விஜய்யின் 'கத்தி' படத்தை சேதாரமில்லாமல் வெளியிட படக்குழு பகீரத முயற்சி!

சென்னை: கத்தி படத்தை பிரச்சனை இன்றி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் சந்திக்க உள்ளனர்.

விஜய்யின் 'கத்தி' படத்தை சேதாரமில்லாமல் வெளியிட படக்குழு பகீரத முயற்சி!  

விஜய், சமந்தா நடித்து வரும் கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் மாதம் லண்டனில் பிரமாண்டமாக நடக்க உள்ளது. இந்நிலையில் படத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கத்தி படத்தை இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிகவும் நெருக்கமானவர் தயாரிக்கிறார் என்று கூறி சிலர் போராட்டத்தில் குதித்தனர்.

படத்தை ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் ஒன்றும் தயாரிக்கவில்லை. அவர் இலங்கையில் நடந்த போரால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் கத்தி படத்தை பிரச்சனை இன்றி ரிலீஸ் செய்ய ஏதுவாக படக்குழுவினர் தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் விரைவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்திக்க உள்ளார்.

இலங்கை தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருவதோடு மட்டும் அல்லாமல் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிட்டு ஒட்டு மொத்த தமிழர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ட்விட்டரில் நிர்வாண படங்கள்: அதிர்ச்சியில் நடிகை அஞ்சலி திவேதி

ஹைதராபாத்: ட்விட்டரில் தனது நிர்வாண புகைப்படங்கள் இருப்பதை பார்த்த தெலுங்கு நடிகை அஞ்சலி திவேதி அதிர்ச்சி அடைந்தார்.

ட்விட்டரில் நிர்வாண படங்கள்: அதிர்ச்சியில் நடிகை அஞ்சலி திவேதி

தெலுங்கு நடிகை அஞ்சலி திவேதி. யாரோ ட்விட்டரில் அவரது பெயரில் போலி கணக்கு துவங்கி அதில் அஞ்சலியின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டனர். இதை பார்த்த அஞ்சலியின் நண்பர் ஒருவர் அதிர்ச்சி அடைந்து அதை நடிகையிடம் போன் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை கேட்ட அஞ்சலி கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து போலீசாருக்கு புகார் கொடுத்தார். மேலும் அந்த போலி கணக்கை முடக்கவும் செய்தார்.

நடிகையின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்த சைபர் கிரைம் பிரிவின் உதவியை நாடியுள்ளனர்.

 

விவாகரத்து வழக்கு: புகார் கூறிய நடிகை சரிதா, வழக்கை ஒத்தி வைத்த கேரள கோர்ட்

திருவனந்தபுரம்: நடிகை சரிதா-நடிகர் முகேஷின் விவாகரத்து வழக்கின் விசாரணையை கேரள நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

விவாகரத்து வழக்கு: புகார் கூறிய நடிகை சரிதா, வழக்கை ஒத்தி வைத்த கேரள கோர்ட்

மலையாள திரை உலகின் பிரபல நடிகர் முகேஷ். அவர் கோலிவுட்டில் ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக இருந்த சரிதாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்தார்கள். இதையடுத்து முகேஷ் விவாகரத்து கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கையில் முகேஷ் தேவிகா என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர், சரிதா மற்றும் குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

சரிதா நீதிமன்றத்தில் கூறுகையில்,

வழக்கு குறித்த நோட்டீஸ் எனக்கு வரவில்லை. மேலும் விவாகரத்து காலத்திற்கான அவகாசமும் எனக்கு அளிக்கப்படவில்லை. இந்த வழக்கில் முகேஷ் எனக்கு தெரியாமல் சதி செய்கிறார் என்றார்.

அவரின் வாதத்தை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 

முக்கிய கதாபாத்திரத்தில் சீமான்-பவர்ஸ்டார் நடிக்கும் ‘குருவிக்காரன் சோலை’

சென்னை: குருவிக்காரன் சோலை என்ற இடத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சீமான் மற்றும் பவர்ஸ்டார் நடிக்க உள்ளனர்.

முக்கிய கதாபாத்திரத்தில் சீமான்-பவர்ஸ்டார் நடிக்கும் ‘குருவிக்காரன் சோலை’

யுவபிரியா கிரியேஷன் தயாரிக்கும் படம் ‘குருவிக்காரன் சோலை'. இதில் நாயகன், நாயகியாக புதுமுகங்கள் ஜெய்காந்த், கிரிஷா நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சீமான், பவர்ஸ்டார், வையாபுரி, சுகன்யா, யுவராணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.நாதன். தனது படத்தை பற்றி இயக்குனர் நாதன் கூறும்போது, ‘தன் குடும்பத்திற்காக காதலனை பழிவாங்குகிறார் காதலி, இதில் காதலி, காதலனை கொல்லமாட்டாள். மாறாக வேறொரு தண்டனையை காதலனுக்கு தருகிறாள். அது என்ன? என்பது படத்தின் கிளைமாக்ஸ் எனத் தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு தஷி இசையமைக்க, ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்கி, குற்றாலம், தலக்கோணம் ஆகிய பகுதிகளில் முழுவீச்சில் நடைபெறவுள்ளது.

இரண்டு பாடல் காட்சிகளுக்காக மட்டும் இக்குழு மலேசியா செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மார்க்கெட்டே இல்லாமல் ரூ. 1 கோடி கேட்கும் நடிகை

சென்னை: மூன்று எழுத்து கா நடிகை ரூ. 1 கோடி சம்பளம் கேட்பதால் தான் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லையாம்.

ஆக்ஷன் கிங்கின் படம் மூலம் கோலிவுட் வந்தவர் மூன்று எழுத்து கா நடிகை. இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த அவருக்கு சீயானுக்கு மறுவாழ்வு கொடுத்த இயக்குனரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சிவப்பழகியான நடிகையை அந்த படத்தில் கருப்பாக காட்டியிருந்தனர். அந்த இயக்குனரின் படத்தில் நடித்த பிறகும் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. ஆள் அழகாக, நல்ல கலராக இருக்கிறார். அப்படி இருக்கையில் வாய்ப்பு மட்டும் ஏன் கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா?

அம்மணிக்கு மார்க்கெட்டே இல்லை. இந்நிலையில் அவர் படத்துக்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்கிறாராம். இவ்வளவு பெரிய தொகையை கேட்பதோடு மட்டும் அல்லாமல் ஓவராக கன்டிஷன் வேறு போடுகிறாராம்.

இவர் கேட்கும் தொகையை கொடுத்து அவர் போடும் கன்டிஷனை எல்லாம் ஏற்க யாரும் தயாராக இல்லை. அதனால் தான் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லையாம்.