எனக்கு சான்ஸ் தாருங்களேன்... ரேவுக்கு கடிதம் எழுதிய வித்யா பாலன்

எனக்கு சான்ஸ் தாருங்களேன்... ரேவுக்கு கடிதம் எழுதிய வித்யா பாலன்

கொல்கத்தா: சத்யஜித் ரேவுக்கு கடிதம் எழுதி தனக்கு நடிக்க வாய்ப்பு தருமாறு ஒருமுறை கேட்டாராம் நடிகை வித்யா பாலன்.

இந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராக இன்று திகழ்கிறார் வித்யா பாலன்.

ஆரம்பத்தில் அவர் நடித்த படங்களை விட சில வருடங்களுக்கு முன்பு நடித்த டர்ட்டி பிக்சர்ஸ்தான் வித்யா பாலனுக்கு மிகப் பெரிய முகவரியாக மாறியது.

இந்த நிலையி்ல சத்யஜித் ரே படத்தில் நடிக்க ஒரு காலத்தில் உயிராக இருந்தாராம் வித்யா. மேலும் இதுதொடர்பாக அவர் ரேவுக்கு கடிதமும் எழுதினாராம்.

இதுகுறித்து வித்யா பாலன் கூறுகையில், அப்போது சத்யஜித் ரேவுக்கு உடல் நலம் சரியில்லை. அவருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதில் சீக்கிரம் நலம் பெற்று வாருங்கள். உங்களது படத்தில் நான் நடிக்க விரும்புகிறேன் என்று எழுதியிருந்தேன் என்றார் வித்யா பாலன்.

 

கரப்பான்பூச்சியைப் பார்த்தால் ஓவென்று அலறிக் கொண்டு ஓடும் அனுஷ்கா

கரப்பான்பூச்சியைப் பார்த்தால் ஓவென்று அலறிக் கொண்டு ஓடும் அனுஷ்கா  

சென்னை: அனுஷ்காவுக்கு கரப்பான்பூச்சி என்றாலே அலர்ஜியாம்.

படங்களில் ஹீரோயின் கரப்பான்பூச்சியைப் பார்த்து பயப்படுவதும், நம் ஹீரோக்கள் உடனே அதை வீரத்துடன் பிடித்து தூக்கி வீசுவதும் சாதாரணம். படத்தை பார்க்கும் ரசிகர்கள் என்னடா சின்ன கரப்பான்பூச்சிக்கு இவ்வளவு பில்டப்ஸா என்று நினைப்பார்கள். அது படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் நடக்கிறது.

அப்படி கரப்பான்பூச்சியை பார்த்தால் பயப்படும் நாயகி வேறு யாருமல்ல நம்ம அனுஷ்கா தான். கேரவனில் கரப்பான்பூச்சியை பார்த்துவிட்டால் அம்மணி அலறியடித்துக் கொண்டு ஓடுவாராம். என்ன அனுஷ்கா வாள் சண்டை கற்றுக் கொள்கிறீர்கள். ஆக்ஷன் காட்சிகளில் துணிச்சலுடன் நடிக்கிறீர்கள். இப்படி கரப்பான்பூச்சியைப் பார்த்து பயப்படலாமா?