சல்மான் வயதில் பாதிதான் எனக்கு! - அசின்

Tags:


சல்மான் கான் போன்ற வட இந்திய ஹீரோக்களுடன் எனக்கு காதல் இல்லை. சல்மான் வயதில் எனக்கு பாதிதான் ஆகிறது. திருமணம் செய்வதாக இருந்தால் நான் தென்னிந்திய மாப்பிள்ளையைத்தான் தேர்வு செய்வேன்,' என்றார் நடிகை அசின்.

சல்மான் கானும், அசினும் காதலிப்பதாக மும்பை திரையுலகில் தொடர்ந்து வதந்திகள் பரவுகின்றன. இருவரும் தொடர்ந்து இரு படங்களில் ஜோடி சேர்ந்ததால் ஏக வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த வதந்திகள் பற்றி அசினிடம் கேட்டபோது,"சல்மான் கானுக்கும் எனக்கும் காதல் என்றும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வந்துள்ளன. புதுப்படங்களில் எனக்காக வாய்ப்பு கேட்டு சிபாரிசு செய்கிறார் என்று கூட சொல்கிறார்கள். சல்மான் கான் வயதில் எனக்கு பாதிதான் ஆகிறது. அவரை எப்படி நான் திருமணம் செய்வது. எங்களுக்கு கல்யாணம் என்று வரும் செய்திகளை பார்த்து சிரிப்பதா? அழுவதா? என்று புரியவில்லை.

எனக்கும் குடும்பம் இருக்கிறது. அப்பா அம்மா உள்ளனர். அவர்கள் இது போன்ற செய்திகளை பார்த்து எவ்வளவு வருத்தப்படுவார்கள் என்பதை வதந்திகளை பரப்புவோர் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் தென் இந்தியரைத்தான் திருமணம் செய்வேன். எனது திருமணம் ரகசியமாக நடக்காது. எல்லோருக்கும் சொல்லி விட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன். ஏற்கனவே அமீர்கான், சல்மான்கான் போன்றோருடன் நடித்து விட்டேன்.

தற்போது ஷாருக்கான் ஜோடியாக 'உஸ்டேப்ஸ்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். டெல்லியைச் சேர்ந்த நாயகனும் சென்னையைச் சேர்ந்த நாயகியும் ஆமதாபாத்தில் கல்லூரியில் படிக்கின்றனர். அவர்களின் வித்தியாசமான கலாசாரம், காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் போன்ற கதையம்சத்துடன் இப்படம் உருவாகிறது.

கஜினி மாதிரி பெரிய வெற்றியை இந்தப் படம் பெறும் என நம்புகிறேன். ஷாரூக்குடன் நடிப்பது எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது. இதன் மூலம் எனக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்ததாக உணர்கிறேன்," என்றார்.
 

விஜய்காந்துடன் சரத்குமார் மற்றும் நடிகைகள் சந்திப்பு!

Tags:


சென்னை: எதிர்கட்சித் தலைவர் விஜய்காந்தை நடிகர் சங்கத் தலைவரும் எம்எல்ஏவுமான சரத்குமார் இன்று சந்தித்தார்.

அவருடன் நடிகர் சங்க நிர்வாகிகள் விஜயகுமார், நடிகைகள் நளினி, பாத்திமா பாபு உள்ளிட்டோரும் விஜயகாந்தை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது, நடிகர் சங்க பிரச்சினைகள், திரையுலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக சரத்குமார் உள்ளிட்டோரிடம் பேசினார் விஜயகாந்த்.

சந்திப்பு குறித்து பின்னர் பேசிய சரத்குமார், "தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றதற்காக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்துக்களைச் சொன்னோம். சங்கத்தின் மூத்த உறுப்பினர், முன்னாள் தலைவர், இப்போது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் திரையுலகப் பிரச்சினைகள் குறித்து எங்களுடன் பேசினார்," என்றார்.

நடிகர் விஜயகுமார், நடிகைகள் நளினி, பாத்திமா பாபு, பசி சத்யா ஆகியோர் விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
 

இன்டர்நெட்டில் 'கண்டேன்': கமிஷனரிடம் நடிகர் சாந்தனு புகார்

Tags:


சென்னை: கண்டேன் படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தொடர்பாக நடிகர் சாந்தனு சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.

