பிரசாந்த் படத்துக்காகப் பாடிய மோஹித் சவுஹான்!

இந்தியாவின் தலைசிறந்த பாடகரான மோஹித் சவ்ஹான் பிரஷாந்தின் சாஹசம் படத்திற்காக பாடிய பாடலை மும்பையில் பதிவு செய்தனர்.

பிரசாந்த் படத்துக்காகப் பாடிய மோஹித் சவுஹான்!

கவிஞர் நா.முத்துகுமார் எழுதிய

'பெண்ணே பெண்ணே...
குட்டிப் பெண்ணே ஆங்கிரி பேர்ட் பெண்ணே...
சும்மா சீனு வேணா(ம்) கண்ணே,
உங்க நைனா போட்ட சோத்தில்.. காரம் ரொம்போ...
குல்பி வாங்கித்தாரேன் கண்ணே..

என்ற வரிகளை மோஹித் சவ்ஹான் தனது மயக்கும் குரலில் பாடி அசத்தினார்.

இசையமைப்பாளர் தமன், சாஹசம் படத்திற்காக 6 மாதங்களாக இசை கோர்ப்பு செய்து 5 பாடல்களை ரெக்கார்ட் செய்துள்ளார். ஏற்கனவே ஆண்ட்ரியா, லட்சுமி மேனன், ஸ்ரெயா கோஷல், ஹனி சிங், சங்கர் மகாதேவன் ஆகியோர் சாஹசம் படத்திற்காக பாடியது தெரிந்ததே.

நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளரான தியாகராஜன் மோஹித் சவ்ஹானை பெரிய முயற்சிக்குப்பின் சாஹசம் படத்தில் பாட வைத்துள்ளார். பாடலைக் கேட்ட அனைவரும் 5 பாடல்களில் எதை முதல் பாடலாக தேர்வு செய்வதென்று ஒரு குழப்பத்தில் உள்ளார்களாம். அந்தளவுக்கு தமன் 5 பாடல்களையும் வித்தியாசமாக இசையமைத்துள்ளார்.

மோஹித் சவ்ஹானைப் பற்றி நடிகர் தியாகராஜன் கூறுகையில், "மிக அருமையான குரல் வளமிக்க மோஹித் சவ்ஹான் இசையில் மட்டுமல்ல பழகுவதற்கும் இனிமையான மனிதர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய பாடலை கேட்ட நாள்முதல் பிரஷாந்தின் சாஹசம் படத்தில் இவரை பாட வைக்க வேண்டுமென நினைத்தேன். நீண்ட முயற்சிக்குப் பிறகு அது நிறைவேறியது எனக்கு மகிழ்ச்சி. மிகச் சிறப்பாக வந்துள்ள ஆங்கிரி பேர்ட் பெண்ணே பாடலை இளம் காதலர்களுகாக டெடிக்கேட் செய்கிறேன்," என்றார்.

இந்த பாடலை இளைஞர்கள் மட்டுமல்ல இசை விரும்பிகள் அனைவருமே காதலிப்பார்கள். மோஹித் சவ்ஹான் ராக் ஸ்டார், டெல்லி 6, ரங்தே பசந்தி, ஜப்வி மெட் ஆகிய இந்தி படங்களில் பாடிய அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தன. அகில இந்திய அளவில் சிறந்த பாடகருக்கான விருதை தொடர்ந்து 5 வருடங்களாக பெற்று வருகிறார் மோஹித் சவ்ஹான். இவர் ஏற்கனவே அனிருத் இசையில் 3 படத்திற்காக பாடிய போ நீ போ... என்ற பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்ததோடல்லாமல் சிறந்த பாடகருக்கான விஜய் விருதையும் பெற்று தந்தது.

சாஹசம் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது.

 

தபால் துறை ஏற்பாடு: ரஜினிக்கு இ போஸ்டில் குவிந்த வாழ்த்துகள்!

நேற்று டிசம்பர் 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு செய்திருந்த இ போஸ்ட் மூலம் மட்டுமே பல ஆயிரம் வாழ்த்துக் கடிதங்கள் குவிந்தன.

