சைக்கிள் போட்டியில் பதக்கம் வென்றார் ஆர்யா!

சென்னை: ஸ்வீடன் நாட்டில் வாடேர்ன் ருண்டேர்ன் ரேஸ் என்ற பெயரில் நடந்த சைக்கிள் ஓட்டும் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா அதில் பதக்கம் வென்று பரிசைத் தட்டிச் சென்றுள்ளார்.

அண்மையில் ஸ்வீடன் நாட்டில் 300 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சைக்கிள் ஓட்டும் போட்டி ஒன்று நடைபெற்றது.

International Cycle Race Arya Win’s The Medal

இதில் இந்தியாவின் சார்பாக நடிகர் ஆர்யாவும் கலந்து கொண்டார், சீரற்ற வளைவுகள், மலைகள்,அபாயகரமான பாதைகள், எதிர்க்காற்று போன்றவற்றைத் தாண்டி 15 மணி நேரத்திற்குள் 300 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும் என்பது தான் போட்டியின் விதி.

குறிப்பிட்ட 15 மணி நேரத்திற்குள் 300 கிலோ மீட்டர் தூரத்தையும் கடந்த ஆர்யா போட்டியில் வெற்றி பெற்று பரிசாக பதக்கம் ஒன்றைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

International Cycle Race Arya Win’s The Medal

போட்டியில் வென்ற பின் எனக்காக வேண்டிக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் ஆர்யா.

பரவாயில்லை, அஜீத் பைக் ஓட்டுகிறார்.. ஆர்யா சைக்கிள் ஓட்டுகிறார்.. !

 

சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் அஞ்சலி

ஹைதராபாத்: தமிழின் சிறந்த நாயகிகளில் ஒருவரான அஞ்சலி இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளின் காரணமாக தமிழ்த் திரையுலகில் இருந்து காணாமல் போனார். மீண்டும் மாப்ள சிங்கம், அப்பாடக்கரு மற்றும் இறைவி போன்ற படங்களில் தற்போது தமிழ் பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தான் அறிமுகமான தெலுங்கு உலகில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தில் அஞ்சலியும் ஒரு நாயகியாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Anjali Joined Auto Jaani Movie?

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150 வது படமான ஆட்டோ ஜானியை பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்க, சிரஞ்சீவியின் மகனும் டோலிவுட்டின் இளம் நாயகனுமான ராம் சரண் படத்தைத் தயாரிக்கிறார்.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் நமீதாவும் ஒரு நாயகி தான் என்று முன்பு தகவல்கள் வெளியாகின , தற்பொழுது அதில் அஞ்சலியும் ஒரு நாயகியாக நடிக்கிறார் என்று தெலுங்குலகில் கிசுகிசுக்கிறார்கள் . ஆட்டோ ஜானி படத்தின் முதல் பாகம் திகில் கலந்த சஸ்பென்ஸ் ஆக உருவாகி வருகிறதாம்.

 

ஓவர் டூ "தல 57"... அஜீத்தின் அடுத்த பட இயக்குநர் சுசீந்திரன்?

சென்னை: அஜீத்தின் அடுத்த படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

என்னை அறிந்தால் பட வெற்றியைத் தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் இன்னும் பெயரிடப் படாத படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமிமேனனும் நடித்து வருகின்றனர்.

முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து விட்ட நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

WHO WILL DIRECT THALA 57?

இந்நிலையில், சிறுத்தை சிவா படத்தைத் தொடர்ந்து அஜித், சுசீந்திரன் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுசீந்திரன் தற்போது விஷாலை வைத்து ‘பாயும் புலி' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளது.

இப்படத்திற்குப் பிறகு மாஸ் ஹீரோவுக்குண்டான கதையம்சம் கொண்டதாக ஒரு கதையை சுசீந்திரன் உருவாக்க இருக்கிறாராம். இந்த கதைக்கு அஜித் பொருத்தமாக இருப்பதால் அவரை வைத்து சுசீந்திரன் படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

"பேய்"களின் குத்தாட்டத்துக்கு மத்தியில் ஒரு "காதலும், காமெடியும்"...!

