ஷாரூக்கானுடன் நடிக்கும் சத்யராஜ்!

Sathyaraj Share Screen With Srk

தன்னை புரட்சித் தமிழன் என தானே அழைத்துக் கொள்ளும் சத்யராஜ், கன்னடப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானது நினைவிருக்கலாம். அடுத்து அவர் இந்திப் படம் ஒன்றில் நடிக்கவும் கையெழுத்திட்டுள்ளார்.

அதுவும் ஷாரூக்கானுடன் நடிக்கிறார்.

இந்தப் படம் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தயாராகிறது. ஷாரூக்கானுக்கு ஜோடியாக இதில் நடிப்பவர் தீபிகா படுகோன். தீபிகாவின் தந்தையாகத்தான் இந்தப் படத்தில் நடிக்கிறார் சத்யராஜ்.

நண்பனில் வைரஸ் வேடத்தில் வந்த சத்யராஜின் நடிப்பு ரொம்பப் பிடித்துவிட்டதால், அவரை தீபிகாவின் தந்தையாக நடிக்க ஒப்பந்தம் செய்ததாக படத்தின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

நண்பனிலும் ஹீரோயின் இலியானாவுக்கு தந்தையாகத்தான் சத்யராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கண்ணபிரான்... விஜய்யுடன் கைகோர்க்கிறார் அமீர்!

Ameer Start Kannabiran With Vijay   

விஜய்யுடன் விரைவில் இணையப் போகிறார் அமீர். இந்த ஆண்டு முடிவில் அல்லது 2013-ல் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

ஷங்கரின் நண்பன் படம் தொடங்குவதற்கு முன்பே, விஜய்யை இயக்கப் போவதாக சொல்லியிருந்தார் அமீர்.

ஆனால் சில காரணங்களுக்காக இந்தத் திட்டம் தாமதமானது.

பருத்திவீரன் படம் வெளியான சமயத்தில் கண்ணபிரான் என்ற படம் குறித்து அமீர் பேசி வந்தார். இதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்தப் படம் அப்போது கைவிடப்பட்டது.

இப்போது ஜெயம் ரவி - நீது சந்திரா நடிக்க ஆதிபகவனை இயக்கி வருகிறார் அமீர். இந்தப் படம் முடிந்த கையோடு, தனது முந்தைய கனவுப் படமான கண்ணபிரானை விஜய்யை வைத்து ஆரம்பிக்கப் போகிறாராம்.

பருத்தி வீரனை விட நூறு மடங்கு பவர்புல் படமாக கண்ணபிரான் இருக்கும் என்று ஏற்கெனவே அமீர் கூறியது நினைவிருக்கலாம்.

 

எவ்ளோ கவர்ச்சி.. முத்தக் காட்சி.. நான் மாட்டேம்பா! - த்ரிஷா

Trisha Denies Glam Offers   

இந்திப் படங்களில் ஏக கவர்ச்சியும் முத்தக் காட்சிகளும் இருப்பதால் அந்தக் கதைகளை நிராகரித்துவிட்டதாகக் கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.

அசின், ஜெனிலியாவைப் பார்த்து த்ரிஷாவுக்கும் பாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

விளைவு, 2010-ல் காட்டா மீட்டா இந்திப் படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடித்தார். அப்படம் படு தோல்வி அடைந்தது. அதன் பிறகு தம்மாத்துண்டு உடையில் போட்டோ ஷூட் செய்து வாய்ப்பு தேடிப் பார்த்தார். ஆனால் எதுவும் அமையவில்லை.

சீச்சீ இந்திப் படம் சரியில்ல... என்று கமெண்ட் அடித்தபடி, மீண்டும் தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தினார். தற்போது சமர், பூலோகம், என்றென்றும் புன்னகை என மூன்று தமிழ் படங்கள் கைவசம் உளள்ன.

இதற்கிடையில் இந்தி இயக்குனர்கள் சிலர் திரிஷாவை அணுகி தங்கள் படங்களில் நடிக்க அழைத்துள்ளனர். இம்ரான் ஹஷ்மி ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க அழைத்தனர். அவற்றின் கதைகளை கேட்ட திரிஷா, "என்ன இவ்ளோ கவர்ச்சி சீன்ஸ் வச்சிருக்கீங்க... தாறுமாறா முத்தக் காட்சி வேற இருக்கு... நமக்கு இது ஒத்துவராது," என்றாராம்.

