அசினின் 'கிலாடி'யை மூலையில் உட்கார வைத்த 'தலாஷ்'

box office khiladi 786 fails impress talaash   
மும்பை: நடிகை அசின், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் நடித்த கிலாடி 786 படத்தின் வசூல் ஆமீர் கானின் தலாஷ் படத்தால் வெகுவாகக் குறைந்துள்ளது.

அசின் எந்த நேரத்தில் பாலிவுட் போனாரோ தெரியவில்லை. அங்கு சென்றதில் இருந்தே ஒரே போராட்டமாகத் தான் உள்ளது. கஜினி சூப்பர் ஹிட்டானாலும் அது ஆமிர் கானுக்காகவும், முருகதாஸின் கதைக்காகவும் ஓடியது. அதையடுத்து அவர் சல்மான் கானுடன் நடித்த லண்டன் ட்ரீம்ஸ் புஸ்ஸானது. தொடர்ந்து அவரும், சல்மானும் நடித்த ரெடி ஓடியது. ஆனால் அதற்கு சல்லு தான் காரணம்.

இதையடுத்து ஆசின் நடித்த ஹவுஸ்ஃபுல் 2, போல் பச்சன் ஆகிய படங்கள் வசூலை அள்ளினாலும் அதில் பெரிய பட்டாளமே நடித்ததால் படம் என்னால் தான் ஓடியது என்று அசினால் சொல்ல முடியாமல் போனது. இதையடுத்து சோலோ ஹீரோயினாக அவர் அக்ஷய் குமாருடன் சேர்ந்து நடித்த கிலாடி 786 ரிலீஸான வார இறுதியில் ரூ.34 கோடி வசூலை அள்ளியது.

அடடா படம் நல்லா போகுதே என்று நினைக்கையில் ஆமீர் கானின் தலாஷ் வெளியாகி கிலாடியை மூலையில் உட்கார வைத்துவிட்டு வசூலில் சாதனை படைத்து வருகிறது. தலாஷ் ரிலீஸான 10 நாட்களில் ரூ.74.47 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் கிலாடியில் எப்படியும் பெரிய பெயர் வாங்கிவிடலாம் என்று நினைத்த அசினின் நினைப்பில் மண் விழுந்துள்ளது.

இதற்கிடையே நான் பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின் என்று அவ்வப்போது மறக்காமல் குறிப்பிடும் அசினின் பேச்சைக் கேட்கத் தான் ஆளில்லை.

 

பிறந்த நாள் நெருங்கும் வேளையில் சோகம்... ரஜினியின் நெருங்கிய நண்பர் காந்தி மரணம்!

Rajini Upsets Over His Friend S Death

சென்னை: இந்த நூற்றாண்டின் வெகு அரிதான 12.12.12 தேதியில் பிறந்த நாள் கொண்டாடுர் சூப்பர் ஸ்டார் ரஜினி, அந்த அனுபவத்தை மகிழ்ச்சியை முழுமையாகக் கொண்டாடக்கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான காந்தி இன்று திடீர் மரணம் அடைந்துவிட்டார்.

சென்னை ஏஜி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார் காந்தி.

ராஜ்பகதூர், நட்ராஜ், விட்டல் போன்ற நெருக்கமான நட்பு வட்டத்தில் ஒருவராக இருந்த காந்தியுடன், பெங்களூரில் பயணிப்பது ரஜினிக்குப் பிடித்த விஷயமாம்.

காந்தியின் மரணத்தால் மிகவும் வேதனைக்குள்ளாகியுள்ள ரஜினி, எதிலும் ஆர்வம் காட்டாமல் மௌனமாக இருந்து வருகிறாராம்.

 

கருப்பை கேன்சர்: மனீஷா கொய்ராலாவுக்கு ஆபரேஷன் முடிந்தது

மும்பை: பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு கருப்பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்று அவரது மேனேஜர் சுப்ரதோ கோஷ் தெரிவித்துள்ளார்.

manisha koirala cancer surgery successful
பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற நியூயார்க் சென்றார். நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை நடந்தது.

இது குறித்து அவரது மேனேஜர் சுப்ரதோ கோஷ் கூறுகையில்,

நேற்று காலை 9 மணிக்கு மனீஷாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது என்று அவரது குடும்பத்தினரிடம் இருந்து தகவல் கிடைத்தது. மனீஷாவுடன் அவரது தாய், தந்தை மற்றும் சகோதரர் உள்ளனர். அவரது நெருங்கிய தோழியும் அவருக்கு துணையாக மருத்துவமனையில் உள்ளார் என்றார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த மனீஷா ராம் கோபால் வர்மாவின் பூட் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கற்பழிப்பு வழக்கு: மன்சூர் அலிகானுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தர கோர்ட் உத்தரவு

