திருட்டு விசிடி: பர்மா பஜாரில் பார்த்திபன் நடத்திய ரெய்ட்!

சென்னை: திருட்டு விசிடிக்கு எதிராக இயக்குநர் பார்த்திபன் பர்மா பஜாரில் சோதனை நடத்தினார்.

தனது கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் உள்பட புதுப்படங்களின் திருட்டு டிவிடிகளை விற்பனை செய்த ஒரு கடைக்காரரை கையோடு போலீசில் பிடித்துக் கொடுத்தார்.

பர்மா பஜாரில் பல கடைகளில் டிவிடிகள் விற்பனையாகின்றன. இவற்றில் பெரும்பாலான கடைகள் புதுப்படங்களை திருட்டுத்தனமாக டிவிடி அடித்து விற்பதையே தொழிலாகக் கொண்டவைதான்.

திருட்டு விசிடி: பர்மா பஜாரில் பார்த்திபன் நடத்திய ரெய்ட்!

இதே போல சென்னை அண்ணாநகர் பகுதியிலும் திருட்டு டிவிடிகள் விற்பனையாகின்றன.

இதுகுறித்து திரைத்துறையினர் தொடர்ந்து தமிழக காவல் துறையிடம் புகார் கொடுத்தாலும், இந்த திருட்டு டிவிடிகள் விற்பனை அமோகமாக நடந்து கொண்டுதான் உள்ளது.

பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் சமீபத்தில் வெளியானது. அந்தப் படம் வெளியான நாளிலேயே அதன் திருட்டு டிவிடியும் புழக்கத்துக்கு வந்துவிட்டது. அண்ணா நகர் பகுதிக்குப் போய் பார்த்திபனே அந்த திருட்டு டிவிடிகளை வாங்கி வந்து பத்திரிகையாளர்களிடமும் காட்டினார்.

மேலும் தானே களத்திலிறங்கி திருட்டு வீடியோவுக்கு எதிராகப் போராடப் போவதாகவும் அறிவித்தார்.

அதன்படி போலீசாருக்கு தகவல் சொல்லிவிட்டு, நேற்று பர்மா பஜார் பகுதிக்கு தன் உதவியாளர்களுடன் சென்றார் பார்த்திபன். சாலையின் ஓரத்தில் தன் காரில் அமர்ந்தபடி, உதவியாளர்களை அனுப்பி ஒரு கடையில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் திருட்டு டிவிடி இருக்கிறதா என்று கேட்டு, அதை பணம் கொடுத்து வாங்க வைத்தார்.

டிவிடி கைக்கு வந்ததும், போலீசாருக்கு தகவல் சொன்ன பார்த்திபன், காரை விட்டு இறங்கி சாலையைக் கடந்து வேகமாகப் போய் சம்பந்தப்பட்ட கடைக்காரரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். மேலும் அங்கு விற்பனைக்கு கிடைக்கும் புதிய தமிழ்ப்படங்களின் பட்டியலையும் பெற்று போலீசாரிடம் தந்தார்.

 

2014ம் ஆண்டின் பாலிவுட் வசூல் சாதனை பட்டியலில் 2வது இடம் பிடித்த சிங்கம் ரிட்டர்ன்ஸ்!!

மும்பை: பாலிவுட் திரைப்படங்களிலேயே வசூல் ரீதியாக இவ்வாண்டின் இரண்டாவது சிறந்த படம் சிங்கம் ரிட்டர்ன்ஸ் என்ற பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் திரைப்படம் அதே பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு சக்கைபோடு போட்டது. இப்போது சிங்கம்-2 படத்தை சிங்கம் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். ஆகஸ்ட் 15ம்தேதி சுதந்திர தினத்தன்று வெளியான இத்திரைப்படமும் அடித்து கிழித்து வருகிறது.

2014ம் ஆண்டின் பாலிவுட் வசூல் சாதனை பட்டியலில் 2வது இடம் பிடித்த சிங்கம் ரிட்டர்ன்ஸ்!!

திரைப்படம் ரிலீசாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் ரூ.116.3 கோடியை வசூலித்து, 100 கோடி குரூப்பிலும் சிங்கம் ரிட்டர்ன்ஸ் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. பாலிவுட்டில் இந்தாண்டில் வெளியாகிய படங்களில் சல்மான்கான் நடித்த கிக் திரைப்படம் ரூ.232.3 கோடி வசூலித்து முதலிடத்திலுள்ளது.

