காமெடி நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் மரணம்

சென்னை: காமெடி நடிகர் கொடுக்காபுளி செல்வராஜ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56.

மரணம் அடைந்த கொடுக்காபுளி செல்வராஜின் சொந்த ஊர் உடன்குடி. இவர் ‘அண்ணா நகர் முதல் தெரு', ‘பாட்டி சொல்லை தட்டாதே', ‘நானே ராஜா நானே மந்திரி', ‘அரண்மனைக்கிளி', ‘உதயகீதம்', ‘என்னைப்பார் யோகம் வரும்' உள்பட 300 படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

கொடுக்காபுளி செல்வராஜுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை 2 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார்.

கொடுக்காபுளி செல்வராஜின் உடல் மாங்காட்டில் உள்ள பரணிபுத்தூர் வெங்கடேஷ்வரா நகரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நாளை காலை இறுதி சடங்கு நடக்கிறது.

 

ஹீரோவின் மனைவி படுத்தியபாடு இருக்கே: புலம்பும் படக்குழு

சென்னை: ஹீரோவாக நடிக்கும் வெற்றி இசையமைப்பாளரின் மனைவி படுத்தியபாடை சொல்லி முடியாது என்கிறது படக்குழு.

வெற்றி இசையமைப்பாளர் ஹீரோவாக தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளார். அவரின் மனைவி படத்தின் கதை முதல் அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு அதிகாரம் செய்தாராம். கதையை மட்டுமே மூன்று முறை மாற்ற வைத்தாாராம். மேலும் சம்பளம் என்று வந்துவிட்டால் அம்மணி விட்டுக்கொடுக்கவே மாட்டாராம்.

படப்பிடிப்பின்போது அவர் படுத்தியபாடை சொல்லி முடியாது என்கிறது படக்குழு. படம் முதலில் ரிலீஸாகட்டும் அதன் பிறகு ஹீரோவின் மனைவி படுத்திய பாடு குறித்து பேசலாம் என்று இருக்கிறாராம் இயக்குனர்.

இந்நிலையில் நடிகரோ மனைவி சொல்லே மந்திரம் என்று இருக்கிறாராம்.

 

கௌதம் மேனன் படத்தில் நடிக்க அஜீத் போட்ட 3 கன்டிஷன்கள்

சென்னை: அஜீத் இயக்குனர் கௌதம் மேனன் படத்தில் நடிக்க 3 கன்டிஷன்கள் போட்டாராம்.

அஜீத் குமார் கௌதம் மேனன் இயக்கத்தில் 'தல 55' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கும், அனுஷ்காவுக்குமான காதல் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

கௌதம் மேனன் படத்தில் நடிக்க அஜீத் போட்ட 3 கன்டிஷன்கள்

இந்த படத்தில் நடிக்க அஜீத் கௌதம் மேனனுக்கு 3 கன்டிஷன்கள் போட்டாராம். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

எனக்காக எதையும் செய்யக் கூடாது. கௌதம் மேனன் படத்தில் அஜீத் ஒரு பங்கு வகித்தார் என்று தான் இருக்க வேண்டுமே தவிர மாற்று விதமாக இருக்கக் கூடாது. எனக்காக படத்தில் தேவையில்லாமல் பஞ்ச் வசனங்கள் வைக்கக் கூடாது என்பது தான் அந்த கன்டிஷன்கள் ஆகும்.

படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் வருகிறார். அதில் ஒரு கதாபாத்திரம் போலீஸாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகை ப்ரியா ராமன் - நடிகர் ரஞ்சித் விவாகரத்து

நடிகை ப்ரியா ராமன் - நடிகர் ரஞ்சித் ஆகியோருக்கு சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

பொன் விலங்கு, சிந்து நதி பூ, மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி, பசுபதி மே பா ராசக்காபாளையம் உள்பட பல படங்களில் நடித்தவர் ரஞ்சித். ‘பீஷ்மர்' என்ற படத்தை இவர் இயக்கி, கதாநாயகனாக நடித்தார்.

நடிகை ப்ரியா ராமன் - நடிகர் ரஞ்சித் விவாகரத்து

இவரும், வள்ளி, சூரியவம்சம் உள்பட பல படங்களில் நடித்த பிரியா ராமனும் ‘நேசம் புதுசு' என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள்.

