நடிகை கொலையில் கணவன் கைதாகிறார்

Actress murder case : actress husband arrested soon

நடிகை பைதுஷி தாஸ் கொலை வழக்கில் அவருடைய கணவர் கேதார் பர்தே மீது சந்தேகம் வலுத்து வருவதால், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. 'மிஸ் சென்னை' பட்டம் வென்றவரும், நடிகையுமான பைதுஷி தாஸ் (23). தனது கணவர் கேதார் பர்தேவுடன் மும்பை அந்தேரி மேற்கில் வாடகைக்கு குடியிருந்தார்.

கடந்த திங்கட்கிழமை பைதுஷி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அருகில், கண்ணாடி அலமாரி உடைந்து கிடந்ததால், அலமாரி விழுந்து அவர் இறந்திருக்கலாம் என போலீசார் முதலில் கருதினர். ஆனால், பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பைதுஷி கழுத்தில் நகக்கீறல்கள் இருந்தன. இதனால், கேதாரின் நகம் மாதிரியை தடயவியல் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.

16 வயது முதலே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த பைதுஷி, சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் மன ரீதியாகவும் கடுமையாக பாதித்திருந்தார். இந்த இரு நோய்களுக்கும் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், ஓராண்டுக்கு முன் ஏற்பட்ட விபத்து காரணமாக பைதுஷியின் தலை முடி கொட்டியது. அதற்காகவும் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சிகிச்சைகளுக்கு பெரும் தொகை செலவாகி வந்தது. இதனால், பைதுஷிக்கும் கேதாருக்கும் சில மாதங்களாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது. கேதாருக்கு மாத சம்பளமாக ஸி60 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. இதில், வீட்டு வாடகைக்கு ரூ. 22 ஆயிரம் தருகிறார். இது போக பைதுஷியின் மருத்துவச் செலவுக்கும் பணத்தை செலவு செய்துள்ளார்.

தினமும் மூன்று வேளை இன்சுலின் ஊசியை  பைதுஷி பயன்படுத்தியுள்ளார். இதனால், பணப் பிரச்னை ஏற்பட்டதால் சிகிச்சைக்கான பணத்தை சம்பாதித்து கொள்ளும்படி பைதுஷியிடம் கேதார் கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட சண்டையால் பைதுஷியின் மனநிலை மேலும் பாதித்துள்ளது.

கொலை நடந்த அன்று காலையும் கேதாருடன் பைதுஷி சண்டை போட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் பைதுஷியை கேதார் தாக்கி, கண்ணாடி அலமாரியை அவர் மீது தள்ளி விட்டதால் எதிர்பாராத விதமாக பைதுஷி இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக 4வது நாளாக கேதாரிடம் போலீசார் நேற்றும் விசாரித்தனர். அவர் மீது சந்தேகம் வலுத்து வருவதால் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. கொலை பற்றி விசாரித்து வரும் அந்தேரி டி.என். நகர் போலீஸ் அதிகாரி கூறியதாவது;

கொலை நடந்த அன்று காலை 8 மணிக்கு வேலைக்கு புறப்பட்டு சென்ற கேதார், அடுத்த ஒரு மணிநேரத்தில் பைதுஷி மொபைலுக்கு போன் செய்துள்ளார். அதற்கு பதில் இல்லாததால், பைதுஷியை மிகவும் நேசிப்பதாக எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். பைதுஷி எந்த பதிலும் அளிக்காத நிலையில், வீட்டின் மேல்தளத்தில் வசிக்கும் வீட்டின் உரிமையாள ருக்கு போன் செய்து கேதார் விவரம் கேட்டிருக்கலாம். அப்படி செய்யவில்லை. காலை 10 மணிக்கு கேதார் தனது தந்தைக்கு போன் செய்து, பைதுஷி பதில் அளிக்காதது பற்றி கூறியுள்ளார். பிறகு இரவு 7 மணிக்கு பைதுஷியின் தந்தை சாந்தனு தாசுக்கு போன் செய்து, பைதுஷிக்கு பலமுறை போன் செய்தும் போனை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

