விஸ்வரூபம் சேலம் உரிமையை வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!

Red Giant Got Salem Distribution Rights Of Viswaroopam   

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமையை வாங்கினார் உதயநிதி ஸ்டாலின்.

அவரது ரெட் ஜெயன்ட் மூவீஸ்தான் இந்தப் படத்தை சேலத்தில் விநியோகிக்க உள்ளது.

விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதாக கமல் அறிவித்ததால், படத்தை எந்த விநியோகஸ்தரும் சீண்டவில்லை. 45 தியேட்டர்கள் தவிர மற்ற அனைத்து அரங்குகளும் படத்தைப் புறக்கணித்தன.

இதனால் கமல் மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தார். இந்த நிலையில், அவரது கலைப் பணியை மதிக்கும் வகையில், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இணைந்து சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன் விளைவாக, விஸ்வரூபம் முதலில் தியேட்டர்களிலும், 7 நாட்கள் கழித்து டிடிச்சிலும் வெளியிட முடிவு செய்யப்பட்டது. கமல் ஹாஸனுக்கு அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகை இது என்று திரையுலகின் அனைத்து சங்கங்களும் அறிவித்தன.

இந்த சமரச முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, விஸ்வரூபம் படத்தின் ஏரியாக்களை விநியோகஸ்தர்கள் வாங்கிக் கொள்ள முன்வந்தனர்.

அனைத்து ஏரியாக்களின் வியாபாரமும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இதில் சேலம் பகுதி விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் வாங்கியுள்ளது. இதனை உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

ஒய். ஜி. மகேந்திரனின் ‘வீட்டுக்கு வீடு வியட்நாம் வீடு’

Veetukku Veedu Vietnam Veedu

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நாடகமாகவும் திரைப்படமாகவும் நடித்து சூப்பர் ஹிட் ஆன ‘வியட்நாம் வீடு' தொலைக்காட்சி சீரியலாக வடிவமெடுக்கிறது. இதில் கதாநாயகனாக ஒய்.ஜி. மகேந்திரன் நடிக்கிறார்.

ஜெயா டிவியில் ‘வீட்டுக்கு வீடு வியட்நாம் வீடு' என்ற பெயரில் ஒளிபரப்பாகும் இந்த தொடரின் கதை, திரைக்கதையை வியட்நாம் வீடு சுந்தரம் எழுதுகிறார். ரிஷி இயக்கும் இந்த தொடரில் ஒய்.ஜி. மகேந்திரனுடன் சுலக்சனா, கவிதாலயா கிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம் ஆகியோர் நடிக்கின்றனர்.

வியட்நாம் வீடு கதையை ஏற்கனவே மேடை நாடகமாக பலமுறை அரங்கேற்றியுள்ளார் ஒய்.ஜி. மகேந்திரன். இது ரசிகர்களிடையே அதிக அளவு வரவேற்பினை பெற்றதை அடுத்து அதை சீரியலாக எடுத்துள்ளனர். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும்.

 

இளையராஜா தலைமையில் மதுரையில் அன்னக்கொடியும் கொடி வீரனும் இசை வெளியீடு

பாரதிராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள அன்னக் கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடக்கிறது.

இந்தப்படத்துக்கு தான் இசையமைக்காவிட்டாலும் தன் நண்பன் பாரதிராஜாவுக்காக, விழாவுக்கு தலைமை ஏற்க ஒப்புக் கொண்டுள்ளார் இசைஞானி இளையராஜா.

மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் பாரதிராஜா தயாரித்து இயக்கியுள்ள படம் அன்னக் கொடியும் கொடி வீரனும். புதுமுகம் லட்சுமணன் ஹீரோவாக நடிக்க, கார்த்திகா நாயகியாக நடிக்கிறார். மனோஜ் கே பாரதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ilayaraja preside the audio launch
இந்தப்படத்தின் தொடக்கவிழா கடந்த ஆண்டு தேனி அல்லிநகரத்தில் இள்ள வீரப்ப அய்யனார் கோயிலில் நடந்தது. தமிழ் திரையுலகமே திரண்டு வந்தது அந்த விழாவுக்கு. கிடைவெட்டி படையல் போட்டு படத்தை ஆரம்பித்தார் பாரதிராஜா.

