போட்டியைச் சமாளிக்க முன்கூட்டியே களமிறங்கும் கத்தி

போட்டியைச் சமாளிக்கவும், நல்ல தியேட்டர்களைப் பிடிக்கவும் தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன், கத்தி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாம் லைகா நிறுவனம்.

விஜய் - சமந்தா நடிப்பில், அனிருத் இசையமைப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படம் ‘கத்தி'. படத்தின் இறுதிகட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

போட்டியைச் சமாளிக்க முன்கூட்டியே களமிறங்கும் கத்தி

இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டு பணிகளைச் செய்து வந்தனர்.

ஆனால் தீபாவளிக்கு பூஜை மற்றும் பூலோகம் படங்கள் வருவது உறுதியாகியுள்ளது. எனவே திரையரங்குகள் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

குறிப்பாக விஷாலின் பூஜை படத்துக்கு 350 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தன் பூலோகம் படத்தை வாங்கி வெளியிடுவோருக்குதான் படத்தைத் தருவேன் நிபந்தனை விதித்துள்ளதால், நல்ல அரங்குகள் அனைத்தும் இந்த இரு படங்களுக்கும் போகும் நிலை உள்ளது.

எனவே தீபாவளிக்கு முன்கூட்டியே அக்டோபர் 17ம் தேதி (வெள்ளிகிழமை) கத்தி படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அப்படி முன்கூட்டி ரிலீஸாகும் பட்சத்தில் படத்திற்கு மொத்தமாக பத்து நாட்கள் வசூல் கிடைக்கும். நான்கு நாட்களுக்கு போட்டியின்றி படத்தை ஓட்டி விடலாம் என்று தயாரிப்பாளர் தரப்பு நம்புகிறது.

 

பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

இந்த ஆண்டு தனது பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த்.

முன்பெல்லாம் ஆண்டு தோறும் தன் பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்தித்து வந்த ரஜினி, 1996-ம் ஆண்டிலிருந்து சந்திப்பதைத் தவிர்த்து வந்தார்.

பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

ஆனாலும் தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனபோது, தனக்காக பிரார்த்தனைகள் செய்தும், மண் சோறு சாப்பிட்டும், மலைக் கோயிலுக்கு முழங்காலில் நடந்து சென்றும் வேண்டிக் கொண்ட ரசிகர்களின் அன்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 12.12.2012 அன்று நடந்த பிறந்த நாள் விழாவில் ரசிகர்களைச் சந்தித்தார். அதுவும் சாதாரணமாக அல்ல, பெரிய மாநாடு போன்ற விழாவில்.

இந்த முறை மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ரஜினி. வருகிற டிசம்பர் 12-ந்தேதி தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திக்கப் போகிறார். அன்றுதான் அவரது லிங்கா படமும் வெளியாகிறது.

ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இன்னொரு புறம் பாரதீய ஜனதாவில் ரஜினியை இணைத்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்க அக்கட்சியினர் முயற்சித்து வருகிறார்கள்.

ஏற்கெனவே தனது ரசிகர் மன்றங்களைக் கணக்கெடுக்குமாறு நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்களை அவர் சந்தித்து பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

ஆசிரமத்துக்கு வருமாறு நித்தியானந்தா சார்பில் வந்த அழைப்பை ஏற்க மறுத்த நயன்தாரா

பெங்களூர்: ஆசிரமத்திற்கு வருமாறு நித்தியானந்தா சார்பில் விதிக்கப்பட்ட அழைப்பை நடிகை நயன்தாரா ஏற்க மறுத்துள்ளார்.

காதல் பிரச்சினைகளில் சிக்கி அடுத்தடுத்து வாழ்க்கையில் சோகத்தையே சந்தித்து வரும் நயன்தாராவுக்கு மகிழ்ச்சியை உருவாக்க, அவரது வாழ்க்கையின் துக்கங்களை, சந்தோஷமாக மாற்ற, நித்தியானந்தா ஆசிரமம் கருணை கூர்ந்துள்ளது. 'வாருங்கள் சந்தோஷமாக இருக்க வைக்கிறோம்' என்று நித்தியானந்தா ஆசிரமம் சார்பில் நயன்தாராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம்.