திருமணமான கடந்த 3 ஆண்டுகளில் கேதார் தனக்கு ஒருமுறை கூட போன் செய்ததில்லை என்றும், பைதுஷிக்கு தான் போன் செய்தாலும் கேதார் தன்னிடம் சரியாக பேசமாட்டார் என்றும் சாந்தனு கூறியுள்ளார். இதனால், கேதார் மீது சந்தேகம் அதிகமாகி உள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

மும்பை போலீஸ் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் நாங்கரே பாட்டீல் கூறுகையில், ''பைதுஷி கழுத்தில் உள்ள கீறல்கள் கேதாரின் நகத்தால் ஏற்படுத்தப்பட்டதா என்பது பரிசோதனையில் உறுதியானால், அவர் கைது செய்யப்படுவார். கொலை நடந்தன்று பைதுஷியை பார்க்க 3 பேர் வந்துள்ளனர். அவர்களை பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.
 

த்ரிஷாவை மிஞ்சும் வேடம்

Best role i ever play

த்ரிஷா நடித்த ஜெஸ்சி வேடத்தைவிட என் வேடம் சிறந்தது என்றார் சமந்தா. 'பாணா காத்தாடி', 'நான் ஈ' படங்களில் நடித்த சமந்தாவுக்கு திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரது தோலில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் மணிரத்னம், ஷங்கர் ஆகியோரின் படங்களில் இருந்து விலகினார். மாதக்கணக்கில் வீட்டில் முடங்கி சிகிச்சை பெற்றார். சமீபத்தில் மீண்டும் நடிக்க வந்தார். இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் 'நீ தானே என் பொன் வசந்தம்' படத்தில் அவர் பாக்கி வைத்திருந்த காட்சிகளை நடித்து முடித்தார். விரைவில் அப்படம் வெளிவரவுள்ளது. இதுகுறித்து சமந்தா கூறியதாவது:

'விண்ணை தாண்டி வருவாயா' படத்தில் நான் சிறிய வேடத்தில் நடித்திருந்தேன். இப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. 'நீ தானே என் பொன்வசந்தம்' படம் வி.தா.வ. படத்தை காட்டிலும் இன்னும் வரவேற்பை பெறும். யதார்த்தமான படமாக இது உருவாகி இருக்கிறது. வி.த.வ. படத்தில் ஜெஸ்சி என்ற பாத்திரத்தை த்ரிஷா ஏற்றிருந்தார். அந்த கதாபாத்திரத்தைவிட நீ.தா.எ.பொன்வசந்தம் படத்தில் நான் ஏற்றிருக்கும் நித்யா என்ற கதாபாத்திரம் பெரிதும் வரவேற்கப்படும். மறக்கமுடியாத உணர்வுகளை தன்வசமாக்கும் இப்பாத்திரம் ஒவ்வொரு வரின் சிந்தனையிலும் பட்டாம்பூச்சி பறக்கவிடும். வாழ்வின் 4 வித காலகட்டங்களில் நிகழும் சம்பவங்கள் இப்பாத்திரத்தில் இடம்பெறுகிறது. இதை நான் பெற்றது அதிர்ஷ்டம். இந்த படம் அனைவரையும் தங்களின் பழைய வாழ்வை திரும்பிப்பார்க்க வைக்கும். இவ்வாறு சமந்தா கூறினார்.
 

‘எதிர்நீச்சல்’ அனிரூத்

Ethirnichal anirudh

'ஒய் திஸ் கொலை வெறி' இசை அமைப்பாளர் அனிரூத் இந்தி, தமிழில் விக்ரம் நடிக்கும் 'டேவிட்' படத்துக்கு இசை அமைப்பதுடன் அப்படத்தை இயக்கும் பிஜாய் நம்பியாரின் அடுத்த படத்துக்கும் இசை அமைக்க உள்ளார். தமிழில் தனுஷ் தயாரிக்கும் 'எதிர்நீச்சல்' படத்துக்கும் இசை அமைக்கிறார்.
 

