பெண்களுக்குக் காமம் அதிகமாம்... சொல்கிறது 'குற்றாலம்'..!

What Is The Story Kutralam

ஒரு காலத்தி்ல உயிர் என்ற பெயரில் ஒரு படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொழுந்தன் மீது ஆசைப்பட்ட அண்ணியின் கதை. இந்தப் படத்தை சாமி இயக்கியிருந்தார். பிறகு அவரே மறுபடியும் ஒரு வில்லங்கப் படத்தை இயக்கியிருந்தார். சிந்துசமவெளி என்று பெயரிடப்பட்ட அதில் மருமகள் மீது ஆசைப்படும் மாமனாரின் கதையை சொல்லியிருந்தார்.

இந்த வகையில் இப்போது மீண்டும் ஒரு வில்லங்கமான படமாக உருவாகி வருகிறதாம் குற்றாலம் என்ற படம். சஞ்சய் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் இது. முதலில் இதற்கு அவர்கள் வைத்த பெயர் ரோசா. பின்னர்தான் இதை குற்றாலம் என்ற பெயரில் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்தப் படத்தின் கதையே படு வில்லங்கமானதாக இருக்கிறதாம். அதாவது இப்படத்தில் நாயகிகளாக நடிக்கும் மீனு கார்த்திகாவும், செளகந்தியும் அக்கா, தங்கச்சியாம். படத்தின் கதைப்படி அக்காவுக்கு, தங்கச்சி புருஷனுடன் கள்ளத் தொடர்பு இருக்கிறதாம். இது அக்காவுக்கும் தெரியுமாம்.

இந்தக் காட்சியைத்தான் சமீபத்தில் குற்றாலத்தில் படமாக்கினார்களாம். காட்சியமைப்பைப் பார்த்து படக் குழுவினரை அதிர்ந்து போயுள்ளனராம். வில்லங்கமான சீனா இருக்கே என்று இயக்குநரிடம் குழுவினர் கேட்டபோது, பெண்களுக்குத்தான் ஆண்களை விட காம உணர்வு அதிகம். மேலும் இப்படிப்பட்ட காட்சிகள் வீடுகளில் இருக்க்த்தானே செய்கிறது. அதைத்தானே படம் பிடிக்கிறேன் என்றாராம்.

இந்தப் படம் என்னவெல்லாம் வில்லங்கத்தைக் கொண்டு வரப் போகிறதோ என்ற அச்சம் இப்பவே கிளம்பியிருக்கிறதாம்!

 

நான் 'போர்ன் மம்மி'யா?... மறுக்கிறார் எம்மா வாட்சன்!

Emma Watson Denies Being Cast As An Anastasia Steele

லண்டன்: பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நூல் படமாகப் போகிறது. அந்தப் படத்தில் ஹீரோயின் ரோலில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏஞ்செலீனா ஜூலி தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் எம்மா வாட்சனை இப்படத்தில் நாயகியாக நடிக்க அணுகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.

இங்கிலாந்து பெண் எழுத்தாளர் இஎல் ஜேம்ஸ் எழுதிய நாவலான பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நூலாகும். விற்பனையில் பெரும் சாதனை படைத்த அந்த நாவல் ஒரு போர்ன் நாவலாகும். இந்த நூல் இல்லாத பெண்களை இங்கிலாந்தில் இல்லை என்று கூறும் அளவுக்கு பரபரப்பையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த நாவலைப் படமாக எடுக்கப் போகிறார்களாம். அதில் நடிக்க பல நடிகைகளும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக ஏஞ்செலீனா ஜூலி வெளிப்படையாக ஆர்வம் தெரிவித்துள்ளார். அதேசமயம், படத்தின் முக்கிய வேடமான அனஸ்தீசியா ஸ்டீல் ரோலில் நடிக்க எம்மா வாட்சனை தேர்வு செய்துள்ளதாகவும், அவரிடம் கதை கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் அதை வாட்சன் மறுத்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக ஹாரி பாட்டர் திரைப்படங்களில் நடித்துக் கலக்கியவர்தான் எம்மா வாட்சன். இந்த நிலையில் அவரைத் தேடி பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே திரைப்படம் தேடி வந்துள்ளது. அதுவும் போர்ன் மம்மி கேரக்டரில் நடிக்க.

