பிரபுதேவா - நயன்தாரா மும்பையில் ரகசிய சந்திப்பு : திருமணம் குறித்து தீவிர ஆலோசனை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிரபுதேவா – நயன்தாரா மும்பையில் ரகசிய சந்திப்பு : திருமணம் குறித்து தீவிர ஆலோசனை!

8/12/2011 5:21:26 PM

பிரபுதேவாவை மும்பையில் ரகசியமாக சந்தித்தார் நயன்தாரா. திருமணத்தை எப்போது, எங்கே நடத்துவது என்பது பற்றி இருவரும் பேசி முடிவு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. பிரபுதேவா, நயன்தாரா காதலிக்கின்றனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் முதல் மனைவி ரமலத்திடம் விவாகரத்து பெற்றார் பிரபுதேவா. அதன் தொடர்ச்சியாக நயன்தாரா கடந்த சில நாட்களுக்கு முன் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். தற்போது பிரபுதேவா 'ரவுடி ரத்தோர்' என்ற இந்தி படத்தை இயக்குகிறார். அதற்கான ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது.

மதம் மாறிய நயன்தாரா கேரளாவில் உள்ள தனது வீட்டுக்கு சென்று பெற்றோரை சந்தித்தார். பின்னர் மும்பை புறப்பட்டு சென்றார். பிரபு தேவாவை சந்தித்த அவர், மதம் மாறியது குறித்து தெரிவித்ததுடன், திருமண தேதி பற்றியும் பேசியதாக தெரிகிறது. திருமணத்தை ஆடம்பரமில்லாமல் மிக எளிமையாக நடத்த இருவரும் முடிவு செய்துள்ளனர். சென்னையை தவிர்த்துவிட்டு, மும்பையிலேயே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக விமான நிலையத்தில் நயன்தாராவை சந்தித்த ஒரு நிருபர், 'பிரபுதேவாவுடன் திருமணம் எப்போது?' என்று கேட்டிருக்கிறார். அதற்கு கோபமாக பதில் அளித்தார். 'நான் எல்லாவற்றையும் அடக்கமாகவே செய்ய விரும்புகிறேன். என்னைப் பற்றிய எந்த விஷயத்தையும் என்னுடன் இருப்பவர்களை தவிர வேறு யாரிடமும் பேச விரும்பவில்லை' என்று கூறிவிட்டு சட்டென கிளம்பிச் சென்று விட்டாராம்.

 

கமல் ஐடியாவால் 25 நாளில் முடிந்த ஷூட்டிங்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கமல் ஐடியாவால் 25 நாளில் முடிந்த ஷூட்டிங்!

8/12/2011 5:17:19 PM

'கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்Õ பட இயக்குனர் வெங்கி கூறியது: அந்த காலத்தில் கணவன்மனைவிக்குள் பிரச்னை என்றால் அதை தீர்ப்பது கடினம். இன்றைய தலைமுறையினர் கருத்து வேறுபாடு வந்தால் தங்களுக்குள் பேசி பிரிந்து விடுகிறார்கள். இதை இளம் தலைமுறையினர் வரவேற்கின்றனர். இதனால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பது இப்படத்தின் கரு. நிர்ணயித்த பட்ஜெட்டில் இதை உருவாக்க முடிவு செய்தேன்.  ஹீரோ ஹிருதய்ராஜ். ஹீரோயின் அதிதி உள்பட மொத்தம் 16 புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். புதுமுகம் என்றால் டேக் அதிகம் வாங்கி பட்ஜெட் அதிகரிக்கும் என்பதால் கமல்ஹாசன் யோசனைப்படி அனைவருக்கும் ஒரு மாதம் ரிகர்சல் நடத்தப்பட்டது. ஸ்கிரிப்ட் முழுவதையும் சீன் பை சீன் மனப்பாடம் செய்யும் அளவுக்கு பழகியபிறகு ஷூட்டிங் தொடங்கப்பட்டது. இதனால் 50 நாட்கள் நடக்க வேண்டிய ஷூட்டிங் 25 நாளில் முடிந்தது.