உங்க போட்டோஸ் பாத்துதான் இந்த கதைக்கு நீங்க செட் ஆவீங்கன்னு நெனச்சோம் என்றார்களாம் பதிலுக்கு.

அது அப்போ... இனி நோ கவர்ச்சி என்று கறாராக சொல்லிவிட்டாராம் த்ரிஷா!

 

ஆயிரமாவது எபிசோடில் 'டாப் 10 நியூஸ்'

Zee Tamil Top 10 News Crosses 1000 Episode

சின்னச் செய்திகளை தாங்கி வந்து ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த ஜீ தமிழ் தொலைக்காட்சியின் டாப் 10 நியூஸ் நிகழ்ச்சி 1000 மாவது எபிசோடினை எட்டியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் டாப்-10 நியூஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வரும் நிகழ்ச்சி. தமிழகம், இந்தியா, உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு என 5 தலைப்புகளில் 50 செய்திகளை குறுகிய நேரத்தில் தருவது இந்த நிகழ்ச்சிக்கான ஸ்பெஷல்.

குட்டிக் குட்டிச் செய்திகள் சட்டென வந்து போனாலும் மனதில் தங்கும் வகையில் சுவாரஸ்யமாக அமைந்திருக்கும். டாப்-10 தமிழகம் நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படங்கள் குறித்த தகவல்களும், கோலிவுட்டில் நிகழும் ருசிகர சம்பவங்களும் இடம் பிடிக்கிறது. டாப்-10 இந்தியாவில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் நிகழும் ஒட்டுமொத்த நிகழ்வுகளை விவரிக்கிறது.

உலகெங்கும் நிகழும் வினோதங்கள், பார்வையாளர்களை ஆச்சரிய உலகிற்குஅழைத்து செல்லும் வித்தியாசமான நிகழ்வுகளை டாப்-10 உலகம் விவரிக்கிறது. ஹாலிவுட் திரையுலகம் குறித்த தகவல்களை டாப்-10 பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் தருகிறார்கள். இதில் அயல்நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களின் தொகுப்பும் இடம் பிடிக்கிறது. விளையாட்டு உலகம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை டாப்-10 விளையாட்டு நிகழ்ச்சி வழங்குகிறது.

இரவு 11.30 மணிக்கு ஒளிபரப்பானாலும் இந்த நிகழ்ச்சிக்கு என தனி நேயர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சி விரைவில் ஆயிரமாவது எபிசோடை எட்டவுள்ளது.

 

அஜீத் குமாருக்கு என்மேல் எவ்வளவு பாசம்: உருகும் பாடகர் க்ரிஷ்

Ajith Kumar Proves He Has Heart Gold

சென்னை: பாடகர் க்ரிஷ் சென்ற விமானம் அவசரமாக மலேசியாவில் தரையிறக்கப்பட்டதையடுத்து அவருக்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளார் அஜீத் குமார்.

பாடகர் க்ரிஷ் அண்மையில் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அது மலேசியாவின் பெனாங்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து கேள்விப்பட்ட அஜீத் குமார் உடனே க்ரிஷ் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு அவரது மலேசிய நம்பரை வாங்கியுள்ளார். இதையடுத்து க்ரிஷுக்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளார்.

அஜீத் தனது மலேசிய நம்பரை கண்டுபிடித்து அழைத்து நலம் விசாரித்ததில் க்ரிஷுக்கு ஒன்றுமே புரியவில்லையாம். அடடா அஜீத்துக்கு என்மேல் தான் எவ்வளவு பாசம் என்று உருகிவிட்டாராம். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு எஸ்.எம்.எஸ். அனுப்பி விசாரித்துள்ளார். எத்தனை நண்பர்கள் இருந்தாலும் அதில் அஜீத் மட்டுமே போன் செய்து விசாரித்தது க்ரிஷுக்கு ஏக சந்தோஷம். அஜீத் குரலைக் கேட்டு நெகிழ்ந்துள்ளார்.

அஜீத் தனது நண்பர்கள் மற்றும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவத் தயங்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

 

கரீனா ஒரு கசந்து போன திராட்சை... கிண்டலடிக்கும் பிரியங்கா சோப்ரா

Sour Grapes Says Priyanka Chopra   

டெல்லி: பிரியங்கா சோப்ராவை வாரும் வகையில் கரீனா கபூர் பேசப் போக, அதற்கு கரீனாவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் பிரியங்கா.

