போதையில் ரகளை: முன்னாள் கவர்ச்சி நடிகை மாயா மகன் கைது


குடித்துவிட்டு ரகளை செய்த முன்னாள் கவர்ச்சி நடிகை மாயாவின் மகன் கைது செய்யப்பட்டார்.

கவர்ச்சி நடிகை மாயாவின் மகன் விக்னேஷ்குமார். இவர் குடித்துவிட்டு போதையில் பொது இடத்தில் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து விருகம்பாக்கம் போலீசில் அப்பகுதிவாசிகள் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து விக்னேஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது பொது இடத்தில் தகராறு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே இவர் இதே போன்ற காரணங்களுக்காக போலீசாரால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

மாயா மற்றும் அவரது உறவினர்கள் தொடர்ந்து பல காரணங்களுக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டோ எச்சரிக்கப்பட்டோ வந்துள்ளனர். நடிகை சீதாவுடன் தகராறு, விபச்சார குற்றச்சாட்டு, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தகராறு என பல்வேறு பிரச்சினைகளில் இவர்கள் காவல் நிலையம் சென்று வந்துள்ளனர். மாயாவின் உறவினர் கவர்ச்சி நடிகை பாபிலோனாவும் இதில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

'டாப்லெஸ்' காஜல்... கடுப்பில் சூர்யா!


பிரபல பேஷன் பத்திரிகையான ‘எப்எச்எம்’மில் (FHM) டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

ஆங்கிலத்தில் வெளியாகும் இந்தப் பத்திரிகையின் அட்டையிலேயே காஜலின் இந்த தாறுமாறான கவர்ச்சி படம் வெளியாகியுள்ளது. மேலுடை ஏதும் அணியாமல், மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியபடி அவர் போஸ் கொடுத்துள்ளார்.

அவரது இந்த கவர்ச்சிப் படம் பல்வேறு விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.

பாலிவுட்டில் வாய்ப்புகளைப் பிடிக்கவே இந்த குறுக்கு வழியை அவர் கையாண்டிருப்பதாக பாலிவுட் பத்திரிகைகள் கிண்டலடித்துள்ளன.

அதேநேரம் இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட சூர்யா மகா கோபத்தில் உள்ளாராம். காரணம் கேவி ஆனந்த் இயக்கும் அவரது அடுத்த படமான மாற்றான் நாயகி காஜல்தான்.

ஏற்கெனவே நான் மும்பைக்காரி, என்னை தென்னிந்திய நடிகை என்று அழைக்காதீர்கள் என்று பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட காஜலுக்கு வக்காலத்து வாங்கி மீண்டும் அவரை தமிழில் நடிக்க வைத்திருந்தார்கள் கேவி ஆனந்த், சூர்யா போன்றோர். இப்போது டாப்லெஸ் போஸ் கொடுத்திருப்பது படத்துக்கு எதிர்மறை பப்ளிசிட்டியாகிவிடுமோ என்று யோசிக்கிறார்களாம்!

 

கார்த்திக் மகனும் ராதா மகளும்....


பழைய நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதமும் நடிகை ராதாவின் இரண்டாவது மகள் துளசியும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். அது வேறு யார் படமும் அல்ல… பிரபல இயக்குநர் மணிரத்னம் படம்.

கார்த்திக் – ராதா இருவரும் பாரதிராஜா மூலம் அறிமுகமானவர்கள். இவர்கள் இருவருமே ஒரு காலத்தில் ஓஹோ என்று பேசப்பட்ட ஜோடி. இருவரைப் பற்றியும் வராத கிசுகிசுக்களே இல்லை.

திருமணத்துக்குப் பிறகு ராதா நடிக்கவில்லை. தனது மூத்த மகளுக்கு அவர் கார்த்திகா எனப் பெயர் வைத்தார். இப்போது கோ பட வெற்றிக்குப் பிறகு கார்த்திகா வளரும் நடிகைகளில் முக்கிய இடம் பிடித்துள்ளார்.

அடுத்து ராதாவின் இன்னொரு மகள் துளசியும் நடிக்க வருகிறார். இவரை தனது அடுத்த படத்தின் நாயகியாக அறிமுகப்படுத்தும் மணிரத்தனம், அவருக்கு ஜோடியாக கார்த்திக் மகன் கவுதமை தேர்வு செய்துள்ளார். இந்திய சினிமாவில் முன்னாள் ஹீரோவின் மகனும் அவரது ஜோடி நடிகையின் மகளும் ஜோடியாக அறிமுகமாவது இதுவே முதல் முறை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!

