ரஜினி அட்வைஸ்படி நடிக்கிறேன் - விக்ரம் பிரபு

ரஜினி அட்வைஸ்படி நடிக்கிறேன் - விக்ரம் பிரபு

சென்னை: ரஜினி சொன்ன அறிவுரையைக் கேட்டு, அதன்படி படங்களை ஒப்புக் கொள்கிறேன் என்று நடிகர் விக்ரம் பிரபு கூறினார்.

நடிகர் திலகம் சிவாஜியின் பேரன், நடிகர் பிரபுவின் மகன் பிரபு சாலமன்.

கும்கி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் பெற்ற வெற்றியால், முன்னணி இளம் நாயகனாக வலம் வருகிறார்.

இப்போது இவன் வேறு மாதிரி, சிகரம் தொடு உள்பட 3 படங்கலில் நடித்து வருகிறார்.

ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிப்பது குறித்து அவர் கூறுகையில், "ஒரே நேரத்துல நாலைந்து படங்களில் நடிப்பது என் தாத்தா, அப்பா காலத்துல சகஜம், சுலபம். இன்னைக்கு நிச்சயம் கஷ்டம். ஆனா, 'ஒரே நேரத்துல ஒரு படம் மட்டும் பண்ணாதே... ரெண்டு, மூணு படங்கள்ல நடி. அப்பத்தான் நல்ல அனுபவம் கிடைக்கும்'னு ரஜினி சார் சொன்ன அறிவுரையை ஏற்று நான் அப்படி நடிக்க ஒப்புக்கிறேன்," என்றார்.

 

சிம்பு- ஹன்சிகா... நடக்குமா... நடக்காதா?- அட பெட் கட்றாங்கப்பா!!

சிம்பு - ஹன்சிகா திருமணம் நடக்குமா நடக்காதா என பெட் கட்டும் அளவுக்குப் போய்விட்டது நிலைமை.

இந்த இருவரின் காதலும் அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே கிட்டத்தட்ட இதுதான் நிலைமை.

இப்போது ஹன்சிகாவின் அம்மா வேறு, என் மகளுக்கு திருமணத்தில் இப்போதைக்கு விருப்பமே இல்லை என்று ஸ்டேட்மென்ட் விட்டதால், இந்த திருமண பெட்டிங் சூடுபிடித்துள்ளது.

ஹன்சி கைவசம் இப்போது 7 படங்கள் உள்ளன. அவற்றில் பிரியாணி உள்ளிட்ட இரு படங்கள் மட்டும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. சிம்புவுடன் நடிக்கும் வாலு, வேட்டை மன்னன் படங்கள் வருமா வராதா என்றே தெரியாத நிலை. மேலும் 3 படங்களின் ஷூட்டிங் நடந்து கொண்டுள்ளது.

சிம்பு- ஹன்சிகா... நடக்குமா... நடக்காதா?- அட பெட் கட்றாங்கப்பா!!

தவிர, புதிய படங்களுக்கு கதை கேட்பதும், அட்வான்ஸ் வாங்குவதும் தொடர்கிறது. இந்தப் படங்கள் முடிய குறைந்தது 3 ஆண்டுகளாவது ஆகும். அதுவரை இந்தக் காதல் நிலைக்குமா.. அதுவரை இந்தக் காதலை விட்டுவைப்பாரா டாக்டர் மோனா மோத்வானி (ஹன்சிகாவின் மம்மி) என்ற கேள்விகள் தொடர்வதால், இந்த காதல் பெட்டிங்கில், சிம்புவுக்கு வெற்றி கிடைக்காது என்பவர்கள் நம்பிக்கையோடு பணம் கட்டி வருகிறார்களாம்.

சிம்பு காதல் தோற்பதில் இவ்வளவு பேருக்கு சந்தோஷமா!!

 

கதையைக் கேட்டதும் புதுமுகத்துக்கு வாய்ப்பு கொடுத்த எல்ரெட் குமார்!

தமிழ் சினிமாவில் துடிப்போடு இயங்கும் தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் எல்ரெட் குமார்.

ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா', ‘கோ', முப்பொழுதும் உன் கற்பனைகள் என அடுத்தடுத்து படங்கள் தந்தவர் எல்.ரெட் குமார்.

கதையைக் கேட்டதும் புதுமுகத்துக்கு வாய்ப்பு கொடுத்த எல்ரெட் குமார்!

தற்போது ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா-துளசி நடிக்கும் ‘யான்' படத்தை தயாரித்து வருகிறார்.

திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு தருவதிலும் முனைப்பு காட்டும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை டி.கே. என்ற இளைஞருக்குத் தந்துள்ளார். இவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்திடம் முதல் படத்திலிருந்து பணியாற்றியவர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் எல்.ரெட்குமார் கூறும்போது, ‘கோ' படத்தில் பணிபுரியும்போதே எனக்கு டி.கே.வைத் தெரியும். அவரது உழைப்பையும், தொழில் பக்தியையும் கண்டு வியந்து இருக்கிறேன். கதையை கேட்டவுடனேயே இப்படத்தை தயாரிப்பது என முடிவு செய்துவிட்டேன். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தலைப்பு பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்,' என்றார்.

 

விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது! - ரஜினி வருத்தம்

சென்னை: இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது. பிலிம்சேம்பர் அழைப்பை நம்பி போனது தவறாகிவிட்டது, என சூப்பர் ஸ்டார் ரஜினி வருத்தப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

நான்கு நாட்கள் நடந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழா கிளப்பியுள்ள சர்ச்சைகள், கசப்புணர்வுகள், அடுத்த ஆட்சி மாற்றம் நிகழும் வரை நீடிக்கும் போலிருக்கிறது.

விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது! - ரஜினி வருத்தம்

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், இளையராஜா போன்றவர்களை அழைத்து அவமானப்படுத்தியதும், கருணாநிதி, ரஹ்மான் போன்றவர்களை அழைக்காமல் அவமதித்ததும் தமிழ் சினிமா உலகம் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

ரஜினியை கடைசி வரிசையில் கடைசி நாற்காலியில் உட்கார வைத்தது குறித்து திமுக தலைவர் கருணாநிதி பெரும் வருத்தமும் கண்டனமும் தெரிவித்திருந்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்டபோது ஏற்பட்ட அவமரியாதை குறித்து, தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம், 'விழாவிற்கு நான் சென்றிருக்கக் கூடாது. ஃபிலிம் சேம்பர் அழைத்ததே என்பதற்காகத்தான் போயிருந்தேன். அது தவறாகிவிட்டது. ரொம்ப ரொம்ப அவமானப்படுத்தி விட்டார்கள். ஒவ்வொரு கலைஞனும் இந்த விழாவில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறான்', என்று தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது! - ரஜினி வருத்தம்

மற்ற கலைஞர்கள் தங்கள் வேதனையைக் கூட வெளிப்படுத்த முடியாத சங்கடத்தில் உள்ளனர்.

 

ரஜினி சொல்லிட்டார்.. மத்தவங்களால சொல்ல முடியல! - கடும் அதிருப்தியில் திரையுலகினர்

சென்னை: சினிமா நூற்றாண்டு விழாவில் தனக்கு நேர்ந்த அவமானத்தை ரஜினி வெளிப்படையாக சொல்லிவிட்டார். மற்றவர்களால் சொல்ல முடியவில்லை என்று விழாவில் பங்கேற்ற பலரும் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்திய சினிமா நூற்றாண்டு விழா குறித்த விமர்சனங்கள் இப்போது பரபரப்பாக மீடியாவில் வர ஆரம்பித்துள்ளன.

இதை மேலும் பரபரப்பாக்கியுள்ளது திமுக தலைவர் கருணாநிதியின் அறிக்கை. அந்த அறிக்கையில் தன் விமர்சனத்தை விட, பத்திரிகைகளில் வந்த விமர்சனங்களை ஹைலைட்டாக்கியுள்ளார் கருணாநிதி. அதுமட்டுமல்ல, செய்தியை எழுதியவர்களை பெயரைக் கூட அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து சினிமா உலகைச் சேர்ந்த, விழாவில் புறக்கணிக்கப்பட்ட முக்கியமானவர்கள் பலரும் அடுத்து என்ன செய்வது என கூடிப் பேசி வருகிறார்கள்.

விழாவில் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து ரஜினி நண்பர்களிடம் வருத்தப்பட்டுப் பேசியது செய்தியாக வெளியான பிறகு, இதே நிலைக்கு ஆளான மற்ற கலைஞர்களும் வாய் விட்டுப் புலம்பி வருகிறார்கள். "அவராவது பரவால்ல, வாய்விட்டு சொல்லிவிட்டார். நாம பேசுனா... அதையும் யாராவது போட்டுக் குடுத்துட்டா என்ன பண்றது" என்றாராம் அந்த சாதனை நடிகர்.

ரஜினி சொல்லிட்டார்.. மத்தவங்களால சொல்ல முடியல! - கடும் அதிருப்தியில் திரையுலகினர்

இந்த நிகழ்வுகள் குறித்து ஒரு கூட்டறிக்கை வெளியிடலாமா என்ற யோசனையும் உள்ளதாம்.