இருப்பினும் தான் இதில் நடிப்பது குறித்து யாரும் அணுகவில்லை, என்றும் படத்தின் திரைக்கதையை தான் இன்னும் படிக்கவில்லை என்றும் கூறியுள்ளார் எம்மா.

22 வயதான எம்மா இதுகுறித்துக் கூறுகையில், இதுதொடர்பாக யாரும் என்னிடம் இதுவரை பேசவில்லை. மேலும் இதில் தான் நடிக்கும் வாய்ப்பு இல்லை. அந்த நூலைக் கூட நான் இதுவரை படிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஜூலி தானாக முன்வந்து விருப்பம் தெரிவித்திருக்க, எம்மாவின் பெயர் அடிபட, அதேபோல கேத்தி கேஸிடியின் பெயரும் இதுதொடர்பாக அடிபட ஆரம்பித்துள்ளது. இவர்களைப் போல மேலும் பல நாயகிகளின் பெயரும் அடிபட ஆரம்பித்துள்ளதால், யார் அந்த மயக்கும் மாயக் கன்னியின் ரோலில் நடிக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

 

எளிமையான நடிகர்கள்தான் நாதஸ்வரத்தின் பலம் : திருமுருகன்

Nathaswaram Tirumurugan Interview

மெட்டி ஒலியை இல்லத்தரசிகளிடம் ரசிக்க வைத்த திருமுருகன் இப்பொழுது வீடுகள் தோறும் நாதஸ்வர ஓசையை கேட்கவைத்திருக்கிறார். திரு பிக்சர்ஸ் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகத்திறமை படைத்தவர். ‘நாதஸ்வரம்' படப்பிடிப்பிற்காக காரைக்குடி பகுதியை சுற்றிக்கொண்டிருக்கும் திருமுருகன் தனது சின்னத்திரை பயணம் பற்றி கூறியுள்ளார்.

மெட்டி ஒலிக்கு பிறகு எம் மகன், முணியாண்டி விலங்கியல் மூண்றாமாண்டு படங்களை இயக்கினேன். ரெண்டு படங்களுமே எனக்கு திருப்தி கொடுத்த படங்கள்தான். அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் ரெடி இருந்தாலும் நாதஸ்வரத்தில் இயக்கம், தயாரிப்புன்னு இரட்டை குதிரை சவாரி செய்யவேண்டியிருக்கிறது. இப்பொழுது கார்த்திகை பெண்கள் என்ற நெடுந்தொடரையும் தயாரிப்பதால் ரொம்ப பிஸி.

நாதஸ்வரம் கதை எங்களை நாடோடிகள் மாதிரி ஆக்கிடுச்சு. காரைக்குடியில்தான் பெரும்பாலான ஷூட்டிங் என்றாலும், பேராவூரணி, திருப்புலானி உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சென்று அங்கேயே தங்கியிருந்து ஷூட்டிங் நடத்துகிறோம். பல ஊர்களில் இந்த கதை பயணிப்பதால் கதை போன போக்கிலேயே நாங்களும் பயணிக்கிறோம்.

நாதஸ்வரம் தொடரில் ஒரு சிலரைத்தவிர பெரும்பாலும் புதுமுகங்கள்தான். பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டிருந்தால் ஆடியன்ஸிற்கு போரடிச்சிடுமே. அதான் கேமிரா என்றால் என்னவென்றே தெரியாத முகங்களா தேடினோம். தமிழகம் முழுக்க வலைவீசிதான் இத்தனை பேரை பிடிச்சோம். கேமிரா முன்னாடி நின்னு பழக்கமில்லாதவர்களை நடிக்கவைப்பது கஷ்டமான வேலை. ரோட்டில நடந்து போறவங்க எப்படி இருப்பாங்களோ அதுமாதிரி சாதாரணமா எளிமையா இருக்குறவங்களைதான் தேர்வு செய்தோம்.