பிரியங்கா நடித்து வெளியான படம் பேஷன். இந்தப் படத்திற்காக அவருக்கு தேசிய விருதெல்லாம் கூட கிடைத்தது. படத்தை இயக்கியவர் மதுர் பண்டர்கர். தற்போது அதே பண்டர்கர் இயக்கியுள்ள படம் ஹீரோயின். இதில் நாயகியாக நடித்திருப்பவர் கரீனா கபூர்.

இப்படம் குறித்து கருத்து தெரிவித்திருந்த கரீனா, பேஷன் படத்தை விட இது சிறப்பாக இருக்கும் என்று சொல்லியிருந்தார். இதைக் கேட்டு பிரியங்காவுக்கு டென்ஷனாகி விட்டது. உடனே, கரீனா கபூர் ஒரு கசப்பான திராட்சை என்று கூறியுள்ளர். எதை வைத்து இப்படிச் சொன்னார் என்பது தெரியவில்லை.

முன்பே கரீனாவுக்கும், பிரியங்காவுக்கும் இடையே முட்டிக் கொண்டது நினைவிருக்கலாம். அதாவது பிரியிங்காவின் பேச்சு உச்சரிப்பை கரீனா கேலி செய்தபோது, அதற்கு பிரியங்கா பதிலடி கொடுக்கையில், கரீனா யாரிடமிருந்து கற்றுக் கொண்டாரோ அவரேதான் எனக்கும் கற்றுக் கொடுத்தார் என்று கரீனாவின் காதலரான சைப் அலிகானை சுட்டிக் காட்டி நக்கலடித்தார். சைபுடன் பிரியங்காவும் ஒரு காலத்தில் பிரியமாக இருந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து கரீனாவின் முன்னாள் காதலரான ஷாஹித் கபூருடன் பிரியங்கா நெருக்கமாகப் பழக ஆரம்பித்தபோதும் கரீனா கடுப்பானார்.

இப்போது இருவருக்கும் இடையே மறுபடியும் முட்டல் மோதல் தொடங்கியுள்ளதால் பாலிவுட்டே திரண்டு நின்று வேடிக்கை பார்க்க தயாராகி வருகிறதாம்...

 

அன்பாக மட்டுமல்ல ஆணவமாகவும் நடிப்பேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்

Playing Arrogant Character Lakshmi

சினிமா, விளம்பரம், சின்னத்திரை என அழகு ஆன்ட்டியாக வலம் வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் ‘ஆரோகணம்' படத்தின் மூலம் இயக்குநர் அவதாராம் எடுத்திருக்கிறார். மூன்று பெண் குழந்தைகளுக்கு அம்மாவான இந்த சினிமா அம்மாவின் திரை உலக பயணம் 2006 ம் ஆண்டு தொடங்கியது. தற்போது மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்கிறது. முதன் முறையாக விஜய் டிவியின் அவள் சீரியலில் லட்சுமி ராமகிருஷ்ணன் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

யுத்தம் செய் படத்தில் மொட்டைத் தலையுடன் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்தார். நான் மகான் அல்ல படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடித்தார். பாஸ் என்கிற பாஸ்கரனில் ஆர்யாவுக்கு அம்மாவானார். நாடோடிகள், ரௌத்திரம் என பல படங்களிலும், அன்பான, நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்கள் மட்டுமே செய்து லட்சுமி ராமகிருஷ்ணன் முதன் முறையாக ஆணவமான, திமிர்தனம் கலந்த கதாபாத்திரம் செய்து வருகிறார். தன்னுடைய இந்த புதுமையான அனுபவம் பற்றி அவர் சொல்வதைப் படியுங்களேன்.

சினிமாவில் நடிப்பதை விட வித்தியாசமாக இருந்தால் மட்டுமே சீரியலில் நடிப்பேன் என்று கூறியிருந்தேன். அவள் சீரியலின் கதை கேட்கும் போதே எனக்குப் பிடித்திருந்தது. இது போல்டான, சேலஞ்சிங்கான கதாபாத்திரம்.

இது சினிமாவில் நான் பண்ணாத கதாபாத்திரம். சினிமாவில் ஹீரோவுக்கு அம்மா கதாபாத்திரம்தான். அன்பான அந்த அம்மாவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் அவள் தொடரில் ஆணவமான, எதிலுமே தான்தான் உயர்ந்தவள் என்று நினைக்கும் கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது.

