அமீர் இயக்கத்தில் விஜய்?

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அமீர் இயக்கத்தில் விஜய்?

5/18/2011 3:39:28 PM

அமீர் இயக்கும் ஆதிபகவான் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படம் முடிந்த பிறகு அமீர் இளைய தளபதி விஜய்யுடன் படம் பண்ண திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'நண்பன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்த பிறகு அமீரின் கதையை கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஜய்யை சந்தித்து படம் குறித்துப் பேசியிருக்கிறார் இயக்குனர் அமீர். முக்கியத்துவம் இல்லாமல் இருந்த இந்த சந்திப்பு கடந்த சில நாட்களாக கோடம்பாக்கத்தில் அதிமுக்கியத்துவத்துடன் குறிப்பிடப்படுகிறது.




 

ராணா படம் ட்ராப்?

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ராணா படம் ட்ராப்?

5/18/2011 3:43:45 PM

ர‌ஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொட்டி பல்வேறு வதந்திகள். அவரது உடல்நிலை சார்ந்த வதந்திகளுக்கு அவ்வப்போது விளக்கம் அளித்து வருகிறார் லதா ர‌ஜினிகாந்த். ராணா குறித்த வதந்திகளுக்கு?

ர‌ஜினிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் ராணா படமே ட்ராப் என்பதுதான் லேட்டஸ்ட் வதந்தி. ஆனால் இதனை கடுமையாக மறுத்திருக்கிறார் படத்தை இயக்கும் ரவிக்குமார். படம் ட்ராப் என்பதை திட்டவட்டமாக மறுத்திருக்கும் ரவிக்குமார், தாய்லாந்தில் படத்துக்கான லொகேஷன் தேடும் பணியில் தீவிரமாக இருப்பதாகவும், லொகேஷன் தேர்வு செய்வதற்காக விரைவில் லண்டன் செல்லவிருப்பதாகவும் தெ‌ரிவித்துள்ளார்.

ர‌ஜினிக்காக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் மறுத்துள்ளார். ராணா படப்பிடிப்பு திட்டமிட்டிருப்பதே ஜூன் மாதம்தான் எனவும் அவர் தெ‌ளிவுப்படுத்தியிருக்கிறார்.

 

சிம்புவை சந்திக்க மறுத்த சல்மான் கான்!

Tags:


பிரபல இந்தி நடிகர் சல்மான்கான், தனது பிளாக்பஸ்டர் படமான தபாங்கை ரீமேக் செய்யும் சிம்புவை சந்திக்க மறுத்துவிட்டார்.

சிம்புவை வைத்து ஒஸ்தி என்ற படத்தை எடுத்து வருகிறார் தரணி. இது இந்தியில் சல்மான் கான் நடித்து அபார வெற்றி பெற்ற தபராங் படத்தின் ரீமேக் என்பதால், சல்மான் கானை நேரில் சந்தித்து சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளளாம் என யோசித்தார் சிம்பு.

படத்தின் துவக்க விழாவுக்கும் சல்மானை அழைத்திருந்தார் சிம்பு.

ஆனால் துவக்க விழாவுக்கும் வரவில்லை, சிம்புவை சந்திக்கவும் நேரம் தரவில்லையாம் சல்மான். எப்போதும் நான் ரொம்ப பிஸி என்று சொல்லி சிம்புவின் சந்திப்பை தவிர்த்து வருகிறாராம் சல்மான்.

சிம்புவைப் பற்றி யாரோ வேண்டுமென்றே சல்மானிடம் தவறாக சொல்லியிருக்கின்றனர். அதனால்தான் அவர் சந்திக்க மறுக்கிறார் என சிம்பு தரப்பில் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
 

ரஜினிகாந்த் வருவார்... திரையுலகை ஆள்வார்! - கவிஞர் வைரமுத்து

Tags:


சென்னை: "ரஜினிகாந்த் விரைவில் மீண்டு வருவார். திரையுலகை ஆள்வார். நவீன மருத்துவத்தின் மீது எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது,'' என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

ரஜினி உடல்நிலை பற்றி அவரது மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கை:

"உள்ளூர் தமிழர்கள் பலரும், உலக தமிழர்கள் சிலரும் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து என்னோடும், என் அலுவலகத்தோடும் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக ஆழ்ந்த கவலை தெரிவிப்பதனால் இந்த அறிக்கை வெளியிட நேர்கிறது.

அனைவருக்கும் ஆறுதல் வழங்கும் என்பதனால் மருத்துவமனைக்கே நேரில் சென்று திரட்டிய தகவல்கள் இங்கே தரப்படுகின்றன. ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை. ஆனால் பரபரப்பாக பரப்பப்படும் அளவுக்கு அவர் உடல்நிலை சீர்கெடவில்லை.

பக்க விளைவுகள்

நுரையீரல் தொற்று காரணமாக அவரது சுவாசத்தில் சிறிது சிரமம் ஏற்பட்டது என்றும், அதனால் நேர்ந்த சிறிய பக்கவிளைவுகளுக்கு அவர் உரிய மருந்து உட்கொள்கிறார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு உடற்சோர்வு உள்ளது. மனச்சோர்வு இல்லை.

