நமீதாவின் அடுத்த புராஜெக்ட்... அரசியல்?

சென்னை: நமீதா இப்போது முன்பை விட ஸ்லிம்மாகிவிட்டார். கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு (அப்படித்தான் சொல்கிறார்!) என தொடர்ந்து தீயா வேலை செய்து உடம்பை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாராம்.

அதே நேரம் படங்களில் நடிக்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சொந்தப் படம் தயாரிக்கும் ஐடியா இருக்கிறதாம்.

இதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும் என்று ஓரமாக வைத்துவிட்டு, வேறொரு முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் நமீதா. அது அரசியல்.

சமீபத்தில் இரு பெரிய தேசிய கட்சிகள் அவரிடம் இதுகுறித்து பேச்சு நடத்தியதாகத் தெரிகிறது.

அவற்றில் காவிக் கட்சிதான் நமீதாவை அள்ளிக் கொண்டு போவதில் அதிக ஆர்வம் காட்டுகிறதாம். தமிழக பாஜகவை வலுப்படுத்தப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஐடியா இது என்கிறார்கள். குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட நமீதாவும், சீக்கிரமே தமிழக மேடைகளில் தோன்றி மச்சான்ஸ் ஆதரவை பாஜகவுக்குக் கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

 

சூர்யா, காஜல் அகர்வாலுக்கு சினி'மா' விருதுகள்!

Surya Kajal Gewts Cine Maa Awards

ஹைதராபாத்: மா டிவியின் சினிமா விருது வழங்கும் விழாவில் தமிழில் சிறந்த நடிகர் விருது சூர்யாவுக்கும், சிறந்த நடிகை விருது காஜல் அகர்வாலுக்கும் வழங்கப்பட்டது.

தமிழ், தெலுங்கில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் தமிழில் சிறந்த நடிகராக சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். மாற்றான் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் சிறப்பாக நடித்து இருந்ததாக அவரை தேர்வு செய்தனர்.

சிறந்த நடிகையாக காஜல் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார். துப்பாக்கி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

தெலுங்கில் சிறந்த நடிகராக பவன் கல்யாணும் (கப்பார் சிங்), சிறந்த நடிகையாக சமந்தாவும் (ஈகா) தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றனர். கப்பார் சிங் படம் மட்டும் 9 விருதுகளைப் பெற்றது. ஈகாவுக்கு நான்கு விருதுகள் கிடைத்தன. சிறந்த வில்லனாக சுதீப் விருது பெற்றார்.

இந்த விழாவில் நடிகர் சூர்யா, காஜல் அகர்வால் ஆகியோர் நேரில் பங்கேற்று விருதுகளைப் பெற்றனர்.

நடிகைகள் அஞ்சலி, சார்மி, நித்யா மேனன், நடிகர் நாகார்ஜுனா உள்பட பலரும் பங்கேற்றனர்.

 

சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெற்ற சுந்தர் சி.

சென்னை: இயக்குனர் சுந்தர் சி.க்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

சுந்தர் சி.க்கு நமக்குத் தெரியாமல் எப்பொழுது ஆஸ்கர் விருது கொடுத்தார்கள் என்று நினைக்கிறீர்களா?. அவரின் தீயா வேலை செய்யணும் குமாரு படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளார். இந்நிலையில் அவரது மகிழ்ச்சி அதிகரித்துள்ளதற்கு அவரது மகள் தான் காரணம்.

சுந்தரின் மகள் சிறந்த தந்தை மற்றும் இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை ஒரு பேப்பரில் வரைந்து அதை அவருக்கு அளித்து சந்தோஷப்படுத்தியுள்ளார்.

சிறந்த இயக்குனருக்கான 'ஆஸ்கர் விருது' பெற்ற சுந்தர் சி.!

இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சிறந்த தந்தை மற்றும் இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை சுந்தர் சி. அவரது மகளிடம் இருந்து பெற்றார். இதை விட அவருக்கு வேறு எதுவும்வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

இரண்டு படங்கள்... இரண்டு ஆல்பங்கள் தயாரிக்கும் வசந்த குமார் மகன்!

இரண்டு படங்கள்... இரண்டு ஆல்பங்கள் தயாரிக்கும் வசந்த குமார் மகன்!

வசந்த் அன் கோ உரிமையாளர் வசந்த குமாரின் முதல் மகன் வசந்த் விஜய் ஏற்கெனவே பிரபல நடிகராக உள்ளார். இப்போது வசந்த குமாரின் இன்னொரு மகன் வினோத் குமாரும் சினிமாவுக்கு வந்துள்ளார்... ஆனால் தயாரிப்பாளராக.

எடுத்த எடுப்பிலேயே இரு தமிழ்ப் படங்களையும், இரண்டு தமிழ் ஆல்பங்களையும் தயாரிக்கிறார் வினோத் குமார்.

இவற்றில் முதல் படத்துக்கு தெரியாம உன்னைக் காதலிச்சிட்டேன் என்று தலைப்பு வைத்துள்ளார். இந்தப் படத்தை கே ராமு இயக்குகிறார். வசந்த் விஜய் ஹீரோவாக நடிக்க, ரஸா நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீநாத் இசையமைக்கிறார்.