காரைக்குடி செட்டிநாடு பகுதியில் ஒண்டிக்குடித்தனமாய் வாழக்கூடிய நாதஸ்வர வித்வானோட குடும்ப நிகழ்வுகள்தான் கதை. அதை சம்பந்தப்பட்ட பகுதிகளிலேயே எடுப்பதுதான் எதார்த்தமாக இருக்கும். அதான் சிட்டிக்கு வரலை. கதை அங்கு நகரும்போது சிட்டிக்கு வருவோம். சீரியலோட இயல்பை சிதைக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.

தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க வெளிப்புற படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம் என்ற பெருமை '16 வயதினிலே' படத்திற்கு எப்படி இருக்கிறதோ, அதுமாதிரி ‘நாதஸ்வரம்' தொடருக்கும் பெருமை இருக்கு. முதல் முறையா முழுக்க முழுக்க அவுட்டோர் ஷூட்டிங் நடக்கும் தொடர் நாதஸ்வரம்தான் என்று பெருமை பொங்க கூறினார் திருமுருகன்.

 

ரியாலிட்டி ஷோவில் நடிகையின் உள்ளாடை தெரிந்ததால் 'ஷேம் ஷேம்'!

Bethenny Frankel Flashes Audience On Talk Show

பிரபல சி.என்.என் தொகுப்பாளர் ஆண்டர்சன் கூப்பரின் டாக் ஷோவில் பங்கேற்ற டிவி நடிகை பெத்தென்னி பிராங்கெல், அவசரப்பட்டு செய்த காரியத்தால் ஷேம் ஷேம் ஆகி, தர்மசங்கடமாகி விட்டது.

லைவ் ஷோ நிகழ்ச்சி சுவாரஸ்யமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது கூப்பர், பெத்தென்னி இடையே யார் அதிக புஷ் அப் (Push up) செய்வது என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது உணர்ச்சிவசப்பட்ட நடிகை தரையில் வேகமாக குப்புற பாய்ந்தார்.

பாய்ந்த வேகத்தில் அவரது பாவாடை மேல் கிளம்ப, அவரது உள்ளாடை காமிராவில் பதிவாகி உலகெங்கும் ஒளிபரப்பானது.

ஒருகணம் திகைத்து போன நடிகை, சுற்றியிருந்த பார்வையாளர்களை பார்த்து "ஏதாவது பார்த்தீங்களா"? என்ன தெரிந்தது? என்று கேட்டார்.

அவர்களும் விடாமல், ஆமாமா, 'பிங்க்' கலரில் பார்த்தோம் என்று கத்தி அரங்கையே அதிரவைத்தனர். நடிகைக்கு வெட்கக்கேடாகிப் போனதுதான் மிச்சம்.

இனியாவது பார்த்துப் பாய்ங்கம்மா...!

 

நீங்க டிரஸ்ஸைக் கழற்றினால்தான் நான் மார்பைக் காட்டுவேன்.. லின்ட்சே போட்ட கண்டிஷன்!

Lindsay Lohan I Ll Only Bare My Boobs If You Boys Strip

லாஸ் ஏஞ்சலெஸ்: தி கேன்யான்ஸ் என்ற படத்தில் நடிக்கும் ஹாலிவுட் ஹாட் நடிகை லின்ட்சே லோஹன், தான் நடிக்கவிருந்த ஒரு படுக்கை அறைக்காட்சியின்போது கூட இருந்தவர்களையும் டிரஸ்ஸைக் கழற்றுமாறு கேட்டுக் கொண்டதால் அத்தனை பேருக்கும் கிளுகிளுப்பாகி விட்டதாம். நீங்கள் கழற்றினால்தான் நானும் டிரஸ்ஸைக் கழற்றுவேன் என்று லின்ட்சே பிடிவாதமாக கூறியதால் நெளிந்து போய் விட்டார்களாம். இருந்தாலும் கடைசியில் லின்ட்சேதான் ஜெயித்தாராம்....!