குடும்ப உறுப்பினர்களைப்போல் மருத்துவர்களும், மருத்துவர்களைப்போல் குடும்ப உறுப்பினர்களும் அவரை பொறுப்போடும், பரிவோடும் பார்த்துக்கொள்கிறார்கள்.

13-ம் தேதி என்னோடு பேசிய ரஜினி...

வதந்திகளை பரப்பாதீர்கள். நம்பாதீர்கள். அவரை பற்றிய மிக மோசமான வதந்தி பரப்பப்பட்ட 13-ந் தேதி மாலை 6-10 மணிக்கு என்னோடு அவர் தொலைபேசியில் பேசினார். தேர்தல் முடிவுகள் குறித்த சில கருத்துகளை சிறிது நேரம் என்னோடு பகிர்ந்து கொண்டார்.

வதந்தி பற்றி நானும் சொல்லிக்கொள்ளவில்லை. அவரும் கேட்டுக் கொள்ளவில்லை. மறுநாள் அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறியப் பெற்றேன்.

நவீன மருத்துவம்

"நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'' என்பதனால் மருத்துவர் குழு, அவர் நோய்க்கான வேர்களை ஆய்ந்து வருகிறது.

நவீன மருத்துவத்தின் மீதும், நம் நாட்டு மருத்துவர்களின் மீதும் நமக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. ரஜினி விரைவில் மீண்டு வருவார். தமிழ் திரையுலகை தொடர்ந்து ஆண்டு வருவார் என்று ரசிகர்கள் நம்பலாம்.

உணர்ச்சி வசப்பட்டு எந்த ரசிகரும் வதந்திகளை நம்பி தவறான முடிவுக்கு தள்ளப்பட்டு விட வேண்டாம். ஏனென்றால் ரஜினியின் உயிரைப் போலவே உங்கள் உயிரும் உயர்ந்தது. உடல்களில்தான் பேதம் உண்டு. உயிர்களில் பேதம் இல்லை. எனவே மருத்துவமனையின் அதிகாரப்பூர்வமான அறிக்கையை மட்டுமே நம்புங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.
 

ஏழாம் அறிவு படத்தில் சீனப் பாடல்!

Tags:


சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் ஒரு சீனப் பாடல் இடம்பெறுகிறதாம்.

ஏழாம் அறிவு படத்தில் மூன்று வேடங்களில் சூர்யா நடிக்கிறார். அதில் ஒன்று சர்கஸ் கலைஞர் வேடம். இதற்காக சூர்யா பல பயிற்சிகள் மேற்க்கொண்டு வந்தார்.

இப்போது அவர் நடிக்கும் இன்னொரு கதாபாத்திரம் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. இதில் புத்த மதத்தை சேர்ந்த சாமியாராக வருகிறாராம். மற்றொரு கதாபாத்திரம் விஞ்ஞானியாம்.

குங்ஃபூ கலையை ஆராயும் கதைக்களம் என்பதால், இதில் இந்திய - சீன பழைய தொடர்புகள் குறித்தெல்லாம் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாம்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் படத்தில் ஒரு சீனப் பாடல் இடம்பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதை 'ஹௌ' என்னும் சீன பாடகர் பாடியிருக்கிறார். அவரை வைத்தே சில தமிழ் வரிகளையும் பாடவைத்திருகிறார் ஹாரிஸ்.

'ஓமஹசீயா' மாதிரி இருக்குமோ!
 

ரஜினி உடல்நிலை குறித்து அண்ணன் சத்யநாராயணா ராவ் விளக்கம்

Tags:


சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அவரது மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினிக்கு நிமோனியா, கிட்னி கோளாறு எதுவும் இல்லை. அவருக்கு நோய்த் தொற்று மட்டும்தான், என அவர் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் சமீபகாலமாக ஆல்கஹால் உட்கொள்வதை ரஜினிகாந்த் குறைத்துவிட்டார். அதனாலேயே அவருக்கு நுரையீரல் மற்றும் கல்லீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டது. எனினும் அவருக்கு நிமோனியாவோ அல்லது கிட்னி பாதிப்போ இல்லை என சத்யநாராயண ராவ் தெரிவித்தார்.

பெங்களூரில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சத்யநாராயண ராவ் கெய்க்வாட் ரஜினியின் உடன் பிறந்த அண்ணன். அவரை தனது தந்தைக்கு சமமாக மதிப்பவர் ரஜினி. இருவரும் ஒருவருக்கொருவர் அடிக்கடி பேசிக்கொள்வர். ரஜினி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சென்று அண்ணனைப் பார்த்து வருவது வழக்கம். பல்வேறு விவகாரங்களில் அவரது ஆலோசனைகளையும் கேட்பார். ரஜினியின் பெற்றோர் பெயரில் உருவாகியுள்ள அறக்கட்டளையில் தலைவராக இருப்பவரும் சத்யநாராயணாராவ்தான்.

