இந்தி பட வாய்ப்பை மில்க் நடிகை மறுக்கலையாம்: ரிஜெக்ட் செய்துவிட்டார்களாமே

சென்னை: கோவைப்பழ கண்கள் கொண்ட ஹீரோ நடித்த 3 எழுத்து படம் இந்தியில் ரீமேக்காகிறது. இதில் நடிக்க வந்த வாய்ப்பை மில்க் நடிகை மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் வேறு விதமாக அல்லவா பேச்சு அடிபடுகிறது.

கோவைப்பழ கண்கள் கொண்ட அந்த ஹீரோ, இடுப்பழகி நடிகை நடித்த 3 எழுத்து படம் சூப்பர் ஹிட்டானது. அந்த ஹீரோ தற்போது அரசியலில் இருக்கிறார். இந்நிலையில் அந்த படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். இந்தியில் நடிக்க மில்க் நடிகையை அழைத்ததாகவும் அவர் ரொம்ப பிசியாக இருப்பதால் நடிக்க மறுத்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வேறு விதமாகக் கூறப்படுகிறது. போட்டோ செஷனில் கலந்து கொண்ட மில்க் தன்னை அழைப்பார்கள் என்று காத்திருந்தாராம். மில்க்கை இந்தியில் நடிக்க வைத்தால் அங்குள்ள ரசிகர்களிடம் படத்தை ஓட வைக்க முடியாது என்று நினைத்தார்களாம். அதனால் மில்க்கை விட்டுவிட்டு புயலின் பெயரை கொண்டுள்ள 4 எழுத்து இந்தி நடிகையை புக் செய்துவிட்டார்களாம்.

நம்மை நிச்சயம் அழைப்பார்கள் என்று காத்திருந்த மில்கிற்கு இது பெரும் அதிர்ச்சி அளித்ததாம். இந்த வாய்ப்பு கிடைக்காததால் இனி இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நடிக்கப் போவதில்லை என்று கூறி வருகிறாராம் மில்க்.

 

'நாங்க கிண்டலடிக்கவே இல்லை... சந்தானமே சிகரெட்டுக்கு எதிராதானே பிரச்சாரம் பண்றார்!' - ராஜேஷ்

'நாங்க கிண்டலடிக்கவே இல்லை... சந்தானமே சிகரெட்டுக்கு எதிராதானே பிரச்சாரம் பண்றார்!' - ராஜேஷ்

சென்னை: ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் குட்காவுக்கு எதிரான விளம்பரத்தை கிண்டல் செய்துள்ளதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையில், சந்தானம் சொல்வதைக் கேட்டபிறகு சிகரெட் பிடிப்பதையே விட்டுவிடுவதுபோலத்தான் காட்சி வைத்துள்ளோம், என்று இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி, காஜல், சந்தானம் நடித்து தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் படம் ஆல் இன் ஆல் அழகுராஜா.

ரிலீசாகும் நேரத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது இந்தப் படம். அது படத்தின் ட்ரைலரில் இடம்பெற்ற குட்கா - சிகரெட் எதிர்ப்பு விளம்பரத்தை சந்தானமும் கார்த்தியும் கிண்டலடிக்கும் காட்சி.

பொதுமக்கள் புகையிலை பயன்படுத்துவதை நிறுத்துவதற்காக, புகையிலையினால் பாதிக்கப்பட்ட முகேஷ் இறக்கும் தருவாயில் விடுக்கும் வேண்டுகோளை புகையிலை விழிப்புணர்விற்காக ஒவ்வொரு திரையரங்கிலும் திரையிடுகிறார்கள்.

ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இந்த முகேஷை சந்தானம் கிண்டலடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், படத்திலிருந்து காட்சிகளை நீக்க வேண்டும் அல்லது படத்தைத் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடு மக்கள் மன்றத்தினர் சுகாதார செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து இயக்குனர் ராஜேஷிடம் பேசியபோது, "இந்தப் படத்தில் புகையிலை ஒழிப்பிற்கு எதிராக நாங்கள் எந்த காட்சியும் வைக்கவில்லை. உண்மையில் நாங்களும் புகையிலைக்கு எதிரான பிரச்சாரத்தை ஜனரஞ்சமாக சொல்லியிருக்கிறோம்.

