ரஜினி, அமிதாப்... யாரோட வாய்ஸ் பெஸ்ட்?- தனுஷ் பதில்

ரஜினி, அமிதாப் இருவரில் யாருடைய குரல் சிறப்பானது என்ற கேள்விக்கு பதிலளித்த தனுஷ், 'இருவரையும் எந்த வகையிலும் ஒப்பிடவே கூடாது,' என்றார்.

ஷமிதாப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. அப்போது தனுஷிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார் நிகழ்ச்சி நடத்தியவர்.

ரஜினி, அமிதாப்... யாரோட வாய்ஸ் பெஸ்ட்?- தனுஷ் பதில்

அதற்கு பதிலளித்த தனுஷ், "எதற்காக இப்படி ஒரு கேள்வி என்று புரியவில்லை. ரஜினியும் அமிதாப்பும் பெரும் சாதனையாளர்கள். இருவரையும் எந்த வகையிலும் ஒப்பிடவே கூடாது. தேவையற்றது," என்றார்.

பிப்ரவரி 6-ம் தேதி ஷமிதாப்பும், 13-ம் தேதி அனேகன் படமும் வெளியாகின்றன.

இதுகுறித்து தனுஷ் கூறுகையில், "ஷமிதாப் மீதுதான் இப்போது என் முழு கவனமும். இது மிகப்பெரிய மார்க்கெட். பெரிய அளவில் வெளியாகிறது.

அனேகனைப் பொறுத்தவரை ஒரு வாரம் படத்தை புரமோட் செய்தால் போதும். நான்கைந்து பேட்டிகள் தரவேண்டியிருக்கும். ஆனால் ஷமிதாப்புக்கு 527 பேட்டிகள்.. நாடு முழுவதும் சுற்ற வேண்டும்..." என்றார்.

 

முரளி ராமின் ”தொப்பி” திரைப்படம் – விரைவில் திரையரங்குகளில் வெளியீடு

சென்னை: தொப்பி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகி மக்களின் மனதினைக் கவரும் என்று அப்படத்தின் தயாரிப்பாளார் தெரிவித்துள்ளார்.

"மதுரை சம்பவம்", வெளிவர இருக்கும் "சிவப்பு எனக்கு பிடிக்கும்" ஆகிய படங்களை இயக்கிய யுரேகாதான் இந்தத் தொப்பி படத்தையும் இயக்கியுள்ளார்.

முரளி ராமின் ”தொப்பி” திரைப்படம் – விரைவில் திரையரங்குகளில் வெளியீடு

குரங்கணி காட்டின் பசுமையான பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள தொப்பி காவலனாக வேண்டும் என்ற வேட்கையுடன் உள்ள ஒரு இளைஞனை பற்றிய கதை.

குற்றப் பின்னணியை களமாகவும், கலாச்சாரமாகவும் கொண்ட அந்த இளைஞனுக்கு அவனது லட்சியக் கனவை அடைய அதே குற்றப் பின்னணி தடையாக இருக்கிறது என்பதுதான் தொப்பியின் மூலக் கதைக் கரு.

வைரமுத்துவின் பாடல்கள், மற்றும் மைனா புகழ் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் தரத்துக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறதாம். ராயல் ஸ்கிரீன்ஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் எஸ். பரமராஜ் தயாரித்துள்ளார் இப்படத்தினை.

தொப்பி திரைப்படத்தின் மூலமாக மலையாள கரையின் புது வரவாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்துள்ளார் புதுமுக கதாநாயகி ரக்‌ஷா ராஜ்.

இயக்குநர் யுரேகாவின் இயக்கத்தில் ராயல் ஸ்க்ரீன்ஸ் தயாரிக்கும் திரைப்படம் "தொப்பி". இத்திரைப்படத்தில் அறிமுகமாகும் ரக்‌ஷா ராஜ் பரத நாட்டியம், குச்சுப்புடி, மோகினி ஆட்டம், மற்றும் பல நடன கலைகளில் சிறுவயதில் இருந்தே பயிற்சி பெற்றவர்.