Rape Case Hc Orders Woman Pay Rs 5

சென்னை: தன்னை கற்பழித்துவிட்டதாக பொய் புகார் கொடுத்த பெண், நடிகர் மன்சூர் அலிகானுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான், மயக்க மருந்து கொடுத்த கற்பழித்துவிட்டதாகவும், இதனால் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி வடபழனியை சேர்ந்த சினேகா சர்மா என்ற பெண் கடந்த 1998 ஆம் ஆண்டு கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து செசன்சு கோர்ட்டு 27.3.2001 அன்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் சிநேகா சர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ‘செசன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ததோடு. கீழ் நீதிமன்றம் விதித்த ரூ.3 லட்சம் அபராத தொகையை சினேகா சர்மாவுக்கு வழங்க வேண்டும் என்றும், அவரது மகளுக்கு தனியாக ரூ.7 லட்சம் வழங்க வேண்டும்' என்றும் தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த அப்பீல் மனு 25.2.2008 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சினேகா சர்மாவை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்று அவரது கணவர் சிவ் சுரேஷ் மிஸ்ரா என்பவர் சென்னை குடும்பநல கோர்ட்டில் 1995-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

அதில், சிவ்சுரேஷ் மிஸ்ராவுடன் சினேகா சர்மாவுக்கு 24.8.1994 அன்று திருமணம் நடந்திருப்பதையும், அவருடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டிருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் மன்சூர் அலிகான் தன்னை கற்பழித்து விட்டதாகவும், அதற்கு முன்பு அவர் வேறு யாருடனும் செக்ஸ் உறவு வைக்க வில்லை என்றும் கோர்ட்டில் சாட்சியம் அளித்துள்ளார்.

இதனையடுத்து தன் மீதான பொய் புகார் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுதாக்கல் செய்தார். அதில்,

சமுதாயத்தில் எனக்கு இருந்த நற்பெயரை சீரழிக்க வேண்டும் என்பதற்காக சினேகா சர்மா இப்படி ஒரு கற்பழிப்பு பொய் புகாரை எனக்கு எதிராக கொடுத்துள்ளார். இதனால் நான் எந்த தவறையும் செய்யாமல், ஜெயில் தண்டனை அனுபவித்துள்ளேன். சமுதாயத்தில் மட்டுமல்லாமல், என் குடும்பத்தினர் மத்தியிலும் எனக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. என் நடிப்பு தொழிலும் பெரிதும் பாதிக்கப்பட்டது. என்னுடைய நற்பெயரை கெடுத்தது, என் குடும்பத்தின் சந்தோஷத்தை கெடுத்தது, மனஉளைச்சல் ஆகியவைக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க சினேகா சர்மாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ரூ 50 லட்சம் இழப்பீடு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.மதிவாணன் தனது தீர்ப்பில் கூறியதாவது:

மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி, சினேகா சர்மாவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் கோர்ட்டுக்கு நேரில் ஆஜராகவோ அல்லது வக்கீல் மூலம் தன் கருத்தை தெரிவிக்கவோ இல்லை. எனவே மனுதாரரின் வாதம், அதற்கான சாட்சி ஆகியவைகளை பரிசீலித்தபோது, மன்சூர் அலிகான் இந்த வழக்கில் கோரியுள்ள கோரிக்கையை நிரூபித்துள்ளார். எனவே அவர் கோரியபடி, மன்சூர் அலிகானுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று சினேகா சர்மாவுக்கு உத்தரவிடுகிறேன் என்று தீர்ப்பளித்தார்.

 

விருதுகளுக்காக நான் சினிமா எடுப்பதில்லை - பாலா

I M Not Making Films Awards Says Bala

விருதுகளுக்காக நான் சினிமா எடுப்பதில்லை. ஆனால் வந்தால் மறுப்பதில்லை, என்று இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.

பாலாவின் இயக்கத்தில் அடுத்து வரும் படம் பரதேசி. முரளியின் மகன் அதர்வாதான் ஹீரோ.

படம் விரைவில் வெளியாக இருப்பதால், இதுவரை தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த பாலா, முக்கிய பத்திரிகைகளைத் தொடர்பு கொண்டு பேட்டிகள் அளிக்க ஆரம்பித்துள்ளார்.

அப்படி அளித்த ஒரு பேட்டியிலிருந்து...

அதர்வாவை இந்தப் படத்தில் நடிக்க வைக்க நான் கடமைப்பட்டவன். காரணம், நான் பள்ளியில் படித்தபோது எங்கள் ஊரில் முரளி நடித்த அதர்மம் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதைப் பார்க்க போனேன்.

பின்னாளில் சென்னை வந்து உதவி இயக்குனராக பணியாற்றியபோது முரளியை சந்தித்தேன். அவர் என்னை 15 தயாரிப்பாளர்களிடம் அழைத்துப்போய் படம் இயக்குவதற்கு சிபாரிசு செய்தார். அந்த நன்றிக்கடன் அவர் மகன் அதர்வாவை வைத்து இந்தப் படத்தை என்னை இயக்க வைத்துள்ளது.