அந்த காட்சியை நன்றாக புரிந்துகொண்டால், முகேஷைப் பற்றி சந்தானம் காமெடியாக சொல்வதும், அதைக் கேட்ட பிறகு கார்த்தி சிகரெட் பிடிப்பதையே விட்டுவிடுவதுமாகத்தான் காட்சி அமைத்துள்ளோம். இத்தனைக்கும் எங்கள் படத்துக்கு யு சான்று கொடுத்துள்ளார்கள்," என்றார்.

 

அஜீத்தின் ஆரம்பம் படத்திற்கு 'யு' சான்றிதழ்

சென்னை: அஜீத்தின் ஆரம்பம் படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம் படத்தை இன்று சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கு போட்டி காட்டினர். படத்தை பார்த்த அவர்கள் யு சான்றிதழ் அளித்துள்ளனர். அதனால் வரி விலக்கு பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை.

அஜீத்தின் ஆரம்பம் படத்திற்கு 'யு' சான்றிதழ்  

முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. அதற்கு முன்பு நடித்த பில்லா 2 படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மங்காத்தாவை தொடர்ந்து ஆரம்பம் படத்திலும் அஜீத் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வருகிறார்.

 

சென்னை கோர்ட்டுக்கு வெளியே பவர் ஸ்டாரை சுற்றி வளைத்த சிவகாசி போலீசார்

சென்னை கோர்ட்டுக்கு வெளியே பவர் ஸ்டாரை சுற்றி வளைத்த சிவகாசி போலீசார்

சென்னை: சென்னையில் பவர் ஸ்டார் சீனிவாசனை சுற்றி வளைத்த சிவகாசி போலீசார் அவர் முன்ஜாமீனை காட்டியதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

லத்திகா படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன். கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். தற்போது ஷங்கரின் ஐ படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே அவர் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் கமிஷன் வாங்கி ஏமாற்றியதாக போலீசில் புகார்கள் குவிந்தன. அவர் தமிழகம் தவிர ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்தவர்களையும் ஏமாற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து டெல்லியைச் சேர்ந்த ஒருவரிடம் கமிஷன் வாங்கிக் கொண்டு அவரிடம் கூறியது போன்று ரூ.50 கோடி கடன் வாங்கித் தராததால் டெல்லி போலீசாரும் பவர் ஸ்டாரை கைது செய்தனர்.

டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்ட பவர் சில மாதங்கள் கழித்து வெளியே வந்தார். ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள பவர் பழையபடி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு விசாரணை தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த பவர், தான் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்றுவிட்டதாகவும், இனி தன்னை பல படங்களில் பார்க்கலாம் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக பவர் நேற்று மாலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தார். அப்போது அவரை சிவகாசி போலீசார் கைது செய்ததாக தகவல் பரவியது. மேலும் அவரை சிவகாசிக்கு கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் பவரை போலீசார் சுற்றி வைளைத்தபோது அவர் முன்ஜாமீனை காட்டியுள்ளார். இதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

 

பாத்து பட்டாசு வெடிங்க: விழிப்புணர்வு படம் மூலம் அட்வைஸ் செய்ய வரும் சூர்யா

பாத்து பட்டாசு வெடிங்க: விழிப்புணர்வு படம் மூலம் அட்வைஸ் செய்ய வரும் சூர்யா

சென்னை: தீபாவளி பட்டாசு விபத்தை தடுக்க நடிகர் சூர்யா விழிப்புணர்வு படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்தை தீயணைப்பு துறை வெளியிடவிருக்கிறது.

தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் பட்டாசு விபத்துகளை தடுக்க தீயணைப்பு துறையினர் கடந்த ஒரு வார காலமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வருவதுடன் விழிப்புணர்வு ஒத்திகையும் நடத்தி காண்பித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவ-மாணவியர் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு ஊர்வலம் சென்னை தி. நகரில் நடக்கவிருக்கிறது.