தொப்பி படத்தின் கதாநாயகனாக தொகுப்பாளரான முரளி ராம் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் பவர் ஸ்டார் தன்னுடைய சர்ச்சை பேச்சால் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சகாப்தம் ட்ரைலர் பாத்தீங்களா... தேறுவாரா கேப்டன் மகன்?

விஜய காந்த் மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் ட்ரைலர், பாடல்கள் ஏக அமர்க்களமாக, தமிழ் சினிமாவின் பெரும்பாலான நட்சத்திரங்கள் முன்னிலையில் வெளியாகிவிட்டன.

விழாவுக்கு வந்து வாழ்த்திய அனைவருமே விஜயகாந்தைப் போல சண்முகப் பாண்டியனும் சாதனை படைக்க வேண்டும் என்றார்கள்.

சிலர் விஜயகாந்தை பின்பற்றாமல் தனக்கென தனி பாணியில் சண்முகப் பாண்டியன் நடிக்க வேண்டும் என்றார்கள்.

படத்தில் ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கான அத்தனை வேலைகளையும் செய்திருக்கிறார் சண்முகப்பாண்டியன். குத்தாட்டம், டூயட், அதிரடி ஆக்ஷன், கார் சேஸிங், ஐ பட பாணியில் மொட்டை மாடிகளில் சைக்கிள் சண்டை, பவர் ஸ்டாருடன் இணைந்து காமெடி என ஆல்ரவுண்டர் வேலை பார்த்திருக்கிறார்.

விஜயகாந்த் மாதிரி வருவாரா சண்முகப் பாண்டியன்? ட்ரைலரைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது..? பார்த்துட்டு சொல்லுங்களேன்!

சகாப்தம் ட்ரைலர்

 

மாயாஜாலில் பரபர டிக்கெட் விற்பனை.. என்னை அறிந்தால் காட்சிகள் அதிகரிப்பு

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. சில அரங்குகளில் முதல் 5 நாட்களுக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாகவே அஜீத் படங்களுக்கு முதல் வார வசூல் அபாரமாக இருக்கும். இந்த முறை என்னை அறிந்தால் படத்துக்கு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

மாயாஜாலில் பரபர டிக்கெட் விற்பனை.. என்னை அறிந்தால் காட்சிகள் அதிகரிப்பு

நாளை மறுநாள் வெளியாகும் இந்தப் படத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே சில அரங்குகளில் முன்பதிவு தொடங்கியது. டிக்கெட்டுகள் பரபரவென விற்றுத் தீர்ந்துவிட்டன. முக்கியமான மால்கள், அரங்குகளில் இன்றுதான் முன்பதிவு தொடங்குகிறது.

மாயாஜாலில் இந்தப் படத்தை தினசரி 63 காட்சிகள் திரையிடுகிறார்கள். இந்தக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருவதால், முதல் மூன்று தினங்களுக்கு மேலும் காட்சிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

 

விரைவில் டீசர்... கோடை ஸ்பெஷலாக களமிறங்குகிறது விஜய்யின் புலி!

விஜய் நடித்து வரும் 58வது படமான புலியின் முதல் தோற்ற டீசர் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் படத்தை வரும் கோடை விடுமுறை முடிவதற்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

சிம்பு தேவன் இயக்கி வரும் இந்த பேன்டசி - சரித்திரப் படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.

படப்பிடிப்பு வேக வேகமாக நடந்து வருகிறது.

விரைவில் டீசர்... கோடை ஸ்பெஷலாக களமிறங்குகிறது விஜய்யின் புலி!

படத்தின் முதல் தோற்ற டீசரை விரைவில் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஏப்ரல் முதல்வாரம் படப்பிடிப்பு முடிகிறது. அனைத்து வேலைகளையும் முடித்து மே இறுதிக்குள் படத்தை வெளியிடவிருக்கிறார்கள்.

ரசிகர்கள் மிகப் பெரிய கோடை விருந்தாக படம் அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.

படத்தை பிடி செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் தயாரிக்கின்றனர்.

 

காசியில் காலை 4 மணிக்கு என்னை அறிந்தால் முதல் நாள் முதல் காட்சி!

