டிவி காமெடி நிகழ்ச்சி ஜட்ஜாகிறார் ‘கிரிக்கெட் புகழ்’ மந்த்ரா பேடி.. மற்றொரு ஜட்ஜ் ரவீணா!

மும்பை: சினிமாைவை விட டிவி கிரிக்கெட் வர்னணை நிகழ்ச்சி ஒன்றிற்கு 'அமர்க்களமான' ஆடைகள் அணிந்து வந்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மந்த்ரா பேடி.

டிவி காமெடி நிகழ்ச்சி ஜட்ஜாகிறார் ‘கிரிக்கெட் புகழ்’ மந்த்ரா பேடி.. மற்றொரு ஜட்ஜ் ரவீணா!

இவர் தற்போது மீண்டும் சின்னத்திரை பிரவேசம் செய்ய இருக்கிறார். இம்முறை சற்று வித்தியாசமாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக களமிறங்குகிறார் மந்த்ரா. அதுவும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஜட்ஜாக.

இது தொடர்பாக மந்த்ரா கூறுகையில், ‘ எனக்கும் நகைச்சுவைக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால் இந்நிகழ்ச்சியின் நடுவராக பங்கு பெறுவது எனக்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

அதே போல், இந்த காமெடி நிகழ்ச்சியின் மற்றொரு ஜட்ஜாக பிரபல நடிகை ரவீணா டாண்டன் இடம் பெறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

என் இடத்தை பிடிச்சுடுவாளோ... பயத்தில் போட்டி நாயகிகள்

சென்னை: விரல் நடிகரின் முன்னாள் காதலி சண்டைக்கலை படத்தைத் தொடர்ந்து சில புதிய தமிழ்ப் படங்களை கைப்பற்றியுள்ளார்.

ஆனால், தமிழில் இதுவரை சொல்லிக் கொள்கிற மாதிரி வெற்றிப் படங்களைத் தராத போதும் புத்தரின் உண்மைப் பெயரைக் கொண்ட நாயகனோடு சேர்த்து கிசுகிசுக்கப் படும் தோல் பிரச்சினை நாயகியும் சின்னப்பூவுக்கு போட்டியாக சில முக்கியப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனால், டென்ஷனான பூ நடிகை தோ நடிகைக்கு போட்டியாக தெலுங்கில் வலை வீசி சில முக்கியப் படங்களைக் கைப்பற்றியுள்ளாராம்.

இதனால், தான் மீண்டும் தெலுங்குப் பக்கம் போவதற்குள் தன் இடத்தைப் பிடித்து விடுவாரோ என பூ நடிகையைப் பார்த்து தோல் நாயகி பயப் படுகிறாம்.

 

இந்த நடிகை என் படத்தோட இமேஜை கெடுத்துடும் போலயே: கவலையில் ஹீரோ

சென்னை: உத்தம வில்லனின் இளைய மகளின் காதல் விவகாரத்தால் தனது படத்தின் இமேஜ் பாதிக்கப்படுமோ என்று சுள்ளான் நடிகர் அஞ்சுகிறாராம்.

உத்தம வில்லனின் இளைய மகள் இயக்குனர் ஆகும் ஆசையில் மும்பை சென்று இந்தி படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் நம்ம ஊர் சுள்ளான் நடிகரின் ஜோடியாக ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

நடிகைக்கும் அவரது அப்பாவுடன் நடித்த இரண்டு எழுத்து நடிகையின் மகனுக்கும் இடையே காதல் என்று பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. இந்த நடிகையின் காதல் விவகாரத்தால் எங்கே தனது படத்தின் இமேஜ் பாதிக்கப்படுமோ என்று சுள்ளான் அஞ்சுகிறாராம்.

சுள்ளான் நடிகரின் முதல் இந்தி படம் ரூ. 100 கோடி வசூல் சாதனை செய்ததுடன் அவருக்கு பெரும் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மதுரையில் இளையராஜா... லட்சக்கணக்கில் திரண்ட ரசிகர்கள்.. குலுங்கியது கோவில் மாநகரம்!

- மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்து சங்கர்

மதுரை: மதுரையில் தடுக்கி விழுந்தால் இட்லிக் கடை, இடியாப்பக் கடை, இனிக்க இனிக்க உணவகங்கள, பாசக்கார மக்கள், எம்.ஜி.ஆர். ரசிகர்கள், ரஜினி பாலுக்கள், கமல் ராஜ்கள், நள்ளிரவு 12 மணிக்கும் உற்சாகம் குறையாமல் விழுந்து விழுந்து பேசிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம்... சிட்டுக் குருவியின் சுறுசுறுப்புடன் ஜில்லென்று உழைத்துக் குவிக்கும் மக்கள் கூட்டத்தில் சிக்கித் தவிக்கும் சிம்மக்கல்.. இப்படி நிறைய அடையாளங்கள்.. கூடவே காது குளிர இளையராஜாவின் பாட்டுக்கள்.

மதுரையில் இளையராஜா... லட்சக்கணக்கில் திரண்ட ரசிகர்கள்.. குலுங்கியது கோவில் மாநகரம்!

மதுரையின் அசைக்க முடியாத ஒரு அங்கம்தான் இளையராஜா. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் பண்ணைப்புரத்திலிருந்து வந்தவரான ராஜா இசை உலகின் உச்சம் தொட்ட பிறகும் கூட இதுவரை ஒருமுறை கூட மதுரையில் இசை நிகழ்ச்சியை நடத்தியதில்லை.

எலலா ஊருக்கும் போறீயே ராசா.. நம்ம ஊருக்கும் வாயேய்ய்யா வெரசா என்று மக்களெல்லாம் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் இன்று பங்குனி வெயிலை விரட்டியடித்து மதுரை முழுவதையும் குளிர வைத்துள்ளார் ராஜா - தனது இசை வருகையின் மூலம்.

ஊரெங்கும் பெரும் உற்சாகம். எங்கு பார்த்தாலும் உற்சாக அலை மோதல்கள். அத்தனை சாலைகளும் தமுக்கத்தை நோக்கி திருப்பி விடப்பட்டதைப் போல ஜன சமுத்திரம் அலை கடலென அடித்துப் பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறது.

மதுரையில் இளையராஜா... லட்சக்கணக்கில் திரண்ட ரசிகர்கள்.. குலுங்கியது கோவில் மாநகரம்!

சித்திரைத் திருவிழாவுக்குத்தான் இப்படி மதுரை அல்லோகல்லப்படும். ஆனால் இளையராஜாவால் பங்குனியிலேயே விழாக் கோலம் பூண்டு விட்டது மதுரை. சும்மாவே எங்காளுங்க ராத்திரி கூட தூங்காமல் திரிவார்கள்.. இன்றைய ராத்திரி ஊருக்கு சிவராத்திரிதான் என்ற செல்லமான அலுப்புகள்.

தமுக்கம் மைதானம் நிரம்பி வழிகிறது. டிக்கெட் இல்லை என்ற போதிலும் சீறிப் பாய்ந்து குவிந்து கொண்டிருக்கிறது ரசிகர் கூட்டம்.

திருவிழாவுக்குச் செல்வது போல சீவி சிங்காரித்து குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருவதைப பார்த்து இந்தத் திருவிழாவுக்குப் 'போக மறந்தவர்கள்' ஆச்சரியத்துடன் பார்க்கும் அளவுக்கு விறுவிறுப்பான ஒரு காட்சி அரங்கமாக மதுரை மாறிப் போயிருக்கிறது.

பல சாலைகளில் வாகனங்களின் கூட்டம் காரணமாக ஒரு வழிப் பாதையாக மாற்றியுள்ளனர் காவல்துறையினர். அவர்களும் கூட இத்தனை பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. இதனால் மைதானத்திற்கு வருவோருக்கும், பொது மக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து மாற்றங்களை செய்து கூட்டத்தை கையாண்டு வருகின்றனர்.

மதுரையில் இப்படி ஒரு கூட்டம், இதுவரை கண்டதில்லை. அழகர் ஆற்றில் இறங்கும்போது கூடும் கூட்டத்தைப் போலவே இந்த ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. மதுரையே கிட்டத்தட்ட ராஜாவின் ரசிகர் மன்றம்தான்.. அவரே முதல் முறையாக வந்திருப்பதால் ஒட்டுமொத்த ஊரும் உற்சாகமாகி விட்டது, அம்புட்டுதான், போய்க் கச்சேரியை கேட்டு ரசியுங்க என்று கூறுகிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.