தி பிளேபாய் படத்தில் நிர்வாணமாக நடித்தவர்தான் லின்ட்சே. இந்த நிலையில் தற்போது தி கேன்யான்ஸ் என்ற படத்தில் மேலாடை இல்லாமல் வெற்று மார்புடன் நடிப்பது போல ஒரு காட்சி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு நடந்தபோது லின்ட்சே ஒரு கண்டிஷன் போட்டார்.

அதாவது நான் மேலாடையைக் கழற்றும்போது இங்கே உள்ள கேமராமேன் உள்ளிட்ட படக் குழுவினரும் தங்களது உடைகளைக் கழற்றி விட வேண்டும். ஜட்டி மட்டும் வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும், நீங்கள் கழற்றினால்தான் நானும் கழற்றுவேன் என்று கூறி விட்டாராம்.

இதைக் கேட்டு அதிர்ந்து போன படக் குழுவினர் என்னடா இது ஹாலிவுட்டுக்கு வந்த நூதனச் சோதனை என்று தயங்கியுள்ளனர். இருந்தாலும் லின்ட்சே விடாமல் பிடிவாதமாக இருந்ததால் வேறு வழியின்றி அத்தனை பேரும் ஜட்டிக்கு மாறினார்கள். வெறும் ஜட்டியுடன் படக் குழுவினர் சுற்றி நிற்க லின்ட்சே தனது மேலாடையைத் துறந்தார், நெருக்கமான அந்தக் காட்சியை நெகிழ்ச்சியாக நடித்துக் கொடுத்தார்.

இப்படி ஒரு ஆடை அவிழ்ப்புச் சம்பவம் உலகில் எந்த திரையுலகிலும் நடந்ததில்லை என்று கூறுகிறார்கள்.

நல்லவேளை கோலிவுட்டில் இப்படி ஒரு நடிகை வரவில்லை, இருந்திருந்தால், பலருக்கு பேதி கிளம்பியிருக்கும்... காரணம், இங்கு பலரும் விரும்பி அணிவது பட்டா பட்டியாச்சே...!

 

ஜீ தமிழில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ கேம் ஷோ

Ayirathil Oruvan New Tamizh Game Show On Zee Tv

காலை நேரத்தில் சேனல் மாற்றிக்கொண்டே வந்த போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சியர்ஸ் கேர்ள்ஸ் போல உடையணிந்த நான்கு இளம் பெண்கள் இசைக்கேற்ப உற்சாக நடனமாடிக்கொண்டிருந்தார்கள். என்ன நிகழ்ச்சியாக இருக்கும் என்று பார்த்தால் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‘ஆயிரத்தில் ஒருவன்' என்ற நிகழ்ச்சி என்று தெரியவந்தது.

ஜாக்பாட், ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சிகளைப் போல இதுவும் கேள்விக்கு பதில் கூறி சரியான விடைக்கு பணத்தை பரிசாக வெல்லும் நிகழ்ச்சி இது. பிரபல திரைப்படத்தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவர்களின் மகன் சுப்பு இதனை தொகுத்து வழங்குகிறார்.

சின்னத்திரையில் அரசி தொடரில் வில்லனாக அனைவராலும் அறியப்பட்ட சுப்பு, விளம்பரம், திரைப்படம் என நடித்து வருகிறார். பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் அண்ணனாக நடித்திருந்தார். இப்பொழுது சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சியில் கேள்விக்கு சரியான பதிலை கூறிவிட்டால் பணம் பரிசாக கொண்டுக்கப்படுகிறது. வெற்றி பெற்றவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சியர்ஸ் கேர்ள்ஸ் நடனமாடுவதுதான் பிற சேனல்களில் இல்லாத புதுமை.

