதனால் மனமுடைந்து போன நடிகை, தனக்கு புதிதாக வாய்ப்புகள் வாங்கித் தரும் மானேஜர்களுக்கு அதிரடி கமிஷன் என ஆசை காட்டி வருகிறாராம்.

 

செப்டம்பர் 5 முதல் பின்னணி பாடகர்களுக்கும் ராயல்டி: ஜேசுதாஸ்-எஸ்பிபி பேட்டி!

சென்னை: சினிமாவில் 50 ஆண்டுகளாகப் பாடி வரும் மூத்த பாடகர்களுக்கு வரும் செப்டம்பர் 5-ம் தேதி முதல் காப்புரிமைத் தொகை கிடைக்கிறது. இதனை நேற்று சென்னையில் மூத்த பின்னணி பாடகர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரபல பாடகர்கள், கேஜே ஜேசுதாஸ், எஸ்பி பாலசுப்ரமணியன் மற்றும் பி சுசீலா ஆகியோர் கூறுகையில், "சினிமா பின்னணி பாடகர்-பாடகிகள் நலனுக்காக, பாராளுமன்றத்தில் கடந்த 2012 ஜூன் மாதம் 21-ந் தேதி ஒரு சட்டம் நிறைவேறியது. அதற்கு இந்தி சினிமா பாடல் ஆசிரியர் தாவேத் அக்தர், பின்னணி பாடகர் சோனு நிகம் ஆகிய இருவரும் பெரும் முயற்சி எடுத்தார்கள்.

செப்டம்பர் 5 முதல் பின்னணி பாடகர்களுக்கும் ராயல்டி:  ஜேசுதாஸ்-எஸ்பிபி பேட்டி!

அதைத்தொடர்ந்து, 2013 ஜூன் மாதம் 14-ந்தேதி ‘இஸ்ரா' (இந்திய பாடகர்கள் உரிமை சங்கம்) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு சினிமா பின்னணி பாடகர்-பாடகிகளுக்கு காப்புரிமை மூலம் பணம் வாங்கித் தரும்.

ரேடியோ, செல்போன், இணையதளம் ஆகியவற்றின் மூலம் ஒலிபரப்பாகும் பாடல்களுக்கு காப்புரிமை மூலம் பணம் பெற்றுத்தரும். அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி முதல் இது அமலுக்கு வரும். 1963-லிருந்து 50 வருடங்களாக சினிமாவில் பாடி வரும் பின்னணி பாடகர் - பாடகிகளுக்கு இந்த காப்பு தொகை கிடைக்கும்''என்றனர்.

பேட்டியின்போது, பின்னணி பாடகர்கள் ஹரிகரன், மனோ, டி.எல்.மகாராஜன், பாடகிகள் பி.சுசீலா, வாணி ஜெயராம், சுஜாதா மற்றும் இளம் பின்னணி பாடகர்கள் இருந்தனர்.

 

சன் டிவி மகாபாரதம்: பாண்டவர்கள்– கௌரவர்களின் மோதல் தொடங்கியது…

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மகாபாரதம் தொடர் 25 வது எபிசோடுகளை எட்டியுள்ளது.

பாலகர்களாக இருந்த பாண்டவர்களும், கவுரவர்களும் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டனர். சிறுவர்களாக இருந்தபோதிருந்தே இருவர்களுக்குமிடையே ஏற்பட்டிருந்த போட்டி மனப்பான்மை அவர்கள் வளர வளர போட்டி, பொறாமையும் வளர்ந்து விடுகிறது.

சன் டிவி மகாபாரதம்:  பாண்டவர்கள்– கௌரவர்களின் மோதல் தொடங்கியது…

பாண்டவர்கள் அறிமுகம்

மகாபாரதம் தொடரின் 25 வது எபிசோடில் பாண்டவர்கள், கவுரவர்கள் பெரியவர்களாவிட்டனர். நேற்றைய தினம் அறிமுகக் காட்சி ஒளிபரப்பானது.