சீரியலில் இப்படி ஒரு கதாபாத்திரம் செய்வது புதுமையான அனுபவமாக இருக்கிறது. ரொம்ப அனுபவித்து நடிக்கிறேன் என்று கூறிவிட்டு சூட்டிற்கு கிளம்பத் தயாரானார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

 

இளையராஜா இசையால் பெரும் விலைக்குப் போன நீதானே என் பொன்வசந்தம்!

Raaja S Music Makes Neethaane En Ponvasantham

எண்பதுகள் மற்றும் தொன்னூறுகளின் ஆரம்பம் வரை ஒரு படத்தின் விலையைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தது இளையராஜாவின் இசைதான்.

ரசிகர்களுக்கும், திரைப்பட வர்த்தகர்களுக்கும் இது பெரும் சந்தோஷத்தை அளித்தாலும், சில வயிற்றெரிச்சல் கோஷ்டிகள் மனதுக்குள் பொறாமையால் வெந்து கொண்டிருந்தனர் அன்றைக்கு. ஊடகங்களிலும்கூட இப்படியொரு கோஷ்டி இருந்தது.

இப்போது மீண்டும் அந்த பொன்வசந்தம் திரும்பியிருக்கிறது (வயிற்றெரிச்சல் பார்ட்டிகளும்தான்!). கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படமான நீதானே என் பொன்வசந்தம் படத்தின் விற்பனை விலை, இதுவரை இல்லாத அளவு பெரும் தொகையை எட்டியிருக்கிறதாம்.

இதற்கு முக்கிய காரணம், படத்தின் பாடல்கள் பெரும் ஹிட் ஆகியிருப்பது. தமிழ் சினிமா இதுவரை கண்டிராத அளவுக்கு அழகாகவும் பிரமாண்டமாகவும் படத்துக்கு பாடல் வெளியீட்டு விழா நடந்தது. லண்டன் ஆர்க்கெஸ்ட்ராவை வைத்து இளையராஜா நேரடியாக அந்த இசை நிகழ்ச்சியை நடத்தி அசத்தினார்.

அன்றிலிருந்து இந்தப் படத்தின் பாடல்கள் குறித்த செய்திகள் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன. பாடல் சிடிகள் விற்பனையில் சாதனைப் படைத்துள்ளன. இதுவரை தமிழ் தெலுங்கில் 2 லட்சம் சிடிக்களுக்கு மேல் விற்பனையாகியுள்ளன. இன்னொரு பக்கம், அத்தனை பண்பலை வானொலிகளிலும் படத்தின் எட்டுப் பாடல்களும் ஒலிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி, நேற்று முன்தினம் ஜெயா டிவியில் நீதானே என் பொன்வசந்தம் பட இசை வெளியீடு ஒலிபரப்பானது. படம் குறித்த எதிர்ப்பார்ப்பை ஏகத்துக்கும் கிளப்பிவிட்டுள்ளது இந்த நிகழ்ச்சி.

இதன் விளைவு, படத்தின் விற்பனை பரபரப்பாகிவிட்டது. பொதுவாக ரொமான்டிக் படங்களின் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். படம் வெளியான பிறகுதான் அதன் ஓட்டத்தைப் பொறுத்து சூடுபிடிக்கும்.

ஆனால் நீதானே என் பொன்வசந்தத்தின் ஏரியா உரிமை கடந்த இரு தினங்களாக பெரும் விலைக்குப் போய்க்கொண்டுள்ளதாம். படத்தின் கோவை ஏரியா உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது காஸ்மோ வில்லேஜ் நிறுவனம்.

எம்ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி தரமாட்டோம் என்று கறாராகக் கூறி வந்த காஞ்சிபுரம் ஏரியா தியேட்டர்காரர்கள், படத்தை எப்படியாவது தங்கள் தியேட்டரில் வெளியிட மும்முரம் காட்டி வருகிறார்களாம். கவுதம் மேனன் இயக்கிய எந்தப் படமும் இவ்வளவு பெரிய விலைக்கு விற்கப்பட்டதில்லையாம்.

இதனால் பெரும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளார் இயக்குநர் கவுதம் மேனன். இதுகுறித்து அவர் கூறுகையில், "நீதானே என் பொன்வசந்தம் இசைக்கு கிடைத்துள்ள வரவேற்பு, அதன் மூலம் படத்துக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பார்ப்பு, விற்பனை எல்லாமே எனக்கு பெரும் மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்துள்ளது. ராஜா சாருக்கு மிக்க நன்றி," என்றார்.

 

ரஹ்மான் பாட்டு... தனுஷ் பாராட்டு!

