பொருத்தமான வேடங்கள் வந்தால் ஹீரோவாகத் தொடர்வேன்- விவேக்

தமிழ் சினிமாவில் வெகு நீண்ட காலம் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் விவேக்.

முதல் முறையாக நான்தான் பாலா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றது அந்தப் படம்.

அடுத்து இப்போது பாலக்காட்டு மாதவன் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். சந்திரமோகன் என்பவர் இயக்கியுள்ளார்.

I will continue as hero, says Vivek

கதாநாயகனாக நடிப்பது குறித்து விவேக் கூறுகையில், "பாலக்காட்டு மாதவன்' குடும்பத்தோடு பார்க்க கூடிய கமர்ஷியல் பொழுதுபோக்குப் படம். எனக்கு பொருத்தமான கதையாக இருந்ததால் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டேன்.

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி கம்பெனியொன்றில் வேலை பார்க்கின்றனர். மனைவிக்கு கணவனைவிட அதிக சம்பளம். இதனால் ஈகோ பிரச்சினை ஏற்படுகிறது. வேலையை ராஜினாமா செய்து விட்டு அதிக சம்பளத்தில் வேலை பார்க்கிறான். இதனால் பலரிடம் ஏமாறுகிறான்.

I will continue as hero, says Vivek

வயதான பெண்ணை தாயாக தத்தெடுத்து வீட்டுக்கு அழைத்து வருகிறான். அப்பெண்ணுக்கும் மனைவிக்கும் தகராறு. அவன் நிலைமை என்ன ஆகிறது என்பது கதை. முதல் முறையாக ஒரு தாயை தத்தெடுப்பதை கதைக் கருவாக வைத்துள்ளோம் இந்தப் படத்தில்.

மொட்டை ராஜேந்திரன் எஸ்பிபி ரசிகராக வந்து பாடுவது போல காட்சிகள் உள்ளன. இமான் அண்ணாச்சி, மனோபாலா என ஒரு காமெடி பட்டாளமே படத்தில் உள்ளது.

ஷீலாதான் படத்தில் நான் தத்தெடுக்கும் தாயாக வருகிறார். மிக அற்புதமான நடிப்பைத் தந்துள்ளார்.

பேய்ப் படங்கள், திகில் படங்களுக்கு மத்தியில் குடும்பத்தோடு பார்க்கும் காமெடி படமாக பாலக்காட்டு மாதவன் தயாராகியுள்ளது. இதுபோன்ற பொருத்தமான கதைகள் அமைந்தால் நாயகனாக மீண்டும் நடிப்பேன்.

வேறு கதாநாயகர்கள் படங்களில் காமெடி வேடங்களில் நடிப்பதையும் தொடர்வேன்," என்றார்.

 

ரோமியோ ஜூலியட், இனிமே இப்படித்தான் படங்களுக்கு சென்னையில் வரிச்சலுகை ரத்து!

ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடப்பதால், சமீபத்தில் வெளியான ரோமியோ ஜூலியட், இனிமே இப்படித்தான் போன்ற படங்களுக்கு சென்னை தவிர தமிழகத்தின் பிறபகுதிகளில் வரிவிலக்குடன் திரையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இடைத்தேர்தல் நடப்பதால் படத் தயாரிப்பாளர்களின் கோரிக்கையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No tax free for Romeo Juliet and Inimey Ippadithaan movies in Chennai district

ரோமியோ ஜூலியட், இனிமே இப்படித்தான் படங்களை தேர்வுக்குழு பார்வையிட்டு, வரிவிலக்கு அளிப்பதற்குப் பரிந்துரை செய்துள்ளதாகவும் ஆனால், ஆர்.கே.நகர் சட்டமன்றத்துக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளதால் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தங்கள் படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்குமாறு அப்படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன என்று இப்படங்களின் வரிவிலக்கு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை இப்படங்களுக்கு கேரிக்கை வரியினை வசூலிக்க இப்படத்தின் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட அறிவுறுத்துவதாகவும், மேற்காணும் வகையில் அரசுக்கு கேளிக்கை வரி இழப்பு ஏற்படும் நிலை வந்தால், அத்தொகையைத் தாங்கள் செலுத்துவதாகவும் இரு படங்களின் தயாரிப்பாளர்களும் உறுதி அளித்துள்ளார்கள்.

எனவே சென்னை மாவட்டம் தவிர தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில், மேற்கண்ட இரு படங்களுக்கும் கேளிக்கை வரியிலிருந்து விலக்களித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. புரியாத ஆனந்தம் புதிதாக ஆனந்தம் படத்துக்கும் இதேபோன்றதொரு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

 

விக்ரம் படத்திலிருந்து விலகினார் ப்ரியா ஆனந்த்!