ரஜினியின் உடல்நிலை குறித்து அவர் கூறுகையில், "நுரையீரல் நோய்த்தொற்று முழுமையாக குணமடைய ரஜினிகாந்த் மேலும் சில தினங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிவரும்.

திரைத்துறையில் மது உட்கொள்வது, புகைப்பது சாதாரணம்தான் என்றாலும் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக அதை வெற்றிகரமாக குறைத்திருந்தார். கடந்த சில மாதங்களாக அவர் மதுப அருந்துவதும் இல்லை. அதனாலேயே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம்.

ஆல்கஹால் உட்கொள்வதை நிறுத்தினால் வாந்தி, உடல் பலவீனம் அடைதல், காய்ச்சல், சுவாசப் பிரச்னை போன்ற அறிகுறிகள் பொதுவாக காணப்படும் என மருத்துவர்களும் சொல்கிறார்கள். ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இந்தப் பிரச்னைகளே முதன்மைக் காரணங்களாக இருக்கும். இதில் சில பக்க விளைவுகள்தான் ரஜினிக்கு மிகவும் பிரச்சினையைத் தந்திருக்கும் என நினைக்கிறேன்.

மேல் சிகிச்சைக்காக ரஜினியை அமெரிக்கா அழைத்துச்செல்லும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை. அதே போல 6 மாதங்கள் ரஜினி படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுவதும் உண்மையல்ல. தம்பி விரைவில் நலமுடன் தனது பணிகளை தொடர்வார்", என விளக்கம் அளித்தார்.
 

வடிவேலுவுக்கு 5 ஆண்டுகள் அறிவிக்கப்படாத தடை?

Tags:


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வடிவேலுவுக்கு நிற்கக் கூட நேரமில்லை. கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவு பிஸி.

ஆனால் இன்று, அவர் கைவசம் எந்தப் படமும் இல்லை. இனிவரும் நாட்களிலாவது இருக்குமா என்று பார்த்தால் அதுவும் சிரமம்தான். எல்லாம் இந்த தேர்தல் செய்த வேலை.

தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜயகாந்தை ஏகத்துக்கும் அவர் விமர்சித்ததுதான் இத்தனைக்கும் காரணம். சூப்பர் ஸ்டார் ரஜினியே தனது படத்திலிருந்து வடிவேலுவை நீக்கிவிட, இப்போது அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் மதுரை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் வைகைப் புயல்.

இந்த நிலையில் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சி செய்தியை அவருக்கு தெரிவித்துள்ளனர். அடுத்து வரும் 5 ஆண்டுகளிலும் புதுப்படங்கள் எதிலும் வடிவேலு நடிகக்கூடாது என வாய்மொழி உத்தரவாக முக்கிய சினிமா சங்கங்களுக்கு போடப்பட்டுள்ளதால் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

முன்பு 2006-ல் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், கருணாநிதியை தரக்குறைவாகப் பேசியதற்காக நடிகர் செந்திலையும் திரையுலகம் கடந்த 5 ஆண்டுகளில் கண்டுகொள்ளாமல் இருந்தது நினைவிருக்கலாம்.
 

ரஜினி உடல்நிலை: ஹீமோகுளோபின் அளவிலும் முன்னேற்றம்! - மருத்துவர்கள்

Tags:


சென்னை: சுவாச கோளாறு மற்றும் இரைப்பை அழற்சியை சரிசெய்ய தேவையான-முழுமையான சிகிச்சைகள் இப்போது ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஹீமோகுளோபின் அளவிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது," என்று ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுவாச கோளாறு மற்றும் இரைப்பை அழற்சி காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார் ரஜினி.

அவருடைய உடல்நிலை பற்றி ஒரு நாளைக்கு இருமுறை மருத்துவமனை நிர்வாகமும், அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் மருத்துவ அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

டாக்டர்கள் குழு வெளியிட்ட நேற்றைய செய்திக் குறிப்பு:

"பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 13-ந் தேதி மாலை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்டுள்ள சுவாச குழாய் தொற்று மற்றும் குடல் நோய்க்காக உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, டாக்டர்கள் குழு தேவையான-முழுமையான சிகிச்சை அளித்தார்கள்.

அவருடைய ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு சீராக இருக்கிறது. அவர் குடும்ப உறுப்பினர்களுடன் உற்சாகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார்.''

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எப்போது வீடு திரும்புவார்?

ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு, 'ஹீமோகுளோபின்' அளவு குறைவாக இருந்தது என்றும், சிகிச்சைக்குப்பின், அவருக்கு 'ஹீமோகுளோபின்' அளவு அதிகரித்திருப்பதாகவும், எனவே இன்னும் சில நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார் என்றும் சிகிச்சை அளிக்கும் டாக்டர் தெரிவித்தார்.
 

ஜூனில் கமலின் 'விஸ்வரூபம்': கனடா செல்ல விசா கிடைத்தது!!

Tags:


மலையாளப் படம் டிராபிக்கை ரீமேக் செய்வதில் உறுதியாக இருந்த கமல்ஹாஸன், தனது முடிவில் ஒரு சின்ன மாற்றம் செய்திருக்கிறார்.