அப்போது, இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 1999-ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஆதித்யா (வயது 7), ஆகாஷ் (3) என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

ரஞ்சித்துக்கும், பிரியா ராமனுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இரண்டு பேரும் விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி, தாம்பரத்தில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு செய்தார்கள். கடந்த 6-ந் தேதி இருவருக்கும் விவாகரத்து அளித்து தீர்ப்பு கூறப்பட்டது.

விவாகரத்துக்குப்பின், ரஞ்சித்-பிரியா ராமன் இருவரும் கூறுகையில், "எங்கள் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது. இரண்டு பேருக்கும் இடையே வேறு வேறு திசைகள், வேறு வேறு பயணங்கள் இருப்பதைப் புரிந்துகொண்டோம். அதனால், சுமுகமாக பிரிவது என்று முடிவு செய்து நீதிமன்றத்தை அணுகினோம். இப்போது பிரிகிறோம்.

குழந்தைகள் இருவரும் பிரியா ராமனிடமே இருக்கும். ஒரு தாயால் மட்டுமே குழந்தைகளை நன்றாக பராமரிக்கமுடியும். நாங்கள் இருவரும் கணவன்-மனைவி உறவில் இருந்து விடுபட்டாலும், நல்ல நண்பர்களாக இருப்போம். நானும் மகன்களை அடிக்கடி போய் பார்த்துக் கொள்வேன்," என்றனர்.

 

இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் நடந்தது!

சென்னை: இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் இன்று காலை சென்னையில் நடந்தது.

தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது இயக்குநர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்ததை மீடியா அம்பலமாக்கியது.

இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் நடந்தது!

இதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்புதான் இருவருமே தங்கள் காதலை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர்.

கடந்த ஜூன் 7-ம் தேதி விஜய் -அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. அமலா பால் கிறிஸ்தவர் என்பதால், அவர்கள் முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து.

இன்று இந்து முறைப்படி இருவருக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில், நட்சத்திரங்கள் சூழ இருவருக்கும் திருமணம் நடந்தது. மணமகள் அமலா பாலை நிற்க வைத்து கழுத்தில் தாலி கட்டினார் விஜய்.

இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் நடந்தது!

இந்தத் திருமணத்துக்கு திரையுலகப் பிரமுகர்கள் பலரும் திரண்டு வந்து வாழ்த்தினர்.

யார் யார்..

இயக்குநர்கள் மணிரத்னம், பாலா, ப்ரியதர்ஷன், நடிகர் விக்ரம், ஆர்யா, லிஸி ப்ரியதர்ஷன், இயக்குநர் ஆர் சுந்தரராஜன், விஜய் மனைவி சங்கீதா, இயக்குநர் பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், கிரேஸி மோகன், ஜிவி பிரகாஷ், சைந்தவி, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பிலிம்சேம்பர் கல்யாண், எடிட்டர் மோகன், ஜெயம் ராஜா, நக்கீரன் கோபால் உள்பட பலரும் வந்திருந்து வாழ்த்தினர்.

 

அஜீத் படத்தில் அனுஷ்காவுக்கு இணையான வேடத்தில் த்ரிஷா!

அஜீத் -55 படத்தில், அனுஷ்காவுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட வேடத்தில் த்ரிஷா நடிக்கிறார்.

அஜீத் - கவுதம் மேனன் இணையும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

அஜீத் படத்தில் அனுஷ்காவுக்கு இணையான வேடத்தில் த்ரிஷா!

இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

த்ரிஷாவுக்கு இரண்டாவது கதாநாயகி வேடமா என்ற கேள்வி, செய்தியாக வெளிவந்தது. இதைத் தொடர்ந்து, கவுதம் மேனன் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

அதில், 'த்ரிஷா இரண்டாவது நாயகி கிடையாது. அனுஷ்காவுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட நாயகி வேடத்தில்தான் நடிக்கிறார். காரணம், இந்தக் கதையை த்ரிஷாவை மனதில் வைத்துதான் கவுதம் மேனன் எழுதினார்,' என்று குறிப்பிட்டுள்ளர்.