மற்றவர்களுக்காக என்னை மாற்றிக் கொள்ள முடியாது - ஸ்ருதி ஹாஸன்

கதைக்கு என்ன தேவையோ அப்படித்தான் நான் நடிப்பேன். மற்றவர்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது, என்று மற்றவர்களுக்காக என்னை மாற்றிக் கொள்ள முடியாது - ஸ்ருதி ஹாஸன்  

நிறைய சர்ச்சைகளிலும் சிக்குகிறார். ஆனால் வெளியில் அதுபற்றி அவர் அலட்டிக் கொள்வதில்லை. அனைத்து மொழி சினிமாவிலும் அதிகம் விரும்பப்படும் கதாநாயகியான அவர், தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

சமீபத்தில் ரேஸ் குர்ரம் படத்தில் ஆபாசமாக நடித்ததாக அதிக அளவு விமர்சிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை அந்தப் படத்தின் பாத்திரம் அப்படி. அதற்கேற்ப நடித்தேன். அது பிடிக்காவிட்டால் பார்க்காமல் போங்கள். யார் வேண்டாம் என்றது. எனக்கு என் உடம்பு ஒரு கோயில் மாதிரி. என்னை ஆபாசமாகப் பார்ப்பது அவர்களது கண்ணோட்டம். அவர்களுக்காக என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன்," என்றார்.

 

விஜய் சேதுபதியை சிக்கலில் மாட்டிவிட்ட 'வசந்தகுமாரன்'!

ஸ்டுடியோ 9 என்ற நிறுவனம் விஜய் சேதுபதியை வைத்து வசந்த குமாரன் என்ற படத்தை ஆரம்பித்து பாதியில் நிறுத்தியது நினைவிருக்கலாம்.

இப்போது அந்தப் படத்துக்காக கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பித் தருமாறு விஜய சேதுபதிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. மேலும் விஜய் சேதுபதியால் தங்கள் நிறுவனத்தையே மூடிவிடப் போவதாக வேறு கூறியுள்ளது.

பரதேசி, சூது கவ்வும், சலீம் போன்ற படங்களை வெளியிட்ட நிறுவனம்தான் இந்த ஸ்டுடியோ 9.

விஜய் சேதுபதியை சிக்கலில் மாட்டிவிட்ட 'வசந்தகுமாரன்'!

கடந்த ஆண்டு இந்த நிறுவனம் வசந்த குமாரன் என்ற படத்தை ஆரம்பித்தது, விஜய் சேதுபதியை ஹீரோவாக்கி!

ஆனால் படம் தள்ளிப் போனது. விஜய் சேதுபதி வெவ்வேறு படங்களில் பிஸியாகிவிட்டார். ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் விஜய் சேதுபதியைக் குற்றம்சாட்டி அறிக்கைவிட்டுள்ளது இந்த ஸ்டுடியோ 9.

விஜய் சேது அட்வான்ஸாக வாங்கிய பணத்தைக் கூட தரவில்லை. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. சினிமாவே வேண்டாம் என்று நிறுவனத்தை இழுத்து மூடும் நிலையில் உள்ளோம் என்றெல்லாம் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஆனால் விஜய் சேதுபதி, இதுகுறித்து கருத்து சொல்லவில்லை. கேட்டபோது, இந்தப் பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் பேசி வருகின்றன. நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றால்.

விஜய் சேதுபதிக்கு அந்த நிறுவனம் தந்த முன்பணம் சில லட்சங்கள்தானாம். இந்தப் பணத்தை திரும்பத் தராததற்காக நிறுவனத்தையே இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஸ்டுடியோ 9 கூறுவது ஆச்சர்யம் தருவதாக திரையுலகினர் தெரிவித்துள்ளனர். அந்த சில லட்சங்களை மட்டும் நம்பியா சினிமா வந்தார்கள் இந்த நிறுவனத்தினர்?

விஜய் சேதுபதியும் யாரையும் ஏமாற்றியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானதில்லை இதுவரை. நீர்ப்பறவை படத்துக்குப் பிறகு சரியான படம் அமையாத நிலையில் இருந்த தனது குருவான சீனு ராமசாமியை அழைத்து, சத்தமின்றி ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவர். அனைவரிடமும் பொதுவாக நல்ல பெயர் பெற்றிருப்பவர். எதனால் இப்படி சிக்கலில் மாட்டிக் கொண்டார் என்பதுதான் பேச்சாக இருக்கிறது கோடம்பாக்கத்தில்!

