ஏர்போர்ட் அதிகாரிகளுடன் நடிகை சோனா வாக்குவாதம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரெடிமேட் துணிகளுக்கு சுங்கத் தீர்வை செலுத்துவது தொடர்பாக, விமான நிலைய அதிகாரிகளுடன் நடிகை சோனா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தாய் ஏர்லைன்ஸ் விமானம் பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள், தீவிர சோதனை நடத்தினர். அந்த விமானத்தில் பிரபல நடிகை சோனாவும் வந்தார். அவரது உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதித்தபோது அதில் ஏராளமான ரெடிமேட் துணிகள் இருந்தன. அதிகாரிகள் அதற்கு சுங்கத் தீர்வை செலுத்த வேண்டும் என்றனர். ஆனால் நடிகை சோனா, ''நான் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு உட்பட்டுத்தான் பொருட்கள் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் எப்படி எனக்கு வரி போடுவீர்கள்'' என்று வாக்குவாதம் செய்தார்.

ஆனால் சுங்க அதிகாரிகள், ''நீங்கள் கொண்டு வந்துள்ள ஆடைகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை வரி செலுத்த வேண்டும்'' என்றனர். இதனால் சோனாவுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் நீண்ட நேரம் கடும் வாக்குவாதம் நடந்தது. பின்னர் நடிகை சோனா, ''என்னிடம் சுங்கத் தீர்வை செலுத்துவதற்கான பணம் இல்லை. எனது உடைமைகளை இங்கேயே விட்டுச் செல்கிறேன். நாளை என் உதவியாளர் யாரையாவது அனுப்பி சுங்கத் தீர்வை செலுத்திவிட்டு பெற்றுக் கொள்கிறேன்'' என்று கோபமாக கூறிவிட்டு சென்றார்.


 

ஷங்கரின் புது டீம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இயக்குனர் ஷங்கருக்கு சுஜாதாவின் வசனம் என்றால் மிக ப்ரியம். தற்போது அவர் மறைவிற்கு பிறகு, நண்பன் படத்தில் தானே வசனகர்த்தா ஆகிய ஷங்கர் தன்னுடன் கார்கியும் சேர்த்து கொண்டார். இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் சுபா வசனகர்த்தாவுடன் விரைவில் இணைய உள்ளார். சுபா என்பவர்கள் ஒருவர் அல்ல இருவர். சு-சுரேஷ், பா-பாலகிருஷ்ணன் இதன் சுருக்கமே சுபா. இவர்கள் இருவரும், இயக்குனர் கே.வி,ஆனந்திடம் திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றி வருகின்றனர். கனா கண்டேன், அயன், கோ போன்ற படங்களே சுபாவின் சிறந்து சான்றுகள். இவர்களது உழைப்பு ஷங்கருக்கு பிடித்துப்போக அடுத்தப் படத்தில் நாம் இணைந்து பண்ணலாம் என்று ஷங்கர் கூறியிருக்கிறார்.


 

கதை விவாதத்தில் கே.வி ஆனந்த்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினி உடல்நிலை சரியான பிறகு நடிக்க இருக்கும் படம் 'கோச்சடையான்'. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரஜினியுடன் தீபிகா படுகோன், சரத்குமார்,ஷோபனா, நாசர், ருக்மணி, ஆதி, ஜாக்கி ஷெரஃப் மற்றும் பலர்  ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மாற்றான் படத்தை இயக்கியபடி, ரஜினியை வைத்து இயக்கும் படத்துக்கான கதை விவாதத்திலும் பங்கேற்று வருகிறார் கே.வி ஆனந்த்.