ரஜினியின் பிறந்த நாளை உலகமே நேற்று கொண்டாடியது. நாட்டின் பிரதமர் தொடங்கி, சாமானிய ரசிகன் வரை அவரை அனைவருமே வாழ்த்தி மகிழ்ந்தனர். உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் தொலைக்காட்சிகள் மூலமாகவும் இணையதளங்கள் வாயிலாகவும் வாழ்த்தினர்.

தபால் துறை ஏற்பாடு: ரஜினிக்கு இ போஸ்டில் குவிந்த வாழ்த்துகள்!

ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற இ போஸ்ட் முறையை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியது. நேற்று சென்னை அபிராமபுரம், கோபாலபுரம் தபால் நிலையங்களில் இபோஸ்ட் மூலம் பல ஆயிரம் வாழ்த்துக் கடிதங்கள் ரஜினிக்குக் குவிந்தன. இதனை அஞ்சல் துறை ஊழியர்கள் ரஜினி வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தனர்.

இதுகுறித்து சென்னை மண்டல தபால் துறை அலுவலர் மெர்வின் அலெக்சாண்டர் கூறுகையில், " பொது மக்களைக் கவர அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில்

ஒன்று இ போஸ்ட். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற விரும்புவோருக்காக இந்த சேவையை அறிமுகப்படுத்தினோம். பெரிய வெற்றி பெற்றுள்ளது," என்றார்.

 

நெல்லையில் கத்தி பட விழா.. விஜய், சமந்தா பங்கேற்பு

கத்தி படத்தின் 50 நாள் விழாவை நெல்லையில் கொண்டாடுகின்றனர். இதில் விஜய் மற்றும் சமந்தா கலந்து கொள்கின்றனர்.

நடிகர் விஜய் நடித்து வெளியான ‘கத்தி' திரைப்படம் 50 நாளை கடந்து ஓடிக்கொண்டுள்ளது.

நெல்லையில் கத்தி பட விழா.. விஜய், சமந்தா பங்கேற்பு

இதைக் கொண்டாடும் வகையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நெல்லையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கத்தி பட வெற்றி விழா மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெறுகிறது.

இதற்காக பாளை கோர்ட்டு எதிரே உள்ள பெல் பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது. விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்க உள்ளனர். விழாவில் பங்கேற்பதற்காக விஜய் நாளை மதியம் விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார்.

அங்கிருந்து நெல்லை வரும் அவருக்கு மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. விஜய்யுடன் கத்தி பட நாயகி சமந்தா, நகைச்சுவை நடிகர் சதீஷ், டைரக்டர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் வருகின்றனர்.

கத்தி படம் நெல்லை மாவட்ட கிராமத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

பிறந்த நாளுக்கு வாழ்த்திய பிரதமர் உள்ளிட்ட அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்த ரஜினி

சென்னை: தனக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன பிரதமர் உள்ளிட்ட அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

நேற்று டிசம்பர் 12-ம் தேதி ரஜினியின் பிறந்த நாளை உலகமே கொண்டாடியது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக தமிழில் ட்வீட் செய்து ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னார்.

பிறந்த நாளுக்கு வாழ்த்திய பிரதமர் உள்ளிட்ட அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்த ரஜினி

திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக தலைவர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்பட கட்சித் தலைவர்கள் ரஜினியை வாழ்த்தினர்.

இந்தியத் திரையுலகின் ஜாம்பவான் அமிதாப் பச்சன், கமல்ஹாஸன் தொடங்கி, இளம் தலைமுறை நடிகர் - நடிகைகள் மற்றும் திரையுலகக் கலைஞர்கள் அத்தனை பேரும் ரஜினிக்கு தங்களின் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மீடியா மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை புதுப் புது பாணியில் தெரிவித்தன.

இந்திய அஞ்சல்துறை நேற்று முழுக்க ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இதற்கெல்லாம் நன்றி தெரிவித்து, ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நான்கு ட்வீட்டுகளை வெளியிட்டுள்ளார்.

