சூர்யாவுடனான காதல் காட்சிகளை குறைத்ததால் நயன்தாரா கோபம்

சூர்யாவுடனான காதல் காட்சிகள் குறைந்ததால் கோபித்துக் கொண்டாராம் நயன்தாரா.

மாஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. வருகிற 29-ந் தேதி படம் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், நேற்று நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது மாஸ் படக் குழு. சூர்யா, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் வந்திருந்தனர். ஆனால் நயன்தாரா வரவில்லை.

Nayanthara not happy with Masss team

அப்போது இந்த படத்தில் சூர்யாவை பேயாக காட்டியுள்ளீர்கள். அதுபோல் நயன்தாராவும் இப்படத்தில் பேயாக நடித்திருக்கிறாரா? என்று கேட்டனர்.

உடனே இயக்குனர் வெங்கட் பிரபு, "அப்படியெல்லாம் கிடையாது. சூர்யா இந்த படத்தில் பேயாக நடிக்கவில்லை. அது படத்தை பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்," என்றார்.

மேடையில் இருந்த ஞானவேல் ராஜாவோ, நயன்தாரா ஏற்கெனவே இந்த படத்தில் சூர்யாவுக்கும் தனக்கும் காதல் காட்சிகள் அதிகமாக வைக்கவில்லை என்ற கோபத்தில் இருக்கிறார். இதில், அவர் பேயா நடிச்சிருக்கிறதா நீங்க சொல்வது காதில் விழுந்தால் இன்னும் கோபமாகிவிடுவார் என்றார்.

ஓ.. அவர் பிரஸ் மீட்டுக்கு வராத ரகசியம் இதானா என கமெண்ட் பறந்தது செய்தியாளர்களிடமிருந்து.

 

மொட்டை ராஜேந்திரன் காமெடியில் கலக்கும் நண்பர்கள் நற்பணி மன்றம்!

‘வைகாசி பொறாந்தாச்சு', ‘கிழக்கே வரும் பாட்டு' போன்ற படங்களை இயக்கிய ராதாபாரதி நீண்ட இடைவெளிக்குப்பிறகு இயக்கியுள்ள படம் "நண்பர்கள் நற்பணி மன்றம்".

பார்ப்பவர்கள் வயிறு குலுங்க சிரிக்கும் அளவுக்கு நகைச்சுவையுடன், நட்புக்கு புது அர்த்தம் தரும் படமாகவும் இந்த நண்பர்கள் நற்பணி மன்றம் உருவாகியுள்ளதாம்.

Nanbargal Narpani Manram

இப்படத்தின் நாயகனாக புதுமுகம் செங்குட்டுவனும், நாயகியாக புதுமுகம் அக்ஷயாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் தமிழ் திரையுலகில் தற்போது காமெடியில் கலக்கி வரும் ‘நான் கடவுள்' ராஜேந்திரன் மற்றும் ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, இமான் அண்ணாச்சி என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் காமெடியில் அதகளம் செய்துள்ளார்களாம்.

‘இவனுக்கு தண்ணியில கண்டம்' படத்தில் நகைச்சுவையில் கலக்கிய ராஜேந்திரன், இப்படத்தில் ஆட்டுக்கறி விற்பனை செய்பவராகவும், ஆனால் அந்த வெட்டப்பட்ட ஆட்டின் மீது கருணை காட்டுபவராகவும் வருகிறாராம்.

இப்படத்தில் ஆடுவெட்டி விற்பனை செய்பவராக நடிக்கும் ‘நான் கடவுள்' ராஜேந்திரன் ஹீரோவை கத்தியுடன் துரத்துவது போன்ற காட்சிகள் தேனியில் படமாக்கப்பட்ட போது அதனை ஏராளமான பொதுமக்கள் டென்சனாகிவிட்டார்களாம். அது படப்பிடிப்பு என்பதை உணராமல் அவர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து பின்னர் அது படப்பிடிப்பாக்க நடைபெற்ற துரத்தல் சம்பவம் என்பதை பொதுமக்களிடம் விளக்கமாக கூறியுள்ளனர். அதன் பிறகே பொதுமக்களும் படப்பிடிப்பு நடப்பதை அறிந்து சிரித்தவாறு கலைந்து சென்றுள்ளனர்.

படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். செல்வா ஆர்எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் வெளியாகிறது நண்பர்கள் நற்பணி மன்றம்.

