இளையராஜாவுக்கு ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் தேசிய விருது!

மும்பை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் விருது வழங்கப்பட்டது.

நேற்று (13.12.2014)மாலை மும்பையில் காஞ்சி காமகோடி மஹாபெரியவர் ஜகத்குரு ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

ஜெயேந்திரர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை அர்ப்பணிப்பினைப் பாராட்டி அவருக்கு விருது வழங்கப்பட்டது.

இளையராஜாவுக்கு ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் தேசிய விருது!

விருதினையும், பாராட்டுப் பத்திரம் மற்றும் நினைவுப் பரிசினையும் பெற்றுக்கொண்டு இசைஞானி ஆற்றிய உரை:

இவ்வரிய வாய்ப்பினை வழங்கிய இறைவனுக்கு நன்றி. குருவருள் இல்லாது இறையருள் கிடைக்காது. இறையருள் இல்லாது குருவருள் கிடையாது. அருள்வழங்குவது இறைவனின் வேலை கிடையாது. எந்த வேலையும் இல்லாதவன் இறைவன். ஏனென்றால் அருளே இறைவன்தான். எப்படி சூரியன் ஒளி வீசுகிறதோ அனல் வழங்குகிறதோ அதுபோன்று.

இளையராஜாவுக்கு ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் தேசிய விருது!

பொதுவாக விருதுகளைப் பொருட்படுத்துவதில்லை. ஒருமுறை வெளிநாட்டில் உள்ள முக்கியமான அமைப்பு ஒன்று எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற அழைத்தார்கள். பல தரப்பிலிருந்தும் வற்புறுத்தினார்கள். நான் மறுத்துவிட்டேன் ஏனென்றால் எனது வேலை இன்னும் முடிவுபெறவில்லை. இன்றும் காலை ஏழு மணிக்கெல்லாம் இசைப்பணியினை தொடங்கிவிடுகிறேன்.

எனக்கு இசை வழிகாட்டி யாரும் கிடையாது. ஒருவேளை வழிகாட்டி யாரேனும் இருந்திருந்தால் இவ்விடத்திற்கு வந்திருக்கமுடியாது என்றுதான் நினைக்கிறேன். எனக்கு இசை தெரியாது தெரிந்துவிட்டால் அது முடிவுபெற்றுவிடும்.

இன்னும் கற்று வருகிறேன். பெரியவாளின் அருளினைப் பெற இங்கு வந்திருக்கிறேன். இதனை பெரும் பாக்யமாக நான் கருதுகிறேன்," என்றார்.

உத்திரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக்குக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

 

சண்டைக்கோழி - 2... இதிலும் விஷாலுக்கு அப்பா ராஜ்கிரண் தான் !

சென்னை: சண்டைக்கோழி இரண்டாம் பாகத்திலும் விஷாலின் அப்பாவாக ராஜ்கிரண் தான் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வெற்றி பெற்ற படம் சண்டைக்கோழி. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மினும், அப்பாவாக ராஜ்கிரணும் நடித்திருந்தனர்.

சண்டைக்கோழி - 2... இதிலும் விஷாலுக்கு அப்பா ராஜ்கிரண் தான் !

சமீபத்தில் சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கிய அஞ்சான் படம் தோல்வியைத் தழுவியது. அதைத் தொடர்ந்து, சண்டைக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் லிங்குசாமி.

சண்டைக்கோழி இரண்டாம் பாகத்திலும் விஷாலே நாயகனாக நடிப்பார் என்று கூறப்பட்டது. விஷாலும் இத்தகவலை ஏறக்குறைய உறுதி செய்து விட்டார். விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில், இப்படத்திலும், முதல் பாகத்தில் விஷாலின் அப்பாவாக நடித்த ராஜ்கிரணே அப்பாவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, முதல் பாகத்தில் வில்லனாக நடித்த லாலே இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறாராம்.

ஆனால், நாயகி வேடத்திற்கு மட்டும் மீராஜாஸ்மினுக்குப் பதில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

 

இயக்குனரின் காமெடி தம்பிக்கு ஆப்பு வைத்த சிங்கம்

சென்னை: பெயரில் ராஜாவை வைத்திருக்கும் இயக்குனர் படத்தில் நடித்து வரும் சிங்கம் காமெடி நடிகர் வரும் காட்சிகளை குறைக்குமாறு தெரிவித்துவிட்டாராம்.

சிங்கம் தனது தம்பியை வைத்து இயக்கிய பெயரில் ராஜாவை வைத்திருக்கும் இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வழக்கம் போன்று இந்த படத்திலும் தனது காமெடி தம்பிக்கு ஏகப்பட்ட காட்சிகளை வைத்திருந்தாராம். படம் முழுக்க தம்பி சிங்கத்துடன் வருவது போன்று கதை அமைத்திருந்தாராம்.

தம்பியின் கதாபாத்திரம் சிங்கத்தையே கிண்டல் செய்வது போன்று காட்சிகள் இருந்ததாம். இதை எல்லாம் அறிந்த சிங்கம் தம்பி நடிகரின் காட்சிகளை குறைத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டாராம். மேலும் தன்னை கிண்டல் செய்யும் வேலை எல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டாராம் சிங்கம்.

இதனால் காமெடி நடிகர் சிங்கம் மீது கோபத்தில் உள்ளாராம். அண்ணனின் இந்த படத்தில் நடிப்பதற்காக தம்பி கால்ஷீட்டை வாரி வழங்கி இருந்தாராம். இந்நிலையில் அவரது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாம்.