வசூலில், சிங்கம் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு பின்னால் ஹாலிடே, ஜெய்கோ, ஏக்வில்லன் ஆகியவை வரிசையாக உள்ளன. இந்தாண்டு ஹிருத்திக் ரோஷனின் பேங் பேங், ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர், ஆமீர்கானின் பிகே ஆகிய திரைப்படங்கள் வெளிவர வேண்டியுள்ளன. எனவே ஆண்டு இறுதியில்தான் உண்மையான போட்டி ஆரம்பிக்கும் என்கின்றனர் மும்பைவாலாக்கள்.

 

பழைய நினைவுகளின் பாதிப்பு! அரை மணி நேரம் தேம்பி தேம்பி அழுத நயன்தாரா!!

சென்னை: ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள அமரகாவியம் திரைப்படத்தை பார்த்துவிட்டு, நயன்தாரா 30 நிமிடம் தேம்பி, தேம்பி அழுததுதான் இப்போது கோலிவுட்டில் டாக் ஆப் தி டவுனாக உள்ளது.

ஆர்யா தயாரிப்பில், 'நான்' திரைப்பட புகழ், ஜீவா சங்கர் இயக்கி, உருவாகியிருக்கும் திரைப்படம் அமரகாவியம். சமீபத்தில், இந்த படத்தின் சிறப்பு காட்சியை நெருங்கிய நண்பர்களுக்கு போட்டு காண்பித்துள்ளார் ஆர்யா. அந்த நண்பர்களில் நயன்தாராவும் ஒருவராம்.

பழைய நினைவுகளின் பாதிப்பு! அரை மணி நேரம் தேம்பி தேம்பி அழுத நயன்தாரா!!

படத்தை பார்த்த நயன்தாரா, சுமார் அரை மணி நேரம் விடாமல் தேம்பி, தேம்பி அழுதுள்ளார். காதலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது அமரகாவியம். இதை பார்த்ததும், தனக்கு பல பழைய நினைவுகள் வந்துவிட்டதாக நெருக்கமானவர்களிடம் சொல்லியுள்ளார் நயன்.

இந்த தகவலை ஜீவா சங்கரும் உறுதி செய்துள்ளார். மனரீதியாக உறுதியானவர் நயன்தாரா. அவரே எனது கதையை பார்த்துவிட்டு கலங்கிவிட்டார். எனவேதான் வெகுநேரமாக அவர் அழுதபடி இருந்தார். அவ்வளவு ஏன், வீட்டுக்கு திரும்பிய பிறகும் நயன்தாரா அழுதுள்ளார்.

படத்தை பார்த்த ஐந்து நாட்களுக்கு பிறகு நயன்தாரா என்னை போனில் தொடர்பு கொண்டார். அப்போது, என்னால் இந்த படத்தை பற்றி யோசிப்பதை நிறுத்திக்கொள்ள முடியவில்லை என்று நயன்தாரா என்னிடம் கூறினார். இது ஒரு படைப்பாளியாக எனக்கு கிடைத்த பாராட்டு. ரசிகர்களை சிரிக்க வைப்பதும், அழ வைப்பதுதான் திரைப்பட உருவாக்கத்தில் சவாலான விஷயம் என்றார் அவர்.

அமரகாவியம் திரைப்படத்தில் ஆர்யாவின் சகோதரர் சத்யா ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கேரளாவில் அஞ்சான்.. 100 அரங்குகளில் வெற்றிகரமான இரண்டாவது வாரம்!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான அஞ்சான் திரைப்படம் கேரளாவில் 100 அரங்குகளில் இரண்டாவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கேரளாவின் முன்னணி நடிகர்களுக்குக் கூட கிடைக்காத ஆரம்ப வசூலை சூர்யாவின் அஞ்சான் பெற்றிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அஞ்சான்.. 100 அரங்குகளில் வெற்றிகரமான இரண்டாவது வாரம்!

அஞ்சான் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. உலகமெங்கும் 1400 அரங்குகளில் அஞ்சான் வெளியானது.

இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால் ஆரம்ப வசூல் அபாரமாக இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் முதல் வாரத்தில் இந்தப் படம் ரூ 30 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். சூர்யா படங்களிலேயே அதிக ஆரம்ப வசூல் அஞ்சானுக்குத்தான்.

இந்த நிலையில், கேரளாவில் இந்தப் படம் பிரமாண்டமாய் வெளியானது. இரண்டாவது வாரத்திலும் 100 அரங்குகளில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்தவாரம் இதே அளவு அரங்குகளில் ஓடும் என்று கேரள விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

ஓணம் பண்டிகையையொட்டி, மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ள நிலையில், அஞ்சான் படம் இத்தனை அரங்குகளில் ஓடுவது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இந்தப் படத்தில் கிட்டத்தட்ட அரை மணி நேர காட்சிகள் குறைக்கப்பட்டு ட்ரிம்மாக்கப்பட்டுள்ளது.

 

மணிரத்னம் புதிய படம்... ஹீரோ துல்க்வார் சல்மான்- ஆலியா பட்!

மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் துல்க்வார் சல்மான் - ஆலியா பட் ஜோடியாக நடிக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடல் படத்துக்குப் பிறகு மணிரத்னம் புதிதாக ஒரு தெலுங்குப் படத்தை இயக்கவிருந்தார். அதில் நாகார்ஜூனா, மகேஷ்பாபு, ஐஸ்வர்யா ராய் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கவிருந்தது.

மணிரத்னம் புதிய படம்... ஹீரோ துல்க்வார் சல்மான்- ஆலியா பட்!

ஆனால் அந்தப் படம் திடீரென கிடப்பில் போடப்பட்டது. அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என மகேஷ் பாபுவும் கூறிவிட்டார்.

இந்த நிலையில் வேறு கதையைப் படமாக்கப் போகிறாராம் மணிரத்னம். இது இளம் காதலர்களைப் பற்றிய கதையாம்.

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் துல்க்வார் சல்மான் (வாயை மூடிப் பேசவும் ஹீரோ). பிரபல நடிகர் மம்முட்டியின் மகன். இவரை நாயகனாவும், பிரபல இந்தி நடிகை ஆலியா பட்டை நாயகியாகவும் ஒப்பந்தம் செய்துள்ளாராம் மணிரத்னம்.

இதுகுறித்து துல்க்வார் சல்மானிடம் கேட்டபோது, 'இந்தப் படம் பற்றிய எந்தத் தகவலாக இருந்தாலும் அதை இயக்குநர் மணிரத்னம்தான் சொல்ல வேண்டும். இப்போது எதுவும் சொல்ல முடியாது," என்றார்.

 

பாரதிராஜாவின் அடுத்த படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா!

பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து மீண்டும் இணைவார்களா என, எண்பதுகளில் வெளியான அவர்களின் படங்கள் பார்த்து கிறங்கிய ரசிகர்கள் இன்னும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

ஆனால் அது இப்போதைக்கு நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால் வேறு ஒரு வழியில் ரசிகர்களின் அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது.

பாரதிராஜாவின் அடுத்த படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா!

இளையராஜாவுக்கு பதில் அவரின் இளையமகன் யுவன் சங்கர் ராஜா இவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

ஏற்கெனவே இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

அடுத்து பாரதிராஜாவின் புதிய படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் யுவன்.

இதனை பாரதிராஜாவே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "லண்டனில் குடியேறிய ஒரு குடும்பத்தின் வாழ்க்கையைப் பற்றிய படத்தை விரைவில் இயக்கவுள்ளேன். வயதான ஒருவனுக்கும், ஒரு சிறு குழந்தைக்கும் இடையேயான பிணைப்பைச் சொல்லும் படம் இது. இதன் படப்பிடிப்பு லண்டனில் 40 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப்படத்தை இயக்குவதுடன் நான் நடிக்கவும் செய்கிறேன். அந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்," என்று தெரிவித்துள்ளார்.

 

இயக்குநர் சரணைக் கைது செய்து அசிங்கப்படுத்துவதா?- திரையுலகினர் ஆவேசம்

இயக்குநர் சரணைக் கைது செய்து அசிங்கப்படுத்துவதா?- திரையுலகினர் ஆவேசம்

சென்னை: செக் மோசடி வழக்கில் இயக்குநர் சரண் கைது செய்யப்பட்டதற்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், ஜெமினி, பார்த்தேன் ரசித்தேன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களை இயக்கிய சரணை படப்பிடிப்பு தளத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுதலை ஆனார்.