 

லிங்கா, ஐ படங்களால் ரூ 500 கோடி முடங்கிக் கிடக்குதாமே!

பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கும்போது, அதில் உள்ள சவுகரியம் நினைத்ததை காட்சிகளாக்கும் சுதந்திரம். அசவுகரியம், படம் எப்போது வரும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாத நிலை.

காரணம், இந்த மாதிரி பெரிய படங்களை சரியான சூழல் பார்த்து வெளியிடாவிட்டால் விழும் அடி யாராலும் நினைத்துப் பார்க்க முடியாதது.

ஷங்கர் பாய்ஸ் என்று ஒரு படம் எடுத்தார். அன்றைக்கு அதுதான் பெரிய பட்ஜெட் படம். இன்றைக்கு தொலைக்காட்சிகளில் அந்தப் படத்தைப் போட்டால் ஜாலியாக கண்டு ரசிக்கும் இதே கூட்டம் அந்தப் படத்தை கிழித்து தொங்கப் போட்டது. வெளியான நேரம் வேறு சரியில்லை. விளைவு, அப்படியொரு அடி!

எனவே பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கும் சரியான சூழலுக்கு காத்திருக்க நேர்கையில், அவற்றில் பெருமளவு தொகை முடங்கி நிற்கிறது.

ரஜினியின் லிங்கா ரூ 100 கோடிக்கு மேல் பட்ஜெட் கொண்ட படம். படத்தில் இடம் அணை கட்டும் காட்சிக்காக நிஜமான டேம் போலவே பெரும் பணம் செலவழித்து டேம் செட் போட்டிருக்கிறார்கள்.

ஷங்கரின் ஐ படம் தமிழ் சினிமா பிரமாண்டத்தின் உச்சம் எனும் அளவுக்கு ரூ 180 கோடி செலவில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த இரு படங்களும் ரிலீஸ் ஆகாத வரை ரூ 500 கோடி முடங்கியிருக்கும் நிலை.

லிங்கா, ஐ படங்களால் ரூ 500 கோடி முடங்கிக் கிடக்குதாமே!

லிங்காவைப் பொருத்தவரை அதில் எந்தத் தாமதமும் இல்லை. மே மாதம் ஆரம்பித்தார்கள். இந்த நவம்பரில் முடித்துவிட்டார்கள். டிசம்பர் 12-ம் தேதி ரிலீஸ் என்று அறிவித்துள்ளனர். இந்தத் தேதி மாறும்பட்சத்தில் பொங்கலுக்கு உறுதியாகிவிடும்.

ஷங்கர் படம் இந்த தீபாவளிக்கு வர வேண்டியது. கிராபிக்ஸ் பணிகளால் மேலும் ஒரு மாதம் தள்ளிப் போயிருக்கிறது.

இந்த இரு படங்களும் வெளியாகி, எதிர்ப்பார்த்த வெற்றியும் கிடைத்துவிட்டால், சினிமாவுக்கே ஜாக்பாட் அடித்தமாதிரிதான்!

 

காங்கிரஸை ஒன்றுபடுத்துவது சிதம்பரத்துக்கு கடினமல்ல! - வைரமுத்து

கவிஞர்களையே ஒருங்கிணைக்கும் ப சிதம்பரத்துக்கு காங்கிரஸை ஒன்றுபடுத்துவது இயலாத காரியமல்ல, என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.

ப சிதம்பரம் தொடங்கியுள்ள எழுத்து இலக்கிய அமைப்பின் அறிமுக விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், "எழுத்து' இலக்கிய அமைப்பிற்கான அறங்காவலர் குழுவில், 3 கவிஞர்களை ஒன்று சேர்ப்பது என்பது காங்கிரஸ் கட்சியை ஒன்று சேர்ப்பதை விட சிரமமானது.

அதையே ஒரு செல்போனில் சாதாரணமாக செய்து முடித்துவிட்டார் ப சிதம்பரம். அப்படிப்பட்ட அவருக்கு, காங்கிரசை ஒன்றுபடுத்துவது என்பது கடினமல்ல.