 

கரீனாவுக்கு இப்போதைக்கு கல்யாணமில்லை: கரிஷ்மா


கரீனா கபூருக்கு இப்போதைக்கு திருமணம் இல்லை என்று அவரது மூத்த சகோதரி கரிஷ்மா கபூர் தெரிவித்துள்ளார்.

கரீனா கபூரும், சைப் அலி கானும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். ஆனால் திருமணம் பற்றி மட்டும் இது வரை எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் சைப்ரீனா வரும் 2012-ம் ஆண்டு இறுதியில் இறுதியாக திருமணம் செய்துகொள்ளப்போதாக செய்திகள் வந்தன.

அதைப் படித்தவர்கள் அப்பாடா இப்போதாவது திருமணம் செய்துகொள்ளப்போகிறார்களே என்று நினைத்தனர். அவர்கள் நினைப்பு பொய்யாகிவிட்டது. ஆம் இப்போதைக்கு கரீனாவுக்கு திருமணம் இல்லை என்று அவரது மூத்த சகோதரி கரிஷ்மா கபூர் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு குட்பை சொன்ன கரிஷ்மா தற்போது மீண்டும் நடக்க வந்துள்ளார். விக்ரம் பட்டின் டேன்ஜரஸ் இஷ்க் என்ற படத்தில் நடிக்கிறார்.
 

நடிகைகளுக்கு கோவில், சிலைகள் வைக்கக் கூடாது-ஹன்சிகா கண்டிப்பு


நடிகைகளுக்கு கோயில் கட்டுவது தவறு. ரசிகர்கள் தங்கள் வேலையை மட்டும் கவனித்தால் போதும். நடிகைகளை அந்த உயரத்துக்குக் கொண்டு போவது தவறு, என்றார் ஹன்ஸிகா மோத்வானி.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ஹன்சிகா மோத்வானி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறுகையி்ல், "மாப்பிள்ளை' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானேன். அடுத்து எங்கேயும் காதல் படத்தில் நடித்தேன். தற்போது விஜய்யுடன் வேலாயுதம், உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து வருகிறேன்.

தெலுங்கில் அரை டஜன் படங்களில் நடித்துள்ளேன். வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் வலுவான கேரக்டர்கள் அமைந்துள்ளன. என்னை குட்டி குஷ்பு என்று அழைக்கின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது.

குஷ்பு என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கும்படி அறிவுரை கூறினார். நல்ல கதைகள் அமைந்தால் புது நடிகர்களுடனும் ஜோடியாக நடிப்பேன். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசை. நீச்சல் உடையிலோ, முத்தக் காட்சியிலோ நடிக்க மாட்டேன். இரவு விருந்துகளுக்கு போகும் பழக்கம் இல்லை. நடிப்பு, ஜிம், வீட்டில் ஓய்வு என்று நல்ல பெண்ணாக இருக்கிறேன்.

வேலாயுதம் படத்தில் ஜெனிலியாவுடன் இணைந்து நடித்த போது எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. தமன்னா எனக்கு நெருங்கிய தோழி. அவரிடம் அடிக்கடி மனம் விட்டுப் பேசுவேன்.

ஹீரோக்களில் பிடித்தவர் ரஜினி சார். அவருடன் நடிக்க ஆர்வம் உள்ளது. தமிழ் படித்து வருகிறேன். விரைவில் தமிழில் பேசி நடிப்பேன்.

இங்கு நடிகைகளுக்கு ரசிகர்கள் கோவில் கட்டுவதாகச் சொன்னார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை அந்த நிலைக்கு நடிகைகளை கொண்டு செல்ல வேண்டாம்," என்றார்.
 

ஜீவாவின் ரௌத்திரம் ரிலீஸ்... பசு தானம் செய்த ரசிகர்கள்!


நடிகர் ஜீவாவின் 15வது படம் ரௌத்திரம் வெளியானதையொட்டி பசு தானம் செய்து கொண்டாடினர் அவரது தீவிர ரசிகர்கள்.

கோ பட வெற்றிக்குப் பிறகு ஜீவா நடித்து வெளிவரும் படம் ரௌத்திரம். ஜீவா ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார்.