 

சினிமா தகவல்களுக்கென நிகில் ஆரம்பித்துள்ள செயலி - கமல் தொடங்கி வைத்து வாழ்த்து!

Kamal Launches Nikil Aps

சென்னை: தமிழ் சினிமா தகவல்களை அளிக்க பிரபல பிஆர்ஓ நிகில் முருகன் ஆரம்பித்துள்ள புதிய செயலி (aps) யை உலகநாயகன் கமல் ஹாஸன் நேற்று முறைப்படி தொடங்கி வைத்து வாழ்த்தினார். அவருடன் கவுதமியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஏற்கனவே நிகில் சினிமா என்ற பெயரிலான யூடியூப் சேனலையும், நிகில்ஸ் சினிமா என்ற இணையதளத்தையும் நிகில் நடத்தி வருகிறார்.

இப்போது திரைப்பட துறை தொடர்பான தகவல்களை உள்ளங்களையிலேயே அளிக்கும் வகையில் 'ஆப்' எனப்படும் செல்போனுக்கான செயலியை நிகில் சினிமா என்ற பெயரில் உருவாக்கியுள்ளார்.

ஆப்பிளின் ஐபோன்,ஐபாட் டச்,ஐபேட், மற்றும் ஆன்டிராய்டு வசதி கொண்ட செல்போன்களில் இந்த செயலி செயல்படக்கூடியது.

திரைப்படத்துறை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வழகும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய சினிமாவின் பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய இதில், குறும் படங்களுக்கான பகுதியும் புதுமுகங்களுக்கான அறிமுக பகுதியும் கூட உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்பட்டு வரும் இந்திய சாப்ட்வேர் நிறுவனமான ஒய்2ஜிஸ்மீ லேப்ஸ் நிறுவனம் இதனை உருவாக்கி தந்துள்ளது.

செல்போனில் திரைப்படத்துறை தகவல்களை தருவதில் முன்னோடி முயற்சியான இந்த செயலியை உலக நாயகன் கமல் ஹாசன் நேற்று வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில், "இந்த இடத்திலிருந்து புறப்பட்ட (கமலின் எல்டாம்ஸ் ரோட் அலுவலகம்..) யாரும் சோடை போனதில்லை. ஸ்ரீதேவிக்கு முதல் ஷாட் இங்குதான் வைத்தார்கள். நண்பர் ரஜினிக்கு இங்குதான் முதல் காட்சி வைக்கப்பட்டது. கண்ணதாசன் இங்கு அமர்ந்து பாட்டெழுதியிருக்கிறார். நானும் இங்கிருந்துதான் வாழ்க்கையைத் தொடங்கினேன். இங்கிருந்து பலர் புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் திறமையுள்ளவர்கள் ஜெயித்திருக்கிறார்கள். நான் ஏதோ சென்டிமென்டுக்காக சொல்லவில்லை. தன்னையுமறியாமல், என்னைப் போல் இந்த இடம் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்டது. அதில் ஒரு இடம் நிகிலுக்கும் கிடைத்திருக்கிறது.

அதற்குக் காரணம் நிகிலின் உழைப்பு. நிகில் சில்வர் ஸ்பூடனுன் பிறந்த பிள்ளை அல்ல. தன் பையில் உள்ள காசைப் போட்டு வெள்ளித் தட்டும் சில்வர் ஸ்பூனும் வாங்கினவர் அவர்.

இன்றைக்கு நிகில் சேனல், சினிமா என வெவ்வேறு தளங்களில் வளர்ந்து கொண்டிருக்கிறார். அவரது நவீனத்தை நோக்கிய பயணம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆளையும் பிடிக்கும், அவரது செயல்களும் எனக்குப் பிடிக்கும்.

இதே வழியில் அவர் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இன்று அவர் தொடங்கியுள்ள நிகில் ஆப்ஸ் தொழில்நுட்பத்துக்கும் எனது வாழ்த்துகள்", என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கவுதமியும் நிகில் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நிகில் முருகன், குமரேசன் அவரது உதவியாளர்கள், நிகில் சேனல், சினிமா, ஆப்ஸ் டெவலப்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு, கமலிடம் வாழ்த்துப் பெற்றனர்.