எனது படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்காது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதை இந்த படம் மாற்றும்.

பரதேசியில் வன்முறை கிடையாது. இது வேறு ஒரு உலகம். நான் வளர்ந்த பின்னணி சமூகத்தில் இருண்ட பக்கங்களை மட்டுமே என்னை படமாக்க வைக்கிறதோ என்னமோ...

எனக்கு விருதுகள் இலக்கல்ல.. அதற்காக படம் எடுப்பதில்லை. ஆனால் விருது கிடைத்தால் சந்தோஷப்படுவேன்.

என்னை பலரும் சண்டைக்காரனாக, முரடனாகப் பார்க்கிறார்கள். அதில் எனக்கு கவலை எதுவுமில்லை. ஆனால் நிஜத்தில் நான் மிகவும் சாது. யாரிடமும் கோபப்படமாட்டேன்," என்றார்.

 

கர்ப்பிணிகள் தயக்கமின்றி எய்ட்ஸ் டெஸ்ட் எடுத்துக்கணும் - ஐஸ்வர்யா ராய்

Aishwarya Appeals Pregnant Women Un   

வதோத்ரா: கர்ப்பிணிகள் தயக்கமின்றி எச்ஐவி டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

ஐ.நா. எய்ட்ஸ் சர்வதேச நல்லெண்ண தூதராக பதவி வகிக்கும் அவர் குஜராத் வதோத்ராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "இனி நடிப்பைத் தாண்டி பல பணிகளிலும் ஈடுபடப் போகிறேன்.

எச்.ஐ.வி. வைரஸ் மற்றும் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்துவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்யப் போகிறேன். கர்ப்பிணிகள் தயக்கத்தை விட்டு விட்டு எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களது குழந்தைகள் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்," என்றார்.

தனது சினிமா எதிர்காலம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஐஸ்வர்யா, "இன்னும் அதுகுறித்து முடிவு செய்யவில்லை. இப்போதைக்கு ஒரு வயதான என் மகள் ஆராத்யாவை நல்ல முறையில் வளர்க்க வேண்டும்," என்றார்.

அப்படீன்னா.. அடுத்த வருஷம் ஐஸ்வர்யா அரிதாரத்துக்கு ரெடின்னு அர்த்தம்!

 

லோக்சபா தேர்தலில் போட்டியிடாதே: மனைவி ஜெயாவுக்கு ஆர்டர் போட்ட அமிதாப் பச்சன்

Amitabh Bachchan Doesnt Want Wife Contest

மும்பை: அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயா பச்சனை இனிமேல் லோக்சபா தேர்தலில் போட்டியிடவேக் கூடாது என்று கூறிவிட்டார். அதன்படி இனி ஜெயா பச்சன் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டாராம்.

இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யான ஜெயா பச்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இனி லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று எனது கணவர் அமிதாப் பச்சன் கேட்டுக் கொண்டார். அதனால் நான் இனி லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளால் தான் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு இந்தியாவுக்குள் நுழைந்தது என்று கூறுகிறார்கள்.

இந்த விவகாரத்தை ராஜ்யசபாவில் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரித்தபோது எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது சமாஜ்வாடி கட்சி தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதனால் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் ஒன்று தான் என்று சொல்வது தவறு என்றார்.

 

ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் தேவையா? 'நீயா நானா'வில் விவாதம்

Neeya Naana Discussion About English

ஆங்கிலம் என்பது அந்நிய மொழிதான். ஆனால் அதுதான் இன்றைக்கு இந்தியாவில் பெரும்பாலோனரை ஆட்டிப்படைக்கிறது. ஆங்கில வழிக்கல்வியில் படிக்கவைப்பதற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்கக் கூட தயாராக இருக்கின்றனர் இன்றைய பெற்றோர்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் அது ஒரு மொழிதான் அதற்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் தேவையில்லை என்று மற்றொரு தரப்பினர் கருதுகின்றனர். இது பற்றி விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் நேற்றைய தினம் விவாதிக்கப்பட்டது.

ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான். அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை என்கின்றனர் ஒரு தரப்பினர். ஆங்கிலம் சரளமாக பேசத்தெரிந்துவிட்டலே அலட்டலும், அகம்பாவமும், போலித்தனங்களும் அதிகரித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர் ஒரு சாரார்.