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் முதல் நாள் முதல் காட்சி கேகே நகரில் உள்ள காசி திரையரங்கில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

படம் வெளியாவதற்கு சில மணி நேரங்கள் முன்பு அல்லது முந்தைய நாள் நள்ளிரவு ரசிகர்களுக்காக சிறப்புக் காட்சி போடும் வழக்கம் ரஜினியின் படங்களிலிருந்துதான் ஆரம்பமானது. குறிப்பாக ஆல்பட் திரையரங்கில் இத்தகைய காட்சிகள் ரொம்பவே பிரபலம்.

காசியில் காலை 4 மணிக்கு என்னை அறிந்தால் முதல் நாள் முதல் காட்சி!

இப்போது இந்த மாதிரி முதல் நாள் முதல் காட்சிகள் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் நடத்தப்படுகின்றன.

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி கேகே நகரில் உள்ள காசி திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு இந்த காட்சியை நடத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.

ரசிகர்கள் இந்தக் காட்சியை மேள தாளம் முழங்க, ஏக ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

ரசிகர் மன்றங்களை முற்றாக அஜீத் கலைத்த பிறகும், அவரது ரசிகர்கள் அதே உற்சாகத்துடன் அவர் படங்களை வரவேற்று கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

 

பாலாபிஷேகம், பூஜை... ரசிகர்களின் என்னை அறிந்தால் ஃபீவர் ஆரம்பம்!

அஜீத் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர் நடித்த என்னை அறிந்தால் படத்தை வரவேற்கத் தயாராகிவிட்டார்கள்.

பிப்ரவரி 5-ம் தேதி வெளியாகும் அவரது படத்துக்கு இப்போதிலிருந்தே பாலாபிஷேகம், பூஜை செய்து ஆரவாரத்துடன் கொண்டாடுவர்.

பாலாபிஷேகம், பூஜை... ரசிகர்களின் என்னை அறிந்தால் ஃபீவர் ஆரம்பம்!

பொதுவாக இந்த மாதிரி கொண்டாட்டங்கள் பெரும்பாலும் படம் வெளியாகும் நாளன்றுதான் நடக்கும்.

ஆனால், அஜித்தின் ‘என்னை அறிந்தால்' படம் வெளியாவதற்கு முன்பே அஜித் ரசிர்கள் அப்படத்தின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடியுள்ளனர்.

நேற்று இரவு சென்னை காசி திரையரங்கில் அமைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய ‘என்னை அறிந்தால்' கட்-அவுட்டுக்கு அஜித் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

மதுரையில் உள்ள அஜீத் ரசிகர்களும் இதே போல பூஜை, பாலாபிஷேகம் என அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.

 

விவாகரத்துக்குப் பிறகு... சூர்யா படத்தில் நடிக்கும் மஞ்சு வாரியார்

விவாகரத்துக்குப் பிறகு முதல் முறையாக தமிழில் சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் மஞ்சு வாரியர்.

மலையாளத்தில் முன்னணியில் இருந்த நடிகை மஞ்சு வாரியர், பிரபல நடிகர் திலீப்பை திருமணம் செய்தார். 16 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.

விவாகரத்துக்குப் பிறகு... சூர்யா படத்தில் நடிக்கும் மஞ்சு வாரியார்

நேற்றுதான் இருவருக்கும் நீதிமன்றம் விவாகரத்தை அறிவித்தது.

மஞ்சு வாரியர் தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். மலையாளத்தில் நடித்த ‘ஹவ் ஓல்டு ஆர் யு' படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமிழில் ஜோதிகா நடிக்க ரீமேக் ஆகி உள்ளது. விரைவில் இது ரிலீசாக உள்ளது.

ஹவ் ஒல்டு ஆர் யு படத்தில் மஞ்சு வாரியரின் நடிப்பு சூர்யாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதால், அவர் தயாரிக்க உள்ள படத்தில் மஞ்சு வாரியரை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.

 

த்ரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா சேர்ந்து நடிக்கும் 'போகி'... 3 பெண்களைப் பற்றிய கதை!