கோகுல் இயக்கியுள்ள இந்தப் படம் இன்று தமிழகமெங்கும் வெளியானது. இதையொட்டி ஜீவாவின் ரசிகர்கள், சென்னையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

வடபழனி கோயிலில் ஏழைகளுக்கு பசுவுடன் கூடிய கன்றை தானமாகக் கொடுத்தனர். அதன் பிறகு வட பழனி கோயிலிலிருந்து படப்பெட்டியை கமலா தியேட்டர் வரை ஊர்வலமாகக் கொண்டு சென்று, பூசணிக்காய் உடைத்தனர்.

பின்னர் படம் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய ஜீவா தலைமை ரசிகர் மன்ற தலைவர் யுவராஜ் மற்றும் ரசிகர்கள், மானேர் பிடி செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
 

'கேப்டன்' மகனை இயக்கப் போவது பூபதி பாண்டியன் அல்ல?


தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியனை இயக்கப் போவது பூபதி பாண்டியன் அல்ல என்று கூறப்படுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் விரைவில் தந்தை வழியில் கதாநாயகனாகவிருக்கிறார். இதற்காக விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனன் சுதீஷ் ஆகியோர் கதை கேட்டு வருகின்றனர்.

அவரிடம் இயக்குநர் பூபதி பாண்டியன் ஒரு அதிரடி ஆக்ஷன் மற்றும் காமெடிக் கதையை சொன்னாராம். கதை பிடித்திருந்தபோதிலும் காமெடி டிராக்கில் யாரைப் போடுவது என்பதில் பெரும் குழப்பமாகி விட்டதாம்.

மேலும் இப்போதே அதிரடிக் கதையில் சண்முகப் பாண்டியனை இறக்க கேப்டன் தரப்பு சற்றே தயங்குகிறதாம். அறிமுகமாகும் படம் அருமையாக அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றனர். இதனால் பூபதி பாண்டியன் கதையை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சிலரிடமும் கதை கேட்ட பின்னர் முடிவுக்கு வரத் திட்டமிட்டுள்ளனராம்.
 

ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1 கோடி அபேஸ்... நடிகர் மீது புகார்!


சென்னை: வேலை வாங்கித் கூறி இளைஞர்களிடம் ரூ 1 கோடி வரை சுருட்டியதாக சுட்டும் விழிச் சுடரோ என்ற படத்தில் நடித்த சுமேஷ் மீது புகார் தரப்பட்டுள்ளது.

சுட்டும் விழி சுடரோ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சுமேஷ். இவர் சென்னை வடபழனி ஆண்டவர் நகர், 6-வது தெருவில் உள்ள சீனிவாசா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். நேற்று மாலை இவரது வீட்டை இளைஞர்கள் சிலர் வக்கீலோடு சென்று முற்றுகையிட்டனர்.

அந்த இளைஞர்கள் அனைவரும் பட்டதாரிகள் ஆவார்கள். அவர்களுக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக, நடிகர் சுமேசும் அவரது குடும்பத்தினரும், ரூ.1 கோடி வரை பணம் வாங்கினார்கள் என்றும், வேலை வாங்கி கொடுக்காமல் பட்டை நாமம் போட்டு விட்டார்கள் என்றும், புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரின் பேரில் நடிகர் சுமேசை வடபழனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், தனக்கு எதுவும் தெரியாது என்றும், தனது தந்தையிடம் கேட்டால்தான் இது பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். இதையொட்டி அவரை போலீசார் இரவு விடுவித்து விட்டனர்.

சுமேசின் தந்தையிடம் இதுபற்றி விசாரிக்கப்படும் என்றும், விசாரணை முடிந்த பிறகு மேல்நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் நேற்று இரவு போலீசார் தெரிவித்தனர்.
 

மம்முட்டி மகனின் 'செகண்ட் ஷோ'


மலையாள சூப்பர் ஸ்டார்களுள் ஒருவரான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மலையாளத்தில் கதாநாயகனாகிறார்.

துல்கருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மணப்பெண் சென்னையைச் சேர்ந்தவர்.