 

ரமணா இந்தி ரீமேக்.. அகில இந்திய மருத்துவர் சங்கம் கடும் கண்டனம்

ரமணா படத்தின் ஹிந்தி ரீமேக்கான கப்பார் இஸ் பேக் படத்தில் மருத்துவர்களைக் கேவலமாக சித்தரித்ததற்காக இந்திய மருத்துவ சங்கம் (IMA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

படக்குழுவினருக்கு வக்கீஸ் நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்துள்ளது.

Indian Medical Association opposes Gabbar Is Back

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான ரமணா படம், ஹிந்தியில் ரீமேக் ஆகி கப்பார் இஸ் பேக் என்கிற பெயரில் சமீபத்தில் ரிலீஸானது. இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், கரீனா கபூர், ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்கள். ஏ.ஆர். முருகதாஸ் திரைக்கதையில் உருவான இப்படத்தை க்ரிஷ் இயக்கியுள்ளார். இன்னும் சில நாள்களில் 100 கோடி ரூபாயை எட்டிவிடும் அளவுக்கு நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது இந்தப் படம்.

இந்த நிலையில் இந்தப் படத்தை எதிர்த்து இந்தியா முழுக்க 2.5 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இந்திய மருத்துவ சங்கத்தின் தலைமை நிர்வாகிகளான மருத்துவர்கள் ஏ. மார்த்தாண்ட பிள்ளை, கேகே அகர்வால் ஆகிய இருவரும் இணைந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

‘கப்பார் இஸ் பேக் படத்தில் மருத்துவத் துறையை மோசமாக சித்தரித்துள்ளதைக் கண்டு வேதனை அடைந்துள்ளோம். மருத்துவத்துறையை இழிவுபடுத்தும் விதமாகவும் உண்மைக்குப் புறம்பாகவும் சித்தரித்துள்ளார்கள். இதற்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்.

இந்தப் படத்தில் இறந்து போன ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது போன்ற ஒரு காட்சி உள்ளது. சமீபகாலமாக மருத்துவர்கள் மீதான வன்முறை அதிகமாகிவிட்ட சமயத்தில், இந்தப் படம் தவறான முன்னுதாரணத்தை அளிக்கிறது. இது எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல உள்ளது. மருத்துவர்கள் மீதான வன்முறை மேலும் தூண்டவே இது உதவும். இதனால் இந்தக் காட்சி உடனடியாக படத்திலிருந்து நீக்கப்படவேண்டும் என்று ஐஎம்ஏ விரும்புகிறது. அப்படி செய்யும்வரை இந்தப் படம் புறக்கணிக்கப்பட வேண்டும். தடை செய்யப்படவும் வேண்டும். இந்தப் பிரச்னை தொடர்பான விழிப்புணர்வுக்காக அந்தக் காட்சியின் வீடியோ அனைத்து மருத்துவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தணிக்கைத் துறை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, சுகாதாரத்துறை, உள்துறை ஆகிய அரசு அமைப்புகள் இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களின் உதவியுடன் ஐஎம்ஏ தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

படத்தில் இடம்பெற்ற அந்த காட்சி சென்னையில் உண்மையிலேயே நடந்த ஒரு சம்பவமாகும். இந்தப் படம் வெளியான பிறகு திருச்சியிலும் கூட இதே போன்ற சம்பவம் நடந்தது. இது மக்களுக்கும் தெரிந்த சமாச்சாரம் என்பதாலேயே இந்தப் படத்துக்கு தமிழகத்திலும் ஆந்திராவிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

 

'காசு பணம் துட்டு'... 4 வருடம் "ரிசர்ச்" செய்து 460 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய கஸ்தூரிராஜா

சென்னை: தனது 'காசு பணம் துட்டு' படத்துக்காக 4 வருடம் ஆராய்ச்சி செய்து 460 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் கஸ்தூரிராஜா.

என் ராசாவின் மனசிலே, ஆத்தா உன் கோவிலிலே, தூது போ செல்லக்கிளியே, நாட்டுப்புற பாட்டு, துள்ளுவதோ இளமை, சோலையம்மா உள்பட தமிழில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கஸ்தூரிராஜா.

சில வருட இடைவெளிக்குப் பிறகு, இவர் தற்போது ‘காசு பணம் துட்டு' என்ற பெயரில் படமொன்றை இயக்கி இருக்கிறார். இது தொடர்பாக கஸ்தூரி ராஜா கூறியதாவது :-

Kasthuri Raja’s Kasu Panam Thuttu

மாறுபட்ட படம்...