ரீமா சென் 5 மாத கர்ப்பம்

Reema Sen 5 months pregnant

ரீமா சென் 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதையடுத்து நடிப்பில் இருந்து ஓய்வு பெற உள்ளார். 'தூள்', 'ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரீமா சென். கடந்த மார்ச் மாதம் இவருக்கும் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஷிவ் கரணுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தார் ரீமா. தற்போது பெண் இயக்குனர் சினேகா இயக்கும் 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இந்தியில் 'கேங்ஸ் ஆப் வசேப்பூர்' என்ற படத்திலும் நடித்திருந்தார். இதில் அவர் படுகவர்ச்சியாக நடித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ரீமா சென் தற்போது 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். அதை வெளிப்படுத்தும் அளவுக்கு வயிறும் தெரிகிறது. எனவே ஷூட்டிங் செல்வதை குறைத்துக் கொண்டிருக்கும் அவர் 'சட்டம் ஒரு இருட்டறை'யில் நடிக்க வேண்டிய காட்சிகளை முடித்துக்கொடுத்துவிட்டு நடிப்பில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்று ரீமா சென் பரிசோதனை செய்ததில் வரும் மார்ச் மாதம் 2வது வாரத்தில் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து புதிய படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
 

விலைமாது வேடத்தில் நடிப்பது ஏன்

acting in the role of prostitute

புதிய படத்தில் விலைமாது வேடம் ஏற்றிருக்கிறார் திவ்யா. இதுபற்றி அவர் கூறியதாவது: இயக்குனர் விஜய் பிரசாத் சமீபத்தில் 'நிர் தோஸ்' என்ற கன்னட படத்தின் ஸ்கிரிப்ட் சொன்னார். இதில் நான் நடிக்கிறேனா, இல்லையா என்பதுபற்றி பல்வேறு கிசுகிசுக்கள் வந்துவிட்டன. இப்படத்தில் விலைமாது வேடம் என்பதால் இந்த கிசுகிசு பரவியது. ஏற்கனவே பிரசாத் இயக்கிய ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தின் ஸ்கிரிப்ட் சொன்னபோதே அதிலிருந்து வேறுபாடு தெரிந்தது. நடிக்க முடிவு செய்தேன். இது வாழ்க்கையின் ஒரு பகுதியை விளக்கும் கதை மட்டுமல்ல நிறைய மெசேஜ் உள்ளது. எத்தனை நாளைக்குத்தான் நடித்த வேடங்களையே மீண்டும் ஏற்று நடிப்பது. எனது நடிப்பில் வித்தியாசம் காட்ட வேண்டிய அவசியம் உள்ளது. இதை இயக்குனர்களும் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் இந்த வேடத்தில் நடிக்கிறேன். கமர்ஷியல் படங்களில் தொடர்ந்து நடித்தாலும் அதில் ஏற்கும் வேடங்கள் மாறுபட்டதாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் 'தில் கா ராஜா' பட ஷூட்டிங் முடிந்தவுடன் விடுமுறைக்காக வெளிநாடு செல்கிறேன். திரும்பி வந்ததும் ஜனவரி மாதம் முதல் 'நிர் தோஸ்' பட ஷூட்டிங்கில் பங்கேற்கிறேன்.
 

வழுக்கி விழுந்து அலறித் துடித்த ஹன்சிகா!

Hansika Modhwani Injured   

ஷூட்டிங்குக்காக மும்பை சென்ற நடிகை ஹன்சிகா மோத்வானி அங்கு ஹோட்டல் அறை பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டார். உடனடியாக விரைந்து வந்த ஹோட்டல் ஊழியர்கள் முதலுதவி செய்து சுளுக்கை எடுத்து விட்டனர். மும்பையில் நடந்த நிகழ்ச்சி à®'ன்றில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் சென்னையிலிருந்து மும்பை போனார் ஹன்சிகா. அங்கு ஸ்டார் ஹோட்டல் à®'ன்றில் அறை எடுத்து தங்கினார்.

நிகழ்ச்சிக்குச் செல்வதற்கு முன்பு குளிப்பதற்காக பாத்ரூமுக்குப் போனார். அப்போது தரையில் வழுக்கி கீழே விழுந்து விட்டார். இதனால் உடலில் சுளுக்கு மற்றும் வலி ஏற்பட்டு அலறித் துடித்தார்.