நடிகர் சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள கண்டேன் என்ற படம் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் சாந்தனு நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், கண்டேன் படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு விட்டனர் என்றும், அதோடு திருட்டு வி.சி.டி கேசட்டாகவும் வெளியிட்டு விட்டார்கள் என்றும், இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து, சம்பந்தப்பட்ட இணையதளத்தை முடக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
 

சுங்க வரி-விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பிபாஷா பாசு!

Tags:



மும்பை: சுங்கக் கட்டணம் செலுத்தாமல் பொருள்களைக் கொண்டு செல்ல முயன்ற நடிகை பிபாஷா பாசு, சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

உரிய வரியைச் செலுத்திய பிறகு அவரை அதிகாரிகள் விடுவித்தனர்.

லண்டனிலிருந்து மும்பை வந்த பிபாஷா பாசு, வரி செலுத்தாத சில பொருள்களை வாங்கி வந்தார். ஆனால் இவற்றுக்கு வரி கட்டாமல் செல்ல முயன்றபோது அவரை சுங்கத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர் கொண்டு வந்திருந்த பொருள்களின் மதிப்பு ரூ 65000. இதற்கான சுங்கத் தீர்வை ரூ 13000.

இதைத் தொடர்ந்து, அவர் வரி கட்ட உடனடியாக ஒப்புக் கொண்டதோடு, அந்தப் பொருள்களுக்குரிய பில்களையும் அதிகாரிகளிடம் காட்டியுள்ளார்.

எனவே வரியை அவர் செலுத்தியதும், விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து பிபாஷா கூறுகையில், “இது ஒரு வழக்கமான செக்கப்தான். நான் மிக சாதாரண பொருள்களைத்தான் வாங்கிவந்திருந்தேன். அவற்றுக்கு சுங்கவரி செலுத்த வேண்டும் என்பது தெரியாது. ஆனால் அதிகாரிகள் சொன்னதும் நான் அதை செலுத்திவிட்டேன்,” என்றார்.

ஏற்கெனவே பிரபல நடிகை மின்னிஷா லம்பா வரி கட்டாத ரூ 55 லட்சம் வைர நகைகளுடன் வந்திறங்கியபோது பிடிபட்டது நினைவிருக்கலாம்.

 

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு!

Tags:



சென்னை: அடுத்த மாதம் தொடங்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கான தமிழ் சினிமா அணி.. அதாவது சென்னை அணி மற்றும் அதற்கான லோகோ அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், கன்னடம், இந்தி திரைப்பட நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி பெங்களூரில் வருகிற ஜுன் மாதம் 4ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் சரத்குமார், நடிகர் சூர்யா உள்பட போட்டியில் பங்கேற்கும் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இவர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் அணியின் பெயர் சென்னை ரைனோஸ் (முதலில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் என்று பெயர் வைத்திருந்தனர்).

இந்த போட்டியில் நடிகர்கள் சரத்குமார், சூர்யா, மாதவன், ஆர்யா, விஷால், பரத், அபாஸ், விஷ்ணு, சாந்தனு, விக்ராந்த், ரமணா, மிர்ச்சி சிவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் பங்கேற்று விளையாடுகின்றனர்.

நேற்றைய சந்திப்பின்போது இந்த கிரிக்கெட் போட்டிக்கான டீசர்ட் மற்றும் லோகோ வெளியிடப்பட்டது.

விழாவில் பேசிய சரத்குமார், “ஏற்கனவே இந்தி நடிகர்களுக்கும், தென்னிந்திய நடிகர்களுக்கும் நடந்த போட்டியில் தென்னிந்திய நடிகர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல் தென்னிந்திய நடிகர்களுக்குள் நடக்கும் போட்டியில் எங்கள் அணி வெற்றி பெறும். 4ஆம் தேதி பெங்களூரிலும், 5ஆம் தேதி சென்னையில், 11ஆம் தேதி ஹைத்ராபாத்தில் போட்டி நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஹைத்ராபாத்தில் 12ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம் என்பது உறுதி.

மேலும் திருட்டு விசிடியால் தமிழ் திரையுலகம் மிகவும் பாதிக்கப்படுகிறது. திருட்டு விசிடி ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இப்போட்டியின் மூலம் வலியுறுத்துவோம்”, என்றார்.

 

ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம்: டயாலிஸிஸை நிறுத்த டாக்டர்கள் ஆலோசனை!

