அதுவேற இது வேற - இமான் அண்ணாச்சிதான் மெயின் காமெடியன்!

இதுவரை சைடு ரோல்களில் தலைகாட்டி வந்த இமான் அண்ணாச்சி, அதுவேற இது வேற என்ற படத்தில் மெயின் காமெடியனாக மாறியுள்ளார்.

களிகை ஜி ஜெயசீலன் வழங்க, ஜெனி பவர்புல் மீடியா படநிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம் இது.

இந்த படத்தில் வர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சானியாதாரா நடிக்கிறார். இமான் அண்ணாச்சி, கஞ்சாகருப்பு, சிங்கமுத்து, ஷகீலா ஆகியோர் காமெடி கூட்டணி அமைத்துள்ளனர் இந்தப் படத்தில். இமானுக்கு படம் முழுக்க வருவது போன்ற மெயின் காமெடியன் வேடம்.

அதுவேற இது வேற - இமான் அண்ணாச்சிதான் மெயின் காமெடியன்!

ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்ய, தாஜ்நூர் இசையமைக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் திலகராஜனிடம் கேட்டபோது, "இந்த சென்னை மாநகரத்திற்கு வருபவர்கள் டாக்டராகவேண்டும், வக்கீலாக, மந்திரியாக, தொழிலதிபராக, நடிகராக வேண்டும் என்ற கனவுகளுடன் தான் வருவார்கள் ஆனால் நம்ம ஹீரோ குருசாமி வந்த காரணமே வேறு!

அப்படி வந்தவனுக்கு காதல் வருகிறது. காதல் கைகூடி வருகிற நேரத்தில் செய்யாத ஒரு கொலைக் குற்றவாளியாகிறான். அந்தப் பழி அவனை எப்படியெல்லாம் கஷ்டப் படுத்துகிறது அதிலிருந்து அவன் மீண்டானா? - இதுதான் கதை.

இதை காமெடியாக கதை சொல்லி இருக்கிறோம். தியேட்டரில் சிரிப்பு அலை அலையாக கேட்கும் அந்தளவுக்கு காமெடியாக காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன," என்றார்.

அதுவேற இது வேற - இமான் அண்ணாச்சிதான் மெயின் காமெடியன்!
 

30வது பிறந்த நாளைக் கொண்டாட லண்டன் பறந்த தனுஷ்!

30வது பிறந்த நாளைக் கொண்டாட லண்டன் பறந்த தனுஷ்!

நாளை மறுநாள் தனுஷுக்கு 30வயது. இந்த பிறந்த நாளைக் கொண்டாட லண்டன் பறந்துவிட்டார், தனது நெருங்கிய நண்பர்களுடன் தனுஷ்.

தனுஷைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மறக்க முடியாதது. அவரது முதல் இந்திப் படம் ராஞ்ஜனா பெரும் வெற்றி பெற்று, ரூ 100 கோடியை அள்ளியுள்ளுத.

மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்துக்காக 2 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.

மரியான் படம் தமிழில் சரியாகப் போகவில்லை என்றாலும் அவர் நடிப்புக்கு ஏக பாராட்டுகள். எனவே மிக சந்தோஷமாக இந்த பிறந்த நாளை அவர் கொண்டாடுகிறார்.

தனுஷுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் நடிகர் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோரும் செல்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத்தும் அவர்களுடன் பின்னர் கலந்து கொள்கிறார். வணக்கம் சென்னை படத்தின் பாடல் வெளியீடு சனிக்கிழமை முடிந்ததும் அன்று மாலை லண்டன் புறப்படுகிறார் அனிருத்.

அட்வான்ஸ் வாழ்த்துகள் தனுஷ்!

 

'கருப்பண்ணே.. எங்க ஊருக்கு ஒரு போர்வெல்!'

'கருப்பண்ணே.. எங்க ஊருக்கு ஒரு போர்வெல்!'