அது ஏற்கெனவே செல்வராகவனுடன் பேசி வைத்த விஸ்வரூபம் படத்தை முதலில் முடித்துவிட்டு, டிராபிக் ரீமேக்குக்குப் போகலாம் என்பது.

காரணம், தாமதமாகிக் கொண்ட விசா நடைமுறைகள் இப்போது வெற்றிகரமாக முடிந்துவிட்டனவாம். ஆரம்பத்தில் இந்தப் படத்தை அமெரிக்காவில் எடுக்கத் திட்டமிட்டிருந்தனர் செல்வராகவனும் - கமலும்.

ஆனால் அமெரிக்க விசா கிடைத்தபாடில்லை. எனவே உடனடியாக கனடா விசாவுக்கு விண்ணப்பித்தனர். அது குறித்த நாளில் கிடைத்துவிட்டது. இதனால் குறுகிய கால தயாரிப்பாக டிராபிக் ரீமேக்கை செய்யவிருந்த கமல், அதை அப்படியே தள்ளி வைத்துவிட்டு, குழுவினருடன் கனடா பறக்கிறார்.

இதனை டிராபிக் படத்தை இயக்கவிருக்கும் ராஜேஷ் பிள்ளையும் உறுதிப் படுத்தியுள்ளார். "கமல் சார் விஸ்வரூபத்தை முடித்த கையோடு, டிராபிக் ரீமேக்குக்கு வந்துவிடுவார்", என்று அவர் கூறியுள்ளார்.

விஸ்வரூபம் படத்தில் சோனாக்ஷி சின்ஹா கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். சங்கர்-இஷான்-லாய் இசையமைக்கிறார்கள்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல்வாரத்தில் துவங்குகிறது.
 

வேலைக்காரி மூலம் குழந்தை: அர்னால்ட் மனைவியைப் பிரிந்ததன் ரகசியம் அம்பலம

Tags:


லாஸ்ஏஞ்சல்: பிரபல நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஷ்நேகர் தனது வீட்டு வேலைக்காரி மூலம் குழந்தை பெற்றதை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால்தான் அவர் மனைவி மரியா ஷ்ரிவர் அவரை விட்டுப் பிரிந்து சென்றார்.

பிரபல ஆலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஷ்நேகர். இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாண கவர்னராக இருந்தார். தற்போது பதவி விலகிய அவர் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளார். இவருக்கு மரியா ஷ்ரிவர் என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் அர்னால்டை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி மரியா ஷ்ரிவர் திடீரென அறிவித்தார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்புடன் வாழ்ந்த இத்தம்பதி பிரிய காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு முக்கிய காரணம் அர்னால்டு தனது வீட்டு வேலைக்காரி மூலம் ரகசியமாக குழந்தை பெற்று இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இவரது வீட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் அர்னால்டுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் கர்ப்பிணியான அப்பெண் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தற்போது அந்த குழந்தைக்கு 10 வயது ஆகிறது.

ஆனால் அந்த பெண் தற்போது அவரது வீட்டில் வேலை பார்க்கவில்லை. ஓய்வு பெற்றுச் சென்று விட்டார். இருந்தாலும் அக்குழந்தையின் பராமரிப்பு செலவு முழுவதையும் அர்னால்டு ஏற்றுள்ளார்.

இந்த விவரம் சில மாதங்களுக்கு முன்புதான் அவரது மனைவி மரியா ஷ்ரிவருக்கு தெரியவந்தது. இதனால் மனவேதனை அடைந்த அவர் தனது கணவர் அர்னால்டை விட்டுப் பிரிவதாக அறிவித்தார்.

இதை அர்னால்டும் ஒப்புக் கொண்டுள்ளார். தனக்கு வேலைக்காரி மூலம் பிறந்த 10 வயது குழந்தை இருப்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கவர்னர் பதவியை விட்டு விலகியதும் அந்த விவகாரம் பற்றி என் மனைவியிடம் தெரிவித்தேன். இதனால் எனது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் என் மீது கோபமும், வெறுப்பும், ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். இதற்கு எனக்கு மன்னிப்பு கிடையாது.

எனது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதற்காக அனைவரிடமும் உண்மையுடன் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்", என்றார்.

அர்னால்டு மனைவி மரியா ஷ்ரிவர் விடுத்துள்ள அறிக்கையில், "ஒரு தாய் என்ற முறையில் எனக்கு குழந்தைகள் நலன்தான் முக்கியம். அவர்களுக்கு மதிப்பு, மரியாதை கிடைக்க வேண்டும். எங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை உருவாக்க முயற்சி செய்கிறேன். வேறு எதுவும் கூறுவதற்கு இல்லை," என்றார்.
 

ரூ 50 லட்சம் வைர நகை - பிரபல நடிகை விமான நிலையத்தில் கைது

Tags:


மும்பை - கணக்கில் வராத ரூ 50 லட்சம் பெறுமானமுள்ள நகைகளுடன் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரபல பாலிவுட் நடிகை மினிஷா லம்பாவை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடந்த சர்வதேச பட விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியிருந்தார் மினிஷா லம்பா.

