அஜீத் நடிக்கும் 53வது படத்தின் இறுதிக் காட்சியை குலு மனாலியில் படமாக்கி வருகிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.
படத்தின் பெயர் என்னவென்று வெளியில் சொல்லாமல் அஜீத் - விஷ்ணுவர்தன் கூட்டணியில், ஏஎம் ரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் க்ரைம் த்ரில்லர் கடந்த ஓராண்டாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடந்தது.
இப்போது கடைசி கட்ட படப்பிடிப்பு இமயமலைப் பகுதிகளில் நடந்து வருகிறது.
லடாக், லேஹ் மற்றும் குலு மனாலி போன்ற இடங்களில் கடந்த இரு வாரங்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது.
இதன் க்ளைமாக்ஸ் காட்சி குலு மனாலியில் படமாக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள டெல்லியிலிருந்து தானே காரை ஓட்டிச் சென்றார் அஜீத்.
இந்த மாத இறுதியில் படத்தின் தலைப்பை அறிவிக்கவிருப்பதாக ஏஎம் ரத்னம் தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்டில் படம் வெளியாகும் என்று தெரிகிறது.