இந்நிலையில் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு தயாரிப்பாளர் டி.சிவா பேசுகையில், "தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகிய சரண், திருநெல்வேலியில் ‘ஆயிரத்தில் இருவர்' படப்பிடிப்பில் இருக்கும்போது படப்பிடிப்பு தளத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சிவகாசி சபையர் லித்தோ உரிமையாளர்களில் ஒருவரான ஞானசேகரின் பொய்யான தகவலின் அடிப்படையில் புனையப்பட்ட வழக்கில் இந்த கைது சம்பவம் நடைபெற்றுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேலான இந்திய திரைப்பட வரலாற்றில், தயாரிப்பாளர், இயக்குனர் ஒருவர் படப்பிடிப்பு தளத்திலேயே கைது செய்யப்பட்ட வருத்தமான நிகழ்வு இதுவே முதல்முறையாகும்.

அதுவும், எங்கள் திரைப்படத்துறையைச் சார்ந்த சபையர் லித்தோ பிரஸ் உரிமையாளர்களில் ஒருவரால் இந்த அவமானச் செயல் தொடங்கப்பட்டிருப்பது வருந்தத்தக்க, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கொண்ட இயக்குனர் சரண் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார. மேலும் பல படங்களையும் தயாரித்துள்ளார். எல்லோருடனும் நட்பாக பழகக்கூடிய நல்ல நண்பர். அவர், நம்பிக்கையின் பேரில் வழங்கிய காசோலையை தர வேண்டிய பாக்கித் தொகையை விட பல மடங்கு கூடுதலாக உயர்த்தி நிரப்பி தன் தவறான வழிக்கு சட்டத்தையும் உடந்தையாக்கி கொண்டு, சிவகாசி சபையர் லித்தோ ஞானசேகரினின் இந்த அத்து மீறிய செயல் தமிழக திரைப்படைத்துறையினர் நெஞ்சில் தீராத காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், காசோலையில் உண்மையாக கொடுக்கப்பட வேண்டிய பாக்கித் தொகையை விட ஞானசேகரன் பலமடங்கு தொகையை உயர்த்தி நிரப்பிக் கொண்டது, தமிழ்த்திரைப்படத் துறையின் அஸ்திவாரமான தொழில் நம்பகத் தன்மையை சீர்குலைப்பதாக உள்ளது.

இந்த முறையற்ற செயலை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கமும் வன்மையாக கண்டிக்கிறது.

இந்த திரைப்படத்துரையிலேயே வளர்ந்து, அந்த திரைப்படத் துறையையே அழிக்க நினைக்கும் சிவகாசி சபையர் லித்துா பிரஸ்சுடன் தயாரிப்பாளர்கள் தொழில் உறவு கொள்ளுமுன், தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்றார்.

இந்த நிறுவனத்துக்கு வேறு யாருக்காவது பாக்கி வைத்திருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தெரிவிக்குமாறு டி சிவா கேட்டுக் கொண்டார்.

 

டெல்லி ஹோட்டலில் நடிகையை பலாத்காரம் செய்த இசையமைப்பாளர் கைது!

டெல்லி: நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரின்பேரில் இசையமைப்பாளர் அன்குர் ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு டெல்லியின் கைலாஷ் பகுதியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் அந்த 27 வயது இளம் நடிகை. இவர் சொந்தமாக சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டுவருகிறாராம்.

நடிகை தங்கியிருந்த ஹோட்டலுக்கு, பட விவாதம் தொடர்பாக, வியாழக்கிழமை காலை இசையமைப்பாளர் அன்குர் ஷர்மா வந்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் நடந்த இசை நிகழ்ச்சியொன்றில் இவ்விருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதன் காரணமாக, அடுத்த படம் குறித்த விவாதத்துக்கு அந்த நடிகை, இசை அமைப்பாளருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஹோட்டலில் விவாதம் நடந்தபோது, திடீரென நடிகையை கட்டிப்பிடித்து தவறாக நடக்க ஆரம்பித்துள்ளார் அன்குர் ஷர்மா.