ஆனால் ஆங்கிலம் பேசுவதன் மூலம் எனக்கு தன்னம்பிக்கை தருகிறது என்கின்றனர் ஒருசாரார். வெளிநாடு கூட தனியாக சென்று ஜெயிக்க முடியும் என்கின்றனர் அவர்கள். நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடியும். மற்றவர்களை விட தனித்துவம் கிடைக்கிறது என்கின்றனர். முன்னேற்றம் ஏற்படுகிறது என்கின்றனர் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று கூறுகின்றனர். தன்னை மிகப்பெரிய போராளியாக மாற்றியிருக்கிறது ஆங்கிலம் என்றார் ஒருவர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற நாவல் எழுத்தாளர் திரு பி.ஏ. கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் நிர்மல் செல்வமணி ஆகிய இருவரும் தமிழ்நாட்டில் ஆங்கிலத்திற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தனர். இது தேவையில்லை என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் ஆங்கிலம் அதிகமாக பயன்படுத்தப்படுவது ஒரு வியாதி என்று கூறினார் திரு கிருஷ்ணன். சிறு வயது முதலேஆங்கில வழிக் கல்வியை பயிற்றுவிப்பதன் மூலம் குழந்தைகளின் மனதில் ஒரு துன்புறுத்தல் ஏற்படுகிறது என்கிறார். நம் குழந்தைகளை 8ம் வகுப்பு வரையாவது தாய்மொழியில் படிக்க அனுப்பவேண்டும். அதன்பின்னர் அவர்களை ஆங்கிலம் கற்றுக்கொள்ளச் செய்யலாம். இதன் மூலம் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படும் என்றும் அறிவுறுத்தினார். சைனாவிலோ, ஜப்பானிலோ ஆங்கிலம் படிப்பவர்கள் குறைவு. அவர்கள் தாய்மொழிக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். நம்முடைய மொழியை வளர்க்க நாம்தான் முயற்சி செய்யவேண்டும் என்று கூறினார்.

ஆங்கிலத்தைக் காட்டிலும் நம்முடைய சொந்த மொழியில் எதையும் சிறப்பாக செய்யமுடியும் என்றார் திரு நிர்மல் செல்வமணி. நம் தாய்மொழியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொண்டால் ஆங்கிலவழிக் கல்விக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள் என்றும் கூறினார் அவர்.

இன்றைக்கு ஏழ்மையான சூழலில் வாழ்க்கை நடத்தும் மக்கள் முதல் பணக்கார வாழ்க்கை வாழும் மக்கள் வரை அனைவரும் ஆங்கில மோகத்தில் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதன் காரணமாகவே எவ்வளவு பணம் செலவழித்தாவது தங்கள் மகனை எல்.கே.ஜியில் தொடங்கி உயர்கல்வி வரை ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்த்துவிடுகின்றனர். இந்த சூழ்நிலையில் இதுபோன்ற விவாத நிகழ்ச்சி ஆங்கில மொழியின் மீதான மோகத்தை சற்றே குறைக்க உதவும் என்கின்றனர் தாய்மொழியை போற்றுபவர்கள்.

 

ஷங்கர் என் தம்பி, சிம்பு என் தம்பி... - பவர் ஸ்டார் கலகல!!

Power Star S Thambis Shankar Simbu

ஷங்கர் என் தம்பி, சிம்பு என் தம்பி... இப்படி இன்னும் நிறைய தம்பிகள் உருவாகி வருகின்றனர் என்றார் பவர் ஸ்டார் எனப்படும் சீனிவாசன்.

சந்தானம் முதன்முறையாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தை இயக்குனர் ராம நாராயணனுடன் இணைந்து தயாரித்து ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

அவருடன் பவர் ஸ்டார் சீனிவாசனும், புதுமுகம் சேதுவும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று தேவி திரையரங்கில் நடைபெற்றது.

சந்தானம் முதன்முறையாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தை இயக்குனர் ராமநாராயணனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் சந்தானத்துடன் பவர் ஸ்டார் சீனிவாசனும், புதுமுகம் சேதுவும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று தேவி திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் ஷங்கர் நடிகர் சிம்பு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சாதாரண நிகழ்ச்சியாக ஆரம்பித்த இந்த இசை வெளியீடு, பவர் ஸ்டார் மற்றும் அவரது ரசிகர்களால் பரபரப்பாகிவிட்டது.

அவர் பேரை யார் உச்சரித்தாலும் திரையரங்கில் ஒரே விசில் சத்தமும், கைதட்டலுமாக அரங்கம் அதிர்ந்தது.

சீனிவாசன் (அதாங்க பவர் ஸ்டார்) பேசுகையில், அனைவருக்கும் இந்த லட்டு திகட்டாத லட்டாக இருக்கும். அந்தளவுக்கு எல்லோரும் சந்தோஷமாக நடித்திருக்கிறோம்.

திரையுலகில் நான் மீண்டும் முத்திரை பதிக்க வாய்ப்பளித்த அருமை தம்பி சந்தானத்துக்கு ரொம்ப நன்றி. இந்தப் படத்தில் நான்தான் நடிக்க வேண்டும் என்று தம்பி அன்புக் கட்டளையின் பேரில் நடித்திருக்கிறேன்.

தயாரிப்பாளர் ராமநாரயாணன் என்னை அழைத்து என்னிடம் ஒப்பந்தம் போட அவ்வளவு தயக்கம் காட்டினார். ஒரு அரைமணி பேச்சுவார்த்தைக்கு பின் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார்.