ஹோட்டல் ரூம் சர்வீஸை அவசரமாக போனில் அழைத்தார். இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்களே சுளுக்கை எடுத்து விட்டு ஹன்சிகாவுக்கு முதலுதவி செய்தனர். பின்னர் டாக்டர் வரவழைக்கப்பட்டார்.

 

நடிகைகள் பற்றாக்குறையால் அல்லாடும் தமிழ் சினிமா!!

'நண்பா... அடுத்த படம் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்... டாப் 5 ஹீரோயின்கள் பெயர் சொல்லேன்.... '

"அது வந்து... ம்ம்... டாப்பா... அப்படி யாரும் இல்லியே... அமலாபால், ஹன்ஸிகா, காஜல்... இவ்ளோதான் தேறுவாங்க போலிருக்கு. இதுல அஞ்சு பேரை எங்கே தேடறது...?"

heroine shortage kollywood
Close
 

"ஏன்.. மத்தவங்கள்லாம் ஹீரோயினா தெரியலையா..."

"அவங்க நடிகைகள் என்ற அளவில்தான் இருக்காங்க... இரண்டு பேர்ல ஒருத்தரா நடிக்கிற நடிகைகள் அவ்வளவுதான்..."

"சரி, முன்னணி ஹீரோக்களோட நடிக்கிற மாதிரி யாரும் தேறுவாங்களா..."

"ம்ஹூம்.. மிஞ்சிப் போனா... அனுஷ்கா ஒருத்தர்தான். த்ரிஷா, நயன்தாரால்லாம் ரிடையர்மெண்ட் ஸ்டேஜ். ஏதோ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ மாதிரி..."

"சரி.. புதுசா ரெண்டு மூணு பேர் வந்தாங்களே... சுந்தர பாண்டியன் லட்சுமி மாதிரி.. அவங்கள்லாம் எப்படி?"

"அட சும்மாருங்க... அந்த லட்சுமி முதல் படத்துல 3 லட்சம் வாங்குச்சு. இப்போ அப்படியே ஜம்ப் பண்ணி 40 லட்சம் வரைக்கும் கேக்குது!"

தமன்னா, இலியானா?

'அட போங்கண்ணா... மெட்ராசிலிருந்து போன் கால் வருதுன்னா அவங்க டேமேஜருங்க.. ஸாரி மேனேஜருங்க கூட போனை அட்டன்ட் பண்றதில்லை!!'

இந்த நீத்து சந்திரா, சமீரா ரெட்டி?

என்ன விளையாடறீங்களா.. அவங்கள இப்போ யாரு ஞாபகத்துல வச்சிருக்காங்க!!

"என்னப்பா இப்படி சொல்லிட்டே... இந்த ரிச்சான்னு ஒரு பொண்ணு நல்லா ப்ரஷ்ஷா வந்துச்சே... இனியான்னு நடிக்கத் தெரிஞ்ச பொண்ணு... அப்புறம் ராதா மகள்கள்... இவங்களையெல்லாம் விட்டுட்டியே!"

நண்பா.. நிலைமையே தெரியாம கோடம்பாக்கத்துல சுத்திக்கிட்டிருக்க நீயெல்லாம்... அவங்கள்லாம் சம்பளத்தொகை சொல்லும்போது தெறிச்சு ஓடணும் போலிருக்கும்... அதுவும் ராதாவோட பொண்ணுங்க இருக்காங்களே... அவங்க ரெண்டு பேத்தையும் வச்சு கோடம்பாக்கத்தையே மொத்தமா சுருட்ட முடியுமா பாக்கறாங்கப்பா... அந்தக் காலத்துல அம்பிகா - ராதா மாதிரி, இப்போ கார்த்திகா - துளசிய கொண்டு வரணும்ங்கிறதுதான் திட்டமாம்!

சரி... இப்போ முன்னணில இருக்கிற நடிகைகள் சம்பளம் எவ்வளவு?