காங்கிரஸை ஒன்றுபடுத்துவது சிதம்பரத்துக்கு கடினமல்ல! - வைரமுத்து

இந்த ‘எழுத்து' அமைப்பில், ஜாதி, மதம், அரசியல் எதுவும் இல்லை. தமிழ் மட்டுமே உள்ளது.

அந்த காலங்களில் வேதங்கள் ஓதப்பட்டன. அவற்றை எழுதினால் மற்றவர்கள் படித்து விடுவார்கள் என்ற எண்ணத்தில், வேதத்திற்கு ‘எழுதா கிளவி' என பெயரிட்டு தங்கள் இனத்தைக் கடந்து வேதம் செல்லாமல் பார்த்துக் கொண்டனர்.

தற்போது, புத்தகங்கள் விற்பனையாகவில்லை என்பது உண்மைதான். புத்தகங்களின் விற்பனை என்பது படைப்பாளிகளை பொறுத்தது அல்ல, படைப்பை பொறுத்தது. எனவே தரமான படைப்புகளை, எழுத்தாளர்கள் தாமே பரீட்சித்து பார்த்து, அதன்பிறகு ‘எழுத்து' அமைப்பிற்கு அனுப்பி வையுங்கள்," என்றார்.

 

'இதுவரை வந்த தென்னிந்திய நடிகர்களின் பட வசூலை கத்தி முறியடித்துள்ளது!'- விஜய் மேனேஜர் அறிக்கை

விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான கத்தி படம் இரண்டாவது வாரத்தில் ரூ 100 கோடி வசூலைத் தாண்டிவிட்டதாக அவரது மேனேஜர் பிடி செல்வகுமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் இதுவரை வந்த தென்னிந்திய நடிகர்கள் அத்தனை பேரின் வசூல் சாதனைகளையும் கத்தி முறியடித்துவிட்டதாவும் அந்த அறிக்கையில் பிடி செல்வகுமார் குறிப்பிட்டுள்ளார்.

கத்தி படம் வெளியான நாளிலிருந்து பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருவதாக படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

'இதுவரை வந்த தென்னிந்திய நடிகர்களின் பட வசூலை கத்தி முறியடித்துள்ளது!'- விஜய் மேனேஜர் அறிக்கை

நேற்று முன் தினம் படத்தின் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இந்தப் படம் ரூ 100 கோடி வசூலைத் தாண்டிவிட்டதாக ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில் படத்தின் நாயகன் விஜய்யின் பிஆர்ஓ மற்றும் மேனேஜர் பிடி செல்வகுமார் (விஜய் நடிக்கும் அடுத்த படத்தைத் தயாரிப்பவரும் இவரே) இன்று ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

அதில், "ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான கத்தி திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ 100 கோடியைத் தாண்டியது.

இதுவரை வந்த தென்னிந்திய நடிகர்களின் வசூலை கத்தி முறியடித்துள்ளது என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ரூ 65.1 கோடியும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 15.4 கோடியும், வெளிநாடுகளில் ரூ 20.2 கோடியும் வசூல் செய்துள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

என் இனிய தோழியே! நவம்பர் 10 முதல், ராஜ் டிவியில் புதிய சீரியல்

சென்னை: ராஜ் தொலைக்காட்சியில் நவம்பர் 10ம்தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய மெகாத் தொடர் என் இனிய தோழியே.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரின் கதை இதுதான்.

பாரி, சந்தியா நெருங்கிய தோழிகள். அனாதைகளாக, சிறுவயதில் இருந்து ஆசிரமத்தில் தங்கி வளர்ந்தவர்கள். ராம் அசோசியேட் எனும் நிறுவனத்தில் AEO-வாக வேலை பார்க்கிறாள் பாரி. சந்தியாவோ, மற்றொரு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறாள். இருவரும் பணிநேரம் போக, ஆசிரமத்தில் தங்கி அனாதை சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும் வேண்டிய உதவிகளை செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த ஆசிரமத்தில் ராகவன் தாத்தா தங்கியிருக்கிறார். அவரது பேரன் பாலு, தன் மனைவி துர்கா, மகள் காவ்யாவுடன் வசித்து வருகிறான். மற்றொரு பேரன் சத்யா சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு இப்போதுதான் சென்னை வந்துள்ளார்.