அப்போது அவரை சோதனை செய்ததில் கணக்கில் காட்டாத ரூ 50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நகைகளுக்கு மினிஷா அளித்த விளக்கம் ஏற்கக் கூடியதாக இல்லாததால் அந்த நகைகளை பறிமுதல் செய்தனர் சுங்கத் துறை அதிகாரிகள். அவரை விசாரிப்பதற்காக கைது செய்துள்ளனர் அதிகாரிகள்.

இதுகுறித்து மினிஷா தரப்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை.
 

ஒரே நேரத்தில் தனுஷ் - சிம்புவுடன் ஜோடி போடும் ரிச்சா!!

Tags:


ஹன்ஸிகா மோத்வானிக்குப் பிறகு, கிட்டத்தட்ட அதே பரபரப்புடன் பேசப்படுபவர் என்றால் அவர் ரிச்சாவாகத்தான் இருக்கும்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதில் இப்போதுள்ள தமிழ் சினிமா நாயகிகளுக்கு பீதியை ஏற்படுத்தி வருகிறாராம் அம்மணி.

இவரது தாராளம் பார்த்துதான் உடனடியாக ஆன்ட்ரியாவுக்கு பதில் இரண்டாம் உலகத்தில் பிடித்துப் போட்டார் செல்வராகவன். இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார் ரிச்சா.

அடுத்த சில தினங்களில், மும்பை நாயகிகளைத் தேடி அலுத்துப் போன சிம்புவிடமிருந்து போன். ஒஸ்தியில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என அவர் சொல்ல, மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம் ரிச்சா.

"வெற்றிப் படத்தில் இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை. இதற்காக எதையும் செய்யலாம். நடிகையானதன் நோக்கமே வெற்றி பெறுவதுதானே", என்கிறார் ரிச்சா

பிழைக்கத் தெரிந்தவர்!
 

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி முடிவடையவில்லை: கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம்

Tags: zwnj


சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி இன்னும் முடிவடைவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சுமார் 7.5 லட்சம் மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.

இந் நிலையில் இந்தத் தேர்வு முடிவுகள் முதலில் மே 25ம் தேதி வெளியாகும் என்று கல்வித்துறை செயலாளராக இருந்த சவீதா அறிவித்தார். பின்னர் அந்த தேதியை மாற்றி வேறு தேதியில் வெளியிடப்படும் என்று திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இந் நிலையில் புதிய பள்ளிக் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி.வி.சண்முகத்திடம் தேர்வு முடிவுகள் குறித்து கேட்டதற்கு,

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விடைத்தாள் திருத்தும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த பணி இன்னும் முடியாததால் ரிசல்ட் எப்போது வெளியிடப்படும் என்பதை உறுதிபடுத்த இயலாது. தேதி முடிவாகிவிட்டால் அதை 2 நாட்களுக்கு முன் அறிவிப்போம் என்றார்.

சமச்சீர் கல்வி புத்தக வினியோகம் நிறுத்தம்:

இந் நிலையில் சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை வினியோகம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக த‌கவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக அறிவியில் மற்றும் தமிழ் பாடப் புத்தகங்களில் சில பாடங்கள் நீக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில பாடங்களை மட்டும் நீக்கி விட்டு பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படும் என்றும், எந்‌தெந்த பாடப் பிரிவுகளை நீக்குவது என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நடப்பாண்டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தேமுதிகவினரால் என் குடும்பத்துக்கே ஆபத்து! - டிஜிபியிடம் வடிவேலு மனு

Tags:



சென்னை: தே.மு.தி.க.வினர் தொடர்ந்து தாக்கி வருவதால் தனது குடும்பத்துக்குப் பாதுகாப்பு தேவை என தமிழக டி.ஜி.பி.யிடம் நடிகர் வடிவேலு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வடிவேலு சார்பில் அவரது வழக்கறிஞர் சரவணன், டி.ஜி.பி. லத்திகாசரணிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

நான் கடந்த 20 ஆண்டுகளாக தமிழக திரைப்படத் துறையில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறேன்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். குறிப்பாக தே.மு.தி.க.வை எதிர்த்து பிரசாரம் செய்தேன். இதனால் அந்தக் கட்சியினரும், அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்தும் என் மீது கோபமாக இருந்து வந்தனர்.

இதற்கிடையே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தூண்டுதலின் பேரில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எனக்கும், எனது குடும்பத்துக்கும் தொடர்ச்சியாக மிரட்டல் இருந்து வருகிறது. எனது சொத்துகள் தே.மு.தி.க.வினரால் சேதப்படுத்தப்பட்டும் வருகின்றன.

எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால்,தே.மு.தி.க.வினரே முழு காரணமாக இருப்பார்கள். ஜனநாயக நெறிமுறைப்படி பிரசாரம் செய்த எனக்கு தே.மு.தி.கவினர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

மிரட்டல், தாக்குதல் ஆகியவற்றில் இருந்து காப்பாற்ற எனக்கும், எனது குடும்பத்துக்கும் காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் தே.மு.தி.க.வினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

ரஜினிக்காக தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு ஹோமம், அபிஷேகம்!

Tags:



நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டி, தஞ்சாவூர் பெரிய கோவிலில் அவரது ரசிகர்கள் சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகம் நடத்தினர்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தில் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் முழு உடல்நலம் பெற வேண்டும் என தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர் பெரிய கோவிலில் உள்ள அம்மனுக்கு ஐந்து வகையான பூஜைகளை நடத்தினர்.

நடிகர் ரஜினிகாந்த் தோஷங்கள் நீங்கி, 100 ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டி பூஜைகள் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

பூஜைக்குப் பின்னர் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு ரஜினி ரசிகர்கள் அன்னதானம் செய்தனர்.

தஞ்சை மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றம் சார்பில் நடந்த இந்த யாகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து தஞ்சை மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்ற தலைவர் ரஜினிகணேசன் நிருபர்களிடம் கூறும்போது, “ரஜினிகாந்த் உடல்நலம் பெற்று நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக வராகி அம்மனுக்கு வராகி ஹோமம் நடத்தப்பட்டது. இந்தியாவிலேயே வராகி அம்மன் 2 இடங்களில் மட்டும்தான் உள்ளது. வராகி அம்மனிடம் என்ன நினைத்து வேண்டினாலும் அந்த காரியம் நடக்கும்.

அவர் விரைவில் குணம் அடைந்து ராணா படப்பிடிப்பில் கலந்து கொள்வார். ராணா படம் வெற்றி அடையும். தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பல்வேறு சேவைகளை அவர் செய்து வருகிறார். அந்த சேவை தொடர விரைவில் அவர் பூரண குணம் அடைவார்,ட என்று கூறினார்.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இதே போன்ற சிறப்பு வழிபாடுகள், யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இதே போன்ற சிறப்பு வழிபாடுகள், யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

விமான எஞ்ஜினில் கோளாறு: நாகார்ஜுனா, பயணிகள் தப்பினர்!

Tags:



ஹைதராபாத்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்கவிருந்த நடிகர் நாகார்ஜுனா அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

ஹைதராபாதில் உள்ள ஷம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் (போயிங் 767) நேற்று புறப்பட தயாராக இருந்தது. அதில், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா உள்பட 200 பயணிகள் இருந்தனர்.

விமானத்தை மேலே எழுப்ப முயன்றபோது, விமானத்தின் வலது பக்க என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அதிவேகத்தில் விமானத்தை மேலே எழுப்பும் முயற்சி, அவசரமாக நிறுத்தப்பட்டது.

இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நாகார்ஜூனா உள்ளிட்ட பயணிகள் உயிர் தப்பினர். கோளாறை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டனர்.

பயணிகளை மாற்று விமானத்தில் அனுப்பும் முயற்சியில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஈடுபட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.

 

போர்ச்சுகல் தொழிலதிபரை காதலிக்கிறார் திவ்யா!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

போர்ச்சுகல் தொழிலதிபரை காதலிக்கிறார் திவ்யா!

5/17/2011 4:33:34 PM

போர்ச்சுகல் தொழில் அதிபரை காதலித்து வருகிறார் திவ்யா. 'பொல்லாதவன்', 'வாரணம் ஆயிரம்' உட்பட பல படங்களில் நடித்தவர் திவ்யா. சமீபத்தில் காங்கிரசில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை கொல்கத்தா – பெங்களூர் அணிகள் மோதிய சிறப்பு கிரிக்கெட் போட்டி நடந்தது. இதை பார்க்க திவ்யா தனது வெளிநாட்டு காதலர் ரபேலுடன் வந்து அனைவரது பார்வையையும் ஈர்த்தார். ரபேல், போர்ச்சுகல் நாட்டில் தொழில் செய்து வருகிறார். இவரது பெற்றோர் ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்கள். கடந்த புதுவருடப்பிறப்பின் போது நடந்த பார்ட்டி ஒன்றில் முதன் முதலாக திவ்யாவும் ரபேலும் சந்தித்துள்ளனர். அப்போதே இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இந்த காதலுக்கு ரபேலின் பெற்றோர் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி திவ்யாவிடம் கேட்டபோது, 'கடந்த 5 மாதமாகத்தான் நாங்கள் காதலித்து வருகிறோம். இன்னும் ஒன்றரை வருடத்துக்கு திருமணம் பற்றி எண்ணமில்லை. இதுதொடர்பாக நாங்கள் இருவரும் கூட பேசிக்கொள்ளவில்லை. என்னைப் பார்க்கத்தான் ரபேல் வெளிநாட்டில் இருந்து வந்ததாகச் சொல்வது பொய். பிசினஸ் விஷயமாக கடந்த சில வாரங்களாக அவர் டெல்லியில் இருக்கிறார். இதுதொடர்பாக வேறு எதையும் இப்போது சொல்ல விரும்பவில்லை' என்றார்.