ஆசிரமத்துக்கு வருமாறு நித்தியானந்தா சார்பில் வந்த அழைப்பை ஏற்க மறுத்த நயன்தாரா

நித்தியானந்தா ஆசிரமத்தில் யோகா, மூச்சு பயிற்சி, பிராணாயாமம், நடனம் உட்பட வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு தேவையான இன்னும் பல வித்தைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இந்த வித்தைகளை கற்றுக்கொடுத்து நயன்தாராவின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் அழைப்புவிடுத்துள்ளதாம் ஆசிரமம்.

ஆனால் இந்த அழைப்பை ஏற்க நயன்தாரா மறுத்துவிட்டார். இப்போது ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன், சூர்யாவுடன் மாஸ், நானும் ரவுடிதான், உதயநிதியுடன் நண்பேன்டா ஆகிய திரைப்படங்களில் நயன்தாரா நடத்தி வருகிறார். ஃபுல் பிஸியாக இருக்கும் நயன்தாராவால், ஆசிரமத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்ள நேரம் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆசிரமத்துக்கு வர இயலாது என்று நயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். நித்தியானந்தா ஆசிரமம் சார்பில் பாலிவுட் நடிகை ஸ்வேதா திவாரிக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அவர் அதுகுறித்து என்ன பதில் சொன்னார் என்பது இன்னும் தெரியவில்லை.

 

அஜீத்தின் அடுத்த படம்... நல்ல தயாரிப்பாளருக்காகக் காத்திருக்கும் இயக்குநர்!

அஜீத்தின் 55-வது படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஆடியோ ரிலீஸ் வரை இப்படியே போக்கு காட்ட வேண்டும் என்று பேசி வைத்துக் கொண்டு செய்கிறார்கள் போலிருக்கிறது. போகட்டும்...

அஜீத்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜீத்தின் அடுத்த படம்... நல்ல தயாரிப்பாளருக்காகக் காத்திருக்கும் இயக்குநர்!

இந்தப் படத்தை இயக்குபவர் சிறுத்தை, வீரம் படங்களை இயக்கிய சிவா. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலும் ரெடி. படத்தின் கதை, திரைக்கதை பக்காவாக தயாராகிவிட்டது.

இப்போது புதிய சிக்கல். சரியான தயாரிப்பாளர் அமையவில்லையாம்.

அஜீத் படத்தைத் தயாரிக்க வேண்டுமென்றால் குறைந்தது 70 கோடியாவது வேண்டும் என்ற நிலை. காரணம் அவர் சம்பளம் மட்டுமே 50 கோடியைத் தொடுகிறது. வரி செலுத்தியது போக, முழுவதும் வெள்ளையாகத்தான் வேண்டும் என்பது அவர் போடும் முதல் நிபந்தனை.

தயாரிக்க முன் வந்த பிவிபி சினிமாஸ் ஏற்கெனவே சில சிக்கல்களில் இருப்பதால், வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அஜீத்.

நல்ல தயாரிப்பாளர் தேடிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சிவா.

 

20 ஆண்டுகளாக ஓடும் ஷாரூக்கான் படம்!

தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்க.. 1995-ம் ஆண்டு வெளியான படம் இது. ஷாரூக்கான், காஜோல் நடித்திருந்தனர்.

வசூலில் புதிய சாதனைப் படைத்த இந்தப் படம், 20 ஆண்டுகளாக ஒரு தியேட்டரில் இன்னமும் ஓடி, உலக சாதனைப் படைத்துள்ளது.

20 ஆண்டுகளாக ஓடும் ஷாரூக்கான் படம்!