எங்க ஊருக்கு ஒரு போர்வெல் போட்டுத்தாங்கண்ணே... என்ற கோரிக்கைக் குரல்கள் இப்போது மனுக்களாகக் குவிகிறதாம் நடிகர் கஞ்சா கருப்புவிடம்.

இவர் எப்போ எம்எல்ஏ அல்லது கவுன்சிலரானார் என்று யோசிக்க வேண்டாம். கருப்பு இப்போது சொந்தமாக வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். ‘அங்காடி தெரு' மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஆருஷி நாயகியாக நடிக்கிறார். ‘மலையன்' என்ற படத்தை இயக்கிய கோபி இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை, காரைக்குடி, நாட்டரசன் கோட்டை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இப்படத்திற்காக ரூ.20 லட்சம் செலவில் ஒரு புது போர்வெல் லாரியை கஞ்சா கருப்பு வாங்கி இருக்கிறாராம். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் எந்த ஊரில் தண்ணீர் இல்லையோ அந்த ஊருக்கு லாரியை கொண்டு சென்று இலவசமாகவே போர்வெல் போட்டுக் கொடுக்கிறாராம். இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல் போட்டுக் கொடுத்திருக்கிறாராம் கருப்பு.

இதைக் கேள்விப்பட்ட மக்கள், தங்கள் ஊர்களிலும் போர்வெல் போடச்சொல்லி 100-க்கும் மேற்பட்ட மனுக்களை கஞ்சா கருப்புவுக்கு அனுப்பியுள்ளார்களாம்.

இவரும் சளைக்காமல் எல்லா மனுக்களுக்கும் பதில் அனுப்பியதோடு, மனு கொடுத்த ஊருக்கும் போய் பார்த்து தேவையென்றால் போட்டுத் தருவதாக வாக்களித்துள்ளாராம்.

படப்பிடிப்பு முடிவதற்குள் எல்லா ஊர்களுக்கும் வந்து போர்வெல் போட்டுத் தந்திடறோம்ணே.. கவலய விடுங்க என ஆறுதல் வார்த்தை சொல்லி அனுப்பும் கருப்புதான் இப்போ காரைக்குடி பக்கத்துல நிஜ ஹீரோ!

 

இன்னொரு வாட்டி லவ்வே வேணாம்பா! - களைத்துப் போன நயன்தாரா

காதலில் விழுந்து எழுந்து விழுந்து மீண்டும் எழுந்து... ரொம்ப களைத்துவிட்டாராம் நயன்தாரா. எனவே இன்னொரு முறை காதலில் விழும் அனுபவம் வேண்டாம் என்கிறார்.

சிம்பு, தனுஷ், பிரபுதேவா, இப்போது ஆர்யா என பலருடனும் கிசுகிசுக்கப்பட்டு, பின்னர் வெளிப்படையாக காதல் பேசி, கொஞ்ச நாளில் முறித்துக் கொண்டு வெளியில் வந்தவர் நயன்தாரா.

எத்தனை காதல் கிசுகிசுக்களில் அடிபட்டாலும் மீண்டும் தனக்கு கிடைக்கும் முக்கியத்துவம் அவருக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், "இப்போது நான் தனியாக இருக்கிறேன். எந்த சிக்கலும் இல்லை. வாழ்க்கை தெளிவாகப் போய்க் கொண்டிருக்கிறது. நிறைவான பாத்திரங்கள், பிடித்த படங்களில் நடிக்கிறேன்.

இன்னொரு வாட்டி லவ்வே வேணாம்பா! - களைத்துப் போன நயன்தாரா

இன்னொரு முறை என் வாழ்க்கையில் நான் காதலில் விழும் அனுபவத்தை நான் விரும்பவில்லை. அந்த வாழ்க்கை அலுப்பைத்தான் தந்தது. சுதந்திரமாக வாழ்கிறேன். அந்த சுதந்திரத்தை இழக்க மாட்டேன்," என்றார்.