 

பைவ் ஸ்டார் ஓட்டல்ல ரூம் போடாம ஜெயிச்ச வசனகர்த்தா ஆரூர்தாஸ் - எஸ்பி முத்துராமன்

The Secret Aarurdass S Success

சென்னை: 5 நட்சத்திர ஓட்டலில் 'ரூம்' போடாமல், வெற்றிகரமான வனகர்த்தாவாக ஜொலித்தவர் ஆரூர்தாஸ் என பாராட்டினார் இயக்குநர் எஸ்பி முத்துராமன்.

பழம்பெரும் திரைப்பட கதை-வசனகர்த்தா ஆரூர்தாஸ், 1,000 படங்களுக்கு மேல் கதை-வசனம் எழுதியவர்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகிய இரண்டு பேரின் படங்களுக்கும் ஒரேநேரத்தில் வசனம் எழுதியவர். இவருடைய 60 ஆண்டு கால சினிமா அனுபவங்களை தொகுத்து, 'கோடம்பாக்கத்தில் அறுபது ஆண்டுகள்' என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார்.

இந்த புத்தக வெளியீட்டு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சிவகாமி பெத்தாச்சி கலையரங்கில் நேற்று மாலை நடந்தது.

தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் சார்பில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் புத்தகத்தை வெளியிட, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயலாளர் சச்சு பெற்றுக்கொண்டார்.

விழாவில், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் பேசியதாவது:

"ஆரூர்தாஸ் கதை-வசனம் எழுதுவதற்காக, 5 நட்சத்திர ஓட்டலில் 'ரூம்' போட சொல்ல மாட்டார். வெளிநாடுகளுக்கு போயும் எழுத மாட்டார்.

சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில், பதினைந்துக்கு பத்து பரப்பளவுள்ள ஒரு எளிமையான அறையில்தான் கதை-வசனம் எழுதுவார். அங்கு ஏர்கண்டிஷன் கிடையாது. இயற்கையான காற்றுதான்.

அவர் ஒரு அசைவப் பிரியர். எந்தெந்த உணவு எந்தெந்த ஓட்டலில் ருசியாக இருக்கும்? என்பதை தெரிந்து கொண்டு சாப்பாடு வாங்கி வர சொல்வார்.

அதிகாலை 4 மணிக்கு...

முக்கிய காட்சிகளுக்கு, அதிகாலை 4 மணிக்கே எழுந்து வசனம் எழுதுவார். அவர் வசனத்துக்காக பெயரும், புகழும் வாங்கியது இப்படித்தான். ஒரே வாரத்தில், முழு படத்துக்கும் வசனம் எழுதி விடுவார்,'' என்றார்.

விழாவுக்கு, நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை தாங்கினார். இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி, கவிஞர்கள் முத்துலிங்கம், பிறைசூடன், வசனகர்த்தா வியட்நாம் வீடு சுந்தரம், நடிகைகள் எம்.என்.ராஜம், சச்சு, பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரும் பேசினார்கள்.

ஆரூர்தாஸ் நன்றி கூறினார்.

 

'போர்ன் மம்மி' வேடத்தில் நடிக்கத் துடிக்கும் ஏஞ்செலீனா ஜூலி!

Angelina Jolie Wants Lead Role Mummy Porn Movie

லண்டன்: இங்கிலாந்து எழுத்தாளர் இ.எல். ஜேம்ஸ் எழுத்தில் உருவாகி உலகம் பூராவும், குறிப்பாக இங்கிலாந்துப் பெண்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்திருக்கும் Fifty Shades of Grey நாவலைத் திரைப்படமாக்கும்போது அதில் தான் நாயகியாக நடிக்க விரும்புவதாக உதட்டழகி ஏஞ்செலீனா ஜூலி கூறியுள்ளார்.