அதன்பிறகு என் அன்பு, ஆசை, அருமைத் தம்பி சங்கர் சாரை நான் ரொம்ப பாராட்ட வேண்டும். அவருடைய ‘ஐ' படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இது கனவா? நனவா? என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் உண்மையிலேயே நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

ஒரு முறையாவது நான் அவருடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் என் தம்பி ஷங்கர் அவர்கள், "அண்ணே நான் உங்களுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும். நான் உங்களுடைய ரசிகன்" என்று சொன்னவுடன், உண்மையிலேயே நான் பிறவிப் பலனை அடைந்துவிட்டேன்.

அதேபோல், இன்னொரு தம்பி சிம்பு அவர்கள் என்னுடன் இப்படத்தில் நடிக்கிறார். எனக்கு இந்த படத்தின் மூலம் நிறைய தம்பிமார்கள் கிடைத்துள்ளார்கள், என்றார்.

சந்தானம் தனது பேச்சில் முடிந்தவரை சீனிவாசனை வார, வழக்கம்போல அது சீனிவாசனுக்கே சாதகமாக முடிந்தது.

 

ஒரு சேனல் விடாமல் ஓடி ஓடி பேட்டி கொடுக்கும் ‘நீர்பறவை’ டீம்

Neerparavai Couples Celebrate Tv Ch

எந்த சேனல் திருப்பினாலும் இப்போது நீர்ப்பறவை குழுவினரின் பேட்டியாகவோ, அல்லது அந்த படத்தின் நடிகர்கள் பங்கேற்றும் போட்டியோதான் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

சன் டிவியில் விருந்தினர் பக்கத்தில் கடந்த வாரம் தொடங்கி இந்த வாரம் வரை நீர்பறவை குழுவினர் ஒவ்வொருவராக வந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தொடங்கி, இசையமைப்பாளர் ரகுநந்தன் கதாநாயகி சுனைனா வரை வந்து தனித்தனியாக பேட்டி கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். இது போதாது என்று கடந்த வாரம் சிறப்புக் கொண்டாட்டம் வேறு சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். நேற்றைக்கு சிறப்பு விமர்ச்சனமும் நீர்பறவைதான்.

விஜய் டிவியில் பேட்டிகள் ஒரு பக்கம் இருந்தாலும் கேம் ஷோக்களிலும் கூட நீர்பறவை நடிகர்கள்தான் பங்கேற்கின்றனர். சனி இரவு ஒளிபரப்பாகும் ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியில் கதாநாயகன் விஷ்ணு, நாயகி சுனைனா பங்கேற்று விளையாடினார்கள்.

கலைஞர் டிவியில் கேட்கவே வேண்டாம். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள படம் என்பதால் எதற்கெடுத்தாலும் நீர்பறவை குழுவினரின் பேட்டிதான் இடம்பெறுகிறது.

சின்ன பட்ஜெட் படங்களுக்கு இதுபோன்ற ப்ரமோட் செய்வதற்கும், கைதூக்கி விடுவதற்கும் சேனல்கள் இருப்பதில்லை. அதே சமயம் பெரிய நிறுவனங்கள் இதனை வெளியிட்டால் போட்டி போட்டுக்கொண்டு படத்தை ப்ரமோட் செய்கின்றனர் என்று கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில்.

 

ரஜினி பிறந்த நாள் விழா இடம் மாற்றம்.. வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி மறுப்பு!

Rajini Birthday At Ymca Ground On Dec 13

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் 12.12.12 பிறந்த தின விழாவை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த அரசு அனுமதி மறுத்துவிட்டது.

எனவே இந்த விழாவை வரும் டிசம்பர் 13-ம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்துகிறார்கள் ரசிகர்கள்.

சென்னை மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நடக்கும் இந்த விழா முதலில் வள்ளுவர் கோட்டத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. எனவே மாற்று இடமாக ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தை மன்ற நிர்வாகிகள் கேட்டுப் பெற்றனர்.

விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக தொடர்ந்து நடந்து வருகின்றன. விழாவுக்கான அழைப்பிதழ் மற்றும் போஸ்டர்கள் ஏற்கெனவே சென்னையை அலங்கரிக்கத் தொடங்கிவிட்டன. நாளை முதல் நாளிதழ்களிலும் வெளியாக உள்ளன.

இத்தகவல்களை சென்னை மாவட்ட தலைமை மன்ற நிர்வாகிகள் என் ராமதாஸ், ஆர் சூர்யா, கே ரவி, சினோரா அசோக் மற்றும் சைதை ரவி ஆகியோர் தெரிவித்தனர்.

 

விஸ்வரூபத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இல்லாவிட்டால் 10000 பேருக்கு பிரியாணி- முஸ்லிம் லீக்

Viswaroopam Row Muslim League Accepts   

சென்னை: விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகக் காட்சிகள் இல்லாவிட்டால் 10000 ஏழை சகோதரர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்க தயார் என்று தேசிய முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.

விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, அப்படத்துக்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த கமல், படத்தை பார்த்த பிறகு மனம் மாறி என்னை சந்தேகப்பட்டதற்கு பிராயசித்தமாக பசித்த பிள்ளைகளுக்கு முஸ்லிம் சகோதரர்கள் பிரியாணி வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹிர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சகோதரர் கமலஹாசன் தயாரித்து நடித்து வெளிவரும் 'விஸ்வரூபம்' படத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் உள்ளதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்கள் இப்படத்தைப் பார்த்து மனம் மாறி தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதில் வருதப்படுவார்கள் என கூறியுள்ளார்.

'ஹேராம்' மற்றும் 'உன்னைப்போல் ஒருவன்' படம் வெளிவந்தபோதும் இப்படியே கூறினார். ஆனால் அத் திரைப்படங்களில் இஸ்லாமியர்களை காயப்படுத்தும் வகையில் வசனங்களும் காட்சிகளும் அமைந்திருந்தது. ஆனால் அச்சமயம் எங்களுக்குள் வலுவான ஒற்றுமை இல்லாததினால் பெரிய அளவில் எங்களின் எதிர்ப்புகளை காட்டவில்லை.

ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்துக்குள் மிகப் பெரிய வலுவான ஒற்றுமையும் உணர்வும் வந்திருப்பதால் முஸ்லிம்களை காயப்படுத்தும் வசனங்களோ, காட்சிகளோ எந்த திரைப்படத்தில் இடம் பெற்றாலும் அதை எதிர்க்க தயங்க மாட்டோம்.

'விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லாமல் இருந்தால் சகோதரர் கமலஹாசன் கூறுவதுபோல் அவர் முன்னிலையில் ஏழைகள் 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்க இந்திய தேசிய முஸ்லீம் லீக் தயாராக உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

வித்யாபாலன் - சித்தார்த் ராய் கபூர் திருமண சடங்குகள் ஆரம்பம்!

Vidhya Balan Sidhardh Marriage Customs Starts

பிரபல பாலிவுட் வித்யாபாலன் - சித்தார்த் ராய் கபூர் திருமணத்துக்கான முறையான சடங்குகள் நாளை தொடங்குகின்றன.

'டர்டிபிக்சர்' படத்தில் சில்க்ஸ்மிதா வேடத்தில் நடித்து தேசிய விருது வாங்கிய வித்யாபாலனும் யுடிவியின் சித்தார்த் ராய் கபூரும் காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதத்தோடு இருவருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது.

இருவருக்கும் வருகிற 14-ந் தேதி மும்பையில் திருமணம் நடக்கிறது. புரோகிதர்களை வைத்து தமிழ் முறைப்படி திருமணம் நடக்கிறது.

திருமண சடங்குகள் நாளை தொடங்குகின்றனர். முதலாவதாக மணப்பெண்ணுக்கு மருதாணியிடும் சங்கீத் வைபவம் நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பங்கேற்கிறார்கள். இதில் வித்யாபாலன் நடித்த படங்களில் இருந்து ஹிட் பாடல்களை தேர்வு செய்து இசைக்குழுவினர் பாடுகிறார்கள். வித்யாபாலன் நண்பர்களுடன் நடனம் ஆடுகிறார்.

முகூர்த்தம் எளிமையாக நடத்தப்படுகிறது. இதற்காக காஞ்சீபுரத்தில் இருந்து முகூர்த்த பட்டு புடவை வாங்கப்பட்டுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை டெல்லி மற்றும் சென்னையில் நடத்த வித்யாபாலன் திட்டமிட்டுள்ளார்.

 

ஹீரோக்களும் இப்படி கெளம்பிட்டாங்களே!!!

Shahid Kapoor Goes Under The Knifefor Sharper Nose

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தனது மூக்கை கூரானதாக ஆக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

பாலிவுட் நடிகைகள் தான் இத்தனை நாட்கள் ஏதாவது சிகிச்சை செய்து பெரிய திரையில் தாங்கள் ஜொலிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதற்குரிய சிகிச்சையையும் எடுத்தார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தனது மூக்கை கூர்மையாக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

ஷாஹித் கபூர் தான் நடிக்கும் புது படமொன்றில் கூரான மூக்கு இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். மருத்துவரும் ஷாஹித் விருப்பப்படி அறுவை சிகிச்சை செய்து அவரின் மூக்கை கூரானதாக ஆக்கினார்.

இதனால் தான் கடந்த 2 மாதங்களாக ஷாஹித் நிருபர்களின் கேமராக்களில் படாமல் எஸ்கேப் ஆகிக் கொண்டே இருந்தார். பாலிவுட்டில் நிலவும் கடும் போட்டியால் அறுவை சிகிச்சை செய்தாவது அழகாக நடிகர், நடிகைகள் தயங்குவதில்லை.