அரிமா நம்பி படம் தந்த ஆனந்த சங்கர் விக்ரமை வைத்து இயக்கும் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார் நடிகை ப்ரியா ஆனந்த்.

அரிமா நம்பியில் விக்ரம் பிரபு - ப்ரியா ஆனந்த் நடித்திருந்தனர். ஆனந்த் சங்கர் தனது அடுத்த படத்துக்கும் ப்ரியா ஆனந்தைத்தான் நாயகியாக ஒப்பந்தம் செய்தார்.

ஆனால் படப்பிடிப்புக்குக் கிளம்பும் நேரத்தில் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக ப்ரியா ஆனந்த் அறிவித்துள்ளார்.

Priya Anand walks out from Vikram's film

இந்த விலகலுக்கு காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. ட்விட்டரில் இதுபற்றி தெரிவித்துள்ள ப்ரியா, "விக்ரம் ரசிகர்களுக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. ஆனாலும் படக் குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

ப்ரியா ஆனந்துக்கு பதில் பிந்து மாதவி இந்தப் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்கிறார்கள்.

 

பாபநாசம் படத்துக்கு க்ளீன் யு சான்றிதழ்!

கமல் ஹாஸன் நடித்த பாபநாசம் படத்துக்கு எந்தக் கட்டும், ஆட்சேபணையும் இல்லாத யு சான்றிதழ் வழங்கியுள்ளது மண்டல தணிக்கைக் குழு.

வைட் ஆங்கிள் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் தயாரித்துள்ள பாபநாசம் படம், மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக். ஜீது ஜோசப் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கமல் ஹாஸனுடன், கவுதமி, பேபி எஸ்தர், நிவேதா தாமஸ், கலாபவன் மணி, இளவரசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் பாடல்கள் வெளியாகின.

Papanasam gets clean U

இந்தப் படத்தை இன்று சென்சாருக்கு திரையிட்டுக் காட்டினர். படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தில் எந்த காட்சியையும் வெட்டவில்லை. ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. க்ளீன் யு சான்று வழங்கியுள்ளனர்.

ஜூலை 3-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இப்போது அதைவிட பொருத்தமான தேதி கிடைக்குமா என யோசித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை சன் டிவி வாங்கியுள்ளது.

 

ரஜினி - ஷங்கர் படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா ஒப்பந்தம்!

ரஜினி - ஷங்கர் மீண்டும் இணையும் பிரமாண்ட படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் நீரவ் ஷா.

இந்திப் படங்களில் பணியாற்றிவந்த நீரவ் ஷா, சண்டக்கோழி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து போக்கிரி, பில்லா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

இயக்குநர்கள் விஷ்ணுவர்தன், விஜய் ஆகியோரின் நிரந்தர ஒளிப்பதிவாளர் எனும் அளவுக்கு தொடர்ந்து அவர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தார்.

Neerav Sha is new cameraman for Rajini - Shankar movie

இந்த நிலையில், அவருக்கு அடுத்த புரமோஷன் கிடைத்துள்ளது. ரஜினியை வைத்து ஷங்கர் பிரமாண்டமாக உருவாக்கவிருக்கும் எந்திரன் 2 படத்தின் ஒளிப்பதிவுப் பொறுப்பு நீரவ் ஷாவிடம் வந்துள்ளது. முதலில் ரத்னவேலுதான் ஒளிப்பதிவு செய்வதாகக் கூறப்பட்டது. இப்போது நீரவ் ஷாவை ஷங்கர் ஒப்பந்தம் செய்துள்ள தககவல் வெளிவந்துள்ளது.

கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் ஆகஸ்டில் தொடங்கி டிசம்பரில் முடிகிறது. அதற்கடுத்து ரஜினி - ஷங்கரின் எந்திரன் 2 தொடங்குகிறது.

 

விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் மீனாவின் மகள்

சென்னை: தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக 1990 களில் விளங்கியவர் நடிகை மீனா. பிரபல தொழில் அதிபரைத் திருமணம் செய்து கொண்ட நடிகை மீனாவுக்கு நைனிகா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது.

5 வயதான இந்தக் குழந்தையை தற்போது சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகபடுத்தத் திட்டமிட்டுள்ளார் நடிகை மீனா. அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒரு குழந்தை தேவைப்பட மீனாவை கேட்டதற்கு அவர் சரி என்று கூறிவிட்டாராம்.