Danush Hails Rahman S Music Mariyaa

ரஹ்மான் பாடல்களைக் கேட்க தவம் கிடக்கிறேன், என்கிறார் நடிகர் தனுஷ்.

முதல் முறையாக அவர் படத்துக்கு இசையமைக்கிறார் ஏ ஆர் ரஹ்மான். படத்துக்கு தலைப்பு மரியான். ரஹ்மானை வைத்து வந்தே மாதரம், ஜனகனமண ஆல்பங்களைத் தயாரித்த பரத் பாலாதான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் பார்வதி மேனன் நாயகியாக நடிக்கிறார். படம் முக்கால்வாசி முடிந்தவிட்ட நிலையில், இறுதிக் கட்டப்படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குகிறது.

படத்தின் பாடல்களை சூப்பர் வேகத்தில் போட்டுக் கொடுத்துவிட்டாராம் இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான்.

இதுபற்றி தனது பிளாகில் எழுதியுள்ள தனுஷ், "தேசிய விருது, ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ஏ ஆர் ரஹ்மான் அற்புதமான பாடல்களை இந்தப் படத்துக்குத் தந்திருக்கிறார். ஒவ்வொரு பாடலும் ஒரு ரகம். பிரமாதம். அவற்றின் இறுதி வடிவத்தைக் கேட்க தவம் கிடக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

மீனவர் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

 

மனைவி பிறந்த நாளை தாஜ் மஹாலில் கொண்டாடிய பிரகாஷ் ராஜ்!

Prakash Raj S Surprise Gift His Wife

மும்பை: மனைவி போனி வர்மாவின் பிறந்த நாளை தாஜ் மஹாலில் வைத்துக் கொண்டாடினார் நடிகரும் தயாரிப்பாளருமான பிரகாஷ் ராஜ்.

இரு ஆண்டுகளுக்கு முன், மனைவி லலிதகுமாரியை விவாகரத்து செய்துவிட்டு, போனி வர்மாவை திருமணம் செய்து கொண்டார் பிரகாஷ் ராஜ்.

இருவரும் மும்பையில் வசிக்கின்றனர். அவ்வப்போது சென்னைக்கும் வருகின்றனர்.

இருவருமே சினிமாவில் படுபிஸியாக இருக்கின்றனர்.

தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் பரபரப்பாக இயங்கி வரும் பிரகாஷ்ராஜ், அடுத்து ராதாமோகன் இயக்கும் ‘கவுரவம்' படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்து வருகிறார்.

இந்தி நடன இயக்குனரான போனி வர்மா, பாலிவுட்டில் நிறைய படங்கள் செய்து வருகிறார். இருவருமே பரபரப்பாக உள்ளதால், வெளியில் சென்று ஓய்வாக நேரத்தை செலவிட முடியவில்லையாம்.

இந்த நிலையில் போனி வர்மா பிறந்த நாளையொட்டி அவரை தாஜ்மகாலுக்கு அழைத்து சென்று சந்தோஷப்படுத்தினாராம் பிரகாஷ்ராஜ்.

இருவரும் தாஜ்மகாலில் பல மணி நேரம் செலவிட்டதோடு, விரும்பிய படி படங்களை எடுத்துக் கொண்டு திரும்பினார்களாம்.

இந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது என போனி வர்மா பின்னர் கூறினார்.

 

ஜெயப்பிரதா தயாரிக்கும் தமிழ்ப் படத்தில் ஹன்ஸிகா ஹீரோயின்!

Jayapradha Produce Tamil Flick

இஷ்க் தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் ஹன்ஸிகா.

தமிழில் இப்போது வேட்டை மன்னன், வாலு, சிங்கம் 2 என பெரிய பட வாய்ப்புகளைக் கையில் வைத்துள்ள ஹன்ஸிகா, தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் பிரபல நடிகையும் எம்பியுமான ஜெயப்பிரதா ஒரு தமிழ்ப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் அவரது உறவினர் சித்தார்த் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற இஷ்க் என்ற படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். இதில் நித்யா மேனன் செய்த வேடத்தை ஹன்ஸிகா செய்கிறார்.

மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடுவதாக ஜெயப்ரதா அறிவித்துள்ளார்.

சென்னையில் ஜெயப்ரதாவுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. ராஜ், ஜெயப்ரதா என இரு திரையரங்குகள் செயல்பட்டு வந்தன. இப்போது மூடப்பட்டுவிட்டன. விரைவில் அவற்றை மல்டிப்ளெக்ஸ் ஆக்கும் முயற்சியில் உள்ளனர்.

