வாயும், வயிறுமாக இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அவரது தங்கை ஷமீதா ஷெட்டி, மே 3ம்தேதி வளைகாப்பு நடத்தவிருக்கிறாராம்.
மும்பையில் உள்ள ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ராவின் வீட்டில் வைத்து இது நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஷமீதா தரப்பில் கூறுகையில், மே 3ம் தேதி மாலை 3.30 மணிக்கு வளைகாப்பு நடத்துகிறார் ஷமீதா. தேதியை அவரே முடிவு செய்து தனது அக்காவிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டார், ஷில்பாவின் தோழியர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா தத், ரவீனா தாண்டன் உள்ளிட்டோரும் வருகின்றனராம். இந்த நிகழ்ச்சியில் ஆண்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை என்றனர்.
ஷமீதா கூறுகையில், இது ஒரு சர்ப்ரைஸ் நிகழ்ச்சி. எல்லாம் முடிவு செய்த பின்னர்தான் ஷில்பாவுக்கே தெரிவித்தேன். அவருக்கு ஆச்சரியமாகி விட்டது, ஆர்வமாகவும் இருக்கிறார் என்றார் சிரித்தபடி.
தற்போது ஷில்பா ஷெட்டி 9 மாதமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் உள்ள ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ராவின் வீட்டில் வைத்து இது நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஷமீதா தரப்பில் கூறுகையில், மே 3ம் தேதி மாலை 3.30 மணிக்கு வளைகாப்பு நடத்துகிறார் ஷமீதா. தேதியை அவரே முடிவு செய்து தனது அக்காவிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டார், ஷில்பாவின் தோழியர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா தத், ரவீனா தாண்டன் உள்ளிட்டோரும் வருகின்றனராம். இந்த நிகழ்ச்சியில் ஆண்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை என்றனர்.
ஷமீதா கூறுகையில், இது ஒரு சர்ப்ரைஸ் நிகழ்ச்சி. எல்லாம் முடிவு செய்த பின்னர்தான் ஷில்பாவுக்கே தெரிவித்தேன். அவருக்கு ஆச்சரியமாகி விட்டது, ஆர்வமாகவும் இருக்கிறார் என்றார் சிரித்தபடி.
தற்போது ஷில்பா ஷெட்டி 9 மாதமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.