அவற்றில் பிரதமர் மோடி தனது பிஸியான பணிகளுக்கிடையிலும் எனக்காக பிறந்த நாள் வாழ்த்து கூறியதற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

அதே போல, திமுக தலைவர் கருணாநிதி, அமிதாப் பச்சன், கமல்ஹாஸன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள ரஜினி, தனி ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனி ட்வீட் செய்துள்ளார்.

 

ஆசைக்கு இணங்க சொன்ன சினிமா இயக்குநர்… ஆடியோ ரிலீஸ் மேடையில் கன்னத்தில் அறைந்த நடிகை!!

மும்பை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு தரவேண்டுமானால் தனது ஆசைக்கு இணங்க வலியுறுத்திய திரைப்பட இயக்குனரை பொது நிகழ்ச்சியில் ராக்கி சாவந்தின் தோழி கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் இளம் இயக்குனர் சச்சேந்திர சர்மா இயக்கத்தில் ‘மும்பை கேன் டான்ஸ் சாலா‘ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஆஷீஷ் சர்மா, பிரசாந்த் நாராயண், ஆதித்ய பஞ்சோலி, சக்தி கபூர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஆசைக்கு இணங்க சொன்ன சினிமா இயக்குநர்… ஆடியோ ரிலீஸ் மேடையில் கன்னத்தில் அறைந்த நடிகை!!

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராக்கி சாவந்துடன் அவரது நெருங்கிய தோழி மனீஷாவும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி நடைபெற்ற மேடையில் அனைத்து நட்சத்திரங்களுடன் இயக்குனர் சச்சேந்திர சர்மா நின்றவாறு செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மேடையில் ஏறிய மனீஷா, இயக்குனர் சச்சேந்திர சர்மா கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இந்த காட்சியை பார்த்து அரங்கில் இருந்தவர்கள் திகைத்து போனார்கள். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தான் இயக்கப் போகும் புதுப்படத்தில் நடிக்க வாய்ப்புத்தர வேண்டுமானால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று சச்சேந்திர சர்மா வலியுறுத்தியதாலேயே அவருக்கு பாடம் புகட்டும் வகையில் அவரது கன்னத்தில் அறைந்ததாக மனீஷா கூறினார். ஆனால், இந்த சம்பவம் குறித்து யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை.

ஆனால், இயக்குனர் சச்சேந்திர சர்மா கன்னத்தில் தனது தோழி அறைந்தது சரிதான் என்று நடிகை ராக்கி சாவந்த் கூறினார். அவர் கூறுகையில், ‘‘மனீஷா செய்தது சரிதான். படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க ஆசைக்கு இணங்க சொல்வது எந்த விதத்தில் நியாயம்'' என்றார்.

அதேசமயம் மனீஷாவின் நடவடிக்கை ஒரு ‘பப்ளிசிட்டி ஸ்டண்ட்' என்று இயக்குனர் சச்சேந்திர சர்மா கூறினார். அறை வாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘அந்த பெண்(மனீஷா) யார் என்றே எனக்குத் தெரியாது. சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடும் புதுமுக நடிகைகள் எல்லாம் இது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டு தங்களை பிரபலப்படுத்தி கொள்ள விரும்புவது வேதனைக்குரியது'' என்றார் அப்பாவியா? யார் சொல்வது உண்மை?

 

பட்டாயா பீச்சில் சாமுராய் வாள்சண்டை போட்ட விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன்!

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது.

முக்கியமான சண்டைக் காட்சிகளை மலேசியா, தாய்லாந்து பகுதிகளில் எடுத்து வருகிறார்கள்.

பட்டாயா பீச்சில் சாமுராய் வாள்சண்டை போட்ட விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன்!