இப்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது இந்தப் படம். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் ஜனவரி 20ம் தேதி பிரமாண்டமாக நடக்கிறது. இந்த விழாவில் இசைஞானி இளையராஜா தலைமை ஏற்கிறார்.

பாடல்களை இயக்குநர் மணிரத்னம் வெளியிட, இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் பாலுமகேந்திரா ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

படத்தின் ட்ரைலரை கே பாக்யராஜ், கங்கை அமரன் மற்றும் விக்ரமன் வெளியிட, நடிகர் வடிவேலு, ராதா உள்ளிட்டோர் பெற்றுக் கொள்கின்றனர்.

அரசடி ரயில்வே கிரவுண்டில் இந்த விழா நடக்கிறது.

தான் இசையமைக்காவிட்டாலும், நட்புக்கு மரியாதை கொடுத்து இசைஞானி இளையராஜா சமீபத்தில் கமல் பட விழாவில் பங்கேற்று இசை வெளியிட்டார். இப்போது அதே மரியாதையை தன் இன்னொரு நண்பர் பாரதிராஜாவுக்கும் செய்கிறார்!

 

தலைவா நீ வந்தா செலக்ஷன்... நோ எலெக்ஷன்!

Rajini Fans Welcome Rajini Politics

மேலே நீங்கள் படிக்கும் தலைப்புதான் கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களால் போஸடர்களாக, வினைல் பேனர்களாக, கட் அவுட்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது.

பிறந்த நாள் விழா, ப சிதம்பரம் புத்தக வெளியீடு, சோவின் துக்ளக் நிகழ்ச்சி போன்றவற்றில் ரஜினி அரசியல் பற்றி பேசியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நான் அரசியலுக்கு வந்தால் என் வழி தனிவழியாகத்தான் இருக்கும் என்று வெளிப்படையாகக் கூறினார் ரஜினி. மேலும் தனது ரசிகர்களை அழைத்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தனது பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் நடத்த வள்ளுவர் கோட்டத்தை கேட்டபோது, ஆரம்பத்தில் தருவதாகக கூறி முன்பணமும் பெற்றுக் கொண்ட அரசு, பின்னர் திடீரென்று அதை ரத்து செய்ததும், கடைசி வரை இடம் தராமல் அலைக்கழித்ததும் ரஜினிக்கு கடும் அதிருப்தியை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரசிகர்கள் பல ஆண்டுகளாகக் கேட்டுவரும் அரசியல் பிரவேசம் குறித்து அவர் இறுதி முடிவு எடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அவரது மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் ரசிகர்கள் மாவட்டந்தோறும் ரஜினயின் அரசியல் பிரவேசம் குறித்து போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். பேனர்கள், கட் அவுட்டுகள் வைத்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் சென்னையின் முக்கிய பகுதிகளில் தலைவா நீ வந்தா செலக்ஷன், நோ எலெக்ஷன் என்று போஸ்டர்களை ஒட்டி பரபரப்பேற்படுத்தியிருந்தனர்.

இப்போது மாவட்டந்தோறும், அனைத்து முக்கிய நகரங்களில் இந்தப் போஸ்டர்கள் பளிச்சிடுகின்றன.

ரஜினியும் இப்போது ரசிகர்களை இந்த விஷயத்தில் தடுக்கவில்லை. இந்த போஸ்டர் மற்றும் ரசிகர்கள் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை ஆர்வத்துடன் கவனித்து வருகிறாராம் சூப்பர் ஸ்டார்!

 

கண்ணா லட்டு தின்ன ஆசையா கதை என்னுடையது - வெட்கமற்று பொய் சொல்லும் சந்தானம்!!!