Tags:



சென்னை: கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வரும் ரஜினியின் சிறுநீரங்கள் சரிவர இயங்காமலிருந்ததால், அவருக்கு 5 முறை டயாலிஸிஸ் செய்யப்பட்டது.

இதனால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த முன்னேற்றம் காரணமாக, அவருக்கு தரப்படும் டயாலிஸிஸ் சிகிச்சையை நிறுத்தலாமா என ஆலோசனை செய்து வருகின்றனர் மருத்துவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக நேற்றும் இன்றும் அவரது ரத்தத்தில் சேரும் உப்பு, பொட்டாஷியம் மற்றும் கிரியோட்டினின் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரத்தத்தில் இவற்றின் அளவு சாதாரணமாகவே இருந்தால், அவரது சிறுநீரகங்கள் வழக்கமான நிலைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளதாக அர்த்தம் என்கிறார்கள்.

அப்படி ஒரு நிலை இருந்தால், சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்பட மேல் சிகிச்சைப் பெறுவதற்காக ரஜினி லண்டன் செல்வார் என்று தெரிகிறது.

இதற்கான பயண ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அவருக்கு உணவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. குளிர்பானம், பாதாம் பிஸ்தா, முந்திரி, கீரை போன்றவற்றை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

பூரண குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இயக்குனர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தார்கள். நடிகர் ராகவா லாரன்ஸ் அன்னதானம் செய்தார். இதுபற்றிய தகவல்கள் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது. அவற்றை கேட்டு அவர் நெகிழ்ச்சி அடைந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.

இதற்கிடையே ரஜினிக்கு சிகிச்சை அளிக்க வந்துள்ள அமெரிக்க டாக்டர்கள் ரஜினியின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்து நவீன முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இப்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இன்னும் சில தினங்களில் அவர்கள் நாடு திரும்பக் கூடும் எனத் தெரிகிறது.

 

'ஜிங்கு சிக்கா', சேலை கட்டி ஆடும் அக்கா!

Tags:



மைனா படம் தந்த தூக்கலில் படு வேகமாக முன்னேறி வருகிறார் வித்தியாசமான குத்தாட்ட நடிகை நாகலட்சுமி.

மைனா படத்தில் வரும் அந்த பஸ் பாட்டை யாரும் மறந்திருக்க முடியாது. கட்டக் கருப்புக் கலரில், படு தூக்கலான கவர்ச்சியுடன், இறுக்கிக் கட்டிய சேலையுடன், ஜிங்கு சிக்கா சிக்கா என்று இன்னொரு கருப்பழகியுடன் ஜோடி போட்டு செமத்தியான ஆட்டம் ஆடியவர்தான் இந்த நாகலட்சுமி.

படு ஸ்லிக்கான ஆன இந்த கவர்ச்சிக் கட்டழகி இப்போது தமிழ் சினிமாவின தவிர்க்க முடியாத குத்தாட்ட நடிகையாக மாறியுள்ளார். செமத்தியான கவர்ச்சித் தோற்றத்துடன் கூடிய இந்த கருப்பழகி, மைனாவுக்கு முன்பும் கூட ஒரு பாடலில் ஆடியுள்ளார். ஆனால் மைனாதான் நாகலட்சுமியை ஒரே தூக்காக தூக்கி வைத்து விட்டது.

இப்போது இந்த ஜிங்கு சிக்கா அக்கா கையில் 6 குத்தாட்டப் படப் பாடல்கள் வரிசை கட்டி நிற்கிறதாம். அத்தனையும் அமச்மான குத்தாட்டப் பாட்டுக்களாம்.

நாகலட்சுமி புடவை மட்டும்தான் கட்டிப் பாடலுக்கு ஆடுவாராம். வேறு காஸ்ட்யூமைக் கொடுத்தால் மறுத்து விடுகிறாராம். சேலையில் இல்லாத கவர்ச்சியா, சேலையில்தான் எனக்கு கவர்ச்சி சிறப்பாக தெரியும் என்கிறாராம் நாகலட்சுமி.

நாகலட்சுமி சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. மைனா பாடலுக்கு அவர் ஆடிய அந்த ஆட்டம் இன்னும் ரசிகர்கள் மனதில் ஜிலுக்கு ஜிக்காவாக உலா வந்து கொண்டிருப்பதே அதற்கு சரியான சாட்சியம்.