தாய்லாந்து நட்டிலுள்ள பட்டயா பீச்சில், அந்நாட்டின் பாரம்பரியம் மிக்க சாமுராய் வகை வாள் சண்டை வீராங்கனைகள் இருவரோடு ஆப்ரிக்க, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சவூதி அரேபியா, ஜப்பான் போன்ற நாடுகளை சேர்ந்த மார்ஷல் ஆர்ட்ஸ், லெக் ஜெம்ப்,பாக்சிங், ரிவர்ஸ் ஆக்ஷன், பாடி பிளாக்கிங் போன்ற கலைகளின் தலை சிறந்த கலைஞர்கள் பங்கேற்க சண்முகபாண்டியன் மோதும் சண்டை காட்சி 6 நாட்கள் நடந்தது.

பட்டாயா பீச்சில் சாமுராய் வாள்சண்டை போட்ட விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன்!

இதற்காக சுமார் ரூ 60 லட்சம் செலவானது. இச்சண்டைக் காட்சியில் 20 தாய்லாந்து ஸ்டண்ட் வீரர்களும் பங்கேற்றார்கள். நடிகர் ஜெகன், ரஞ்சித்,சுரேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

பட்டாயா பீச்சில் சாமுராய் வாள்சண்டை போட்ட விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன்!

இச்சண்டை காட்சியில் அதிகமான கிரேன்களைப் பயன்படுத்தி எடுத்துள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் கேச்சா.

 

லிங்கா முதல் நாள் வசூல்... தமிழகத்தில் மட்டும் ரூ 17 கோடி.. எந்திரனை முந்தி சாதனைப் படைத்தது!

ரஜினியின் லிங்கா படம் வெளியான முதல் நாளே தமிழகம் மற்றும் ஆந்திராவில் எந்திரன் படத்தின் முதல் நாள் சாதனையைத் தகர்த்தெறிந்தது.

தமிழகம் முழுவதும் 700 அரங்குகளில் லிங்கா படம் நேற்று வெளியானது. பல திரையரங்குகளில் லிங்கா நள்ளிரவே திரையிடப்பட்டது. நள்ளிரவு 1 மணி, அதிகாலை 4 மணி, காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.

அதன்பிறகுதான் வழக்கமான நேரங்களில் காட்சிகள் இருந்தன. இன்றும் காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. நாளையும் இந்தக் காட்சி உண்டு.

இந்த சிறப்புக் காட்சிகள் தவிர்த்த ரெகுலர் ஷோக்கள் மூலமாக மட்டுமே ரூ 17 கோடியை லிங்கா தமிழகத்தில் குவித்திருப்பதாக முதல் கட்ட செய்தி வந்துள்ளது. தமிழகத்தில் முதல் நாளில் ரூ 11 கோடியை எந்திரன் வசூலித்திருந்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது.

லிங்கா முதல் நாள் வசூல்... தமிழகத்தில் மட்டும் ரூ 17 கோடி.. எந்திரனை முந்தி சாதனைப் படைத்தது!

ஆந்திராவில் லிங்காவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு முதல் நாளில் ரூ 8 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகத்தில் லிங்கா வசூல் நிலவரம் தெரியவில்லை.

வெளிநாடுகளில் 1000-க்கும் அதிகமான அரங்குகளில் லிங்கா வெளியானது (இன்னும் இந்திப் பதிப்பு வெளியாகவில்லை). அங்கு படத்துக்கு பெரிய வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கா. அந்த விவரங்கள் விரைவில் தெரிய வரும்.

 

பெங்களூரு திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘பண்ணையாரும் பத்மினியும்’

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்ப‌டங்களுக்கான பிரிவில் ‘பண்ணையாரும் பத்மினியும்' படத்துக்கு விருது கிடைத்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் திரைப் படத்துக்கு கர்நாடக அரசின் விருது கிடைத்துள்ளது.

கர்நாடக சலனசித்ராவின் 7-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா கடந்த 4ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற்றது.