முதலில் லிங்குசாமி இயக்கும் தமிழ் படத்தில் துல்கரை நாயகனாக அறிமுகம் செய்ய மம்முட்டி விரும்பினார். ஆனால் அது முடியாமல் போனது. எனவே மலையாளத்தில் தயாராகும் 'செகண்ட் ஷோ' என்ற படத்தில் கதாநாயகனாக்கவிட்டார்.

கதாநாயகியாக அவந்திகா நடிக்கிறார். படப்பிடிப்பு கோழிக்கோட்டில் சமீபத்தில் தொடங்கியது.

இதுகுறித்து மம்முட்டி கூறுகையில், "சினிமாவில் வாரிசு உருவாக்குவது என் நோக்கமல்ல. யாருக்கு என்ன பிடிக்கிறதோ அதில் ஈடுபட வேண்டும். துல்கருக்கு சினிமா பிடித்திருக்கிறது. அவனுக்காக நிறைய கதைகள் கேட்டேன். தமிழில் அறிமுகம் செய்ய முடியாமல் போய்விட்டது. அதனால் என்ன, மலையாளத்தில் நடித்துவிட்டு தமிழிக்குப் போகட்டுமே," என்றார்.
 

அமிதாப் படத்துக்கு எதிராக விடுதலைதச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்


சென்னை: இடஒதுக்கீட்டை எதிர்க்கும் அமிதாப்பச்சனின் ஆரக்ஷான் படத்தை எதிர்த்து சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமிதாப்பச்சன் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தி படம் ஆராக்ஷன். தமிழில் இடஒதுக்கீடு என்று அர்த்தம். 0இந்தப் படத்தை பிரகாஷ் ஜா தயாரித்துள்ளார்.

'நான் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவன்' என்ற துணை தலைப்புடன் இந்த சினிமா பல மாநிலங்களில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இதனால், இந்த படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆரக்ஷான் படம் ஓடும் சத்யம் தியேட்டர் முன்னால் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் திரண்டார்கள்.

"இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆரக்ஷான் படத்தை தடை செய், பெரியார், அம்பேத்கார் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான ஆரக்ஷான் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்," என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு, கருத்தியல் பரப்பு துணை செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, தனிச் செயலாளர் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வம், மாவட்ட நிர்வாகிகள் விடுதலைச் செல்வன், சாரனாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அனைவரும் தியேட்டருக்குள் நுழைய முயற்சித்தனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர்.

மயிலாப்பூர் ஐநாக்ஸ் தியேட்டரிலும் ஆரக்ஷான் படம் திரையிடப்படுவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். மாவட்ட நிர்வாகிகள் இளஞ்செழியன், வக்கீல் எழில் கரோலின், பகலவன், குமரப்பா உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தடையை நீக்கக் கோரி வழக்கு

இதற்கிடையே, இந்தப் படத்துக்கு உத்திரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி இயக்குநர் பிரகாஷ் ஜா அலகாபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

மதுரையில் விஜய்யின் 'வேலாயுதம்' ஆடியோ ரிலீஸ்


விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் வரும் 28-ம் தேதி நடக்கிறது.

விஜய், ஜெனிலியா, ஹன்ஸிகா மோத்வானி நடித்துள்ள புதிய படம் வேலாயுதம். ஜெயம் எம் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ரூபாய் 45 கோடி செலவில் உருவாகியுள்ள படம் இது. ஆடியோவை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.

அதிமுகவுக்கு தீவிர ஆதரவாளராக விஜய் மாறிவிட்டதால், இந்தப் படத்தின் ஆடியோவை, முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என்று கூறி வந்தனர். ஆனால் இப்போது மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் வேலாயுதம் இசை வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

வேலாயுதம் பட பூஜையை ரசிகர்கள் முன்னிலையில் சென்னையில் பிரமாண்டமாக நடத்தினோம். இப்போது படத்தின் ஆடியோவை மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி மாலை மதுரையில் இந்த விழா நடக்கிறது. ரசிகர்கள் இந்த விழாவை சிறப்பித்துத் தரவேண்டும்," என்று ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
 

மலையாளத்திலிருந்து தமிழுக்கு டப் ஆகி வரும் உருமி


கேரளாவில் சக்கை போடு போட்ட உருமி தமி்ழில் வெளியாகவிருக்கின்றது.