இதற்கிடையே நடிகர் சூர்யாவை வைத்து விழிப்புணர்வை படத்தை தீயணைப்பு துறையினர் தயாரித்துள்ளார்கள். 2 நிமிடம் ஓடும் இந்த படத்தில் சூர்யா பொது மக்களுக்கு அறிவுரை வழங்குகிறாராம். படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் வேலை நடந்து வருகிறதாம். அந்த வேலை முடிந்ததும் படத்தை பத்திரிக்கையாளர்களுக்கு போட்டு காட்டிவிட்டு திரையரங்குகளில் வெளியிடவும், டிவி சேனல்களில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தீயணைப்புத்துறை இயக்குனர் ஆர்.சி.குடவாலா தெரிவித்தார்.

இந்த படத்தில் சூர்யா தானாக முன்வந்து நடித்ததுடன் அதற்காக சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஜய் டிவியின் தீபாவளி ஸ்பெஷல் விஸ்வரூபம்!

விஜய் டிவியின் தீபாவளி ஸ்பெஷல் விஸ்வரூபம்!

சென்னை: வரும் தீபாவளிக்கு சிறப்புத் திரைப்படமாக கமலின் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்புகிறது விஜய் டிவி.

கமல் - பூஜா குமார் - ஆன்ட்ரியா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் விஸ்வரூபம். இஸ்லாமிய சர்ச்சை, அரசின் தடை, இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக கமலின் அறிவிப்பு என பல பரபரப்புகளைப் பார்த்த படம் இது.

தமிழகத்தில் மட்டும் வெளியாகாமல், பிற மாநிலங்களில் வெளியானதால் மக்கள் வண்டி கட்டிப் போய் பார்த்த படம்.

ரிலீசான சில மாதங்களில் இப்போது சின்னத் திரைக்கு வந்துவிட்டது.

சமீப காலமாக புதிய படங்களாக ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி (ஆனா படம் பார்க்கும் நேரத்துக்கு சமமாக விளம்பரங்களையும் நீங்கள் பார்த்தாக வேண்டும்!). இப்போது மெகா படமான விஸ்வரூபத்தை ஒளிபரப்புவதன் மூலம், தீபாவளி ஸ்பெஷல் படங்களை ஒளிபரப்புவதில் பெரும் போட்டியை ஆரம்பித்து வைத்துள்ளது விஜய் டிவி.

போற போக்கைப் பார்த்தால் தியேட்டர் கிடைக்காத வெறுப்பில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பப் போகிறார்கள்!


Vijay TV is telecasting Kamal's mega hit Viswaroopam as Diwali special.

 

கவுதம் மேனன் படத்திலிருந்து விலகியது ஏன்?- சூர்யா பரபரப்பு பேச்சு

கவுதம் மேனன் படத்திலிருந்து விலகியது ஏன்?- சூர்யா பரபரப்பு பேச்சு

சென்னை: கவுதம் மேனன் படத்திலிருந்து விலகியது குறித்து வெளிப்படையாக, ஆனால் அவர் பெயரைக் குறிப்பிடாமல் பேசினார் சூர்யா.

ஜன்னல் ஓரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "சில விஷயங்களில் வெளிப்படையா இந்த மேடையில் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

கரு பழனியப்பன் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும் பார்த்திபன் கனவு படத்தில் ஜோதான் நடிப்பதாக இருந்தது. அந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் ரொம்ப பீல் பண்ணுவாங்க ஜோ.

அவருடைய நட்புக்காகத்தான் நான் வந்தேன். பிரெண்ட்ஷிப் எப்படிப்பட்டதுன்னு எனக்குத் தெரியும். அது வேலை, தொழிலைவிட உயர்ந்தது. அதனாலதான் சமீபத்துலகூட ஒரு முக்கியமான முடிவை எடுத்தேன். அந்த உறவு பிரியாது, பாதிக்காது. நிச்சயம் தொடரும்.

அடுத்த வருஷம் மீண்டும் ஒரு சிறந்த படத்தோட நான் வந்து உங்களை சந்திப்பேன். அதுக்காக எடுத்த ஒரு இடைவெளியுடன் கூடிய முடிவுதான் அது. ரெண்டு பேருமே ஒருத்தர் மீது ஒருத்தர் மரியாதை வச்சிருக்கோம்," என்றார்.