Santhanam Claims That Klta Story Is Own Story

ஆசை வெட்கமறியாது.. அதுவே பேராசையாக மாறினால்? அதுதான் சந்தானத்தின் லட்டு தின்ன ஆசை படத்தின் நிஜக் கதை ஆகிவிட்டது.

இந்தப் படம் பாக்யராஜின் இன்று போய் நாளை வா கதைதான் என்று ஆரம்பத்தில் சந்தானமும் ராம நாராயணனும் கூறிவந்தனர். அந்த நேரத்தில் பாக்யராஜும் என் அனுமதியின்றி என் கதையைத் திருடி படமெடுத்துவிட்டனர் என்று குற்றம்சாட்டி போலீஸிலும் புகார் செய்திருந்தார்.

இந்தப் பிரச்சினையில் பாக்யராஜ் தனக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை என்று புலம்பி வரும் நிலையில், லட்டு தின்ன ஆசையா படத்தின் கதை என்னுடையது, எனக்கே சொந்தமானது என்று சந்தானம் திடீர் ஸ்டேட்மெண்ட் விட்டுள்ளார்.

'படத்தின் வசூல் விவரம் முழுவதையும் கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படி வழக்கு தொடர்ந்துள்ளேன். மொத்த வசூலையும் பார்த்த பிறகு எனக்கு எவ்வளவு தொகை வேண்டும் என்பது பற்றி கேட்பேன்' என்று பாக்யராஜ் சொன்னதுமே, உஷாரான சந்தானம் மனமறிய இப்படி ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார்.

'மூன்று பேரை வைத்து ஒரு கதை என் சிந்தனையில் ஓடியது. அதைதான் கண்ண லட்டு தின்ன ஆசையா என்ற பெயரில் படமாக எடுத்துள்ளோம்,' என்று சந்தானம் கூறியுள்ளதைக் கேட்டு கொதித்துப் போன பாக்யராஜ், இது எத்தனை பெரிய அயோக்கியத்தனம் என்று மக்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன், என்றார்.

 

டிவியில் ஒளிபரப்பும் படங்களுக்கும் இனி சென்சார் சர்ட்டிபிகேட் அவசியம்!

Censor Certificate Must Tv Airing Movies

டெல்லி: தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்களுக்கு இனி சென்சார் சர்ட்டிபிகேட் பெறவேண்டியது அவசியம் என்ற அறிவிப்பு வெளியாக உள்ளது.

தொலைக்காட்சி என்பது அனைவரின் வீட்டிற்குள்ளும் இருக்கும் அத்தியாவசிய சாதனமாகிவிட்டது. நடுவீட்டில் அமர்ந்து குடும்பத்தினர் எல்லோரும் மொத்தமாக அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கின்றனர்.

சீரியலோ, விளம்பரமோ சில சமயம் முகம் சுளிக்க வைக்கிறது. சில திரைப்படக்காட்சிகளும், பாடல்களும் கூட பார்க்க முடியாத காட்சிகளாக இருக்கின்றன. எனவே தொலைக்காட்சிகளுக்கும் தணிக்கை அவசியம் கருத்து வலுவடைந்து வருகிறது. இந்த நிலையில் திரைப்படங்களை,

"டிவியில் ஒளிபரப்புவதற்கு, இனிமேல் தனியாக சென்சார் போர்டு சான்றிதழ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.

இந்தியாவில் திரைப்படங்கள் எல்லாம், சென்சார் போர்டால் தணிக்கை செய்யப்பட்டு, சான்றிதழ் அளித்த பின்னரே, தியேட்டர்களில் திரையிடப்படுகின்றன. திரைப்படங்களை, யு, யு.ஏ., ஏ மற்றும் எஸ் என்ற, நான்கு பிரிவுகளில் தரம் பிரித்து, சென்சார் போர்டு சர்டிபிகேட் அளிக்கின்றது.