ஆனால், அடுத்த ஆட்சி மாற்றம் வரை அமைதியாகப் போகலாம். அரசு நிதியை கை நீட்டி வாங்கிய பின் கோபப்படுவதில் அர்த்தமில்லை என்று முதல்வருக்குப் பக்கத்து இருக்கைகளில் உட்கார்ந்திருந்த தயாரிப்பாளர்கள் இருவர் அதிருப்தியாளர்களை அமைதிப்படுத்தி வருகிறார்களாம்.

 

முருகதாஸ் படத்தில் விஜய்யின் ஜோடி சமந்தா!

சென்னை: விஜய்யை வைத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா நடிப்பார் என முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் இணைந்த முதல் படம் துப்பாக்கி. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைகின்றனர்.

இதனை விஜய்யும் உறுதி செய்துள்ளார்.

முருகதாஸ் படத்தில் விஜய்யின் ஜோடி சமந்தா!

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு அதிரடி என தலைப்பு வைத்திருப்பதாக தகவல் பரவியது.

ஆனால் அதை இயக்குநர் முருகதாஸ் மறுத்துவிட்டார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.

அதேநேரம் கதாநாயகியாக சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ‘கொலவெறி' புகழ் அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இவர் முருகதாஸ் தயாரிப்பில் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ராஜாராணி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய ஹீரோவுக்கு ஜோடியாக தமிழில் இப்போதுதான் முதல்முறையாக ஒப்பந்தமாகியுள்ளார் சமந்தா. கடந்த ஆண்டு அவர் ஒப்பந்தமான பெரிய படங்களிலிருந்து திடீரென விலகியது நினைவிருக்கலாம்.

 

தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பு கிடையாது! - மீண்டும் ஒலிக்கும் பாரதிராஜா குரல்

சென்னை: தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பு கிடையாது... இனி தமிழ் சினிமாவுக்கென தனி சங்கங்கள் வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா குரல் கொடுத்துள்ளார்.

ஞானக்கிறுக்கன் படத்தின் இசையை வெளியிட்ட பாரதிராஜா, பின்னர் பேசியதாவது:

சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதல் வரவில்லை என ஆர்.கே. செல்வமணி வருத்தப்பட்டார். பார்த்திபன் என்னை கவுரவித்தார்.

தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பு கிடையாது! - மீண்டும் ஒலிக்கும் பாரதிராஜா குரல்

முதுகெலும்பு கிடையாது

தமிழ் திரையுலகுக்கு முதுகெலும்பு கிடையாது. தென்னிந்திய வர்த்தக சபை என்று இருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பல வருடங்களாக இதை எதிர்த்து வருகிறோம்.

சினிமா இங்கு உருவாகியபோது தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் என ஆரம்பிக்கப்பட்டன. எல்லா மொழி கலைஞர்களும் அப்போது சென்னையில்தான் இருந்தார்கள்.

மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும் கர்நாடகத்தில் இருக்கும் நடிகர்கள் கன்னட நடிகர் சங்கம் என உருவாக்கினார்கள். ஆந்திராவில் தெலுங்கு நடிகர் சங்கமும், கேரளாவில் மலையாள நடிகர்கள் சங்கமும் தோன்றின.

தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பு கிடையாது! - மீண்டும் ஒலிக்கும் பாரதிராஜா குரல்

அநாதைகளாக..

கன்னட- தெலுங்கு திரைப்பட வர்த்தக சபைகளும் உருவாயின. ஆனால் தமிழகத்தில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம், தென் இந்திய வர்த்தக சபை என்றே நீடிக்கிறது. அதனால்தான் சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழை எதிர்பார்த்து அனாதையாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

தமிழ் கலைஞர்களுக்கு தனி சங்கங்கள் இருந்திருந்தால் அழைப்பிதழ்கள் வீடு தேடி வந்து இருக்கும். நமக்கு சுய இடம், சுய அதிகாரம் வேண்டும். அப்போதுதான் உருப்படுவோம். அதற்கு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட வர்த்தக சபை உருவாக வேண்டும்.

'ஞான கிறுக்கன்' படத்தின் இயக்குனர் இளைய தேவன் என் மண்ணின் மைந்தன். என்னைப்போல் ஒப்பனை, பூச்சு எதுவும் இன்றி யதார்த்தமான கிராமத்து கதையை படமாக எடுத்துள்ளார். என் பாதையில் அவர் வருகிறார்," என்றார்.