இதில் எந்த இடத்திலும் அவர் வெளிப்படையாக கவுதம் மேனன் பெயரைக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

குட்கா எதிர்ப்பு விளம்பரத்தைக் கிண்டலடித்த சந்தானம் மீது தமிழக அரசிடம் புகார்!

சென்னை: அரசின் குட்கா எதிர்ப்பு விளம்பரப் படத்தைக் கிண்டலடிப்பது போல ஆல் இன் ஆல் அழகுராஜா பட ட்ரைலரில் சந்தானம் பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழக அரசிடம் இதுகுறித்து தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாட்டு கூட்டணி புகார் செய்துள்ளது.

ஆல் இல் ஆல் அழகுராஜா படத்தின் ட்ரைலரில் குட்காவுக்கு எதிரான விளம்பரத்தை நக்கலடித்துள்ளார்.

குட்கா எதிர்ப்பு விளம்பரத்தைக் கிண்டலடித்த சந்தானம் மீது தமிழக அரசிடம் புகார்!

அந்த விளம்பரத்தில் தம்மடிக்க வேண்டும் என கார்த்தி கேட்க, அதற்கு சந்தானம், குட்கா விளம்பரத்தில் வரும் முகேஷின் குரலை இமிடேட் பண்ணி பேசிக் காட்டுவார். பின்னர் கார்த்தி சிகரெட் வேண்டாம் என சொல்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இது அந்த விளம்பரத்தைக் கிண்டலடிப்பது போலுள்ளதாக தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாட்டுக் கூட்டணி புகார் தெரிவித்துள்ளது. சந்தானத்துக்கு எதிராக எழுத்துப்பூர்வ மனுவையும் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் அமைப்பாளர் எஸ் சிரில் அலெக்சாண்டர் கூறுகையில், "புகையிலை மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களுக்கு எதிரான மிக வெற்றிகரமான விளம்பரத்தை சந்தானம் கிண்டலடித்துள்ளார்.

குட்காவுக்கு எதிரான விளம்பரத்தில் வரும் முகேஷ் நிஜமாகவே புகையிலையால் பாதிக்கப்பட்டு இறந்தவர். அவரது குரலை இமிடேட் செய்வது சரியா? புகையிலை மற்றும் புகைப் பழக்கத்தை விட்டொழிப்பது கேவலமான செயல் என்பதைப் போல சந்தானத்தின் கிண்டல் அமைந்துள்ளது. இந்த காட்சி நிச்சயம் நீக்கப்பட வேண்டும்.

புகைப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோரை சந்தானத்தின் இந்த கிண்டல் பாதித்துள்ளது. மேலும் இது புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் பிரிவு 5-க்கு எதிரானதும் கூட," என்றார்.

 

சொல்வதற்கு அஞ்சேல்... வினு சக்கரவர்த்தி பேசுகிறார்!

சொல்வதற்கு அஞ்சேல்... வினு சக்கரவர்த்தி பேசுகிறார்!

சத்யம் டிவியின் சொல்வதற்கு அஞ்சேல் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடிகர் வினு சக்கரவர்த்தி கலந்து கொண்டு மனம் திறக்கிறார்.

சத்யம் டிவியில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் எட்டரை மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் சொல்வதற்கு அஞ்சேல். இதன் மறு ஒளிபரப்பு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் ஒன்றரை மணி வரை இடம் பெறும்.

சமூகத்தில் பிரபலமானவர்களைச் சந்தித்து அவர்கள் துறை தொடர்பான தகவல்களைக் கேட்டு மக்களிடம் கொண்டு செல்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். மேலும் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் அவரவர் சார்ந்த துறை பிரச்சினைகள் குறித்தும் இதில் கேட்கப்படும்.

இந்த வாரம் வினு சக்கரவர்த்தி இதில் கலந்து கொண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.

சினிமாத் துறையில் தான் சந்தித்த ஏற்றங்கள், இறக்கங்கள், அனுபவங்களை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.