என் பழைய படங்களில் இருந்து மாறுபட்ட படம் இது. தினமும் கொலை-கொள்ளை என்று வரும் பத்திரிகை செய்திகளில், 16 வயதில் இருந்து 20 வயதுக்குள் உள்ள இளைஞர்களே குற்றவாளிகளாக இருக்கிறார்கள்.

இளம் குற்றவாளிகள்...

போதை பழக்கம், பெண் சகவாசம், ஆடம்பர வாழ்க்கை போன்றவைகளுக்கு ஆசை காட்டி, அவற்றுக்கு அடிமைகளாக்கி, சமூகத்தில் குற்றவாளிகளாக மாற்றப்படுகிறார்கள். சாதாரண குடிமகனில் இருந்து சட்டசபை வரை இவர்களின் உதவி தேவைப்படுகிறது.

காசு பணம் துட்டு...

இதுபோன்ற இளைஞர்கள் மூலம் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இவர்களை யார் உருவாக்குவது? இதற்கு தீர்வு என்ன? என்பதே 'காசு பணம் துட்டு' படத்தின் கதை.

புதுமுகங்கள்...

இந்த கதைக்காக 4 வருடங்கள் ஆராய்ச்சி செய்து, 460 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, படத்தை உருவாக்கி உள்ளேன். புதுமுகங்கள் மித்ரன், சுயேஷா சாவந்த், பாலா, மென்டீஸ் ஆகியோருடன் பிரபு, ராதிகா சரத்குமார், பிரமிட் நடராஜன் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

யுஏ சான்றிதழ்...

சாஜித் இசையமைக்க, பிரசாத் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி நான் இயக்கியிருக்கிறேன். படத்துக்கு தணிக்கை குழு, 'யு ஏ' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

அடுத்த மாதம் ரிலீஸ்...

கஸ்தூரிமங்கா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் ஆரம்பத்தில் திரைக்கு வரும்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

விரைவில் வருது “விஐபி பார்ட் 2” - எதிர்பார்ப்பில் தனுஷ் ரசிகர்கள்

சென்னை: கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து வசூலில் சக்கைப் போடு போட்ட வேலை இல்லாப் பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.

மரியானின் தோல்வியால் துவண்டு கிடந்த தனுஷின் மார்கெட்டை தூக்கி நிறுத்தியதில் இந்த படத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

Actor Dhanush Started Velai Illa Pattathari Part-2

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் முதன்முறையாக இயக்கிய இப்படம் சிலபல காரணங்களால் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளி தள்ளி சென்று ஒருவழியாக வெளியாகிய போது இந்தப் படம் அடைந்த மாபெரும் வெற்றி யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது.

சுமார் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப் பட்ட இப்படம் வசூல் செய்த தொகை 50 கோடி.தெலுங்கிலும் இப்படம் நேரடியாக டப் செய்யப் பட்டு அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Actor Dhanush Started Velai Illa Pattathari Part-2

முதல் பாகத்தில் நடிகைகள் அமலா பால் மற்றும் சுரபி நடித்து இருந்தனர்.இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தா மற்றும் ஏமி ஜாக்சன் நடிக்கிறார்கள்.

நடிகைகளைப் போலவே தனுஷின் அப்பா அம்மாவும் மாற்றப் பட்டுள்ளனர்.முதல் பாகத்தில் அம்மாவாக நடித்த சரண்யாவிற்கு பதில் ராதிகா அம்மாவாக நடிக்க, அப்பாவாக தன் வயதுக்கு மீறி நடித்த இயக்குனர் சமுத்திரக் கனிக்கு பதிலாக மற்றொரு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கிறார்.

இசையமைப்பு அதே கொலைவெறி அனிருத் தானாம். முதல் பாகத்தை இயக்கிய வேல்ராஜே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

வசூலில் முதல் பாகத்தை மிஞ்சுமா இரண்டாம் பாகம்? ....வெயிட் அட் சீ!!!

 

நம்பர் நடிகையின் திருமணம் நின்றதை பார்ட்டி கொடுத்து கொண்டாடிய நடிகை

சென்னை: சின்ன நம்பர் நடிகையின் நிச்சயதார்த்தம் திருமணம் வரை செல்லாது என்று நான் தான் அப்பொழுதே கூறினேனே என்று தனது பெயரை தலைகீழாக மாற்றிய நடிகை சந்தோஷமாக கூறி வருகிறாராம்.