திரைப்படங்கள் எல்லமே சேட்டிலைட் உரிமம் மூலம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன. இதில் கவர்ச்சி காட்சிகள், பெரியவர்கள் மட்டுமே பார்க்கவேண்டிய காட்சிகள் பலவும் நடுக் கூடத்தில் ஒளிபரப்பாகிறது. இதனை தவிர்க்க தற்போது டிவியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களுக்கும் தனியாக சென்சார் சர்டிபிகேட் அவசியம் என்ற கருத்து எழுந்துள்ளது. இது தொடர்பாக, மத்திய ஒளிபரப்புத் துறை அமைச்சகமும், மத்திய சென்சார் போர்டும், விரிவாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இது குறித்து, திரை உலகத்தினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் பற்றி, கருத்து கூறிய சினிமா தயாரிப்பாளர்கள், "திரையரங்கங்களில் திரையிடுவதற்காக ஒன்றும், "டிவி ஒளிபரப்புக்கு என்றும், தனித்தனியாக சென்சார் போர்டு சான்றிதழ் தரலாம் என்றனர்.

நடிகை வித்யாபாலன் நடித்த, "டர்ட்டி பிக்சர் என்ற இந்திப் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு , தனியார், தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக இருந்தது. அப்போது அதனை டிவியில் ஒளிபரப்ப தடை ஏற்பட்டது. பின்னர் அப்படத்தில் ஆட்சேபத்திற்குரிய பல காட்சிகள் நீக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட்டது. இது போன்ற சர்ச்சைகள் மீண்டும் எழாமல் இருக்க, "டிவியில் ஒளிபரப்புவதற்கு என, சென்சார் போர்டிடம் தனி சான்றிதழ் பெற வேண்டும் என்ற நடைமுறையை அமல்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் டிவி சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கும் சென்சார் அவசியம் என்று கட்டாயமாக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

லைப் ஆப் பைக்கு 'லைப்' கொடுத்த பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனம்

Bangalore Company Gives Life Life Pi

பெங்களூர்: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள லைப் ஆப் பை படத்திற்கு உயிர் கொடுத்ததே பெங்களூரைச் சேர்ந்த டெக்னிகலர் இந்தியா சாப்ட்வேர் என்ற கம்பெனி தான்.

ஆஸ்கர் விருதுக்கு சிறந்த அனிமேஷன் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களில் புதுவையில் எடுத்த லைப் ஆப் பை மற்றும் ப்ரொமிதியஸ் ஆகிய படங்கள் அடக்கம். இந்த இரண்டு படங்களுக்குமே பெங்களூரைச் சேர்ந்த டெக்னிகலர் இந்தியா என்ற நிறுவனம் தான் அனிமேஷன் செய்து கொடுத்துள்ளது. இதன் மூலம் உலக அரங்கில் இந்திய தொழில்நுட்பத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இது குறித்து டெக்னிகலர் இந்தியாவின் தேசிய தலைவர் பிரென் கோஷ் கூறுகையில்,

ப்ரொமிதியஸ் படத்தில் 400 ஷாட்கள் எடுக்க நாங்கள் உதவினோம். லைப் ஆப் பையில் உள்ள 960 ஷாட்களில் 130 ஷாட்கள் எடுக்க எங்கள் குழு உதவியது என்றார்.

முன்னதாக டெக்னிகலர் நிறுவனம் ஹாலிவுட் வெற்றிப்படங்களான பைரேட்ஸ் ஆப் தி கரிபியன், ஹாரி பாட்டர் அன்ட் தி டெத்லி ஹாலோஸ், குங் ஃபூ பாண்டா, தி பென்குவீன்ஸ் ஆப் மடகாஸ்கர் என்னும் சீரியல் ஆகியவற்றுக்கு அனிமேஷன் செய்து கொடுத்துள்ளது.