எவ்வளவோ தடுத்தபோதும், வலுக்கட்டாயப்படுத்தி நடிகையுடன் உடலுறவு வைத்துள்ளார் அன்குர் ஷர்மா. இதனிடையே சத்தம் கேட்டு வந்த ஹோட்டல் ஊழியர்கள், அன்குர் ஷர்மாவை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

குற்றவாளியிடமிருந்து டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் தனது 40வது ஆண்டைக் கொண்டாடிய ரஜினி!

ஷிமோகா: நடிகர் ரஜினிகாந்த் திரையுலகுக்கு வந்து 40 ஆண்டுகளானதை, லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

கடந்த 1975-ம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினி.

லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் தனது 40வது ஆண்டைக் கொண்டாடிய ரஜினி!

தொடர்ந்து அவர் முதல் நிலை நடிகராகவே தமிழ் சினிமாவில் திகழ்கிறார். இந்திய அளவில் அவரை அனைத்து மொழி திரைத்துறையினரும் கொண்டாடுகிறார்கள். அவரது படங்களுக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

திரையுலக வாழ்க்கையில் 40-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ரஜினிக்கு லிங்கா படக்குழுவினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதைக் கொண்டாடும் வகையில் லிங்கா படப்பிடிப்புத் தளத்துக்கு பெரிய கேக் வரவழைக்கப்பட்டது.

லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் தனது 40வது ஆண்டைக் கொண்டாடிய ரஜினி!

அதை ரஜினி வெட்டி, படக்குழுவினருக்கு ஊட்டினார். ரஜினிக்கு வாழ்த்துச் சொல்லி, இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கேக் ஊட்டினார். நடிகர்கள் விஜயகுமார், நடிகை சோனாக்ஷி சின்ஹா, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகரும் இயக்குநருமான ஆர் சுந்தரராஜன் ஆகியோர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

செக் மோசடி வழக்கிலிருந்து இயக்குநர் சரண் ஜாமீனில் விடுதலை

செக் மோசடி வழக்கிலிருந்து இயக்குநர் சரண் ஜாமீனில் விடுதலை

திருநெல்வேலி: ரூ 50 லட்சம் செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல இயக்குநர் சரண், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

காதல் மன்னனில் அறிமுகமாகி, அமர்க்களம், அட்டகாசம், ஜெமினி, பார்த்தேன் ரசித்தேன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் சரண். தற்போது ‘ஆயிரத்தில் இருவர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அதில் நடிகர் வினய் கதாநாயகனாக நடிக்கிறார்.

நேற்று காலையில் நெல்லை அருகே டக்கரம்மாள்புரம் பகுதி நாற்கர சாலையில் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

காலை 9.30 மணி அளவில், சிவகாசி டவுன் போலீசார் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்தனர். இயக்குநர் சரண் ரூ.50 லட்சத்துக்கான செக் மோசடி வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாததால், பிடி ஆணை பிறப்பித்து இருப்பதாகவும், அதன் பேரில் கைது செய்வதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பிடி ஆணை உத்தரவை சரணிடம் காண்பித்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து, போலீஸ் வேனில் சிவகாசிக்கு அழைத்துச் சென்றனர்.

மதியம் 2 மணிக்கு போலீசார் சிவகாசி நீதிமன்றத்தில் இயக்குநர் சரணை ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு ஜோசப்ஜாய் வழக்கு குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் சரணை ஜாமீனில் விடுவித்தார்.

இதைத்தொடர்ந்து கோர்ட்டுக்கு வெளியே வந்த சரண் நிருபர்களிடம் கூறுகையில், "திருநெல்வேலி பகுதியில் ஆயிரத்தில் இருவர் என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. நான் அதில் பணியாற்றி வந்தேன். அப்போது சிவகாசி போலீசார், ஒரு படத்துக்காக நான் சுவரொட்டி அடித்த வழக்கில் கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் என்று என்னை அழைத்து வந்தனர்.

இங்கு நீதிபதியிடம் என் தரப்பு நியாயத்தை கூறினேன். அவர் என்னை ஜாமீனில் விடுவிக்க உத்தர விட்டார். இது பொய்யான வழக்கு. நான் மீண்டும் நெல்லைக்குச் செல்கிறேன். அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்," என்றார்.