சினிமா உலக சரித்திரத்தில் தொடந்து 20 ஆண்டுகள் எந்தப் படமும் ஓடியதில்லை. இந்தப் படம் மராத்தா மந்திர் என்ற மும்பை திரையரங்கில் பகல் காட்சியாக இன்னமும் ஓடிக் கொண்டுள்ளது.

கூட்டம் வருகிறதா? வரத்தான் செய்கிறது. சில தினங்களில் அரங்கு நிறைந்துவிடுவதும் உண்டாம். வெளியூர்களில் இருந்து வரும் ரசிகர்கள் நேராக இந்தப் படத்துக்கு வந்துவிடுகிறார்களாம்.

கடந்த சில வாரங்களாக கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்ததால், படத்தைத் தூக்கிவிடலாமா என்று யோசித்துள்ளது திரையரங்க நிர்வாகம்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட ரசிகர்களும், தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ராவும், படத்தை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்களாம். எனவே தொடர்ந்து படத்தை ஓட்ட மராத்தா மந்திர் முடிவு செய்துள்ளது.

இந்த செய்தி பரவ ஆரம்பித்ததுமே, படத்துக்கு மேலும் அதிகமாக கூட்டம் வரத் தொடங்கியுள்ளதாம்.

 

தீபாவளி ரேஸில் ஜெயம் ரவியின் பூலோகம்.. கத்திக்கு தியேட்டர்கள் கிடைக்குமா?

'ஜெயம்' ரவி நாயகனாக நடித்துள்ள 'பூலோகம்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதனால் விஜய் நடிக்கும் கத்தி படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தீபாவளி ரேஸில் ஜெயம் ரவியின் பூலோகம்.. கத்திக்கு தியேட்டர்கள் கிடைக்குமா?

ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் 'ஜெயம்' ரவி, த்ரிஷா ஆகியோர் நடித்திருக்கும் படம் 'பூலோகம்'. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்தப் படத்தை, இயக்குநர் ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கல்யாண் கிருஷணன் இயக்கியுள்ளார். ஜனநாதன் இந்தப் படத்திற்கான வசனங்களை எழுதியுள்ளார்.

விக்ரம் நடித்த ஐ படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதாக முதலில் தயாரிப்பாளர் தரப்பு கூறியிருந்தது. ஆனால் இப்போது ஐ படத்தை நவம்பருக்கு தள்ளி வைத்துவிட்டார்கள்.

பூலோகம் படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்களுக்கே ஐ படத்தைத் தரப் போவதாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் நிபந்தனை விதித்துள்ளதால், விநியோகஸ்தர்கள் அந்தப் படத்தை வாங்கியுள்ளார்களாம்.

ஏற்கெனவே தீபாவளி ரேஸில் முந்திக் கொண்டு வெளியாகிறது விஷாலின் பூஜை. அந்தப் படத்துக்கு 350- அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள அரங்குகளில்தான் பூலோகமும் கத்தியும் வெளியாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நண்பன் தனுஷுடன் த்ரிஷா பார்ட்டி: ட்விட்டரில் போட்டோ

சென்னை: தனுஷுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை த்ரிஷா அவரை கட்டியணைத்தபடி போட்டோ எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

த்ரிஷா நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவர் இதுவரை தனுஷுடன் நடித்தது இல்லை. ஆனால் அவருக்கு தனுஷின் மாமனரான சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் ஆசை உள்ளது.

நண்பன் தனுஷுடன் த்ரிஷா பார்ட்டி: ட்விட்டரில் போட்டோ

இந்நிலையில் த்ரிஷா, தனுஷ் ஆகியோர் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டனர். அப்போது த்ரிஷாவும், தனுஷும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டு எடுத்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

இதன் மூலம் அவர்கள் சேர்ந்து நடிக்காவிட்டாலும் நல்ல நண்பர்களாக உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. தனுஷ் அனேகன் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தியில் ஷமிதாப் படத்தில் நடித்து வருகிறார். ஷமிதாபில் அமிதாப் பச்சன், ரேகா, அக்ஷரா ஹாஸனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.