சின்ன நம்பர் நடிகைக்கும், சினிமா தயாரிப்பாளருக்கும் திருமணம் நிச்சயமானது. ஆனால் அது நிச்சயதார்த்தத்தோடு நின்றுவிட்டது. திருமணம் நின்று ஆளுக்கொரு திசையாக சென்றுவிட்டனர். அதிலும் நடிகையோ தனக்கு ஒரு காலத்தில் நிச்சயம் செய்யப்பட்டவரின் படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளார்.

இந்நிலையில் சின்ன நம்பர் நடிகையின் திருமணம் நின்று போனதில் தனது முதல் பெயரை பின்னால் போட்டு பின்னால் இருந்த மறுபாதி பெயரை முன்னாள் போட்ட நடிகைக்கு ஏக சந்தோஷமாம். நடிகையின் திருமணம் நின்று போனதை பெயரை மாற்றிய நடிகை பார்ட்டி வைத்து கொண்டாடினாராம்.

எனக்கு அப்பவே தெரியும் இது திருமணம் வரைக்கும் எல்லாம் செல்லாது என்று. பார்த்தீங்களா நான் கூறியது போன்று தான் நடந்துள்ளது. இரண்டு பேரின் குணத்திற்கும் ஒத்து வராது என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்று பெயரை மாற்றிய நடிகை பெருமையடித்து வருகிறாராம்.

சின்ன நம்பர் நடிகையின் திருமணம் நின்று போனதற்கு பெயரை மாற்றிய நடிகை அவ்வளவு சந்தோஷப்படுவதற்கு பின்னால் ஒரு குட்டி பிளாஷ்பேக் உள்ளதாம்.

 

அங்க ஒரே குழப்பமாமே? நிஜமாவா?

சீரியல்கள் மூலம் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முடியும்... ஆனால் அந்த சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் யூனியனிலேயே குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம். சங்கத்திற்கு புதிய தலைவியானவருக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு கிடைப்பதால் சங்க பிரச்சினைகளை பஞ்சாயத்து பண்ண நேரம் கிடைப்பதில்லையாம்.

இது போதாதா எதிர்கோஷ்டியினருக்கு வெறும் வாயை மென்றவர்கள் அவல் கிடைத்தால் விடுவார்களா? சங்கத்திலேயே கொடி பிடித்து கோஷ்டி பிரித்து விட்டார்களாம். இதனால் தினம் தினம் கூச்சலும் குழப்பமும் அரங்கேறியதாம்.

TV Gossips and TV Celebrity News

ஏற்கனவே அந்த மாதிரி பஞ்சாயத்துக்களை எப்படி தீர்ப்பது என்று குழம்பி போயிருந்தார் தலைவி. இதில் கோஷ்டி பிரச்சினை வேறு கும்மியடிக்கவே மன உளைச்சலுக்கு ஆளான புதிய தலைவி ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டாராம். தலைவியைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகளும் கடிதம் கொடுத்து விட்டார்களாம். அப்புறம் துணைதலைவரான காந்தமான நடிகரின் சமாதானப்படத்தை அடுத்து ராஜினாமாவை திரும்ப பெற்றுக்கொண்டார்களாம்.

டிவி சீரியல்களில்தான் குடும்பத்தை ரெண்டாக்க குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். இப்போது சங்கத்திலேயே வில்லத்தனம் செய்து கோஷ்டி பிரித்துள்ளதால் அங்கே சீரியலைக் காட்டிலும் சுவாரஸ்யமான காட்சிகள் தினம் தினம் அரங்கேறுகிறதாம்.

நடராஜர் சுண்டல் செய்திடுவார்... நடன இயக்குநரின் சாபம்

மானும் மயிலும் ஆடும் அந்த நிகழ்ச்சி அது... இதற்கு உலக அங்கீகார பாராட்டு கிடைத்துள்ளது. இதற்கு ஒருபுறம் சந்தோசப்பட்டாலும் தன்னுடைய நிகழ்ச்சிகளை பலரும் கிண்டல் செய்வதாக ஆதங்கப்படுகிறார் நிகழ்ச்சி தயாரிப்பாளரான நடன இயக்குநர். இப்படி யாராவது எங்கள் நிகழ்ச்சிகளை கிண்டல் செய்தால் அவர்களை நடராஜர் சுண்டல் செய்துவிடுவார் என்பது நடனத்தின் லேட்டஸ்ட் சாபமாம். இந்த சாபத்தைக் கேட்டு "என்னம்மா இதுக்குப் போயி இப்படி சாபம் கொடுக்கறீங்களேம்மா?" என்று கிண்டலடிக்கின்றனராம்.