இலங்கை ராணுவத்தால் துன்புறுத்தப் படும் தமிழக மீனவர்களின் பிரச்சினையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் காதல் கதை இந்தப் படம்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

 

கமலுடன் நடிக்க அனுஷ்கா மறுப்பு... புதிய ஜோடி சமீரா?


கமல் நடித்து இயக்கும் விஸ்வரூபம் படத்தின் ஹீரோயின் விஷயத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இப்போது கமல் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அனுஷ்காவும் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்புக்கு இருவரும் ஜோர்டன் செல்லப்போவதாக கூறப்பட்ட நிலையில் இந்த தகவல் வெளியாகியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக சத்ருகன் சின்ஹா மகள் சோனாக்ஷி ஒப்பந்தமானார். படத்தை துவங்குவதில் ஏற்பட்ட அசாசாரண காலதாமதம் மற்றும் இயக்குநர் செல்வராகவன் மாற்றப்பட்டது போன்றவற்றால், படத்திலிருந்தே விலகிக் கொண்டார் சோனாக்ஷி.

இதன் பிறகுதான் அனுஷ்காவை ஒப்பந்தம் செய்திருந்தனர்.

ஆனால் இப்போது, அனுஷ்கா தனது கால்ஷீட்டை செல்வராகவன் படத்துக்கு கொடுத்துவிட்டதால், கமல் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளாராம்.

அனுஷ்காவுக்கு பதில் சமீரா ரெட்டி கமல் ஜோடியாக நடிப்பார் எனத் தெரிகிறது.

 

பிரபாகரன் தலைப்பை மாற்றியது ஏன்? - பிரபுதேவா விளக்கம்


பிரபாகரன் என் தலைப்பு பவர்புல்லானது. ஆனால் அதைப் பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியதால் வெடி என்ற தலைப்பை வைத்தேன், என இயக்குநர் பிரபு தேவா கூறினார்.

விஷால், சமீரா ரெட்டி ஜோடியாக நடிக்கும் படம் வெடி. பிரபு தேவா இயக்குகிறார். ஜிகே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கிறது.

இப்படத்துக்கு முதலில் பிரபாகரன் என பெயர் வைத்தனர். ஒரு வணிக ரீதியான மசாலா படத்துக்கு விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன் பெயரைச் சூட்டுவது, அந்த மாபெரும் தலைவரை இழிவுபடுத்துவதாக தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்புகள் தெரிவித்து அறிக்கைகள் விட்டனர்.

இதையடுத்து படத்தின் தலைப்பு வெடி என மாற்றிவிட்டார் பிரபுதேவா (வெடியையும் புலிகளையும் மட்டும் பிரிக்க முடியுமா!).

இதுகுறித்து நிருபர்களிடம் பிரபுதேவா கூறுகையில், "தெலுங்கில் ஹிட்டான 'சௌரியம்' படத்தின் தமிழ் ரீமேக்கே வெடி. இதில் விஷாலின் கேரக்டர் பெயர் பிரபாகரன்.

இதையே படத்தின் தலைப்பாக்கினோம். நல்ல பவர்புல் தலைப்பு. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் எதற்கு வீண் சர்ச்சை எனக் கருதி, வெடி என மாற்றி பெயர் வைத்தோம். இம் மாதம் இறுதியில் இப்படம் ரிலீசாகிறது.

விஷால், சமீரா ரெட்டி இருவரும் கேரக்டர்களுக்கு கச்சிதமாக பொருந்தி விட்டனர். அருமையாக வந்துள்ளது படம்," என்றார்.
 

அறுவை சிகிச்சை: இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் நடிக்கும் சல்மான்


நரம்புக் கோளாறுக்காக அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகர் சல்மான் கான் இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் நடிப்பைத் தொடங்குவார் என்று அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சல்மான் கானுக்கு டிரைஜெமினல் நியூரால்ஜியா(Trigeminal Neuralgia) என்னும் நரம்புப் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவரது தாடைப் பகுதியில் வலி ஏற்பட்டு அவஸ்தை பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது.

இது குறித்து சல்மானின் தங்கை கணவர் அதுல் அக்னிஹோத்ரி பிடிஐ-க்கு கூறியதாவது,

அவர் தற்போது நலமாக உள்ளார். படப்பிடிப்பைத் துவங்கும் முன்பு ஓய்வு எடுக்குமாறு அவரை மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளனர். மருத்துவர்கள் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர் வரும் 10-ம் தேதி வாக்கில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். அவரிடம் பாடிகார்ட் படம் எப்படி ஓடுகிறது என்பது பற்றி அவ்வப்போது தெரிவித்து வருகிறோம். படம் நன்றாக ஓடுவதால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார். இது அவருக்கு முக்கியமான படம் என்றார்.