சென்னை: போகி என்ற புதிய படத்தில் த்ரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா சேர்ந்து நடிக்கும் 'போகி'... 3 பெண்களைப் பற்றிய கதை!   | ஓவியா   | பூனம் பாஜ்வா  

'என்னை அறிந்தால்', 'பூலோகம்', 'அப்பா டக்கரு', 'லயன்', 'ரம்' என ஏற்கனவே த்ரிஷா கை நிறைய படங்களுடன் இருக்கிறார். இதில், என்னை அறிந்தால் படம் இவ்வாரம் ரிலீசாகிறது.

இதற்கிடையே, சமீபத்தில் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும், நடிகை த்ரிஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

திருமணத்திற்குப் பிறகு த்ரிஷா நடிப்பதை நிறுத்தி விடுவார் என தகவல்கள் வெளியாயின. ஆனால், 'போகி' படத்தின் அறிவிப்பு த்ரிஷா மீண்டும் நடிப்பார் என்பதை உறுதியாக்கி இருக்கிறது.

'விரைவில் 'போகி' படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக' தனது டுவிட்டர் பக்கத்தில் த்ரிஷா தெரிவித்துள்ளார்.

 

இசை நிகழ்ச்சி பற்றி மோசமான விமர்சனம் வந்ததால் வாங்கிய பணத்தை திருப்பித் தரும் மோகன் லால்!

திருவனந்தபுரம்: தேசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் தனது இசைக் குழு நடத்தி நிகழ்ச்சி குறித்து மிக மோசமான விமர்சனங்கள் வந்ததால், அந்த நிகழ்ச்சிக்காக வாங்கிய பணத்தைத் திருப்பித் தருகிறார் நடிகர் மோகன்லால்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 35 ஆவது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா கடந்த சனிக் கிழமை கிரீன் பீல்ட் மைதானத்தில் பிரமாண்டமாக நடந்தது.

இசை நிகழ்ச்சி பற்றி மோசமான விமர்சனம் வந்ததால் வாங்கிய பணத்தை திருப்பித் தரும் மோகன் லால்!

தொடக்க விழா நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் ‘லாலிசம்' என்ற இசைக்குழுவும் பங்கேற்று இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

ஆனால், இவர்களின் நிகழ்ச்சி மிகவும் மோசமாக இருந்ததாக சமூக வலை தளங்களில் விமர்சனம் எழுந்தது. மோகன் லாலின் பிளாக்கிலும் சமூக வலைதள பக்கத்திலும் பலர் தங்கள் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்தனர்.

கேரள அரசிடமிருந்து நிகழ்ச்சிக்காக வாங்கிய தொகையை திரும்பக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமூக வலைதளம் மூலம் எதிர்ப்பு போராட்டமும் நடைபெற்றது. இந்த சம்பவங்களால் மனவேதனை அடைந்ததாக மோகன் லால் தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்காக ரூ 2 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவழித்ததாகக் கூறியுள்ள மோகன்லால், அந்த கணக்கு விவரங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, "நான் நிகழ்ச்சிக்காக வாங்கிய ஒரு கோடியே 63 லட்சத்து 77 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தையும் அரசிடம் திரும்ப கொடுக்க தயாராக இருக்கிறேன். இது அனைத்து சர்ச்சைகளையும் முடிவுக்கு கொண்டுவரும் என நம்புகிறேன்" என்று மோகன்லால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேரள அரசுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

 

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்க: அஜீத் ரசிகர்கள் போராட்டம்

சென்னை: அஜீத்துக்கு கொலை மிரட்டலும், என்னை அறிந்தால் படம் வெளியாக உள்ள தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டலும் விடுத்தவர்களை கைது செய்யக் கோரி அஜீத் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மர்ம ஆசாமிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். மேலும் அஜீத்துக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் அஜீத் ரசிகர்கள் தங்கள் தல படத்துடன் கூடிய பேனர்கள், போஸ்டர்களை ஆங்காங்கே வைத்து அசத்தி வருகிறார்கள். இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்க என்று கூறி சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்க: அஜீத் ரசிகர்கள் போராட்டம்

அந்த போஸ்டரில் கூறியிருப்பதாவது,

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த(கோழைகளை) கைது செய்!

சாவுக்கு பயந்தவனுக்கு தினம் தினம் சாவு
எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒரு தடவை தான் சாவு
எங்கள் தல யை தொடணும்னா....
எங்களை தாண்டி தொட்டுப் பாருங்கடா பார்ப்போம்...