பிரித்விராஜ், பிரபுதேவா, ஜெனிலியா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பில் வெளியான மலையாளப் படம் உருமி. இதை சந்தோஷ் சிவன் இயக்கி இருந்தார். பிரித்விராஜ், ஷாஜி நடேசன் மற்றும் சந்தோஷ் சிவன் ஆகியோர் தயாரித்திருந்தனர். 15 நூற்றாண்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம்.

வாஸ் கோட காமா எப்படி இந்தியாவுக்கு வந்தார், இந்தியர்களை எவ்வாறு இரக்கமின்றி சுரண்ட முயன்றார் என்பது தான் கதை. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இப்படம் விரைவில் தமிழில் வெளியாக உள்ளது.

கடந்த 8-ம் தேதி ஃபோர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் தமிழ் உருமியின் சிறப்பு காட்சி காண்பிக்கப்பட்டது. அதை இயக்குனர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் ராம்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டு ரசித்தனர்.
 

ராணி லட்சுமிபாய் வேடம் பூணும் 'கவர்ச்சி ராணி' சலோனி


தெலுங்குத் திரையுலகில் கவர்ச்சிகரமான நாயகிகளில் ஒருவராக வலம் வரும் சலோனி, ராணி லட்சுமி பாய் வேடத்தில் நடிக்கிறார்.

தெலுங்கம்மாயி என்ற பெயரில் தயாராகும் படத்தில்தான் ராணி லட்சுமி பாய் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்காக கத்தி பிடித்து சண்டை போட்டுக் கலக்கியுள்ளாராம்.

இப்படத்தில் சலோனிக்கு நிறைய சண்டைக் காட்சிகளையும் வைத்துள்ளனராம். இதற்காக தீவிர பயிற்சிகளில் குதித்துள்ள சலோனி இந்த வேடம் மூலம் தனது நடிப்புத் திறமையை பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறாராம்.

படத்தில் வரும் ஒரு காட்சியில் குதிரை மீது அமர்ந்தபடி கையில் வாளைச் சுழற்றிக் கொண்டு ஆவசேமாக கோஷமிட்டபடி வரும் காட்சியில், சலோனியின் நடிப்பைப் பார்த்து அனைவரும் மிரண்டு விட்டார்களாம்.

முதலில் குதிரை மீது சலோனி அமர பெரும் சிரமப்பட்டாராம். குதிரை சில முறை அவரை கீழே தள்ளி விட்டதாம். பின்னர் அதை பழக்கப்படுத்தி சலோனியிடம் நட்பு கொள்ள வைத்து பின்னர் காட்சிகளைப் படமாக்கினார்களாம்.

என்ன அதிரடி ராணியாகி விட்டீர்களே என்று சலோனியிடம் கேட்டால், ஒரு நடிகை கவர்ச்சிகரமான உடை அணிந்து, மரத்தை சுற்றி வந்து ஆடிப் பாடுவது மட்டுமே நடிப்பாக கருதக் கூடாது. இதுபோன்ற வேடங்கள்தான் உண்மையிலேயே ஒரு நடிகையின் திறமையை வெளிக்கொணர உதவும் என்றார்.
 

கல்யாணம் செய்யவெல்லாம் இப்போ எனக்கு நேரமில்லை-வித்யா பாலன்


எனக்குக் கல்யாணம் நடைபெறவில்லை. அதற்கெல்லாம் இப்போது எனக்கு நேரமும் இல்லை. நான் அவ்வளவு பிசியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் வித்யா பாலன்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்து வருகிறார் வித்யா பாலன். சில்க்கின் பிறந்த நாளான டிசம்பர் 2ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் வித்யா பாலனுக்கும், சித்தார்த் ராய் கபூருக்கும் ரகசிய கல்யாணம் நடந்து விட்டதாக செய்திகள் பரவின. ஹனிமூனுக்கு இருவரும் போகப் போவதாகவும் தகவல்கள் கூறின.