 

நீச்சல் உடையில் நடிக்கிறேனா? : த்ரிஷா பதில்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நீச்சல் உடையில் நடிக்கிறேனா? : த்ரிஷா பதில்!

5/17/2011 12:54:54 PM

த்ரிஷா கூறியது: முன்பு போல் இல்லாமல், இப்போது படங்களை குறைத்துக் கொண்டேன். கமர்ஷியலாக நிறைய படங்கள் வருகின்றன. Ôஅபியும் நானும்Õ, Ôமன்மதன் அம்புÕ, Ôவிண்ணைத்தாண்டி வருவாயாÕ படங்களில் நடித்த பின் இனி அதுபோல் நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில் நடிப்பது என முடிவு செய்திருக்கிறேன். கமர்ஷியலாக நடிப்பது தவறில்லை. அப்படி நடிக்க நிறைய புதுமுகங்கள் வந்துவிட்டார்கள். எனவேதான் அதுபோல் நடிக்க வந்த 2 தமிழ் படங்களைகூட வேண்டாம் என்று கூறிவிட்டேன். தெலுங்கில் Ôபாடிகாட்Õ படத்தில் நடிக்கிறேன். வெங்கடேஷ் ஹீரோ. இதில் நடிப்புக்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. இப்படத்தில் நான் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடிப்பதாக சிலர் வதந்தி பரப்பி இருக்கிறார்கள். அதை அறிந்து -£க் ஆனேன். திரையுலகுக்கு வந்து 9 வருடம் ஆகிவிட்டது. இதுவரை அப்படி நடிக்கவில்லை. இனிமேலும் நீச்சல் உடை அணிந்து நடிக்க மாட்டேன். 'தீன்மார்Õ தெலுங்கு படத்தில் கிளாமர் உடைகள் அணிந்து நடித்ததால் இதுபோல் கிளப்பிவிடுகிறார்கள்.

 

கிசு கிசு - சர்ச்சை கேரக்டருக்கு தூது விடும் நடிகை

Tags:


Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

சர்ச்சை கேரக்டருக்கு தூது விடும் நடிகை

5/17/2011 1:05:10 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

பட வாய்ப்புகள் இல்லாமலிருந்த கஸ்தூரியான நடிகை, இப்போ வாய்ப்புகள் வந்தும் சோகமா இருக்காராம்… இருக்காராம்… கிளாமரா ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியதால, வர்ற வாய்ப்பெல்லாம் அப்படியே வருதாம். இன்னும் கொஞ்சம் பேமன்ட் போட்டுத் தர்றோம். டூ பீஸ்ல நடிச்சிக் கொடுங்கன்னு சிலர் கேக்குறாங்களாம்… கேக்குறாங்களாம்… வெறுத்துப்போன நடிகை, 'கொடுத்தா நடிக்கிற சீனா கொடுங்க. வெறும் டான்ஸ் ஆட கூப்பிடாதீங்கÕன்னு உர்ராகுறாராம்… உர்ராகுறாராம்…

அமோகமான ஹீரோயின் புது டைரக்டர்களுக்கு தூது விடுறாராம்… விடுறாராம்… Ôஎந்த மாதிரி ரோலா இருந்தாலும் ஓகே. கிளாமரா, சர்ச்சையான கேரக்டரா இருந்தா டபுள் ஓகேÕன்னு பச்சை கொடி காட்டுறாராம்… காட்டுறாராம்…

ஹீரோவா மட்டுமே நடிப்பேன்னு அடம் புடிச்ச ஜித்த நடிகரு, இறங்கி வந்திருக்கிறாரு… வந்திருக்கிறாரு… வேற வழியில்லாம ஹீரோவுக்கு அண்ணனா வர்ற கேரக்டர்ல நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாரு… சொல்லியிருக்கிறாரு… இன்ஷியலுக்கு பெயர் மாறிய நடிகர் படத்துலதான் அப்படி நடிக்கப் போறாரு… போறாரு…

 

சம்மர் ஹாலிடே : சொந்த ஊரில் அசின்!

Tags:


Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

சம்மர் ஹாலிடே : சொந்த ஊரில் அசின்!

5/17/2011 1:04:13 PM

சம்மர் ஹாலிடேக்கு கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்து ஒரு வாரம் தங்கியிருக்கிறார் அசின்.

 

மகளின் படத்தை, பாரதிராஜாவுக்கு திரையிட்ட ராதா

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மகளின் படத்தை, பாரதிராஜாவுக்கு திரையிட்ட ராதா

5/17/2011 11:59:52 AM

சமீபத்தில் வெளியான ‘கோ’ படம் தமிழகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதில் முன்னாள் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா ஹீரோயினாக நடித்துள்ளார். தன் மகளின் இந்த படத்தை தனது குருவான பாரதிராஜாவுக்கு சிறப்பு காட்சியை திரையிட்டு காட்டினாராம் ராதா. படத்தை பார்த்த பாரதிராஜா கார்த்திகாவிற்கு தனது வாழத்துக்களை தெரிவித்தார்.