இவ்வாறு அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர புதுவை உள்ளிட்ட சில இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யக் கோரி அஜீத் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

 

மார்ச் 27-ல் சிம்புவின் 'வாலு' ரிலீஸ்... டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார் டைரக்டர் விஜய் சந்தர்!

சென்னை: சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள வாலு திரைப்படம் மார்ச் மாதம் 27ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அதன் இயக்குநர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார்.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம், 'ஆடுகளம்' நரேன், மந்த்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இப்படத்தைத் தயாரித்துள்ளார். ஷக்தி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.

மார்ச் 27-ல் சிம்புவின் 'வாலு' ரிலீஸ்... டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார் டைரக்டர் விஜய் சந்தர்!

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதோ, அதோ என வாலு பட ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. இறுதியாக சிம்பு பிறந்த தினமான இன்று அப்படம் ரிலீசாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், சொன்னபடி படம் ரிலீசாகவில்லை.

இந்நிலையில், மார்ச் 27-ல் 'வாலு' படம் ரிலீஸ் ஆகும் என்று விஜய் சந்தர் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், சிம்பு பிறந்தநாள் பரிசாக வாலு படத்தின் டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மூன்று வருடங்களுக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளிவரும் படம் என்பதால் 'வாலு' படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு படம்', வேட்டை மன்னன் ஆகிய படங்களும் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜூராஸிக் வேர்ல்ட்... இரண்டாவது ட்ரைலர் வெளியானது!

ஜூராஸிக் பார்க்கின் நான்காவது பாகம் எனப்படும் ஜூராஸிக் வேர்ல்ட் படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஜூராஸிக் பார்க் படம் 1993-ம் ஆண்டு வெளியானது. அதன் இரண்டாம் பாகம் 1997-ம் ஆண்டு வெளியானது. இந்த இரு படங்களையும் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கினார். இரண்டுமே பெரும் வெற்றியைப் பெற்றன.

ஜூராஸிக் வேர்ல்ட்... இரண்டாவது ட்ரைலர் வெளியானது!

இதன் மூன்றாம் பாகம் 2001-வெளியானது. இதனை ஸ்பீல்பெர்க் இயக்கவில்லை. ஜோ ஜான்சன் இயக்கினார். ஸ்பீல்பெர்க் நிர்வாகத் தயாரிப்பாளராக பங்கேற்றார்.

இந்தப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்து நான்காம் பாகம் வெளியாகவிருக்கிறது. இதற்கு ஜூராஸிக் வேர்ல்ட் என்று பெயரிட்டுள்ளனர். கொலின் ட்ரவெரோ இயக்கியுள்ள இந்தப் படம் வரும் ஜூன் 12-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

ஜூராஸிக் வேர்ல்டின் முதல் ட்ரைலர் கடந்த நவம்பரில் வெளியானது. இரண்டாவது ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதல் ட்ரைலரை 5 கோடி பேருக்கும் மேல் பார்த்துள்ளனர். இரண்டாவது ட்ரைலர் வெளியான இரண்டே நாட்களில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் யுட்யூபில் பார்த்து ரசித்துள்ளனர்.

 

அமிதாப் - தனுஷைப் பார்க்க திரண்ட கூட்டம்... டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு

டெல்லியில் நடந்த ஷமிதாப் அறிமுக விழாவில் பங்கேற்ற அமிதாப் பச்சனையும் தனுஷையும் பார்க்க ஏராளமானோர் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள ஷமிதாப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்தப் படத்தின் விளம்பர வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. நாட்டின் முக்கிய நகரங்களுக்கு அமிதாப்பும் தனுஷும் நேரில் சென்று படத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

‘ஷமிதாப்' படத்தின் அறிமுக விழா புதுடெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் நேற்று நடந்தது.

அமிதாப் - தனுஷைப் பார்க்க திரண்ட கூட்டம்... டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு

இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்களைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அப்பகுதியில் திரண்டனர்.