 

விநாயகர் சதுர்த்திக்கு சன் டிவியில் '3'.. விஜய் டிவியில் 'வழக்கு எண் 18/9'!

Vinayagar Chathurthi Special Movies On Tv

புது வருடப் பிறப்பு தொடங்கி, பொங்கல், தீபாவளி, போன்ற விஷேச நாட்களில் மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த தொலைக்காட்சிகள் தற்போது ஒரு விடுமுறையும் விடாமல் சிறப்பு நிகழ்ச்சிகளையும், புதிய திரைப்படங்களையும் ஒளிபரப்பத் தொடங்கியுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சன் டிவி, விஜய் டிவி என பெரும்பாலான சேனல்களில் போட்டி போட்டுக்கொண்டு புதிய திரைப்படங்களை ஒளிபரப்புகின்றனர்.

சன் டிவியில் காலையில் சந்திரமுகி, பிற்பகலில் விஜய் நடித்த சுறா, மாலையில் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக 3 ஆகிய படங்களை ஒளிபரப்புகின்றனர்.

விஜய் டிவியில் காலை 11 மணிக்கு வழக்கு எண் 18/9 திரைப்படமும், மாலை 6 மணிக்கு சிறுத்தை திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.

இதைத் தவிர புதிய திரைப்படங்களின் சிறப்புக் கண்ணோட்டங்களும், நகைச்சுவை நடிகர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளும் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளில் ரசிகர்களுக்கு விருந்தாக ஒளிபரப்பாக உள்ளது.

கொழுக்கட்டையை சாப்பிட்டு விட்டு அப்படியே படத்தையும் பார்த்து ரசிங்கப்பா...!

 

ஒரு வார்த்தை ஒரு லட்சம்: பாகன் ஸ்பெசல்!

Paagan Team Participates Oru Vartha

விஜய் டிவியின் ஞாயிறு காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒருவார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியில் இந்த வாரம் பாகன் திரைப்படக்குழுவினர் ஸ்ரீகாந்த், ஜனனி ஐயர், பாண்டி, சூரி ஆகியோர் பங்கேற்று விளையாடினார்கள்.

இது தமிழை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சி. 2 நிமிடத்தில் 5 சொற்களை கண்டுபிடிக்கவேண்டும். குறிப்புகள் எல்லாமே ஒரு சொல் குறிப்புகளாக இருக்கவேண்டும், இரண்டு சொற்களைச் சொன்னால் அது விதிமீறலாக கருதப்படும்.

முதலாவதாக ஸ்ரீகாந்த், ஜனனி ஐயர் விளையாடினர். ஜனனி குறிப்புகளைக் கொடுக்க ஸ்ரீகாந்த் கண்டுபிடித்தார். சிலை, இரும்பு, வரவு, நகம் பூமி என்ற 5 வார்த்தைகளை ஐம்பொன், காந்தம், செலவு, வளர்வது, வானம் என்ற குறிப்புகளைக் கொண்டு கூறி கண்டு பிடித்தார் ஸ்ரீகாந்த்.

அடுத்ததாக பாண்டியும், சூரியும் விளையாடினார்கள். பாண்டி குறிப்புகளைத் தர சூரி கண்டுபிடித்தார். 5 வார்த்தைகளில் நான்கினை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது.

இறுதிச் சுற்றில் சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் - ஜனனி ஜோடி 10,000 ஆயிரம் ரூபாய் பரிசாகத் தட்டி சென்றனர்.

விளையாட்டின் நடுவே பாகன் திரைப்படத்தின் சிறப்பு அம்சங்களைப் பற்றி பேசினார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தின் இயக்குநர் பாகன் படத்தில் வரும் மாகாளி, வெள்ளிங்கிரி கதாபாத்திரத்திற்கு சரியானவர்கள் பாண்டியும், சூரியும் தான் என்பதால் அவர்களை தேர்ந்தெடுத்தாக கூறினார்.

பொள்ளாச்சி கதை களத்திற்கு ஏற்ப அதே நேட்டிவிட்டியுடன் கோவை சரளா உள்ளிட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததாக கூறினார் இயக்குநர். நிகழ்ச்சியின் இடையே பாண்டியும், சூரியும் பாட்டுப்பாடி அசத்தினார்கள். ஒவ்வொரு சுற்றிலும் நகைச்சுவையுடன் குறிப்புகளை கூறி நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்றனர் பாகன் குழுவினர்.

