முத்தக் காட்சியில் முக்கி முக்கி 36 டேக் - ”டி.இ.என்” டீம் காதில் புகை வரவைத்த ஜி.வி.பிரகாஷ்!

சென்னை: முத்தக் காட்சி ஒன்றில் நடிக்க திரும்பத் திரும்ப டேக் வாங்கி படக்குழுவினர் அனைவரது காதிலும் புகையை வரவழைத்துள்ளார் இசையமைப்பாளராக இருந்து நடிகர் ஆகியுள்ள ஜி.வி.பிரகாஷ்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் "டார்லிங்" படத்திற்கு பின்னர் தற்போது நாயகனாக நடித்துவரும் படம் "திரிஷா இல்லைன்னா நயன்தாரா".

G.V.Prakash spoils 36 kisses

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் நாயகிகளாக நடித்து வருகின்றனர். மேலும்,முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரனும், சிறப்பு தோற்றத்தில் ஆர்யா மற்றும் நடிகை பிரியா ஆனந்தும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முக்கிய காட்சிக்காக மனிஷா யாதவுடன் லிப் டூ லிப் முத்தக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இதற்கு மனிஷா யாதவ் தயங்காமல் சிறப்பாக நடிக்க ஜி.வி.பிரகாஷோ அந்த முத்தக்காட்சிக்கு தயங்கி, தயங்கி 36 டேக்குகள் வாங்கி கடைசி டேக்கில் முத்தத்தினை சரியாகத் தந்துள்ளார். சைந்தவி மன்னிப்பாராக!

 

விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரகாஷ் ராஜ், சத்யராஜ்!

சத்யராஜுக்கு விஜய் மீது எப்போதுமே தனிப் பாசம். மைக் கிடைத்தால், விஜய்யை ஏகத்துக்கும் புகழத் தவறியதில்லை.

அதனால்தான் ஏற்கெனவே நண்பன், தலைவா போன்ற படங்களில் விஜய்யுடன் நடித்தார். ஆனால் அதே சத்யராஜ், இப்போது விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

Prakash Raj, Sathyaraj say No to Vijay

அட்லீ இயக்கும் இந்தப் புதிய படத்தில் சத்யராஜுக்கு மிக முக்கியமான வேடமாம். ஆனால் எவ்வளவோ சொன்ன பிறகும், தெலுங்கில் கமிட் ஆகிட்டேன் சார். தேதிகள் இல்லை என அட்லீக்குச் சொல்லிவிட்டாராம். அட்லீயின் ராஜா ராணி படத்தில் சத்யராஜ் நடித்திருந்தது நினைவிருக்கலாம்.

இதே விஜய் படத்துக்கு அந்த வேடத்தில் முதலில் பிரகாஷ் ராஜை நடிக்க அழைத்திருந்தார்கள். ஆனால் அவரும் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். விஜய்யின் பல படங்களில் வில்லனாக நடித்தவர் பிரகாஷ்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மனைவியிடம் நடிகர் கிருஷ்ணா விவாகரத்து கோர சுனைனா காரணமா?

மனைவி ஹேமலதாவிடமிருந்து நடிகர் கிருஷ்ணா விவாகரத்து கோர, நடிகை சுனைனாதான் காரணம் என தகவல் பரவி வருகிறது.

கழுகு, அலிபாபா, கற்றது களவு, யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன், வன்மம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த கிருஷ்ணா, மனைவி ஹேமலதாவை விவாகரத்து செய்ய குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Is Sunaina reason for Krishna - Hemalatha divorce?

மேலும் மனைவி மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

கிருஷ்ணாவுக்கு தொழில் ரீதியாக தன்னுடன் நடித்த கதாநாயகிகளுடன் நட்பு இருந்தது. இதனால் மனைவி ஹேமலதா அவரைச் சந்தேகித்ததாக கூறப்படுகிறது. இதில் சுனைனாவின் பெயர்தான் பலமாக அடிபடுகிறது.

சுனைனாவும் கிருஷ்ணாவும் வன்மம் படத்தில் ஜோடியாக நடித்தனர். இதில் இருவரும் நெருக்கமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

 

வைரமுத்து மீதான இளையராஜாவின் கோபம் அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது!- மதன் கார்க்கி

தன் அப்பா வைரமுத்து மீதான இளையராஜாவின் கோபம் அடுத்த தலைமுறையிலும் தொடர்வதாக பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

ஒரு பேட்டியில், இளையராஜாவுடன் எப்போது பணியாற்றப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு மதன் கார்க்கி கூறுகையில், "நான் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாகத்தான் இருக்கிறேன். ஆனால், அப்பா (வைரமுத்து) மீது ராஜா சாருக்கு உள்ள கோபம் அடுத்த தலைமுறை வரைக்கும் இருக்கிறது", என்று கூறியுள்ளார்.