வினோத் குமார் தயாரிக்கும் மற்றொரு படம் என்னமோ நடக்குது. இதிலும் வசந்த் விஜய்தான் ஹீரோ. மஹிமா ஹீரோயின். பிரபு, ரகுமான், தம்பி ராமையா, சுகன்யா, சரண்யா என பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறது. பிரேம்ஜி அமரன் இசையமைக்க, பி ராஜபாண்டி இயக்குகிறார்.

இசை ஆல்பங்கள்..

இந்த இரு படங்கள் தவிர, யூஸுப் - பிரேம்ஜி இசையில் விழியும் செவியும் என்ற தன் முதல் இசை ஆல்பத்தைத் தயாரித்து வருகிறார்.

இரண்டாவது ஆல்பத்துக்கு பிரேம்ஜி, யூஸுப் மற்றும் சத்யா இசையமைத்துள்ளனர்.

லயோலாவில் பிகாம் பட்டமும், லண்டன் சவுத் பேங்க் பல்கலைக் கழகத்தில் எம்எஸ்ஸி நிர்வாகவியல் பட்டமும் பெற்றுள்ள வினோத் குமார், தனது ட்ரிபிள் வி நிறுவனம் மூலம் தொடர்ந்து படங்கள் தயாரிக்கப் போகிறாராம்.

இதற்காகவே மலையாளத்தில் வெற்றி பெற்ற மேக்கப் மேன் மற்றும் மம்முட்டி நடித்த ப்ளாக் ஆகிய படங்களின் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார்.

 

பி. வாசுவுடன் ஹாலிவுட் செல்ல மறுத்த விஜய்?

பி. வாசுவுடன் ஹாலிவுட் செல்ல மறுத்த விஜய்?

சென்னை: பி. வாசு இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்க விஜய் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இயக்குனர் பி. வாசு கரி இன் லவ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்குகிறார். படத்தின் நாயகி சோனம் கபூர். இதில் சோனமின் தந்தை அனில் கபூரும் நடிக்கிறாராம்.

இது குறித்து பி. வாசு கூறுகையில்,

கரி இன் லவ் தெய்வீக சக்திக்கும், தீய சக்திக்கும் இடையேயான பேய் படம். இதில் இந்திய நடிகர் ஒருவர் நாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு மதுரை, காஞ்சீபுரம், மைசூர், கேரளா மற்றும் வெளிநாட்டில் நடக்கிறது என்றார்.

ஹாலிவுட் கனவுகளுடன் இருக்கும் இந்திய இளைஞன் ஒருவன் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வீட்டில் ஒரு ஆவி இருந்து கொண்டு வெளியே செல்ல மறுக்கிறது. சிறு வயிதிலேயே முடிவான நாயகன், நாயகியின் திருமணம் என்று கதை செல்கிறது. சோனம் கபூர் தான் நாயகி. அவரது தந்தை அனில் கபூர் அமெரிக்காவில் தொழில் அதிபராக வருகிறார்.

படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜான் வொயிட், நிக் நோல்டி, டினா ஃபே, சூசன் என்கிற சத்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சந்திரமுகி படத்தைப் பார்த்த பிறகு கரி இன் லவ் படத்தை இயக்க பி. வாசு தான் சரியானவர் என்று நினைத்ததாக தயாரிப்பாளர் ராஜ் திருச்செல்வன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செட்டிலான இலங்கை தமிழரான திருச்செல்வன் ஏற்கனவே 2 ஹாலிவுட் படங்களை தயாரித்துள்ளார். வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்குமாம்.

படத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விஜய் நாயகனாக நடிக்கிறார் என்று இருக்கிறது. ஆனால் விஜய் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விஜய்க்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறதாம்.

 

வீட்டுக்குள் பிறந்த மேனியாக சுற்றும் ஹாலிவுட் நடிகை

Jennifer Aniston Stays Naked Day

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் வீட்டில் இருக்கையில் பிறந்த மேனியாகத் தான் இருப்பாராம்.

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டின் முன்னாள் மனைவி ஜெனிபர் ஆனிஸ்டன்(44). பிட் ஏஞ்சலினா ஜூலியை விரும்பி அவருடன் சென்றுவிட்டார். அதன் பிறகு ஆனிஸ்டன் நடிகர் ஜஸ்டின் தோரோ மீது காதல் வயப்பட்டார். இருவரும் திருமணம் செய்வது என்று முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களின் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே செல்கின்றனர்.

இந்நிலையில் அவர் அண்மையில் வருங்கால கணவருடன் ஒரே வீட்டில் குடிபுகுந்தார். ஆனிஸ்டன் வீட்டில் இருக்கும்போது ஆடையின்றி நிர்வாணமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. முதலில் அவர் வெட்கப்பட்டதாகவும், தற்போது தைரியமாக நிர்வாண கோலத்தில் வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

அவருக்கு சிக்கென்று உடல் இருப்பாதல் நம்பிக்கையுடன் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.