Meena Introduced Her Daughter In Vijay’s Next Film

சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரு நாயகிகளுடன் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் விஜயின் மகளாக அறிமுகமாகிறார் மீனாவின் மகள் நைனிகா. மீனா விஜயுடன் சேர்ந்து நடித்ததில்லை எனினும் ஷாஜகான் படத்தில் ஒரு பாடலுக்கு இருவரும் இணைந்து ஆடியிருக்கின்றனர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, பின்பு அவருடன் இணைந்து எஜமான், முத்து போன்ற படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

 

ஆற்றின் நடுவே நாயகனும், நாயகியும்... மாஸான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

மும்பை: ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் மாஸான் படத்தின் முதல் பார்வை நேற்று வெளியாகியது. 68 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடைப்பட்ட மாஸான் கேன்ஸ் திரைவிழாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

படத்தைப் பார்த்து விட்டு அனைவரும் எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டும் அளவுக்கு படத்தை எடுத்து இருக்கிறார் நீரஜ் காய்வன். வரும் 26 ம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகிறது, ஜூலை மாதம் 24 ம் தேதியில் படம் வெளியாகிறது.

Masaan : First Look Poster  Released

கேங் ஆப் வாஸிபூர் படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப் படத்தைத் தயாரித்து இருக்கிறார். ரிச்சா சதா, சஞ்சய் மிஸ்ரா , ஸ்வேதா திரிபாதி மற்றும் விக்கி கவுஷால் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

படத்தின் முதல் பார்வையில் ஆற்றின் நடுவே நாயகனும், நாயகியும் படகில் இருப்பது போன்று காட்சியை வெளியிட்டு இருக்கின்றனர்.

இரண்டு விதமான கதைகள் படத்தில் வருவது போல காட்சிகள் அமைத்திருக்கிறார் இயக்குநர் நீரஜ். முதல் கதையில் மயானத்தில் வெட்டியான் வேலை பார்க்கும் தாழ்ந்த ஜாதிப் பையன் உயர்ந்த ஜாதிப் பெண்ணை காதலிப்பது போலவும், இரண்டாவது கதையில் உயர்ந்த ஜாதிப் பெண் மற்றும் அவரது தந்தை இருவரும் இணைந்து செக்ஸ் ஊழலை ஒழிப்பது போலவும் இரண்டுவிதமான கதைகளைக் கையாண்டு இருக்கிறார் படத்தின் இயக்குநர் நீரஜ்.

 

26-ம் தேதி தாணு தயாரிக்கும் விஜய் படத் தொடக்க விழா.. பங்கேற்கிறார் ரஜினி?

வரும் 26-ம் தேதி கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடக்கிறது.

இந்த விழாவில் ரஜினிகாந்தும் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலி படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. லண்டனில் மாமியார் வீட்டுக்குச் சென்றுள்ள விஜய், நாளை இரவு சென்னை திரும்புகிறார்.

Rajini to attend Vijay's movie launch

அட்லி படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது. படத்திற்காக பிரம்மாண்ட அரங்குகள் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டுள்ளன.

இப்படத்தின் தொடக்க விழாவில் ரஜினி கலந்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவியுள்ளது. ‘அட்டக்கத்தி' ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தையும் கலைப்புலி எஸ்.தாணுவே தயாரிக்கவிருக்கும் நிலையில், விஜய் படத்தின் தொடக்கவிழாவில் ரஜினி கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என கருதி, ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் தாணு.

தாணுவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாராம் ரஜினி. எனவே ஜூன் 26-ம் தேதி நடக்கும் விழாவில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

 

புலி கிராபிக்ஸ்... திருப்தியடையாத சிம்புதேவன்.. மீண்டும் முதலிலிருந்து ஆரம்பம்!

விஜய்யின் புலி படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லாததால், மீண்டும் முதலிலிருந்து அதைச் செய்யச் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் சிம்பு தேவன்.

புலி படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியானது. இணையத்தில் பலத்த வரவேற்பு மற்றும் அதற்கு இணையான கிண்டல் விமர்சனங்களை இந்த டீசர் சந்தித்து வருகிறது.

திரையுலக நட்சத்திரங்களான சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட பலரும் ‘புலி' டீசருக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

Chimbu Devan decides to rework on Puli Graphics

ஆனாலும் இயக்குனர் சிம்புதேவனுக்கு இதுவரை இப்படத்திற்காக செய்யப்பட்ட கிராபிக்ஸ் பணிகள் திருப்திகரமாக இல்லையாம். ரசிகர்களை முழு உணர்வுடன் ரசிக்க வைக்கும்படி கிராபிக்ஸ் அமையவேண்டும் என்பதால், இந்த கிராபிக்ஸ் பணிகளை மறுபடியும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்களாம். இதனால், ‘புலி' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மீண்டும் முதலில் இருந்து தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் செப்டம்பருக்குள் அனைத்தையும் முடித்து திட்டமிட்டபடி விஜயதசமிக்கு இந்தப் படத்தை வெளியிடுவது என்பதில் உறுதியாக உள்ளாராம்.