 

நிஜத்தில் திருட்டுக் கல்யாணம் செய்த 1022 ஜோடிகளிலிருந்து தேர்வான ஒரு ஜோடியின் கதை!

திருட்டுக் கல்யாணம் என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி. பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யம்.

நிஜத்தில் திருட்டுக் கல்யாணம் செய்த 1022 ஜோடிகளிடம் பேசி, அவர்களில் ஒரு ஜோடியினரை மட்டும் தேர்வு செய்து அவர்கள் அனுமதியுடன் இந்தப் படத்தை எடுத்துள்ளனர்.

ஷக்தி வேலன் என்ற புதியவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரங்கயாழி, தேஜஸ்வீ நடிக்கிறார்கள்.

Thiruttu Kalyanam audio launch

இசை வெளியீட்டுவிழாவில் பேசிய ஷக்திவேலன் படத்தின் கதை குறித்துக் கூறுகையில், "பெற்றோரை மீறி வீட்டை விட்டு ஓடிப் போன இளம் ஜோடியின் கதை இது.

இதற்காக உண்மையிலேயே திருட்டுக் கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழும் 1022 தம்பதிகளில் ஒரு தம்பதியினரை தேர்வு செய்து விழாவிற்கு வரவழைத்தோம்.

என் கதையும் இவர்களின் கதையும் ஒரே மாதிரி இருந்ததால், அவர்களிடம் சொல்லி இதனைப் படமாக்கினேன்," என்றார்.

விழாவுக்கு இந்த ஜோடியும் வந்திருந்தது. கே.பாக்யராஜ், சசி, கே.ரங்கராஜ் ஆகியோர் இசைத் தட்டை வெளியிட, அந்த தம்பதியினர் பெற்றுக்கொண்டனர்.

 

மீண்டும் படப்பிடிப்பில் சல்மான்: குளு குளு காஷ்மீரில் கரீனாவுடன் டூயட்

காஷ்மீர்: காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் கிடைத்த 5 ஆண்டுகள் சிறை தண்டனை சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து பாலிவுட் நடிகர் சல்மான் கான் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் நடிக்க காஷ்மீர் சென்றுவிட்டார்.

இந்தி நடிகர் சல்மான் கான் 2002ம் ஆண்டில் மும்பை பந்த்ரா பகுதியில் குடிபோதையில் காரை ஓட்டி ஒருவரை கொன்ற வழக்கு 13 ஆண்டுகளாக மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பையொட்டி காஷ்மீரில் பஜ்ரங்கி பாய்ஜான் படப்பிடிப்பில் இருந்த சல்மான் மும்பை வந்தார்.

Salman Khan resumes Bajrangi Bhaijaan shooting in Kashmir

மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த 5 ஆண்டு தண்டனையை உயர் நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்தது. இதையடுத்து சல்மான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள காஷ்மீர் சென்றுவிட்டார்.

கபீர் கான் இயக்கி வரும் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் சல்மானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது.

சல்மான் காஷ்மீரில் 5 நாட்கள் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். கபீர் கானும், சல்மான் கானும் ஏக் தா டைகர் வெற்றிப் படத்தை அடுத்து மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்ட பிறகு சல்மான் சோனம் கபூருடன் பிரேம் ரத்தன் தான் பாயோ படத்தில் நடிக்க உள்ளார்.

 

நேபாள நிலநடுக்கம்... நடிகர் விஜய் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கினார்!

சென்னை: நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ள நேபாளத்திற்கு நடிகர் விஜய், ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை குழந்தைகளின் படிப்பு செலவு, மாணவ, மாணவியருக்கு இலவச புத்தகங்கள், இலவச கம்யூட்டர் பயிற்சி மையங்கள் என பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

Actor Vijay gave rs. 10 lakh worth relief things to Nepal

இந்நிலையில், கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தால் உருக்குலைந்து போன நேபாளத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருந்து மற்றும் துணிமணிகளை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனுப்ப நடிகர் விஜய் முடிவு செய்தார். அதன்படி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இந்த பொருட்கள் அனைத்தும் இன்று நேபாளத்துக்கு அனுப்பப்பட்டது.

கஷ்டப்படுபவர்களுக்கு உதவிடும் வகையில், சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகச் செயல்படுவதாக விஜய்க்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.