துரியோதனன் - பீமன்

துரியோதனனும், பீமனும் ஆக்ரோஸமாக மோதிக்கொண்டனர். இதைக்கண்டு பயந்த பீஷ்மர் அவர்களின் சண்டையை நிறுத்துமாறு துரோனோச்சாரியரிடம் கூறவே அவர், அஸ்வத்தாமனிடம் கட்டளையிடுகிறார். குருவின் மீது ஆணையிட்டு இருவரின் சண்டையை நிறுத்துகிறார் அஸ்வத்தாமன்.

அர்ஜூனனின் வித்தை

பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் அர்ஜூனன் தனது வித்தையை காண்பிக்கிறான். அப்போது அந்த கூட்டத்தில் கர்ணனின் வருகிறான்.

மயங்கிய குந்தி

கவசகுண்டலம் அணிந்த அந்த இளைஞனை பார்க்கும் போது குந்தி தேவிக்கு தனது மகனின் நினைவு வருகிறது. உடனே மயக்க நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

போட்டியிட தயாரா?

வில் வித்தையில் அர்ஜூனன் மட்டும் சிறந்தவனல்ல. தன்னுடைய திறமையை நிரூபிக்க வாய்ப்பளிக்க கோருகிறான் கர்ணன். அதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக என்பதை அடுத்த வாரம் காணலாம்.

பிரம்மாண்ட தயாரிப்பு

அர்ஜுனனின் வில் வித்தை சாகசங்கள், பீமன், துரியோதனனுக்குமான சண்டைக் காட்சிகள், மற்றும் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளதாக இயக்குநர் சசிகுமார் கூறியுள்ளார்.

200 எபிசோடுகள்

இந்தியில் வந்த ‘மகாபாரதம்' வெறும் 56 எபிசோட்தான். இதனால் அதிகமாக கதை சொல்லி இருக்க மாட்டார்கள். மகாபாரதத்தில் இருந்து சொல்லப்படாத புதிய கதைகளையும் சொல்லுகிறோம். இது 200 எபிசோடை தாண்டும், இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்கிறார் சசிகுமார்.

சன் டி.வியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் ‘மகாபாரதம்' தொடரில் ‘பூவிலங்கு' மோகன், அமித் பார்கவ், ஓ.ஏ.கே சுந்தர், இளவரசன், மனோகர், தேவிப்பிரியா, ஐஸ்வர்யா, பூஜா உட்பட பலர் நடிக்கின்றனர்.

 

கட்சிகளின் உருட்டல், மிரட்டலுக்கு பணிய மாட்டாராம் 'மெட்ராஸ் கஃபே' ஜான் ஆபிரகாம்

டெல்லி: மெட்ராஸ் கஃபே தொடர்பான அரசியல் கட்சிகள், அமைப்புகளின் மிரட்டலை ஏற்க முடியாது என்று ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

ஜான் ஆபிரகாம் நடித்துள்ள இந்தி படமான மெட்ராஸ் கஃபே நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. ஆனால் படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் போன்று சித்தரித்துள்ளனர் என்று கூறி அதற்கு தடை விதிக்குமாறு நாம் தமிழர் கட்சி மற்றும் மதிமுக ஆகியவை தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

கட்சிகளின் உருட்டல், மிரட்டலுக்கு பணிய மாட்டாராம் 'மெட்ராஸ் கஃபே' ஜான் ஆபிரகாம்

இந்நிலையில் படத்தை தயாரித்து நடித்துள்ள ஜான் ஆபிரகாம் கூறுகையில்,

நான் புதிய தயாரிப்பாளர். இதுவரை ஒரு படம் மட்டுமே ரிலீஸ் செய்துள்ளேன் என்கின்றனர். மெட்ராஸ் கஃபே போன்ற படத்தை யாராவது எடுக்க வேண்டும். கட்சிகள், அமைப்புகளின் மிரட்டலை ஏற்க முடியாது. வரும் காலத்திலும் இது போன்ற படங்களை எடுப்போம். இது போன்ற படங்களில் எந்த பிரச்சனையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

இந்த ஜனநாயக நாட்டில் எனக்கு பேச்சு சுதந்திரம் உள்ளது என்றார்.