சென்னை: தொடர்ந்து பேய்ப் படங்கள் மட்டுமே கோலோச்சி வந்த கோலிவுட்டில் முதல்முறையாக ஒரு காமெடி படமும் காதல் படமும் வந்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளிவந்த சந்தானத்தின் இனிமே இப்படித்தான் மற்றும் ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் படங்களுக்கு மக்கள் சற்றே உற்சாக வரவேற்பு கொடுத்து வரவேற்று உள்ளனர்.

Inimey Ippadithan, Romeo Juliet Box office Reports

இந்தப் படம் சற்று துவண்டு கிடந்த ஜெயம் ரவிக்கு மீண்டும் சற்று தெம்பைக் கொடுக்கும் என்று தெரிகிறது. மறுபக்கம் இனிமே இப்படித்தான் படத்திற்கு வசூலும் வரவேற்பும் சற்று கம்மி என்றே சொல்கிறார்கள்.

Inimey Ippadithan, Romeo Juliet Box office Reports

ஜெயம் ரவி - ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த ரோமியோ ஜூலியட் படம் இதுவரை 6.5 கோடி ரூபாயை வசூலித்து இருக்கிறது. அதே சமயம் சந்தானத்தின் நடிப்பில் வெளிவந்த இனிமேல் இப்படித்தான் படம் இதுவரை வெறும் 1.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து உள்ளது.

தற்போதைய ரேஸில் ஜெயம் ரவி முந்துவது போலத் தெரிந்தாலும் முடிவில் யாரின் படம் வசூலைக் குவிக்கும் என்பது இனிமேல் தான் தெரியவரும் பார்க்கலாம்.

 

சிங்கம் 3... சிபிஐ அதிகாரி அவதாரம் எடுக்கும் சூர்யா!

சென்னை: இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சிங்கம். சிங்கம் படத்தின் வெற்றியால் அதன் இரண்டாம் பாகமான சிங்கம் 2 வும் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.

தற்பொழுது அதன் மூன்றாம் பாகமான சிங்கம் 3 படத்தை எடுக்கவிருக்கும் இயக்குநர் ஹரி படத்தின் முழுக் கதையையும் தயார் செய்து விட்டு சூர்யாவிற்காக காத்திருக்கிறார். 24 மற்றும் ஹைக்கூ படங்களில் பிஸியாக நடித்து வரும் சூர்யா இந்த 2 படங்களையும் முடித்து விட்டு சிங்கம் 3 யில் நடிக்க இருக்கிறார்.

Singam 3 Surya  In CBI Officer

வேல், ஆறு, சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஹரியும் நடிகர் சூர்யாவும் இணைகின்ற 5 வது படம் இது.

சிங்கம் 2 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சூர்யா இந்தப் படத்தில் முதல் முறையாக சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். இந்தமுறை சூர்யாவிற்கு ஜோடியாக இந்தப் படத்தில் சுருதி ஹாசன் நடிக்கிறார். விரைவில் படத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகும் என்று கூறுகின்றனர்.

 

நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த ஜென்டில்மேன் அஜீத்தான் - வில்லன் கபீர் சிங்

நான் பார்த்ததிலேயே சிறந்த ஜென்டில்மேன் அஜீத் தான் என்று வில்லன் நடிகர் கபீர் சிங் கூறியுள்ளார்.

சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அஜீத்குமார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும், தங்கையாக லட்சுமிமேனன் நடித்து வருகிறார்.

New villain Kabhir Singh praises Ajith

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை விமான நிலையம் அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்து முடிந்துள்ளது. இதில், அஜித், லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இதில் அஜித் மற்றும் இப்படத்தில் வில்லனாக நடிக்கும் கபீர் சிங் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.

அஜித்துடன் நடித்த அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ள கபீர் சிங், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

"அஜித்தை இப்போதுதான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். அவர் ஒரு ஜென்டில்மேன், அற்புதமான மனிதர், வைரம் போன்றவர். நிஜ வாழ்க்கையில் ஹீரோ, ஒழுக்கத்தின் மறு உருவம், உதவுவதில் சிறந்தவர். அஜித்தை பொருத்தவரை இயக்குனர், கேமராமேன், லைட்மேன் படக்குழுவினர் அனைவரையும் சமமாகப் பார்க்கக் கூடியவர். தமிழ் சினிமாவில் பெரிய படத்தில் சிறந்த அறிமுகம் கொடுத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.