ஆனால் இதை வித்யா பாலன் மறுத்தார். தற்போது தான் மும்பை அருகே டர்ட்டி பிக்சர்ஸ் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எனக்கு கல்யாணம் ஆகவில்லை. அதற்கான நேரமும் எனக்கு வரவில்லை. எனக்கு இப்போது நிறைய வேலைகள் உள்ளன. எனவே கல்யாணத்திற்கு எனக்கு நேரமில்லை என்பதே உண்மை. இப்போது டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பில் நான் பிசியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் வித்யா பாலன்.

வித்யா பாலன் திருமணச் செய்தி குறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர் மும்பைக்கு அருகே படப்பிடிப்புக்காக முகாமிட்டுள்ள அவரை நேரில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.
 

'ஓவர்' செலவு வைக்கும் இலியானா: புலம்பும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்


நடிகை இலியானா 1 கோடி சம்பளத்தை வாங்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் படபிடிப்பின்போது தயாரிப்பாளர்கள் பாக்கெட்டுகளை காலியாக்கும்வகையில் ஏகப்பட்ட செலவுகளை வைத்து கலக்கி வருகிறாராம்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் இலியானா. தற்போது தமிழில் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்த கேடி நாயகியை படத்தில் நடிக்கை வைக்க வேண்டும் என்றால் கோடி கொடுக்க வேண்டும். சரி கோடி கொடுத்தாச்சு அம்மணி ஒழுங்காக படத்தை நடித்து முடித்துக் கொடுப்பார் என்று நினைத்தால் தவறு.

கோடியை வாங்கி பத்திரமாக வைத்துக் கொள்வார். படபிடிப்புக்கு வரும்போது கூடவே 6 பேரை அழைத்து வருகிறாராம். அவர்களுக்கான பயணச் செலவு, தங்கும் வசதி, உணவு என எல்லா செலவுகளையும் தயாரிப்பாளர்கள் தான் ஏற்க வேண்டுமாம். அவர்கள் அனைவரும் 5 ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவார்களாம். அவர்கள் தங்க ரொம்ப எல்லாம் இல்லை வெறும் 3 அறைகளை புக் செய்தால் போதும் என்கிறாராம் இலியானா.

நடு அறையில் இலியானாவும், மற்ற 2 அறைகளில் உதவியாளர்கள் தங்குகிறார்களாம். அம்மணி வைக்கும் செலவைப் பார்த்து தயாரிப்பாளர்கள் நொந்து போயுள்ளனராம்.
 

என் இனிய தமிழ் மக்களே என எத்தனை காலம்தான் ஏமாற்றுவேன்...! - பாரதிராஜா


என் இனிய தமிழ் மக்களே என கரகரப்பான குரலில் பேசி இன்னும் எத்தனை காலத்துக்குதான் உங்களையெல்லாம் ஏமாற்றுவேன், என இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டார்.

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் மக்கள் சிந்தனை பேவை சார்பில் முதல் புத்தகதிருவிழா நடந்தது. அதன் நிறைவு விழாவில் இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், "இந்த புத்தக திருவிழாவில் அறிவு சார்ந்தவர்கள் பலர் பேசி இருக்கிறார்கள்.ஆனால் எனக்கு அப்படி பேச தெரியாது. காட்டாற்று வெள்ளம் போல் பேசுவேன். என் இனிய தமிழ் மக்களே என்ற கரகரப்பான குரலில் பேசி நான் இன்னும் எத்தனை காலம் தான் உங்களை ஏமாற்றுவேன், எனினும் இந்த பாரதிராஜாவுக்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள் நீங்கள். சமுதாயநோக்கம் - சமூக பார்வை நமக்கு இருக்க வேண்டும்.

நாம் எந்த செயலை செய்தாலும் அதை துணிச்சலுடன் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் எதிலும் வெற்றி பெற முடியும். கருத்தம்மா படத்துக்கு கிடைத்த விருது இந்த தமிழ் மக்கள் எனக்கு கொடுத்த அங்கீகாரம். அதனால்தான் என் இனிய தமிழ் மக்களே... என்று கூறுகிறேன்.