பெங்களூரு திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘பண்ணையாரும் பத்மினியும்’

170 திரைப்படங்கள்

44 நாடுகளைச் சேர்ந்த 170 திரைப்படங்கள் 10 திரையரங்குகளில் திரையிடப்பட்டன. இதில் எஸ்.யூ.அருண்குமார் இயக்கிய `பண்ணையாரும் பத்மினியும்', ஜி.பிரம்மா இயக்கிய `குற்றம் கடிதல்' ஆகிய இரு தமிழ் திரைப் படங்களும் திரையிடப்பட்டன. இரு படங்களுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது.

3 படங்கள் விருதுக்கு தேர்வு

இந்நிலையில் தேர்வான திரைப்படங்களில் சிறந்த கன்னட திரைப்படம், இந்திய திரைப்படம், ஆசிய திரைப்படம், உலக திரைப் படம் ஆகிய‌ பிரிவுகளில் தலா 3 சிறந்த திரைப்படங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன‌.

பண்ணையாரும் பத்மினியும்

இதன் நிறைவு விழா கடந்த வியாழக்கிழமை இரவு பெங்களூருவில் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா தலைமையில் நடைபெற்றது. கன்னட திரைப் படப் பிரிவில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட `பிரக்குருதி', `ஆகாசி பார்லர்', `ஹஜ்' படங்களின் இயக்குநர்களுக்கு விருதும், தலா ஒரு லட்சம் பரிசும் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து இந்திய திரைப்படங்களுக்கான பிரிவில் `அன் டூ டஸ்க் (மலையாளம்), எல்லோ (மராத்தி) மற்றும் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த `பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இயக்குநர் எஸ்.யூ.அருண்குமாருக்கு விருதும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இயக்குநர் மகிழ்ச்சி

பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் செக் குடியரசு, டெல்லி உள்ளிட்ட 6 திரைப்பட விழாக்களில் பலருடைய பாராட்டுகளை பெற்றது. இந்த திரைப்படத்துக்கு பெங்களூரு திரைப்பட விழாவில் விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் தெரிவித்துள்ளார்.

 

கோச்சடையான் உட்பட 3 படங்களுக்காக ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரை

சென்னை: கோச்சடையான், தி 100 ஃபூட் ஜார்னி, மில்லியன் டாலர் ஆர்ம் படங்களுக்கான சிறந்த இசை அமைப்புக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 20-ந் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சஸ்லில் நடக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ பெயர் பட்டியல் ஜனவரி 15ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதில் சிறந்த இசை அமைப்புக்காக 114 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கோச்சடையான் உட்பட 3 படங்களுக்காக ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரை

அதில் ஒன்று ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் மோஷன் கேப்சர் அனிமேஷனில் வெளியான ‘கோச்சடையான்' படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் பெயரும் பட்டியலில் இணைந்துள்ளது.

மேலும் தி 100 ஃபூட் ஜார்னி, மற்றும் மில்லியன் டாலர் ஆர்ம் உள்ளிட்ட படங்களுக்காகவும் சிறந்த இசையமைப்புக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விருதில் கோச்சடையான் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் தமிழுக்கு கிடைக்கும் முதல் ஆஸ்கார் விருதாக இது அமையும்.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஏற்கெனவே ரஹ்மான் ஆஸ்கர் விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

விலங்கு தோல் ஆடைகளுக்கு தடா! ‘பெடா’விற்காக அரை நிர்வாண போஸ் கொடுத்த இலியானா

மும்பை: விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட எந்தப் பொருளுக்கும் தடா சொல்வோம் என்று சமீபத்தில் ‘பெடா' அமைப்பில் இணைந்த இலியானா கூறியுள்ளார்.

விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கப் போராடும் அமைப்பு பெடா. இந்த அமைப்பின் சார்பில் ‘விலங்குகளைத் துன்புறுத்தாதீர்கள்; சர்க்கஸுக்கு விலங்குகளைப் பயன்படுத்தாதீர்கள்' என்று ஹேமமாலினி, திரிஷா, தமன்னா என பல நடிகைகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெடா வின் லேட்டஸ்ட் தூதுவராக இணைந்துள்ளார் இடுப்பழகி இலியானா. சமீபத்தில் இந்த அமைப்புக்காக அரை நிர்வாண போஸ் கொடுத்து வாய் பிளக்க வைத்துவிட்டார் இலியானா. அதற்கும் நியாயமான காரணத்தையும் கூறி வருகிறார் இலியானா.