என் இனிய தோழியே! நவம்பர் 10 முதல், ராஜ் டிவியில் புதிய சீரியல்

இந்நிலையில் பாரியிடம் ராகவன் தாத்தா, ஒரு கோரிக்கையை முன் வைக்கிறார். ஆனால் அவளோ, பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டு சென்றுவிடுகிறாள். பள்ளிக்குச் சென்ற பாலுவின் மகள் காவ்யாவை காணவில்லை என போன்வர, புகாரின் அடிப்படையில் போலீஸ் காவ்யாவை தேட ஆரம்பிக்கிறது. அப்போது, காவ்யா ஆசிரமத்தில் தாத்தாவுடன் இருப்பது தெரியவருகிறது. ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அங்கு செல்கின்றனர்.

அப்போதுதான் ராகவன் தாத்தாவின் ஆசைப்படி, பாரிதான் குழந்தை காவ்யாவை தூக்கி வந்திருப்பது தெரியவருகிறது. தனது தாத்தா ஆசிரமத்தில் இருப்பது தெரிந்த சத்யா, அதிர்ச்சியடைந்தாலும், பாரியின் குணத்தையும், அழகையும் பார்த்தை அவளை ரசிக்கின்றான்.

எல்லோரும் சமாதானம் ஆகி, காவ்யாவை தூக்கிக்கொண்டு புறப்படுகிறார்கள். தாத்தா ரகாகனை சத்தியா வீட்டிற்கு அழைக்க அவரோ பாரியை திருமணம் செய்தால் வருவேன் என்று கூறுகிறார். ஆனால் தாத்தா ஆசிரமத்தில் இருந்தால்தான் அடிக்கடி அவரை பார்க்க வருவது போல பாரியை பார்க்க முடியும் என்று நினைத்து அங்கேயே தாத்தாவை இருக்கச் சொல்கிறான் சத்தியா.

இந்நிலையில் கதையின் வில்லி வாசுகி ஜெயிலில் இருந்து வெளியே வருகிறாள், பாரியை பழிவாங்கப்போவதாக சபதம் போடுகிறாள். இதனிடையே பாரியின் எம்.டி., ராம் அலுவலகம் புறப்படுகிறார். வேலைக்கார பெண்ணை டிபன் எடுத்து வைக்க சொல்லும்போது, அவரது மனைவியோ உதாசீனப்படுத்துகிறாள். அவன் கலங்கி நிற்கிறான்.

ஏன் ராமின் மனைவி அப்படி நடந்துகொண்டாள்? சத்யா-பாரி மீண்டும் சந்திப்பார்களா? பாரியை பழிவாங்க புறப்பட்ட வாசுகி என்ன செய்யப்போகிறாள்? என பல்வேறு ஆவல்களை சுமந்து ஒளிபரப்பாக உள்ளது, என் இனிய தோழியே.

 

எண்ணி ஏழு நாள்: கதையை மெருகேற்றும் லிங்குசாமி!

அடுத்த அடியை எடுத்து வைப்பதில் ரொம்பவே எச்சரிக்கையாக இருக்கிறார் லிங்குசாமி. அஞ்சானில் அண்ணன் சூர்யாவை இயக்கியவர், தம்பி கார்த்தியை வைத்து எண்ணி ஏழு நாள் படத்தை உடனே தொடங்கத் திட்டமிட்டார்.

ஆனால் இப்போது கொஞ்சம் நிதானமாக அந்தப் படத்தைப் பண்ணலாம் என முடிவெடுத்துள்ளார்.

எண்ணி ஏழு நாள்: கதையை மெருகேற்றும் லிங்குசாமி!

படத்தின் கதை கார்த்திக்குப் பிடித்திருந்தாலும், அதை இன்னமும் மெருகேற்ற விரும்புகிறார் லிங்குசாமி. எனவே கார்த்தியிடம் இன்னும் மூன்று மாதம் டைம் எடுத்துக் கொள்ளலாம்.

அதுவரை வேறு ஒரு படத்துக்கு கால்ஷீட் தருவதென்றாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டாராம். கொம்பன் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருப்பதால், தேதிகளை வீணாக்காமல், நாகார்ஜூனாவுடன் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டாராம் கார்த்தி.