நல்ல புத்தகங்களை படிப்பது போன்று மகிழச்சியான விஷயம் எதுவும் இல்லை. புத்தகங்களை படிப்பது குழந்தைகளை கொஞ்சுவது போன்றது. படைப்பாளிகள் எதிர்காலத்துக்கு வழி சொல்பவர்கள். இவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் பேர் உள்ளனர். வீடுகளில் பூஜை அறைக்கு பதில் புத்தகங்களை வாங்கி நூலகமாக வையுங்கள்.

அதில் உள்ள புத்தகங்களை கொண்டு உங்கள் குழந்தைகளை படிக்க வையுங்கள். நம்முடைய தொப்புள் கொடி உறவுகள் அறுந்த போது தமிழனாக இருந்து நாம் என்ன செய்தோம். பார்த்து கொண்டுதானே இருந்தோம். மொழி-இனம் என்ற உணர்வு நமது ரத்த நாளத்தில் குறைந்து வருகிறது," என்றார்.
 

5 ஏக்கர் நிலத்தை மாஜி திமுக எம்.எல்.ஏ. அபகரித்து விட்டதாக குட்டி பத்மினி மகள் புகார்


சென்னை: திருத்தணி தொகுதி முன்னாள் எம்எல்ஏ இ.சிவாஜி தங்களுக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக நடிகை, டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குட்டி பத்மினியின் மகள் கீர்த்தான காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

தனது தாயாருடன் கமிஷனர் ஜே.கே. திரிபாதியை சந்தித்து கீர்த்தனா இந்தப் புகாரைக் கொடுத்தார். கீர்த்தனாவும் ஒரு நடிகைதான் காதலே சுவாசம் என்ற படத்தில் நடித்தார். பின்னர் அவர் சரிவர நடிக்கவில்லை.

கமிஷனரை சந்தித்து கீர்த்தனா கொடுத்த புகாரில்,

எனது தாயார் குட்டி பத்மினி. பிரபல நடிகை. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரைப்படத் துறையில் பல வருடம் இருந்துள்ளார். டிவி தொடர்களையும் தயாரித்துள்ளார்.

எனக்கு 2 சகோதரிகள் உள்ளனர். 1994ம் ஆண்டு கும்மிடிபூண்டியில் உள்ள மாதர்பாக்கம் கிராமத்தில் எனது பாட்டியின் பணத்தில் 5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அதில், ஒரு ஏக்கர் நிலம் எனது தாயார் பெயருக்கும், ஒரு ஏக்கர் நிலம் எனது பெயரிலும் மீதமுள்ள நிலம் எனது சகோதரிகள் பெயரிலும் மாற்றப்பட்டது.

இதற்கிடையில், எனது தாயாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து முன்னாள் திமுக எம்எல்ஏ மற்றும் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் திமுக மாவட்ட செயலாளருமான இ.சிவாஜியிடம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கடனாக பெற்றார். அது வட்டியுடன் சேர்த்து ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் ஆகிவிட்டது. எனவே, பணத்தை திரும்ப கேட்டார்.

இதனால், எனது தாயார் பெயரில் இருந்த ஒரு ஏக்கர் நிலம் சிவாஜியின் பினாமி பெயருக்கு மாற்றப்பட்டது. பின்னர், ஒருநாள் எங்கள் வீட்டிற்கு சிவாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்து, நிலத்திற்கான அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையில், 2006ம் ஆண்டு எனது தாயார் கும்மிடிப்பூண்டி சென்று பார்த்தபோது 5 ஏக்கர் நிலத்தையும் வேலி போட்டு சிவாஜி மடக்கி வைத்திருந்தார். எங்கள் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மாந்தோப்பின் வருமானத்தையும் அவரே அனுபவித்து வந்தார்.