 

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு ட்ரைலருக்கு தடை விதித்த சென்சார்!

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே ஒரு வசனத்துக்காக ஒரு படத்தின் ட்ரைலருக்கு அனுமதி மறுத்துள்ளது சென்சார் போர்டு.

அந்தப் படம் உறுமீன்.

பாபிசிம்ஹா கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்துள்ளார். சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ளார்.

Censor refuses certificate for 'Urumeen' trailer

உறுமீன் படத்தின் ‘டிரைலர்' தணிக்கை குழுவினருக்கு நேற்று திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

டிரைலரில் வரும் ஒரு வாசகத்தை அனுமதிக்க முடியாது என்று கூறி, அதை திரையிடுவதற்கு தணிக்கை குழு தடை விதித்துள்ளது. இதுபற்றி இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி கூறுகையில், "உறுமீன் படத்தின் டிரைலரை தணிக்கை குழுவினருக்கு சமீபத்தில் திரையிட்டு காண்பித்தேன்.

அதில், ‘‘பழிவாங்குதல்தான் எப்போதுமே இறுதியானது'' என்ற ஒரு வாசகம் வருகிறது. இதை அனுமதிக்க முடியாது என்று தணிக்கை குழுவினர் கூறிவிட்டார்கள். படத்தின் கதை சம்பந்தப்பட்டு வரும் வசனம் என்பதால் நானும் அதை நீக்க முடியாது என்று உறுதியாகக் கூறிவிட்டேன்.

அதனால், டிரைலரை மறுதணிக்கைக்கு கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வாசகத்துக்காக படத்தின் டிரைலருக்கு தணிக்கை குழு தடை விதித்திருப்பது அனேகமாக இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று நினைக்கிறேன். தணிக்கை குழுவின் விதிகளும், அவர்கள் முன்வைக்கும் வாதங்களும் அவசியமற்றதாக உள்ளது.

பல படங்களில் அநாகரீகமான வார்த்தைகள் இடம்பெறுகின்றன. ஆபாசம், வன்முறை என்று அனைத்தையும் அனுமதிக்கும் தணிக்கை குழு, இதை நிராகரித்ததற்கான காரணம் புரியவில்லை. மறுதணிக்கையிலும் இந்த வாசகத்தை அனுமதிக்கவில்லை என்றால் ‘டிரைலர்' வெளியிடாமலேயே படத்தை வெளியிடப் போகிறேன்," என்றார்.

இதே வசனம் படத்தில் இடம்பெற்றாலும் சென்சார் அனுமதி மறுக்குமே.. அப்போது என்ன செய்வீர்கள்? படத்தையே வெளியிடாமல் விட்டுவிடுவீர்களா?


 

ஒரு படத்தில நடிச்சதுக்கே அரை லட்சமா? ஆளை விடுங்கப்பா

நட்சத்திர சேனலின் பிரபல தொகுப்பாளினி சமீபத்தில் வெளியான மணியானவரின் படத்தில் நடித்தார். படத்தில் நடிப்பதற்கு முன்பிருந்தே சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அந்த தொகுப்பாளினி, தற்போது தனது சம்பளத்தை இருமடங்காக உயர்த்தி விட்டாராம்.

சினிமா ஆடியோ வெளியீட்டு விழா என்றால் முன்பெல்லாம் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வாங்கி கொண்டு தொகுத்து வழங்கி வந்தாராம். இப்போது அரை லட்சத்திற்கு குறைந்தாலும் நோ சொல்லிவிடுகிறாராம். இத்தனைக்கும் இவரது கைவசம் எந்த படமும் இல்லை. ஆனால் டிவி நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்குகிறார்.

This compere raises her salary

இதனால் பட தயாரிப்பாளர்கள் ‘பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணும்' என்று எதிர்பார்க்காமல் குறைந்த சம்பளத்திற்கு வரும் தொகுப்பாளினிகளை அழைத்து வந்து இசை வெளியீட்டு விழாவை முடித்து விடுகிறார்களாம். ரம்யத்தின் வாய்ப்பு எல்லாம் இப்போது புது தொலைக்காட்சி தொகுப்பாளினிக்கு கிடைப்பதால் அவர் காட்டில் செம்ம மழையாம்.