 

ஸ்ருதி ஹாஸனை உதைத்த குதிரை.. ஹீரோ உதவியுடன் காயமின்றி தப்பினார்!

மும்பை: இந்திப் படம் ஒன்றின் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது, நடிகை ஸ்ருதிஹாஸனை ஒரு குதிரை உதைத்தது. ஆனால் சரியான நேரத்துக்கு ஹீரோ கைகொடுத்ததால் அவர் காயமின்றி தப்பினார்.

'தேவர்' என்ற இந்தி படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். இந்த படத்தில் நாயகனாக போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூர் நடிக்கிறார்.

ஸ்ருதி ஹாஸனை உதைத்த குதிரை.. ஹீரோ உதவியுடன் காயமின்றி தப்பினார்!

இந்த பாடலுக்காக படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. ஒரு காட்சியில் சுற்றிலும் குதிரைகளை நிற்க வைத்து நடுவில் ஸ்ருதி ஹாசனும், அர்ஜூன் கபூரும் ஆடுவது போல காட்சியை எடுத்தனர்.

அப்போது ஸ்ருதி ஹாசனை நோக்கிப் பாய்ந்து வந்தது ஒரு குதிரை. திடீரென உதைத்தது. இதைப் பார்த்த அர்ஜூன் கபூர் பாய்ந்து சென்று ஸ்ருதிஹாசனை பிடித்து இழுத்தார். இதனால் காயமின்றி சுருதிஹாசன் தப்பினார்.

 

ஒரு முறை முடிவு பண்ணிட்டா... வெயிட் பண்ணக்கூடாது.. போயிட்டே இருக்கணும்!- இது விஜய் ஸ்டேடஸ்

'ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா நானே என்பேச்சை கேட்க மாட்டேன்' - இது விஜய் நடித்த போக்கிரி படத்தில் அவரே பேசுவதாக வரும் பஞ்ச் வசனம்.

கிட்டத்தட்ட அதற்கு நிகரான ஒரு வசனத்தை ஆங்கிலத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் விஜய்.

அது: 'ஒரு முறை முடிவு பண்ணிட்டா... வெயிட் பண்ணக்கூடாது.. போயிட்டே இருக்கணும் (Once if u decide to do something, don't wait for anything.. Go ahead!).'

ஒரு முறை முடிவு பண்ணிட்டா... வெயிட் பண்ணக்கூடாது.. போயிட்டே இருக்கணும்!- இது விஜய் ஸ்டேடஸ்

கத்தி பட விவகாரம் விஸ்வரூபமெடுத்து நிற்கும் நிலையில், விஜய்யின் இந்த பேஸ்புக் பதிவும் கவனத்துக்குரியதாகியுள்ளது.

இதற்கிடையில், நேற்று வெளியான கத்தி பட போஸ்டர்களில் லைகா நிறுவனத்தின் பெயர் இருக்காது என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று வெளியான இரு போஸ்டர் டிசைன்களிலும் லைகாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

 

கத்தி.. லைகா நிறுவனப் பெயருடன் வெளியான இரு புதிய போஸ்டர்கள்

விஜய் நடிக்கும் கத்தி படத்தின் புதிய போஸ்டர்கள் இன்று வெளியாகின. அவற்றில் தயாரிப்பாளராக லைகா நிறுவனத்தின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

சுபாஷ்கரண் அல்லிராஜாவின் லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது. இலங்கையில் பல்வேறு வர்த்தகங்களை நடத்த லைகாவுக்கு ராஜபக்சே அனுமதி அளித்துள்ளார். இந்த நிறுவனத்தில் ராஜபக்சேவின் உறவினர்கள் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.

கத்தி.. லைகா நிறுவனப் பெயருடன் வெளியான இரு புதிய போஸ்டர்கள்

ஒரு இனப்படுகொலையாளிக்கு துணை நிற்கும் நிறுவனம் தமிழகத்தில் சினிமாவில் கால்பதிக்க விடக்கூடாது என்று கூறி பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. கத்தி படத்தை வெளியிட விட மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.