இப்போது, எனது சகோதரி படிப்பிற்காக அந்த நிலம் தேவைப்படுவதால் அந்த நிலத்தை திருப்பிக் கேட்டோம். ஆனால், சிவாஜி எங்களை மிரட்டினார். நீதிமன்றம் செல்லக் கூடாது என்று மிரட்டும் வகையில் அது இருந்தது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். தற்போது இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 5 கோடி என்று கூறப்படுகிறது.

சர்ச்சையில் சிக்கியுள்ள சிவாஜி, முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்து.
 

பிரபு தேவாவுடன் முதல்நாள் ஷூட்டிங்கில் நயன்தாரா!


இந்து மதத்துக்கு மாறிய கையோடு, தன் வருங்காலக் கணவர் பிரபுதேவாவுடன் இணைந்தே காணப்படுகிறார் நயன்தாரா.

மதம் மாறிய பின் முதல் நிகழ்ச்சியாக மும்பை சென்ற நயன்தாரா, அங்கு பிரபுதேவாவின் இரண்டாவது இந்திப் படமான ரவுடி ரதோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்தப் படத்தில் அக்ஷய் குமாரும் சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர். ஷூட்டிங்கின் முதல் நாள் பிரபுதேவாவுக்கு துணையாக இருந்தார் நயன்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஆண்டுக்கு ஒரு படம் செய்யத் திட்டமிட்டுள்ள பிரபு தேவா, இப்போது மும்பையில் தானும் நயனும் வசிப்பதற்கு புதிய ப்ளாட் ஒன்றையும் பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, திருமண ஏற்பாடுகளையும் மும்முரமாக கவனித்து வருகிறார்கள் இருவரும். அடுத்த மாதம் மும்பையில் திருமணம் நடக்கும் சிலரும், கொச்சியில்தான் திருமணம் என இன்னொரு தரப்பும் கூறி வருகிறது.
 

காஸ்ட்லி நடிகை கரீனா கபூர் : ஒரு படத்துக்கு ரூ.8 கோடி!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
காஸ்ட்லி நடிகை கரீனா கபூர் : ஒரு படத்துக்கு ரூ.8 கோடி!

8/11/2011 5:15:45 PM

இந்தியில் ஒரு படத்துக்கு நடிகை கரீனா கபூர் அதிரடியாக ரூ.8 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். இந்தி சினிமா டைரக்டர் மதூர் பண்டார்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க முதலில் கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில், அந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமானார். பின்னர், கர்ப்பமாக இருப்பதால் நடிக்க முடியாது என்று கூறி ஒப்பந்தத்தில் இருந்து ஐஸ் விலகினார். இதனால் மீண்டும் கதாநாயகி தேடலில் இறங்கினார் டைரக்டர் பண்டார்கர். பிரியங்கா சோப்ரா, வித்யா பாலன், கரீனா கபூர் இந்த 3 பேரில் ஒருவரை ஹீரோயினாக்குவது என்று முடிவு செய்தார். படத்தின் கதையமைப்பு பேஷன் படத்தின் கதையை ஒட்டி இருந்ததால் பிரியங்கா ஜகா வாங்கினார். சில்க் ஸ்மிதாவின் கதையான 'த டேர்ட்டி பிக்சர்' படத்தில் பிசியாக இருப்பதாக கூறி வித்யா பாலனும் மறுத்தார்.

இதனால் மறுபடியும் கரீனாவிடம் பேசினார் பண்டார்கர். தான் ஏற்கனவே நடித்துக்கொண்டிருந்த பாடி கார்ட், ஏஜென்ட் வினோத் படங்களுக்கு கொடுத்திருந்த தேதியை அட்ஜஸ்ட் செய்து இந்த படத்துக்கு தேதி ஒதுக்கினார். டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏக சந்தோஷம். தேதி ஒதுக்கல் விஷயம் முடிந்து அடுத்து சம்பள விஷயத்துக்குவந்தனர். கரீனா பத்து விரலை நீட்டினாராம். ரூ.10 கோடி கேட்டு. பேரம் பேசி ரூ.8 கோடிக்கு முடித்திருக்கிறார்கள். இதையடுத்து, பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை பட்டியலில் முதல் இடத்துக்கு வந்திருக்கிறார் கரீனா கபூர்.