Madhan Karky speaks Ilaiyaraaja - Vairamuthu rivalry

இளையராஜா - வைரமுத்து இணை காலத்தை வென்ற பல பாடல்களைத் தந்தது, எண்பதுகளில். 1987-ல் இந்த இணை பிரிந்த பிறகு, இருவரையும் மீண்டும் இணைக்க பலரும் முயன்றனர். ஆனால் நடக்கவில்லை.

இந்த நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். அந்தப் படம் இடம் பொருள் ஏவல் விரைவில் வரவிருக்கிறது.

இளையராஜா இசையில் ஒரு பாடலாவது எழுதிவிட வேண்டும் என வைரமுத்துவின் மகன்கள் இப்போது விருப்பத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

 

நடிகர் சங்கத் தேர்தல்: விடாது விரட்டும் விஷால்... கேவியட் மனு தாக்கல்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பில் விளக்கம் கேட்க வேண்டும் என்று நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் "கேவியட்' மனு தாக்கல் செய்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கும் விஷால் அணிக்கும் மோதல் வெடித்துள்ளது. ஜூலை 15ம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு விஷால் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Nadigar Sangam polls: Vishal files caveat petition in HC

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரியும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்த உத்தரவிடவும் நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தற்போதைய தலைவர் சரத்குமார் அறிவித்தார்.

இந்த நிலையில், நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் ‘கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ‘நீதிபதி ரவிசந்திரபாபு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து எதிர்மனுதாரர் (நடிகர்கள் சங்கம்) மேல்முறையீடு செய்யும்போது அதில் எங்கள் தரப்பிடம் விளக்கம் கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் நடிகர் சங்க தேர்தல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

 

முதலில் “பேபி”...அடுத்து “டெய்சி” - தமிழ் சினிமாவைக் குறிவைக்கும் குழந்தைப் பேய்கள்!

சென்னை: தமிழ் சினிமாவிலும் சரி, சேனல்களிலும் சரி "பேய் டிரெண்ட்" மிகவும் பரபரப்பாக வளர்ந்து வருகின்றது. அதற்கு முக்கிய காரணம் குழந்தைகள் கூட பேய் படங்கள் என்றால் விரும்பி பார்ப்பதுதான். அந்த வகையில் பேய் ரசிகர்களை குறிவைத்து விரைவில் வெளியாக உள்ளது புதிய பேய் படமான "டெய்சி".

முதலில் காஞ்சனா, அரண்மனை போன்ற படங்களில் பெரிய பேய்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது சிறு குழந்தைகளை வைத்து பேய் படங்கள் வெளியாக உள்ளன.

A new trend in ghost films with children

அந்த வரிசையில் முதலாவதாக "பேபி" என்ற படம் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து குழந்தைப் பேயை மையமாக வைத்து "டெய்சி" என்ற பெயரில் புதுப்படம் ஒன்று வெளியாகவுள்ளது.

ஜூனா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் என்.ஷண்முகசுந்தரம், கே.முகமது யாசின் தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கி வருகிறார். இதில் தீபக் பரமேஷ், ஜாக்லீன் பிரகாஷ், குணாளன் மோகன், மோர்ணா அனிதா ரெட்டி மற்றும் மைம் கோபி நடித்துள்ளனர்.

உண்மையான நிகழ்வுகளை மையமாக வைத்து சென்டிமென்ட் கலந்த திகில் படமாக இதனை உருவாக்கியுள்ளாராம் இயக்குனர். டெய்சி என்ற எட்டு வயது குழந்தையின் பாசத்தை எடுத்துக் கூறும் இக்கதை சமீபத்திய திகில், பேய் படங்களிலிருந்து பெரிதும் வித்தியாசமாய் உருவாக்கி இருக்கிறார்களாம்.

இப்படம் பற்றி "ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் வாழ்க்கை என்னும் சுவரை அலங்கரிக்கும் ஓவியங்கள். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் உலகிற்கு வருகின்றனர் என்றக் கூற்றை உறுதி படுத்தும் கதை இது. டெய்சி அன்புக்காக ஏங்கி அலை பாயும் ஒரு உக்கிரமான எட்டு வயது சிறுமியின் ஆவியை பற்றிய கதை.

நிஜ வாழ்க்கையில் நான் பார்த்து அறிந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையே டெய்சி. இன்றைய சிங்கிள் பேரண்டிங் குடும்பங்ளுக்கு தேவையான கருத்தைக் கொண்ட கதை என்பதால் முழுக்க முழுக்க சென்டிமெண்ட் கலந்து உருவாக்கியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார் இயக்குனர்.