முன்னே மாதிரி ஒளிச்சி மறைச்சி பேசி பயனில்ல நண்பா... அவங்கே டிமான்ட் பண்ணி இம்சிக்கும் போது, நாம மட்டும் ஏன் அதை சொல்லாம இருக்கணும்... இதோ லிஸ்டு.. அனுஷ்கா, நயன்தாரா - ரூ 1.50 கோடி. த்ரிஷா, ஹன்சிகா ரூ 75 லட்சம். ஸ்ருதிஹாஸன் (நான் பாலிவுட்டுலருந்து வர்றேனாக்கும் என்ற பந்தாவுடன்) ரூ 70 லட்சும், அமலா பால் 70 லட்சம், அஞ்சலி 70 லட்சம்!!

கண்ணக் கட்டுது நண்பா.. நல்ல அம்சமா ஒரு பத்து ஹீரோயின்களை இறக்குமதி பண்ண வேண்டியதுதான். என் அடுத்த படத்துல நிச்சயம் ஒரு புது ஹீரோயின்தான்!!

-இது ஏதோ கற்பனையான உரையாடல் அல்ல... கடந்த மூன்று தினங்களில் வெவ்வேறு இயக்குநர்கள் - ஹீரோக்களுக்கிடையே க்கிடையில் நடந்த உரையாடல்களின் தொகுப்பு... நிஜமான டயலாகுங்க!!

 

மயக்கும் மாயக்கன்னியாக நடிப்பது ரொம்பக் கஷ்டம்- நேஹா தூபியா

The Hardest Part Is Seduce On Screen   

மும்பை: சினிமாவில் ஹீரோக்களை மயக்கும் கவர்ச்சிப் பெண் வேடத்தில் நடிப்பது ரொம்பக் கஷ்டமான வேலை என்று கூறியுள்ளார் கவர்ச்சி நடிகை நேஹா தூபியா.

ரஷ் படத்தில் இம்ரான் ஹஷ்மியுடன் இணைந்து நடித்துள்ளார் நேஹா. ஏற்கனவே ஜூலி, ஏக் சாலிஸ் கி லாஸ்ட் லோக்கல், ராத் கயி பாத் கயி போன்ற படங்களில் துணிச்சலான கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் நேஹா.

ஆனால் இப்படிப்பட்ட கவர்ச்சி வேடங்களில் நடிப்பது ஈஸியான வேலை இல்லை என்று கூறுகிறார் நேஹா. இதுகுறித்து அவர் கூறுகையில், கவர்ச்சியை அள்ளித் தந்து ஹீரோவை மயக்கும் வேடத்தில் நடிப்பதை பலரும் எளிதான வேலை என்று சொல்கிறார்கள். உண்மையில் அதுதான் கஷ்டமானது.

நமது பாடி லாங்குவேஜ் முதல் வசன உச்சரிப்பு, கண் அசைவு, உதட்டசைவு என அனைத்திலுமே கவர்ச்சி ததும்பி வழிய வேண்டும். அதுபோன்ற உணர்ச்சிகரமான அசைவுகளைக் கொண்டு வந்து நடிப்பது சாமானியப்பட்டதில்லை என்று கூறுகிறார் நேஹா.

ஆமாமா, ரொம்பக் கஷ்டம்தான்...!

 

'கோட்' போட்ட இமான் அண்ணாச்சியை அலற வைக்கும் குட்டீஸ்கள்!

Sun Tv New Program Chuti Kutties

நம் வீட்டில் உள்ள மழலைகள் செய்யும் குறும்புகளை நாள் முழுவதும் ரசித்துக்கொண்டே இருக்கலாம். அவர்களின் ஒவ்வொரு செயலும் ஒரு படிப்பினையை ஏற்படுத்தும். அவர்களின் பேச்சும், சிரிப்பும் நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துபவை. இதுபோன்ற மழலைகள் செய்யும் குறும்புத்தனங்களை படம் பிடித்து ஒளிபரப்புகிறது சன் டிவி.