லைப் ஆப் பை, ப்ரொமிதியஸில் ஏதாவது ஒரு படத்திற்கு விருது கிடைத்துவிட்டால் இந்திய அனிமேஷன் கம்பெனிகளுக்கு வாய்ப்புகள் வந்து குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒவ்வொரு 8 மாசத்துக்கும் ஒன்னு: இது 'தல' கணக்கு

One Movie Every 8 Month Ajith Kumar

சென்னை: 8 மாதத்திற்குள் ஒரு படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு அடுத்த படத்திற்கு செல்ல வேண்டும் என்பது அஜீத் குமாரின் கணக்கு.

இது குறித்து அஜீத் குமார் கூறுகையில்,

ஒவ்வொரு 8 மாதத்திற்கும் ஒரு படத்தை முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறேன். விருதுகள் வாங்கி குவிப்பதில் முனைப்பாக இல்லை. ரசிகர்களின் பாராட்டுகள் கிடைத்தாலே போதும் என்றார்.

மங்காத்தா படத்தில் இருந்து அவர் இந்த கணக்கை பின்பற்றுகிறார். ஆனால் மங்காத்தாவில் நடித்துக் கொண்டே பில்லா 2விலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படமும் முடியும் தருவாயில் உள்ளது. அதை முடித்த கையோடு சிறுத்தை இயக்குனர் சிவாவின் படத்தில் நடிக்கிறார். விஷ்ணுவர்தன் படத்தில் அஜீத் ஹேக்கராக நடிப்பதால் அதற்கு வலை என்று பெயர் வைக்கிறார்கள் என்று நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

 

லொள்ளுசபா டீமின் 'மாப்பிள்ளை விநாயகர்': ‘முந்தானை முடிச்சு’ பார்ட் 2

Lollu Sabha Teem Together Mappillai Vinayakar

முந்தானை முடிச்சு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் விஜய் டிவி லொள்ளுசபா புகழ் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கு மாப்பிள்ளை விநாயகர் என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

நடிகர் பாக்யராஜ்-ஊர்வசி நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘முந்தானை முடிச்சு'. இந்த படத்தை பாக்யராஜ் இயக்கியிருந்தார். இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் பயங்கர ஹிட்டாகின. இப்படத்தில் வரும் முருங்கைக்காய் சமாச்சாரம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இந்த படத்திற்கு பிறகு முருங்கைக்காய் விற்பனை அதிகரித்தது வேறு சமாச்சாரம். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்த படத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஜீவா கதாநாயகன் ஆகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மி கவுதம் நடிக்கிறார்.

இந்த படத்தில் முதல் பகுதியில் நடித்த பாக்யராஜ், ஊர்வசி இருவரும் ஜீவாவின் பெற்றோர்களாக நடிக்கிறார்கள். மேலும் பாண்டியராஜன், சந்தானம் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.இவர்களைத் தவிர எப்.எம். பாலாஜி, மனோபாலா, சிங்கமுத்து போன்ற காமெடிநாயகர்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

மொத்தத்தில் இது முந்தானை முடிச்சு பார்ட் 2 காமெடி பட்டாசாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு ‘மாப்பிள்ளை விநாயகர்' என்று பெயரிட்டிருக்கிறார்கள். படப்பிடிப்பு காரைக்குடியில் நடக்கிறது. ‘டூ' படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன் இயக்குகிறார். அபிஷேக் இசையமைக்கிறார்.

ஏற்கனவே சந்தானம், பவர்ஸ்டார் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பாக்கியராஜ் படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது. பிரச்சினையும் ஏற்பட்டது. இப்போது பாக்கியராஜ் நடித்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது அதில் பாக்கியராஜூடன் சந்தானம் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தகம் - பட விமர்சனம்

Puthagam Review   

நடிகர்கள்: சத்யா, ராகுல் ப்ரீத், சஞ்சய் பாரதி, சுரேஷ்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
மக்கள் தொடர்பு: நிகில்
தயாரிப்பு: வி ராமதாஸ்
இயக்கம்: விஜய் ஆதிராஜ்

நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா, இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் ஹீரோக்களாக அறிமுகமாகியுள்ள படம் புத்தகம். சீரியல் நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கியுள்ளார். புதுமுகம் ராகுல் ப்ரீத் ஹீரோயின்.