நம்ம ஊர் அசின் கூட பாலி்வுட் போன பிறகு அங்குள்ள நடிகைகள் மாதிரி இருக்க வேண்டும் என்று ஒல்லிக்குச்சியாக ஆகிவிட்டார். மூக்கை அறுவை சிகிச்சை மூலம் அழகாக்கிய தமிழ் நடிகை என்றால் நம் நினைவுக்கு வருபவர் ஸ்ரீதேவி தான்.

 

என் முதல் ரசிகை மனைவிதான்… 'மதுரை முத்து' எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

My Wife Is The First Fan Me Says Madurai Muthu

-ஜெயலட்சுமி சுப்பிரமணியன்

சின்னத்திரையில் ‘கலக்கப்போவது யாரு?' நிகழ்ச்சியின் மூலம் நுழைந்து பின்னர் ‘அசத்தப்போவது யாரு?'நிகழ்ச்சியில் நடுவர்களை மட்டுமல்லாது பார்வையாளர்களையும் அசத்திய முத்து இப்போது நகைச்சுவையில் தனக்கென்று இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் மதுரை முத்து.

சன் டிவியில் ஞாயிறு காலையில் காமெடி கலாட்டாவில் தேவதர்ஷினியுடன் இவர் செய்யும் கலாட்டா ரசிகர்களுக்கு சிறப்பு விருந்துதான். இதே பிரபலத்தோடு இப்போது சினிமாவிலும் தனி கவனம் செலுத்திவருகிறார் முத்து. இவர் நடித்த இரண்டு திரைப்படங்கள் இப்போது ரிலீசுக்கு தயாராக உள்ளன. இது தவிர மாதந்தோறும் 20 மேடைநிகழ்ச்சிகள் வேறு செய்கிறார். தன்னுடைய பிசியான காமெடி நிகழ்ச்சிக்கிடையே காலை நேரத்தில் அலைபேசி வழியாக அவர் நமக்களித்த பேட்டி.

காமெடியனாக வர வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

சிறுவயதில் இருந்தே நான் காமெடியாக பேசுவேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் அது அதிகமானது. விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு?' நிகழ்ச்சியின் மூலம் அது மெருகேற்றப்பட்டது. சன் டிவியின் அசத்தப்போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் என் நகைச்சுவை பிரபலமடைந்தது.

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு போவது பற்றி சொல்லுங்களேன்?

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் என்னுடைய நகைச்சுவையைப் பார்த்து ‘மதுரைவீரன்' படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து மிளகா படத்தில் நடித்தேன். ஆனால் அதில் படத்தின் நீளம் அதிகமானதால் நான் நடித்த காட்சிகள் வரவில்லை. இப்போது ஒருதலைக்காதல், காளையரும் கன்னியரும், அகிலன் ஆகிய படங்களில் தனியான நகைச்சுவை பாத்திரங்கள் கிடைத்துள்ளன. காளையரும் கன்னியரும் படத்தில் ஜோசியக்காரன் கதாபாத்திரம் பேசப்படும் விதமாக இருக்கும். அதேபோல் அகிலன் படத்திலும் நல்லதொரு கதாபாத்திரம் அமைந்துள்ளது.

மதுரையில் இன்னுமொரு காமெடி நடிகர் சினிமாவுக்கு கிடைத்துவிட்டார் என்று கூறலாமா?

சின்னத்திரையில் 7 ஆண்டுகாலம் அனுபவம் இருந்தாலும் திரை உலகில் இப்பொழுதுதான் அடி எடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. சினிமா உலகில் மதுரைக்காரன் என்ற பெயரை நிச்சயம் காப்பாற்றுவேன்.

உங்களுடைய வெளிநாட்டு அனுபவம் சொல்லுங்களேன்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி. அரசபட்டிதான் எனது சொந்த ஊர். நகைக்சுவை பேச்சிற்காக இதுவரை 38 நாடுகளுக்கு போயிருக்கிறேன். அமெரிக்கா, அரபுநாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளுக்கும் இதுவரை சென்று வந்திருக்கிறேன். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சேர்த்து இதுவரை நான் 5000 ஸ்டேஜ் ஷோ நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன்.

நீங்கள் வாங்கிய விருதுகளில் பெருமையானதாக நினைப்பது எது?

அமெரிக்கா, அரபு நாடுகளில் எனக்கு இதுவரை 5 விருது கொடுத்திருக்கின்றனர். திருநகர் நகைச்சுவை மன்றம் சார்பில் தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் கையால் ‘சின்னக் கலைவாணர் விருது' வாங்கியது மறக்க முடியாத அனுபவம். நகைச்சுவை சக்ரவர்த்தி, காமெடிகிங் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியிருக்கிறேன்.

உங்க வீட்டில் இருப்பவர்கள் உங்களின் நகைச்சுவையை ரசிப்பார்களா?