அறிமுக விழா முடிந்து அரங்கில் இருந்து வெளியேவந்த அமிதாப் பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன் ஆகியோரை அருகில் சென்று காணவும், அவர்களுடன் ‘செல்பி' எடுத்துக் கொள்ளவும் ரசிகர்கள் முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

ரசிகர்கள் சாலையிலேயே குவிந்துவிட்டதால், பரபரப்பான கன்னாட் பிளேஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

மார்ச் 1ம் தேதி கமலின் உத்தம வில்லன் இசை வெளியீடு

சென்னை: மார்ச் 1ம் தேதி கமலின் உத்தம வில்லன் இசை வெளியீடு    

திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 1ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

படத்திற்கு கிப்ரான் இசை அமைத்துள்ளார். உத்தம வில்லன் படத்தில் விஸ்வரூபம் படத்தில் கமலுடன் நடித்த பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா நடித்துள்ளனர். மேலும் டாக்டர் விஸ்வநாத், நாசர், ஊர்வசி, ஜெயராம், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

ஐஸ்வர்யா மாதிரி ஒரு மனைவி அமைவது அரிது! - தனுஷ் பெருமிதம்

ஐஸ்வர்யா மாதிரி மனைவி அமைவது அரிது என்று பெருமையாகக் கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துள்ளார் தனுஷ். இருவருக்கும் லிங்கா, யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கருத்து வேறுபாடு என்று சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து தனுஷ் அளித்துள்ள விளக்கத்தில், "என்னை அழகாக மாற்றியவர் ஐஸ்வர்யா. என் குடும்பத்தினரையும் நன்றாக கவனித்துக் கொள்கிறார்.

ஐஸ்வர்யா மாதிரி ஒரு மனைவி அமைவது அரிது! - தனுஷ் பெருமிதம்

ஐஸ்வர்யா, எனது குழந்தைகள், சகோதரர், பெற்றோருடன் சேர்ந்து வாழ்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பிசியாக நடித்து விட்டு வீட்டுக்கு வரும்போது அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது.

தொழில் ரீதியாக என்னால் அடிக்கடி வீட்டில் இருக்க முடியாது. அப்போது ஐஸ்வர்யா குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களைப் பார்த்துக் கொள்கிறார். தன் கேரியரையும் பார்த்துக்கொள்கிறார். அவரைப் போல ஒரு மனைவி அமைவது அரிது," என்றார்.

 

போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது நடிகை சார்மியிடம் வாலிபர் செய்த வேலைய பாருங்க..!

ஹைதராபாத்: நடிகை சார்மியின் இடுப்பை பிடித்து சில்மிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி விழுந்துள்ளது.

சிசிஎல் எனப்படும் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நடிகர் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி, தெலுங்கு வாரியர்ஸ் அணியிடம் தோற்றது.

இதையடுத்து, நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது நடிகை சார்மியிடம் வாலிபர் செய்த வேலைய பாருங்க..!  

இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை சார்மி சென்றிருந்தார். அங்கு 18 வயதுடைய ரசிகர் ஒருவர் சார்மியை அணுகி ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சார்மியும் சம்மதிக்கவே, பக்கத்தில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த வாலிபர். அப்போது திடீரென சார்மியின் இடுப்பை வளைத்து பிடித்துள்ளார். போஸ் கொடுக்கவே அப்படி செய்கிறார் என்று சார்மியும் சும்மா இருந்துள்ளார். ஆனால் இடுப்பை கிள்ளி, தடவி சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார் அந்த வாலிபர்.

இதனால் கடும் கோபம் அடைந்த சார்மி, அலறியடித்தபடி அந்த ரசிகரை பிடித்து தள்ளியுள்ளார். சார்மியின் அலறலை கேட்டு விருந்தில் கலந்து கொண்ட சிலர், அந்த ரசிகருக்கு தர்மஅடி கொடுத்து விரட்டி அடித்தனர்.

இது குறித்து சார்மி கூறுகையில், "எனது பாதுகாவலர்கள் அந்த நபரை அடிக்கும்போதும், அவர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார். அவர் சைக்கோவாக இருக்கலாமோ என்று நினைத்தேன். இனி என் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவேன். அறிமுகம் இல்லாதவர்களை பக்கத்தில் நெருங்க விட மாட்டேன்" என்றார்.