எம்ஜி ஆர் காலத்துக் கதை. காதலிக்காக சத்யசோதனை புத்தகத்தை லைப்ரரியில் எடுத்துவருகிறார் சத்யா. அதில் இருக்கும் ஒரு சீட்டில் ஒரு கல்லறையில் பெரும் பணம் புதைத்துவைக்கப்பட்டிருப்பதாகக் குறித்துவைக்கப்பட்டுள்ளது.

அதை நண்பர்களுடன் தேடிப் போய் எடுத்துவிடுகிறார் ஹீரோ. ஆனால் அந்தப் பணத்துக்கு சொந்தக்காரர் ஒரு அமைச்சர். எப்படியாவது பணத்தைக் கைப்பற்ற அடியாட்களுடன் திட்டம் போடுகிறார். பணம் யாருக்குக் கிடைத்தது என்பது க்ளைமாக்ஸ்.

பழைய கதை என்றாலும் கொஞ்சம் முயன்றிருந்தால் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கலாம். ஆனால் பழக்க தோஷத்தில் ரொம்பவே சீரியல்தனமாக்கிவிட்டார் விஜய் ஆதிராஜ்.

ஆர்யா தம்பியின் நடிப்பைப் பற்றி எழுத அவர் இன்னும் இரண்டு படங்களாவது நடிக்க வேண்டும். சஞ்சய் பாரதியும், ஹீரோயின் ராகுல் ப்ரீத்தும் பரவாயில்லை.

மனோபாலா இப்போது கிட்டத்தட்ட செட் ப்ராபர்ட்டி மாதிரி ஆகிவிட்டார். சுரேஷ் போலவே அவர் நடிப்பும் ரொம்ப பழசு. ஜேம்ஸ் வசந்தன் வழக்கம்போல சொதப்பியிருக்கிறார்.

நடிகராக தேறாமல் போன விஜய் ஆதிராஜ், இயக்குநராக பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார்!

-எஸ்எஸ்

 

சரவணன் அக்காவுக்கு கல்யாணம் ஆயிருச்சுப்பா!

Saravanan Meenakshi 2hrs Special Program

ஒருவழியா கல்யாணம் நடக்குமோ நடக்காதோ என்று நினைத்து சஸ்பென்ஸ் கூட்டிய சரவணன் அக்காவின் சவுந்தர்யாவின் திருமணம் நேற்று ஒருவழியாக முடிந்து விட்டது.

சரவணன் மீனாட்சி திருமணமே பரபரப்பான திருப்பங்களுடன் நடந்து முடிந்து தினம் ஒரு சண்டை, அப்புறம் அசத்தலான சமாதானம் என போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சரவணன் அக்காவிற்கும் மீனாட்சியின் அண்ணனிற்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்குமோ நடக்காதோ என்று இருந்து ஒருவழியாக எல்லோரும் சந்தோசப்படும் படியாக நடந்துவிட்டது.

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக பல சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினார்கள். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டு மணிநேர சிறப்பு காட்சிகள் நேற்று ஒளிபரப்பானது. என்னதான் அதுல நடந்துச்சு நீங்களும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கீங்களா?

சரவணன் மீனாட்சிக்கு கல்யாணம்

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பெண் மீனாட்சிக்கும், சென்னையில் எப்.எம் ரேடியோவில் ஆர்.ஜே வாக வேலை பார்க்கும் சரவணனுக்கு பல மோதலுக்கும் பின் பிரம்மாண்டமாக கல்யாணம் நடந்தது.