யாஷ் சோப்ராவின் ஏக் தா டைகர் படத்திற்காக சல்மான் தென் ஆப்பிரிக்கா செல்லவிருக்கிறார்.

சல்மான், கரீனா கபூர் நடித்துள்ள பாடிகார்ட் தபாங், மை நேம் இஸ் கான் பட சாதனைகளை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

ரஜினியிடமிருந்து பாராட்டு.... உற்சாகத்தில் ராகவா லாரன்ஸ்!


நல்ல விஷயத்தைப் பாராட்டுவதில் யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத உயரத்திலிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. காரணம் அவர் பாராட்டு உளப்பூர்வமானது. எதிர்ப்பார்ப்புகள், தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட உண்மையான பாராட்டு.

அந்த வகையில் ரஜினியிடம் சமீபத்தில் பாராட்டுப் பெற்றவர் ராகவா லாரன்ஸ்.

ரஜினியை தான் வணங்கும் ராகவேந்திரருக்கு சமமான அந்தஸ்தில் வைத்துப் போற்றுபவர் லாரன்ஸ். காரணம் லாரன்ஸை சினிமாவுக்குள் கொண்டுவந்தவரே ரஜினிதான். தானே கட்டணம் செலுத்தி லாரன்ஸை நடனக் கலைஞர்கள் சங்கத்தில் சேர்த்துவிட்டு, தன் படங்களில் வாய்ப்பு கொடுத்தவர் ரஜினி. இன்று லாரன்ஸ் இந்த உயரத்திலிருக்க முக்கிய காரணம் ரஜினிதான்.

அந்த நன்றியை இன்றும் மறக்காத லாரன்ஸ், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அதை நிரூபித்து வருகிறார்.

தற்போது தனது இயககத்தில் வெளிவந்து சக்கைப் போடு போடும் காஞ்சனாவில் கூட, ஒரு பாடலில் ரஜினியின் பெருமையை சொல்லும் லாரன்ஸ், இந்தப் படம் ரஜினி ரசிகனின் வெற்றி என்று கூறியிருப்பார்.

இந்தப் படத்தை எப்படியாவது ரஜினிக்கு காட்ட விரும்பினாராம் லாரன்ஸ்.

இவரது விருப்பம் அறிந்த ரஜினி, ஓ.கே சொல்ல, பிரத்யேகமாக ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டிலேயே படத்தை திரையிட்டு காட்டியிருக்கிறார் லாரன்ஸ்.

படத்தைப் பார்த்து முடித்ததும் லாரன்ஸை வெகுவாகப் பாராட்டியுள்ளார் ரஜினி. அப்படியே மறக்காமல், படத்தில் காஞ்சனாவாக நடித்த சரத்குமாரையும் பாராட்டியுள்ளார் ரஜினி. ஒரு பக்கம் பாக்ஸ் ஆபீஸில் காஞ்சனா சாதனை படைத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தன் 'கடவுளே' படத்தைப் பார்த்து பாராட்டு மழை பொழிய, சந்தோஷத்தில் மிதக்கிறார் லாரன்ஸ்!
 

சல்மான் கோபிக்கக் கூடாது, அஜீத்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்-பியா


மங்காத்தா படத்தைப் பார்த்த பின்னர் நான் அஜீத்தின் முழுமையான ரசிகையாகி விட்டேன். சல்மான் கான் கோபித்துக் கொள்ளக் கூடாது, அஜீத்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார் நடிகை பியா பாஜ்பாய்.

கோவா படத்தில் நடித்தவர் பியா. அஜீத்துடன் ஏகன் படத்திலும் நடித்தார். அதில் 2வது நாயகியாக வந்தார் பியா. சமீபத்தில் வெளியான கோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் மங்காத்தா படத்தைப் பார்த்து உருகிப் போய் ட்விட்டரில் எழுதியுள்ளார் பியா.

அதில், மங்காத்தா பார்த்தேன். ஒட்டுமொத்தப் படத்தையும் அஜீத் தாங்கி நிறுத்தியுள்ளார். மனதைக் கவர்ந்து விட்டது அவரது நடிப்பு. அப்படியே உருகிப் போய் விட்டேன். அவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார். ஸாரி, சல்மான் கான். இப்போது நான் அஜீத்தின் முழுமையான ரசிகையாகி விட்டேன் என்று கூறியுள்ளார் பியா.
 

உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு அனுமதி மறுப்பு!


உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ராஜேஷ் இயக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடியில் உதயநிதி - ஹன்ஸிகா நடிக்கின்றனர். இந்தப் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது.

இதற்கு முன்பு படப்பிடிப்பு நடந்த போது அனுமதிக்கும் சரி, அந்தந்தப் பகுதியில் உள்ளவர்களும் சரி பெரிய அளவில் உதயநிதி ஸ்டாலின் குழுவினருக்கு வரவேற்பு கொடுத்து வந்தனர்.

இப்போது ஏற்கனவே படப்பிடிப்பு நடந்த இடங்களில் சில சீன்களை எடுத்து சேர்க்க இயக்குநர் ராஜேஷ் முடிவு செய்து, அப்பகுதிகளுக்கு சென்றபோது முன்புபோல் வரவேற்பே இல்லையாம்.

அதுமட்டுமல்ல, படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை என்று முகத்தில் அடித்தது போல் சொல்கிறார்களாம். யாரிடம் போய் கேட்பது என்று தெரியாமல் கையை பிசைந்து நிற்கிறார்களாம் படக்குழுவினர்.

இதனால், வேறு மாநிலங்களில் அதேபோன்ற பகுதிகளைத் தேடி வருகிறார்களாம் படப்பிடிப்புக்காக.
 

சொன்னதைச் செய்தார் பூனம் பாண்டே-90% நிர்வாணத்துடன் போஸ்!


 

'மொட்டை போட்ட' வெங்கட் பிரபு!


மங்காத்தா படம் முடிந்து வெளியான கையோடு, மொட்டை போட்டுக் கொண்டுள்ளார் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு.

இந்தப் படம் ஆரம்பித்ததும் அவர் தாடி வளர்க்க ஆரம்பித்தார். படமும் தாடியும் வளர்ந்து, கடந்த வாரம் மங்காத்தா திரைகளைத் தொட்டது. படம் ஹிட் என்று ரிப்போர்ட் வர ஆரம்பித்ததும், அதை பெரிய வெற்றியாகக் காட்ட பல்வேறு முயற்சிகளை மங்காத்தா டீம் செய்ய ஆரம்பித்துவிட்டது.

இப்போது திருப்பதிக்குப் போய் முடி காணிக்கை செலுத்தியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. காரணம், படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டதாம்.

அசலை விட மங்காத்தா ஓகே என்பதுதான் பாக்ஸ் ஆபீஸில் இப்போதைய ரிப்போர்ட். அதுவும் முதல் 5 நாட்கள் விடுமுறை என்பதால், கிடைத்த பெரிய ஓபனிங்தான் காரணம்.

இப்போது விடுமுறை முடிந்து, இயல்பு நிலை திரும்பியுள்ளது. நாளையிலிருந்து நிலவரம் எப்படி என்பதைப் பொறுத்தே மங்காத்தா வெற்றி நிர்ணயிக்கப்படும்.

இந்த 2011-ஐப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் பெரிய வெற்றி (பிளாக்பஸ்டர்) என்றால் அது ராகவா லாரன்ஸின் காஞ்சனா பெற்றுள்ள வெற்றிதான். இன்றும்கூட இரவு இரண்டாம் காட்சிக்கு கூட்டம் அலை மோதுகிறது இந்தப் படத்துக்கு.

வெறும் ரூ 4 கோடியில் எடுக்கப்பட்ட 'காஞ்சனா' இன்றுவரை ரூ 48 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் சொல்கின்றன. தெலுங்கில் ரூ 2.5 கோடிக்கு இந்தப் படம் விற்கப்பட்டது. அங்கு இதுவரை ரூ 20 கோடியைத் தாண்டிவிட்டதாம்!

ஆனால் மங்காத்தா ரூ 40 கோடியில் தயாரானதாக கூறுகிறார்கள். முதல் 5 நாள் வசூல் இன்னும் 20 கோடிக்குள்தான் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். புறநகர் திரையரங்குகளில் முன்புபோல இஷ்டத்துக்கும் டிக்கெட் விற்க முடியாத நிலை. இனி வரும் நாட்கள்தான் மங்காத்தா எந்த அளவு வெற்றி என்பதை தெளிவாகக் கூறும்!