ஹைதராபாத்: சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஹைதராபாத்தில் செட்டிலான நடிகை குடிபோதையில் பப்பில் ஒருவருடன் சண்டை போட்டுள்ளார்.
ஆந்திராவில் இருந்து வந்து கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வந்தவர் அந்த நான்கு எழுத்து நடிகை. அவருக்கும் இசை குடும்பத்து வாரிசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் தான் நடிகைக்கும், அவரின் சித்திக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு தலைமறைவானார்.
இந்த சம்பவத்தை அடுத்து நடிகை ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் அவர் தனது தோழிகளுடன் ஹைதராபாத்தில் உள்ள பப் ஒன்றுக்கு சென்றுள்ளார். பப்பில் மூக்கு முட்ட மதுபானங்கள் அருந்தியுள்ளார்.
அப்போது அவரை யாரோ தெரியாமல் மோத நடிகை கடுப்பாகிவிட்டார். இதையடுத்து நடிகை குடிபோதையில் அந்த நபருடன் சண்டை போட்டுள்ளார். போலீசார் வந்து விலக்கிவிடும் அளவுக்கு சண்டை பெரிதாகியுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தார்களா என்ற விவரம் தெரியவில்லை.