 

சந்தானத்துடன் கலக்கும் சாந்தனு

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சந்தானத்துடன் கலக்கும் சாந்தனு

5/17/2011 12:58:49 PM

சாந்தனு, சந்தானம் மற்றும் நாயகி ரேஷ்மி நடித்திருக்கும் படம் ‘கண்டேன்’. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தை பற்றி இயக்குனர் முகில் கூறுகையில் ‘படத்தில் சந்தானத்தின் பங்கு முக்கியமானது, அவர் வரும் இடங்களில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது, குறிப்பாக படத்தில் நாயகி ரேஷ்மியை விட சந்தானத்துடன்தான் ஹீரோ சாந்தனுவுக்கு கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும்’ என்றார்.

 

உதவி இயக்குனர்களை நடிகராக்கிய டைரக்டர்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

உதவி இயக்குனர்களை நடிகராக்கிய டைரக்டர்!

5/17/2011 12:59:18 PM

'மைதானம்' பட இயக்குனர் எம்.எஸ்.சக்திவேல் கூறியதாவது: 4 நண்பர்கள் கதை என்றால் குட்டிச் சுவர் மீது அமர்ந்து அரட்டையடிக்கும் கதைகள்தான் வந்திருக்கிறது. நடைமுறையில் அது சாத்தியமில்லை. இது 4 நண்பர்கள் கதைதான். சினிமாத்தனமாக இல்லாமல் யதார்த்தமாக கதை அமைக்கப்பட்டுள்ளது. சுரேஷ்குரு, ஜோதிராஜ், சிவா, கென்னடி ஆகிய 4 உதவி இயக்குனர்கள் நண்பர்களாக நடிக்கின்றனர். இவர்களுக்கு மேக்அப் போடவில்லை. ஹீரோயின் சுவாதிகாவுக்கும் மேக்அப் கிடையாது. உதவி இயக்குனர்களை நடிகர்களாக்கியதற்கு காரணம் இருக்கிறது. புதுமுகங்களை தேர்வு செய்து நடிக்க வைப்பது சிரமம். உதவி இயக்குனர்களுக்கு ஓரளவுக்கு நடிக்க தெரியும். அதனால் அவர்களை தேர்வு செய்தேன். கதையில் காதல் இருக்கிறது. அதுவும் யதார்த்தமாக இருக்கும். தஞ்சாவூர் அருகே நடந்த உண்மை சம்பவமே இக்கதை.

 

அரசியல்வாதி ஆகிறார் கார்த்தி!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அரசியல்வாதி ஆகிறார் கார்த்தி!

5/17/2011 1:00:58 PM

புதுமுக இயக்குனர் சங்கர் தயாள் இயக்கும் ‘சகுனி’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் கார்த்தி. படத்தில் அரசியல்வாதியாக வரும் கார்த்தி கதை கேட்டபின் உற்சாக துள்ளலோடு நடிக்க ஒப்புக் கொண்டாராம். படத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளுக்கு இடையே ‘மூட்டிவிட்டே’ வளரும் ஹீரோ ஒரு கட்டத்தில் அரசியல் சதுரங்கத்தில் மிக முக்கியமான ஆளாக உயர்வது போல கார்த்தி நடித்திருக்கிறாராம்.

 

தமிழில் "கோ" தெலுங்கில் ‘ரங்கம்'

Tags: quot, quot quot


Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

தமிழில் ‘கோ’ தெலுங்கில் 'ரங்கம்’

5/17/2011 1:02:00 PM

ஜீவா நடித்துள்ள 'கோÕ படத்தை தெலுங்கில் 'ரங்கம்’ என்ற பெயரில் சூப்பர் குட் பிலிம்ஸ் டப் செய்திருக்கிறது.

 

வெளிநாட்டு தொழிலதிபரை காதலிக்கிறார் குத்து திவ்யா

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வெளிநாட்டு தொழிலதிபரை காதலிக்கிறார் குத்து திவ்யா

5/17/2011 4:33:34 PM

பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் குத்து திவ்யா. சமீபத்தில் காங்கிரசில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை கொல்கத்தா – பெங்களூர் அணிகள் மோதிய சிறப்பு கிரிக்கெட் போட்டி நடந்தது. இதை பார்க்க திவ்யா தனது வெளிநாட்டு காதலர் ரபேலுடன் வந்து அனைவரது பார்வையையும் ஈர்த்தார். ரபேல், போர்ச்சுகல் நாட்டில் தொழில் செய்து வருகிறார். இவரது பெற்றோர் ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்கள். கடந்த புதுவருடப்பிறப்பின் போது லிஸ்பனில் நடந்த பார்ட்டியில் முதன் முதலாக திவ்யாவும் ரபேலும் சந்தித்துள்ளனர். அப்போது இருவரின் கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆனதில் அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இந்த காதலுக்கு ரபேலின் பெற்றோர் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. Ôஆனால் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும், திருமணம் செய்ய இன்னும் காலம் உள்ளதுÕ எனவும் திவ்யா கூறியுள்ளார்.