 

100-ஐ தாண்டிய கோலிவுட்.. ஆனால் தேறியது?

2012 Q3 Box Office Report 100   

இந்த 2012-ல் இதுவரை கோடம்பாக்கத்தில் தயாரான நேரடிப் படங்கள் என்று பார்த்தால் 100-ஐத் தாண்டிவிட்டது. டப்பிங்கையெல்லாம் சேர்த்தால் 150-ஐத் தாண்டுகிறது.

இவற்றில் நேரடித் தமிழ்ப் படங்களில் வெற்றிப் பெற்று பெரும் லாபம் குவித்த படங்கள் என்று பார்த்தால் வெகு சிலதான் தேறுகின்றன.

வசூல், அதிக நாள் ஓடிய கணக்கு என அனைத்து வகையிலுமே முதலிடத்தில் இருப்பது உதயநிதி ஸ்டாலின் - சந்தானம் நடித்து வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடிதான். இந்தப் படம் விரைவில் வெள்ளி விழா காணவிருக்கிறது. பெரும் தொகையை லாபமாக சம்பாதித்துக் கொடுத்துள்ளது.

இந்தப் படத்தின் சாதனையை சசிகுமாரின் சுந்தரபாண்டியன் மிஞ்சலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

தமிழ் - தெலுங்கில் நேரடி இருமொழிப் படமாக வந்த நான் ஈ, இன்னொரு குறிப்பிடத்தக்க வெள்ளிப் படம். தமிழில் மட்டும் இந்தப் படம் 25 கோடியும், தெலுங்கில் 75 கோடியும், ஆக ரூ 100 கோடியை வசூலித்துள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ 40 கோடிதான்!

ஷங்கர் இயக்கத்தில் பொங்கலுக்கு வந்த நண்பன் முதலுக்கு மோசமில்லை என்ற அளவுக்கு ஓடியது.

'கலகலப்பு', 'காதலில் சொதப்புவது எப்படி', 'அட்டகத்தி' படங்கள் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை சம்பாதித்துக் கொடுத்துள்ளன. இவற்றின் பட்ஜெட்டுக்கும் வசூலுக்கும் ஏக வித்தியாசம்.

மெரீனா படத்தை ரூ 1 கோடியில் எடுத்தனர். ரூ 3 கோடி லாபம் பார்த்துள்ளனர் (தயாரிப்பாளர் - இயக்குநர் சண்டைதான் தீர்ந்தபாடில்லை!)

அம்புலி எனும் 3 டி படம், ஆச்சர்யப்படும் அளவுக்கு டீசன்டான வசூலைப் பெற்றது.

'வழக்கு எண் 18/9' மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல லாபம் பார்த்தது. தமிழி சினிமாவுக்கு பெருமையும் சேர்த்தது. 'தோனி,' 'கழுகு', 'உருமி', 'நான்' ஆகிய மூன்று படங்களும் அவற்றின் தரத்துக்காக பேசப்பட்டவை. வசூலும் மோசமில்லை என்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான படங்களில் ஸ்ரீகாந்த் பாகன் வெற்றிப் படமாக அமைந்து, லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளது. முகமூடி குறித்து எதிர்மறை விமர்சனங்கள் இருந்த போதிலும், வசூல் ரீதியில் முதல் இரு வாரங்களில் திருப்திகரமான நிலை இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரிதாக எதிர்ப்பார்த்து ஏமாற்றிய படங்களில் முக்கியமானவை சகுனி, வேட்டை, 3, பில்லா 2 போன்றவை சேர்கின்றன!

 

கமலும் அஜித்தும் என்னை பாராட்டணும்! - சுந்தரபாண்டியன் நடிகரின் பலே ஆசை!

Sundarapandiyan Actor Soundararajan   

திரையங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சுந்தரபாண்டியன் படத்தில் சசிக்குமாரின் நண்பர்களில் ஒருவராக பரஞ்சோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகர் சவுந்தரராஜா.

எலக்டரானிக் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேசன் என்ஜினியரிங் படித்து விட்டு சிங்கப்பூர், லண்டன், துபாய் என வெளிநாடுகளில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவரை, சின்ன வயதிலேயே உள்ளுக்குள்ளே ஊறி விட்ட சினிமா கனவு சென்னைக்கு கூட்டி வந்தது.