 

ஹீரோவாகும் ஜெ.ஜெ. டிவி பாஸ்கரன்'!!

Tags:



ஜெஜெ டிவி பாஸ்கரனை நினைவிருக்கிறதா…. தொன்னூறுகளில் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை மறக்காத யாராலும் அத்தனை சுலபத்தில் மறக்க முடியாத நபர் இந்த பாஸ்கரன். அதாவது சின்ன எம்ஜிஆர் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்ட முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின் அண்ணன், டிடிவி தினகரனின் தம்பி!.

இத்தனை நாட்கள் எங்கே இருந்தார், என்ன செய்தார்…. இந்த ஆராய்ச்சிக்கெல்லாம் போகாமல், நேரே விஷயத்துக்கு வருவோம்…. மனிதர் இப்போது சினிமா ஹீரோவாகிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் என்பதுதான் இப்போது அவர் முழுப் பெயர். நடிக்கும் படத்துக்குத் ‘தலைவன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

தலைவன்?

“ஆமாங்க… படம் பேரு தலைவன்தான். நம்ம புரட்சித் தலைவரோட படம் ஒன்றின் பெயரே எனது முதல் படத்தின் தலைப்பாகவும் அமைந்துள்ளது. அதுதான் தலைவர் எனக்குத் தரும் ஆசீர்வாதம்”, என்கிறார் உற்சாகத்துக்குக் குறைவில்லாத பாஸ்கரன்.

படத்தின் இயக்குநர் ரொம்பப் பிரபலமானவராம். ஆனால் பெயரை இப்போது அறிவிக்க மாட்டார்களாம்.

சரி, திமுக தலைவர்களின் வாரிசுகள் நடிக்க வந்தால் மட்டும் குய்யோ முறையோ என கூப்பாடு போட்டார்களே… இப்போது பாஸ்கரன் நடிக்க வந்தது மட்டும் எந்த வகையில் சேர்த்தி? என்று கேட்டால், “என் திறமை மூலம் மட்டுமே நான் ஜெயிப்பேன். தயாரிப்பாளரில் இருந்து லைட்பாய் வரை எல்லாரும் வாழணும். நான் வாழறதுக்காக மத்தவங்க வாழ்க்கையை அழிக்க மாட்டேன் என்கிறார்!

பாஸ்கரனுக்கு முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி உண்டா என்றால், “அவர் ஆசி இல்லாமலா… அது எப்பவும் நிறைய உண்டு”, என்று கூறியுள்ளார் ஒரு பேட்டியில்!

1995ம் ஆண்டு அன்னிய செலாவணி விவகாரத்தில் இவரை அமலாக்கப் பிரிவினர் கைது செய்ததும் நினைவுகூறத்தக்கது. ரிம்சாட் என்ற செயற்கைக் கோள் நிறுவனத்துக்கு 6.8 லட்சம் டாலர் பணத்தை இவர் பறிமாற்றம் செய்ததாக அப்போது புகார் கூறியது அமலாக்கப் பிரிவு.

பின்னர் அந்த வம்பு வழக்குகளில் இருந்தெல்லாம் வெளியே வந்து மிக மிக அமைதியாக இருந்தார். இப்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

 

தாவூத் 'காதலி' இலியானா?!

Tags:



புதிய இந்திப் படம் ஒன்றில் தாவூத் இப்ராகிம் காதலி மந்தாகினி வேடத்தில் இலியானா நடிப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதி செயலில் ஈடுபட்ட தாவூத் இப்ராகிம் வாழ்க்கை வரலாறு இந்தியில் படமாகிறது. இதில் தாவூத் இப்ராகிம் காதலியான நடிகை மந்தாகினி வேடத்தில் இலியானா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர் தற்போது ஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் நடிக்கும் இலியானாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.

அவர் கூறுகையில், “தாவூத் இப்ராகிம் வாழ்க்கை வரலாறு பட மாவதாகவும் அவரது காதலி வேடத்தில் நான் நடிப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்திப்படம் ஒன்றில் நடிக்கிறேன். அதன் கதை என்ன, எனது கேரக்டர் எப்படிபட்டது என்பதை எல்லாம் இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது சொல்வேன்,” என்றார்.