விலங்கு தோல் ஆடைகளுக்கு தடா! ‘பெடா’விற்காக அரை நிர்வாண போஸ் கொடுத்த இலியானா

அங்கோரா ரோமம் என்பது ஒரு வகை முயல் மற்றும் பூனை வகைகளைச் சேர்ந்த ரோமம். இதிலிருந்துதான் ஸ்வெட்டர், கம்பளி, ஸ்கார்ஃப் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

அரை நிர்வாண போஸ்

இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துத்தான், பெடா அமைப்பு செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நிர்வாண போஸ் கொடுத்திருந்தார் இலியானா. புகைப்படத்தின் பின்புறம், ‘அங்கோரா ரோமம் மற்றும் தோல் இவற்றுக்கு நோ சொல்வோம்!' என்று எழுதப்பட்டிருந்தது.

தோல் ஆடைகள்

சமீபத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வந்த இலியானா, தனது முன்புறம், விலங்குகளின் தோல் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் ‘ஃபர்' என்று எழுதி அடிக்கப்பட்டிருந்த டி-ஷர்ட்டை அணிந்து வந்தார்.

முயல் ரொம்ப பிடிக்கும்

இந்த நிகழ்ச்சியில் பேசிய இலியானா, ‘‘விலங்குகளில் முயல்கள் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவற்றின் துறுதுறு குணமும், அழகான உடலமைப்பும் என்னை மிகவும் கவர்ந்தவை.

முயல்களுக்கு கொடுமை

சிலர் அங்கோரா முயல்களை உயிருடன் இருக்கும்போதே கொடுமைப்படுத்துகிறார்கள். அவற்றின் ரோமங்களைப் பறித்து ஸ்வெட்டர், ஸ்கார்ஃப் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

தோல் ஆடைகளுக்கு தடா

முயல்கள் மட்டுமில்லை விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட எந்தப் பொருளுக்கும் தடா சொல்வோம்!'' என்று பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார் இந்த கவர்ச்சிப் புயல். இடுப்பழகி சொன்னபிறகு அதற்கு அப்பீல் இருக்கா என்ன?

 

வித்தியாசமான பிறந்தநாள்.. வாழவைத்த தெய்வங்களான ரசிகர்களுக்கு நன்றி! - ரஜினி அறிக்கை

சென்னை: இது என் வாழ்க்கையில் வித்தியாசமான பிறந்த நாள். என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நன்றி என்று தன் கைப்பட கடிதம் எழுதி நன்றி தெரிவித்துளளார் ரஜினிகாந்த்.

வித்தியாசமான பிறந்தநாள்.. வாழவைத்த தெய்வங்களான ரசிகர்களுக்கு நன்றி! - ரஜினி அறிக்கை

ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதியை உலக ஸ்டைல் தினமாகக் கொண்டாடினர் அவரது ரசிகர்கள். தமிழகம், இந்தியா தாண்டி, உலகின் பல்வேறு நாடுகளிலும் ரஜினி பிறந்த நாளைக் கொண்டாடினர். லட்சக்கணக்கான கேக்குகள் வெட்டப்பட்டன.

நேற்று ரஜினி நடித்த லிங்காவும் வெளியாகி, பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ளது.

தனக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன, தனக்காக வேண்டிக் கொண்ட, பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவரே கைப்பட எழுதிய அந்தக் கடிதம்:

வித்தியாசமான பிறந்தநாள்.. வாழவைத்த தெய்வங்களான ரசிகர்களுக்கு நன்றி! - ரஜினி அறிக்கை

இந்த 12.12.14 என் வாழ்க்கையில் மறக்க முடியாத பிறந்த நாள். இந்நாளில் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, அவர்கள் என்றும் நலமோடு வாழ இந்நாளில் இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்
ரஜினிகாந்த்

-இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.