‘குட்டி சுட்டீஸ்’ என்ற புதிய நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகளின் குறும்புகளை தொகுத்து வழங்குகிறார் இமான் அண்ணாச்சி. ஏற்கனவே ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்கண்ணே’ நிகழ்ச்சியின் மூலம் ஞாயிறன்று காலை நேரத்தில் அனைவரையும் கேள்வி கேட்டு கலங்கடிக்கும் இமான் அண்ணாச்சி மாலை நேரத்தில் குழந்தைகளிடம் சிக்கிக் கொண்டு முழிக்கிறார். இந்த குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.

குழந்தைகளுக்கு என்று ஒரு சேனல் இருக்கையில் இது ஏன் சன் டிவியில் என்று பார்க்கிறீர்களா? அதுதான் ஸ்பெசல். சனி மற்றும் ஞாயிறு மாலையில் சினிமா மட்டுமே ஒளிபரப்பி வந்த சன் டிவியில் இப்போது மாறுதலாக நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளன.

அது சரி இந்த நிகழ்ச்சிக்கு ஏன் கோட் போட்டீங்க அண்ணாச்சி?

 

தப்புத் தப்பா பேசறாங்களே... - காஜலின் வருத்தம்

Kajal S Explanation   

என்னைப் பத்தி தப்புத் தப்பா பேசறாங்க… தப்பா செய்தி பரப்பறாங்க… அதான் எனக்கு கவலையா இருக்கு! – இப்படிச் சொல்லி வருத்தப்படுபவர் முன்னணி நாயகி காஜல் அகர்வால்.

காஜல் அறிமுகமான போது, தமிழில் அவரைச் சீந்த ஆளில்லாத நிலை.

ஆனால் தெலுங்கில் அவர் பெற்ற வெற்றி, பெரும் சம்பளத்தில் தமிழ் வாய்ப்புகளைத் தேடித் தந்தது.

ஆனால் அவரது இரண்டாவது ரவுண்டில் நான் மகான் அல்ல வெற்றி பெற்றாலும், சமீபத்தில் வெளியான மாற்றான் பெரும் ஏமாற்றத்தைத் தந்துவிட்டது.

விஜய்யுடன் நடித்த ‘துப்பாக்கி’ தீபாவளிக்கு வருகிறது. இந்தப் படத்தை அவர் பெரிதும் நம்பியுள்ளார். கார்த்தியுடன் ‘ஆல் இன் அழகு ராஜா’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் மூன்று படங்கள் கைவசம் உள்ளன.

ஆனால் இனி புதிய படங்கள் எதுவும் அவருக்கு வருமா என்று கேட்கும் அளவுக்கு இன்டஸ்ட்ரியில் அவரைப் பற்றி தவறான செய்திகள் பரவி வருகிறது.

இதனால் கவலையடைந்துள்ள காஜல், “என்னைப் பற்றி நிறைய வதந்திகள் பரப்பப்படுகின்றன. சில படங்களில் இருந்து நான் நீக்கப்பட்டதாகவும், பத்திரிகையாளர்களை நான் மதிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இவற்றில் உண்மை இல்லை.

தயவு செய்து என்னைப் பற்றி தவறாக செய்தி பரப்ப வேண்டாம். இது என் கேரியரையே பாதிக்கும் அளவுக்கு மாறியுள்ளது,” என்றார்.

 

வன்கொடுமை சட்டத்தின் கீழ் சின்மயி மீது நடவடிக்கை எடுங்கள்! - அம்பேத்கர் பாசறை கமிஷனரிடம் புகார்

சென்னை: பொதுவெளியில் சாதித் துவேஷ கருத்துக்களைப் பரப்பிய பாடகி சின்மயி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளது புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் விழிப்புணர்வு பேரவை எனும் அமைப்பு.