எங்க வீட்டில் இருப்பவங்கதான் என்னுடைய முதல் ரசிகர்கள். எனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. மனைவி லேகா மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். என்னுடைய நகைச்சுவையை அதிகம் ரசிப்பது என் மனைவிதான். அவருக்கு பிடித்தமாதிரி இருந்தால்தான் நான் பேசுவேன் என்று கூறிவிட்டு நான் சொன்னது சரிதானே என்பது போல மனைவியிடம் கேட்டுக்கொண்டார் முத்து.

மதுரையில் இருந்து சினிமாவிற்கு வந்த நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, விவேக் ஆகியோரின் வரிசையில் முத்துவும் இடம்பெற வாழ்த்துக்களை கூறி விடைபெற்றோம்.

 

சன் டிவியில் ரஜினி பிறந்தநாளுக்கு படையப்பா சிறப்புத் திரைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி சன் டிவியின் மாலை 6 மணிக்கு ரஜினிகாந்த் நடித்த படையப்பா ஒளிபரப்பாகிறது.

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு எப்.எம் ரேடியோக்களில் ரஜினி நடித்த திரைப்படங்களில் இருந்து பாடல்கள் ஒளிபரப்புவார்கள். இசைத் தொலைக்காட்சிகளில் நாளைய தினம் பெரும்பாலும் ரஜினிகாந்த் நடித்த படங்களின் பாடல்கள்தான் வரிசைகட்டி நிற்கும். இந்த வரிசையில் இப்போது சன் டிவியும் சேர்ந்துள்ளது.

sun tv celebrates rajini s birthday

தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை உள்ளிட்ட விடுமுறை தினங்களில்தான் சிறப்பு திரைப்படங்களை ஒளிபரப்புவது சன் டிவியின் பாலிசி. இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் 12-12-12 என சிறப்பு தினமாக வருவதால் இதை ரஜினி ரசிகர்களுடன் கொண்டாடுகிறது சன் டிவி. டிசம்பர் 12 புதன்கிழமை மாலை 6 மணிக்கு ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் நடித்த படையப்பா திரைப்படத்தை சிறப்பாக ஒளிபரப்பாகிறது சன் டிவி.

இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம். 91-96 கால கட்டத்தில் அதிமுக ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் ரஜினி இருந்த போது எடுக்கப்பட்ட திரைப்படம். இப்போது ரஜினியின் பிறந்தநாளை வள்ளுவர் கோட்டத்தில் கொண்டாட அவருடைய ரசிகர்களுக்கு இடம் மறுக்கப்பட்டது. இதனையடுத்து ரசிகர்கள் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு எதிரான மனநிலைக்கு மாறிவருகின்றனர் என்று கூறப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் சன் டிவியில் படையப்பா திரைப்படத்தை சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்புகின்றனர் என்று தொலைக்காட்சி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

 

ரஜினி பிறந்த நாள் விழாவில் நமீதா, சரத்குமார், ராதாரவி!

Namitha Sarath Kumar Radha Ravi R

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 63வது பிறந்த நாள் விழா சரத்குமார் தலைமையில் நடக்கிறது.

இதில் நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர் பங்கேற்கின்றனர். கோடம்பாக்கத்தின் எவர்கிரீன் கவர்ச்சிப் புயல் நமீதா இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.

சென்னை ரசிகர்கள் சார்பில் நடக்கும் இந்த விழா, சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் (டிசம்பர் 13 வியாழக்கிழமை மாலை) சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதுவரை காணாத அளவு பிரமாண்ட கூட்டத்துடன் விழா நடக்கவிருக்கிறது. அனைத்து மாவட்ட ரசிகர்களும் அழைப்பிதழுடன் வரவிருக்கிறார்கள்.

வழக்கமாக இந்த மாதிரி விழாக்களுக்கு அனுமதி வழங்க யோசிப்பார் ரஜினி. ஆனால் இந்த முறை, ரசிகர்களின் அன்பு வேண்டுகோளை தட்டாமல், இந்த விழாவுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்.

விழாவுக்கு நடிகர் சங்கத் தலைவர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், எம்எல்ஏ சரத்குமார்தான் தலைமை வகிக்கிறார். நடிகர் சங்க பொதுச் செயலர் ராதாரவி, நடிகர் வாகை சந்திரசேகர், நடிகர், இயக்குநர் பாண்டியராஜன், இயக்குநர் பி வாசு உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசுகின்றனர்.

ஆறடி உயர ஆல்கஹால் என்று வர்ணிக்கப்படும் கவர்ச்சி நடிகை நமீதா பங்கேற்கிறார். ரஜினிக்காக காலில் செருப்பணியாமல் நடிப்பேன், ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தால் சம்பளமே வேண்டாம் என்று கூறிவரும் நமீதாவுக்கு, ரஜினி விஷயத்தில் ஒரு சின்ன அங்கீகாரம் கிடைத்த திருப்தி இந்த விழா மூலம் கிடைத்திருக்கிறது.