இந்த நாவலில் வரும் அனஸ்தீசியா ஸ்டீல் என்ற பெண்ணின் கேரக்டரில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார் ஜூலி. இந்தப் பெண்ணின் கேரக்டர்தான் இந்த நாவலின் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

மம்மி போர்ன் என்ற பெயரில் இங்கிலாந்து முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது ஜேம்ஸின் 50 ஷேட்ஸ் ஆப் கிரே நூல். இந்த நூலை இப்போடு மறுபடியும் மறுபடியும் படித்துக் கொண்டிருக்கிறாராம் ஜூலி. இங்கிலாந்துக்கு தனது புதிய படத்தின் ஷூட்டிங்குக்காக வந்த இடத்தில்தான் இந்தப் புத்தகத்தைக் கொடுத்து அறிமுகப்படுத்தினராம். அன்று முதல் ஜூலியும் பித்துப் பிடித்தாற் போலாகி விட்டாராம்.

இந்த நூலைப் படித்து முடித்தும் கூட அவருக்கு பாதிப்பு போகவில்லையாம். இதனால்தான் இந்த நூலின் நாயகியான அனஸ்தீசியா வேடத்தி்ல தான் சினிமாவில் நடிக்க விரும்புவதாக வெளிப்படையாக கூறியுள்ளார் ஜூலி.

இதுகுறித்து டெய்லி மிர்ரர் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், தனது படப்பிடிப்பின்போது செட் முழுக்க பெண்களிடம் இந்த புத்தகம் குறித்த பேச்சாகவே இருந்ததால் அதுகுறித்து விசாரித்தார் ஜூலி. அவர்கள் புத்தகம் குறித்து சிலாகித்துப் பேசினர். இதனால் ஆர்வமடைந்த ஜூலி தானே நேரடியாக கடைக்குப் போய் புத்தகத்தை வாங்கிப் படித்துப் பார்த்தார். இப்போதும் அவரும் சிலிர்ப்படைந்து விட்டார்.

இந்த நிமிடத்தில் உலகம் முழுவதும் உள்ள பெண்களின் உதடுகளில் முனுமுனுக்கப்படும் இந்த நாவல் படமாக்கப்பட வேண்டும், அதில் தான் நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளாராம் ஜூலி.

ஜூலி நடிச்சா அந்தப் படத்தோட ரேஞ்சே தனிதான்...!

 

ஜூலிக்கு நிச்சயதார்த்த மோதிரத்தை கண்டாலே பிடிக்கலையாம்!

Jolie Hates Her Engagement Ring

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலிக்கு அவரது நீண்டகால பாய்பிரண்ட் நடிகர் பிராட் பிட் போட்ட ரூ.1.28 கோடி மதிப்புள்ள நிச்சயதார்த்த மோதிரம் பிடிக்கவில்லையாம்.

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும் (48), நடிகை ஏஞ்சலினா ஜூலியும் (36) கடந்த 7 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமலேயே குடித்தனம் நடத்தி வருகின்றனர்.

கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி ஒரு பெண் குழந்தை, இரட்டைக் குழந்தைகள் என்று 3 குழந்தைகளை பெற்றுள்ளனர். இது போக, மேலும் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஜூலி மறுபடியும் கர்ப்பமாக உள்ளார். அதுவும் இரட்டைக் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.

இப்படி குழந்தைகள் வதவெதன்று அதிகரித்துக் கொண்டு போன நிலையில், அட என்னங்கப்பா நீங்க பேசாம கல்யாணத்தைப் பண்ணிக்குங்க என்று பிராடையும், ஜூலியையும் அவர்களது குழந்தைகள் நச்சரிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து தான் அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர்.

நிச்சயதார்த்த மோதிரத்தை பிராட் பிட்டே டிசைன் செய்துள்ளார். எமரால்ட், வைரம் பதித்த அந்த மோதிரத்தின் விலை ரூ. 1,28,25,725 ஆகும். ஆனால் அவ்வளவு பணம் செலவழித்தது வீணாகிப் போய்விட்டதே. ஏஞ்சலினா ஜூலிக்கு நிச்சதார்த்த மோதிரத்தை கண்டாலே பிடிக்கவில்லையாம்.