சின்மயி தனது ப்ளாக், ட்விட்டர் போன்றவற்றில் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு குறித்து கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் பெரும்பான்மையோர் சின்மயிக்கு எதிராக அணி திரள ஆரம்பித்துள்ளனர்.

ambedkar pasarai complaints against chinmayi
Close
 
எழுத்தாளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் தனது கட்டுரையொன்றில், "நான் சின்மயிக்கு ஆதரவாக தெருவில் நின்று போராட தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு அவர் தமிழர்களிடமும் தலித்துகளிடமும் தனக்கு மாறான வாழ்க்கைமுறையும் உணவுப் பழக்கமும் கொண்டவர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை அமைப்பைச் சார்ந்த நீலமேகம், வழக்கறிஞர் ரஜினி ஆகியோர் சென்னை மாநகர கமிஷனரிடம் சின்மயி மீது தலித்துக்கள், மீனவர்கள், இஸ்லாமியர்களை இழிவாகப் பேசியதற்காக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய செய்யக் கோரி மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து சின்மயி விவகாரம் வேறு கோணத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சின்மயி கைதாவாரா? அல்லது பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் சைடு வாங்கியதைப் போல இதிலும் நடந்து கொள்ளுமா போலீஸ் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

எஸ்ஏசி அணிக்கு பின்னடைவு - தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவை கேயார் நடத்த நீதிமன்றம் அனுமதி!

Setback Sac Team Producer Council

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த கேயாருக்கு அனுமதி அளித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 28-ந் தேதி சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டப்போவதாக இயக்குநர் - தயாரிப்பாளர் கோதண்டராமன் என்ற கேயார் அறிவித்தார்.

இதை எதிர்த்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வழக்கு தாக்கல் செய்தார். அதில், குறிப்பிட்ட இடைவெளியில் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். ஆனால் கேயார் தரப்பினர் விதிகளுக்கு முரணாக பொதுக்குழுவை கூட்டுகின்றனர்.

எனவே அவர்கள் பொதுக்குழு கூட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து கேயார் தரப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை விதித்து சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கேயார் வழக்கு தாக்கல் செய்தார். அதில், விதிகளின் அடிப்படையில்தான் பொதுக்குழு கூட்டத்தை நடத்த இருக்கிறோம். அதற்கான அறிவிப்புகளை முறைப்படி கொடுத்துள்ளோம். அறிவிப்பை சங்க நிர்வாகிகள் பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சிகள் உள்ளன. எனவே சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்துவிட்டு, எங்களுக்கு பொதுக்குழு கூட்டம் கூட்டுவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். சிட்டி சிவில் கோர்ட்டு பிறப்பித்த தடையை நீக்கி உத்தரவிட்ட நீதிபதி, 28-ந் தேதி மனுதாரருக்கு பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

மேலும், ஓய்வுபெற்ற நீதிபதியின் முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில், உரிய பாதுகாப்பை சென்னை போலீஸ் கமிஷனர் வழங்க வேண்டும்.

இதன் மூலம் எஸ்ஏ சந்திரசேகரன் அணி பதவி விலகி, தேர்தலைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே எஸ் ஏ சந்திரசேகரனுக்கு எதிராக இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் ஒரு அணி செயல்பட்டு வந்தது நினைவிருக்கலாம்.

 

இங்கே கட்டப்பஞ்சாயத்து செய்யப்படும்… சொல்வதெல்லாம் உண்மைதானா?

Sollvathellam Unnmai Zee Tv Talk Show

என் புருஷனுக்கு இன்னோரு பொண்ணு கூட தொடர்ப்பு இருக்கும்மா. அவருக்கு நான் காசு சேர்த்து வச்சு பைக் வாங்கி கொடுத்தேன். அதுல என்னைய கூட்டிட்டு போகாம வேற பொம்பளைய கூட்டிட்டு போறார்.

இது நிர்மலா பெரியசாமி நடத்தும் ‘சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு வந்த பஞ்சாயத்து. இது மட்டுமல்ல இதுபோல் தினம் தினம் இங்கே பஞ்சாயத்து நடைபெறுகிறது. மாமியார், மருமகள் பிரச்சினை, காதல் பிரச்சினை, என தினசரி பஞ்சாயத்தும் அடிதடி காட்சிகளும் லைவ் ஆக இடம் பெறுகின்றன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி என்ற பெயரில் தினந்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அடுத்தவனின் அந்தரங்கம் நமக்கு வேடிக்கைப் பொருளாகிவிட்டது.