சமீபத்தில் 65 அமைப்புகள் மற்றும் கட்சிகள் இணைந்து கத்தி படத்துக்கு எதிரான கூட்டுப் போராட்டத்தை அறிவித்தனர்.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பிலிருந்து லைகா விலகிக் கொள்ளும், அதற்கு பதில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் படத்தைத் தயாரிக்கும் என்று கூறப்பட்டது.

சொன்னபடியே நேற்று மாலை கத்தி படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. ஆனால் தயாரிப்பாளராக லைகா நிறுவனத்தின் பெயரே இவற்றில் இடம்பெற்றிருந்தது. தயாரிப்பாளர்களாக ஏ சுபாஷ்கரன் மற்றும் கருணாமூர்த்தியின் பெயர் இடம் பெற்றுள்ளது.

 

எஸ்ஆர்எம் குரூப்பில் இருந்து மேலும் ஒரு புதிய தமிழ் பொழுதுபோக்கு சேனல்!

எஸ்ஆர்எம் குரூப்பில் இருந்து மேலும் ஒரு புதிய தமிழ் பொழுதுபோக்கு சேனல்!

சென்னை: எஸ்ஆர்எம் குரூப்பிலிருந்து நாளை முதல் புதிய தமிழ் பொழுதுபோக்கு சேனல் ஒன்று ஒளிபரப்பை துவங்க உள்ளது.

எஸ்ஆர்எம் கல்வி நிறுவன குரூப்பிலிருந்து புதிய தலைமுறை மற்றும் புதுயுகம் சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் வேந்தர் டிவி என்ற பெயரில் பொழுது போக்கு சேனல் நாளை முதல் வணிகரீதியான ஒளிபரப்பை தொடங்க உள்ளது. ஏற்கனவே இந்த சேனல் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், இனிதான் வணிக ரீதியாக ஒளிபரப்பை துவங்குகிறதாம்.

புத்தம் புது காலை என்ற பெயரில் காலை நேர பல்சுவை நிகழ்ச்சி, பாரதி கண்ணம்மா என்ற பெயரில் கோவை மண்வாசத்துடன் மெகா தொடர், சினிமா கிளைமேக்ஸ் தொடர்பான முடிவல்ல ஆரம்பம் போன்ற நிகழ்ச்சிகள் வேந்தர் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளன.

குஷ்பு தொகுத்து வழங்கும் டாக்-ஷோவான நினைத்தாலே இனிக்கும், திக்..திக்..திக் என்ற பெயரில் திரில் அனுபவங்களின் தொகுப்பு போன்ற நிகழ்ச்சிகளும் வேந்தர் டிவியில் களைகட்ட போகின்றன.

"சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களை தருவதே வேந்தர் டிவியின் நோக்கம்" என்று அதன் எம்.டி, ரவி பச்சமுத்து கூறியுள்ளார்.

 

பார்த்துமா, காத்தடிச்சா பறந்துடப் போற: நடிகையை கேலி செய்யும் ஹீரோக்கள்

சென்னை: காவியமான லீடர் படத்தில் நடிக்கும் ஹீரோயினின் உடல் வாகை பார்த்து ஹீரோக்கள் கிண்டலடிக்கிறார்களாம்.

மில்க் இயக்குனரின் சமீபத்திய படத்தில் நடித்தவர் அந்த ஒல்லிக்குச்சி நாயகி. சிவப்பழகியான அவரை படத்தில் கருப்பாக காட்டியிருந்தனர். அவர் தற்போது காவியமான லீடர் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை நடிக்க வந்ததில் இருந்து ஒல்லிக்குச்சியாகவே உள்ளார். அதனால் அவரை பார்க்கும் ஹீரோக்கள் என்னமா இவ்வளவு ஒல்லியாக இருக்கிறீர்கள், காற்றடித்தால் பறந்துவிடப் போகிறீர்கள், பார்த்து போங்க என்று கிண்டல் செய்கிறார்களாம்.

வேகமாக காற்று வீசினால் ஒடிந்து கிடிந்து போய் விடப் போகிறீர்கள் என்றும் ஹீரோக்கள் கூறுகிறார்களாம். இதை எல்லாம் கேட்டு அந்த நடிகை கோபப்படவில்லையாம். நான் இப்படி இருப்பதால் தான் எனக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வருகிறது என்று கூலாக தெரிவித்துள்ளாராம்.