திடீர் காதலுக்கு எதிர்ப்பு

சரவணன் அக்கா சவுந்தர்யா ஏற்கனவே விவாகரத்து பெற்று வீட்டில் இருக்கிறார். இவருக்கும் மீனாட்சியின் அண்ணன் தமிழ் மீது காதல் ஏற்படவே சரவணன் உட்பட குடும்பத்தினர் பலரும் எதிர்க்கின்றனர். இடையில் ஒருவழியாக சமாதானமாகி தமிழ் - சவுந்தர்யா திருமணம் நிச்சயமாகிறது.

இந்த ஜோடிக்கும் சண்டை

திடீரென்று பணப்பிரச்சினையில் சிக்கி கொள்வதால் திருமணத்தை தள்ளிப் போட நினைக்கின்றனர் தமிழ் குடும்பத்தினர். இந்த சூழ்நிலையில் தமிழ் - சவுந்தர்யா இடையே சண்டை ஏற்படவே இந்த ஜோடி முறைத்துக் கொள்கிறது. எல்லோரும் எதிர்க்கும் போது தமிழை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்த சவுந்தர்யா, குடும்பத்தினர் ஆதரவு கிடைத்த போது திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறாள்.

ஓடிப்போன சவுந்தர்யா

திருமணத்திற்கு முதல்நாள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு ஓடிப்போக முடிவு செய்கிறாள். அப்போது தமிழ் அதை பார்க்கவே சவுந்தர்யா விரும்பும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறான். ஆனால் சவுந்தர்யாவை வரச்சொன்ன பிரகாஷ் வராமல் போகவே ஏமாற்றமடைகிறாள் சவுந்தர்யா.

இன்னும் லவ் பண்றேன்

உடனே அவளைப் பார்த்த தமிழ் இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. நீ விரும்பினால் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன். இன்னும் நான் உன்னைய காதலிக்கிறேன். இனியும் காதலிப்பேன் என்று கூறி அவளை வீட்டுக்கு அழைத்து வருகிறான். ஒருவழியாக இருவீட்டார் சம்மதத்தோட சவுந்தர்யாவின் கழுத்தில் தாலி கட்டிவிட்டார் தமிழ்.

அடுத்து என்ன நடக்கும்?

இந்த இரு ஜோடிகளின் திருமணம் பரபரப்பாக இருந்தது. அதுவும் சுபமாக முடிந்துவிட்டது. இனி போகும் வாரங்களில் கதையை எப்படி நகர்த்தப் போகிறாரோ இயக்குநர் பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

நான் தண்ணியடிச்சா அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்

If I Consume Liquor Then The Movie Is Hit Trisha   

சென்னை: தான் மது அருந்துவது போன்ற காட்சி இடம்பெற்றால் அந்த படம் கண்டிப்பாக ஹிட் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

சமர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் படத்தின் ஹீரோ விஷால், ஹீரோயின் த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படத்தில் த்ரிஷா மது அருந்தும் காட்சி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு த்ரிஷா கூறுகையில்,

நான் மது அருந்தும் காட்சி இருந்தால் அந்த படம் ஹிட்டாகிறது என்று பலர் என்னிடம் கூறினர். அதை நான் இயக்குனர் திருவிடம் தெரிவித்தேன். அதன் பிறகு தான் சமர் படத்தில் நான் மது அருந்தும் காட்சி வைத்தனர். அந்த காட்சியில் நடித்ததில் எனக்கு கஷ்டமாகவே இல்லை. ஏன் என்றால் அந்த காட்சியில் நான் மது அல்ல பெப்சி தானே குடித்தேன் என்றார்.

உடனே செய்தியாளர்கள் மாடர்ன் பெண்கள் மது அருந்துவது சரியா, தவறா என்று கேட்டதற்கு அவர், அது அவரவர் இஷ்டம். அதில் நாம் தலையிடக் கூடாது என்றார்.

அப்ப மங்காத்தா ஹிட்டானதற்கு த்ரிஷா தண்ணியடிச்ச சீன் தான் காரணமா?