சரி விசயத்திற்கு வருவோம். கணவன் மேல் புகார் சொன்ன பெண்ணிற்கு நிர்மலா பெரியசாமி என்ன தீர்ப்பு சொன்னார் தெரியுமா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

அந்தப் பெண்ணின் கணவனை கூப்பிட்டு விசாரித்தார் நிர்மலா, அவன் சூடம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக தனக்கு யாருடனும் தொடர்பு இல்லை. என் மனைவிதான் என்மேல் தேவையில்லாமல் சந்தேகப்படுகிறாள் என்று கூறினான்.

மாறி மாறி சண்டை காட்சிகள்தான் அரங்கேறின. நிர்மலா பெரியசாமியோ கணவனுக்கு சாதகமாக பேச ஆரம்பித்தார். உடனே புகார் சொன்ன பொண்ணிற்கு கோபம் வந்து விட்டது. ஸ்டுடியோவை விட்டு கோபமாக வெளியேறிவிட்டார்.

என்ன செய்வதென்று தெரியாத விழித்த பஞ்சாயத்து தலைவி நிர்மலா பெரியசாமி, உன்னோட மனைவிக்கு மன வியாதிதான் வந்திருக்கிறது. சந்தேகம் அதிகமானால் சிக்கல்தான் எனவே நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள் என்று தீர்ப்பு கூறி பஞ்சாயத்தை முடித்து வைத்தார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மனைவிக்கு மனநலம் சரியில்லை என்பதைக்கூட டிவி நிகழ்ச்சிக்கு வந்துதான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறான் ஒரு கணவன். நிஜமாகவே அந்தப் பெண்ணிற்கு மனநலம் சரியில்லை என்று வைத்துக்கொண்டால் எழுந்த கேள்வி?.

இதேபோல்தான் கேப்டன் டிவியில் மனம் விட்டுப் பேசுங்கள் என்ற பெயரில் பஞ்சாயத்து நடத்தும் குட்டி பத்மினி. அவரிடமும் இதுபோன்ற பஞ்சாயத்துக்கள்தான் வருகின்றன.

கடந்த சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் கதையல்ல நிஜம் என்ற பெயரில் நடிகை லட்சுமி நடத்திய பஞ்சாயத்தும் இந்த ரகம்தான். அதில் அழுகைதான் இருந்தது. ஆனால் நிர்மலா பெரியசாமி நடத்தும் பஞ்சாயத்தில் அடிதடி அதிகம் இருக்கிறது என்கின்றனர் பார்வையாளர்கள்.

 

ஒய்.ஜி.மகேந்திரனின் 'விசில்' ...ரஜினி கொடுத்த ஐடியா!

Rajini S Idea Yg Mahendra

விசில் மூலம் பாட்டுப்பாடுவது ஒரு கலை. அது நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கைவந்த கலை. சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி பாராட்டு விழாவில் விசில் அடித்து பாரட்டுப் பெற்றார்.

மகேந்திரனுக்கு வெகு காலமாகவே தனது விசில் திறமையை ஊர் உலகத்திற்கு நிரூபிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இந்த நிலையில், விசில் பாட்டுக்களை சிடியாக போடலாமே என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐடியா கொடுக்கவே அதை உடனே செயல்படுத்திவிட்டார் ஒய்.ஜி.மகேந்திரன்.

எம்.எஸ்.வி இசையில் வெளியான சுமார் ஏழு பாடல்களை தனது விசில் சப்தத்தால் பாடி, அதை சரிகம நிறுவனம் மூலம் சி,டியாகவும் வெளியிட்டு விட்டார்.

நினைத்த மாதிரியே ஊர் உலகம் பாராட்டும் இந்த இசை தகட்டின் முதல் ரசிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிதானாம். விசில் அடித்தால் கிராமங்களில் அடிக்க வருவார்கள், ஆனால் சிட்டி ஒய்.ஜி. மகேந்திரனுக்கோ பாராட்டு குவிகிறது.

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பீலிங்...!