ஜூலிக்கு எமரால்டு தான் பிடிக்கும். ஆனால் பிட்டோ வைர மோதிரத்தை போட்டுள்ளார். இது தான் அவர் ஜூலியைப் புரிந்து கொண்ட லட்சணம் என்று அவர்களுக்கு நெருங்கிய ஒருவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதானே, புகையைப் போட்டு பொங்க விடத்தான் சுற்றிலும் ஆட்கள் இருப்பார்களே...!

 

யானைத் தந்தங்கள் பறிமுதல்: மோகன்லாலை கைது செய்ய கேரள காங்கிரஸ் கோரிக்கை

Mohanlal Shoud Be Arrested Pc George

திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லாலின் வீட்டில் இருந்து யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று கேரள சட்டமன்றத்தின் ஆளும் காங்கிரஸ் தலைமை கொறடா பிசி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன் லால் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கேரளா மட்டுமின்றி சென்னையில் உள்ள இருவரின் வீடுகளிலும் தொடர் சோதனை நடத்தப்பட்டது. இதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கு உரிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள மோகன்லாலின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொச்சி தேவரையில் உள்ள மோகன்லால் வீட்டின் பூஜை அறையில் 4 யானை தந்தங்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். வனத்துறை சட்டப்படி அனுமதியின்றி வீட்டில் தத்தங்களை வைத்திருந்தால் அவர்களை உடனே கைது செய்ய வேண்டும். ஆனால் மோகன்லாலை இதுவரை கைது செய்யவில்லை.

இந்நிலையில் கேரள அரசு தலைமை கொறடா பி.சி. ஜார்ஜ் கொச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வீட்டில் தத்தங்களை பதுக்கி வைத்திருந்த மோகன்லாலை இதுவரை கைது செய்யாதது தவறு. சட்டத்தில் அனைவரும் சமம். எனவே மோகன்லாலை உடனே கைது செய்ய வேண்டும் என்றார்.

 

'சிவாஜி' - 3டி... பார்த்து ரசித்தார் ரஜினி!

Rajinikanth Enjoys 3 D Version Sivaji The Boss

சென்னை: 3 டியில் தயாராகிவரும் தனது சிவாஜி - தி பாஸ் படத்தைப் பார்த்து ரசித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இந்தப் படம் வரும் செப்டம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த இந்த படத்தில், சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். வில்லனாக சுமனும் நகைச்சுவை வேடத்தில் விவேக்கும் நடித்திருந்தனர்.

உலக அளவில் இந்தியப் படங்களின் வர்த்தகப் பரிமாணத்தையே மாற்றிய பெருமை இந்தப் படத்துக்குதான் உண்டு. தமிழ்ப் படங்களையே பார்த்திராத நாடுகளிலும் கூட, ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியான சிவாஜி கலக்கியது.

இப்போது குழந்தைகளையும், பெரியவர்களையும் கவரும் வகையில், 'சிவாஜி' படத்தை `3டி' தொழில்நுட்பத்தில் தயாரித்து மீண்டும் வெளியிட, ஏவி.எம். நிறுவனம் திட்டமிட்டது.

அதன்படி, அந்த படத்தை '3டி'யில் உருவாக்கும் பணி கடந்த à®'ரு மாதமாக நடைபெறுகிறது. பாடல் காட்சிகள் அனைத்தும் '3டி'யில் உருவாகி விட்டன. மற்ற காட்சிகளை '3டி'யில் மாற்றும் வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

'3டி' தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்ட பாடல் காட்சிகள், ரஜினிக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டன. அதைப்பார்த்து அவர் சின்ன குழந்தையைப் போல் உற்சாகமாக கைதட்டி, ரசித்துப் பாராட்டினார்.