வேலை பார்த்து சம்பாதித்துக்கொண்டு வந்த சில லட்சங்களை சென்னை வாழ்க்கையோடு சில குறும்படங்கள் எடுத்து கரைத்து விட்டு பல போராட்டங்களுக்கு பிறகு இப்போது சுந்தரபாண்டியன் என் வாழ்க்கையை ஆரம்பித்து வைத்திருக்கிறது என சந்தோசத்தோடு சொல்கிறார் சவுந்தரராஜா.

சுந்தரபாண்டியன் வாய்ப்பு எப்படி கிடைத்தது...

எனக்கு சசிக்குமார் சாரை ரொம்பப் பிடிக்கும். அவருக்கும் எனக்கும் ஏதோ ஒரு பந்தம் இருப்பதாய் என் உள்ளுணர்வு சொல்லும். பல கம்பெனிகளுக்கு நடிக்க சான்ஸ் கேட்டு அலைந்தேன். சுந்தரபாண்டியன் படம் பற்றி கேள்விப்பட்டு கம்பெனி புரொடக்சன்ஸ் ஆபிஸ் போனேன். இயக்குனர் பிரபாகரன் சாரைப் பார்த்து வாய்ப்பு கேட்டேன். அவர் என்னைப் பார்த்து விட்டு சரியா வராது. இது மதுரை உசிலம்பட்டில நடக்கிற கதை. நீங்க இங்கிலீஸ்ல பேசுறீங்க... உங்களுக்கு அந்த ஸ்லாங் வருமான்னு தெரியல என்று திருப்பி அனுப்பி வைத்து விட்டார்.

ஆனால் நான் விடவில்லை. இதில் ஆச்சர்யம் என்னன்னா எனக்கு சொந்த ஊரே உசிலம்பட்டி தான். உடனே நான் ஊருக்குப் போய் நானே இயக்கி நானே நடிச்சி உசிலம்பட்டி ஸ்லாங் பேசி ஒரு குறும்படம் எடுத்தேன். அதைக் கொண்டு போய் பிரபாகரன் சார்கிட்ட கொடுத்தேன். அதைப் பார்த்ததும் அவருக்கு பிடிச்சிப்போச்சி. நீ படத்துல இருக்கடான்னு சொன்னார்.

அப்புறமா தயாரிப்பாளர் சசிக்குமார் சாரும் அசோக்குமார் சாரும் பார்த்துட்டு அவங்களும் ஓ.கே.ன்னு சொன்னாங்க... என்னுடைய உள்ளுணர்வு சரி தான்னு இப்ப தோணுது.

முதல் பாராட்டு....

படம் ரெடியானதும் என்னை முதல்ல பாராட்டுனது சசிக்குமார் சார் தான்.
அடுத்தடுத்து நம்ம சேர்ந்து பண்ணலாம்னு சொன்னார். அவர் நடிக்கிற குட்டிப்புலி படத்துலயும் சசிக்குமார் நண்பனா நடிக்கிறேன்.

அடுத்தடுத்த ஆசைகள்...

சினிமாவுல தான் கடைசி வரைக்கும் என் வாழ்க். நல்ல நடிகனா இருக்கணும், நல்ல நடிகன்னு பேர் வாங்கணும். என்னைப் பொறுத்தவரைக்கும் நான் நடிகன். நிர்வாணமா என்னை நடிக்கச் சொன்னாக் கூட நான் நடிப்பேன். எனக்கு கமல்சாரையும் அஜித் சாரையும் ரொம்ப பிடிக்கும். நான் நடிக்க வந்ததுக்கு அவங்க ரெண்டு பேரும் தான் முக்கிய காரணம். நான் நடிக்கிற படத்தை பார்த்துட்டு அவங்க ரெண்டு பேரும் கூப்பிட்டு, சவுந்தர் ரொம்ப நல்லா நடிச்சிருக்கேன்னு சொல்லணும் அதான் என் ஆசை.

குறிப்பு: வெளிநாடுகளில் வேலை செய்து சம்பாதித்த பணத்தில், மும்பையில் புரொடக்சன் டிசைன் படித்து சென்னை வந்து Madurai Touring Talkies என்ற நிறுவனத்தை துவங்கி, Stone Bench என்ற இன்னொரு நிறுவனத்துடன் இணைந்து துரு, ராவனம், பெட்டி கேஸ், விண்ட் போன்ற குறும்படங்களை தயாரித்திருக்கிறார் சவுந்தரராஜா.