இலியானாவின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியுள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், “தோல்விக்கான காரணத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு படத்திலும் கஷ்டப்பட்டுதான் நடிக்கிறேன். சமீபத்தில் எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்டேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளேன்.

ஷங்கர் இயக்கும் நண்பன் படப்பிடிப்பு அந்தமானில் நடந்தது. அங்கு நீண்ட தூரம் படகில் பயணம் செய்தோம். அது என் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாததால் காய்ச்சல் வந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர்,” என்றார்.

 

நடிகையிடம் சில்மிஷம்: ஜோசப் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு

Tags:



திருவனந்தபுரம்: விமானத்தில் சென்றபோது, நடிகை லட்சுமி கோபகுமாரை முன்னாள் கேரள அமைச்சர் ஜோசப் பாலியல் தொந்தரவு செய்ததாக தொடரப்பட்டு, இரு ஆண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது கேரள நீதிமன்றம்.

கேரளாவில் கடந்த இடது முன்னணி அரசில் பொதுப்பணி துறை அமைச்சராக இருந்தவர் பி.ஜே.ஜோசப். இவர் கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் இருந்து கொச்சிக்கு ஒரு தனியார் விமானத்தில் வந்தார்.

விமானத்தில் அவரது முன் இருக்கையில் லட்சுமி கோபகுமார் என்ற நடிகை இருந்தார். திடீரென அமைச்சர் ஜோசப் தன்னிடம் சில்மிஷம் செய்ததாக நடிகை புகார் செய்தார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்து, அவர்கள் வழக்கும் பதிவு செய்தனர். இதையடுத்து ஜோசப் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

சில்மிஷ வழக்கை விசாரித்த சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் ஜோசப்பை இரு ஆண்டுகளுக்கு முன் விடுதலை செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க சென்னை போலீசுக்கு அதிகாரம் இல்லை என்றும், விமானம் கொச்சியில் தரையிறங்கியதால் கிரிமினல் சட்டப்படி செங்கமநாடு போலீஸ்தான் வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் கூறி கேரள சட்ட உதவி அமைப்பின் தலைவர் ஸ்டீபன் என்பவர் கேரளாவில் ஆலுவா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில் எதிர் மனுதாரர்களாக, முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், முன்னாள் டிஜிபி ரமண் ஸ்ரீவாஸ்தவா, செங்கமநாடு எஸ்.ஐ, விமான பைலட் ஷாஜி மாதவன் ஆகியோர் குறிப்பிடப்பட்டனர்.

மனுவை விசாரித்த ஆலுவா நீதிமன்றம், சில்மிஷ வழக்கை செங்கமநாடு போலீசார்தான் விசாரிக்க வேண்டும் என்று கூறி, மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

உதயன்: அருள் நிதி ஜோடி சேரும் பிரணிதா

Tags:



வம்சம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான அருள்நிதி நடிக்கும் அடுத்த படம் உதயன்.

இந்தப் படத்தை கரு.பழனியப்பனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சாப்ளின் இயக்குகிறார். கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிரணிதா.

படம் குறித்து இயக்குநர் சாப்ளின் கூறுகையில், “பொதுவாக ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஹீரோ காதல் கொள்வது வழக்கம். ஆனால் இந்தப் படத்தில் பார்த்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கிறார். அதுவே அவர்களை காதல் வயப்படுத்துகிறது. இந்த காதலுக்கு ரவுடிகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்புகின்றன. அது ஏன் என்பதுதான் கதை.

என் முதல் படம் இது. இப்படத்துக்காக முதலில் ஹீரோயின் தேடி அலைந்தேன். ஹீரோயின் வேடம் படத்தின் கதைக்கு முக்கியமானது என்பதால், நிறைய பேரைத் தேர்வு செய்து பார்த்தேன். பலர் செயற்கைத்தனமாக நடிப்பை வெளிப்படுத்தினார்கள்.

பிரணிதாவிடம் அழகும், நடிப்புத் திறமையும் சேர்ந்திருந்ததால், அவரை இப்படத்துக்கு தேர்வு செய்து விட்டேன். தெலுங்கில் ‘பாவா’, கன்னட ‘போக்கிரி’யில் நடித்துள்ளார்.

அருள்நிதி ஏற்கெனவே வம்சம் படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஜெயித்தவர். இந்தப் படம் அவருக்கு இன்னொரு திருப்பு முனையாக அமையும்,” என்றார்.